ரொமான்ஸ் Archives - தூரிகை தமிழ் நாவல்கள் https://thoorigaitamilnovels.com/category/ரொமான்ஸ்/ Thu, 09 May 2024 13:18:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.2.2 https://thoorigaitamilnovels.com/wp-content/uploads/2021/08/favicon-32x32-1.jpg ரொமான்ஸ் Archives - தூரிகை தமிழ் நாவல்கள் https://thoorigaitamilnovels.com/category/ரொமான்ஸ்/ 32 32 197060226 பிறை சூழ் மாயம் – 8 https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/#respond Thu, 09 May 2024 13:18:53 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/ பிறை 7   சர்வஜனன் மற்றும் சஞ்சீவனி இருவரும் பதட்ட மனநிலையில் இருக்க, அவர்களை நோக்கி வந்த சத்தத்தை முதலில் கவனிக்கவில்லை.   அந்த சத்தம் அவர்களை நெருங்கி வரும் வேளையில் தான் அதை கவனித்தான் சர்வஜனன். அது ஒரு அழுத்தமான காலடி சத்தம். நெருங்கி வர வர சத்தம் அதிகமாக கேட்க, அதற்கு மறுமொழியாக சஞ்சீவனியின் இதயத்துடிப்பும் அதிகரிக்க ஆரம்பித்தது.   அவளை திரும்பிப் பார்த்தவன், கையை வாயின்

The post பிறை சூழ் மாயம் – 8 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

]]>

Loading

பிறை 7

 

சர்வஜனன் மற்றும் சஞ்சீவனி இருவரும் பதட்ட மனநிலையில் இருக்க, அவர்களை நோக்கி வந்த சத்தத்தை முதலில் கவனிக்கவில்லை.

 

அந்த சத்தம் அவர்களை நெருங்கி வரும் வேளையில் தான் அதை கவனித்தான் சர்வஜனன். அது ஒரு அழுத்தமான காலடி சத்தம். நெருங்கி வர வர சத்தம் அதிகமாக கேட்க, அதற்கு மறுமொழியாக சஞ்சீவனியின் இதயத்துடிப்பும் அதிகரிக்க ஆரம்பித்தது.

 

அவளை திரும்பிப் பார்த்தவன், கையை வாயின் மீது வைத்து, “உஷ்!” என்றவன், அவளை சுற்றி கையை போட்டு ஆசுவாசப்படுத்தினான்.

 

அவர்கள் இருவரும் பெரிய பாறைக்கு பின்னே இருக்க, அந்த பாறைக்கு முன் ஐந்தடிக்கு புதர் மண்டிக்கிடந்தது.

 

அந்த சத்தம் இப்போது வெகு அருகில் கேட்க, இருவரும் கண்கள் மட்டும் பாறைக்கு மேலே தெரியுமாறு எட்டிப் பார்த்தனர்.

 

முதலில் அவர்களின் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. அந்த புதர் மறுபக்கத்தை மறைத்திருந்தது.

 

ஆனால், திடீரென்று ஒரு உறுமல் சத்தமும் அதை தொடர்ந்து ஒரு மனித தலையும் அந்த புதருக்கு மேலே தெரிய, இருவருமே அந்த நொடி அதிர்ந்து தான் போயினர்.

 

சஞ்சீவனியோ, உறுமல் சத்தத்திற்கே பயந்திருந்தவள், எங்கிருந்து முளைத்தது என்று தெரியாத வண்ணம் சட்டென்று தென்பட்ட மனித தலையைக் கண்டு கத்த வாயை திறக்க, அவளை சரியாக கணித்தவனாக, அவளின் வாயை மூடியிருந்தான் சர்வஜனன்.

 

அந்த மர்ம மனிதன் அங்கிருந்து சென்று இரண்டு நிமிடங்கள் கழித்து தான் இருவரும் சுயத்தை அடைந்திருந்தனர். அப்போது தான் அவளின் வாயிலிருந்தும் கையை எடுத்திருந்தான் அவன்.

 

உடனே, “அது… அவன்…” என்று சஞ்சீவனி பதட்டத்தில் திக்கியபடி பேச, “உஷ்! இங்க எதுவும் பேச வேண்டாம். முதல்ல இங்க இருந்து கிளம்புவோம்.” என்று அவளையும் இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

 

முக்கிய சாலை வரும் வரையிலும் இருவரும் வாய் திறந்து பேசிக் கொள்ளவில்லை. ஆனால், இருவரின் மனமும் பல்வேறு கேள்விகளால் நிரம்பியிருந்தன.

 

சஞ்சீவனி திக்பிரம்மை பிடித்ததை போலிருப்பதைக் கண்ட சர்வஜனன், அவளை உசுப்பி, “இந்த நேரத்துல நீ தனியா போக வேண்டாம். நானே டிராப் பண்றேன்.” என்றான்.

 

“இல்ல, நான் ஸ்கூட்டில போயிடுவேன்.” என்று சுற்றிலும் அவளின் வாகனத்தை தேட, அவள் கரத்தை பிடித்து தன்னைப் பார்க்கச் செய்தவன், “நீ இருக்க நிலைமைல உன்னை தனியா விட்டு, உனக்கு என்னாச்சுன்னு என்னால யோசிச்சுட்டு இருக்க முடியாது. இப்போ நீ என்கூட வர. புரியுதா?” என்று அவன் கூற, அவனின் கண்களிலேயே பார்வையை பதித்திருந்தவளின் தலை தன்னால் அசைந்தது.

 

அவனின் மகிழுந்தில் அவனருகே அமர்ந்திருந்தாலும், அவள் மனம் முழுவதும் சற்று முன்னர் பார்த்ததிலேயே நிலைத்திருந்தது. அவள் மட்டுமல்ல, அவனுமே அதையே நினைத்திருத்தான்.

 

அப்போது அவன் கவனத்தை ஈர்த்தது என்னவோ, சாலையின் மத்தியில் இருந்த உடல் தான்.

 

ஆம், அவன் மகிழுந்தின் ஹெட்லைட் வெளிச்சத்தில் அது ஒரு மனித உடல் என்பது தெரிந்துவிட்டது. ஆனால், என்ன நிலையில் இருக்கிறது என்பது தான் தெரியவில்லை.

 

அவன் மகிழுந்தை நிறுத்த, அப்போது தான் அவள் தன் நினைவிலிருந்து வெளிவந்தாள்.

 

‘என்னாச்சு’ என்பது போல் அவனை பார்த்து வைக்க, “உள்ளேயே இரு.” என்று கூறிவிட்டு அவன் இறங்கினான்.

 

அவன் கூறுவதை ஒரு முறை தான் கேட்பதாக எண்ணியிருந்தாள் போலும். இம்முறை அவன் பின்னிலேயே இறங்கியிருந்தாள்.

 

அவளை முறைத்துவிட்டு, கவிழ்ந்திருந்த உடல் அருகே சென்று திருப்பி பார்க்க, அது ஒரு பெண் என்பது தெரிந்தது. மேலும், உடலில் ஆங்காங்கு கீறல்களும், கையில் கடிபட்ட தடமும் இருப்பதைக் கண்டான்.

 

அத்தனை நேரம் சற்று விலகியே நின்றிருந்த சஞ்சீவனி, அந்த பெண்ணின் உடலை தழுவியிருந்த மேல் உடுப்பில் ‘சஷா கஃபே’ என்ற எழுத்துக்களை பார்த்ததும் பதட்டத்துடன் அருகே வந்தாள்.

 

அங்கு காயங்கள் பலவற்றை உடலில் தாங்கி மயங்கியிருந்த பெண்ணைக் கண்டு, “ஸ்டெஃபி…” என்று கத்தினாள்.

 

அவளின் கதறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பிப் பார்த்த சர்வஜனன், பின் இருக்கும் சூழ்நிலை உணர்ந்து, “வனி பிளீஸ், இப்போ உன் அழுகைக்கான நேரம் இல்ல. இவங்களை சீக்கிரமா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும். எவ்ளோ சீக்கிரம் போறோமோ, அவ்ளோ சீக்கிரம் இவங்களை காப்பாத்தலாம். நாமளும் ரொம்ப நேரம் இங்க இருக்க முடியாது.” என்று பலவற்றை கூறி ஒருவழியாக அவளை சமாதானப்படுத்தினான்.

 

பின் நேரத்தை விரயமாக்காமல், உடனே ஸ்டெஃபியை அவளின் துணை கொண்டு மகிழுந்தில் ஏற்றியவன், வாகனத்தையும் கிளப்பியபடி, தனக்கு தெரிந்த மருத்துவருக்கு தொடர்பு கொண்டு பேசினான்.

 

“ஹலோ ஆலிஸ், ஒரு எமர்ஜென்சி… விக்டிம் ஒரு பொண்ணு. அவங்க பாடில நிறைய காயங்கள் இருக்கு. ஐ ஃபீல் லைக் இட் இஸ் ஆன் அனிமல் அட்டாக். மத்ததை நேர்ல பேசுவோம். நாங்க வரதுக்குள்ள ட்ரீட்மெண்டுக்கான அரேஞ்மெண்ட்ஸ் பண்ணிடுறீங்களா? அண்ட் இது சீக்ரெட்டா இருக்கட்டும். உங்களுக்கே தெரியும், இது வெளிய தெரிஞ்சா, மீடியாவோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு. சோ பிளீஸ்…” என்று சர்வஜனன் பேசியபடி தன்னருகே இருந்தவளை பார்க்க, அவளோ பின்னிருக்கையில் கிடத்தப்பட்டிருந்த ஸ்டெஃபியை தான் அழுகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

மறுமுனையில் என்ன கூறப்பட்டதோ, “ஆமா, இதோ இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல ரீச்சாகிடுவோம்.” என்றபடி அழைப்பை துண்டித்தான்.

 

கூறியபடியே ஐந்து நிமிடங்களில் அவனின் மகிழுந்து அந்த மருத்துவமனையை அடைந்திருக்க, அங்கு ஸ்டெஃபிக்கான ஏற்பாடுகள் தயார் நிலையிலேயே இருந்தன.

 

முதலில் ஸ்டெஃபியின் காயங்களை ஆராய்ந்த மருத்துவர் ஆலிஸ், செவிலியர்களிடம் தேவையானவற்றை செய்ய சொல்லி கட்டளையிட்டுவிட்டு, வெளியே வந்தார்.

