புதியவை Archives - தூரிகை தமிழ் நாவல்கள் https://thoorigaitamilnovels.com/category/new-tamil-posts/ Thu, 09 May 2024 13:18:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.2.2 https://thoorigaitamilnovels.com/wp-content/uploads/2021/08/favicon-32x32-1.jpg புதியவை Archives - தூரிகை தமிழ் நாவல்கள் https://thoorigaitamilnovels.com/category/new-tamil-posts/ 32 32 197060226 பிறை சூழ் மாயம் – 8 https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/#respond Thu, 09 May 2024 13:18:53 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/ பிறை 7   சர்வஜனன் மற்றும் சஞ்சீவனி இருவரும் பதட்ட மனநிலையில் இருக்க, அவர்களை நோக்கி வந்த சத்தத்தை முதலில் கவனிக்கவில்லை.   அந்த சத்தம் அவர்களை நெருங்கி வரும் வேளையில் தான் அதை கவனித்தான் சர்வஜனன். அது ஒரு அழுத்தமான காலடி சத்தம். நெருங்கி வர வர சத்தம் அதிகமாக கேட்க, அதற்கு மறுமொழியாக சஞ்சீவனியின் இதயத்துடிப்பும் அதிகரிக்க ஆரம்பித்தது.   அவளை திரும்பிப் பார்த்தவன், கையை வாயின்

The post பிறை சூழ் மாயம் – 8 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

]]>

Loading

பிறை 7

 

சர்வஜனன் மற்றும் சஞ்சீவனி இருவரும் பதட்ட மனநிலையில் இருக்க, அவர்களை நோக்கி வந்த சத்தத்தை முதலில் கவனிக்கவில்லை.

 

அந்த சத்தம் அவர்களை நெருங்கி வரும் வேளையில் தான் அதை கவனித்தான் சர்வஜனன். அது ஒரு அழுத்தமான காலடி சத்தம். நெருங்கி வர வர சத்தம் அதிகமாக கேட்க, அதற்கு மறுமொழியாக சஞ்சீவனியின் இதயத்துடிப்பும் அதிகரிக்க ஆரம்பித்தது.

 

அவளை திரும்பிப் பார்த்தவன், கையை வாயின் மீது வைத்து, “உஷ்!” என்றவன், அவளை சுற்றி கையை போட்டு ஆசுவாசப்படுத்தினான்.

 

அவர்கள் இருவரும் பெரிய பாறைக்கு பின்னே இருக்க, அந்த பாறைக்கு முன் ஐந்தடிக்கு புதர் மண்டிக்கிடந்தது.

 

அந்த சத்தம் இப்போது வெகு அருகில் கேட்க, இருவரும் கண்கள் மட்டும் பாறைக்கு மேலே தெரியுமாறு எட்டிப் பார்த்தனர்.

 

முதலில் அவர்களின் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. அந்த புதர் மறுபக்கத்தை மறைத்திருந்தது.

 

ஆனால், திடீரென்று ஒரு உறுமல் சத்தமும் அதை தொடர்ந்து ஒரு மனித தலையும் அந்த புதருக்கு மேலே தெரிய, இருவருமே அந்த நொடி அதிர்ந்து தான் போயினர்.

 

சஞ்சீவனியோ, உறுமல் சத்தத்திற்கே பயந்திருந்தவள், எங்கிருந்து முளைத்தது என்று தெரியாத வண்ணம் சட்டென்று தென்பட்ட மனித தலையைக் கண்டு கத்த வாயை திறக்க, அவளை சரியாக கணித்தவனாக, அவளின் வாயை மூடியிருந்தான் சர்வஜனன்.

 

அந்த மர்ம மனிதன் அங்கிருந்து சென்று இரண்டு நிமிடங்கள் கழித்து தான் இருவரும் சுயத்தை அடைந்திருந்தனர். அப்போது தான் அவளின் வாயிலிருந்தும் கையை எடுத்திருந்தான் அவன்.

 

உடனே, “அது… அவன்…” என்று சஞ்சீவனி பதட்டத்தில் திக்கியபடி பேச, “உஷ்! இங்க எதுவும் பேச வேண்டாம். முதல்ல இங்க இருந்து கிளம்புவோம்.” என்று அவளையும் இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

 

முக்கிய சாலை வரும் வரையிலும் இருவரும் வாய் திறந்து பேசிக் கொள்ளவில்லை. ஆனால், இருவரின் மனமும் பல்வேறு கேள்விகளால் நிரம்பியிருந்தன.

 

சஞ்சீவனி திக்பிரம்மை பிடித்ததை போலிருப்பதைக் கண்ட சர்வஜனன், அவளை உசுப்பி, “இந்த நேரத்துல நீ தனியா போக வேண்டாம். நானே டிராப் பண்றேன்.” என்றான்.

 

“இல்ல, நான் ஸ்கூட்டில போயிடுவேன்.” என்று சுற்றிலும் அவளின் வாகனத்தை தேட, அவள் கரத்தை பிடித்து தன்னைப் பார்க்கச் செய்தவன், “நீ இருக்க நிலைமைல உன்னை தனியா விட்டு, உனக்கு என்னாச்சுன்னு என்னால யோசிச்சுட்டு இருக்க முடியாது. இப்போ நீ என்கூட வர. புரியுதா?” என்று அவன் கூற, அவனின் கண்களிலேயே பார்வையை பதித்திருந்தவளின் தலை தன்னால் அசைந்தது.

 

அவனின் மகிழுந்தில் அவனருகே அமர்ந்திருந்தாலும், அவள் மனம் முழுவதும் சற்று முன்னர் பார்த்ததிலேயே நிலைத்திருந்தது. அவள் மட்டுமல்ல, அவனுமே அதையே நினைத்திருத்தான்.

 

அப்போது அவன் கவனத்தை ஈர்த்தது என்னவோ, சாலையின் மத்தியில் இருந்த உடல் தான்.

 

ஆம், அவன் மகிழுந்தின் ஹெட்லைட் வெளிச்சத்தில் அது ஒரு மனித உடல் என்பது தெரிந்துவிட்டது. ஆனால், என்ன நிலையில் இருக்கிறது என்பது தான் தெரியவில்லை.

 

அவன் மகிழுந்தை நிறுத்த, அப்போது தான் அவள் தன் நினைவிலிருந்து வெளிவந்தாள்.

 

‘என்னாச்சு’ என்பது போல் அவனை பார்த்து வைக்க, “உள்ளேயே இரு.” என்று கூறிவிட்டு அவன் இறங்கினான்.

 

அவன் கூறுவதை ஒரு முறை தான் கேட்பதாக எண்ணியிருந்தாள் போலும். இம்முறை அவன் பின்னிலேயே இறங்கியிருந்தாள்.

 

அவளை முறைத்துவிட்டு, கவிழ்ந்திருந்த உடல் அருகே சென்று திருப்பி பார்க்க, அது ஒரு பெண் என்பது தெரிந்தது. மேலும், உடலில் ஆங்காங்கு கீறல்களும், கையில் கடிபட்ட தடமும் இருப்பதைக் கண்டான்.

 

அத்தனை நேரம் சற்று விலகியே நின்றிருந்த சஞ்சீவனி, அந்த பெண்ணின் உடலை தழுவியிருந்த மேல் உடுப்பில் ‘சஷா கஃபே’ என்ற எழுத்துக்களை பார்த்ததும் பதட்டத்துடன் அருகே வந்தாள்.

 

அங்கு காயங்கள் பலவற்றை உடலில் தாங்கி மயங்கியிருந்த பெண்ணைக் கண்டு, “ஸ்டெஃபி…” என்று கத்தினாள்.

 

அவளின் கதறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பிப் பார்த்த சர்வஜனன், பின் இருக்கும் சூழ்நிலை உணர்ந்து, “வனி பிளீஸ், இப்போ உன் அழுகைக்கான நேரம் இல்ல. இவங்களை சீக்கிரமா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும். எவ்ளோ சீக்கிரம் போறோமோ, அவ்ளோ சீக்கிரம் இவங்களை காப்பாத்தலாம். நாமளும் ரொம்ப நேரம் இங்க இருக்க முடியாது.” என்று பலவற்றை கூறி ஒருவழியாக அவளை சமாதானப்படுத்தினான்.

 

பின் நேரத்தை விரயமாக்காமல், உடனே ஸ்டெஃபியை அவளின் துணை கொண்டு மகிழுந்தில் ஏற்றியவன், வாகனத்தையும் கிளப்பியபடி, தனக்கு தெரிந்த மருத்துவருக்கு தொடர்பு கொண்டு பேசினான்.

 

“ஹலோ ஆலிஸ், ஒரு எமர்ஜென்சி… விக்டிம் ஒரு பொண்ணு. அவங்க பாடில நிறைய காயங்கள் இருக்கு. ஐ ஃபீல் லைக் இட் இஸ் ஆன் அனிமல் அட்டாக். மத்ததை நேர்ல பேசுவோம். நாங்க வரதுக்குள்ள ட்ரீட்மெண்டுக்கான அரேஞ்மெண்ட்ஸ் பண்ணிடுறீங்களா? அண்ட் இது சீக்ரெட்டா இருக்கட்டும். உங்களுக்கே தெரியும், இது வெளிய தெரிஞ்சா, மீடியாவோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு. சோ பிளீஸ்…” என்று சர்வஜனன் பேசியபடி தன்னருகே இருந்தவளை பார்க்க, அவளோ பின்னிருக்கையில் கிடத்தப்பட்டிருந்த ஸ்டெஃபியை தான் அழுகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

மறுமுனையில் என்ன கூறப்பட்டதோ, “ஆமா, இதோ இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல ரீச்சாகிடுவோம்.” என்றபடி அழைப்பை துண்டித்தான்.

 

கூறியபடியே ஐந்து நிமிடங்களில் அவனின் மகிழுந்து அந்த மருத்துவமனையை அடைந்திருக்க, அங்கு ஸ்டெஃபிக்கான ஏற்பாடுகள் தயார் நிலையிலேயே இருந்தன.

 

முதலில் ஸ்டெஃபியின் காயங்களை ஆராய்ந்த மருத்துவர் ஆலிஸ், செவிலியர்களிடம் தேவையானவற்றை செய்ய சொல்லி கட்டளையிட்டுவிட்டு, வெளியே வந்தார்.

 

அதுவரை ஒரு இடத்தில் நில்லாமல் தவிப்புடன் இருந்த சஞ்சீவனி அவரிடம் சென்று, “டாக்டர், ஸ்டெஃபி… ஸ்டெஃபி இப்போ எப்படி இருக்கா?” என்று பதட்டத்துடன் வினவ, அவர் என்ன நினைத்தாரோ, சர்வஜனனையும் அருகில் அழைத்து, “இப்போ இப்படி சொல்றது எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. ஆனா, தேவையில்லாம ஹோப்ஸ் கொடுத்து உங்களை ஏமாத்த விரும்பல. சர்வா, இது நீங்க நினைச்ச மாதிரியே அனிமல் அட்டாக் தான். அதுவும் பிரிவியஸா நமக்கு கிடைச்ச டெட் பாடில இருக்க சிமிலர் ஊண்ட்ஸ் தான் இவங்களுக்கும் இருக்கு. நீங்க சீக்கிரம் பார்த்தால, இவங்க உயிரோட இருக்காங்க. ஆனா, இங்க சிக்கல் என்னன்னா, இது எந்த வகை அனிமல்னு தெரியாம ஆன்ட்டிடோட் கொடுக்க முடியாது. நம்மகிட்ட ரொம்ப நேரமும் இல்ல. சீக்கிரம் ஏதாவது டெசிஷன் எடுத்தாகணும்.” என்றார்.

 

அவர் கூறியதைக் கேட்ட சஞ்சீவனியோ, “வேர்உல்ஃப்… வேர்உல்ஃப் தான் அவளை அட்டாக் பண்ணது.” என்று கூற, ஆலிஸோ அவளை ஒரு மாதிரி பார்த்தார்.

 

உடனே அவளின் கரம் பற்றி அமைதியடையச் செய்தவன், “ஆலிஸ், உல்ஃப் அட்டாக்குக்கான ஆன்ட்டிடோட் இருந்தா, அதை கொடுத்து சீக்கிரம் ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணிடுங்க.” என்று கூற, அந்த மருத்துவரும் சரியென்று மீண்டும் ஸ்டெஃபியிருந்த அறைக்குள் நுழைந்து கொண்டார்.

 

“சர்வா, அது சாதாரண உல்ஃப் இல்ல வேர்உல்ஃப், ஓநாய் மனிதன். அதுக்கு வேற மருந்து இருக்கப் போகுது. இப்போ மாத்தி கொடுத்து, அவளுக்கு ஏதாவது ஆகிட்டா?” என்று பதற, “காம் டவுன் வனி. நீ சொல்றது உனக்கே நம்புற மாதிரி இருக்கா? வேர்உல்ஃப் எல்லாம் மித். அதையா நம்புற?” என்றான்.

 

உடனே சஞ்சீவனிக்கு கோபம் வந்துவிட, “நீங்களும் தான் பார்த்தீங்க, அங்க… அந்த இடத்துல… உறுமல் சத்தம், அதை தொடர்ந்து திடீர்னு தோன்றுன மனுஷன்… அதைப் பார்த்தும் எப்படி மித்னு சொல்றீங்க?” என்று கிட்டத்தட்ட கத்தினாள்.

 

அவளும் முதலில் வேம்பயர், வேர்உல்ஃப் எல்லாம் கட்டுக்கதை என்று நம்பியவள் தானே. ஆனால், பொன்னம்மாவிடம் பேசியது, அந்த வாள், மிக முக்கியமாக சர்வஜனனுடன் அவள் கண்ட காட்சி என அனைத்தும் அவள் மனதை மாற்றியிருந்தன.

 

“எஸ், நானும் பார்த்தேன். ஆனா, ஓநாய் மனுஷனா மாறுறதை நாம கண்ணால பார்க்கலையே. நான் ஒத்துக்குறேன், அங்க ஏதோ தப்பா நடக்குது தான். அதுக்காக அதை செய்யுறது வேர்உல்ஃப்புன்னு நான் நம்ப மாட்டேன், கண்ணால பார்க்குற வரை.” என்றான் சர்வஜனன்.

 

தான் கூறுவதை நம்பாமல் பேசும் அவனை, சோர்வான பார்வையுடன் நோக்கியவள், தலையை இருபுறமும் ஏமாற்றமாக அசைத்துவிட்டு, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட்டாள்.

 

அவனும் இப்போது அவளிடம் எந்த வாக்குவாதமும் வேண்டாம் என்று நினைத்தபடி அவளருகே அமைதியாக அமர்ந்து விட்டான்.

 

நேரம் அப்படியே செல்ல, இருவருமே அந்த இருக்கையில் அமர்ந்தபடியே ஒருவர் மேல் மற்றவர் சாய்ந்து உறங்கியிருக்க, சஞ்சீவனியின் அலைபேசி ஒலியெழுப்பி இருவரையும் எழுப்பி விட்டது.

 

மணி ஐந்தை தொட்டிருக்க, சஞ்சீவனிக்கு அவளை சுற்றியிருக்கும் சூழல் புரியவே சில நிமிடங்களானது. அதற்குள் சுதாரித்திருந்த சர்வஜனன் விடாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் அலைபேசியை சுட்டிக்காட்டிவிட்டு, தானும் தன் அலைபேசியில் யாரிடமோ பேசினான்.

 

சஞ்சீவனிக்கு அழைத்தது பிரத்யூஷா தான். அவளிடம் என்ன காரணம் சொல்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தவளை உசுப்பிய செவிலி, “ஏன் மா, ரொம்ப நேரமா போன் அடிச்சுட்டே இருக்கு. அதை கையில வச்சு உத்து பார்த்துட்டு இருந்தா போதுமா? ஒன்னு ஆன் பண்ணி பேசு, இல்ல ஆஃப் பண்ணி போடு. ஹாஸ்பிடல்னு கூட பார்க்காம, காலைலேயே இவ்ளோ சத்தமா?” என்று திட்டிவிட்டு செல்ல, அவளும் அழைப்பை ஏற்றுவிட்டாள்.

 

அழைப்பு ஏற்கப்பட்டதும் மறுமுனையிலிருந்து கேள்விகள் சரமாரியாக வந்த வண்ணம் இருந்தன.

 

“ஹே சஞ்சு, நீ எங்க இருக்க? இவ்ளோ காலைல எங்க போயிருக்க? வண்டியை வேற காணோம்! என்னடி நினைச்சுட்டு இருக்க நீ? என்கிட்ட சொல்லிட்டு போகணும்னு அறிவில்லயா?” என்று பிரத்யூஷா பொரிய ஆரம்பிக்க, அவளை எவ்விதம் சமாதானப்படுத்த என்று தெரியாமல் பாவமாக அமர்ந்திருந்தாள் சஞ்சீவனி.

 

அதே சமயம், “இங்க ஸ்டெஃபியோட அட்டெண்டர் யாரு?” என்று செவிலி சற்று சத்தமாக வினவ, தன் அழைப்பை பேசி முடித்து வந்த சர்வஜனன், சஞ்சீவனியிடம் தான் பார்த்துக் கொள்வதாக கண்ணசைத்தபடி அந்த செவிலியிடம் சென்றான்.

 

இதை அலைபேசி வழியாக கேட்ட பிரத்யூஷாவோ, “சஞ்சு, நீ ஹாஸ்பிடல்ல இருக்கியா? ஸ்டெஃபின்னா சொன்னாங்க? அவளுக்கு என்ன?” என்று பதற, “ஷ், ரிலாக்ஸ் பிரத்யூ. ஸ்டெஃபிக்கு சின்ன ஆக்சிடெண்ட். அதான் ஹாஸ்பிடல்ல சேர்த்துருக்கோம். நீ ரொம்ப டென்ஷனாகாத.” என்று ஆறுதல் கூறினாள் சஞ்சீவனி.

 

பிரத்யூஷாவின் பதட்டத்தினால் ஸ்டெஃபிக்கு நடந்ததை முழுதாக தோழியிடம் கூறவில்லை சஞ்சீவனி. ஸ்டெஃபியின் விபத்தை கேள்விப்பட்டதால், மேலும் கேள்விகளை கேட்கவில்லை பிரத்யூஷா. அதனால், தன் வாளை தேடும் முயற்சியை தோழியிடம் எளிதாகவே மறைத்து விட்டாள் சஞ்சீவனி.

 

ஆனால், சர்வஜனன் அதை சரியாக கேட்டுவிட்டான்.

 

செவிலி கேட்ட மருந்துகளை வாங்கி கொடுத்துவிட்டு வந்தவன், சஞ்சீவனியிடம், “ஆமா, நேத்து நைட் அங்க எதுக்கு வந்த?” என்று கேட்க, அவனிடம் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் விழித்தாள்.

 

ஏற்கனவே, ஓநாய் மனிதனை கட்டுக்கதை என நம்புபவனிடம், தான் அதை வேட்டையாடுபவள் என்றும் அதற்கான வாளை தேடி வந்ததாகவும் கூறினால், தன்னை பைத்தியக்காரி என்றே முடிவு செய்து விடுவான் என்று யோசித்தவள் அமைதியாக இருக்க, அவளைக் காக்கவே சர்வஜனனிற்கு அலைபேசியில் அழைப்பு வந்தது.

 

உடனே அவளிடம், “எனக்கு முக்கியமான வேலை இருக்கு. இனி, நீ இங்க பார்த்துப்பியா?” என்று கேட்க, அவளும் சரியென தலையை மட்டும் அசைத்தாள்.

 

ஆனால், அவள் முகம் என்ன பாவனையை காட்டியதோ, அவளை ஆறுதலாக அணைத்து, “டேக் கேர்.” என்று சொல்லிவிட்டு, அவள் முகம் பார்க்காமல் சென்று விட்டான்.

 

செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் ஒரு பெருமூச்சுடன் இருக்கையில் அமர்ந்தாள்.

 

*****

 

“சரவணன், நேத்து நாம பார்த்த பாழடைஞ்ச பங்களா சுத்தி இருக்க இடத்துல, நான் இப்போ உங்களுக்கு அனுப்பியிருக்க ஃபூட் பிரின்ட்ஸ் மாதிரி டிஃப்ரெண்ட்டா ஏதாவது இருக்கான்னு செக் பண்ணுங்க. நான் வந்ததும் அந்த பங்களாக்குள்ள போய் செக் பண்ணிடலாம். நமக்கு அங்க கண்டிப்பா ஏதாவது க்ளூ கிடைக்கும்.” என்று தன் வீட்டிற்கு செல்லும் வழியிலேயே பேசியிருந்தான் சர்வஜனன்.

 

*****

 

மருத்துவமனையில் ஸ்டெஃபியைக் காண பிரத்யூஷாவும் நஸ்ரினும் வந்திருந்தனர்.

 

ஸ்டெஃபி இன்னமும் மயக்கத்தில் இருக்க, மற்ற இருவரும் சஞ்சீவனியை கேள்விகளால் துளைத்தெடுத்து விட்டனர்.

 

“சஞ்சுக்கா, ரெண்டு நாள் முன்னாடி ஆன மாதிரி நம்ம ஸ்டெஃபியையும் ஏதோ அனிமல் தான் தாக்கியிருக்கா?”

 

“ஸ்டெஃபிக்கு இப்படி ஆச்சுன்னு உனக்கு எப்படி தெரியும் சஞ்சு?” என்று இருவரும் மாற்றி மாற்றி கேட்க, இருவரையும் சோர்வாக பார்த்தாள்.

 

“அனிமல் அட்டாக்னு தான் டாக்டர் சொல்லியிருக்காங்க. அதுக்கான ஆன்ட்டிடோடும் போட்டுட்டாங்க. அந்த மருந்தால லேசா ஃபீவர் வரும்னும், அதுக்கு அப்பறம் தான் அவளுக்கு நினைவு திரும்பும்னும் சொல்லிருக்காங்க.” என்று நஸ்ரினுக்கு பதில் கூறியவள், பிரத்யூஷாவிடம் திரும்பி, “ஸ்டெஃபி நம்ம கஃபே கோட் போட்டிருந்ததை வச்சு, சர்வா… அன்னைக்கு பார்த்த போலீஸ் தான் எனக்கு கால் பண்ணாரு. நீ நல்லா தூங்கிட்டு இருந்ததால, உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நான் மட்டும் வந்தேன்.” என்று கூறி முடித்தாள்.

 

உள்ளுக்குள் பயம் தான். இப்படி சரளமாக அவள் பொய் சொன்னதில்லை. அதுவும் பிரத்யூஷாவிடம் அவள் பொய் சொல்லி மாட்டாத நாளில்லை. ஆனால், ஸ்டெஃபியின் விஷயம் பிரத்யூஷாவை பாதித்திருந்ததால், அவள் தோழியின் பொய்யை கண்டுபிடிக்கவில்லை.

 

கஃபேயை திறக்க வேண்டி இருந்ததால், பிரத்யூஷா மருத்துவமனையில் இருப்பதாகவும் மற்ற இருவரும் கஃபேக்கு செல்வதாகவும் முடிவு செய்யப்பட்டு, சஞ்சீவனி அங்கு சென்றும் விட்டாள்.

 

கஃபேக்கு வந்து முதல் இரண்டு மணி நேரம் சற்று மந்தமாகவே சென்றது. சர்வஜனனிடமிருந்து அழைப்பை எதிர்பார்த்து ஏமாந்து போனாள் பெண்ணவள். ஆனால், எதற்காக அழைப்பை எதிர்பார்க்கிறாள் என்பதற்கான விடை அவளுக்கும் அப்போது தெரியவில்லை.

 

எண்ணிலடங்காத முறையாக அலைபேசியில் பார்வையை பதித்து மீண்டவளின் பார்வை, கதவை திறந்து உள்ளே வந்த பொன்னம்மாவின் மீது பதிந்து விரிந்தது.

 

உள்ளே நுழைத்ததும் நேராக சஞ்சீவனியிடம் வந்தவர், “அந்த வாளை எடுத்தியா?” என்ற கேள்வியை தான் கேட்டார்.

 

*****

“சார், நீங்க அனுப்பின ஃபூட் பிரின்ட்ஸை செக் பண்ணியாச்சு. அதே மாதிரி ஃபூட் பிரின்ட்ஸ் இதோ இந்த இடத்துல இருக்கு.” என்று முன்தினம் சர்வஜனனும் சஞ்சீவனியும் ஒளிந்திருந்த இடத்திற்கு அருகே இருந்த பாதையைக் காட்டினான் சரவணன்.

 

அங்கு முன்னர் போலவே, சில தூரம் விலங்கின் காலடி தடமும், அதை தொடர்ந்து மனித காலடி தடமும் இருக்க, அது அந்த பங்களாவை நோக்கி செல்வதையும் கண்டு கொண்டான் சர்வஜனன்.

 

“சரவணன், போலீஸ் ஃபோர்ஸ் ரெடியா? நாம இப்போ அந்த பங்களாக்குள்ள போறோம்.” என்று அதிரடியாக கூறினான் சர்வஜனன்.

 

காவல்படை அந்த பங்களாவினுள் நுழைய, அங்கு அந்த பெரிய வரவேற்பறையில், மேலாடை எதுவுமின்றி, கால்சராயும் அங்கங்கே கிழிந்து தொங்கியபடி, உடலெங்கும் இரத்தக்காயங்களுடன் மயக்க நிலையில் இருந்தான் சேகர், இரு நாட்களுக்கு முன் காணாமல் போனதாக புகாரளித்த பெண்ணின் கணவன்!

 

மாயம் தொடரும்…

    The post பிறை சூழ் மாயம் – 8 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

    ]]>
    https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/feed/ 0 17863
    18 – இதயத்தின் நிறம் பார்த்ததால் https://thoorigaitamilnovels.com/18-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ https://thoorigaitamilnovels.com/18-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/#respond Thu, 09 May 2024 10:16:30 +0000 https://thoorigaitamilnovels.com/18-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ நிறம் 18   பத்து ஆண்டுகளுக்கு முன்பு…   அன்னையின் சொல்லிற்கு கட்டுப்பட்டு ஸ்வரூபன் அவர்களது கல்லூரியிலேயே படிக்க, தன் கனவை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு ஷ்யாம் சென்னையிலுள்ள பிரபல கல்லூரியில் இளங்கலை அரசறிவியல் பிரிவில் சேர, நண்பனை தொடர்ந்து அகிலும் அதே பிரிவில் சேர்ந்து கொண்டான்.   தானுண்டு தன் வேலை உண்டு என்றிருக்கும் ஷ்யாமை அந்த கல்லூரியின் பெண்கள் கூட்டம் பின்தொடராமல் இருந்தால் தான் அதிசயம். அதிலும்,

    The post 18 – இதயத்தின் நிறம் பார்த்ததால் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

    ]]>

    Loading

    நிறம் 18

     

    பத்து ஆண்டுகளுக்கு முன்பு…

     

    அன்னையின் சொல்லிற்கு கட்டுப்பட்டு ஸ்வரூபன் அவர்களது கல்லூரியிலேயே படிக்க, தன் கனவை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு ஷ்யாம் சென்னையிலுள்ள பிரபல கல்லூரியில் இளங்கலை அரசறிவியல் பிரிவில் சேர, நண்பனை தொடர்ந்து அகிலும் அதே பிரிவில் சேர்ந்து கொண்டான்.

     

    தானுண்டு தன் வேலை உண்டு என்றிருக்கும் ஷ்யாமை அந்த கல்லூரியின் பெண்கள் கூட்டம் பின்தொடராமல் இருந்தால் தான் அதிசயம். அதிலும், போலீஸ் வேலைக்காக அப்போதே உடலில் கவனம் செலுத்தியதால், அந்த கல்லூரியின் ஹீரோவாகிப் போனான் ஷ்யாம்.

     

    அவன் எண்ணம் முழுவதும் படிப்பிலும், தேர்வுகளிலும் தான் இருந்தது. ஆனால், அதை கலைக்கும் வண்ணம், அவனை சுற்றி வரும் பெண்களை கண்டு வெறுத்து தான் போனது ஷ்யாமிற்கு.

     

    முதலில் சொல்லிப் பார்த்தவன், ‘அதற்கெல்லாம் அடங்குவோமா’ என்று பின்வந்தவர்களை முறைத்தே தள்ளி வைத்தான்.

     

    ஒருமுறை, “அடப்பாவி, அந்த பொண்ணு உன்னை பார்க்க வந்துச்சான்னே தெரியாம எதுக்கு டா துரத்துற? ஒருவேளை, என்னைக் கூட பார்க்க வந்துருக்கலாம்ல.” என்று அகில் கேட்டிருக்க, அவனையும் முறைத்த ஷ்யாம், “உன் அத்தை பொண்ணு கிட்ட நீ இப்போ சொன்னதை சொல்லவா?” என்று அவனை அடக்கியிருந்தான்.

     

    இப்படி பெண்கள் தூரத்தில் இருந்து பார்த்து ரசிக்கும் ஹீரோவான ஷ்யாமே ஒருத்தியை ‘யாரு டா இந்த பொண்ணு’ என்று பார்க்க வைத்த பெருமை ஷர்மிளாவையே சேரும்.

     

    ஷ்யாம் இறுதி ஆண்டு படிக்கும் வேளையில், அந்த கல்லூரிக்கு படிக்க வந்தவள் தான் ஷர்மிளா. இளங்கலை இதழியல் பிரிவில் சேர்ந்திருந்தாள்.

     

    ‘ராகிங்’ என்று பெரிய அளவில் இல்லை என்றாலும், ஆங்காங்கே சிறு குழுக்களாக, புதிதாக வந்திருந்தவர்களை இழுத்து வைத்து பேசியபடி இருந்தனர் அந்த கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள்.

     

    அப்படி தான் அகில், ஷ்யாம் மற்றும் அவர்களின் நண்பர்களும் ஒரு குழுவாக அமர்ந்திருந்தனர். புதிதாக வருபவர்களிடம் பேசி, கேலி கிண்டல் செய்யலாம் என்று கூறிய அகிலை தன் பார்வையால் தடுத்திருந்தான் ஷ்யாம்.

     

    “இப்படி சும்மா பார்க்க, எதுக்கு டா இங்க உட்காரணும்?” என்று அகில் முனகிக் கொண்டிருக்க, அவன் பொறுமலை தடுக்க என்றே அங்கு வந்து நின்றாள் ஷர்மிளா.

     

    வெள்ளையும், இளநீலமும் கலந்த குர்தியும், காற்றில் ஆடும் போனி டெயிலும், குறும்பு பார்வையை மறைக்க முயன்று தோற்று போன கண்ணாடியும், பார்த்தாலே ஒட்டிக் கொள்ளும் பளிச் சிரிப்பும் என்று நின்றவளை மற்றவர்கள் ஆர்வமாக பார்த்தாலும், ஷ்யாமோ ஒருநொடிக்கும் குறைவான நேரத்தில் அளவிடும் பார்வை பார்த்துவிட்டு குனிந்து கொண்டான்.

     

    ஷர்மிளா அவனின் உதாசீனத்தை கருத்தில் கொள்ளாமல், அவனை ரகசியமாக பார்த்தபடி, அனைவருக்கும் ஒரு ‘ஹாய்’யை கூற, மற்றவர்களோ அவளிற்கு பதில் கூறாமல் ஆராய்ச்சி பார்வை பார்த்தனர்.

     

    “என்ன ப்ரோ, ஒன்லி லுக்கிங்கா ராகிங்லாம் இல்லையா?” என்று ஷர்மிளா வினவ, மற்றவர்கள் அவளை ‘பே’வென பார்த்தனர்.

     

    அகிலோ, “ஏய் இந்தாம்மா, நீ பாட்டுக்கு வந்த, ராகிங் இல்லையான்னு கேட்குற? உண்மையை சொல்லு, நீ ‘ஆன்டி-ராகிங் கமிட்டி’யை சேர்ந்தவ தான?” என்று கேட்க, “அட என்ன ப்ரோ நீங்க, என்னை பார்த்தா அப்படியா தெரியுது? நானே ஒரு இன்னொசென்ட் பொண்ணு ப்ரோ. நானா வந்து உங்ககிட்ட இன்ட்ரோ கொடுத்தா, நீங்க விட்டுடுவீங்கன்னு ஒரு நம்பிக்கைல வந்தேன்.” என்றவளின் பார்வை அவ்வபோது ஷ்யாமை தழுவியதை அனைவரும் கண்டு கொண்டு தான் இருந்தனர்.

     

    “ஆஹான், இன்னொசெண்டு… நீ? நம்பிட்டேன் நம்பிட்டேன்! சரி, இந்த இன்னொசென்ட் பொண்ணோட பேரு என்னவோ?” என்று அகில் வினவ, அங்கு ஒரு குட்டி அறிமுக படலம் நடந்தேறியது.

     

    அனைவரிடமும் கை குலுக்கி அறிமுகப்படுத்திக் கொண்டவள், இறுதியாக ஷ்யாமிடம் செல்ல, அந்த நண்பர்கள் கூட்டத்தில் ஒருவனோ, “அகிலா, அந்த பொண்ணை நிறுத்து டா. பாவம் திட்டு வாங்க போகுது.” என்றான்.

     

    “க்கும், யாரு பாவம்னு வெயிட் பண்ணி பார்ப்போம். எனக்கென்னவோ இன்னைக்கு ஒரு நல்ல எண்டர்டெயின்மெண்ட் ஸீன் இருக்கும்னு தோணுது.” என்றான் அகில்.

     

    “ஹாய் சீனியர். என் பேரு ஷர்மிளா.” என்று அவள் கூற, ஷ்யாமோ அவளை ‘இருந்துட்டு போ’ என்ற ரீதியில் பார்த்து வைத்தான்.

     

    அதில் கடுப்பான ஷர்மிளாவோ, “ஒருத்தர் பேரு சொல்லி இண்ட்ரோ கொடுத்தா, திரும்ப பேர் சொல்லணும்னு கூடவா தெரியாது?” என்று கேட்க, ஷ்யாமோ, “எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல.” என்று கூறினான்.

     

    “இப்போ என்ன லவ் பண்ணலாம்னா கூப்பிட்டேன். இன்ட்ரெஸ்ட் இல்லன்னு சொல்றீங்க!” என்று ஷர்மிளா கேட்க, ஒருநொடி அந்த இடமே அமைதியாக இருந்தது.

     

    அதில் அவளை தீப்பார்வை பார்த்த ஷ்யாமோ, “இடியட்…” என்று மேலும் ஏதோ கூற வந்தவன், பின் என்ன நினைத்தானோ அங்கிருந்து செல்ல முயல, “ஹலோ சீனியர், உங்க பேரை நீங்களே வச்சுக்கோங்க.” என்று சத்தமாக கூறிவிட்டு, “ஏதோ காலேஜே கொண்டாடுற ஹீரோன்னு சொன்னாங்களேன்னு பேச வந்தா, ரொம்பத்தான்…” என்றாள். என்னதான் முணுமுணுத்தாலும் அது மற்றவர்களுக்கு கேட்கத்தான் செய்தது.

     

    மீண்டும் அவளை ஷ்யாம் முறைக்க, அகிலோ, “அந்த ஹீரோன்னு சொன்னியே, அது எப்படி தெரிஞ்சுது?” என்று அவன் சந்தேகத்தை கேட்க, “இதெல்லாம் ஒரு கேள்வியா ப்ரோ. மூணு வருஷம் படிக்க போற காலேஜ், இது கூட ரிசர்ச் பண்ணலன்னா எப்படி?” என்று தோளை குலுக்கினாள் ஷர்மிளா.

     

    ‘இது ரொம்ப அவசியமா?’ என்று பார்வையிலேயே கேள்வி கேட்டு அகிலை ஷ்யாம் முறைக்க, அவனைக் கடந்து சென்ற ஷர்மிளாவோ, “இதுக்கே இப்படின்னா, இனி டெயிலியும் ஓட வேண்டியதா இருக்கும்!” என்று கூறிவிட்டு சென்று விட்டாள்.

     

    அவள் கூறிச் சென்றதை போல, தினமும் அவன் கண்களில் பட்டுக்கொண்டே தான் இருந்தாள். முதலில் முறைத்தாலும், பின்பு என்ன நினைத்தானோ ஷ்யாமும் அவளைக் கண்டு கொள்வதில்லை.

     

    அடிக்கடி அவன் முன் வந்து, “அட என்ன சீனியர், இன்னைக்கு நீங்க ஹேண்ட்ஸமா தெரியுறீங்க?” என்பாள். சுற்றி யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்ப்பதில்லை!

     

    அவளின் செயலில் பல்லைக் கடித்து கொண்டு, “ஏய்…” என்று ஷ்யாம் ஏதோ சொல்ல வருவதற்குள், “வெயிட் வெயிட், நீங்க ஹேண்ட்ஸமா இருக்கீங்கன்னு தான் சொன்னேன். வேற ஸீன் ஒன்னும் இல்ல.” என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி விடுவாள்.

     

    “இவளை…” என்று திட்ட வந்து, பின் சுற்றி இருப்பவர்கள் அவனை நோட்டமிடுவதை பார்த்து நிறுத்தி விடுவான்.

     

    ஷர்மிளா ஷ்யாமிடம் பேசுவதைக் கண்டு சில பெண்களும் அவனிடம் பேச வர, அவர்களை முறைத்தே தள்ளி நிறுத்தி விடுவான்.

     

    இதை ஷர்மிளாவின் தோழிகள் அவளிடம் சொல்லி, “நீ மட்டும் அப்படியென்ன ஸ்பெஷலோ?” என்று பொறும, அது ஷ்யாமின் காதுகளுக்கும் சென்றது.

     

    உடனே ஷர்மிளாவை தனியே அழைத்தவன், “ஓய் சோடாபுட்டி, உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க? வேணும்னே என்னைப் பத்தின காசிப்பை ஸ்ப்ரெட் பண்ணிட்டு இருக்கியா?” என்று கோபமாக வினவ, அவளோ அதற்கெல்லாம் அசராமல், “இப்போ எதுக்கு இவ்ளோ கோபம் சீனியர்? நான் உங்களை பத்தி காசிப் பண்ணேன்னு நீங்க பார்த்தீங்களா? காசிப் எல்லாம் நம்ம ஆக்ஷன்ஸ் வச்சு பரவுறது தான் சீனியர். நானா ஆள் வச்சு எல்லாம் பரப்பல. இதோ, இப்படி நம்ம பேசிட்டு இருக்குறதை பார்த்து தானா பரவுறது தான்.” என்று கண்ணடித்து கூறிவிட்டு ஓடி விட்டாள்.

     

    ‘இவளை எப்படி தான் அடக்குறது?’ என்று ஷ்யாம் தான் தலையால் தண்ணீர் குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டான் என்பது தான் உண்மை. அவளால் அவன் கவனம் சிதறிப் போவதை உணர்ந்து, அவளிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

     

    அவன் மனநிலையை சரியாக கணித்ததை போல, ஷர்மிளாவும் அவனருகே வராமல் தூரத்தில் நின்றே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்ப்பது ஷ்யாமிற்கு தெரிந்தாலும், அவன் அதை காட்டிக் கொள்ளவில்லை.

     

    நியாயமாக பார்த்தால், அவள் அவனை தொல்லை செய்யாமல் இருப்பதை எண்ணி நிம்மதியுடன் தானே இருக்க வேண்டும். ஆனால், அதற்கு எதிர்மாறாக, ‘ஏன்’ என்ற கேள்வியை அவன் மனதை ஆக்கிரமித்திருந்தது.

     

    நாட்கள் செல்ல செல்ல, ஷர்மிளாவோ அகில் மற்றும் அவர்களின் நண்பர்களோடு நன்றாக உரையாட ஆரம்பித்து விட்டாள். அவ்வபோது, ஷ்யாமையும் ஜாடையாக பேசி கேலி செய்து அவன் முறைப்பை வாங்கிக் கொண்டாலும், நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.

     

    ஒருமுறை, “அது என்ன நாங்க எல்லாம் ப்ரோ, அவன் மட்டும் சீனியர்?” என்று அகில் வினவ, ஷ்யாமை ஓரக்கண்ணில் பார்த்துக் கொண்டே, “நீங்க எல்லாரும் பேரு சொன்னீங்க, அதான் ப்ரோ. பேரைக் கூட சொல்லாதவங்க எல்லாம் சீனியர் தான்.” என்றாள்.

     

    ஆனால், அவளின் குரலே ‘சீனியர்’ என்ற அழைப்பு எத்தனை நெருக்கம் என்பதை கூறியது.

     

    ஷ்யாம் அதைக் கேட்டாலும் எதுவும் கூறாமல் சென்று விட, ஷர்மிளா மர்மமாக சிரித்தாள்.

     

    அதைக் கண்ட அகிலோ, “இப்போ எதுக்கு நீ வினோதமா சிரிக்கிற?” என்று வினவ, “ஹ்ம்ம், ரெட் சிக்னல் எதுவும் கிடைக்கலல, அதான் வெற்றி சிரிப்பு! கூடிய சீக்கிரம் க்ரீன் சிக்னல் கிடைச்சுடனும்னு சாமி கிட்ட வேண்டிக்கோங்க.” என்றாள்.

     

    தூரத்தில் செல்பவனையும், அவனை பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தவளையும் பார்த்த அகிலோ, “க்கும், நீ க்ரீன் கலர் டிரெஸ் போடாம இருக்க வேணும்னா வேண்டிக்குறேன்.” என்றான்.  

     

    சில நாட்கள் தள்ளி நின்றே ரசித்தவள், அது வேலைக்காகாது என்று எண்ணினாளோ என்னவோ, ஷ்யாமிடம் வந்து, “சீனியர், உங்க டிப்பார்ட்மெண்ட் ஜூனியர் வசந்த் என் ஃபிரெண்டு தான். அவனுக்கு உங்க நோட்ஸ் வேணுமாம்.” என்றாள்.

     

    அவனோ அவளை பார்க்காமல், “ஏன், அதை அவன் வந்து கேட்க மாட்டானாமா?” என்று முணுமுணுக்க, அவனருகே வந்தவளோ, “அவனுக்கு உங்களை பார்த்தா பயமாம்!” என்று கண்களை விரித்து தீவிர பாவனையில் கூறினாள்.

     

    அதில் வழக்கம் போல அவன் முறைக்க, “ஷப்பா, இந்த எக்ஸ்ப்ரெஷனை யாராவது பார்த்தா, நான் என்னமோ உங்களை ஏமாத்தி கழட்டி விட்டதா நினைச்சுக்க போறாங்க.” என்று சத்தமாக அவள் கூற, ஷ்யாமோ பையிலிருந்த அவன் பழைய குறிப்பேடுகளை அவளின் கைகளில் பொத்தென்று வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

     

    அவள் அவனிடம் பேசியதில், ஏனோ இத்தனை நாட்கள் மனதிற்குள் தொக்கி நின்ற கேள்வி மறைந்து விட்டதை போல தான் உணர்ந்தான் ஷ்யாம்.

     

    “க்கும், நோட்ஸ் கேட்டா, ஏதோ சொத்தையே கேட்டா மாதிரி ஸீன் போட வேண்டியது!” என்று ஷர்மிளா முணுமுணுக்க, அகிலோ, “ஆமா, அவன் தான் முறைக்குறான்ல. திரும்ப திரும்ப அவனை ஏன் வம்பிழுக்குற?” என்றான்.

     

    “முறைக்குறதுக்கெல்லாம் கவலைப்பட்டா இலக்கை அடைய முடியுமா ப்ரோ?” என்று ஷர்மிளா கண்ணடிக்க, “ஹ்ம்ம், பார்க்குறது சைட்டடிக்கிற வேலை, இதில இலக்கு ஒன்னு தான் குறைச்சல்.” என்றான் அகில்.

     

    அதன்பின்போ, ‘வசந்த்திற்கு இது வேண்டும், அது வேண்டும்’ என்று அடிக்கடி வந்து ஷ்யாமின் முன் நின்றாள் ஷர்மிளா. இது அந்த வசந்த்திற்கு தெரியுமா என்பது வசந்த்திற்கே வெளிச்சம்!

     

    ஷ்யாம் அவளிடம் சிடுசிடுவென்று பேசினாலும், அவள் கேட்டதை செய்ய, அகிலே அவனிடம், “நீ ஏன் டா அவ என்ன சொன்னாலும் செய்யுற?” என்று கேட்க, “பின்ன நொய்யுநொய்யுன்னு பேசி டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்தா என்ன பண்ண? மனுஷனை நிம்மதியா இருக்க விடுறாளா?” என்றான் ஷ்யாம்.

     

    ஆனால், அது மட்டும் தான் காரணமா என்றால் அவனிற்கே அது தெரியாது என்று தான் கூற வேண்டும். மற்ற பெண்களை தள்ளி நிறுத்தியதை போல ஷர்மிளாவை தள்ளி நிறுத்த முடியவில்லை அவனால். அவன் அவ்வளவாக முயற்சிக்கவில்லை என்று கூற வேண்டுமோ!

     

    நாட்கள் கடந்து, மாதங்களும் கடந்து சென்றன. ஆனால், ஷர்மிளா – ஷ்யாம் உறவு என்னவோ பேச்சுவார்த்தையில் இருந்து அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. அவளும் விதவிதமாக அவளின் மனதை தெரிவிக்க முயன்று கொண்டு தான் இருக்கிறாள். அதற்கு அவன் அவகாசம் கொடுத்தால் தானே!

     

    வேறு வழியின்றி, “ஷப்பா, லவ்வை சொல்ல கூட விட மாட்டிங்குறாரு ப்ரோ உங்க ஃபிரெண்டு.” என்று அகிலிடம் தான் புலம்புவாள் ஷர்மிளா.

     

    அதற்கு அவனோ, “நான் தான் சொன்னேன்ல, அவன் லவ்வுக்கு எல்லாம் செட்டாக மாட்டான். நீ ஏன், கல்யாணம் பண்ணிட்டு லவ் பண்ணக்கூடாது.” என்று அறிவுரை வழங்க, அவன் பின்மண்டையில் பலமாக அடித்து விட்டு, ஷர்மிளாவையும் துரத்தி விடுவான் ஷ்யாம்.

     

    “ஷ்யாமா, உனக்கு ஷர்மியை பிடிச்சுருந்தா, அக்செப்ட் பண்ண வேண்டியது தான? அவளும் பாவம், எத்தனை முறை தான் அவ லவ்வை சொல்ல, உன் பின்னாடி அலைவா? பிடிக்கலைன்னா, அதையாவது சொல்லலாம்ல.” என்று அகில் கூற, அதற்கு புரியாத பார்வை ஒன்றே பதிலாக கிடைக்கும் ஷ்யாமிடமிருந்து.

     

    இதோ அதோவென்று, இறுதியாண்டு கல்வி முடிவிற்கு வந்து விட்டது ஷ்யாமிற்கு. அடுத்த நாள் இறுதி நாள் என்ற நிலையில் அவனிடம் வந்த ஷர்மிளாவோ, “என்னை ரொம்ப துரத்திட்டீங்க சீனியர். நாளைக்கு எப்படியும் சொல்லியே தீருவேன். நீங்களும் பதில் சொல்லியே ஆகணும்.” என்று கூறிவிட்டு  ஓடியிருந்தாள்.

     

    என்னதான், அவள் மனதை பகிர்வதை இத்தனை நாட்கள் தடுத்திருந்தாலும், ஏதோ ஒரு குறுகுறுப்பு உள்ளுக்குள் எழத்தான் செய்தது ஷ்யாமிற்கு.

     

    அந்த சந்தர்பத்தை எப்படி கையாள வேண்டும் என்று மிகவும் யோசித்தாலும், அவளை சந்திக்கும் நேரத்திற்காக ஒருவித ஆர்வத்துடன் காத்திருந்தான் என்று தான் கூற வேண்டும்.

     

    ஆனால், அவன் காத்திருப்பு எல்லாம் கானல் நீராகிப் போனது. அடுத்த நாள், அவனின் சோடாபுட்டி அவன் கண்முன் வரவே இல்லை!

     

    எப்போதும் அவளை கண்டு கொள்ளாமல் சுற்றியவனோ, அன்று அந்த கல்லூரியையே சல்லடை போட்டு தேடி விட்டான், அவளிற்காக! ஆனால், பலன் தான் இல்லை.

     

    கல்லூரியின் இறுதி நாள் என்பதால், பலர் குறிப்பாக பெண்கள் அவனை சூழ்ந்து கொள்ள, அவன் நினைவை ஆக்கிரமித்தவள் என்னவோ அவனின் சோடாபுட்டி தான்!

     

    இரவு நேரமான போதும் கூட, கல்லூரியை விட்டு செல்ல மனமில்லாமல் சுற்றியவனிடம், “நான் கால் பண்ணி பார்த்தேன் டா. அவ எடுக்கல. நாளைக்கு வேணா அவ வீட்டுக்கு போய் பார்ப்போம்.” என்று அகில் சமாதானப்படுத்துவதற்காக கூற, “நான் எதுக்கு அவளை தேடிப் போகணும்? ஏதோ இன்னைக்கு பேசணும்னு சொன்னாளேன்னு வெயிட் பண்ணேன். அவ்ளோ தான்.” என்று கத்திவிட்டு சென்று விட்டான்.

     

    அதன் பிறகு சில நாட்கள், அவள் ஏன் அன்று வரவில்லை என்ற கேள்வி மனதிற்குள் எழுந்தாலும், அவன் நேரத்தை தேர்வு, பயிற்சி ஆகியன ஆக்கிரமித்துக் கொண்டன. அதில், அவளை தற்காலிகமாக மறந்தே விட்டான் என்று தான் கூற வேண்டும்.

     

    அன்று மருத்துவமனையில் அவளை சந்தித்தபோது கூட, சட்டென்று அவள் தான் என்பதை அவனால் கண்டு கொள்ள முடியவில்லை. காரணம், அவளின் தோற்றம் என்றால் மிகையாகாது.

     

    அவளின் டிரேட்மார்க்காக கருதப்படும் சிரிப்பும், கண்ணாடியும் காணாமல் போயிருந்தன. கண்களை சுற்றிய கருவளையமும் முகத்தை நிறைத்திருந்த வேதனையின் சாயலும் ஏனோ ஷ்யாமின் இதயத்தை தாக்கின.

     

    ‘அகில் சொன்ன மாதிரி அடுத்த நாள் போய் பார்த்துருக்கணுமோ?’ என்ற கேள்வி அவளை பார்க்கும்போதெல்லாம் தோன்ற ஆரம்பிக்க, அவளைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான் ஷ்யாம்.

     

    அவளின் வேலையை பற்றி தெரிந்து கொண்டவனிற்கு, அவள் தந்தையின் இறப்பும் தெரிய வந்தது. அதுவும், அவர் இறந்தது அந்த கல்லூரி இறுதி நாளில் தான் என்பதை அறிந்ததும், அன்று சென்று பார்க்காத தன் மடத்தனத்தை எண்ணி மனம் குமைந்தான்.

     

    இந்த தகவல்கள் எல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்னர் கிடைத்திருந்தால் கூட, அவளிடம் அப்போதே பேசியிருப்பான். இப்படி தன் எதிரியிடம் அவளை தொலைத்து, அவளிற்கு என்ன ஆனதோ என்று பதைபதைப்புடன் அவனும் சொந்த ஊருக்கு பயணிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

     

    *****

     

    ‘சோலைப்புதூர்’ என்ற ஊரின் பெயரை மட்டுமே தெரிந்து கொண்ட ஷ்யாமிற்கு, விக்ரம் தற்போது எங்கு சென்றிருப்பான் என்று சரியாக தெரியவில்லை என்றாலும், ஒரு யூகத்தில் பெரிய வீட்டிற்கு சென்றிருந்தான்.

     

    அவன் யூகம் தவறாத படி, விக்ரம் அவனின் பாதுகாவலர்கள் படை சூழ அங்கு தான் இருந்தான். அவனுடன், தலை குனிந்தபடி ஷர்மிளாவும் நின்றிருந்தாள்.

     

    இதுவரை ஷ்யாமிற்கு புரியாதது என்னவென்றால், ஷர்மிளா இதற்குள் எப்படி வந்து சிக்கினாள் என்பது தான். அவளை ஏன் இவ்வீட்டிற்கு கூட்டி வரவேண்டும் என்ற கேள்வி ஷ்யாமின் மனதை அரிக்க, கண்டிப்பாக அதற்கான பதில் உவப்பானதாக இருக்காது என்று அவன் மனம் அடித்துக் கூறியது.

     

    மீண்டும் ஒருமுறை அவன் யூகம் சரியென்பது போல இருந்தது, விக்ரம் கூறிய அந்த செய்தி.

     

    அதைக் கேட்ட ஷ்யாமிற்கு, உடனே தோன்றியது என்னவோ, விக்ரம் கூறியது பொய் என்பது தான்.

     

    ‘டா**, எவ்ளோ தைரியம் இருந்தா, இப்படி எல்லாரு முன்னாடியும் பொய் சொல்லி, அவளை இதுல சிக்க வைப்பான்?’ என்று எண்ணிய ஷ்யாமோ யோசிக்காமல் விக்ரமின் சட்டையை பிடித்திருந்தான்.

     

    அத்தனை நேரம் தலை குனிந்து நின்றிருந்த ஷர்மிளாவோ, “அப்பாவை விடுங்க.” என்று முனக, “ஷட்டப், யாரு உனக்கு அப்பா?” என்று அவளிடமும் கத்தினான் ஷ்யாம்.

     

    அத்தனை நேரம் ஸ்வரூபனை அடக்கியபடி இருந்த அகிலோ, அவனை வர்ஷினியிடம் விட்டுவிட்டு ஷ்யாமை விக்ரமிடமிருந்து பிரிக்க முயன்று கொண்டிருந்தான். மறுபக்கம் விக்ரமின் பாதுகாவலர்களும் இருவரையும் பிரிக்க பெருமுயற்சி செய்து, அதில் வெற்றியும் பெற்றிருந்தனர்.

     

    “ச்சு, இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி…” என்ற விக்ரமோ தன்னை சட்டையை நீவியபடி ஷ்யாமின் அருகே வந்து, “உன் அம்மா இதை தான் சொல்லி தந்தாளா?” என்று வினவ, தன்னை பிடித்திருந்த அகிலை தள்ளிவிட்டு, விக்ரமை அடிக்க செல்ல, இருவருக்கும் இடையில் வந்த ஷர்மிளாவோ, “நிறுத்துங்க. இவரு தான் என் அப்பா.” என்று அழுத்தமாக கூறினாள்.

     

    அடிக்க உயர்த்திய கையை இறக்கிய ஷ்யாமோ, “ஓஹோ, அப்போ பத்து வருஷத்துக்கு முன்னாடி இறந்தது யாரு?” என்று வினவ, “அவரு என்னை வளர்த்த அப்பா.” என்று அவன் முகத்தை பார்க்காமல் கூறினாள் ஷர்மிளா.

     

    அதில் ஷ்யாமின் இரத்த அழுத்தம் உயர, ஒரு பெருமூச்சுடன் தன்னை இயல்பாக்கிக் கொண்டவன், அவன் முன் நின்றவளின் தோளை ஆறுதலாக பற்றியபடி, “உன் தம்பியை காப்பாத்தியாச்சு. சோ, இனி நீ யாருக்கும் பயந்து பொய் சொல்ல தேவையில்லை.” என்று இறுதி வரியை விக்ரமை முறைத்துக் கொண்டே கூறினான்.

     

    ஷர்மிளாவோ, ஷ்யாமின் கைகளை தட்டிவிட்டு, “நான் ஏன் பொய் சொல்லணும்? இது தான் என் அப்பா. அவரோட வேலையால எனக்கு ஆபத்து வரும்னு தான், இத்தனை நாள் வேற பேர்ல, வேற ஒருத்தரோட பொண்ணா இருந்தேன். என் உண்மையான பேரு ஷீதல்!” என்று கூற, அந்த இடமே அமைதியாக இருந்தது.

     

    தொடரும்…

      The post 18 – இதயத்தின் நிறம் பார்த்ததால் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

      ]]>
      https://thoorigaitamilnovels.com/18-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/feed/ 0 17860
      பிறை சூழ் மாயம் – 6 https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/#respond Wed, 08 May 2024 12:37:01 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/ பிறை 6   அன்றைய நாள் இரண்டாவது முறையாக மயங்கிய சஞ்சீவனியை தாங்கிய பொன்னம்மா மீண்டும் அவள் படுத்திருந்த இடத்திலேயே படுக்க வைத்து, அவள் மயக்கத்தை போக்க முயன்று கொண்டிருந்தார்.   அவளும் சில நிமிடங்களில் கண் விழிக்க, முதலில் பார்வையில் பட்ட பொன்னம்மாவை கண்டதும் பயப்பட ஆரம்பித்தாள்.   தன்னையே பார்த்து பயப்படும் சஞ்சீவனியைக் கண்டு ஒரு பெருமூச்சுடன், “நான் சொல்றதை நம்ப கஷ்டமா தான் இருக்கும் சஞ்சீவனி.

      The post பிறை சூழ் மாயம் – 6 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

      ]]>

      Loading

      பிறை 6

       

      அன்றைய நாள் இரண்டாவது முறையாக மயங்கிய சஞ்சீவனியை தாங்கிய பொன்னம்மா மீண்டும் அவள் படுத்திருந்த இடத்திலேயே படுக்க வைத்து, அவள் மயக்கத்தை போக்க முயன்று கொண்டிருந்தார்.

       

      அவளும் சில நிமிடங்களில் கண் விழிக்க, முதலில் பார்வையில் பட்ட பொன்னம்மாவை கண்டதும் பயப்பட ஆரம்பித்தாள்.

       

      தன்னையே பார்த்து பயப்படும் சஞ்சீவனியைக் கண்டு ஒரு பெருமூச்சுடன், “நான் சொல்றதை நம்ப கஷ்டமா தான் இருக்கும் சஞ்சீவனி. ஆனா, அது தான் உண்மை. அதை தெரிஞ்சுக்க வேண்டிய வயசும் உனக்கு வந்துடுச்சு.” என்றவர், அவள் முதுகில் இருக்கும் தழும்பை அவள் பார்வைக்கு படுமாறு கண்ணாடியை காட்டியவர், “நான் சொல்றதுக்கு இது தான் சாட்சி. இந்த தழும்பு எப்போ வந்துச்சு?” என்றார்.

       

      சஞ்சீவனி யோசனையுடன், “எப்போ வந்துச்சுன்னு எனக்கும் சரியா தெரியல. ஆனா, நான் நேத்து தான் கவனிச்சேன். கனவுல வேர்உல்ஃப்…” என்று ஆரம்பித்தவள், தன் கனவுக்கும் இப்போது பொன்னம்மா சொல்வதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்று சிந்திக்க ஆரம்பித்தாள்.

       

      அவள் கூறியதைக் கேட்ட பொன்னம்மா, “உன் கனவே சொல்லுது, உன் பிறப்பின் நோக்கத்தை.” என்றார்.

       

      சஞ்சீவனியின் மனமும் அதை நம்புவதற்கான முதல் படியை எடுத்து வைத்தாலும், அவளுக்கு இருக்கும் கேள்விகளை பொன்னம்மாவிடம் கேட்க ஆரம்பித்தாள்.