 

அதுவரை ஒரு இடத்தில் நில்லாமல் தவிப்புடன் இருந்த சஞ்சீவனி அவரிடம் சென்று, “டாக்டர், ஸ்டெஃபி… ஸ்டெஃபி இப்போ எப்படி இருக்கா?” என்று பதட்டத்துடன் வினவ, அவர் என்ன நினைத்தாரோ, சர்வஜனனையும் அருகில் அழைத்து, “இப்போ இப்படி சொல்றது எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. ஆனா, தேவையில்லாம ஹோப்ஸ் கொடுத்து உங்களை ஏமாத்த விரும்பல. சர்வா, இது நீங்க நினைச்ச மாதிரியே அனிமல் அட்டாக் தான். அதுவும் பிரிவியஸா நமக்கு கிடைச்ச டெட் பாடில இருக்க சிமிலர் ஊண்ட்ஸ் தான் இவங்களுக்கும் இருக்கு. நீங்க சீக்கிரம் பார்த்தால, இவங்க உயிரோட இருக்காங்க. ஆனா, இங்க சிக்கல் என்னன்னா, இது எந்த வகை அனிமல்னு தெரியாம ஆன்ட்டிடோட் கொடுக்க முடியாது. நம்மகிட்ட ரொம்ப நேரமும் இல்ல. சீக்கிரம் ஏதாவது டெசிஷன் எடுத்தாகணும்.” என்றார்.

 

அவர் கூறியதைக் கேட்ட சஞ்சீவனியோ, “வேர்உல்ஃப்… வேர்உல்ஃப் தான் அவளை அட்டாக் பண்ணது.” என்று கூற, ஆலிஸோ அவளை ஒரு மாதிரி பார்த்தார்.

 

உடனே அவளின் கரம் பற்றி அமைதியடையச் செய்தவன், “ஆலிஸ், உல்ஃப் அட்டாக்குக்கான ஆன்ட்டிடோட் இருந்தா, அதை கொடுத்து சீக்கிரம் ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணிடுங்க.” என்று கூற, அந்த மருத்துவரும் சரியென்று மீண்டும் ஸ்டெஃபியிருந்த அறைக்குள் நுழைந்து கொண்டார்.

 

“சர்வா, அது சாதாரண உல்ஃப் இல்ல வேர்உல்ஃப், ஓநாய் மனிதன். அதுக்கு வேற மருந்து இருக்கப் போகுது. இப்போ மாத்தி கொடுத்து, அவளுக்கு ஏதாவது ஆகிட்டா?” என்று பதற, “காம் டவுன் வனி. நீ சொல்றது உனக்கே நம்புற மாதிரி இருக்கா? வேர்உல்ஃப் எல்லாம் மித். அதையா நம்புற?” என்றான்.

 

உடனே சஞ்சீவனிக்கு கோபம் வந்துவிட, “நீங்களும் தான் பார்த்தீங்க, அங்க… அந்த இடத்துல… உறுமல் சத்தம், அதை தொடர்ந்து திடீர்னு தோன்றுன மனுஷன்… அதைப் பார்த்தும் எப்படி மித்னு சொல்றீங்க?” என்று கிட்டத்தட்ட கத்தினாள்.

 

அவளும் முதலில் வேம்பயர், வேர்உல்ஃப் எல்லாம் கட்டுக்கதை என்று நம்பியவள் தானே. ஆனால், பொன்னம்மாவிடம் பேசியது, அந்த வாள், மிக முக்கியமாக சர்வஜனனுடன் அவள் கண்ட காட்சி என அனைத்தும் அவள் மனதை மாற்றியிருந்தன.

 

“எஸ், நானும் பார்த்தேன். ஆனா, ஓநாய் மனுஷனா மாறுறதை நாம கண்ணால பார்க்கலையே. நான் ஒத்துக்குறேன், அங்க ஏதோ தப்பா நடக்குது தான். அதுக்காக அதை செய்யுறது வேர்உல்ஃப்புன்னு நான் நம்ப மாட்டேன், கண்ணால பார்க்குற வரை.” என்றான் சர்வஜனன்.

 

தான் கூறுவதை நம்பாமல் பேசும் அவனை, சோர்வான பார்வையுடன் நோக்கியவள், தலையை இருபுறமும் ஏமாற்றமாக அசைத்துவிட்டு, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட்டாள்.

 

அவனும் இப்போது அவளிடம் எந்த வாக்குவாதமும் வேண்டாம் என்று நினைத்தபடி அவளருகே அமைதியாக அமர்ந்து விட்டான்.

 

நேரம் அப்படியே செல்ல, இருவருமே அந்த இருக்கையில் அமர்ந்தபடியே ஒருவர் மேல் மற்றவர் சாய்ந்து உறங்கியிருக்க, சஞ்சீவனியின் அலைபேசி ஒலியெழுப்பி இருவரையும் எழுப்பி விட்டது.

 

மணி ஐந்தை தொட்டிருக்க, சஞ்சீவனிக்கு அவளை சுற்றியிருக்கும் சூழல் புரியவே சில நிமிடங்களானது. அதற்குள் சுதாரித்திருந்த சர்வஜனன் விடாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் அலைபேசியை சுட்டிக்காட்டிவிட்டு, தானும் தன் அலைபேசியில் யாரிடமோ பேசினான்.

 

சஞ்சீவனிக்கு அழைத்தது பிரத்யூஷா தான். அவளிடம் என்ன காரணம் சொல்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தவளை உசுப்பிய செவிலி, “ஏன் மா, ரொம்ப நேரமா போன் அடிச்சுட்டே இருக்கு. அதை கையில வச்சு உத்து பார்த்துட்டு இருந்தா போதுமா? ஒன்னு ஆன் பண்ணி பேசு, இல்ல ஆஃப் பண்ணி போடு. ஹாஸ்பிடல்னு கூட பார்க்காம, காலைலேயே இவ்ளோ சத்தமா?” என்று திட்டிவிட்டு செல்ல, அவளும் அழைப்பை ஏற்றுவிட்டாள்.

 

அழைப்பு ஏற்கப்பட்டதும் மறுமுனையிலிருந்து கேள்விகள் சரமாரியாக வந்த வண்ணம் இருந்தன.

 

“ஹே சஞ்சு, நீ எங்க இருக்க? இவ்ளோ காலைல எங்க போயிருக்க? வண்டியை வேற காணோம்! என்னடி நினைச்சுட்டு இருக்க நீ? என்கிட்ட சொல்லிட்டு போகணும்னு அறிவில்லயா?” என்று பிரத்யூஷா பொரிய ஆரம்பிக்க, அவளை எவ்விதம் சமாதானப்படுத்த என்று தெரியாமல் பாவமாக அமர்ந்திருந்தாள் சஞ்சீவனி.

 

அதே சமயம், “இங்க ஸ்டெஃபியோட அட்டெண்டர் யாரு?” என்று செவிலி சற்று சத்தமாக வினவ, தன் அழைப்பை பேசி முடித்து வந்த சர்வஜனன், சஞ்சீவனியிடம் தான் பார்த்துக் கொள்வதாக கண்ணசைத்தபடி அந்த செவிலியிடம் சென்றான்.

 

இதை அலைபேசி வழியாக கேட்ட பிரத்யூஷாவோ, “சஞ்சு, நீ ஹாஸ்பிடல்ல இருக்கியா? ஸ்டெஃபின்னா சொன்னாங்க? அவளுக்கு என்ன?” என்று பதற, “ஷ், ரிலாக்ஸ் பிரத்யூ. ஸ்டெஃபிக்கு சின்ன ஆக்சிடெண்ட். அதான் ஹாஸ்பிடல்ல சேர்த்துருக்கோம். நீ ரொம்ப டென்ஷனாகாத.” என்று ஆறுதல் கூறினாள் சஞ்சீவனி.

 

பிரத்யூஷாவின் பதட்டத்தினால் ஸ்டெஃபிக்கு நடந்ததை முழுதாக தோழியிடம் கூறவில்லை சஞ்சீவனி. ஸ்டெஃபியின் விபத்தை கேள்விப்பட்டதால், மேலும் கேள்விகளை கேட்கவில்லை பிரத்யூஷா. அதனால், தன் வாளை தேடும் முயற்சியை தோழியிடம் எளிதாகவே மறைத்து விட்டாள் சஞ்சீவனி.

 

ஆனால், சர்வஜனன் அதை சரியாக கேட்டுவிட்டான்.

 

செவிலி கேட்ட மருந்துகளை வாங்கி கொடுத்துவிட்டு வந்தவன், சஞ்சீவனியிடம், “ஆமா, நேத்து நைட் அங்க எதுக்கு வந்த?” என்று கேட்க, அவனிடம் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் விழித்தாள்.

 

ஏற்கனவே, ஓநாய் மனிதனை கட்டுக்கதை என நம்புபவனிடம், தான் அதை வேட்டையாடுபவள் என்றும் அதற்கான வாளை தேடி வந்ததாகவும் கூறினால், தன்னை பைத்தியக்காரி என்றே முடிவு செய்து விடுவான் என்று யோசித்தவள் அமைதியாக இருக்க, அவளைக் காக்கவே சர்வஜனனிற்கு அலைபேசியில் அழைப்பு வந்தது.

 

உடனே அவளிடம், “எனக்கு முக்கியமான வேலை இருக்கு. இனி, நீ இங்க பார்த்துப்பியா?” என்று கேட்க, அவளும் சரியென தலையை மட்டும் அசைத்தாள்.

 

ஆனால், அவள் முகம் என்ன பாவனையை காட்டியதோ, அவளை ஆறுதலாக அணைத்து, “டேக் கேர்.” என்று சொல்லிவிட்டு, அவள் முகம் பார்க்காமல் சென்று விட்டான்.

 

செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் ஒரு பெருமூச்சுடன் இருக்கையில் அமர்ந்தாள்.

 

*****

 

“சரவணன், நேத்து நாம பார்த்த பாழடைஞ்ச பங்களா சுத்தி இருக்க இடத்துல, நான் இப்போ உங்களுக்கு அனுப்பியிருக்க ஃபூட் பிரின்ட்ஸ் மாதிரி டிஃப்ரெண்ட்டா ஏதாவது இருக்கான்னு செக் பண்ணுங்க. நான் வந்ததும் அந்த பங்களாக்குள்ள போய் செக் பண்ணிடலாம். நமக்கு அங்க கண்டிப்பா ஏதாவது க்ளூ கிடைக்கும்.” என்று தன் வீட்டிற்கு செல்லும் வழியிலேயே பேசியிருந்தான் சர்வஜனன்.

 

*****

 

மருத்துவமனையில் ஸ்டெஃபியைக் காண பிரத்யூஷாவும் நஸ்ரினும் வந்திருந்தனர்.

 

ஸ்டெஃபி இன்னமும் மயக்கத்தில் இருக்க, மற்ற இருவரும் சஞ்சீவனியை கேள்விகளால் துளைத்தெடுத்து விட்டனர்.

 

“சஞ்சுக்கா, ரெண்டு நாள் முன்னாடி ஆன மாதிரி நம்ம ஸ்டெஃபியையும் ஏதோ அனிமல் தான் தாக்கியிருக்கா?”

 

“ஸ்டெஃபிக்கு இப்படி ஆச்சுன்னு உனக்கு எப்படி தெரியும் சஞ்சு?” என்று இருவரும் மாற்றி மாற்றி கேட்க, இருவரையும் சோர்வாக பார்த்தாள்.

 

“அனிமல் அட்டாக்னு தான் டாக்டர் சொல்லியிருக்காங்க. அதுக்கான ஆன்ட்டிடோடும் போட்டுட்டாங்க. அந்த மருந்தால லேசா ஃபீவர் வரும்னும், அதுக்கு அப்பறம் தான் அவளுக்கு நினைவு திரும்பும்னும் சொல்லிருக்காங்க.” என்று நஸ்ரினுக்கு பதில் கூறியவள், பிரத்யூஷாவிடம் திரும்பி, “ஸ்டெஃபி நம்ம கஃபே கோட் போட்டிருந்ததை வச்சு, சர்வா… அன்னைக்கு பார்த்த போலீஸ் தான் எனக்கு கால் பண்ணாரு. நீ நல்லா தூங்கிட்டு இருந்ததால, உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நான் மட்டும் வந்தேன்.” என்று கூறி முடித்தாள்.

 

உள்ளுக்குள் பயம் தான். இப்படி சரளமாக அவள் பொய் சொன்னதில்லை. அதுவும் பிரத்யூஷாவிடம் அவள் பொய் சொல்லி மாட்டாத நாளில்லை. ஆனால், ஸ்டெஃபியின் விஷயம் பிரத்யூஷாவை பாதித்திருந்ததால், அவள் தோழியின் பொய்யை கண்டுபிடிக்கவில்லை.

 

கஃபேயை திறக்க வேண்டி இருந்ததால், பிரத்யூஷா மருத்துவமனையில் இருப்பதாகவும் மற்ற இருவரும் கஃபேக்கு செல்வதாகவும் முடிவு செய்யப்பட்டு, சஞ்சீவனி அங்கு சென்றும் விட்டாள்.

 

கஃபேக்கு வந்து முதல் இரண்டு மணி நேரம் சற்று மந்தமாகவே சென்றது. சர்வஜனனிடமிருந்து அழைப்பை எதிர்பார்த்து ஏமாந்து போனாள் பெண்ணவள். ஆனால், எதற்காக அழைப்பை எதிர்பார்க்கிறாள் என்பதற்கான விடை அவளுக்கும் அப்போது தெரியவில்லை.

 

எண்ணிலடங்காத முறையாக அலைபேசியில் பார்வையை பதித்து மீண்டவளின் பார்வை, கதவை திறந்து உள்ளே வந்த பொன்னம்மாவின் மீது பதிந்து விரிந்தது.

 

உள்ளே நுழைத்ததும் நேராக சஞ்சீவனியிடம் வந்தவர், “அந்த வாளை எடுத்தியா?” என்ற கேள்வியை தான் கேட்டார்.

 

*****

“சார், நீங்க அனுப்பின ஃபூட் பிரின்ட்ஸை செக் பண்ணியாச்சு. அதே மாதிரி ஃபூட் பிரின்ட்ஸ் இதோ இந்த இடத்துல இருக்கு.” என்று முன்தினம் சர்வஜனனும் சஞ்சீவனியும் ஒளிந்திருந்த இடத்திற்கு அருகே இருந்த பாதையைக் காட்டினான் சரவணன்.

 

அங்கு முன்னர் போலவே, சில தூரம் விலங்கின் காலடி தடமும், அதை தொடர்ந்து மனித காலடி தடமும் இருக்க, அது அந்த பங்களாவை நோக்கி செல்வதையும் கண்டு கொண்டான் சர்வஜனன்.

 

“சரவணன், போலீஸ் ஃபோர்ஸ் ரெடியா? நாம இப்போ அந்த பங்களாக்குள்ள போறோம்.” என்று அதிரடியாக கூறினான் சர்வஜனன்.

 

காவல்படை அந்த பங்களாவினுள் நுழைய, அங்கு அந்த பெரிய வரவேற்பறையில், மேலாடை எதுவுமின்றி, கால்சராயும் அங்கங்கே கிழிந்து தொங்கியபடி, உடலெங்கும் இரத்தக்காயங்களுடன் மயக்க நிலையில் இருந்தான் சேகர், இரு நாட்களுக்கு முன் காணாமல் போனதாக புகாரளித்த பெண்ணின் கணவன்!

 

மாயம் தொடரும்…

    The post பிறை சூழ் மாயம் – 8 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

    ]]>
    https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/feed/ 0 17863
    18 – இதயத்தின் நிறம் பார்த்ததால் https://thoorigaitamilnovels.com/18-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ https://thoorigaitamilnovels.com/18-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/#respond Thu, 09 May 2024 10:16:30 +0000 https://thoorigaitamilnovels.com/18-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ நிறம் 18   பத்து ஆண்டுகளுக்கு முன்பு…   அன்னையின் சொல்லிற்கு கட்டுப்பட்டு ஸ்வரூபன் அவர்களது கல்லூரியிலேயே படிக்க, தன் கனவை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு ஷ்யாம் சென்னையிலுள்ள பிரபல கல்லூரியில் இளங்கலை அரசறிவியல் பிரிவில் சேர, நண்பனை தொடர்ந்து அகிலும் அதே பிரிவில் சேர்ந்து கொண்டான்.   தானுண்டு தன் வேலை உண்டு என்றிருக்கும் ஷ்யாமை அந்த கல்லூரியின் பெண்கள் கூட்டம் பின்தொடராமல் இருந்தால் தான் அதிசயம். அதிலும்,

    The post 18 – இதயத்தின் நிறம் பார்த்ததால் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

    ]]>

    Loading

    நிறம் 18

     

    பத்து ஆண்டுகளுக்கு முன்பு…

     

    அன்னையின் சொல்லிற்கு கட்டுப்பட்டு ஸ்வரூபன் அவர்களது கல்லூரியிலேயே படிக்க, தன் கனவை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு ஷ்யாம் சென்னையிலுள்ள பிரபல கல்லூரியில் இளங்கலை அரசறிவியல் பிரிவில் சேர, நண்பனை தொடர்ந்து அகிலும் அதே பிரிவில் சேர்ந்து கொண்டான்.

     

    தானுண்டு தன் வேலை உண்டு என்றிருக்கும் ஷ்யாமை அந்த கல்லூரியின் பெண்கள் கூட்டம் பின்தொடராமல் இருந்தால் தான் அதிசயம். அதிலும், போலீஸ் வேலைக்காக அப்போதே உடலில் கவனம் செலுத்தியதால், அந்த கல்லூரியின் ஹீரோவாகிப் போனான் ஷ்யாம்.

     

    அவன் எண்ணம் முழுவதும் படிப்பிலும், தேர்வுகளிலும் தான் இருந்தது. ஆனால், அதை கலைக்கும் வண்ணம், அவனை சுற்றி வரும் பெண்களை கண்டு வெறுத்து தான் போனது ஷ்யாமிற்கு.

     

    முதலில் சொல்லிப் பார்த்தவன், ‘அதற்கெல்லாம் அடங்குவோமா’ என்று பின்வந்தவர்களை முறைத்தே தள்ளி வைத்தான்.

     

    ஒருமுறை, “அடப்பாவி, அந்த பொண்ணு உன்னை பார்க்க வந்துச்சான்னே தெரியாம எதுக்கு டா துரத்துற? ஒருவேளை, என்னைக் கூட பார்க்க வந்துருக்கலாம்ல.” என்று அகில் கேட்டிருக்க, அவனையும் முறைத்த ஷ்யாம், “உன் அத்தை பொண்ணு கிட்ட நீ இப்போ சொன்னதை சொல்லவா?” என்று அவனை அடக்கியிருந்தான்.

     

    இப்படி பெண்கள் தூரத்தில் இருந்து பார்த்து ரசிக்கும் ஹீரோவான ஷ்யாமே ஒருத்தியை ‘யாரு டா இந்த பொண்ணு’ என்று பார்க்க வைத்த பெருமை ஷர்மிளாவையே சேரும்.

     

    ஷ்யாம் இறுதி ஆண்டு படிக்கும் வேளையில், அந்த கல்லூரிக்கு படிக்க வந்தவள் தான் ஷர்மிளா. இளங்கலை இதழியல் பிரிவில் சேர்ந்திருந்தாள்.

     

    ‘ராகிங்’ என்று பெரிய அளவில் இல்லை என்றாலும், ஆங்காங்கே சிறு குழுக்களாக, புதிதாக வந்திருந்தவர்களை இழுத்து வைத்து பேசியபடி இருந்தனர் அந்த கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள்.

     

    அப்படி தான் அகில், ஷ்யாம் மற்றும் அவர்களின் நண்பர்களும் ஒரு குழுவாக அமர்ந்திருந்தனர். புதிதாக வருபவர்களிடம் பேசி, கேலி கிண்டல் செய்யலாம் என்று கூறிய அகிலை தன் பார்வையால் தடுத்திருந்தான் ஷ்யாம்.

     

    “இப்படி சும்மா பார்க்க, எதுக்கு டா இங்க உட்காரணும்?” என்று அகில் முனகிக் கொண்டிருக்க, அவன் பொறுமலை தடுக்க என்றே அங்கு வந்து நின்றாள் ஷர்மிளா.