       

      “அப்படியே நான் வேர்உல்ஃப் ஹண்டராவே இருந்தாலும், இத்தனை நாள் இல்லாம இப்போ திடீர்னு எதுக்கு இந்த தழும்பு வந்துருக்கு?” என்று வினவினாள்.

       

      “பிறப்புலேயே ஓநாய் மனிதர்களை வேட்டையாடுறவங்களா பிறந்தாலும், அவங்களுக்கு சக்தி கிடைக்குறது என்னவோ அவங்க இருபதாவது வயசுல தான்.” என்று கூறிய பொன்னம்மாவை இடைவெட்டிய சஞ்சீவனி, “ஆனா எனக்கு இப்போ இருபத்திரெண்டு வயசாகுதே.” என்றாள்.

       

      “நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கல.” என்று அவளின் அவசரத்துக்கு குட்டு வைத்த பொன்னம்மா, “வேர்உல்ஃப் ஹண்டருக்கான தேவை எப்போ வரும்?” என்று அவளிடமே கேள்வியும் கேட்டார்.

       

      “வேர்உல்ஃப் ஹண்டருக்கான தேவை…” என்று யோசித்தவளுக்கு அதற்கான பதிலும் கிடைக்க, “அப்போ இத்தனை நாள் இங்க வேர்உல்ஃப் தொல்லை இல்ல. இப்போ இருக்குங்கிறதால இந்த தழும்பு உருவாகியிருக்கா?” என்றாள் சஞ்சீவனி.

       

      அவள் பதிலை பொன்னம்மாவும் ஆமோதிக்க, “ஆனா, ஹண்டருக்கான தகுதி எதுவும் என்கிட்ட இல்லையே. இதுவரை ஹண்டிங் பண்ணது என்ன பார்த்தது கூட இல்ல.” என்று அவள் உதட்டைப் பிதுக்கினாள்.

       

      “ஓநாய் மனிதர்களை வேட்டையாடுறது ஒவ்வொரு ஹண்டருக்கும் அவங்க ரத்தத்துலேயே ஊறுனது. அது உனக்கு போகப்போக புரியும். ஆனா, அதுக்கு முன்னாடி நீ உன்னோட ஆயுதத்தை கண்டுபிடிக்கணும்.” என்றார் பொன்னம்மா.

       

      முதலில் இருந்த பதட்டமும் பயமும் இப்போது சஞ்சீவனியிடம் இல்லை என்று தான் கூற வேண்டும். மாறாக ஒருவித ஆர்வம் அவளை தொற்றிக் கொண்டது.

       

      அதே ஆர்வத்துடன், “ஆயுதமா?” என்று சஞ்சீவனி கண்களை விரித்து கேட்க, “ஆமா, சாதாரணமா இருக்க ஓநாய் மனிதர்களை வெள்ளி கத்தி வச்சு சுலபமா கொன்னுடலாம். ஆனா, சில சக்திவாய்ந்த ஓநாய் மனிதர்களை சாதாரண வெள்ளி கத்தி காயப்படுத்துமே தவிர அவங்க உயிரை எடுக்காது. அதுக்காகவே உருவாக்கப்பட்டது தான் வேர்உல்ஃப் ஹண்டர் குழுத்தலைவருக்கான வாள்.” என்று கூறி பழைய புகைப்படம் ஒன்றை காட்டினார்.

       

      அந்த புகைப்படத்திலும் கூரிய முனை பளபளக்க, கைப்பிடியில் ரத்தச்சிவப்பு நிற மாணிக்க கல் மினுமினுக்க கம்பீரமாக காட்சியளித்தது அந்த வாள்.

       

      அதைக் கண்டு வாயைப் பிளந்தபடி இருந்த சஞ்சீவனியை சுயத்திற்கு அழைத்து வந்தது பொன்னம்மாவின், “இந்த வாளை நீ தான் கண்டுபிடிக்கணும்.” என்ற குரல்.

       

      “எது? நான் கண்டுபிடிக்கணுமா? இப்போ தான் இதை பார்க்குறேன். நான் எப்படி கண்டுபிடிக்க?” என்று அவள் வினவ, “அந்த ஓநாய் மனிதர்கள் கிட்டயிருந்து இந்த வாளை காப்பாத்த, உங்க அம்மா அதை ஒளிச்சு வச்சுருக்காங்க. அந்த வாள் அதுக்கான அடுத்த உரிமையாளருக்காக பல வருஷமா காத்திருக்கு.” என்றார்.

       

      ‘அம்மா’ என்ற சொல் அவள் மனதில் பல்வேறு உணர்வுகளை தோற்றுவித்தாலும், அதை வெளிக்காட்டாமல், “அது சரி, அவங்க ஒளிச்சு வச்சாங்கன்னா எனக்கு எப்படி தெரியும்?” என்றாள்.

       

      பொன்னம்மா ஒரு பெருமூச்சுடன், “டாப்ஹில்லுக்கு போற வழியில ஒரு காட்டுப்பாதை வரும். அங்க கொஞ்ச தூரம் உள்ளப்போனா, காட்டுக்கு நடுல ஒரு பெரிய பங்களா இருக்கும். அது தான் உங்க அப்பா அம்மா வாழ்ந்த இடம். அது இப்போ பாழடைஞ்சு போயிருக்கு. அதை சுத்தி இருக்க காட்டுல தான் எங்கயோ உங்க அம்மா அந்த வாளை ஒளிச்சு வச்சுருக்காங்க. நீ அங்க போனா, அந்த வாளே உனக்கான வழியை காட்டும்.” என்றார்.

       

      அவர் கூறியது அவள் மூளையில் பதிந்தாலும், அவள் மனமோ தன் அன்னை தந்தையை பற்றி கேட்க உந்தியது. அவளும் வாயை திறக்கும் அதே சமயம் பிரத்யூஷா அழைத்திருந்தாள்.

       

      அப்போது தான் மணியை பார்த்து நேரமானதை உணர்ந்த சஞ்சீவனி, அவசரமாக தோழியின் அழைப்பை ஏற்று, “சும்மா ஒரு வாக் வந்தேன் பிரத்யூ. நீ வீட்டுக்கு வந்துட்டியா?” என்றாள்.

       

      மறுபக்கம் என்ன சொல்லப்பட்டதோ, “அச்சோ, சாரி பிரத்யூ, சாவியை நானே எடுத்துட்டு வந்துட்டேன். இதோ ஃபைவ் மினிட்ஸ்ல வந்துடுவேன்.” என்று வேகமாக தன்னிடத்தை விட்டு எழுந்தாள்.

       

      அவள் பொன்னம்மாவிடம், “இன்னொரு நாள் வந்து முழுசா கேட்டுக்குறேன் பாட்டி. இப்போ நான் கிளம்பணும்.” என்று கூற, அவளின் கைகளை பிடித்து நிறுத்திய பொன்னம்மாவோ, “உன் குடும்பத்தை பத்தி மெதுவா தெரிஞ்சுக்கலாம். ஆனா, அந்த வாளை இன்னைக்கே தேடி எடுத்துடு.” என்று கூறினார்.

       

      அவரின் கூற்று அவளை புருவம் சுருங்க வைக்க, “அந்த இடத்துல ஏற்கனவே ஓநாய் மனிதர்களோட நடமாட்டம் ஜாஸ்தியா இருக்குன்னு தகவல் கிடைச்சுருக்கு. அந்த வாள் அவங்க கைக்கு போறதுக்கு முன்னாடி நீ எடுத்தாகணும். இல்லன்னா, அவங்களை அழிக்கவே முடியாம போயிடும்.” என்று எச்சரித்தார் பொன்னம்மா.

       

      அவரிடம் அப்போது ஒன்றும் சொல்லாமல், தலையை மட்டும் அசைத்தவள், அங்கிருந்து அகன்றாள்.

       

      செல்லும் வழியில், ‘இந்த பாட்டி சொல்றதெல்லாம் உண்மையா? அப்பா – அம்மா… ப்ச், இப்போ ரொம்ப அவசியம் இந்த நினைப்பு!’ என்று பல எண்ணங்கள் மனதில் வலம் வந்து கொண்டிருந்தன.

       

      ஒருவழியாக வீட்டிற்கும் வந்து சேர்ந்தாள் சஞ்சீவனி. அங்கு அவளை திட்டுவதற்கென்றே தயாராக இருந்தாள் பிரத்யூஷா.

       

      அவளை சமாளிக்கவே நொடிகள் அனைத்தும் கழிய, அவர்கள் தூங்கப்போகும் சமயமும் வந்தது.

       

      “சஞ்சு, நேத்து மாதிரி கத்தாம இருப்பியா?” என்று பிரத்யூஷா வினவ, ‘க்கும், நைட்டு என்ன நடக்கும்னே தெரியாம இருக்கேன். இதுல இவ வேற!’ என்று மனதிற்குள் நினைத்தவள், வெளியே சிரித்து வைத்தாள்.

       

      *****

       

      சர்வஜனனுக்கு அன்றைய நாளும் பரபரப்பாகவே கழிந்தது. ரோஹித்திடம் கூறியது போல, மேலிடத்தில் அவன் சந்தேகத்தை பற்றிக் கூற, முதலில் அதை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

       

      பின், அந்த காலடித்தட புகைப்படத்தைக் காட்டி, பல விளக்கங்களை கொடுத்ததும் தான் மேலிடம் சற்றாவது காது கொடுத்து அவன் சொல்வதை கேட்க ஆரம்பித்தது.

       

      அதற்கே பல மணி நேரங்கள் அவன் கழித்திருக்க, அந்த கலந்துரையாடல் முடிந்து அவன் வெளியே வந்தபோது, இரவாகி இருந்தது.

       

      வாகனத்தை தேடிச்சென்ற அவனின் குழுவினர், அவர்கள் விட்டுவைத்த இடத்திலும் தேடியிருந்தனர். அங்கு அவர்கள் எதிர்பார்த்ததை போல எதுவும் கிடைக்கவில்லை என்ற தகவலே சர்வஜனனை அடைந்திருந்தது.

       

      “சார், அந்த இடத்துல கொஞ்ச தூரம் போனா ஒரு பாழடைஞ்ச பங்களா இருந்துச்சு. அங்கயும் சேர்ச் பண்ணியாச்சு சார். ஆனா, எந்த தடயமும் கிடைக்கல.” என்றான் சரவணன்.

       

      சர்வஜனன் அதை எதிர்பார்த்தே இருந்தாலும், சரவணன் கூறிய ‘பங்களா’ அவனின் மூளையை குடைந்தது. அவன் உள்ளுணர்வு அங்கு சென்று பார்க்குமாறு கூற, அதை வெளியே யாரிடமும் கூறவில்லை.

       

      இதோ இரவு நேரம் யாருக்கும் தெரியாமல், அந்த பங்களா இருக்கும் இடம் நோக்கி பயணமானான்.

       

      *****

       

      நிலா தேய ஆரம்பித்த இரண்டாவது இரவு… நல்ல உறக்கத்தில் இருந்த சஞ்சீவனிக்கு கனவில் இதுவரை கண்டிராத முகங்கள் மின்னி மின்னி மறைந்தன. எப்போதும் போல கோர்வையாக இல்லாமல், முன்னும் பின்னுமாக காட்சிகள் தோன்றின.

       

      ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் போக, உறக்கத்திலிருந்து விழித்து விட்டாள் சஞ்சீவனி.

       

      விழித்தாலும் அவள் மனம் ஒருநிலையில் இல்லை. யாரோ அவளைக் கட்டுப்படுத்துவது போல உணர்ந்தாள்.

       

      திடீரென்று அந்த வாள் கண்முன் தோன்ற பதறித்தான் போனாள் அவள். இம்முறை எவ்வளவு கத்தியும் பிரத்யூஷா எழுந்து கொள்ளவில்லை. அந்த சூழ்நிலையே அவளுக்கு வித்தியாசமாக இருக்க, மெதுவாக எழுந்தவள், அந்த அறையை விட்டு வெளியே சென்று திரும்பிப் பார்க்க, அந்த வாளும் அவளைத் தொடர்ந்தது.

       

      மனமோ அடித்துக்கொள்ள, சில நொடிகளில் பயத்தை விடுத்து, மெல்ல அந்த வாளை தொட முயன்றாள். ஆனால், அவள் கையோ அதனுள்ளே சென்று மறுபக்கம் வந்தது. அப்போது தான் அது நிஜ வாள் இல்லை என்பதை உணர்ந்தாள்.

       

      அவள் நடுகூடத்தில் அங்குமிங்கும் நடக்க, அந்த வாளும் அவளைப் பின்தொடர்ந்தது.

       

      அதில் கடுப்பானவள், “இப்போ என்னதான் வேணும் உனக்கு?” என்று கத்த, “அந்த வாளே உனக்கான வழியை காட்டும்.” என்ற பொன்னம்மாவின் குரல் கேட்டது.

       

      ஒரு பெருமூச்சுடன் அந்த வாளை பார்த்தவள், “உன்னை எடுக்குற வரைக்கும் இப்படி தான் பயமுறுத்துவியா?” என்று அதனோடு பேச்சுவார்த்தை நடத்தினாள் சஞ்சீவனி.

       

      அது என்ன பதில் கூறியதோ, இல்லை அவள் என்ன உணர்ந்தாளோ, மெல்ல வீட்டை விட்டு வெளியேறியவள், பிரத்யூஷாவின் டியோவில் அவள் அன்னை தந்தை வாழ்ந்த இடத்தை நோக்கி பயணமானாள்.

       

      *****

       

      சுற்றிலும் கருநிறத்தை அள்ளி பூசியது போலிருக்க, பத்தாவது முறையாக டார்ச் எடுத்து வராத தன் மடத்தனத்தை எண்ணி தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்.

       

      பொன்னம்மா கூறியது போல அந்த காட்டுப்பாதையில், ஒற்றை பூவையாய் கையில் அலைபேசி ஒளியுடன் நடந்து கொண்டிருந்தவளின் உடல் பயத்தில் தடதடத்துக் கொண்டிருந்தது. அதையும் மீறி ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

       

      ஒவ்வொரு அடிக்கும் எதிர்பாட்டாக மற்றொரு அடி கேட்க, அது எந்த திசையிலிருந்து வருகிறது என்று அவளால் கணிக்க இயலவில்லை.

       

      ‘ஐயோ, இந்த பாட்டி சொன்னதைக் கேட்டு, இப்படி நைட்டு நேரம் வந்து மாட்டிக்கிட்டேனே! இப்போ திரும்பிப் போகவும் பயமா இருக்கு, முன்னாடி முன்னேறவும் பயமா இருக்கு. இதுல எங்க அந்த வாளை கண்டுபிடிக்குறது?’ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.

       

      இப்போது அவள் பின்னே காலடிச்சத்தம் வேகமாக கேட்க, பயத்தில் அவளும் வேகத்தை அதிகரித்திருந்தாள்.

       

      கூடவே, அவள் மீது ஏதோ வெளிச்சமும் படர, சட்டென்று தன் நடையை நிறுத்தி உறைநிலைக்கு சென்றாள் சஞ்சீவனி.

       

      “யார் அது?” என்று அழுத்தமான ஆண்குரல் கேட்க, மூச்சுக்கே பஞ்சமாகிப் போன வேளையில் பேச்சு வருமா என்ன சஞ்சீவனிக்கு?

       

      அந்த பதட்டத்தில் அந்த ஆண்குரலை அடையாளம் காணவும் முடியவில்லை அவளால்.

       

      உறைநிலையில் இருந்தவளை உருக வைக்கவென்று, அவள் முன் வந்தான் அவன், சர்வஜனன்.

       

      *****

       

      சரவணன் கூறிய பங்களாவை நோக்கி நடந்தவன், சற்று நேரத்திலேயே அவனுக்கு முன்னர் யாரோ நடப்பதை உணர்ந்து கொண்டான். சில நொடிகள் மௌனமாக பின்தொடர்ந்து யாரென்று யூகிக்க முயன்றான்.

       

      அவன் யூகமோ முன்னே செல்லும் நபர் ஆபத்தானவர் அல்ல என்று கணிக்க, மெதுவாக அந்நபரின் நோக்கத்தையும் அறிய முயன்றான்.

       

      சில நிமிடங்களும் கழிய, அவர்கள் நடைக்கும் முடிவில்லை, நோக்கத்தை அறிந்து கொள்ளவும் வழியில்லை என்ற நிலை ஏற்பட, தன் கையிலிருந்த டார்ச்சை உயிர்ப்பித்து முன்னே சென்ற நபரின் மீது வெளிச்சம் படுமாறு காட்ட, அதன் வெளிச்சம் அந்நபரை பெண் எனக் காட்டியது.

       

      இந்நேரத்தில் இங்கு ஒரு பெண்ணா என்ற யோசனையுடன் தான் அவன் யாரென்று வினவியபடி அவள் முன் வந்து நின்றான்.

       

      இருவருமே மற்றவரை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களின் அதிர்ந்த முகத்தில் தெரிந்தது.

       

      முதலில் அதிர்ச்சியிலிருந்து வெளிவந்த சர்வஜனன் சஞ்சீவனியிடம், “நீ இங்க என்ன பண்ற?” என்று வினவ, அவளோ விடை தெரியாத குழந்தைகளுக்கு மத்தியில் கேள்வியே புரியாத குழந்தையாய் முழித்துக் கொண்டிருந்தாள்.

       

      அந்நொடியிலும் அவள் முகபாவனை அவனை ஈர்க்க, கேட்ட கேள்வி மறந்தவனாக அவனும் அவளையே நோக்கிக் கொண்டிருந்தான்.

       

      இருவரும் கலைந்தது என்னவோ அருகிலுள்ள புதரிலிருந்து கேட்ட சத்தத்தில் தான்.

       

      இருட்டில் புதருக்கு இடையில் இருப்பது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்தவன், அவள் வந்த காரணத்தை கூட அறிந்து கொள்ள விழையாமல், “ஃபர்ஸ்ட் இங்க இருந்து போவோம்.” என்று அவளிடம் கூறினான்.

       

      அவளும் தானே அந்த சத்தத்தைக் கேட்டு பயந்திருந்தாள்!

       

      உடனே, தலையசைத்து அவனுடன் கிளம்ப ஆயத்தமானாள்.

       

      அந்த இடம் முழுவதுமே சேற்றினால் நிரம்பியிருந்தது. மேலும், கும்மிருட்டாக இருந்த இடத்தில், எங்கு கால் பதித்து, எப்படி நடப்பது என்றே சஞ்சீவனிக்கு புரியவில்லை.

       

      அப்போது சர்வஜனனின் ஜில்லென்ற கரம் அவளின் கரத்தை இறுக்கமாக பற்ற, ஜிவ்வென்று உள்ளுக்குள் வெப்பம் பரவுவதை உணர்ந்தாள் அவள். ஆனால், அந்த ஜிவ்வென்ற உணர்வு எதனால் என்று யோசிக்கும் முன்னரே அவனின் குரல் அவளின் சிந்தனையை கலைத்திருந்தது.

       

      “இங்க பாதை வழுக்குற மாதிரி இருக்கு. சோ, கேர்ஃபுல்லா நட.” என்று கூறியவன், முன்னே நடக்க, அவளோ அவன் கைப்பாவையை போல சுயவுணர்வின்றி அவன் பின்னே நடந்தாள்.

       

      அவன் எதற்கோ நிற்க, அதை உணராமல், அவன் மீதே மோதிக் கொள்ள, அதில் அவளுக்கு என்னவாகிற்று என்று பார்ப்பதற்காக திரும்பினான் சர்வஜனன்.

       

      சரியாக அதே சமயம், கருநிற வானத்தில் மின்னல் வெட்டி அந்த இடத்தை நொடிப்பொழுது வெளிச்சமாக்க, இங்கு இருவரும் ஒருவருக்கொருவர் பார்வையால் தழுவிக் கொண்டனர்.

       

      அவனின் பழுப்பு விழிகளிலேயே அவளின் விழிகள் நிலைத்து விட, அவனின் பார்வையோ, பாவையின் இளஞ்சிவப்பு அதரங்களில் நிலை கொண்டிருந்தது.

       

      அப்போது திடீரென்று அந்த இடத்தில் கேட்ட உறுமல் சத்தத்தில் இருவரும் தங்கள் மோன நிலையிலிருந்து வெளிவந்தனர். வெவ்வேறு திசையில் திரும்பி இருந்தாலும், இருவரின் மூச்சுக்காற்று ஓசை கூட மற்றவர்களுக்கு தெளிவாக கேட்டது. காரணம், அத்தனை அருகில் நெருங்கி நின்றிருந்தனர்!

       

      முதலில் தெளிந்த சர்வஜனன், அவளை நோக்காமல், “இந்த இடத்தை விட்டு சீக்கிரம் கிளம்பணும். எதுவா இருந்தாலும் மார்னிங் வந்து நான் பார்த்துக்குறேன்.” என்று கூற, அவளோ பதில் சொல்லும் நிலையிலேயே இல்லை.

       

      அதை உணர்ந்து கொண்டவனாக, முன்போலவே அவளின் கரத்தை பற்றியபடி நடந்தான்.

       

      ஆனால், சற்று நேரத்திலேயே, அந்த உறுமல் சத்தம் இவர்கள் திரும்பிச் செல்லும் வழியில் கேட்பது போலவும், நொடிகள் கடக்க, அந்த சத்தம் நெருங்கி வருவதை போலவும் இருக்க, முன்னேறி செல்வது ஆபத்து என்பதை அறிந்து, சட்டென்று அவளுடன் அருகிலிருந்த பாறைக்கு பின்னே மறைந்தான்.

       

      அந்த பாறை சற்று பெரிதாக இருக்கவே, இருவரையும் கச்சிதமாக மறைத்தது.

       

      சஞ்சீவனிக்கு நடப்பது கனவா நனவா என்றே புரிபடவில்லை. அப்போது அவளின் மூளை ஏதோ செய்தியை அனுப்பி அவளை சுயத்தை அடைய பணித்தது.

       

      மூளை கூறிய செய்தியில் சட்டென்று கீழே பார்க்க, சர்வஜனனின் கரமோ அவளின் அபாயகரமான இடத்தை சுற்றி அணைவாக பிடித்திருந்தது.

       

      அவனுக்கு அந்த யோசனையே இல்லை போலும். ஆனால், பெண்ணவளோ கூச்சத்தில் நெளிந்து கொண்டிருந்தாள். வாய் திறந்தும் கூற முடியாத நிலை அவளுக்கு!

       

      அவள் நெளிவதை சற்று தாமதமாகவே புரிந்து கொண்ட சர்வஜனனோ, “ஷ், யாரோ இல்ல எதுவோ இந்த பக்கமா தான் வர மாதிரி இருக்கு. சோ, கொஞ்ச நேரம் அமைதியா இரு.” என்று சூழ்நிலை புரியாமல் அதட்ட, சஞ்சீவனியோ எப்படி சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

       

      அவளின் முகபாவனையை பார்த்தவன், “என்னாச்சு? எதுக்கு இப்படி முழிக்குற?” என்று வினவ, அவளோ கண்களால் அவன் கரத்தை நோக்க, அவனும் அப்போது தான் அவன் கரத்தை, அது இருக்கும் இடத்தையும் கண்டான்.

       

      “ஓஹ் சாரி!” என்று வேகமாக கரத்தை இழுத்துக் கொண்டவன், மற்றைய புறம் திரும்பிக் கொண்டான்.

       

      இருவருமே படபடப்பில் இருந்ததை அவர்களின் உடல்மொழியே மற்றவர்களுக்கு காட்டிக் கொடுத்தது.

       

      இருவரின் அந்நிலையை கலைத்தது அருகில் கேட்ட சத்தம். அதைக் கேட்டு, லேசாக மறைவிலிருந்து எட்டிப் பார்த்தவர்கள் கண்டது….

       

      மாயம் தொடரும்…

        The post பிறை சூழ் மாயம் – 6 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

        ]]>
        https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/feed/ 0 17857
        பிறை சூழ் மாயம் – 5 https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/#respond Tue, 07 May 2024 13:00:30 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/ பிறை 5   சஷாவில் சர்வஜனனைக் கண்டதுமே சஞ்சீவனிக்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதனுடன், அவனும் தன்னைப் பற்றி நினைத்திருப்பானோ என்ற குறுகுறுப்பும் மனதிற்குள் எழுந்தது.   அதே சிந்தனையுடன் அவர்கள் கேட்ட காஃபி மோச்சாவை தயாரித்து அவர்களின் மேஜைக்கு அருகே செல்ல, அப்போது தான் சர்வஜனனின் அலைபேசியிலிருந்த புகைப்படத்தைக் கண்டாள்.   அனிச்சையாக மனதிற்குள் பல காட்சிகள் விரிய, அவளே அறியாமல் தான், “வேர்உல்ஃபோட காலடித்தடம்!” என்று கூறியிருந்தாள்.  

        The post பிறை சூழ் மாயம் – 5 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

        ]]>

        Loading

        பிறை 5

         

        சஷாவில் சர்வஜனனைக் கண்டதுமே சஞ்சீவனிக்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதனுடன், அவனும் தன்னைப் பற்றி நினைத்திருப்பானோ என்ற குறுகுறுப்பும் மனதிற்குள் எழுந்தது.

         

        அதே சிந்தனையுடன் அவர்கள் கேட்ட காஃபி மோச்சாவை தயாரித்து அவர்களின் மேஜைக்கு அருகே செல்ல, அப்போது தான் சர்வஜனனின் அலைபேசியிலிருந்த புகைப்படத்தைக் கண்டாள்.

         

        அனிச்சையாக மனதிற்குள் பல காட்சிகள் விரிய, அவளே அறியாமல் தான், “வேர்உல்ஃபோட காலடித்தடம்!” என்று கூறியிருந்தாள்.

         

        அதைக் கூறிய மறுநொடி, தானா அப்படி கூறினோம் என்ற சிந்தனைக்குட்பட்டவளிற்கு அதற்கான அவகாசம் கிடைக்காமல் போனது, திடீரென்று ஏற்பட்ட வலியினால்.

         

        அவளே மறந்திருந்த முதுகிலிருந்த தழும்பு சுருக்கென்று வலிக்க, அதை தாங்க முடியாமல் கத்திவிட்டாள்.

         

        ஆனால், இப்போது வரை அவள் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், சர்வஜனன் அவளை நெருங்கும் சமயம் மட்டும் அந்த வலி எப்படி மாயமாக மறைந்து விடுகிறது என்பது தான்.

         

        இப்படி பல குழப்பங்கள் மனதிற்குள் எழ, முதுகுவலியும் சேர்ந்து கொள்ள, அதற்கு மேல் அங்கு வேலை செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்தவளாக, பிரத்யூஷா வெளியே சென்றிருப்பதால், ஸ்டெஃபியிடம் கூறிவிட்டு வீட்டிற்கு செல்ல ஆயத்தமானாள்.

         

        அப்போதும் ஸ்டெஃபி, “சஞ்சுக்கா, பிரத்யூக்கா வர வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன். அவங்களே உங்களை வண்டியில டிராப் பண்ணிடுவாங்கல. இப்போ நீங்களா எப்படி போவீங்க? அதுவும் பார்க்கவே ரொம்ப டையர்ட்டா இருக்கீங்க.” என்று கூற, “இல்ல ஸ்டெஃபி, ஐ கேன் மேனேஜ். பிரத்யூ எப்போ வருவான்னு வேற தெரியல. இப்போ கால் பண்ணா, அவளையும் டிஸ்டர்ப் பண்ற மாதிரி இருக்கும். வெளிய ஆட்டோ பிடிச்சு நான் போயிக்குறேன். இங்க நீங்க ரெண்டு பேரு மட்டும் தான் இருக்கீங்க. சோ, கேர்ஃபுல்லா இருங்க.” என்று அறிவுரை வழங்கிவிட்டே சென்றாள்.

         

        தான் சொன்னபடியே ஆட்டோவிற்காக காத்திருந்தபோது தான் மீண்டும் சர்வஜனனை சந்திக்க நேர்ந்தது. கூடவே, அவன் பெயர் தனக்கு எப்படி தெரியும் என்ற கேள்வியும் எழுந்தது.

         

        சரியாக அதே சமயம் ஆட்டோவும் வந்ததால், அந்த கேள்வியை ஒதுக்கிவிட்டு பயணத்தை துவங்கினாள்.

         

        முதலில் வீட்டிற்கே சென்று விடலாம் என்று எண்ணியவள், முதுகில் வலி சற்று அதிகரிக்க, செல்லும் வழியில் இருக்கும் சிறிய மருத்துவமனையிலேயே இறங்கி விட்டாள்.

         

        அங்கு மருத்துவர் கேட்ட, “எப்படி இப்படி அடிப்பட்டுருக்கு?” என்ற கேள்விக்கு, “தெரியல!” என்ற அரிய பதிலைக் கூறி, அவரின் ஒரு மாதிரியான பார்வையை வாங்கிக் கொண்டதெல்லாம் தனி கதை!

         

        அங்கிருந்து வெளிவந்தவள், திரும்பவும் ஆட்டோவிற்காக காத்திருக்க வேண்டுமா என்று மலைத்து, பின்னர் சிறிது தூரம் தானே, நடந்தே சென்று விடலாம் என்று நடக்க ஆரம்பித்தாள்.

         

        அது மதிய நேரம் என்பதால் ஆளரவமின்றி வெறிச்சோடி இருந்தது அவள் செல்லும் பாதை. சில நிமிடங்கள் தான் நடந்திருப்பாள், அதற்குள் கண்கள் இருட்டிக் கொண்டு வர, பொத்தென்று அதே இடத்தில் மயங்கி விழுந்தாள்.

         

        *****

         

        ரோஹித்தை சஷாவிலிருந்து நேரே தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான் சர்வஜனன். ஒரு அறையை ரோஹித்திற்கு தந்துவிட்டு, தானும் தன் அறைக்கு குளிக்கச் சென்றான்.