     

    வெள்ளையும், இளநீலமும் கலந்த குர்தியும், காற்றில் ஆடும் போனி டெயிலும், குறும்பு பார்வையை மறைக்க முயன்று தோற்று போன கண்ணாடியும், பார்த்தாலே ஒட்டிக் கொள்ளும் பளிச் சிரிப்பும் என்று நின்றவளை மற்றவர்கள் ஆர்வமாக பார்த்தாலும், ஷ்யாமோ ஒருநொடிக்கும் குறைவான நேரத்தில் அளவிடும் பார்வை பார்த்துவிட்டு குனிந்து கொண்டான்.

     

    ஷர்மிளா அவனின் உதாசீனத்தை கருத்தில் கொள்ளாமல், அவனை ரகசியமாக பார்த்தபடி, அனைவருக்கும் ஒரு ‘ஹாய்’யை கூற, மற்றவர்களோ அவளிற்கு பதில் கூறாமல் ஆராய்ச்சி பார்வை பார்த்தனர்.

     

    “என்ன ப்ரோ, ஒன்லி லுக்கிங்கா ராகிங்லாம் இல்லையா?” என்று ஷர்மிளா வினவ, மற்றவர்கள் அவளை ‘பே’வென பார்த்தனர்.

     

    அகிலோ, “ஏய் இந்தாம்மா, நீ பாட்டுக்கு வந்த, ராகிங் இல்லையான்னு கேட்குற? உண்மையை சொல்லு, நீ ‘ஆன்டி-ராகிங் கமிட்டி’யை சேர்ந்தவ தான?” என்று கேட்க, “அட என்ன ப்ரோ நீங்க, என்னை பார்த்தா அப்படியா தெரியுது? நானே ஒரு இன்னொசென்ட் பொண்ணு ப்ரோ. நானா வந்து உங்ககிட்ட இன்ட்ரோ கொடுத்தா, நீங்க விட்டுடுவீங்கன்னு ஒரு நம்பிக்கைல வந்தேன்.” என்றவளின் பார்வை அவ்வபோது ஷ்யாமை தழுவியதை அனைவரும் கண்டு கொண்டு தான் இருந்தனர்.

     

    “ஆஹான், இன்னொசெண்டு… நீ? நம்பிட்டேன் நம்பிட்டேன்! சரி, இந்த இன்னொசென்ட் பொண்ணோட பேரு என்னவோ?” என்று அகில் வினவ, அங்கு ஒரு குட்டி அறிமுக படலம் நடந்தேறியது.

     

    அனைவரிடமும் கை குலுக்கி அறிமுகப்படுத்திக் கொண்டவள், இறுதியாக ஷ்யாமிடம் செல்ல, அந்த நண்பர்கள் கூட்டத்தில் ஒருவனோ, “அகிலா, அந்த பொண்ணை நிறுத்து டா. பாவம் திட்டு வாங்க போகுது.” என்றான்.

     

    “க்கும், யாரு பாவம்னு வெயிட் பண்ணி பார்ப்போம். எனக்கென்னவோ இன்னைக்கு ஒரு நல்ல எண்டர்டெயின்மெண்ட் ஸீன் இருக்கும்னு தோணுது.” என்றான் அகில்.

     

    “ஹாய் சீனியர். என் பேரு ஷர்மிளா.” என்று அவள் கூற, ஷ்யாமோ அவளை ‘இருந்துட்டு போ’ என்ற ரீதியில் பார்த்து வைத்தான்.

     

    அதில் கடுப்பான ஷர்மிளாவோ, “ஒருத்தர் பேரு சொல்லி இண்ட்ரோ கொடுத்தா, திரும்ப பேர் சொல்லணும்னு கூடவா தெரியாது?” என்று கேட்க, ஷ்யாமோ, “எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல.” என்று கூறினான்.

     

    “இப்போ என்ன லவ் பண்ணலாம்னா கூப்பிட்டேன். இன்ட்ரெஸ்ட் இல்லன்னு சொல்றீங்க!” என்று ஷர்மிளா கேட்க, ஒருநொடி அந்த இடமே அமைதியாக இருந்தது.

     

    அதில் அவளை தீப்பார்வை பார்த்த ஷ்யாமோ, “இடியட்…” என்று மேலும் ஏதோ கூற வந்தவன், பின் என்ன நினைத்தானோ அங்கிருந்து செல்ல முயல, “ஹலோ சீனியர், உங்க பேரை நீங்களே வச்சுக்கோங்க.” என்று சத்தமாக கூறிவிட்டு, “ஏதோ காலேஜே கொண்டாடுற ஹீரோன்னு சொன்னாங்களேன்னு பேச வந்தா, ரொம்பத்தான்…” என்றாள். என்னதான் முணுமுணுத்தாலும் அது மற்றவர்களுக்கு கேட்கத்தான் செய்தது.

     

    மீண்டும் அவளை ஷ்யாம் முறைக்க, அகிலோ, “அந்த ஹீரோன்னு சொன்னியே, அது எப்படி தெரிஞ்சுது?” என்று அவன் சந்தேகத்தை கேட்க, “இதெல்லாம் ஒரு கேள்வியா ப்ரோ. மூணு வருஷம் படிக்க போற காலேஜ், இது கூட ரிசர்ச் பண்ணலன்னா எப்படி?” என்று தோளை குலுக்கினாள் ஷர்மிளா.

     

    ‘இது ரொம்ப அவசியமா?’ என்று பார்வையிலேயே கேள்வி கேட்டு அகிலை ஷ்யாம் முறைக்க, அவனைக் கடந்து சென்ற ஷர்மிளாவோ, “இதுக்கே இப்படின்னா, இனி டெயிலியும் ஓட வேண்டியதா இருக்கும்!” என்று கூறிவிட்டு சென்று விட்டாள்.

     

    அவள் கூறிச் சென்றதை போல, தினமும் அவன் கண்களில் பட்டுக்கொண்டே தான் இருந்தாள். முதலில் முறைத்தாலும், பின்பு என்ன நினைத்தானோ ஷ்யாமும் அவளைக் கண்டு கொள்வதில்லை.

     

    அடிக்கடி அவன் முன் வந்து, “அட என்ன சீனியர், இன்னைக்கு நீங்க ஹேண்ட்ஸமா தெரியுறீங்க?” என்பாள். சுற்றி யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்ப்பதில்லை!

     

    அவளின் செயலில் பல்லைக் கடித்து கொண்டு, “ஏய்…” என்று ஷ்யாம் ஏதோ சொல்ல வருவதற்குள், “வெயிட் வெயிட், நீங்க ஹேண்ட்ஸமா இருக்கீங்கன்னு தான் சொன்னேன். வேற ஸீன் ஒன்னும் இல்ல.” என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி விடுவாள்.

     

    “இவளை…” என்று திட்ட வந்து, பின் சுற்றி இருப்பவர்கள் அவனை நோட்டமிடுவதை பார்த்து நிறுத்தி விடுவான்.

     

    ஷர்மிளா ஷ்யாமிடம் பேசுவதைக் கண்டு சில பெண்களும் அவனிடம் பேச வர, அவர்களை முறைத்தே தள்ளி நிறுத்தி விடுவான்.

     

    இதை ஷர்மிளாவின் தோழிகள் அவளிடம் சொல்லி, “நீ மட்டும் அப்படியென்ன ஸ்பெஷலோ?” என்று பொறும, அது ஷ்யாமின் காதுகளுக்கும் சென்றது.

     

    உடனே ஷர்மிளாவை தனியே அழைத்தவன், “ஓய் சோடாபுட்டி, உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க? வேணும்னே என்னைப் பத்தின காசிப்பை ஸ்ப்ரெட் பண்ணிட்டு இருக்கியா?” என்று கோபமாக வினவ, அவளோ அதற்கெல்லாம் அசராமல், “இப்போ எதுக்கு இவ்ளோ கோபம் சீனியர்? நான் உங்களை பத்தி காசிப் பண்ணேன்னு நீங்க பார்த்தீங்களா? காசிப் எல்லாம் நம்ம ஆக்ஷன்ஸ் வச்சு பரவுறது தான் சீனியர். நானா ஆள் வச்சு எல்லாம் பரப்பல. இதோ, இப்படி நம்ம பேசிட்டு இருக்குறதை பார்த்து தானா பரவுறது தான்.” என்று கண்ணடித்து கூறிவிட்டு ஓடி விட்டாள்.

     

    ‘இவளை எப்படி தான் அடக்குறது?’ என்று ஷ்யாம் தான் தலையால் தண்ணீர் குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டான் என்பது தான் உண்மை. அவளால் அவன் கவனம் சிதறிப் போவதை உணர்ந்து, அவளிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

     

    அவன் மனநிலையை சரியாக கணித்ததை போல, ஷர்மிளாவும் அவனருகே வராமல் தூரத்தில் நின்றே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்ப்பது ஷ்யாமிற்கு தெரிந்தாலும், அவன் அதை காட்டிக் கொள்ளவில்லை.

     

    நியாயமாக பார்த்தால், அவள் அவனை தொல்லை செய்யாமல் இருப்பதை எண்ணி நிம்மதியுடன் தானே இருக்க வேண்டும். ஆனால், அதற்கு எதிர்மாறாக, ‘ஏன்’ என்ற கேள்வியை அவன் மனதை ஆக்கிரமித்திருந்தது.

     

    நாட்கள் செல்ல செல்ல, ஷர்மிளாவோ அகில் மற்றும் அவர்களின் நண்பர்களோடு நன்றாக உரையாட ஆரம்பித்து விட்டாள். அவ்வபோது, ஷ்யாமையும் ஜாடையாக பேசி கேலி செய்து அவன் முறைப்பை வாங்கிக் கொண்டாலும், நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.

     

    ஒருமுறை, “அது என்ன நாங்க எல்லாம் ப்ரோ, அவன் மட்டும் சீனியர்?” என்று அகில் வினவ, ஷ்யாமை ஓரக்கண்ணில் பார்த்துக் கொண்டே, “நீங்க எல்லாரும் பேரு சொன்னீங்க, அதான் ப்ரோ. பேரைக் கூட சொல்லாதவங்க எல்லாம் சீனியர் தான்.” என்றாள்.

     

    ஆனால், அவளின் குரலே ‘சீனியர்’ என்ற அழைப்பு எத்தனை நெருக்கம் என்பதை கூறியது.