         

        குளியலறை கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்துக்கொண்டே தன் தாடியை ட்ரிம் செய்து கொண்டிருக்க, சட்டென்று அவன் முகம் மறைந்து அவள் முகம் கண்ணாடியில் தெரிய, அவன் கைகளோ அந்தரத்தில் மிதந்தன.

         

        ஒரேயொரு நொடி அந்த காட்சிப்பிழையில் மயங்கியவன், அடுத்த நொடியே சுதாரித்துக் கொண்டான்.

         

        ‘இவ்ளோ நாள் ஸ்டெடியா இருந்துட்டு இப்போ மட்டும் ஏன் தடுமாறுற?’ என்று தன்னையே திட்டிக்கொண்டு, அவள் நினைவை முயன்று ஒதுக்கினான் சர்வஜனன்.

         

        அதன்பிறகு எல்லாமே வேகம் தான். எப்போதும் இல்லாத வகையில் சோம்பிய உடலை விரட்டி, தன் பணியை முடித்துக் கொண்டு அறையிலிருந்து வெளிவந்தான் அவன்.

         

        அங்கு ரோஹித் அலைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதை பார்த்தவன், சமையலறைக்கு சென்று இருவருக்குமான உணவை தயாரிக்க ஆரம்பித்தான்.

         

        சிறிது நேரத்தில் அவனுடன் இணைந்து கொண்ட ரோஹித், “உஃப் ஒருநாள் ஊர்ல இல்லைன்னா கூட, எல்லாருக்கும் போன்ல அட்டெண்டன்ஸ் போட வேண்டியதா இருக்கு!” என்று அலுத்துக் கொள்ள, “ரோஷினி கிட்ட பேசுனியா?” என்றான் சர்வஜனன்.

         

        “உன் தங்கச்சி கிட்ட பேசாமையா? அவளுக்கு தான் ஃபர்ஸ்ட் காலே! இதுல மேடமுக்கு நான் ரீச்சானவுடனே கால் பண்ணலன்னு கோபம் வேற! அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் எது ஒத்துப்போகுதோ இல்லையோ, இந்த கோபம் மட்டும் நல்லா ஒத்துப்போகுது!” என்றான் ரோஹித்.

         

         

        அதன்பின்னர், சாதாரணமாக அவர்களின் உரையாடலும் தொடர்ந்தது. இருவரும் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில், “சர்வா, இனி என்ன ஸ்டெப் எடுக்கப்போற?” என்று வினவினான் ரோஹித்.

         

        “அந்த பொண்ணோட ஹஸ்பண்டை தேடுறதை தீவிரப்படுத்தணும். அவரு கிடைச்சுட்டா, மேபி இந்த கேஸ்லயும் பிரேக்த்ரூ கிடைக்கும். மீன்வைல், அந்த பாடியையும் கண்டுபிடிக்க முயற்சி பண்ணனும். பட் என்னோட இன்டியூஷன் படி, அந்த பாடி இனிமே கிடைக்குறது கஷ்டம் தான். ஹ்ம்ம், லெட்ஸ் ஸீ…” என்றான் சர்வஜனன்.

         

        “இது லாங் பிராசஸா இருக்கும் போலயே சர்வா. அதுவரை உன்னோட ஹையர் அஃபிஸியல்ஸ் சும்மா இருப்பாங்களா என்ன? அவங்க சும்மா இருந்தாலும், மீடியா, புதுசா முளைச்ச யூட்யூப் சேனல்ஸ் – இவங்க சும்மா இருப்பாங்களா என்ன? ஏற்கனவே, ‘பாடியை காணோம்’னு அவங்க இஷ்டத்துக்கு கதையளந்துட்டு இருக்காங்க.” என்றான் ரோஹித்.

         

        “ம்ம்ம், இதைப் பத்தி ஹையர் அஃபிஸியல்ஸுக்கு முதல்ல ரிப்போர்ட் பண்ணனும். அவங்க புரிஞ்சுகிட்டா சரி. இல்லன்னா, ஸ்பீட்டா கேஸை சால்வ் பண்ற யாரையாவது கொண்டு வந்து முடிச்சுக்கட்டும். அது அவங்க இஷ்டம். அப்பறம் அந்த மீடியா, யூட்யூப் சேனல்ஸ் எல்லாம்… ஐ டோன்ட் கேர் அபவுட் தி **** தே ஸ்ப்ரெட்.” என்று அழுத்தமாக கூறியவன் அடுத்த வேலைகளை பார்க்க சென்றுவிட, ‘இவன் என்ன டிசைன்’ என்று நினைத்துக் கொண்டிருந்தான் ரோஹித்.

         

        *****

         

        சஞ்சீவனிக்கு லேசாக விழிப்பு தட்ட, மெதுவாக விழிகளை திறந்தவளுக்கு தான் எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை. தெரியாத இடம், குழப்பமான மனநிலை என்று விழி பிதுங்கியவளுக்கு மேலும் பதட்டத்தை உண்டு செய்தது அவள் இருந்த நிலை.

         

        மேலாடை கழட்டப்பட்டு போர்வையால் சுற்றப்பட்டிருப்பதை கண்டவளுக்கு உலகமே தட்டாமாலை சுற்றுவது போலிருக்க, இது மீண்டும் ஒரு கனவோ என்று எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டாள் சஞ்சீவனி.

         

        தலையை கையால் தாங்கியபடி பரிதாபமாக இருந்தவளின் தோற்றமே அங்கிருந்த பெண்மணிக்கு அவளின் சிந்தனையை தெளிவாக கூற, “பயப்படாத மா. உன் முதுகுல இருக்க காயத்துக்கு மருந்து போட்டு, அது ஒட்டாம இருக்க உன் துணியை நான் தான் கழட்டுனேன்.” என்றார் அவர்.

         

        திடீரென்று கேட்ட சத்தம் கூட அந்நிலையில் அவளுக்கு பயத்தை விளைவிக்க, அவளருகே வந்து மெதுவாக அவளின் தலையை தடவினார் அந்த வயதான பெண்.

         

        சற்று நேர ஆசுவாசத்திற்கு பிறகு சுயத்தை அடைந்த சஞ்சீவனி, அந்த பெண்ணை நோக்கி, “நீங்க… இல்ல நான்… எப்படி இங்க வந்தேன்?” என்று தெளிவற்ற குரலில் வினவினாள்.

         

        “மெயின் ரோட்டுல நடந்து வரப்போ நீ மயக்கம் போட்டு விழுறதை பார்த்தேன். அதான் எனக்கு தெரிஞ்ச ஆட்டோக்காரனை கூப்பிட்டு உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்.” என்றார் அவர்.

         

        தனக்கு உதவி செய்தவரிடம் நன்றியை கூறியவள், அங்கிருந்து செல்ல எத்தனிக்க, அவளை தடுத்த அந்த பெரியவர், “எழுந்ததும் உடனே கிளம்புனா, திரும்ப தலை சுத்தும். தொண்டைக்கு இதமா கொஞ்சம் காப்பியை குடிச்சுட்டு போ மா.” என்று கூற, அதை மறுக்க முடியாமல் அந்த பெரியவரின் பின்னே சமையலறைக்கு சென்றாள் சஞ்சீவனி.

         

        குளம்பி தயாரிக்கும் அந்த சில மணித்துளிகளிலேயே, அந்த பெரியவரைப் பற்றிய விபரங்களை அறிந்து கொண்டாள் சஞ்சீவனி.

         

        அவரின் பெயர் பொன்னம்மா. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவரை இழந்தவர். பெற்ற பிள்ளைகளும் வெளிநாட்டில் வசிக்க, இவரோ தாய்நாட்டை விட்டு செல்ல விரும்பாதவராக, இதே ஊரிலேயே அருகிலிருக்கும் எஸ்டேட் ஒன்றில் வேலை செய்து தன் வாழ்நாளை கழிக்கிறார்.

         

        “ஏன் பாட்டி, நீங்க உங்க பசங்க கூட ஃபாரினுக்கு போய் ஜம்முன்னு இருக்குறதை விட்டுட்டு இங்க கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்க?” என்று அவர் தந்த குளம்பியை வாங்கிக்கொண்டு அவள் வினவ, அவரோ சிரித்தவாறு, “பிறந்த மண்ணை விட்டு போக மனசு இடம் கொடுக்க மாட்டிங்குதே! அதுவுமில்லாம, இங்க எனக்கு இன்னும் சில வேலைகள் இருக்கு.” என்றார்.

         

        அவர் கூறியதில் கவனமில்லாமல் அவர் கொடுத்த குளம்பியை ருசி பார்த்தவள், “சூப்பர் டேஸ்ட் பாட்டி. நாங்க கூட டவுன்ல ஒரு காஃபி ஷாப் வச்சுருக்கோம். அடுத்த முறை டவுனுக்கு வரப்போ நீங்க கண்டிப்பா வரணும்.” என்று அழைப்பும் விடுத்தாள்.

         

        அதற்கு மையமாக தலையசைத்த பாட்டியோ, “உன் வீடு எங்க இருக்கு? இந்நேரம் போனா, உன் வீட்டுல ஆளுங்க இருப்பாங்களா?” என்று வினவ, அவளும் அக்கேள்வியை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, “அச்சோ, என்னைப் பத்தி சொல்லவே இல்ல பாருங்க. என் பேரு சஞ்சீவனி. இங்கயிருந்து ஒரு பத்து நிமிஷ நடையில தான் என் வீடு இருக்கு. எனக்கு அப்பா அம்மா இல்ல. நானும் என் ஃபிரெண்டும் தான் அந்த வீட்டுல இருக்கோம். நான் சொன்னேன்ல, அந்த கஃபே கூட நானும் அவளும் சேர்ந்து பார்த்துக்குறோம்.” என்று தன்னைப் பற்றி அனைத்தையும் அந்த பாட்டியிடம் ஒப்பித்தாள்.

         

        “ஓஹோ, ஆமா உன் பிறந்தநாள் என்னைக்கு?” என்று பொன்னம்மா வினவ, அப்போது தான் சற்று சுதாரித்த சஞ்சீவனி, “அது… அது எனக்கு தெரியல பாட்டி. அனாதை ஆசிரமத்துல தான வளர்ந்தேன். அவங்களுக்கே நான் பிறந்த தேதி எதுவும் தெரியாதப்போ, எனக்கு எப்படி தெரியும்?” என்றாள்.

         

        ஆனால், சஞ்சீவனிக்கு தேதி தெரிந்தே இருந்தது. அவளை கண்டெடுக்கும்போதே அவளுடன் இருந்த சிறு குறிப்பையும் சேர்த்தே எடுத்திருந்தனர். அதில் அவளின் பெயர், பிறந்த தேதி, ராசி, நட்சத்திரம் என அனைத்தும் இருக்க, அதை அவள் புரிந்து கொள்ளும் வயது வந்தவுடன் அந்த ஆசிரமத்தின் நிர்வாகி அவளிடம் பகிர்ந்திருந்தார்.

         

        அதைக் கேள்விப்பட்டதும் ஏகப்பட்ட கேள்விகள் மனதில் எழுந்தாலும், அவற்றை எல்லாம் தேவையற்றவை என்று மனதின் அடியாழத்தில் புதைத்திருந்தாள்.

         

        அதே யோசனையில் இருந்தவளை கலைத்த பொன்னம்மா, ஏதோ வினவ, இனிமேல் அங்கிருக்க வேண்டாம் என்று எண்ணியவளாக, “பாட்டி, என் ஃபிரெண்டு வர நேரமாச்சு. சாவியும் என்கிட்ட இருக்கு. சோ, நான் கிளம்புறேன்.” என்று வேகவேகமாக கிளம்ப எத்தனித்தாள்.

         

        அவள் எதிர்பார்க்காத சமயம், அவளின் கையை இறுக்க பற்றிய பொன்னம்மா, “உன் பிறந்தநாள் ஃபிப்ரவரி பத்தொன்பதாம் தேதி. உன் ராசி கும்பம், உன் நட்சத்திரம் சதயம். நீ எப்படி பிறந்த தெரியுமா? இறந்துபோன உன் அம்மா வயித்தை வெட்டி உன்னை வெளிய எடுத்தாங்க.” என்று கூற, சஞ்சீவனியோ அதிர்ச்சியில் சிலையாகவே மாறிவிட்டாளோ என்று எண்ணும் அளவிற்கு ஒரு அசைவும் இல்லாமல் நின்றிருந்தாள்.

         

        அவள் உடல் அசையவில்லை என்றாலும் மனமோ பல மண்டலங்களை நொடியினில் கடந்து விடும் வேகத்தில், பல நினைவுக் குவியல்களால் ஆட்கொள்ளப்பட்டாள்.

         

        அந்த சமயம், அவளின் முதுகில் உள்ள தழும்பு பொன்னிற வெளிச்சத்தை கக்க, லேசான வலியும் உண்டானது.

         

        மூளை, மனம், உடல் என அனைத்தும் வெவ்வேறு திசைகளில் இழுபடுவது போலிருக்க, அதன் காரணமாக தலை சுற்றி, கால்கள் தள்ளாடி, அங்கிருந்த நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தாள்.

         

        அவள் சமன்பட சிறிது அவகாசத்தை கொடுத்தவராக தள்ளி நின்ற பொன்னம்மா, சில நிமிடங்கள் கழித்து அவளிடம் தண்ணீர் குவளையை நீட்டினார்.

         

        அதை வாங்க தயங்கிய சஞ்சீவனியை நோக்கி லேசான புன்னகையை சிந்திய பொன்னம்மா, “பயப்படாத சஞ்சீவனி. அம்மா வயித்துலயிருந்து என் கையால முதன்முதலா தூக்குன பிள்ளையை நான் எதுவும் செஞ்சுட மாட்டேன்.” என்று கூற, அடுத்த அதிர்ச்சி அவளுக்கு.

         

        அப்போதும் தண்ணீரை வாங்காமல், “நீங்க… நீங்க..?” என்று அவள் வார்த்தைகள் வராமல் திணற, “முதல்ல தண்ணீரை குடி. நீ யாரு, உன் பிறப்புக்கான நோக்கம் என்னன்னு எல்லாத்தையும் சொல்லத்தான் நான் இருக்கேன், இந்த உசுரை கையில பிடிச்சுக்கிட்டு.” என்றார்.

         

        இத்தனை வருடங்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்த தன்னைச் சுற்றி இப்போது ஏதோ மாயவலை பின்னப்படுவது போலிருந்தது சஞ்சீவனிக்கு. பொன்னம்மா பாட்டி அவளிடம் எதையோ பெரிதாக சொல்லப் போகிறார் என்பது நிச்சயமாக தெரிந்து போனது அவளுக்கு. மெல்ல மனதை அதற்கு தயார்படுத்தியவள், இம்முறை அவர் நீட்டிய குவளையையும் வாங்கிக் கொண்டாள்.

         

        பொன்னம்மா ஒரு பெருமூச்சு விட்டவராக, “நீ ஒரு வேடகுலத்தை சேர்ந்தவ.” என்று கூற, “ஹண்டரா?” என்று புருவம் சுருக்கினாள் சஞ்சீவனி.

         

        “ஹ்ம்ம், சாதாரண ஹண்டர் இல்ல, ஓநாய் மனிதர்களை வேட்டையாடும் வேர்உல்ஃப் ஹண்டர்!” என்று அவர் கூற, இம்முறை தலையோடு உடலும் சுற்ற கீழே விழுந்தாள் சஞ்சீவனி.

         

        *****

         

        “பாஸ், போலீஸோட விசாரணை எந்தளவு இருக்குன்னு ஊருக்குள்ள விசாரிக்கிறப்போ, நாங்க வேறொன்னை கவனிச்சோம்.” என்று அலைபேசியில் மறுமுனையிலிருந்து பேசியவன் விஷயத்தை சொல்ல தயங்க, “லுக், எனக்கு இப்படி பார்ட் பார்ட்டா கதை மாதிரி கேட்குற அளவுக்கு பொறுமையும் இல்ல, டைமும் இல்ல. சோ, சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லி முடி!” என்று கர்ஜித்தான் அந்த பாஸ்.

         

        “அது வந்து பாஸ்… நாங்க வழியில… ஹண்ட்ரை பார்த்தோம்…” என்று அவன் கூற, “வாட் ஹண்டரா?” என்று வினவினான் பாஸ்.

         

        பாஸின் குரல் தன்னை நம்பாததை போலிருக்க, தன்னை நிரூபிக்க வேண்டி, “ஆமா பாஸ், அவங்க முதுகுல ஹண்டருக்கான டேட்டூ கோல்டன் கலர்ல ஒளிர்ந்ததை பார்த்தோம்.” என்றான்.

         

        சில மணித்துளிகள் மறுபுறம் அமைதியாக இருக்க, அந்த அமைதியே அவனுக்கு பீதியை கிளப்பியது.

         

        “பாஸ்…” என்று பயத்திலேயே அவன் விளிக்க, “க்கும், இவ்ளோ வருஷமா நமக்கு பயந்து ஒளிஞ்சுட்டு இருந்த இனம் இப்போ வெளிய வருதா. ஹாஹா, வரட்டும் வரட்டும், முன்ன எப்படி அவங்களை பயமுறுத்தி ஓடி ஒளிய வச்சோமோ, அதையே திரும்ப செய்ய வேண்டியது தான். இவங்களை அப்பறமா கவனிச்சுக்கலாம். நீங்க நான் சொன்ன வேலையை மட்டும் பாருங்க போதும்!” என்று கூறிவிட்டு அலைபேசியை துண்டித்தான் அந்த பாஸ்.

         

        என்னதான் அடியாளிடம் அப்படி கூறிவிட்டாலும், உள்ளுக்குள், ‘இவ்ளோ வருஷம் இல்லாம, இப்போ ஏன்?’ என்ற கேள்வி எழாமல் இல்லை.

         

        “ஹ்ம்ம், இவங்களுக்கும் சேர்த்து ஸ்கெட்ச் போட்டுட வேண்டியது தான்!” என்று முணுமுணுத்தவனை அடுத்த வேலை அழைக்க, அதை பார்க்கச் சென்றான்.

         

        மாயம் தொடரும்…

          The post பிறை சூழ் மாயம் – 5 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

          ]]>
          https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/feed/ 0 17845
          பிறை சூழ் மாயம் – 3 https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-2/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-2/#respond Mon, 06 May 2024 13:00:57 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-2/ பிறை 4   இரவிலும் கூட அந்த காவல்நிலையம் பரபரப்பாக இருந்தது. பிணவறையிலிருந்து இறந்தவரின் உடல் காணாமல் போனதிலிருந்து மேலிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கொண்டிருக்க, அதன் வெளிப்பாடாக அனைவரும் முடுக்கி விட்டது போல வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.   ஒருவழியாக, அந்த மருத்துவமனை வெளியே இருந்த சிசிடிவி காட்சிகளை ஓடவிட்டு, பல மணி நேரங்களுக்கு பின்னர், உடலை கடத்திச் சென்ற வாகனத்தை கண்டுபிடித்திருந்தனர் காவலர்கள்.   அதனுடன், அந்த

          The post பிறை சூழ் மாயம் – 3 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

          ]]>

          Loading

          பிறை 4

           

          இரவிலும் கூட அந்த காவல்நிலையம் பரபரப்பாக இருந்தது. பிணவறையிலிருந்து இறந்தவரின் உடல் காணாமல் போனதிலிருந்து மேலிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கொண்டிருக்க, அதன் வெளிப்பாடாக அனைவரும் முடுக்கி விட்டது போல வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

           

          ஒருவழியாக, அந்த மருத்துவமனை வெளியே இருந்த சிசிடிவி காட்சிகளை ஓடவிட்டு, பல மணி நேரங்களுக்கு பின்னர், உடலை கடத்திச் சென்ற வாகனத்தை கண்டுபிடித்திருந்தனர் காவலர்கள்.

           

          அதனுடன், அந்த வாகனம் சென்ற வழித்தடத்தையும் ஓரளவு கண்டுபிடித்துவிட்டனர். ஆனால், இப்போதைய பிரச்சனை என்னவென்றால், அங்கு கடும்மழை பெய்து கொண்டிருந்தது.

           

          மேலும், அந்த வாகனம் சென்ற பாதையில் வெள்ள எச்சரிக்கை வேறு விடப்பட்டிருந்ததால், இந்த இரவு நேரத்தில் அங்கு செல்வது ஆபத்து என்று தோன்றியது சர்வஜனனுக்கு.

           

          வேறு வழியில்லாததால், அடுத்த நாள் காலை அங்கு செல்வது என்று முடிவு செய்துவிட்டு வீட்டிற்கு கிளம்பும் வேளையில், அந்த காவல்நிலையத்திற்கு மழையில் முழுவதுமாக நனைந்தபடி ஒரு பெண் ஓடி வந்தாள்.

           

          அவளின் தோற்றமே அவள் பெரும் பதட்டத்தில் இருப்பதாக கூற, சர்வஜனன் அங்கிருந்த பெண் காவலரை அனுப்பி அப்பெண்ணை சமன்படுத்தக் கூறினான்.

           

          அந்த பெண் காவலர் கொடுத்த தண்ணீரைக் கூட வாங்காமல், அங்கிருந்த காவலரிடம், “சார் சார், என் புருஷன் என்னை அடிச்சு போட்டுட்டு ஓடிப்போயிட்டாரு. அவரை எப்படியாவது கண்டுபிடிச்சு கொடுங்க.” என்று கண்ணீர் வடிக்க, அங்கிருந்தவர்களோ அவளை வேற்றுக்கிரகவாசி போல பார்த்தனர்.

           

          அப்போது அங்கு வந்த பழனியப்பன், “அட நீதானம்மா போன மாசம் வந்து உன் புருஷனை காணோம்னு கம்பலைன்ட் பண்ண. அப்பறம் கொஞ்ச நாள்ல உன் புருஷன் கிடைச்சுட்டான்னு வேற சொன்னியே.” என்றார்.

           

          “சார், ஆமா சார். காணாம போன கொஞ்ச நாள்லயே கிடைச்சுட்டார் தான். ஆனா, அதுக்கப்பறம் அவரோட பிஹேவியர்ல ரொம்ப மாற்றம் தெரிஞ்சுது. எதுக்கெடுத்தாலும் கோபப்படுறது, எப்போவும் சிடுசிடுன்னு இருக்குறதுன்னு ரொம்ப மாறிட்டாரு. இவ்ளோ ஏன், அடிக்கடி உறுமிட்டு மிருகம் மாதிரி தான் இருந்தாரு. நாங்களும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனோம். அப்படியும் ஒன்னும் சரியாகல. அக்கம்பக்கத்துல இருக்கவங்க தர்காக்கு போய் மந்திரிக்க சொல்ல, இன்னைக்கு அங்க போற வழில, என்னை அடிச்சுப் போட்டுட்டு ஓடிட்டாரு.” என்று கூறி முடித்தாள்.

           

          அவள் கூறியதற்கேற்ப, அவளின் நெற்றியில் லேசாக இரத்தம் எட்டிப்பார்த்தது.

           

          “சார் பிளீஸ் சார், அவரை எப்படியாவது கண்டுபிடிச்சு கொடுங்க. அவரு அவராவே இல்ல. எங்க போனாருன்னும் தெரியல.” என்று அந்த பெண் கதற, சர்வஜனனோ அவள் கூறிய ‘மிருகம் மாதிரி தான் இருந்தாரு’ என்ற வாக்கியத்திலேயே தேங்கி நின்றான்.

           

          பழனியப்பனோ, “இங்க பாரும்மா, மழை அடிச்சு ஊத்திட்டு இருக்கு. இந்த நேரத்துல வெளிய போய் தேடவெல்லாம் முடியாது மா.” என்று கூற, அதற்கு அந்த பெண் அழுதே கரைந்தாள்.

           

          அதில் சுயத்திற்கு வந்த சர்வஜனன், “பழனி சார், அவங்ககிட்ட கம்ப்லைன்ட் எழுதி வாங்கிக்கோங்க. அண்ட் அவங்க காயத்துக்கு ஃபர்ஸ்ட் எய்ட் கொடுங்க.” என்றவன், அப்பெண்ணை நோக்கி திரும்பி, “நாளைக்கு காலைல உங்க ஹஸ்பண்ட்டை தேடச் சொல்றேன். இப்போ நீங்க ரெஸ்ட் எடுங்க.” என்று எதிரிலிருப்பவர் மறுக்க முடியாத குரலில் கூறிவிட்டு தன் வீட்டிற்கு கிளம்பினான்.

           

          அந்த இரவு முழுவதும், காலையில் பார்த்த காலடித்தடங்களும், சற்று முன்னர் அப்பெண் கூறிய ‘மிருகம் மாதிரி இருந்தாரு’ என்பதுமே அவன் மனதை அலைகளித்துக் கொண்டிருந்தன.

           

          தான் ஒருத்தியின் கனவில் வந்து அவளை தொல்லை செய்வதை அறியாமல், இதிலேயே உழல, அவன் உறக்கமும் தொலைந்து போனது.

           

          ******

           

          அடுத்த நாள் காலை, ஒரு குழுவினரை அந்த பெண்ணின் கணவனைத் தேட அனுப்பியவன், தானும் இன்னும் சில காவலர்களுடன், இறந்தவரின் உடலை கடத்திச்சென்ற வாகனத்தின் தடத்தை தொடர்ந்து சென்றான்.

           

          முதல் நாள் பெய்த மழையில், அந்த வாகனம் இறுதியாக இருந்ததாக சொல்லப்பட்ட இடம் முற்றிலும் மாறிப்போயிருந்தது.

           

          ஆங்காங்கு மரங்கள் கீழே சாய்ந்திருக்க, சில இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டிருந்தது. சேறும் சகதியுமாக இருந்த இடத்தில் கண்களுக்கு நேரே இருப்பதை தேடவே சிரமமாக இருக்கும்போது, அந்த வாகனம் எங்கு சென்றது என்று தெரியாமல் தேடுவது அத்தனை எளிதான காரியம் அல்லவே.

           

          ஆயினும் அந்த காவலர்களை ஒவ்வொரு திசையில் தேட அனுப்பியவன் தானும் ஒரு பக்கம் தேடினான். ஒரு மணி நேர தேடுத்தலுக்கு பலன் என்னவோ பூஜ்யம் தான்.

           

          இன்னும் ஒரு இடம் மட்டுமே பாக்கியிருக்க, அந்த இடமோ சிறு செடிகளாலும் புதர்களாலும் மண்டிக்கிடந்தது. எதன் வேர் எதில் சிக்கியிருக்கிறது என்று அறிய முடியாத வண்ணம் மொத்தமாக கலைந்திருந்தது.

           

          “சார், இதை கிளியர் பண்ணிட்டு தான் ப்ரோஸீட் பண்ண முடியும்.” என்று சரவணன் கூற, “சீக்கிரம் கிளியர் பண்ண சொல்லுங்க.” என்றான் சர்வஜனன்.

           

          அந்த நேரத்தில் மற்றொரு குழுவினருக்கு அழைத்தவன், அவர்களின் தேடுதல் வேட்டை எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கேட்டான்.

           

          “சார், நாங்க தேடிட்டு தான் இருக்கோம். நேத்து பெஞ்ச பேய் மழைல வழியெல்லாம் சகதியாக இருக்கு சார். சோ, தேடுறது கொஞ்சம் டிலே ஆகுது சார்.” என்ற பதிலே கிடைத்தது.

           

          “ப்ச், இந்த மழையினால ஒரு காரியமும் நடக்க மாட்டிங்குது.” என்று முணுமுணுத்தவனுக்கு அடுத்த அழைப்பு மேலிடத்திலிருந்து வந்தது.

           

          அவர்களுக்கும் தகுந்த காரணத்தை சொல்லி சமாளித்தவன், ஒரு பெருமூச்சுடன் அழைப்பை துண்டிக்க, அதற்கென காத்திருந்ததை போல அடுத்த அழைப்பு வந்தது.

           

          சிறு எரிச்சலில் யார் அழைப்பது என்று பார்க்க, அதில் ரோஹித்தின் பெயரைப் பார்த்ததும் தான், அவனை வரச்சொல்லியது நினைவிற்கு வந்தது.

           

          அதில் தன்னையே நொந்து கொண்டு அழைப்பை ஏற்க, மறுபுறத்திலோ, “சர்வா, எங்க இருக்க? நான் இங்க உன் ஸ்டேஷனுக்கு வந்துட்டேன். உன்னைக் கேட்டப்போ நீ இங்க இல்லன்னு சொன்னாங்க.” என்றான் ரோஹித்.

           

          “நான் இங்க ஸ்பாட்டுக்கு வந்துருக்கேன் ரோஹித்.” என்று சர்வஜனன் கூற, “நான் வேணும்னா அங்க வரவா?” என்றான் ரோஹித்.

           

          “இல்லல்ல, இப்போ நான் ஸ்டேஷனுக்கு கிளம்பிட்டேன். நீ அங்கயே இரு.” என்ற சர்வஜனன் காவல்நிலையம் நோக்கி விரைந்தான்.

           

          *****

           

          ஓவியம் வரைந்தபடி அப்படியே உறங்கியிருந்த சஞ்சீவனியை உலுக்கி எழுப்பினாள் பிரத்யூஷா.

           

          “இங்க எப்போ வந்து தூங்குன சஞ்சு? ஆமா, நேத்து நீ கத்தவே இல்லயா என்ன? நான் இடையில முழிச்ச மாதிரி இல்லையே!” என்றாள் பிரத்யூஷா.

           

          அவள் அப்படி கேட்டதும், அந்த கனவு நினைவுக்கு வர, மானசீகமாக தலையிலடித்துக் கொண்டாள் சஞ்சீவனி.