     

    ஷ்யாம் அதைக் கேட்டாலும் எதுவும் கூறாமல் சென்று விட, ஷர்மிளா மர்மமாக சிரித்தாள்.

     

    அதைக் கண்ட அகிலோ, “இப்போ எதுக்கு நீ வினோதமா சிரிக்கிற?” என்று வினவ, “ஹ்ம்ம், ரெட் சிக்னல் எதுவும் கிடைக்கலல, அதான் வெற்றி சிரிப்பு! கூடிய சீக்கிரம் க்ரீன் சிக்னல் கிடைச்சுடனும்னு சாமி கிட்ட வேண்டிக்கோங்க.” என்றாள்.

     

    தூரத்தில் செல்பவனையும், அவனை பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தவளையும் பார்த்த அகிலோ, “க்கும், நீ க்ரீன் கலர் டிரெஸ் போடாம இருக்க வேணும்னா வேண்டிக்குறேன்.” என்றான்.  

     

    சில நாட்கள் தள்ளி நின்றே ரசித்தவள், அது வேலைக்காகாது என்று எண்ணினாளோ என்னவோ, ஷ்யாமிடம் வந்து, “சீனியர், உங்க டிப்பார்ட்மெண்ட் ஜூனியர் வசந்த் என் ஃபிரெண்டு தான். அவனுக்கு உங்க நோட்ஸ் வேணுமாம்.” என்றாள்.

     

    அவனோ அவளை பார்க்காமல், “ஏன், அதை அவன் வந்து கேட்க மாட்டானாமா?” என்று முணுமுணுக்க, அவனருகே வந்தவளோ, “அவனுக்கு உங்களை பார்த்தா பயமாம்!” என்று கண்களை விரித்து தீவிர பாவனையில் கூறினாள்.

     

    அதில் வழக்கம் போல அவன் முறைக்க, “ஷப்பா, இந்த எக்ஸ்ப்ரெஷனை யாராவது பார்த்தா, நான் என்னமோ உங்களை ஏமாத்தி கழட்டி விட்டதா நினைச்சுக்க போறாங்க.” என்று சத்தமாக அவள் கூற, ஷ்யாமோ பையிலிருந்த அவன் பழைய குறிப்பேடுகளை அவளின் கைகளில் பொத்தென்று வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

     

    அவள் அவனிடம் பேசியதில், ஏனோ இத்தனை நாட்கள் மனதிற்குள் தொக்கி நின்ற கேள்வி மறைந்து விட்டதை போல தான் உணர்ந்தான் ஷ்யாம்.

     

    “க்கும், நோட்ஸ் கேட்டா, ஏதோ சொத்தையே கேட்டா மாதிரி ஸீன் போட வேண்டியது!” என்று ஷர்மிளா முணுமுணுக்க, அகிலோ, “ஆமா, அவன் தான் முறைக்குறான்ல. திரும்ப திரும்ப அவனை ஏன் வம்பிழுக்குற?” என்றான்.

     

    “முறைக்குறதுக்கெல்லாம் கவலைப்பட்டா இலக்கை அடைய முடியுமா ப்ரோ?” என்று ஷர்மிளா கண்ணடிக்க, “ஹ்ம்ம், பார்க்குறது சைட்டடிக்கிற வேலை, இதில இலக்கு ஒன்னு தான் குறைச்சல்.” என்றான் அகில்.

     

    அதன்பின்போ, ‘வசந்த்திற்கு இது வேண்டும், அது வேண்டும்’ என்று அடிக்கடி வந்து ஷ்யாமின் முன் நின்றாள் ஷர்மிளா. இது அந்த வசந்த்திற்கு தெரியுமா என்பது வசந்த்திற்கே வெளிச்சம்!

     

    ஷ்யாம் அவளிடம் சிடுசிடுவென்று பேசினாலும், அவள் கேட்டதை செய்ய, அகிலே அவனிடம், “நீ ஏன் டா அவ என்ன சொன்னாலும் செய்யுற?” என்று கேட்க, “பின்ன நொய்யுநொய்யுன்னு பேசி டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்தா என்ன பண்ண? மனுஷனை நிம்மதியா இருக்க விடுறாளா?” என்றான் ஷ்யாம்.

     

    ஆனால், அது மட்டும் தான் காரணமா என்றால் அவனிற்கே அது தெரியாது என்று தான் கூற வேண்டும். மற்ற பெண்களை தள்ளி நிறுத்தியதை போல ஷர்மிளாவை தள்ளி நிறுத்த முடியவில்லை அவனால். அவன் அவ்வளவாக முயற்சிக்கவில்லை என்று கூற வேண்டுமோ!

     

    நாட்கள் கடந்து, மாதங்களும் கடந்து சென்றன. ஆனால், ஷர்மிளா – ஷ்யாம் உறவு என்னவோ பேச்சுவார்த்தையில் இருந்து அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. அவளும் விதவிதமாக அவளின் மனதை தெரிவிக்க முயன்று கொண்டு தான் இருக்கிறாள். அதற்கு அவன் அவகாசம் கொடுத்தால் தானே!

     

    வேறு வழியின்றி, “ஷப்பா, லவ்வை சொல்ல கூட விட மாட்டிங்குறாரு ப்ரோ உங்க ஃபிரெண்டு.” என்று அகிலிடம் தான் புலம்புவாள் ஷர்மிளா.

     

    அதற்கு அவனோ, “நான் தான் சொன்னேன்ல, அவன் லவ்வுக்கு எல்லாம் செட்டாக மாட்டான். நீ ஏன், கல்யாணம் பண்ணிட்டு லவ் பண்ணக்கூடாது.” என்று அறிவுரை வழங்க, அவன் பின்மண்டையில் பலமாக அடித்து விட்டு, ஷர்மிளாவையும் துரத்தி விடுவான் ஷ்யாம்.

     

    “ஷ்யாமா, உனக்கு ஷர்மியை பிடிச்சுருந்தா, அக்செப்ட் பண்ண வேண்டியது தான? அவளும் பாவம், எத்தனை முறை தான் அவ லவ்வை சொல்ல, உன் பின்னாடி அலைவா? பிடிக்கலைன்னா, அதையாவது சொல்லலாம்ல.” என்று அகில் கூற, அதற்கு புரியாத பார்வை ஒன்றே பதிலாக கிடைக்கும் ஷ்யாமிடமிருந்து.

     

    இதோ அதோவென்று, இறுதியாண்டு கல்வி முடிவிற்கு வந்து விட்டது ஷ்யாமிற்கு. அடுத்த நாள் இறுதி நாள் என்ற நிலையில் அவனிடம் வந்த ஷர்மிளாவோ, “என்னை ரொம்ப துரத்திட்டீங்க சீனியர். நாளைக்கு எப்படியும் சொல்லியே தீருவேன். நீங்களும் பதில் சொல்லியே ஆகணும்.” என்று கூறிவிட்டு  ஓடியிருந்தாள்.

     

    என்னதான், அவள் மனதை பகிர்வதை இத்தனை நாட்கள் தடுத்திருந்தாலும், ஏதோ ஒரு குறுகுறுப்பு உள்ளுக்குள் எழத்தான் செய்தது ஷ்யாமிற்கு.

     

    அந்த சந்தர்பத்தை எப்படி கையாள வேண்டும் என்று மிகவும் யோசித்தாலும், அவளை சந்திக்கும் நேரத்திற்காக ஒருவித ஆர்வத்துடன் காத்திருந்தான் என்று தான் கூற வேண்டும்.

     

    ஆனால், அவன் காத்திருப்பு எல்லாம் கானல் நீராகிப் போனது. அடுத்த நாள், அவனின் சோடாபுட்டி அவன் கண்முன் வரவே இல்லை!

     

    எப்போதும் அவளை கண்டு கொள்ளாமல் சுற்றியவனோ, அன்று அந்த கல்லூரியையே சல்லடை போட்டு தேடி விட்டான், அவளிற்காக! ஆனால், பலன் தான் இல்லை.

     

    கல்லூரியின் இறுதி நாள் என்பதால், பலர் குறிப்பாக பெண்கள் அவனை சூழ்ந்து கொள்ள, அவன் நினைவை ஆக்கிரமித்தவள் என்னவோ அவனின் சோடாபுட்டி தான்!

     

    இரவு நேரமான போதும் கூட, கல்லூரியை விட்டு செல்ல மனமில்லாமல் சுற்றியவனிடம், “நான் கால் பண்ணி பார்த்தேன் டா. அவ எடுக்கல. நாளைக்கு வேணா அவ வீட்டுக்கு போய் பார்ப்போம்.” என்று அகில் சமாதானப்படுத்துவதற்காக கூற, “நான் எதுக்கு அவளை தேடிப் போகணும்? ஏதோ இன்னைக்கு பேசணும்னு சொன்னாளேன்னு வெயிட் பண்ணேன். அவ்ளோ தான்.” என்று கத்திவிட்டு சென்று விட்டான்.

     

    அதன் பிறகு சில நாட்கள், அவள் ஏன் அன்று வரவில்லை என்ற கேள்வி மனதிற்குள் எழுந்தாலும், அவன் நேரத்தை தேர்வு, பயிற்சி ஆகியன ஆக்கிரமித்துக் கொண்டன. அதில், அவளை தற்காலிகமாக மறந்தே விட்டான் என்று தான் கூற வேண்டும்.

     

    அன்று மருத்துவமனையில் அவளை சந்தித்தபோது கூட, சட்டென்று அவள் தான் என்பதை அவனால் கண்டு கொள்ள முடியவில்லை. காரணம், அவளின் தோற்றம் என்றால் மிகையாகாது.

     

    அவளின் டிரேட்மார்க்காக கருதப்படும் சிரிப்பும், கண்ணாடியும் காணாமல் போயிருந்தன. கண்களை சுற்றிய கருவளையமும் முகத்தை நிறைத்திருந்த வேதனையின் சாயலும் ஏனோ ஷ்யாமின் இதயத்தை தாக்கின.

     

    ‘அகில் சொன்ன மாதிரி அடுத்த நாள் போய் பார்த்துருக்கணுமோ?’ என்ற கேள்வி அவளை பார்க்கும்போதெல்லாம் தோன்ற ஆரம்பிக்க, அவளைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான் ஷ்யாம்.