           

          தான் கேட்டதற்கு எதுவும் சொல்லாமல் ஏதோ மந்திரித்து விட்டதை போல அமர்ந்திருந்தவளைக் கண்ட பிரத்யூஷாவோ, ‘கண்டிப்பா இவளை இந்த வீகெண்ட் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயே ஆகணும்.’ என்று நினைத்துக் கொண்டாள்.

           

          “ஹே சஞ்சு, என்ன இப்படியே உட்கார்ந்து இன்னைக்கு வேலைக்கு மட்டம் போட்டுடலாம்னு நினைப்போ? ஒழுங்கா போய் குளிச்சுட்டு வா.” என்று சமையலறை நோக்கி சென்று விட்டாள் பிரத்யூஷா.

           

          சஞ்சீவனியும் தன்மீது கிடக்கும் ஓவியத்தாள்களை எடுத்து வைக்கும்போது தான் அதை கவனித்தாள். அவளின் கைவண்ணத்தில், அவனின் படம்! அச்சில் வார்த்ததை போல அத்தனை அழகாக இருந்தது.

           

          அவனின் காந்தக்கண்களிலிருந்து, கழுத்திலிருக்கும் சிறு மச்சம் வரை அத்தனையும் தெளிவாக இருக்க, சஞ்சீவனிக்கே அதைக் கண்டு ஆச்சரியம் தான்.

           

          ‘அவனை இவ்ளோ கவனிச்சுருக்கேனா?’ என்று அவள் நினைக்கும்போதே சமையலறையிலிருந்து பிரத்யூஷாவின் குரல் கேட்க, வேகவேகமாக அந்த தாள்களை தன் அலமாரியில் ஒளித்து வைத்தாள்.

           

          மனதிற்குள், ‘நல்லவேளை, கனவுல வந்த எல்லாத்தையும் வரைஞ்சு வைக்கல!’ என்று நினைத்துக் கொண்டாள்.

           

          *****

           

          காவல்நிலையத்திற்கு வந்த சர்வஜனனை ஆரத்தழுவி வரவேற்றான் ரோஹித்.

           

          சர்வஜனனுக்கும் நண்பனைக் கண்டதும் அத்தனை நேரமிருந்த எரிச்சல் மனநிலை மாறியிருந்தது.

           

          “எப்படி இருக்க ரோஹித்? ரோஷினி எப்படி இருக்கா? என்ன இவ்ளோ சீக்கிரமா வந்துருக்க?” என்று கேள்விகளை அடுக்க, “அட மெதுவா கேளு  சர்வா. நான், உன் தங்கச்சி, அவ வயித்துல இருக்க உன் மருமகன் ஆர் மருமகள் எல்லாரும் நலம். இவ்ளோ சீக்கிரம் கிளம்புனதால தான் வர முடிஞ்சுது. இல்லன்னா உன் தங்கச்சி கிளம்ப விடுவாளா?” என்று சிரித்தபடி கூறினான் ரோஹித்.

           

          “ஹ்ம்ம், அவகிட்ட இங்க இப்போ வரவேண்டாம்னு சொல்லிட்டியா? என்ன சொன்னா?” என்று சர்வஜனன் விசாரிக்க, “நீ கொஞ்ச நாள் டெல்லிக்கு போறன்னு சொல்லி சமாளிச்சுருக்கேன் சர்வா. யப்பா, எவ்ளோ கேள்வி கேட்குறா? போலீஸ்காரனோட தங்கச்சின்னா இப்படியா? அவகிட்ட அப்பாவியா சிக்கிக்கிட்ட என் நிலைமை தான் மோசம் போ.” என்று விளையாட்டாக பேசினான் ரோஹித்.

           

          அதைக்கேட்டு சர்வஜனன் சிரிக்க, இருவரையும் காணாததை கண்டது போல அந்த காவல்நிலையத்தில் இருந்த அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களை சொல்லி குற்றமில்லை, மருந்துக்கு கூட சிரிக்கவே செய்யாத சர்வஜனன் வாய்விட்டு சிரித்தான் என்றால், அதை வியந்து பார்க்கத்தானே செய்வார்கள். அதை சர்வஜனனும் கவனித்திருந்தான்.

           

          “சரி வா நாம பக்கத்துல இருக்க கஃபே போய் பேசலாம்.” என்று சர்வஜனன் கூற, ரோஹித்தும் அவன் பின்னே சென்றான்.

           

          சர்வஜனனின் கால்கள் அனிச்சையாக சஷாவிற்குள் நுழைந்தன. அப்போது கூட அவனுக்கு சஞ்சீவனியைப் பற்றிய நினைவு எழவில்லை.

           

          ஆனால், அவன் உள்ளே நுழைவதைக் கண்டவளுக்கோ தானாகவே முகம் சிவக்க ஆரம்பித்தது.

           

          “இவனுக்கு இங்க வரதுக்கு வேற டைமிங்கே கிடைக்காதோ? இந்நேரம் பார்த்து மத்த மூணு பேரும் மெட்டிரியல்ஸ் வாங்கன்னு வெளிய போயிட்டாங்க.” என்று முணுமுணுத்தவளை சுயத்திற்கு அழைத்து வந்தது, “டூ கஃபே மோச்சா.” என்ற குரல், இம்முறை சர்வஜனனுடன் வந்தவனின் (ரோஹித்) குரல்.

           

          அதற்கு தலையசைத்தவளின் கண்களோ சர்வஜனனை தான் தேடின. அதை ஒரு மாதிரி பார்த்த ரோஹித்தோ எதுவும் கூறாமல், அவர்களுக்கு முதுகுகாட்டி அமர்ந்திருந்த சர்வஜனனுக்கு எதிர்த்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். அப்போது தானே அங்கு நடக்கும் நாடகத்தை பார்க்க இயலும்!

           

          தேடியவனை கண்டுகொண்ட மகிழ்ச்சியோ என்னவோ, அவளின் கரங்கள் பரபரவென்று வேலைகளை பார்க்க ஆரம்பித்தன.

           

          ரோஹித்தின் பார்வையோ சந்தேகமாக சர்வஜனனை நோக்க, அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தான் பார்க்கும் வழக்குகளை பற்றி கூற ஆரம்பித்தான்.

           

          நண்பர்களுக்கு இடையில் இது வழக்கமான ஒன்றென்பதால், ரோஹித்தும் மற்றவை மறந்து நண்பனின் பேச்சை கவனிக்கலானான்.

           

          சர்வஜனன் தனக்கு தோன்றிய அனைத்தையும் கூறி முடித்து ரோஹித்தை பார்க்க, “அப்போ ரெண்டு கேஸுக்கும் சம்பந்தம் இருக்கும்னு. நினைக்குறியா சர்வா?” என்றான் ரோஹித்.

           

          “என் இன்ட்யூஷன் சரின்னா, கண்டிப்பா சம்பந்தம் இருக்கு. அதுவும் அந்த பொண்ணு சொன்ன ‘மிருகம்’ங்கிற வார்த்தையும் அந்த காலடித்தடமும்… ஏதோ கனெக்ஷன் கண்டிப்பா இருக்கு.” என்று கூறிய சர்வஜனன், தன் அலைபேசியிலிருந்த காலடித்தடத்தின் புகைப்படத்தை திறந்து மேஜையின் மீது வைத்தான்.

           

          சில நொடிகள் அதை உற்றுப்பார்த்த ரோஹித்தோ, “இப்போ நீ என்ன சொல்ல வர சர்வா? இது…” என்று இழுக்க, “வேர்உல்ஃபோட காலடித்தடம்!” என்று அவர்களின் அருகிலிருந்து குரல் வந்தது.

           

          அதில் இருவரும் திரும்பிப் பார்க்க, அங்கு இவர்களுக்கான பானத்துடன் நின்றிருந்தாள் சஞ்சீவனி.

           

          அவளைக் கண்டதும் தான் அவளின் நினைவே எழுந்தது சர்வஜனனுக்கு. அதில் தன்னை மறந்து அவளை பார்த்துக்கொண்டிருக்க, பதில் பார்வை தர வேண்டியவளோ, பார்வை முழுவதையும் அந்த காலடித்தடத்திலேயே பதித்திருந்தாள்.

           

          அங்கு நடக்கும் நாடகத்தை சில நொடிகள் மௌனமாக பார்த்த ரோஹித் அதற்கு மேல் முடியாதவனாக, “க்கும் க்கும்” என்று செறுமி இருவரையும் சுயத்திற்கு அழைத்து வந்தான்.

           

          அப்போது சஞ்சீவனிக்கு முதுகில் ஏற்பட்டிருந்த தழும்பில் வலியெடுக்க, ஆவென்று கத்தியிருந்தாள்.

           

          திடீரென்று அவள் கத்துவாள் என்று எதிர்பார்க்காத ஆண்கள் இருவரும் முதலில் அதிர, சர்வஜனன் தான் முதலில் அதிர்ச்சியிலிருந்து வெளிவந்து அவளை அங்கிருந்த நாற்காலியில் அமரச் செய்தான்.

           

          அவன் கைப்பட்டதும் என்ன மாயமோ மந்திரமோ, அந்த வலி நின்றிருக்க, வலி இல்லையென்றாலும் நடக்கும் நிகழ்வுகளின் தாக்கத்தால் பெண்ணவளின் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.

           

          “ஈஸி ஈஸி மிஸ். எங்கயும் அடிப்பட்டுருக்கா உங்களுக்கு?” என்று சர்வஜனன் வினவ, அவனிடமிருந்து அப்படி ஒரு தொனியை இதுவரை பார்த்திராத ரோஹித்தே வாயில் கைவைத்து வியப்பை அடக்க வேண்டியிருந்தது.

           

          சஞ்சீவனியோ அதை கருத்தில் கொள்ளும் நிலையிலேயே இல்லையே. சூரியனை மறைக்கும் கருமேங்கள் போல, பெரும் குழப்பங்கள் அவளின் மனதை ஆக்கிரமிக்க, ஒருவித தடுமாற்றத்துடனே இருந்தாள்.

           

          அவளை கைத்தாங்கலாக பற்றியிருந்த சர்வஜனனும் அவளின் நடுக்கத்தை உணர்ந்து தன் பிடியை அழுத்தமாக்க, அப்போது தான் அவன் கைகளுக்குள் தான் இருப்பதை உணர்ந்தாள் சஞ்சீவனி.

           

          சரியாக அதே சமயம், அந்த கனவும் மனக்கண்ணில் வந்து போக, அதற்கு மேல் அவளால் அங்கு இருக்க முடியவில்லை.

           

          “சாரி…” என்று இருவரையும் பார்த்து பொதுவாக கூறியவள், சர்வஜனன் பக்கம் திரும்பி, அவனை நேராக பார்க்காமல், இமையை தாழ்த்தியபடி, “தேங்க்ஸ்…” என்று முணுமுணுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

           

          அவள் சென்றதும் தன்னிலை அடைந்த சர்வஜனன் நண்பனை பார்க்க, அவனோ ‘என்னடா நடக்குது இங்க? நானும் இங்க தானடா இருக்கேன்.’ என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருந்தான்.

           

          சர்வஜனனுக்கு அவனின் பார்வை புரிந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல், “நீயும் அது வேர்உல்ஃபா இருக்கும்னு நினைக்குறியா ரோஹித்?” என்று வினவினான்.

           

          “நான் நினைக்குறது இருக்கட்டும். நீ ஏதாவது யோசிச்சு வச்சுருப்பியே, அதை சொல்லு!” என்றான் ரோஹித்.

           

          “வேர்உல்ஃப் ஒரு அர்பன் லெஜன்ட் மாதிரி தான். அது உண்மையா இருக்கும்னு எனக்கு தோணல. ஆனா, அதையே ஏன் ஆர்ட்டிஃபிஸியலா ட்ரை பண்ணக் கூடாது?” என்றான் சர்வஜனன்.

           

          “ம்ம்ம் பாசிபில் தான். இப்போ தான் கண்டதையும் ஆராய்ச்சிங்கிற பேர்ல பண்ணி மனுஷனை கொஞ்சம் கொஞ்சமா மிருகமாக்க ட்ரை பண்றாங்களே!” என்றான் ரோஹித்.

           

          “ஹ்ம்ம், இது ரொம்ப டேஞ்சரஸ் கேஸ். சீக்கிரம் அக்யூஸ்ட்டை கண்டுபிடிக்கணும்.” என்றான் சர்வஜனன்.

           

          “அக்யூஸ்ட்டை கண்டுபிடிக்குறது இருக்கட்டும், இங்க என்ன நடக்குது இன்ஸ்பெக்டர் சார்? அந்த பொண்ணு நம்ம வந்ததுலயிருந்து உன்னை தேடுது, நீயென்னனா, அந்த பொண்ணு கத்துனதும் உருகுற!” என்றான்.

           

          ஒருமுறை அவள் எப்போதும் நின்றிருக்கும் இடத்தை பார்த்தவன், அது வெறுமையாக இருக்க, ஒரு பெருமூச்சுடன் திரும்பி, “நீ நினைக்குற மாதிரி எதுவும் இல்ல. இப்போ இருக்க சூழ்நிலைல இருக்கவும் கூடாது.” என்றவன் மேஜையிலிருந்து கிளம்பி கவுண்டரை நோக்கி நடந்தான்.

           

          அங்கு ஸ்டெஃபி நின்றிருக்க, அவளிடம் தொகையை செலுத்திவிட்டு, கண்களில் சஞ்சீவனியை தேடியபடி வெளியே வந்தான்.

           

          அங்கு ஓரமாக நின்றிருந்த சஞ்சீவனியை நோக்கி நடந்தவன், “ச…ஞ்…சீ…வ…னி…” என்று பெயருக்கு வலிக்காத வண்ணம் அழைக்க, அத்தனை நேரம் வலியுடன் போராடிக் கொண்டிருந்தவள், பட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.

           

          “ஆர் யூ ஆல்ரைட்?” என்று அவன் வினவ, வலி இல்லாததை வியப்பாக உணர்ந்தவள், அதே நிலையில் தலையை மட்டும் அசைத்தாள்.

           

          “ஓகே டேக் கேர்.” என்றவன் அவளிடம் விடைபெற, அவளோ ஆச்சரியத்தில் அதே இடத்தில் நின்று விட்டாள்.

           

          “அந்த பொண்ணு பேரு சஞ்சீவனியா டா? நல்ல பேர்ல.” என்று ரோஹித் வினவ, அப்போது தான் தனக்கு எப்படி அவளின் பெயர் தெரிந்தது என்ற கேள்வி சர்வஜனனுக்கு எழுந்தது. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அந்த கேள்வியே காதில் விழாததை போல சென்று விட்டான்.

           

          “ஹ்ம்ம், இவன்கிட்ட ஒரு பதிலை வாங்கிட முடியுமா?” என்று பெருமூச்சு விட்டபடி அவனைத் தொடர்ந்தான் ரோஹித்.

           

          இவர்களின் பேச்சு சஞ்சீவனியின் செவியிலும் விழுந்தது.

           

          ‘ஆமா, எப்படி அவங்களுக்கு என் பேரு தெரியும்?’ என்று அவள் யோசிக்க, ‘உனக்கு எப்படி அவரோட பேரு தெரியுமோ அப்படி தான்!’ என்று பதில் கொடுத்தது அவளின் மனசாட்சி!

           

          மாயம் தொடரும்…

            The post பிறை சூழ் மாயம் – 3 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

            ]]>
            https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-2/feed/ 0 17842
            17 – இதயத்தின் நிறம் பார்த்ததால் https://thoorigaitamilnovels.com/17-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ https://thoorigaitamilnovels.com/17-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/#respond Mon, 06 May 2024 12:57:27 +0000 https://thoorigaitamilnovels.com/17-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ நிறம் 17   ஒருவழியாக இரவு நேர சிறுவிருந்து முடிந்து ஷ்யாம் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பும் வேளையில், அவனிடம் வந்த வர்ஷினியோ, “ஆமா, உங்க ஃபிரெண்டு பாட்டுக்கு என்னை கடத்திட்டு வந்துட்டாரே. உங்க போலீஸ் டிப்பார்ட்மெண்ட் இன்னும் எந்த ஆக்ஷனும் எடுக்கல? நீங்களும் ஏதோ வெகேஷனுக்கு வந்த மாதிரி ஜாலியா சுத்துறீங்க?” என்று வினவினாள்.   அதைக் கேட்டுக் கொண்டே அவர்களருகே வந்த ஸ்வரூபனோ, “ஆமா, இவ இந்த

            The post 17 – இதயத்தின் நிறம் பார்த்ததால் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

            ]]>

            Loading

            நிறம் 17

             

            ஒருவழியாக இரவு நேர சிறுவிருந்து முடிந்து ஷ்யாம் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பும் வேளையில், அவனிடம் வந்த வர்ஷினியோ, “ஆமா, உங்க ஃபிரெண்டு பாட்டுக்கு என்னை கடத்திட்டு வந்துட்டாரே. உங்க போலீஸ் டிப்பார்ட்மெண்ட் இன்னும் எந்த ஆக்ஷனும் எடுக்கல? நீங்களும் ஏதோ வெகேஷனுக்கு வந்த மாதிரி ஜாலியா சுத்துறீங்க?” என்று வினவினாள்.

             

            அதைக் கேட்டுக் கொண்டே அவர்களருகே வந்த ஸ்வரூபனோ, “ஆமா, இவ இந்த நாட்டோட பி.எம். இவளைக் காணோம்னு போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டே அல்லோலகல்லோல படுது!” என்று கேலியாக கூற, அவனை முறைத்த வர்ஷினியோ, பதிலை வேண்டி ஷ்யாமின் முகத்தை பார்த்தாள்.

             

            அவனோ எதுவும் கூறாமல் தன் அலைபேசியை எடுத்து காவல்துறை துணைத்தலைவருக்கு அழைப்பு விடுத்து ஸ்பீக்கரை ஆன் செய்ய, மறுமுனையில் அவரோ அழைப்பை ஏற்றதும், “விக்ரம் பத்தி நியூஸ் கிடைச்சதா?” என்று வினவினார்.

             

            ஷ்யாமோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், “இல்ல சார். விக்ரம் பத்தி எந்த நியூஸும் கிடைக்கல. ஹாஸ்பிடல்லயிருந்து காணாம போன அந்த பொண்ணு பத்தி தான் க்ளூ கிடைச்சுருக்கு. அதை வச்சு ப்ரோசீட் பண்ணலாம்னு இருக்கோம்.” என்றான்.

             

            “வாட்? அந்த பொண்ணை கண்டுபிடிச்சு என்ன பண்ண போறீங்க? இட் இஸ் வேஸ்ட் ஆஃப் டைம். நீங்க என்ன பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா, எலெக்ஷனுக்கு முன்னாடி அந்த விக்ரம் சிங்கை கைது பண்ணியே ஆகணும். மேலிடத்துலயிருந்து செம பிரஷர் ஷ்யாம்.” என்று அவர் கூற, எப்போதும் போல ஒரு ‘ஓகே’வுடன் அழைப்பை துண்டித்தான் ஷ்யாம்.

             

            “அடப்பாவிங்களா, இப்படி தான் உங்க விசாரணை எல்லாம் போகுதா?” என்று வர்ஷினி வாயில் கைவைத்து ஆச்சரியப்பட, அவளை முறைத்த ஷ்யாமோ, “உன்னை பிடிச்சுட்டா, விக்ரமை ஈஸியா கண்டுபிடிச்சுடலாம்னு தான் அந்த ஆளு உன் பக்கம் எங்க கவனத்தை திருப்ப விடமாட்டிங்குறாரு.” என்றான்.

             

            “அட ஆமா, அவரை விக்ரம் கூட ஒருமுறை பார்த்துருக்கேன். அப்போ அவரும் அந்த மாஃபியா கேங்கோட கூட்டா? விளங்கிடும்!” என்ற வர்ஷினியோ, “அதுசரி, ஆனா இந்த விக்ரம் கூட என்னை தேடலையா?” என்று அடுத்த கேள்வியை கேட்க, ஷ்யாமோ ஸ்வரூபன் புறம் பார்வையை திருப்பினான்.

             

            “ஏன் தேடலை? உன்னை தேடி வரிசையா வந்தவனுங்களை எல்லாம் நம்ம குடவுன்ல தான் ‘பாதுகாப்பா’ தங்க வச்சுருக்கோம்.” என்று அந்த பாதுகாப்பை அழுத்தி கூற, அந்த தோரணையே அவன் ஏதோ வில்லங்கம் செய்திருக்கிறான் என்பதை கட்டியம் கூறியது வர்ஷினிக்கு.

             

            எவ்வளவு கேள்விகள் கேட்டாலும், வர்ஷினிக்கு குழப்பங்கள் தீரவில்லை போலும்.

             

            இதோ, அடுத்த கேள்வியாக, “கிட்னாப் எல்லாம் சரி. அது எப்படி நான் சொன்ன மாதிரியே என் லவர்… க்கும், இந்தரா நீங்க வந்தீங்க?” என்று ஸ்வரூபனிடம் வினவ, அவள் இடையில் திக்கியதை அவனையும் மீறி ரசித்தவனோ, “ஹ்ம்ம், அதை ஒரு பட்சி லைவ் ரிலே பண்ணுச்சு.” என்றான்.

             

            சரியாக அதே சமயம் அங்கு ஆஜரான அந்த ‘பட்சி’யோ, “என்ன என்னை விட்டு இங்க ஒரு மாநாடு நடக்குது?” என்று கேட்க, அவனை வழக்கம் போல முறைத்தாள் வர்ஷினி.

             

            அவளின் முறைப்பு பழகிப் போனதாலோ என்னவோ, ஷ்யாமை நோக்கி திரும்பிய அகில், “என்னடா நீ உன் ஆளை பார்க்க நாளைக்கு போற தான?” என்று வினவ, “எது கஞ்சி சட்டைக்கு காதலா?” என்று எட்டாவது உலக அதிசயத்தை நேரில் கண்டது போல வியந்தாள் வர்ஷினி.

             

            அண்ணனையும் தங்கையையும் ஒருசேர முறைத்த ஷ்யாமோ, “மவனே, ஊருக்கு வருவேல, அப்போ வச்சுக்குறேன்.” என்று அகிலிடம் கூறியபடி கிளம்ப முற்பட, “அடேய், சத்தமா சொல்லாத. இப்போ தான் என் பொண்டாட்டியை மலை இறக்கி இருக்கேன்.” என்று போலியாக வருத்தப்பட்டான் அகில்.

             

            சிரிப்பும் குதூகலமுமாக கரைந்த அந்த நிமிடங்களை மனப்பெட்டகத்தில் பத்திரப்படுத்திக் கொண்டாள் வர்ஷினி. இனி, இவை போன்ற தருணங்கள் கிடைக்காது என்று எண்ணினாளோ என்னவோ!

             

            *****

             

            மறுநாள் தன் அன்னையிடம் சொல்லிக் கொண்டு சென்னை கிளம்பினான் ஷ்யாம். ஆனால், அவன் மனமோ அவன் தேடுதலுக்கு உரியவள் அங்கிருக்க மாட்டாள் என்று அடித்துக் கூறியது.

             

            ஊருக்கு வந்ததும் வேலைகள் அவனை இழுத்துக் கொண்டன. முதலில், ஷர்மிளா வேலை செய்த பத்திரிக்கை அலுவலகத்திற்கு சென்று விசாரித்தான். அங்கு அவனிற்கு தேவைப்படும் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

             

            அவள் வீட்டிற்கு சென்றும் விசாரித்தான். வீட்டின் உரிமையாளரும், அவளை பார்த்து இரண்டு நாட்கள் ஆகிற்று என்ற தகவலையே கொடுக்க, ‘அப்போ நான் லாஸ்ட்டா பார்த்த அன்னைக்கே காணாம போயிருக்கா.’ என்று எண்ணியவன், அடுத்து என்ன என்று குழம்பி தான் போனான்.

             

            அவன் நிலையற்று நின்றதெல்லாம் ஒருநொடி தான். அடுத்தடுத்த செயல்கள் எல்லாம் துரித நிலையில் நடக்க ஆரம்பித்தன.

             

            திருட்டு வழக்கை விசாரிக்கும் செல்வத்திற்கு அழைத்தவன், அந்த திருடர்களை உடனடியாக தேடி கண்டுபிடிக்குமாறு பணித்து விட்டு, ஷர்மிளா அலுவலகத்திலிருந்து வீடு செல்லும் வழியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை பார்க்க ஆரம்பித்தான்.

             

            அதில், ஆளரவமற்ற சாலையில் ஷர்மிளாவை வழிமறித்த மர்மநபர் ஒருவர் ஏதோ கூற, அதில் அதிர்ந்த ஷர்மிளா தன் வாகனத்தில் அந்த மர்மநபரின் வாகனத்தை பின்தொடர்வது பதிவாகி இருந்தது.

             

            உடனே, அந்த வாகனம் செல்லும் வழியிலுள்ள சிசிடிவி காட்சிகளை பார்க்க ஆரம்பித்தான் ஷ்யாம். அது சென்று நின்ற இடம் ஒரு கைவிடப்பட்ட ஆலை.

             

            அதை பார்த்ததும், அந்த இடத்திற்கு அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தவன், அவனும் அவ்விடத்திற்கு விரைந்தான்.

             

            அவன் சந்தேகப்பட்டது போல, அங்கு சிலரை கடத்தி வைத்ததற்கான சான்றாக அறுந்த கயிறுகள், சங்கிலிகள், சிகரெட் துண்டுகள், ரத்த துளிகள் முதலியவை தென்பட, ஆட்கள் யாரும் தென்படவில்லை.

             

            ‘ஷிட், லேட்டா வந்துட்டேன்.’ என்று ஷ்யாம் தன்னையே திட்டிக் கொண்டபடி, அந்த இடத்தை மேலும் பார்வையால் அலச, அங்கு ஓரமாக கிடந்த அலைபேசி அவன் பார்வையில் சிக்கியது.

             

            அதன் முகப்பு படத்தை பார்த்த ஷ்யாமோ, “வினய்…” என்று முணுமுணுக்க, சரியாக அதே சமயம், செல்வத்திடமிருந்து அழைப்பு வந்திருந்தது.

             

            “சார், அந்த திருட்டு கும்பலை கண்டுபிடிச்சுட்டோம். ஆனா, ரெண்டு நாளைக்கு முன்னாடி, அவங்க குரூப்புக்குள்ள ஏதோ சண்டை வந்து, அடிதடில இறங்கிருக்காங்க. அதுல, எல்லாருக்கும் நல்ல காயம். இப்போ **** ஹாஸ்பிடல்ல இருக்காங்க சார். ஒருத்தன் மட்டும் தான் அபாய கட்டத்தை தாண்டிருக்கான். மத்தவங்க எல்லாம் இன்னும் ஐசியூல தான் இருக்காங்க.” என்றான் செல்வம்.

             

            “ஓகே செல்வம். நான் இப்பவே அங்க வரேன்.” என்ற ஷ்யாமோ, அடுத்த இருபது நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்திருந்தான்.

             

            அவன் ஏன் இந்த வழக்கில் இத்தனை தீவிரம் காட்டுகிறான் என்பதை அறியாத செல்வமோ, அவனை அழைத்துக் கொண்டு குற்றவாளி இருக்கும் அறைக்கு சென்றான்.

             

            அங்கு கட்டிலில் பலத்த காயங்களுடன் படுத்திருந்தவன் வினய் தான்.

             

            அதுவரை வலியுடன் விரக்தி கலந்த உணர்வில், எதிரிலிருந்த சுவரை வெறித்துக் கொண்டிருந்த வினய்யின் விழிகள், உள்ளே நுழைந்த ஷ்யாமை கண்டு அதிர்ந்து பின் நிர்மலமாகின.

             

            அவன் பாவனைகளை எல்லாம் சரியாக கணித்துக் கொண்ட ஷ்யாமோ, அவனருகே இருந்த முக்காலியில் அமர்ந்தபடி, “என்ன  நடந்துச்சு?” என்று அடிக்குரலில் வினவினான்.

             

            அந்த குரல் வினய்க்கு கிலியை கிளப்பினாலும், வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல், “அதான் சொன்னேனே சார், எங்க குரூப்புக்குள்ள சண்டைன்னு.” என்று கூற, அவன் தலை முதல் கால் வரை அளவிட்ட ஷ்யாமோ மீண்டும் அதே கேள்வியை இன்னும் இறுக்கத்துடன் கேட்க, வினய் பயத்தில் எச்சில் விழுங்கியபடி அதே பதிலை கூறினான்.

             

            அத்தனை நேரம் இருந்த பொறுமை பறந்து போக, அடிபட்டு கட்டு போடப்பட்டிருந்த வினய்யின் கரத்தை மேலே இழுத்த ஷ்யாமோ, “இந்த காயமெல்லாம் உங்களுக்கு நீங்களே உண்டாக்கிக்கிட்டீங்க, அப்படி தான?” என்று மிரட்ட, வலியிலும் பயத்திலும் வினய் அலற, அவனின் மிரட்டலில் பயந்து போன செல்வமும், “சார் சார், வேண்டாம் சார்.” என்று தடுக்க முற்பட்டான்.

             

            “இடியட், உன்னால உன் அக்காவை அவனுங்க கடத்தி இருக்கானுங்க. நீ என்னன்னா, இப்பவும் அவனுங்களுக்கு முட்டு கொடுத்துட்டு இருக்க! ராஸ்கல்.” என்று ஷ்யாம் பேச பேச, மற்ற இருவரும் அதிர்ந்து தான் போயினர்.

             

            ‘இதென்ன திருட்டு கேஸ்னு நினைச்சா, கடத்தல்னு சொல்றாரு?’ என்று செல்வம் யோசிக்க, வினய்யோ, “சார் சார், எப்படியாவது அவளை காப்பாத்துங்க சார்.” என்று கதறினான்.

             

            அப்போது தான் பிடித்து இழுத்த அவனின் கரத்தை விடுவித்தான் ஷ்யாம்.

             

            “சொல்லு அன்னைக்கு என்ன நடந்துச்சு?” என்று ஷ்யாம் வினவ, வினய்யும் அன்றைய நிகழ்வை கூற துவங்கினான்.

             

            *****

             

            “வினய்… எங்க எல்லாம் உன்னை தேடுறது? சேகரண்ணா எல்லாரையும் கூப்பிடுறாரு டா.” என்று வினய்யின் சகாக்களில் ஒருவன் கூற, “ப்ச், இங்க பாரு குமாரு, நமக்கு இந்த போதைப்பொருள் மேட்டர் எல்லாம் செட்டாகாது. ஏதோ சின்ன சின்ன திருட்டுன்னு சொன்ன, அதுக்கு நான் ஒத்துக்கிட்டேன். போக போக நமக்கு கொடுக்குற வேலையெல்லாம் ரிஸ்க் ஜாஸ்தியா இருக்கு. இந்த மாதிரி வேலைக்கு எல்லாம், இனிமேல் என்னை கூப்பிடாத.” என்றபடி அவனுடன் சென்றான் வினய்.

             

            “அதை நீயே சேகரண்ணா கிட்ட சொல்லிடு.” என்ற குமாரோ வினய்யை அழைத்துக் கொண்டு அந்த கைவிடப்பட்ட ஆலைக்குள் நுழைந்தான்.

             

            உள்ளே நுழைந்ததும் வினய்யின் தலையில் யாரோ பலமாக அடிக்க, அது யாரென்று தெரியாமல் மயங்கி விழுந்தான் வினய்.

             

            அடுத்து அவன் லேசாக கண் விழித்தபோது, ஷர்மிளா பதற்றத்துடன் உள்ளே வருவது தெரிந்தது. அவளை வர வேண்டாம் என்று சொல்வதற்கு எத்தனை முயன்றும் அவனால் அதை செய்ய முடியவில்லை.

             

            “வினய்…” என்று ஷர்மிளா கத்தும்போதே, அவளிற்கு யாரோ மயக்க மருந்து கொடுத்து மயக்கமடைய செய்வதை எதுவும் செய்ய முடியாத கையாளாகத்தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் வினய்.

             

            பின், அவனும் அதிக உதிரபோக்கினால் மயங்கிப் போக, மீண்டும் கண்விழித்தது இந்த மருத்துவமனையில் தான்.

             

            *****

             

            வினய் இதை கூறி முடிக்க, “ஏன் இதை முன்னாடியே சொல்லல?” என்று கேட்டான் ஷ்யாம்.

             

            வினய்யோ செல்வத்தை ஒரு பார்வை பார்த்தபடி, “சார், சேகர் ரொம்ப பவர்ஃபுல்லான ஆளு. அவனுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கு. போலீஸ் செல்வாக்கும் இருக்கு. எங்க நான் இதை பத்தி வாயை திறந்தா அக்கா உயிருக்கு ஆபத்து வந்துடுமோன்னு பயந்து தான் சொல்லல சார்.” என்றவன், “சார், நான்… நான் ரெண்டு முறை தான் பிக்-பாக்கெட் அடிச்சுருக்கேன். அதுவும் என் ஃபிரெண்டு சொல்லி, அதுல கிடைக்குற த்ரில்லுக்காக… தப்பா…” என்று சொல்லும்போதே ஷ்யாம் முறைக்க, “நானே அதுலயிருந்து வெளிய வரத்தான் முயற்சி பண்ணேன். அதுவும், அக்காக்கு இப்படி நடக்கும்னு தெரிஞ்சுருந்தா நிச்சயமா இதுக்குள்ள வந்துருக்க மாட்டேன்.” என்றான்.

             

            அப்போதும் ஷ்யாம் நம்பாத பார்வை பார்க்க, “சார், நான் சொல்றது உண்மை தான். என்னதான் அவ என்கூட பொறக்காதவன்னாலும், அவ மேல எனக்கு பாசம் இருக்கு சார். பிளீஸ், அவளை எப்படியாவது காப்பாத்துங்க.” என்று கெஞ்சினான் வினய்.

             

            ஷ்யாமோ ஒரு பெருமூச்சுடன், “அவங்க உன் அக்காவை எங்க கூட்டிட்டு போனாங்கன்னு ஞாபகம் இருக்கா? ஏதாவது சின்ன க்ளூ கிடைச்சா கூட போதும். நல்லா யோசிச்சு பாரு.” என்று கூற, வினய்யும் யோசித்து பார்த்தான்.

             

            அவனிற்கு சட்டென்று ‘சோலைப்புதூர்’ என்று அவர்கள் பேசிக் கொண்டது நினைவுக்கு வர, அதை ஷ்யாமிடமும் பகிர்ந்தான்.

             

            அதைக் கேட்டதும், ‘நம்ம ஊருக்கு எதுக்கு கூட்டிட்டு போறாங்க?’ என்று ஷ்யாம் குழம்ப, “சார், இந்த வேலையை அவனுக்கு கொடுத்தது விக்ரம்னு பேசிட்டு இருந்தாங்க.” என்று வினய் கூற, அந்த பெயரே ஷ்யாமின் கோபத்தை அதிகரிக்க போதுமானதாக இருந்தது.

             

            ‘இவன் எதுக்கு ஷர்மியை தூக்கி இருக்கான்?’ என்ற யோசனை ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்க, மறுபுறம் அவன் ஊருக்கு மீண்டும் பயணிக்க ஆயத்தமானான் ஷ்யாம்.

             

            *****

             

            பெரிய வீட்டில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் குழுமி இருந்தனர். காரணம், ரூபியின் வளைகாப்பிற்கான திட்டம் தீட்ட தான்.

             

            “எனக்கு லீவு டைம்மா பார்த்து வளைகாப்பு வைங்க.” என்று முதல் ஆளாக அகில் கூற, “க்கும், அப்போ குழந்தை பொறந்ததுக்கு அப்பறம் தான் வைக்கணும்.” என்று நொடித்துக் கொண்டார் பெரியநாயகி.

             

            அதைக் கேட்டு அனைவரும் சிரிக்க, “ப்ச் கிழவி, என்னை அசிங்கப்படுத்துறதே பொழப்பா வச்சுருக்கியோ!” என்று சலித்துக் கொண்டான் அகில்.

             

            அப்போது வாசல் புறமிருந்து, “அட, எல்லாரும் ஒண்ணா சந்தோஷமா இருக்கீங்க போல!” என்ற குரல் கேட்க, திரும்பி பார்த்த ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு பாவனையை வெளிப்படுத்தியது.

             

            அங்கு வாசலை மறைத்துக் கொண்டு நின்றிருந்தது சாட்சாத் விக்ரமே!

             

            அவனை அங்கு கண்டதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நிற்க, வர்ஷினியோ தமயந்தி பக்கம் வந்து நின்று, அவரின் கரத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.

             

            “அட, என்ன இது? வீட்டுக்கு வந்தவங்களை வரவேற்க மாட்டீங்களா?” என்ற விக்ரமின் பார்வை தமயந்தியையும் அவரருகே நின்ற வர்ஷினியையும் தொட்டு விட்டு சென்றது.

             

            “உனக்கெல்லாம் வரவேற்பு ஒரு கேடா?” என்று அனைவரும் மனதில் நினைத்ததை பெரியநாயகி வெளியே சொல்லிவிட, “என்ன அத்த இப்படி சொல்லிட்டீங்க? உங்க மாப்பிள்ளை என்ன பழைய மாதிரி ஒன்னும் இல்லாதவன்னு நினைச்சீங்களா? இன்னும் கொஞ்ச நாள்ல சென்ட்ரல் மினிஸ்டர் நான்.” என்று கர்வமாக கூறினான் விக்ரம்.

             

            “நீ சென்டுரல் மினிஸ்டரா இருந்துக்கோ இல்ல யாரா வேணும்னா இருந்துக்கோ, உனக்கெல்லாம் இந்த வீட்டுல எந்த மரியாதையும் கிடைக்காது!” என்று கத்தி, அதன் விளைவாக மூச்சுக்கு சிரமப்பட்டார் பெரியநாயகி.

             

            வைத்தீஸ்வரனோ மனைவியை கவனிக்க, பாட்டியின் பேச்சில் முகம் கறுக்க நின்ற விக்ரமை, ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு பார்வையால் சுட்டெரித்தான் ஸ்வரூபன்.

             

            அவனருகே வந்த அகிலோ, “மச்சான், அவன் பக்கத்துல நிக்கிற பொண்ணை பார்த்தியா?” என்று வினவ, அப்போது தான் விக்ரமை விடுத்து மற்றவளை பார்த்தான் ஸ்வரூபன்.

             

            சட்டென்று அடையாளம் தெரியாமல் போனாலும், அவளை எங்கோ பார்த்த ஞாபகம் ஸ்வரூபனிற்கு!

             

            அவனை அதிகம் யோசிக்க விடாமல், “அந்த பொண்ணு தான் ஷர்மிளா, நம்ம ஷ்யாம்…” என்று அகில் கூற வந்ததை பாதியிலேயே நிறுத்த, அதை புரிந்த கொண்ட ஸ்வரூபனோ குழப்பத்தில் ஆழ்ந்தான்.

             

            இருவரின் பேச்சுவார்த்தைகளை விக்ரம் ஒருபுறம் கவனித்தான் என்றால், மறுபுறம் வர்ஷினியும் கவனித்து அவர்களருகே வந்து நின்றாள்.

             

            அதே சமயம், மூச்சிரைக்க ஷ்யாமும் அவ்வீட்டுற்கு வர, அவனைக் கண்ட விக்ரமோ, “ஓஹோ, ஆடு பகை குட்டி மட்டும் உறவோ?” என்று கேலியாக வினவ, கட்டுப்படுத்திய கோபம் கட்டுடைத்து வெளியே வர, அதை எதிரிலிருந்தவனிடம் காட்டிவிடும் வேகத்தில் ஸ்வரூபன் முன்னே செல்ல, அவனை இருபக்கமும் தடுத்து நிறுத்தினர் வர்ஷினி மற்றும் அகில்.

             

            விக்ரமோ இந்த மூவர் கூட்டணியை பார்த்து நக்கலாக சிரித்தபடி, “சரி சரி, ஆடு பகையாவே இருக்கேன். இதோ இன்னொரு குட்டி வந்துருக்கே, அதையாவது வரவேற்பீங்களா?” என்றவனின் பார்வை மொத்த குடும்பத்தை வட்டமடித்து தமயந்தியிடம் நிலைக்க, அந்த ஒரு நொடி அங்கு குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதியாக இருந்தது.

             

            தாங்கள் கேட்டதும், உணர்ந்ததும் சரியா என்று அனைவரும் யோசித்துக் கொண்டிருக்க, ஷ்யாமோ விக்ரமின் சட்டையை பற்றி இருந்தான்.

             

            வர்ஷினிக்கு எதுவும் விளங்காமல் இருக்க, “அகிலண்ணா, இங்க என்ன நடக்குது?” என்று சந்தேகம் கேட்டாள்.

             

            அகிலோ ஸ்வரூபனை அடக்கிக் கொண்டிருந்தபடி, “ஹ்ம்ம், அவங்க ரெண்டு பேரும் அண்ணன் தங்கச்சின்னு சொல்றாரு உன் அப்பா.” என்று ஷ்யாம், ஷர்மிளா மற்றும் விக்ரமை முறையே காட்டி கூறினான்.

             

            அதைக் கேட்ட வர்ஷினியோ திகைப்பின் எல்லைக்கே சென்றாள் என்று தான் கூற வேண்டும்!

             

            எல்லாமே உடனே தெரிஞ்சுக்கணும்னு நினைக்காத மயூரா. அது, உனக்கு தான் வலியை தரும்.” என்று ஸ்வரூபன் கூறியது மீண்டும் அவளின் மனக்கண்ணில் வந்து போனது.

             

            தொடரும்…

              The post 17 – இதயத்தின் நிறம் பார்த்ததால் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

              ]]>
              https://thoorigaitamilnovels.com/17-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/feed/ 0 17839
              உயிரெங்கும் குளிர் ஊசி அவன் விழி வீச்சில் – 6 ❄️ https://thoorigaitamilnovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%85-6/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%85-6/#respond Mon, 06 May 2024 04:21:03 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%85-6/ குளிர் ஊசி – 6 ❄️ “ஆஆ….. அம்மா ….. “ “ஏய் சீட்டு தான இடிச்சது எதுக்கு இவ்ளோ கத்துற? ” சரண் அவளின் அலறலில் பரபரத்து விட்டான். பின்னிருந்து தோளைச் சுரண்டிய மாயா, ” இப்படிலாம் இங்க கத்த கூடாது. புரியுதா…..” என்று பாவமாக கேட்டாள். அதன் பின்பே தான் கத்தியது அவ்வளவு தூரம் ஒலி எழுப்பி இருக்கிறது என்று புரிந்து “கொஞ்சம் ஓவரா போய்டோமோ ?

              The post உயிரெங்கும் குளிர் ஊசி அவன் விழி வீச்சில் – 6 ❄️ appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

              ]]>

              Loading

              குளிர் ஊசி – 6 ❄

              “ஆஆ….. அம்மா ….. “

              “ஏய் சீட்டு தான இடிச்சது எதுக்கு இவ்ளோ கத்துற? ” சரண் அவளின் அலறலில் பரபரத்து விட்டான்.

              பின்னிருந்து தோளைச் சுரண்டிய மாயா, ” இப்படிலாம் இங்க கத்த கூடாது. புரியுதா…..” என்று பாவமாக கேட்டாள்.

              அதன் பின்பே தான் கத்தியது அவ்வளவு தூரம் ஒலி எழுப்பி இருக்கிறது என்று புரிந்து “கொஞ்சம் ஓவரா போய்டோமோ ? ” …. என்று வினவ,

              “ரொம்ப ” என்று லாரா பதில் மொழிய, “ஹேய் நீ தமிழ் படம்லாம் பாப்பீயா? ” ஆச்சர்யமாக கேட்டாள் ஜனனி.

              “தமிழ் பேசுறதே அதனால தான் ” சிரித்துக் கொண்டே கூறினாள்.

              இதற்கு மேல் இருந்தால் மித்ரன் கோபப்படுவான் என்றும், ஜனனி பேசிக் கொண்டே இருப்பாள் என்று சரண் தான் “வெல்கம் டூ மை ஹோம் பம்கின் ” என்று கூறி வெளியில் இறங்கினான்.

              அதன் பின்பே அனைவரின் பேச்சும் நின்று மூவரும் கீழே இறங்கினர். டிக்கியைத் திறந்து பொருட்களை எடுக்க, ஜனனி சார்லி , மித்ரன் மற்றும் லாரா மூவருக்கும் பொதுப்படையாக கூறி விடைபெற்றுக் கொண்டாள்.

              லாராவும் அங்கேயே விடைபெற்றுக் கொள்ள, சார்லி மற்றும் மித்ரன் காரை பார்க் செய்து விட்டு சரண் மற்றும் மாயா குடி கொண்டிருக்கும் வீட்டிற்கு எதிரில் உள்ள அப்பார்டமெண்டிற்குள் நுழைந்தனர்.

              முன்பு இருந்த குறும்பும், குழந்தை தனமும் காணாமல் போகி இருந்தது இருவருக்கும். அமைதியாக இருவரும் உள்ளே நுழைய சார்லி தன்னை சுத்தபடுத்தி கொள்ள அவனின் அறைக்கு சென்று விட்டு , ஹாலிற்கு அரை மணி நேரம் கழித்து வந்தான்.

              சென்ற போது இருந்த தோரணையிலேயே இருந்தான் மித்ரன். கைகளை கட்டிக்கொண்டு தன் முன் இருக்கும் ஆளுயுரக் போட்டோவா வீற்றிருப்பத்தையே கண்ணெடுக்காமல்  பார்த்துக் கொண்டிருந்தான்.

              பெருமூச்சு விட்டு, தனது தலையை இடவலமாக அசைத்துக் கொண்டே மித்ரனின் அருகில் நின்று சார்லியும் அப்போட்டோவைக் கண்டான்.

              அதில் ஒரு வயதானவர் கம்பீரமாக நின்றுக் கொண்டிருந்தார். அவரது தோரணையில் கம்பீரம் நிறைந்து வயது குறைந்து இருந்தது. அவரின் அருகில் பெண்மைக்கு இலக்கணமாக நின்று கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.

              அப்பெண்னின் இரு பக்கவாட்டிலும்  இருவர் நின்றுக் கொண்டிருந்தனர். அக்கம்பீர மனிதனின் கால் பக்கத்தில் ஒரு ஆங்கில சிறுவன் கையில் விரலை சப்பிக் கொண்டு, கசங்கிய ஆடைகளை போட்டுக் கொண்டு நின்றிருந்தான்.

              அதனையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த இருவரின் பின் இருந்து “ச்சீ…….”என்ற ஒலி எழுப்பியதில் பயந்து இருவரும் திரும்பி பார்க்க, அங்கிருப்பவனைக் கண்டு அதிர்ந்தனர்.

              அதே சமயத்தில் , சரண் தலையை கையில் வைத்துக் கொண்டு ஹால் சோபாவில் அமர்ந்திருந்தான். இறங்கியவுடன் வெளியில் பொருட்கள் வாங்க கடைக்கு சென்ற மாயா , வீட்டை அடைந்த பொழுது அவரை வரவேற்றது சரணின் இவ்வதாரத்தைத் தான்.

              அதில் புருவம் சுருக்கி சரணின் அருகில் சென்று அவனின் தோளைச் சுரண்ட , சரண் அரண்டு கத்தி விட்டான். அதில் மாயாவும் கத்தி விட்டாள்.
              உள்ளிருந்து வெளியில் வந்த ஜனனி , சரணுடன் மாயாவையும் திட்டி விட்டு உள்ளே சென்றாள்.

              அவள் ஏப்ரான் அணிந்து கிட்சனுக்குள் நுழைவதைக் கண்டு திடுக்கிட்டு மாயாவும் சமையலறைக்கு சென்று எட்டிப் பார்க்க, ஜனனி ஸ்டவ்வை பற்ற வைக்க தெரியாமல் இருப்பது சாதாரணம், லைட்டர் எதுவென்று தெரியாமல் இருப்பதே அசாதாரணம் என்று நினைக்கும் பொருட்டு ஜனனி தன் கண்முன் இருக்கும் லைட்டரை விட்டு சுற்றி தேடிக் கொண்டிருந்தாள்.

              அதை கண்டு ஆச்சர்ய படாமல் “ஹப்பாடா ” என்று வாய் அசைத்து விட்டு சத்தமில்லாமல்  வெளியேறிவள்  போய் நின்றாள் தன் கணவனின் முன் .

              சரணிடம் ஒன்னும் ஆகாது விடுடா என்று கூறி அவனின் அருகில் அமர்ந்து நெட்ஃபிளிக்ஸில் சீரியஸ் பார்க்க தொடங்கினாள் அதுவும் வாங்கி வந்த சிப்ஸை எடுத்துக் கொண்டு. புரிந்தும் புரியாமலும் சரணும் சேர்ந்துக் கொண்டான்.

              கதையின் வீரியம் அதிகமாக அதிகமாக அசையாமல் நேரம் போவது தெரியாமல் இருவரும் பார்த்துக் கொண்டிருக்க , சிப்ஸில் இன்னொரு கையும் உள்ளே நுழைந்தது. அதை முதலில் கண்டு கொண்ட சரண் ஜனனியின் கையில் அடித்தான். ஆனால், அவளோ “ச்ச….. ” என்று கூறி அவள் பாட்டிற்கு படத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்.

              நேரம் நேரம் செல்ல செல்ல, கதையின் இறுதியில் பயம் தொற்றி சரணை இடித்துத் தள்ளி மாயா மற்றும் சரணிற்கு இடையில் அமர்ந்து கால்களை மடிக்கி கைகளால் முட்டுகையிட்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.

              முகத்தை சரணின் புறம் திரும்பி வாயைப் பிளக்க , சரண் “என் தலையெழுத்து ” என்று கூறி அவளுக்கு சிப்ஸை ஊட்டிக் கொண்டிருந்தான்.

              படம் முடிந்த பின்பே திரும்பி பார்த்த மாயா, ஜனனியும் அமர்ந்திருப்பதைக் கண்டு “என்ன ஜனனி இவ்வளவு சீக்கிரம் சமைச்சுட்டியா ? வாவ் யூ ஆர் ரியலி கிரேட் “என்று கூறி அவள் எழ , சிறிதும் அசைந்து கொடுக்காமல் “சமைக்க தான் போனேன் பட் இங்க இருக்கிற ஸ்டவ் யூஸ் பண்ணத் தெரில. அதான் பண்ணல ” என்று இறுதி வார்த்தையை வாயிலேயே முழுங்கினாள்.

              “ஆன் பண்ணத் தெரியலைனா என்னையோ இவனையோ கூப்பிட்டு கேட்டா சொல்ல போறோம் “

              ” அதுக்கு தான் வந்தேன். படம் பார்த்துக்கிட்டு இருந்தீங்க. அதை நானும் பார்த்தேன். நல்லா இருந்துச்சு அந்த சீன். இந்த சீன் முடிச்சுட்டு கூப்பிடலாம்னு உட்காந்தேன் “

              “சீன் முடிஞ்சவுடனே கூப்பிட்டிருக்காலேமே?”

              “அடுத்த சீனும் நல்லா இருந்துச்சு . நான் என்ன செய்ய? “

              “இப்படியே போய் படத்தையும் முடிச்சாச்சு, சிப்ஸையும் முடிச்சாச்சு ” என்று கூறி சிப்ஸ் பாக்ஸ்ஸை காண்பித்தான்.

              “சரி…. இப்பவும் ஒன்னுமில்லை. நான் ஆன் பண்ணித் தரேன். நீ சமை …. “என்று கூறி மாயா கிச்சனுக்கு செல்ல போக, தடுத்து நிறுத்திய ஜனனி “அதான் லேட் ஆகிடுச்சே… வெளியிலேயே வாங்கி சாப்பிடுவோம் “

              ” வெளியிலேயா ? ” என்று மாயா புருவம் உயர்த்தி கேட்க,

              “ஆமாம், சரண் தான் சொன்னான் ” என்று கூறி சிரித்தாள்.

              “ஆனால் , நீ சமைக்க காய்கறிலாம் வெட்டி வச்சிருப்ப . அது வேஸ்ட் ஆகிடும். வா, நாங்க இரண்டு பேரும் ஹெல்ப் பண்ணுறோம் ” என்று சரணை  பார்க்க, சரணும் எழுந்துக் கொண்டான்.

              ஜனனி அசையாமல் அவ்விடத்திலேயே அமர்ந்திருக்க, புருவம் இடுங்க மாயா பார்த்து விட்டு ,அவளின் அருகில் வந்து அவளின் தாடையை நிமிர்த்தி “இனிமே சமைக்க போறேனு சொன்ன அவ்ளோ தான். நாங்களே கஷ்டப்பட்டு லவ்வை பண்ணி இப்போ தான் கல்யாணம் பண்ணிருக்கோம் . நீ எங்களை கொல்ல பாக்குற “

              “கொலை கேசுல உள்ள போகவும் வாய்ப்பு இருக்கு பாப்பு ” என்று சரணும் ஆமோதித்தான்.

              இருவரின் சம்பாஷனைகளை கண்டு மூக்கு விடைக்க ஜனனி அமர்ந்திருக்க,

              “டொய்ங் ….. ” என்று காலிங் பெல் அடித்தது .

              சரணை கதவைச் சாற்றி விட்டு ஜனனியின் அருகில் வந்து அவளுக்கு பிடித்து சிக்கன் பிட்ஷா, அல்ஃரெடோ பாஸ்தா, ஹார்லிக் பிரட் ஆகியவை கடை பரப்பினான்.

              அவையின் சுவையில் மெல்ல மெல்ல அவள் கோபம் குறைந்தது. இறுதியில் மூவரும் சிரித்து மகிழ்ந்து உண்டு அவரவர் அறையில் நித்திரையில் ஆழ்ந்தனர்.

              ஜனனியின் ஜன்னலில் எட்டிப் பார்த்த நிலவு அவள் உறங்கி கொண்டிருப்பதைக் கண்டு புன்னகை சிந்தி விட்டு, மித்ரனின் அறையில் எட்டிப் பார்த்தது. நிலவின் வரவை எதிர்ப்பார்த்து காத்திருப்பது போல் நின்றுக் கொண்டிருந்தான். அவனைக் கண்டு வருந்திய நிலவு இருவருக்கும் பொதுவாக தென்றலை வீசியது.

              அதில் மித்ரனுக்கு மனம் லேசாகுவது போன்ற பிரம்மை. ஜனனிக்கு அன்னையின் மடி போன்ற பிரம்மை.

              மறுநாள் விடியல் எவ்வாறு இருக்கப் போகிறது ?

              கீர்த்தி ☘

               

                The post உயிரெங்கும் குளிர் ஊசி அவன் விழி வீச்சில் – 6 ❄️ appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                ]]>
                https://thoorigaitamilnovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%85-6/feed/ 0 17837
                பிறை சூழ் மாயம் – 3 https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/#respond Sat, 04 May 2024 13:12:15 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/ பிறை 3   அவ்வப்போது பெய்து வரும் மழையினால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், இடையிடையே சூரியன் தன் இருப்பை காட்டிக் கொண்டு தான் இருந்தது.   ஆனால், அந்த பகலையும் இரவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தனர் போலும் அந்த கட்டிடத்தின் வடிவமைப்பாளர்கள். இதை, அங்கு இருப்பவர்கள் இரவினை மட்டுமே விரும்புபவர் என்றும் சொல்லலாமோ!   அந்த இருட்டில் எதுவுமே கண்களுக்கு தெளிவாக புலப்படவில்லை, அந்த கடிகாரத்தை தவிர.   அதைக் கட்டியிருந்தவனோ,

                The post பிறை சூழ் மாயம் – 3 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                ]]>

                Loading

                பிறை 3

                 

                அவ்வப்போது பெய்து வரும் மழையினால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், இடையிடையே சூரியன் தன் இருப்பை காட்டிக் கொண்டு தான் இருந்தது.

                 

                ஆனால், அந்த பகலையும் இரவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தனர் போலும் அந்த கட்டிடத்தின் வடிவமைப்பாளர்கள். இதை, அங்கு இருப்பவர்கள் இரவினை மட்டுமே விரும்புபவர் என்றும் சொல்லலாமோ!

                 

                அந்த இருட்டில் எதுவுமே கண்களுக்கு தெளிவாக புலப்படவில்லை, அந்த கடிகாரத்தை தவிர.

                 

                அதைக் கட்டியிருந்தவனோ, அந்த இடத்தின் மத்தியில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தான். அந்த கடிகாரத்தின் பலனாக கிட்டிய சிறு வெளிச்சம் கூட அவனை அத்தனை எளிதாக அடையாளம் காட்டவில்லை.

                 

                அப்போது அவனருகே வந்த ஒருவன், “பாஸ், பிளான் சக்ஸஸ். மார்ச்சுவரிலயிருந்து பாடியை தூக்கிட்டாங்க.” என்றான்.

                 

                பதிலுக்கு அந்த பாஸானவனோ அவனை முறைத்திருக்க வேண்டும் என்பது அவனின் பம்மலிலேயே தெரிந்தது.

                 

                “நீங்க பிளானை சொதப்பாம ஒழுங்கா ஃபாலோ பண்ணியிருந்தா, இப்போ இப்படி மார்ச்சுவரிக்கு அலைய வேண்டிய அவசியம் இருந்திருக்காது, யூ யூஸ்லெஸ் பா****. இப்போ பாரு போலீஸ் சந்தேகப்பட ஆரம்பிச்சுருப்பாங்க.” என்று கத்தினான் பாஸ்.

                 

                “அது… அந்த நேரத்துல அங்க மனுஷங்க நடமாட்டம் அதிகமா இருக்கும்னு…” என்று காரணம் சொல்ல வந்தவனை தடுத்தவன், “இப்படி ஒவ்வொரு தப்புக்கும் காரணம் எக்கச்சக்கமா சொல்லலாம். ஆனா, இனி இன்னொரு முறை காரணம் சொல்ல உயிரோட இருப்போமான்னு யோசிக்கணும்!” என்று பாஸ் கூற, எதிரிலிருந்தவனுக்கோ பயத்தில் கால்கள் வெளிப்படையாக நடுங்கத் துவங்கின.

                 

                அப்போது அவனைக் காப்பது போல, பயங்கர அலறல் சத்தம் ஒன்று கேட்டது.

                 

                “ப்ச், இன்னும் எதுக்கு கத்திட்டு இருக்கான் அந்த *****?” என்று பாஸ் எரிச்சலில் வினவ, “பாஸ், அவன் அப்போலயிருந்து அவனை கொல்ல சொல்லி கத்திட்டே இருக்கான். நாங்க தான், அப்பப்போ ஊசி போட்டு அவனை மயக்கத்துலயே வச்சுருக்கோம்.” என்றான்.

                 

                “ஓஹ், கொல்ல சொல்லி சொல்றானா? ஹாஹா, அவனை நானே சமாதானப்படுத்துறேன். இங்க கூட்டிட்டு வா அவனை.” என்று கேலிச்சிரிப்புடன் பாஸ் கூற, தன் தலை தப்பிவிட்ட நிம்மதியில் வேகமாக சென்றான் அந்த பணியாளன்.

                 

                கைகளையும் கால்களையும் சங்கிலியால் கட்டப்பட்டு, இருவரால் இழுத்து வரப்பட்டான் அவன். மேலாடை இல்லாமல், கால்சராயும் பல இடங்களில் கிழிந்த நிலையில் பரிதாபமாக இருந்தான். ஆனால், அவன் வாயை சுற்றிலும் படிந்திருந்த காய்ந்த இரத்தத்தடம் வேறு கதை கூறியது.