     

    அவளின் வேலையை பற்றி தெரிந்து கொண்டவனிற்கு, அவள் தந்தையின் இறப்பும் தெரிய வந்தது. அதுவும், அவர் இறந்தது அந்த கல்லூரி இறுதி நாளில் தான் என்பதை அறிந்ததும், அன்று சென்று பார்க்காத தன் மடத்தனத்தை எண்ணி மனம் குமைந்தான்.

     

    இந்த தகவல்கள் எல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்னர் கிடைத்திருந்தால் கூட, அவளிடம் அப்போதே பேசியிருப்பான். இப்படி தன் எதிரியிடம் அவளை தொலைத்து, அவளிற்கு என்ன ஆனதோ என்று பதைபதைப்புடன் அவனும் சொந்த ஊருக்கு பயணிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

     

    *****

     

    ‘சோலைப்புதூர்’ என்ற ஊரின் பெயரை மட்டுமே தெரிந்து கொண்ட ஷ்யாமிற்கு, விக்ரம் தற்போது எங்கு சென்றிருப்பான் என்று சரியாக தெரியவில்லை என்றாலும், ஒரு யூகத்தில் பெரிய வீட்டிற்கு சென்றிருந்தான்.

     

    அவன் யூகம் தவறாத படி, விக்ரம் அவனின் பாதுகாவலர்கள் படை சூழ அங்கு தான் இருந்தான். அவனுடன், தலை குனிந்தபடி ஷர்மிளாவும் நின்றிருந்தாள்.

     

    இதுவரை ஷ்யாமிற்கு புரியாதது என்னவென்றால், ஷர்மிளா இதற்குள் எப்படி வந்து சிக்கினாள் என்பது தான். அவளை ஏன் இவ்வீட்டிற்கு கூட்டி வரவேண்டும் என்ற கேள்வி ஷ்யாமின் மனதை அரிக்க, கண்டிப்பாக அதற்கான பதில் உவப்பானதாக இருக்காது என்று அவன் மனம் அடித்துக் கூறியது.

     

    மீண்டும் ஒருமுறை அவன் யூகம் சரியென்பது போல இருந்தது, விக்ரம் கூறிய அந்த செய்தி.

     

    அதைக் கேட்ட ஷ்யாமிற்கு, உடனே தோன்றியது என்னவோ, விக்ரம் கூறியது பொய் என்பது தான்.

     

    ‘டா**, எவ்ளோ தைரியம் இருந்தா, இப்படி எல்லாரு முன்னாடியும் பொய் சொல்லி, அவளை இதுல சிக்க வைப்பான்?’ என்று எண்ணிய ஷ்யாமோ யோசிக்காமல் விக்ரமின் சட்டையை பிடித்திருந்தான்.

     

    அத்தனை நேரம் தலை குனிந்து நின்றிருந்த ஷர்மிளாவோ, “அப்பாவை விடுங்க.” என்று முனக, “ஷட்டப், யாரு உனக்கு அப்பா?” என்று அவளிடமும் கத்தினான் ஷ்யாம்.

     

    அத்தனை நேரம் ஸ்வரூபனை அடக்கியபடி இருந்த அகிலோ, அவனை வர்ஷினியிடம் விட்டுவிட்டு ஷ்யாமை விக்ரமிடமிருந்து பிரிக்க முயன்று கொண்டிருந்தான். மறுபக்கம் விக்ரமின் பாதுகாவலர்களும் இருவரையும் பிரிக்க பெருமுயற்சி செய்து, அதில் வெற்றியும் பெற்றிருந்தனர்.

     

    “ச்சு, இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி…” என்ற விக்ரமோ தன்னை சட்டையை நீவியபடி ஷ்யாமின் அருகே வந்து, “உன் அம்மா இதை தான் சொல்லி தந்தாளா?” என்று வினவ, தன்னை பிடித்திருந்த அகிலை தள்ளிவிட்டு, விக்ரமை அடிக்க செல்ல, இருவருக்கும் இடையில் வந்த ஷர்மிளாவோ, “நிறுத்துங்க. இவரு தான் என் அப்பா.” என்று அழுத்தமாக கூறினாள்.

     

    அடிக்க உயர்த்திய கையை இறக்கிய ஷ்யாமோ, “ஓஹோ, அப்போ பத்து வருஷத்துக்கு முன்னாடி இறந்தது யாரு?” என்று வினவ, “அவரு என்னை வளர்த்த அப்பா.” என்று அவன் முகத்தை பார்க்காமல் கூறினாள் ஷர்மிளா.

     

    அதில் ஷ்யாமின் இரத்த அழுத்தம் உயர, ஒரு பெருமூச்சுடன் தன்னை இயல்பாக்கிக் கொண்டவன், அவன் முன் நின்றவளின் தோளை ஆறுதலாக பற்றியபடி, “உன் தம்பியை காப்பாத்தியாச்சு. சோ, இனி நீ யாருக்கும் பயந்து பொய் சொல்ல தேவையில்லை.” என்று இறுதி வரியை விக்ரமை முறைத்துக் கொண்டே கூறினான்.

     

    ஷர்மிளாவோ, ஷ்யாமின் கைகளை தட்டிவிட்டு, “நான் ஏன் பொய் சொல்லணும்? இது தான் என் அப்பா. அவரோட வேலையால எனக்கு ஆபத்து வரும்னு தான், இத்தனை நாள் வேற பேர்ல, வேற ஒருத்தரோட பொண்ணா இருந்தேன். என் உண்மையான பேரு ஷீதல்!” என்று கூற, அந்த இடமே அமைதியாக இருந்தது.

     

    தொடரும்…

      The post 18 – இதயத்தின் நிறம் பார்த்ததால் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

      ]]>
      https://thoorigaitamilnovels.com/18-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/feed/ 0 17860
      பிறை சூழ் மாயம் – 6 https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/#respond Wed, 08 May 2024 12:37:01 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/ பிறை 6   அன்றைய நாள் இரண்டாவது முறையாக மயங்கிய சஞ்சீவனியை தாங்கிய பொன்னம்மா மீண்டும் அவள் படுத்திருந்த இடத்திலேயே படுக்க வைத்து, அவள் மயக்கத்தை போக்க முயன்று கொண்டிருந்தார்.   அவளும் சில நிமிடங்களில் கண் விழிக்க, முதலில் பார்வையில் பட்ட பொன்னம்மாவை கண்டதும் பயப்பட ஆரம்பித்தாள்.   தன்னையே பார்த்து பயப்படும் சஞ்சீவனியைக் கண்டு ஒரு பெருமூச்சுடன், “நான் சொல்றதை நம்ப கஷ்டமா தான் இருக்கும் சஞ்சீவனி.

      The post பிறை சூழ் மாயம் – 6 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

      ]]>

      Loading

      பிறை 6

       

      அன்றைய நாள் இரண்டாவது முறையாக மயங்கிய சஞ்சீவனியை தாங்கிய பொன்னம்மா மீண்டும் அவள் படுத்திருந்த இடத்திலேயே படுக்க வைத்து, அவள் மயக்கத்தை போக்க முயன்று கொண்டிருந்தார்.

       

      அவளும் சில நிமிடங்களில் கண் விழிக்க, முதலில் பார்வையில் பட்ட பொன்னம்மாவை கண்டதும் பயப்பட ஆரம்பித்தாள்.

       

      தன்னையே பார்த்து பயப்படும் சஞ்சீவனியைக் கண்டு ஒரு பெருமூச்சுடன், “நான் சொல்றதை நம்ப கஷ்டமா தான் இருக்கும் சஞ்சீவனி. ஆனா, அது தான் உண்மை. அதை தெரிஞ்சுக்க வேண்டிய வயசும் உனக்கு வந்துடுச்சு.” என்றவர், அவள் முதுகில் இருக்கும் தழும்பை அவள் பார்வைக்கு படுமாறு கண்ணாடியை காட்டியவர், “நான் சொல்றதுக்கு இது தான் சாட்சி. இந்த தழும்பு எப்போ வந்துச்சு?” என்றார்.

       

      சஞ்சீவனி யோசனையுடன், “எப்போ வந்துச்சுன்னு எனக்கும் சரியா தெரியல. ஆனா, நான் நேத்து தான் கவனிச்சேன். கனவுல வேர்உல்ஃப்…” என்று ஆரம்பித்தவள், தன் கனவுக்கும் இப்போது பொன்னம்மா சொல்வதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்று சிந்திக்க ஆரம்பித்தாள்.

       

      அவள் கூறியதைக் கேட்ட பொன்னம்மா, “உன் கனவே சொல்லுது, உன் பிறப்பின் நோக்கத்தை.” என்றார்.

       

      சஞ்சீவனியின் மனமும் அதை நம்புவதற்கான முதல் படியை எடுத்து வைத்தாலும், அவளுக்கு இருக்கும் கேள்விகளை பொன்னம்மாவிடம் கேட்க ஆரம்பித்தாள்.

       

      “அப்படியே நான் வேர்உல்ஃப் ஹண்டராவே இருந்தாலும், இத்தனை நாள் இல்லாம இப்போ திடீர்னு எதுக்கு இந்த தழும்பு வந்துருக்கு?” என்று வினவினாள்.

       

      “பிறப்புலேயே ஓநாய் மனிதர்களை வேட்டையாடுறவங்களா பிறந்தாலும், அவங்களுக்கு சக்தி கிடைக்குறது என்னவோ அவங்க இருபதாவது வயசுல தான்.” என்று கூறிய பொன்னம்மாவை இடைவெட்டிய சஞ்சீவனி, “ஆனா எனக்கு இப்போ இருபத்திரெண்டு வயசாகுதே.” என்றாள்.

       

      “நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கல.” என்று அவளின் அவசரத்துக்கு குட்டு வைத்த பொன்னம்மா, “வேர்உல்ஃப் ஹண்டருக்கான தேவை எப்போ வரும்?” என்று அவளிடமே கேள்வியும் கேட்டார்.

       

      “வேர்உல்ஃப் ஹண்டருக்கான தேவை…” என்று யோசித்தவளுக்கு அதற்கான பதிலும் கிடைக்க, “அப்போ இத்தனை நாள் இங்க வேர்உல்ஃப் தொல்லை இல்ல. இப்போ இருக்குங்கிறதால இந்த தழும்பு உருவாகியிருக்கா?” என்றாள் சஞ்சீவனி.