                 

                அவனைக் கண்டதும் விவகார சிரிப்புடன் அவனை நெருங்கிய பாஸ், “அட ராகேஷ் சார், இடம் எல்லாம் உங்களுக்கு வசதியா இருக்கா?” என்று வினவியவன், அவன் கையிலும் காலிலும் இருந்த சங்கிலியை பார்த்து போலியாக வருந்தியபடி, “அட யாரது உங்களை சங்கிலியால கட்டிப்போட்டது?” என்றான்.

                 

                அதற்கு சிரித்த மற்ற இருவரையும் நோக்கி, “இடியட்ஸ், இவரு யாருன்னு தெரியுமா? இந்த ஏரியால மிகப்பெரிய பிஸினஸ்மேன்.” என்றவன், இப்போது அந்த ராகேஷிடம் திரும்பி, “அதுமட்டுமில்லாம, என்னோட இத்தனை வருஷ கனவை நனவாக்க எனக்கு உதவியா இருக்கப்போறவர்.” என்று இதழை வளைத்தான்.

                 

                ராகேஷோ, “பிளீஸ் பிளீஸ் ஜி, என்னைக் கொன்னுடுங்க. என்னால இப்படி… இல்ல இப்படி என்னால வாழ முடியாது. இது நரக வேதனை! ஐயோ, நான் என்ன பண்ணிட்டேன்! ஆஹ், உடம்பெல்லாம் வலிக்குதே.” என்று கதறினான்.

                 

                அவன் கத்தியதை ஒரு புருவச்சுழிப்புடன் பார்த்த அந்த பாஸ், எரிச்சலில் அவன் சங்கிலியை பிடித்து அருகில் இழுத்து, “உஷ், இப்போ என்ன பண்ணிட்டோம்னு இப்படி கத்திட்டு இருக்க? என்னத்துக்கு வாழ்றோம்னே தெரியாம வாழ்ந்தியே ஒரு வாழ்க்கை, அதை எடுத்துட்டு இப்போ வாழ்றதுக்கான காரணத்தை உனக்கு கொடுத்துருக்கேன் ராகேஷ். நியாயமா நீ எனக்கு விஸ்வாசமா தான இருக்கணும்?” என்று கூறி சிரித்தவன், “அப்பறம் என்ன காரணம்னு தெரியுமா? என்னோட அல்டிமேட் எய்முக்கு ஹெல்ப் பண்ணி, எனக்கு சேவை செய்றது.” என்றவன், இப்போது அந்த கட்டிடமே அதிரும்படி நகைத்தான்.

                 

                “சீக்கிரமே நான் நினைச்சது நடக்கும். நடத்திக் காட்டுவேன். அதுக்கு குறுக்க யாரு வந்தாலும் தடமே இல்லாம அழிச்சுட்டு போயிட்டே இருப்பேன்.” என்று கர்ஜித்தான். அவனின் கர்ஜனையில் அவனுடன் இருந்தவர்களே பயந்து தான் போயினர்.

                 

                *****

                 

                லாட்டேவை பருகிக் கொண்டே அங்கு வேலை செய்யும் சாக்கில் சுற்றித் திரியும் சஞ்சீவனியை பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தான் சர்வஜனன். அவனின் பார்வையின் காரணம் அவனிற்கே சரிவர புரியாத போது பெண்ணவளுக்கு புரிந்து விடுமா என்ன?

                 

                அவளோ பயத்துடனும் பதட்டத்துடனும் தப்பும் தவறுமாக வேலை செய்து, அதற்கு பிரத்யூஷாவிடம் வேறு வாங்கிக்கட்டிக் கொண்டாள்.

                 

                ‘இவன் இங்கிருந்து கிளம்புனா தான் என்னவாம்?’ என்று நினைத்த உடனே கடவுளும் ‘ததாஸ்து’ கூறியிருப்பார் போலும், அவன் லாட்டேவை பருகி முடித்துவிட்டு கட்டணம் செலுத்த வந்து கொண்டிருந்தான்.

                 

                ‘எப்பா சாமி கிளம்பிட்டான்!’ என்று சந்தோஷப்பட, அதற்கு வேட்டு வைப்பது போல, கவுண்டரில் நின்றிருந்த பிரத்யூஷாவிடம், சஞ்சீவனியை நோக்கி கைகாட்டி ஏதோ கூறிவிட்டே சென்றான்.

                 

                அதற்கு பிரத்யூஷாவும் இவளை ஒரு மாதிரி பார்க்க, ‘அச்சோ, என்ன சொல்லிட்டு போனான் அந்த ஹேசல் ஐக்காரன்?’ என்று மனதிற்குள் நினைத்தவள், அங்கிருந்து நகர எத்தனிக்க, அவளருகே வந்த பிரத்யூஷா, “என்னடி நடக்குது இங்க?” என்று கூர்ப்பார்வையுடன் வினவினாள்.

                 

                “ஹா, என்ன நடக்குது? ஒன்னும் நடக்கலையே!” என்று சாதாரணமாக கூறுவது போல கூறிவிட்டு திரும்பி நடக்க முயற்சிக்க, அவளை தடுத்த பிரத்யூஷா, “அந்த போலீஸ்காரர் கிட்ட என்ன சொன்ன? அவரு வந்து ‘உங்க சர்வீஸ் நல்லா இருக்கு’ன்னு உன்னைப் பத்தி பாராட்டு பத்திரம் வாசிச்சுட்டு போறாரு!” என்றாள் பிரத்யூஷா.

                 

                “பாராட்டுனாரா?” என்று சந்தேகத்துடன் வினவிய சஞ்சீவனி எதேச்சையாக ஜன்னல் வழியே வெளியே பார்க்க, அங்கு அவளையே மர்மப்புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சர்வஜனன்.

                 

                அவன் பார்வை கண்டு சட்டென்று திரும்பிக் கொண்டவள், பிரத்யூஷாவிடம், “அப்படியெல்லாம் ஒன்னும் பண்ணல பிரத்யூ.” என்று முனகிவிட்டு அங்கிருந்து விரைந்து சென்று விட்டாள்.

                 

                அவளின் செயல்கள் அனைத்தையும் ஜன்னல் வழியே பார்த்த சர்வஜனனோ, லேசான புன்னகையுடன் அங்கிருந்து செல்லும்போது தான் அவனுக்கு அந்த அலைபேசி அழைப்பு வந்தது; பிரேதப்பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட உடல் காணவில்லை என்ற தகவல் வந்தது.

                 

                தகவல் கிடைத்த அடுத்த நொடி பிணவறை நோக்கி விரைந்தான் சர்வஜனன்.

                 

                அங்கு சென்றதும், கையை பிசைந்தபடி நின்ற சரவணனை, “உங்களை எதுக்கு இங்க அனுப்புனேன் சரவணன்?” என்று கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு வினவினான் சர்வஜனன்.

                 

                “அது சார்…” என்று சரவணன் இழுக்க, “என்ன ஏதாவது காரணம் சொல்லப் போறீங்களா? நீங்க என்ன காரணம் சொன்னாலும், நடந்தது மாறப்போறது இல்ல.” என்று பெருமூச்சு விட்டவன், “பாடியை தூக்கிட்டு போனப்போ ஒருத்தர் கூடவா ஸ்பாட்ல இல்ல?” என்று கேட்டான் சர்வஜனன்.

                 

                “சார், நம்ம கான்ஸ்டெபில் பழனியப்பனை அடிச்சு போட்டு தூக்கிட்டு போயிருக்காங்க.” என்று சரவணன் கூற, “வாரே வா, போலீஸையே அடிச்சு போட்டு தூக்கிட்டு போயிருக்காங்கன்னு வெளிய தெரிஞ்சா ரொம்ப பெருமைல நமக்கு!” என்றவன் கண்களை மூடி கோபத்தை கட்டுப்படுத்தி, அதே நிலையில், “என் மூஞ்சியவே எதுக்கு பார்த்துட்டு இருக்கீங்க? போய் வேற ஏதாவது லீட்ஸ் கிடைக்குதான்னு பாருங்க. வெளிய விஷயம் லீக்காகுறதுக்குள்ள பாடி கிடைச்சாகனும். க்விக்!” என்று மற்றவனை விரட்டினான் சர்வஜனன்.

                 

                அன்றைய நாள் சற்று நேரம் கூட அமைதியை அவனுக்கு பரிசளிக்க விரும்பவில்லை போலும். அதன்பிறகு அழைப்பு மேல் அழைப்பு வந்து அவனை அலைகளிக்க, சஞ்சீவனியாவது அவள் அலைப்புறுதலுக்கு அர்த்தமாவது என்று அவளை மறந்து போனான் சர்வஜனன்.

                 

                *****

                 

                அதேசமயம் அந்த இருள் சூழ்ந்த இடத்தில், அதன் சொந்தக்காரனுக்கு வேலை, இல்லை இல்லை, சேவை செய்பவர்கள் சர்வஜனன் மற்றும் அவனின் குழுவினர் தீவிரமாக தேடி வரும் உடலை அவர்களின் பாஸின் முன்பு போட்டனர்.

                 

                “பாஸ், பாடியை தூக்கியாச்சு.” என்று ஒருவன் பெருமையாக கூற, முறைத்தே அவனுக்கு சாவு பயத்தை காட்டினான் அந்த பாஸ்.

                 

                பின்பு, அங்கிருந்தவர்களை பார்த்து, “யூஸ்லெஸ்!” என்று திட்டியவன், “லிங்கா எப்போ இங்க வரான்? அவனில்லாம எனக்கு ஒரு கையே உடைஞ்ச மாதிரி இருக்கு.” என்றான்.

                 

                “பாஸ், சின்ன பாஸ் வரதுக்கு ஒரு வாரம் ஆகும்னு சொன்னாரு.” என்று மற்றொருவன் பவ்யமாக கூற, “ஹ்ம்ம், அவன் வந்ததும் அவனோட ஸ்டைல்ல உங்களை டிரெயின் பண்ண சொல்லணும்.” என்று பாஸ் கூற, அங்கிருந்தவர்களின் உடல் வெளிப்படையாகவே நடுங்கத் துவங்கியது.

                 

                பாஸோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தன்முன் கிடந்த உடலை சுற்றி வந்து பார்த்துவிட்டு, “பரவால அந்த ராகேஷ், நல்ல திடகாத்திரமா இருக்குறவனை தான் சூஸ் பண்ணியிருக்கான். ஹ்ம்ம், குட் சாய்ஸ்!” என்றவன் பட்டென்று தன் இடது கை கட்டை விரலை கீறி அதிலிருந்து வடிந்த இரத்தத்தை இறந்து கிடந்தவனின் வாய்க்குள் வழிய விட்டான்.

                 

                பின் அங்கிருந்தவர்களிடம், “இவனையும் பெட்டில போட்டு பூட்டி வைங்க. பூட்டு ஒழுங்கா இருக்கான்னு ஒன்னுக்கு பல முறை செக் பண்ணிக்கோங்க. போன முறை மாதிரி பூட்டை உடைச்சு தப்பிச்சு போயிட்டான்னு சொன்னீங்க, போனவனுக்கு பதிலா உங்களை உள்ள போட்டு பூட்டிடுவேன் ஜாக்கிரதை.” என்று கட்டளையிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினான் அந்த பாஸ்.

                 

                மற்றவர்களும் தங்களின் விதியை நொந்தபடியே இறந்தவனின் உடலை தூக்கியபடி அந்த தளத்திற்கு கீழே இருந்த ரகசிய தளத்திற்குள் நுழைந்தனர்.

                 

                அங்கு வரிசையாக நூற்றுக்கணக்கான பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் காலியாக இருந்த பெட்டிக்குள் அந்த உடலை வைத்து பூட்டிவிட்டு அவர்களின் பாஸ் சொன்னது போல ஒன்றுக்கு பலமுறை சரி பார்த்துவிட்டு கிளம்ப எத்தனிக்க, திடீரென்று பெட்டி படபடவென்று அடிக்கும் சத்தமும் அதற்கு போட்டியாக உறுமும் சத்தமும் கேட்டு, அவர்களின் இதயத்தை பலமாக துடிக்கச் செய்தது.

                 

                சிறிது நேரத்திலேயே அந்த சத்தம் பல திசைகளிலிருந்தும் கேட்க, மற்றவர்களோ அதன் தாக்கத்திலிருந்து வெளிவந்தவர்களாக, இது எப்போதும் நடக்கும் நிகழ்வு தான் என்பது போல அங்கிருந்து வெளிவந்தனர்.

                 

                *****

                 

                தேய்பிறை இரவு… நிலா அதன் முழு வடிவில் தோன்றாவிட்டாலும், வெளிச்சத்தை கக்கி இருட்டை போக்க முயன்று கொண்டு தான் இருந்தது.

                 

                படுக்கப்போகும் முன்னர் எப்போதும் போல, ‘இன்னைக்கு கனவுலயிருந்து கத்தி எழக்கூடாது!’ என்ற வேண்டுதலுடன் சஞ்சீவனி படுக்க, பிரத்யூஷாவோ, “நீயும் டெயிலி வேண்டிட்டு தான் இருக்க. ஆனா, அதுக்கான பலன் என்னவோ ஜீரோ தான்!” என்று கூற, “க்கும், இன்னைக்கு பாரு நான் கத்தவே மாட்டேன்.” என்று உறுதியளித்தாள் சஞ்சீவனி.

                 

                “ஆஹான், பார்ப்போம் பார்ப்போம்!” என்றபடி பிரத்யூஷா கண்களை மூடினாள்.

                 

                என்னதான் தோழியிடம் வீராப்பாக கூறிவிட்டாலும், சஞ்சீவனியின் மனமோ திக்திக்கென்று அடித்துக் கொண்டது உண்மையே. அதே பயத்துடன் அவள் கண்களை மூட, எங்கு முடிந்ததோ அங்கிருந்தே துவங்கியது அவளின் கனவு!

                 

                பழுப்பு நிறக்கண்களும், இரத்தம் படிந்த பற்களும் என கோரமாக காட்சியளித்த அந்த ஓநாய் உருவம் மெல்ல மெல்ல மனித உருவமாக மாற, அதை கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தாள் சஞ்சீவனி.

                 

                தோற்றம் மாறினாலும், கண்கள் மட்டும் மாறவில்லை. அதே கண்கள்!

                 

                எதிரே நின்றிருந்தவனின் உருண்டு திரண்ட தோள்களும், வலிய புஜங்களும் அவளின் வாயை பிளக்கச்செய்ய, அரையாடை கூட முழுமையாக இல்லாத அவனின் கீழ்பாகமோ நாணம் கொண்டு கண்களை மூடச்செய்தது.

                 

                சில மணித்துளிகள் சத்தமில்லாமல் கழிய, சஞ்சீவனிக்கோ இதயம் துடிக்கும் சத்தம் நன்றாகவே கேட்டது. அதனுடன் இன்னொரு இதயத்துடிப்பும் கேட்க, குழம்பியவளுக்கு விடையாக முகத்தில் மோதியது சூடான மூச்சுக்காற்று.

                 

                தன் மூச்சுக்காற்றை அவள் மீது படரச்செய்து அவள் மூச்சுக்காற்றை தற்காலிகமாக நிறுத்தி வைத்த மாயவனின் கரங்கள் பாவையை தூக்கிக்கொள்ள, அவளோ எவ்வித எதிர்வினையும் புரிய முடியாத நிலையில் இருந்தாள்.

                 

                இப்போதும் கண்களை மூடி இருந்தவளின் நாசியை பூக்களின் நறுமணம் தீண்ட, அவற்றைக் காணும் ஆர்வத்தில் லேசாக விழிகளை விரித்து பார்த்தவளின் வதனமோ, அங்கு பூத்துக்குலுங்கும் மலர்களின் வண்ணங்களுக்கு போட்டி போடும் விதத்தில் ஒளி வீசியது.

                 

                அதில் கவனத்தை வைத்திருந்தவளிற்கு, தான் யாரின் கரங்களுக்குள் இருக்கிறோம் என்பதெல்லாம் நினைவிலேயே இல்லை. செல்லும் வழியெல்லாம் அழகாக பூத்திருக்கும் மலர்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்தவளின் மேனி, பஞ்சனையின் மென்மையை உணர, அப்போது தான் அவளுக்கு தான் இருக்கும் சூழ்நிலை நினைவுக்கு வந்தது.

                 

                தன் ரசனை என்னும் கண்ணாடியை கழட்டி வைத்துவிட்டு பார்த்தவளுக்கு அந்த கட்டுமஸ்தான உடல் அருகே தெரிய, உடனே அங்கிருந்து தப்பித்து எழ முயன்றாள்.

                 

                அவள் முயற்சி அவனிடம் பலிக்குமா என்ன?

                 

                ஒரே பிடியில் மீண்டும் அந்த பஞ்சனையிலேயே விழச்செய்தவன், அவளின் பார்வையோடு தன் பார்வையை இணையச் செய்தான்.

                 

                இப்போது தான் அவன் முகத்தை முழுமையாக காண்கிறாள் பெண்ணவள்.

                 

                அவன் அவனே! சர்வஜனன்!

                 

                அதிர்ந்த பாவனையை முகத்தில் ஏற்றியபடி, “ச…ர்…வ…ஜ…ன…ன்…” என்று ஒவ்வொரு எழுத்தாக அவள் உச்சரிக்க, “ஆமா வனி, உன்னோட சர்வா தான், இந்த சர்வஜனன்!” என்று கூறியவன், அவள் மீது படர ஆரம்பித்தான்.

                 

                ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவளுக்கு, அவன் செயல் மேலும் பதட்டத்தை தர, எப்படி தப்பிப்பது என்று தெரியாமல், கண்களை மூடி, தன்மீது உலா வரும் அவன் கைகளுக்கு அணைகட்டி… ஒரு பெரிய போராட்டத்திற்கு பிறகு ஒரு வேகத்துடன் எழுந்து கண்களை திறக்க, அவள் இருந்ததோ அவளின் அறை!

                 

                “ச்சீ இப்படி ஒரு கனவா!” என்று மெல்ல முணுமுணுத்தவளுக்கு, இன்னமும் அவன் கரங்களின் வெம்மையை உணர்வது போன்றே தோன்ற, பரபரவென்று தன் மேனியை தேய்த்துக் கொண்டாள்.

                 

                அந்த சத்தத்தில், அரை தூக்கத்திலிருந்த பிரத்யூஷா, “இன்னைக்கும் ஆரம்பிச்சுட்டியா? சத்தம் போடாம படுத்து தூங்கு சஞ்சு.” என்று உளறிவிட்டு தன் தூக்கத்தை தொடர, சஞ்சீவனியோ, “இனி எங்க தூங்குறது?” என்று ஒரு பெருமூச்சுடன், தான் எப்போதும் நாடும் ஓவியத்தின் துணையை இப்போதும் நாடினாள்.

                 

                அவள் கைவண்ணத்தில் அழகாக உருவானது பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் அந்த நந்தவனத்தின் ஓவியம்.

                 

                சஞ்சீவனியை கனவிலும் தொல்லை செய்தவனும் அங்கு தூக்கத்தை தொலைத்து தான் இருந்தான், அவன் கைகளில் கிடைத்த மற்றொரு வழக்கினால்!

                 

                மாயம் தொடரும்…

                  The post பிறை சூழ் மாயம் – 3 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                  ]]>
                  https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/feed/ 0 17829
                  பிறை சூழ் மாயம் – 2 https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/#respond Fri, 03 May 2024 13:43:28 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/ பிறை 2   ‘நம்ம கனவுல பார்த்த கண்ணும் அவரோட கண்ணும் ஒண்ணா? ஒருவேளை, நிஜத்துல பார்த்ததை கனவோட அட்டாச் பண்ணி பார்க்குறேனோ? இல்ல, கனவுல பார்த்த கண்களை அவருக்கு இருக்க மாதிரி கற்பனை பண்றேனா? ஐயோ, மண்டை குழம்பி கடைசில பைத்தியமாவே ஆகிடப்போறேன்!’ என்று சஞ்சீவனி மனதிற்குள் புலம்பிக் கொண்டிருக்க, “நீ எங்க டி பைத்தியமாவ? உன்னை இப்படி உட்கார வச்சு சுத்தி நின்னு பார்த்துட்டு இருக்கோமே, நாங்க

                  The post பிறை சூழ் மாயம் – 2 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                  ]]>

                  Loading

                  பிறை 2

                   

                  ‘நம்ம கனவுல பார்த்த கண்ணும் அவரோட கண்ணும் ஒண்ணா? ஒருவேளை, நிஜத்துல பார்த்ததை கனவோட அட்டாச் பண்ணி பார்க்குறேனோ? இல்ல, கனவுல பார்த்த கண்களை அவருக்கு இருக்க மாதிரி கற்பனை பண்றேனா? ஐயோ, மண்டை குழம்பி கடைசில பைத்தியமாவே ஆகிடப்போறேன்!’ என்று சஞ்சீவனி மனதிற்குள் புலம்பிக் கொண்டிருக்க, “நீ எங்க டி பைத்தியமாவ? உன்னை இப்படி உட்கார வச்சு சுத்தி நின்னு பார்த்துட்டு இருக்கோமே, நாங்க தான் பைத்தியமாவோம்.” என்றாள் பிரத்யூஷா.

                   

                  அப்போது தான் இறுதி வரியை சத்தமாக சொல்லி விட்டதை உணர்ந்த சஞ்சீவனி சமாளிப்பாக இளித்து வைத்தாள்.

                   

                  “அக்கா, இன்னைக்கும் கனவா? கனவு கலைஞ்சு எழுந்ததும், கீழ இருந்தீங்களா, இல்ல பெட்ல இருந்தீங்களா?” என்று நக்கலாக கேட்டாள் ஸ்டெஃபி, அவர்களின் ‘சஷா கஃபே’யில் தோழியர் இருவருக்கும் உதவியாளினியாக இருப்பவள்.

                   

                  “அட சும்மா இரு ஸ்டெஃபி. அக்கா… அக்கா… கனவுல வேர்உல்ஃப்பா வந்துச்சு? என்ன பண்ணுச்சு அது? உங்களை கடிச்சுடுச்சா என்ன? அது கடிச்சா நீங்களும் வேர்உல்ஃப்பா மாறிடுவீங்களோ?” என்று பயத்துடன் கேட்டாள் நஸ்ரின். இவள் ஸ்டெஃபிக்கு உதவியாளினி!

                   

                  “பிரத்யூ, தயவுசெஞ்சு இதுங்க ரெண்டையும் அங்குட்டு இழுத்துட்டு போ. என்னை வேர்உல்ஃப்பா மாத்துற வரை விடமாட்டாங்க போல.” என்று விட்டால் அழுதுவிடுபவள் போல கூறினாள் சஞ்சீவனி.

                   

                  “இங்க என்ன எங்க வாயை பார்த்துட்டு இருக்கீங்க? போய் கஸ்டமரை கவனிங்க.” என்று பிரத்யூஷா சத்தம் போட, “க்கும், அப்படியே கூட்டம் அலைமோதுது, நாங்க போய் கவனிக்க. இருக்குறது ஒரே ஒரு ஜோடி, அதுவும் கோல்ட் காஃபியை எதுவுமே செய்யாம கோல்டஸ்ட் காஃபியா மாத்துறது எப்படின்னு அரை மணி நேரமா ஆராய்ச்சியில இருக்காங்க. இதுல நாங்க போய் அவங்க உருகி வழியுறதை கவனிக்கணுமா?” என்று  ஸ்டெஃபி அலுத்துக்கொண்டாள்.

                   

                  இருவரையும் சமாளித்து அனுப்பவே பிரத்யூஷா தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியதாக இருந்தது.

                   

                  அதன்பிறகு சஞ்சீவனியை கவனித்தால், அவள் மீண்டும் தனக்குள் மூழ்கிப் போனவளாக இருந்தாள். அவளை அப்படி பார்க்க பிரத்யூஷாவிற்கு கவலையாக இருந்தது.

                   

                  சிறு வயதிலிருந்தே, தோழியை தன் பாதுகாப்பிலேயே வைத்து வந்தவளுக்கு, ஏதோ தவறாக நடக்கப்போவதாக இப்போதெல்லாம் அடிக்கடி தோன்றுகிறது.

                   

                  அதன் காரணமாகவே அவளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பல கேள்விகளை கேட்டு, அதற்கு வம்படியாக பதிலையும் பெற்று கொள்கிறாள் பிரத்யூஷா.

                   

                  இப்படியிருக்க, அவளின் பெருங்கவலையாக சமீபத்தில் இருப்பது, சஞ்சீவனி கனவைக் கண்டு பயந்து எழுவது தான்.

                   

                  அவளின் கனவு தொல்லை கடந்த ஒரு வருடமாக தான் இருந்து வருகிறது. இந்த ஒரு வருடத்தில் எத்தனையோ முறை அவளை மருத்துவமனை அழைத்தும், வர மறுத்துவிட்டாள் சஞ்சீவனி.

                   

                  இம்முறை கண்டிப்பாக அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்று தீர்மானித்தவளாக தோழியின் தோள் மீது கைவைத்தாள் பிரத்யூஷா.

                   

                  “சஞ்சு, என்கிட்ட எதையாவது மறைக்கிறியா?” என்று பிரத்யூஷா வினவ, ஒருநொடி அந்த தழும்பை பற்றி சொல்லி விடலாமா என்று எண்ணிய சஞ்சீவனி, தோழியின் முகத்தில் தெரிந்த கவலை ரேகையை பார்த்துவிட்டு, “ச்சேச்சே, அதெல்லாம் ஒன்னுமில்ல பிரத்யூ. ஒரு சின்ன கன்ஃப்யூஷன். அதான் யோசிச்சுட்டு இருந்தேன். நீ ஒன்னும் வொரி பண்ணிக்காத. ஐ’ம் ஆல்ரைட்.” என்று சமாளித்தாள்.

                   

                  “அப்படி என்ன கன்ஃப்யூஷன்?” என்றவள் நினைவு வந்தவளாக, “ஆமா, அந்த போலீஸ் முன்னாடி ஏன் அப்படி பேந்த பேந்த முழிச்சுட்டு இருந்த? அவரை இதுக்கு முன்னாடி பார்த்துருக்கியா என்ன?” என்றாள் பிரத்யூஷா.

                   

                  மீண்டும் அவன் நினைவை தோழியே ஏற்படுத்திவிட, மிகவும் சிரமப்பட்டு அதில் மூழ்கிவிடாமல் இருக்க முயன்றாள் சஞ்சீவனி.

                   

                  பிரத்யுஷாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சமாளிக்க பார்க்க, “இப்போ இதுக்கு உண்மையை தான் சொல்லணும் சஞ்சு.” என்று கறாராக கூறினாள் பிரத்யூஷா.

                   

                  அதற்கு மேல் மறைக்க விரும்பாதவளாக, அவள் கனவில் கண்ட அந்த பழுப்பு நிறக்கண்கள் அப்படியே விபத்து நடந்த இடத்தில் பார்த்த காவல்காரனுக்கு இருந்ததை பிரத்யூஷாவிடம் விலாவரியாக கூறினாள் சஞ்சீவனி.

                   

                  “ப்பூ, இவ்ளோ தானா? நான் கூட என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்!” என்று பிரத்யூஷா சாதாரணமாக கூற, “பிரத்யூ, என்ன இவ்ளோ சாதாரணமா சொல்லிட்ட? நான் இங்க எவ்ளோ குழப்பத்துல இருக்கேன் தெரியுமா?” என்றாள் சஞ்சீவனி.

                   

                  “அட சஞ்சு ரிலாக்ஸா இரு. அந்த கனவுனால ரொம்ப பயந்துருப்ப போல, அதான் நீ நேர்ல பார்த்த ஒருத்தரை கனவோட கம்பேர் பண்ணி பார்த்துருக்க.” என்று கூறிய தோழியை இடைமறித்தவள், “அப்போ நான் கனவுலயிருந்து முழிச்சதும் முதல்ல பார்த்தது உன்னை தான. அப்போ உன் கண்ணு தான ஹேசல் கலர்ல தெரிஞ்சுருக்கணும்.” என்றாள்.

                   

                  “நான் உனக்கு ரொம்ப பார்த்து பழகுன ஆளு சஞ்சு. புதுசா ஒருத்தரை பார்த்ததும், அதுவும் அவருக்கும் ஹேசல் ஐஸ் இருந்ததும் உன்னை அப்படி கம்பேர் பண்ண வச்சுருக்கலாம். ஸீ, நீ கனவுல வேர்உல்ஃபை மனுஷ வடிவதுத்துல பார்க்கவே இல்ல. அப்பறம் எப்படி அவரு கூட லிங்க் பண்ற?” என்றாள் பிரத்யூஷா.

                   

                  “நீ சொல்றதும் சரி தான். ஆனா, நான் ஏன் அப்படி யோசிச்சேன்னு தான் தெரியலையே!” என்று மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே சஞ்சீவனி வந்து நிற்க, “எம்மா தாயே, ஆளை விடு. நீ தனியாவே புலம்பிக்கோ.” என்று பிரத்யூஷா அங்கிருந்து நகர முற்பட, அவளின் கைப்பிடித்து தடுத்த சஞ்சீவனியோ, “சரி, நீ ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிட்டதால, இப்போதைக்கு அதை பத்தி யோசிக்காம வேலையை பார்க்கலாம்னு இருக்கேன்.” என்று கண்ணடித்தாள்.

                   

                  அவள் நினைப்பதெல்லாம் நடந்து விடுமா என்ன?