       

      அவள் பதிலை பொன்னம்மாவும் ஆமோதிக்க, “ஆனா, ஹண்டருக்கான தகுதி எதுவும் என்கிட்ட இல்லையே. இதுவரை ஹண்டிங் பண்ணது என்ன பார்த்தது கூட இல்ல.” என்று அவள் உதட்டைப் பிதுக்கினாள்.

       

      “ஓநாய் மனிதர்களை வேட்டையாடுறது ஒவ்வொரு ஹண்டருக்கும் அவங்க ரத்தத்துலேயே ஊறுனது. அது உனக்கு போகப்போக புரியும். ஆனா, அதுக்கு முன்னாடி நீ உன்னோட ஆயுதத்தை கண்டுபிடிக்கணும்.” என்றார் பொன்னம்மா.

       

      முதலில் இருந்த பதட்டமும் பயமும் இப்போது சஞ்சீவனியிடம் இல்லை என்று தான் கூற வேண்டும். மாறாக ஒருவித ஆர்வம் அவளை தொற்றிக் கொண்டது.

       

      அதே ஆர்வத்துடன், “ஆயுதமா?” என்று சஞ்சீவனி கண்களை விரித்து கேட்க, “ஆமா, சாதாரணமா இருக்க ஓநாய் மனிதர்களை வெள்ளி கத்தி வச்சு சுலபமா கொன்னுடலாம். ஆனா, சில சக்திவாய்ந்த ஓநாய் மனிதர்களை சாதாரண வெள்ளி கத்தி காயப்படுத்துமே தவிர அவங்க உயிரை எடுக்காது. அதுக்காகவே உருவாக்கப்பட்டது தான் வேர்உல்ஃப் ஹண்டர் குழுத்தலைவருக்கான வாள்.” என்று கூறி பழைய புகைப்படம் ஒன்றை காட்டினார்.

       

      அந்த புகைப்படத்திலும் கூரிய முனை பளபளக்க, கைப்பிடியில் ரத்தச்சிவப்பு நிற மாணிக்க கல் மினுமினுக்க கம்பீரமாக காட்சியளித்தது அந்த வாள்.

       

      அதைக் கண்டு வாயைப் பிளந்தபடி இருந்த சஞ்சீவனியை சுயத்திற்கு அழைத்து வந்தது பொன்னம்மாவின், “இந்த வாளை நீ தான் கண்டுபிடிக்கணும்.” என்ற குரல்.

       

      “எது? நான் கண்டுபிடிக்கணுமா? இப்போ தான் இதை பார்க்குறேன். நான் எப்படி கண்டுபிடிக்க?” என்று அவள் வினவ, “அந்த ஓநாய் மனிதர்கள் கிட்டயிருந்து இந்த வாளை காப்பாத்த, உங்க அம்மா அதை ஒளிச்சு வச்சுருக்காங்க. அந்த வாள் அதுக்கான அடுத்த உரிமையாளருக்காக பல வருஷமா காத்திருக்கு.” என்றார்.

       

      ‘அம்மா’ என்ற சொல் அவள் மனதில் பல்வேறு உணர்வுகளை தோற்றுவித்தாலும், அதை வெளிக்காட்டாமல், “அது சரி, அவங்க ஒளிச்சு வச்சாங்கன்னா எனக்கு எப்படி தெரியும்?” என்றாள்.

       

      பொன்னம்மா ஒரு பெருமூச்சுடன், “டாப்ஹில்லுக்கு போற வழியில ஒரு காட்டுப்பாதை வரும். அங்க கொஞ்ச தூரம் உள்ளப்போனா, காட்டுக்கு நடுல ஒரு பெரிய பங்களா இருக்கும். அது தான் உங்க அப்பா அம்மா வாழ்ந்த இடம். அது இப்போ பாழடைஞ்சு போயிருக்கு. அதை சுத்தி இருக்க காட்டுல தான் எங்கயோ உங்க அம்மா அந்த வாளை ஒளிச்சு வச்சுருக்காங்க. நீ அங்க போனா, அந்த வாளே உனக்கான வழியை காட்டும்.” என்றார்.

       

      அவர் கூறியது அவள் மூளையில் பதிந்தாலும், அவள் மனமோ தன் அன்னை தந்தையை பற்றி கேட்க உந்தியது. அவளும் வாயை திறக்கும் அதே சமயம் பிரத்யூஷா அழைத்திருந்தாள்.

       

      அப்போது தான் மணியை பார்த்து நேரமானதை உணர்ந்த சஞ்சீவனி, அவசரமாக தோழியின் அழைப்பை ஏற்று, “சும்மா ஒரு வாக் வந்தேன் பிரத்யூ. நீ வீட்டுக்கு வந்துட்டியா?” என்றாள்.

       

      மறுபக்கம் என்ன சொல்லப்பட்டதோ, “அச்சோ, சாரி பிரத்யூ, சாவியை நானே எடுத்துட்டு வந்துட்டேன். இதோ ஃபைவ் மினிட்ஸ்ல வந்துடுவேன்.” என்று வேகமாக தன்னிடத்தை விட்டு எழுந்தாள்.

       

      அவள் பொன்னம்மாவிடம், “இன்னொரு நாள் வந்து முழுசா கேட்டுக்குறேன் பாட்டி. இப்போ நான் கிளம்பணும்.” என்று கூற, அவளின் கைகளை பிடித்து நிறுத்திய பொன்னம்மாவோ, “உன் குடும்பத்தை பத்தி மெதுவா தெரிஞ்சுக்கலாம். ஆனா, அந்த வாளை இன்னைக்கே தேடி எடுத்துடு.” என்று கூறினார்.

       

      அவரின் கூற்று அவளை புருவம் சுருங்க வைக்க, “அந்த இடத்துல ஏற்கனவே ஓநாய் மனிதர்களோட நடமாட்டம் ஜாஸ்தியா இருக்குன்னு தகவல் கிடைச்சுருக்கு. அந்த வாள் அவங்க கைக்கு போறதுக்கு முன்னாடி நீ எடுத்தாகணும். இல்லன்னா, அவங்களை அழிக்கவே முடியாம போயிடும்.” என்று எச்சரித்தார் பொன்னம்மா.

       

      அவரிடம் அப்போது ஒன்றும் சொல்லாமல், தலையை மட்டும் அசைத்தவள், அங்கிருந்து அகன்றாள்.

       

      செல்லும் வழியில், ‘இந்த பாட்டி சொல்றதெல்லாம் உண்மையா? அப்பா – அம்மா… ப்ச், இப்போ ரொம்ப அவசியம் இந்த நினைப்பு!’ என்று பல எண்ணங்கள் மனதில் வலம் வந்து கொண்டிருந்தன.

       

      ஒருவழியாக வீட்டிற்கும் வந்து சேர்ந்தாள் சஞ்சீவனி. அங்கு அவளை திட்டுவதற்கென்றே தயாராக இருந்தாள் பிரத்யூஷா.

       

      அவளை சமாளிக்கவே நொடிகள் அனைத்தும் கழிய, அவர்கள் தூங்கப்போகும் சமயமும் வந்தது.

       

      “சஞ்சு, நேத்து மாதிரி கத்தாம இருப்பியா?” என்று பிரத்யூஷா வினவ, ‘க்கும், நைட்டு என்ன நடக்கும்னே தெரியாம இருக்கேன். இதுல இவ வேற!’ என்று மனதிற்குள் நினைத்தவள், வெளியே சிரித்து வைத்தாள்.

       

      *****

       

      சர்வஜனனுக்கு அன்றைய நாளும் பரபரப்பாகவே கழிந்தது. ரோஹித்திடம் கூறியது போல, மேலிடத்தில் அவன் சந்தேகத்தை பற்றிக் கூற, முதலில் அதை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

       

      பின், அந்த காலடித்தட புகைப்படத்தைக் காட்டி, பல விளக்கங்களை கொடுத்ததும் தான் மேலிடம் சற்றாவது காது கொடுத்து அவன் சொல்வதை கேட்க ஆரம்பித்தது.

       

      அதற்கே பல மணி நேரங்கள் அவன் கழித்திருக்க, அந்த கலந்துரையாடல் முடிந்து அவன் வெளியே வந்தபோது, இரவாகி இருந்தது.

       

      வாகனத்தை தேடிச்சென்ற அவனின் குழுவினர், அவர்கள் விட்டுவைத்த இடத்திலும் தேடியிருந்தனர். அங்கு அவர்கள் எதிர்பார்த்ததை போல எதுவும் கிடைக்கவில்லை என்ற தகவலே சர்வஜனனை அடைந்திருந்தது.

       

      “சார், அந்த இடத்துல கொஞ்ச தூரம் போனா ஒரு பாழடைஞ்ச பங்களா இருந்துச்சு. அங்கயும் சேர்ச் பண்ணியாச்சு சார். ஆனா, எந்த தடயமும் கிடைக்கல.” என்றான் சரவணன்.

       

      சர்வஜனன் அதை எதிர்பார்த்தே இருந்தாலும், சரவணன் கூறிய ‘பங்களா’ அவனின் மூளையை குடைந்தது. அவன் உள்ளுணர்வு அங்கு சென்று பார்க்குமாறு கூற, அதை வெளியே யாரிடமும் கூறவில்லை.

       

      இதோ இரவு நேரம் யாருக்கும் தெரியாமல், அந்த பங்களா இருக்கும் இடம் நோக்கி பயணமானான்.

       

      *****

       

      நிலா தேய ஆரம்பித்த இரண்டாவது இரவு… நல்ல உறக்கத்தில் இருந்த சஞ்சீவனிக்கு கனவில் இதுவரை கண்டிராத முகங்கள் மின்னி மின்னி மறைந்தன. எப்போதும் போல கோர்வையாக இல்லாமல், முன்னும் பின்னுமாக காட்சிகள் தோன்றின.

       

      ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் போக, உறக்கத்திலிருந்து விழித்து விட்டாள் சஞ்சீவனி.

       

      விழித்தாலும் அவள் மனம் ஒருநிலையில் இல்லை. யாரோ அவளைக் கட்டுப்படுத்துவது போல உணர்ந்தாள்.