                   

                  அவளை அந்நினைவிலிருந்து  வெளியே வரவிடக்கூடாது என்று விதி கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் போலும், அவர்களின் ‘கஃபே’ கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் சர்வஜனன்.

                   

                  *****

                   

                  சில மணி நேரங்களுக்கு முன்னர்…

                   

                  தன் மீது மோதிய சஞ்சீவனியை கண்டுகொள்ளவெல்லாம் சர்வஜனனிற்கு அவகாசம் இல்லை. இவ்வளவு ஏன், அந்த வழக்கின் தீவிரத்தில், அவளை தற்காலிகமாக மறந்து போனான் என்றே கூறலாம்.

                   

                  சரவணனிடம் அந்த காலடி தடங்களை ஆராய சொல்லியவன் மேலிடத்திற்கும் தகவலை சேர்ப்பித்தான்.

                   

                  அதன்பிறகு இறந்தவரின் உடலை பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, சற்று இலகுவாக அமர்ந்தவனின் அலைபேசி ஒலியெழுப்பி அவனை கவனிக்க சொன்னது.

                   

                  அவனுக்கு தற்சமயம் நெருங்கிய உறவென்று இருக்கும் அவன் தங்கை ரோஷினி தான் அழைத்திருந்தாள்.

                   

                  இதுவரை எவருக்கும் காட்டிராத மென்புன்னகையுடன் அந்த அழைப்பை ஏற்றான் சர்வஜனன்.

                   

                  “ஹலோ அண்ணா, என்ன பண்ணிட்டு இருக்க? சாப்பிட்டியா?” என்று தங்கையின் குரல் உற்சாகமாக ஒலிக்க, அப்போது தான் உணவே உண்ணவில்லை என்ற நினைவு எழுந்தது.

                   

                  அதைக் கூறினால் கண்டிப்பாக அவள் கோபப்படுவாள் என்பதை அறிந்து, பேச்சை திசை திருப்ப முயன்றான்.

                   

                  “ரோஷி மா, என்ன ஜாலியா பேசுற? உன் புருஷன் பக்கத்துல இல்லயா?” என்று சர்வஜனன் வினவ, “இங்க தான் மச்சான் இருக்கேன்.” என்றான் ரோஷினியின் கணவன் ரோஹித்.

                   

                  அதற்கு மேல் இருவரையும் பேச விடாதவளாக, “அண்ணா, இந்த முறை ஊருக்கு வரப்போ நான் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடுவேன். என் குழந்தை பிறக்குறப்போ மாமாவோட அத்தையும் இருக்கணும்.” என்று கூற, பேச்சை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட, சற்று தீவிரமான குரலில், “ரோஹித், கொஞ்சம் அஃபிஷியலா பேசணும்.” என்றான்.

                   

                  எப்போதும் நடக்கும் நிகழ்வென்பதால், “அப்போ நீங்க பேசுங்க, நான் தோசை சுடப்போறேன்.” என்று கழண்டு கொண்டாள் ரோஷினி.

                   

                  அவள் சென்றதும், “சொல்லு சர்வா, என்கிட்ட தனியா ஏதாவது சொல்லணுமா?” என்று வினவ, மச்சானாகிப் போன நண்பனின் புரிதலில் அவனை மனதிற்குள் மெச்சிக் கொண்டான். “இப்போ ரோஷினி இங்க வரது சேஃப் இல்ல ரோஹித்.” என்றான்.

                   

                  “என்னடா இப்போ இப்படி சொல்ற? அவ ஒருவாரமா ஊருக்கு போறேன். அண்ணனோட இருக்கப்போறேன்னு ரொம்ப ஆர்வமா இருக்கா. இப்போ போய், ‘நீ போகக்கூடாது’ன்னு எப்படி சொல்ல?” என்று ஆதர்ஷ கணவனாக ரோஷித் சங்கடப்பட, “இங்க இருக்க சிஷுவேஷன் அப்படி ரோஹித்.” என்ற சர்வஜனன் நடந்ததை அவனுக்கு விளக்கினான்.

                   

                  “அப்போ இது நார்மல் அனிமல் அட்டாக் இல்லன்னு நீ சந்தேகப்படுறியா சர்வா?” என்று ரோஹித் வினவ, “அஃப்கோர்ஸ்டா, இஃப் பாசிபில், நீ மட்டும் வா. இதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணனும்.” என்றவன், தங்கையின் நிலையை அப்போது தான் உணர்ந்தவனாக, “சாரி டா, இந்த சிஷுவேஷன்ல உன்னை இங்க அலைய விடுறதுக்கு.” என்று இழுத்தான்.

                   

                  “சில் மேன். அதெல்லாம் உன் தங்கச்சி ஒரு நாளைக்கு ஒன்னும் கரைஞ்சுட மாட்டா. நீ ஃபிரீயா விடு.” என்று நண்பனிடம் கூறியவன், அடுத்த நாள் வருவதாக வாக்களித்தான்.

                   

                  இருவரும் அழைப்பை துண்டிக்கும் நேரம், அலைபேசியை பிடுங்கிய ரோஷினி, “இப்பவே போய் சாப்பிட்டுட்டு வேலையை பாரு அண்ணா.” என்று செல்ல கட்டளையை விதித்தாள்.

                   

                  தங்கையின் கட்டளையை மீறாதவனாக சஷாவிற்குள் நுழைந்தான். அதுவும், காவல் நிலையத்திற்கு அருகில் இருக்கும் கஃபே என்பதாலும் தான்!

                   

                  அவன் உள்ளே நுழைந்த சமயம், பிரத்யூஷாவிடம் வம்பு வளர்த்து, அவள் வெளியே விரட்டி விட, சஞ்சீவனியும் சிரித்துக் கொண்டே உள்ளறையிலிருந்து வெளியே வந்தாள்.

                   

                  அப்போது, “எக்ஸ்க்யூஸ் மீ, ஒன் வென்னிலா லாட்டே அண்ட் ஒன் கோல்ட் காஃபி பிளீஸ்.” என்ற கம்பீரக்குரல் அவளை தடுத்து நிறுத்த, அக்குரல் நன்கு பரிச்சயப்பட்டது போல பட்டென்று அவளின் மூளைக்கு தெரிந்து போனது வந்தது அவனென்று.

                   

                  அங்கு வேறு யாரும் இல்லாததால், அவனை கவனிக்க வேண்டிய பொறுப்பும் அவளையே சேர, ஒருவித பதட்டத்துடன், அவனை நிமிர்ந்தும் பார்க்காமல், “டென் மினிட்ஸ் சார்.” என்றாள்.

                   

                  அவள் சாதாரணமாக இருந்திருந்தால், அவனும் கடந்து சென்றிருப்பானோ என்னவோ. அவளின் பதட்டமான உடல்மொழியை கண்டு கொண்டவன், சிறு புருவச்சுழிப்பை மட்டும் வெளிப்படுத்தி, “இட்ஸ் ஓகே. ஐ வில் வெயிட்.” என்று அவள் மறுமொழி கொடுப்பதற்கு இடம் கொடுக்காதவனாக, அலைபேசியை காதில் வைத்துக் கொண்டு அதே இடத்தில் நின்றான்.

                   

                  ‘ஐயையோ, இங்கேயே நிக்க போறானா!’ என்று அதிர்ந்தவள், அவனிடம் அதை சொல்லவும் முடியாமல், தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

                   

                  மனதிற்குள் பலவித கேள்விகள் எழ, அதற்கு இடையே கைகள் அதன் வேலையை சரியாக செய்து வந்தன.

                   

                  அவள் கூறிய பத்து நிமிடங்களில் இரு பானங்களையும் தயாரித்தவள், அப்போதும் குனிந்த தலை நிமிராமல் அவனிடம் நீட்ட, அவனோ அதை வாங்காமல் இருந்தான்.

                   

                  ‘என்னடா இது?’ என்ற கேள்வியுடன் அனிச்சை செயலாக அவனை நிமிர்ந்து பார்க்க, அதற்காகவே காத்திருந்ததை போல, அவள் கையிலிருந்ததை வாங்கிக் கொண்டான்.

                   

                  அப்போது தான் அவனை நேருக்கு நேர் பார்த்ததை உணர்ந்தவள், சட்டென்று டிஸ்யூ பேப்பரை அவனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

                   

                  அவள் தன்னை நிமிர்ந்து பார்த்ததிலிருந்து, அங்கிருந்து வேகமாக நகர்ந்தது வரை தன் கண்களால் அளவெடுத்துக் கொண்டிருந்தவனுக்கு அவளை பார்த்த நினைவு எழ, ‘இவகிட்ட ஏதோ வித்தியாசமா தெரியுது. அப்பவும் சரி, இப்பவும் சரி, எதுக்கு என்னை பார்த்து பயந்து ஓடனும்? ஹ்ம்ம், இதையும் என்னன்னு கண்டுபிடிக்குறேன்.’ என்று சொல்லிக் கொண்டான்.

                   

                  அவனிடமிருந்து தப்பித்து சென்றவளோ, ‘என்னை தேடி தான் வந்துருப்பானோ?’ என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

                   

                  *****

                   

                  சரியாக சர்வஜனன் தன் வயிற்று தேவையை கவனித்துவிட்டு வெளியே வந்த சமயம், அவனுக்கு அந்த தகவல் வந்தது.

                   

                  பிரேதப்பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்ட இறந்தவரின் உடல் காணவில்லை என்பது தான் அந்த தகவல்!

                   

                  மாயம் தொடரும்…

                    The post பிறை சூழ் மாயம் – 2 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                    ]]>
                    https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/feed/ 0 17822
                    பிறை சூழ் மாயம் 1 https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1/#respond Thu, 02 May 2024 13:29:02 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1/ பிறை 1   இடம் : நளிர்புறம் (கற்பனை ஊர்) நேரம் : நிலா காயும் வேளை…   தன் சுகமான உறக்கத்திற்கு ஊறு விளைந்ததால் மெல்ல கண் மலர்த்தி பார்த்தாள் அவள். எப்போதும் தலைக்கு மேலே தொங்கும் ஜொலிக்கும் நட்சத்திரங்களுக்கு பதில் கும்மிருட்டாக இருந்த வானத்தையே கண்டாள்.   உண்மையில் அது வானம் என்றெல்லாம் தெரியவில்லை. இருட்டாக இருந்ததாலும், இரவின் பனியை உணர்ந்ததாலும் அவளின் மூளை அப்படி எடுத்துக்கொண்டது!

                    The post பிறை சூழ் மாயம் 1 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                    ]]>

                    Loading

                    பிறை 1

                     

                    இடம் : நளிர்புறம் (கற்பனை ஊர்)

                    நேரம் : நிலா காயும் வேளை…

                     

                    தன் சுகமான உறக்கத்திற்கு ஊறு விளைந்ததால் மெல்ல கண் மலர்த்தி பார்த்தாள் அவள். எப்போதும் தலைக்கு மேலே தொங்கும் ஜொலிக்கும் நட்சத்திரங்களுக்கு பதில் கும்மிருட்டாக இருந்த வானத்தையே கண்டாள்.

                     

                    உண்மையில் அது வானம் என்றெல்லாம் தெரியவில்லை. இருட்டாக இருந்ததாலும், இரவின் பனியை உணர்ந்ததாலும் அவளின் மூளை அப்படி எடுத்துக்கொண்டது!

                     

                    சட்டென்று உண்டான அசாதாரண சூழலின் காரணமாக தூக்கத்திற்கு சொக்கிய கண்கள் நன்றாக விழித்துக்கொள்ள, தன் பெரிய கண்களை சுழற்றினாள்.

                     

                    எங்கும் இருள் மயமாக இருக்க, அந்த குளிரிலும் பெண்ணவளுக்கு வியர்க்க துவங்கியது.

                     

                    அப்போது அவள் பின்கழுத்தில் சூடான மூச்சுக்காற்றை உணர, வெளியே குதித்து விடுமளவிற்கு துடித்த இதயத்தை மெல்ல கட்டுப்படுத்தி பின்னே திரும்பிப் பார்த்தாள்.

                     

                    அவளின் கண்களுக்கு வெகு அருகில் மின்னிய அந்த பழுப்பு நிறக் கண்களை கண்டதும் தூக்கிவாரிப்போட, அதே வேகத்தில் பின்னே சாய்ந்தாள்.

                     

                    அந்த கண்களுக்கு கீழே வெள்ளையும் சிவப்புமாக தெரிந்த கோரப்பற்கள் அடுத்து அவளின் பார்வையில் விழ, பயத்தில் கத்துவதற்கு கூட சத்தம் எழும்பவில்லை அவளுக்கு.

                     

                    அப்போதென்று பார்த்து, வானத்தில் பளீரென்று முதல் மின்னல் மின்ன, அந்த வெளிச்சத்தில் எதிரே தெரிந்த முழு உருவத்தை கண்டவளின் குரலுக்கு இம்முறை தொண்டைக்குழி வழிவிட்டது போலும். அவளின் குரல் அந்த இடத்தையே அதிரச் செய்யும் அளவிற்கு இருந்தாலும், அதே சமயம் ஒலித்த இடியின் சத்தத்தில் அமிழ்ந்து மறைந்து போனது.

                     

                    என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தவளின் மூளை மந்தமாக விழித்துக் கொண்டு அங்கிருந்து நகருமாறு கட்டளை விதிக்க, அதை செயல்படுத்த எண்ணி கால்களை அசைத்தால், அவை எதிலோ மாட்டியிருந்தன.

                     

                    ‘ஐயோ, நான் சாகப்போறேனா?’ என்று எண்ணி பயந்தபடி அங்கும் இங்கும் அசைந்தவள், அடுத்த நிமிடம் எதனுள்ளோ விழுவது போலிருக்க, “ஐயையோ, நான் கீழ விழுறேன். என்னைக் காப்பாத்துங்க!” என்று கத்தினாள்.

                     

                    திடீரென்று அந்த இடம் முழுவதும் வெளிச்சம் பரவ, “ஏன்டி இப்படி டெயிலி கனவு கண்டு என் உயிரை வாங்குற? நிம்மதியா ஒரு ராத்திரியை கழிக்க முடியுதா? ஹாவ்… ரத்தக்காட்டேரி மாதிரி இப்படி நடுராத்திரி கத்திட்டு இருக்க!” என்றவாறே உறக்கம் சுமந்த விழிகளுடன் வந்து சேர்ந்தாள் பிரத்யூஷா.

                     

                    “கீழ விழுந்தவளுக்கு கை கொடுக்காம இப்படி திட்டிட்டு இருக்கியே, உனக்கு கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா பிரத்யூ?” என்று நம் கதையின் நாயகி சஞ்சீவனி வினவ, “ஒருநாள் விழுந்தா கை கொடுத்து தூக்கி விடலாம். இப்படி ஓயாம விழுந்தா எல்லாம் தூக்க முடியாது. அது சரி இன்னைக்கு என்ன, அந்த ரத்தக்காட்டேரி கனவா, இல்ல ஜாம்பி கனவா?” என்று பேசியபடி தன் ஒரே தோழியை தூக்கி விட்டாள்.

                     

                    “இன்னைக்கு வேர்உல்ஃப் கனவு பிரத்யூ.” என்று ஆரம்பித்து தன் கனவு முழுவதையும் சொல்லி முடித்தாள்.

                     

                    “அந்த ஐஸ் இருக்கே… ப்பா, அவ்ளோ பவர்ஃபுல் ஐஸ். மொத்த இடமும் கருப்பா இருந்தாலும் கூட, அந்த கண்ணுல இருந்து வந்த வெளிச்சம்… உஃப், பயமா இருந்தாலும், அழகா தான் இருந்துச்சு.” என்று சஞ்சீவனி கூற, “ஹும்ஹும், அந்த இங்கிலிஷ் சீரிஸ் பார்த்து பார்த்து இப்படி தான் வேம்பயர்ஸ் எல்லாரும் அழகா இருக்காங்க, வேர்உல்ஃப் கண்ணு அழகா இருக்குன்னு பினாத்திட்டு இருக்க. இதெல்லாம் சரி இல்ல சொல்லிட்டேன்.” என்றாள் பிரத்யூஷா.

                     

                    அதைக்கேட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்த சஞ்சீவனியோ, “ஆனாலும், வேர்உல்ஃப்ஸ் ஸ்மெல் பேட். எப்படி அதோட எல்லாம் குடும்பம் நடத்துறது?” என்று உதட்டைப் பிதுக்கினாள்.

                     

                    “அடிப்பாவி, உண்மையை சொல்லு, ஏதாவது வேர்உல்ஃபை பார்த்து மயங்கி தொலைஞ்சுட்டியா? நீ சரியே இல்லடி.” என்று பிரத்யூஷா புலம்ப, சஞ்சீவனி தான் அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

                     

                    ஒருவழியாக தோழியை சமாதானப்படுத்திவிட்டு, வேலைக்கு கிளம்ப ஆயத்தமானாள் சஞ்சீவனி.

                     

                    குளிக்கும்போது கூட தனக்கு வந்த கனவையும் தோழியிடம் கூறியதையும் நினைத்து சிரித்துக் கொண்டிருந்தவளின், நடுமுதுகில் நீர் பட சுர்ரென்று எரிய ஆரம்பித்தது.

                     

                    தன் கைகளை கொண்டு தடவி பார்த்தவளிற்கு லேசான தழும்பு தென்பட்டது. ‘இது எப்படி திடீர்னு வந்துச்சு? நமக்கு எதுவும் அடி படலையே!’ என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு, அனிச்சையாக கனவில் கீழே விழுந்தது நினைவிற்கு வந்தது.

                     

                    உடனே தலையை இடவலமாக அசைத்தவள், “ச்சேச்சே இல்ல, அது கனவு தான். எங்கயோ இடிச்சுருக்கேன். அது கூட தெரியாம இருந்துருக்கேன். அதான் தழும்பாகிருக்கும்.” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டாள்.

                     

                    மேலும், இதைப் பற்றி பிரத்யூஷாவிடம் கூறி, அவளை பதட்டமடைய செய்ய வேண்டாம் என்றும் எண்ணினாள்.

                     

                    காலை உணவை முடித்துக் கொண்டு இருவரும் ஒருவழியாக வேலைக்கு கிளம்பினர்.

                     

                    அவர்களின் வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளியிருந்த நகரின் மையப்பகுதியில் ‘சஷா கஃபே’ என்ற பெயரில் சிறிய கஃபேயை நடத்தி வருகின்றனர் தோழியர் இருவரும்.

                     

                    இவர்களை பற்றிக் கூற வேண்டுமென்றால், இருவரும் தற்சமயம் வரை ஒருவருக்கொருவர் துணையாக வாழ்ந்து வருகின்றனர். பிறந்த சிறிது நேரத்திலேயே அனாதை ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர் இருவரும்.

                     

                    ஆச்சரியம் என்னவென்றால், இருவரும் ஒரே இடத்திலிருந்தே கண்டெடுக்கப்பட்டிருந்தனர். அப்போதிலிருந்து இப்போது வரை, இருவரும் சேர்ந்தே இருந்து வருகின்றனர்.

                     

                    படித்து முடித்த பின்னர், தனி வீடெடுத்து, வங்கியில் லோன் எடுத்து, தங்களின் கனவான கஃபேயை திறந்து இதோ இந்த இடத்தில் நிற்கின்றனர்.

                     

                    ஆம், நடுவீதியில் பலருக்கு நடுவே தங்களின் டியோவை நிறுத்தி அடிக்கடி கடிகாரத்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்னே பலர் வாகனங்களை நிறுத்தியிருந்ததால், என்ன நடக்கிறது என்று சரியாக தெரியவில்லை. சிலபல போலீஸ் தலைகள் மட்டும் தெரிந்தன. ஏதோ விபத்து என்ற செய்தி மட்டும் பகிரப்பட்டிருந்தது.

                     

                    காலையில் நடந்த களேபரத்தில் ஏற்கனவே வேலைக்கு செல்ல தாமதமாகியிருக்க, இதில் செல்லும் வழியில் ஏற்பட்டிருந்த விபத்து வேறு தோழிகள் இருவருக்கும் எரிச்சலை உண்டு பண்ணியிருந்தது.

                     

                    “எல்லாம் உன்னால தான் டி. காலையிலேயே எக்குத்தப்பா கனவு கண்டு கத்தி… ப்ச், உன்னால தான் லேட்டு.” என்று தன்னருகே நின்றிருந்த தோழியை பிரத்யூஷா இடிக்க, வலித்த கையை தேய்த்துக் கொண்டே அவளை திரும்பிப் பார்த்தாள் சஞ்சீவனி.

                     

                    இரண்டு நொடிகள் என்றாலும் அவளின் கண்சிமிட்டா பார்வையில், “இப்போ எதுக்கு என்னை இப்படி வச்ச கண்ணு எடுக்காம பார்த்துட்டு இருக்க?” என்று எரிச்சலாக வினவினாள் பிரத்யூஷா.

                     

                    “உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே. சீக்கிரம் வயசாகுற மாதிரி ஃபீலிங் இருக்கா என்ன?” என்று சம்பந்தமே இல்லாமல் சஞ்சீவனி வினவ, புருவம் சுருங்க அவளை நோக்கித் திரும்பினாள் பிரத்யூஷா.

                     

                    கண்களின் வழியே அவளின் கேள்வியை புரிந்து கொண்டவளாக, “இல்ல இப்போ ரீசண்ட்டா நீ எனக்கு அம்மாவா மாறிட்டு வர மாதிரி எனக்கு தோணுது. நீ என்ன நினைக்குற?” என்று தோளை குலுக்கியபடி வினவினாள் சஞ்சீவனி.

                     

                    “இது மட்டும் ரோடா இல்லாம இருந்துச்சுன்னா, உன்னை புரட்டி போட்டு மிதிக்கலாம்னு நினைக்குறேன் சஞ்சு.” என்று பல்லைக் கடித்தபடி கூற, “கூல் கூல் பிரத்யூ.” என்று தோழியை சமாதானப்படுத்தினாள்.

                     

                    அப்போது போக்குவரத்து சீராக ஒவ்வொரு வாகனமாக காவலர்கள் ஏற்படுத்தியிருந்த சிறுபாதையில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. விபத்து நடந்த பகுதி என்று தெரிவிக்கும் வகையில் தரையை நனைத்திருந்தது இரத்தம்.

                     

                    “திடீர்னு அனிமல் அட்டாக்னு சொல்றாங்க.” போன்ற உரையாடல்கள் அவளின் செவியில் விழுந்தன.

                     

                    அவற்றை எல்லாம் கண்டும் கேட்டும், ஒரு பெருமூச்சுடன் எதேச்சையாக அவள் திரும்ப, அவள் கண்ணில் நொடிக்கும் குறைவாக விழுந்தவனைக் கண்டு ஸ்தம்பித்து நின்று விட்டாள்.

                     

                    அவள் வாயிலிருந்து வெளிவராத குரல் மனதிற்குள் மட்டும், ‘இது அவன் தானா?’ என்றது.

                     

                    *****

                     

                    சில நிமிடங்களுக்கு முன்…

                     

                    காக்கி பேண்ட்டும், குளிருக்கு இதமாக ஜெர்க்கினும் அணிந்து, மற்றவர்களை நொடியினில் அவதானிக்கும் கண்களை மறைத்த குளிர் கண்ணாடியுடன் அங்கு பிரசன்னமானான் சர்வஜனன், அந்த பகுதிக்கு புதிதாக மாற்றலாகி வந்திருக்கும் காவல்துறை மேலாளர்.

                     

                    அத்தனை நேரம் மந்தமாக இருந்த விபத்து பகுதி, அவன் வந்ததுமே பரபரப்பாக மாறியது.

                     

                    “சரவணன், எனி லீட்ஸ்?” என்று வந்தவுடன் அவன் வினவ, “சார், இதுவரை ஃபூட் பிரின்ட்ஸோ வேற எந்த தடயமும் கிடைக்கல. நம்ம டீம் பக்கத்துல இருக்க இடத்துலயும் தேடிட்டு இருக்காங்க. விக்டிம் பாடில இருக்க காயங்களை பார்க்கும்போது ஏதோ மிருகம் தாக்குன மாதிரி தான் தெரியுது.” என்று அந்த சரவணன் எனப்பட்டவன் கூற, அவன் பேச்சில் கவனம் இருந்தாலும், பார்வையோ சுற்றிலும் அலசிக் கொண்டு தான் இருந்தது.

                     

                    “தடயங்களை இன்னும் தேடிட்டு இருக்கீங்க, அனிமல் அட்டாக்கான்னு கன்ஃபார்ம் பண்ணல. அப்போ, இதுவரைக்கும் எந்த உருப்படியான வேலையும் நடக்கல அப்படி தான?” – மெதுவாக என்றாலும் அழுத்தமாக ஒலித்தது அவனின் குரல்.

                     

                    அதில் அங்கிருந்தவர்கள் கைகளை பிசைய, அவனோ அதைக் கண்டு கொள்ளாமல், அவசர ஊர்தியில் ஏற்றப்பட்டிருந்த சடலத்தை உற்று பார்த்து, “இட்ஸ் சம்திங் எல்ஸ்.” என்று முனகினான்.

                     

                    “இந்த ரோட்டுல இதுக்கு முன்னாடி இப்படி அனிமல் அட்டாக்ஸ் நடந்துருக்கா?” என்று அவன் வினவ, அங்கிருந்த மற்றொரு காவலர், “இல்ல சார். அப்படி எந்த ரிப்போர்ட்ஸும் இல்ல.” என்றார்.

                     

                    “ரிப்போர்ட்ஸ்? ஏதாவது ஒரு கேள்விக்காவது கன்ஃபார்ம் ஆன்சர்ஸ் உங்ககிட்ட இருக்கா? போய் லோக்கல்ஸ் கிட்ட விசாரிங்க.” என்றவனின் குரல் எரிச்சலில் தோய்ந்திருந்தது.

                     

                    அதில் அனைவரும் தங்களின் வேலையை கவனிக்க செல்ல, சர்வஜனனின் பார்வையோ சற்று தொலைவில் மழையினால் சகதியாக இருந்த மண்தரையில் தெரிந்த காலடித்தடத்தில் படிந்தது.

                     

                    *****

                     

                    அவனை அங்கு கண்டதும், என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே, “பிரத்யூ, நீ கொஞ்சம் முன்னாடி போய் வெயிட் பண்ணு.” என்று அவளின் பதிலை எதிர்பார்க்காமல் வாகனத்திலிருந்து இறங்கிவிட்டாள் சஞ்சீவனி.

                     

                    வாகனம் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்ததால், பிரத்யூஷாவினால் இடையில் வாகனத்தை நிறுத்தவும் முடியவில்லை.

                     

                    “இவளுக்கு இதே வேலையா போச்சு. வரவர விளையாட்டுத்தனம் ஜாஸ்தியாகிட்டே இருக்கு.” என்று புலம்பியபடி வாகனத்தை உருட்டிக் கொண்டிருந்தாள் பிரத்யூஷா.

                     

                    இத்தனை வசவுகளுக்கும் காரணமானவளோ, ‘அவனை’ பின்தொடர்ந்து ஏதோ கனவில் நடப்பவளை போல சென்று கொண்டிருந்தாள்.

                     

                    *****

                     

                    சர்வஜனன் அந்த காலடி தடத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். மண்தரையில் சிறிது தூரம் விலங்கின் காலடி தடம் போல பதிந்திருக்க, இறுதியில் இருந்த காலடித்தடம் மட்டும் மனித காலடித்தடம் போல இருந்தது. அதன் பிறகான பாதை பாறைகளினால் நிறைந்திருந்ததால் எவ்வித காலடித்தடமும் தென்படவில்லை.

                     

                    அந்த காலடித்தடங்களை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த சர்வஜனன், அதை விரிவாக ஆராய சொல்ல வேண்டுமென்று என்று நினைத்து திரும்ப, சரியாக அவன் பின்னே வந்து நின்றவளின் மீது மோதிக் கொண்டான்.

                     

                    அவன் வேகத்தில் கீழே விழப்போனவளை அனிச்சையாக தாங்கிக் கொண்டவனின் பார்வையில் முதலில் விழுந்தது என்னவோ, எதையோ சொல்லத்துடிக்கும் இதழ்கள் தான். பதட்டத்தில் உதட்டின் மீது வியர்வை துளிகள் அரும்பியிருக்க, அதைக் கண்டவன் மனதிலோ, அவளிடமிருந்து வார்த்தைகளை வாங்கி விடும் வேகம் ஊற்றெடுத்தது.

                     

                    அவளுக்கோ அந்த பழுப்பு நிறக்கண்களை அத்தனை அருகில் கண்டதில் நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டது.

                     

                    இருவருமே அவர்களின் அந்த நிலையை உணரவில்லை போலும்!

                     

                    அப்போது கேட்ட, “சஞ்சு…” என்ற குரலில் தான் இருவரும் சுயத்தை அடைந்து சட்டென்று விலகினர்.

                     

                    “இங்க என்னடி பண்ணிட்டு இருக்க?” என்ற பிரத்யூஷாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், எதிரே நின்றவனின் பார்வையையும் தாங்கிக் கொள்ள முடியாமல், தோழியை இழுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்தாள் சஞ்சீவனி.

                     

                    செல்லும் வழியெல்லாம், கேள்விகளால் துளைத்த தோழியை ஏதோ கூறி சமாளித்தவாறே சென்றவளை உற்று நோக்கியவனுக்கு, தன் பணி நினைவு வர, அதில் கவனத்தை திருப்பினான்.

                     

                    இந்த சந்திப்பு அவர்களின் வாழ்க்கையில் விதி ஆடப்போகும் ஆட்டத்தின் முதல் படி என்பது இருவருக்குமே அப்போது தெரியவில்லை.

                     

                    மாயம் தொடரும்…

                      The post பிறை சூழ் மாயம் 1 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                      ]]>
                      https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1/feed/ 0 17817