       

      திடீரென்று அந்த வாள் கண்முன் தோன்ற பதறித்தான் போனாள் அவள். இம்முறை எவ்வளவு கத்தியும் பிரத்யூஷா எழுந்து கொள்ளவில்லை. அந்த சூழ்நிலையே அவளுக்கு வித்தியாசமாக இருக்க, மெதுவாக எழுந்தவள், அந்த அறையை விட்டு வெளியே சென்று திரும்பிப் பார்க்க, அந்த வாளும் அவளைத் தொடர்ந்தது.

       

      மனமோ அடித்துக்கொள்ள, சில நொடிகளில் பயத்தை விடுத்து, மெல்ல அந்த வாளை தொட முயன்றாள். ஆனால், அவள் கையோ அதனுள்ளே சென்று மறுபக்கம் வந்தது. அப்போது தான் அது நிஜ வாள் இல்லை என்பதை உணர்ந்தாள்.

       

      அவள் நடுகூடத்தில் அங்குமிங்கும் நடக்க, அந்த வாளும் அவளைப் பின்தொடர்ந்தது.

       

      அதில் கடுப்பானவள், “இப்போ என்னதான் வேணும் உனக்கு?” என்று கத்த, “அந்த வாளே உனக்கான வழியை காட்டும்.” என்ற பொன்னம்மாவின் குரல் கேட்டது.

       

      ஒரு பெருமூச்சுடன் அந்த வாளை பார்த்தவள், “உன்னை எடுக்குற வரைக்கும் இப்படி தான் பயமுறுத்துவியா?” என்று அதனோடு பேச்சுவார்த்தை நடத்தினாள் சஞ்சீவனி.

       

      அது என்ன பதில் கூறியதோ, இல்லை அவள் என்ன உணர்ந்தாளோ, மெல்ல வீட்டை விட்டு வெளியேறியவள், பிரத்யூஷாவின் டியோவில் அவள் அன்னை தந்தை வாழ்ந்த இடத்தை நோக்கி பயணமானாள்.

       

      *****

       

      சுற்றிலும் கருநிறத்தை அள்ளி பூசியது போலிருக்க, பத்தாவது முறையாக டார்ச் எடுத்து வராத தன் மடத்தனத்தை எண்ணி தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்.

       

      பொன்னம்மா கூறியது போல அந்த காட்டுப்பாதையில், ஒற்றை பூவையாய் கையில் அலைபேசி ஒளியுடன் நடந்து கொண்டிருந்தவளின் உடல் பயத்தில் தடதடத்துக் கொண்டிருந்தது. அதையும் மீறி ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

       

      ஒவ்வொரு அடிக்கும் எதிர்பாட்டாக மற்றொரு அடி கேட்க, அது எந்த திசையிலிருந்து வருகிறது என்று அவளால் கணிக்க இயலவில்லை.

       

      ‘ஐயோ, இந்த பாட்டி சொன்னதைக் கேட்டு, இப்படி நைட்டு நேரம் வந்து மாட்டிக்கிட்டேனே! இப்போ திரும்பிப் போகவும் பயமா இருக்கு, முன்னாடி முன்னேறவும் பயமா இருக்கு. இதுல எங்க அந்த வாளை கண்டுபிடிக்குறது?’ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.

       

      இப்போது அவள் பின்னே காலடிச்சத்தம் வேகமாக கேட்க, பயத்தில் அவளும் வேகத்தை அதிகரித்திருந்தாள்.

       

      கூடவே, அவள் மீது ஏதோ வெளிச்சமும் படர, சட்டென்று தன் நடையை நிறுத்தி உறைநிலைக்கு சென்றாள் சஞ்சீவனி.

       

      “யார் அது?” என்று அழுத்தமான ஆண்குரல் கேட்க, மூச்சுக்கே பஞ்சமாகிப் போன வேளையில் பேச்சு வருமா என்ன சஞ்சீவனிக்கு?

       

      அந்த பதட்டத்தில் அந்த ஆண்குரலை அடையாளம் காணவும் முடியவில்லை அவளால்.

       

      உறைநிலையில் இருந்தவளை உருக வைக்கவென்று, அவள் முன் வந்தான் அவன், சர்வஜனன்.

       

      *****

       

      சரவணன் கூறிய பங்களாவை நோக்கி நடந்தவன், சற்று நேரத்திலேயே அவனுக்கு முன்னர் யாரோ நடப்பதை உணர்ந்து கொண்டான். சில நொடிகள் மௌனமாக பின்தொடர்ந்து யாரென்று யூகிக்க முயன்றான்.

       

      அவன் யூகமோ முன்னே செல்லும் நபர் ஆபத்தானவர் அல்ல என்று கணிக்க, மெதுவாக அந்நபரின் நோக்கத்தையும் அறிய முயன்றான்.

       

      சில நிமிடங்களும் கழிய, அவர்கள் நடைக்கும் முடிவில்லை, நோக்கத்தை அறிந்து கொள்ளவும் வழியில்லை என்ற நிலை ஏற்பட, தன் கையிலிருந்த டார்ச்சை உயிர்ப்பித்து முன்னே சென்ற நபரின் மீது வெளிச்சம் படுமாறு காட்ட, அதன் வெளிச்சம் அந்நபரை பெண் எனக் காட்டியது.

       

      இந்நேரத்தில் இங்கு ஒரு பெண்ணா என்ற யோசனையுடன் தான் அவன் யாரென்று வினவியபடி அவள் முன் வந்து நின்றான்.

       

      இருவருமே மற்றவரை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களின் அதிர்ந்த முகத்தில் தெரிந்தது.

       

      முதலில் அதிர்ச்சியிலிருந்து வெளிவந்த சர்வஜனன் சஞ்சீவனியிடம், “நீ இங்க என்ன பண்ற?” என்று வினவ, அவளோ விடை தெரியாத குழந்தைகளுக்கு மத்தியில் கேள்வியே புரியாத குழந்தையாய் முழித்துக் கொண்டிருந்தாள்.

       

      அந்நொடியிலும் அவள் முகபாவனை அவனை ஈர்க்க, கேட்ட கேள்வி மறந்தவனாக அவனும் அவளையே நோக்கிக் கொண்டிருந்தான்.

       

      இருவரும் கலைந்தது என்னவோ அருகிலுள்ள புதரிலிருந்து கேட்ட சத்தத்தில் தான்.

       

      இருட்டில் புதருக்கு இடையில் இருப்பது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்தவன், அவள் வந்த காரணத்தை கூட அறிந்து கொள்ள விழையாமல், “ஃபர்ஸ்ட் இங்க இருந்து போவோம்.” என்று அவளிடம் கூறினான்.

       

      அவளும் தானே அந்த சத்தத்தைக் கேட்டு பயந்திருந்தாள்!

       

      உடனே, தலையசைத்து அவனுடன் கிளம்ப ஆயத்தமானாள்.

       

      அந்த இடம் முழுவதுமே சேற்றினால் நிரம்பியிருந்தது. மேலும், கும்மிருட்டாக இருந்த இடத்தில், எங்கு கால் பதித்து, எப்படி நடப்பது என்றே சஞ்சீவனிக்கு புரியவில்லை.

       

      அப்போது சர்வஜனனின் ஜில்லென்ற கரம் அவளின் கரத்தை இறுக்கமாக பற்ற, ஜிவ்வென்று உள்ளுக்குள் வெப்பம் பரவுவதை உணர்ந்தாள் அவள். ஆனால், அந்த ஜிவ்வென்ற உணர்வு எதனால் என்று யோசிக்கும் முன்னரே அவனின் குரல் அவளின் சிந்தனையை கலைத்திருந்தது.

       

      “இங்க பாதை வழுக்குற மாதிரி இருக்கு. சோ, கேர்ஃபுல்லா நட.” என்று கூறியவன், முன்னே நடக்க, அவளோ அவன் கைப்பாவையை போல சுயவுணர்வின்றி அவன் பின்னே நடந்தாள்.

       

      அவன் எதற்கோ நிற்க, அதை உணராமல், அவன் மீதே மோதிக் கொள்ள, அதில் அவளுக்கு என்னவாகிற்று என்று பார்ப்பதற்காக திரும்பினான் சர்வஜனன்.

       

      சரியாக அதே சமயம், கருநிற வானத்தில் மின்னல் வெட்டி அந்த இடத்தை நொடிப்பொழுது வெளிச்சமாக்க, இங்கு இருவரும் ஒருவருக்கொருவர் பார்வையால் தழுவிக் கொண்டனர்.

       

      அவனின் பழுப்பு விழிகளிலேயே அவளின் விழிகள் நிலைத்து விட, அவனின் பார்வையோ, பாவையின் இளஞ்சிவப்பு அதரங்களில் நிலை கொண்டிருந்தது.

       

      அப்போது திடீரென்று அந்த இடத்தில் கேட்ட உறுமல் சத்தத்தில் இருவரும் தங்கள் மோன நிலையிலிருந்து வெளிவந்தனர். வெவ்வேறு திசையில் திரும்பி இருந்தாலும், இருவரின் மூச்சுக்காற்று ஓசை கூட மற்றவர்களுக்கு தெளிவாக கேட்டது. காரணம், அத்தனை அருகில் நெருங்கி நின்றிருந்தனர்!

       

      முதலில் தெளிந்த சர்வஜனன், அவளை நோக்காமல், “இந்த இடத்தை விட்டு சீக்கிரம் கிளம்பணும். எதுவா இருந்தாலும் மார்னிங் வந்து நான் பார்த்துக்குறேன்.” என்று கூற, அவளோ பதில் சொல்லும் நிலையிலேயே இல்லை.

       

      அதை உணர்ந்து கொண்டவனாக, முன்போலவே அவளின் கரத்தை பற்றியபடி நடந்தான்.

       

      ஆனால், சற்று நேரத்திலேயே, அந்த உறுமல் சத்தம் இவர்கள் திரும்பிச் செல்லும் வழியில் கேட்பது போலவும், நொடிகள் கடக்க, அந்த சத்தம் நெருங்கி வருவதை போலவும் இருக்க, முன்னேறி செல்வது ஆபத்து என்பதை அறிந்து, சட்டென்று அவளுடன் அருகிலிருந்த பாறைக்கு பின்னே மறைந்தான்.

       

      அந்த பாறை சற்று பெரிதாக இருக்கவே, இருவரையும் கச்சிதமாக மறைத்தது.

       

      சஞ்சீவனிக்கு நடப்பது கனவா நனவா என்றே புரிபடவில்லை. அப்போது அவளின் மூளை ஏதோ செய்தியை அனுப்பி அவளை சுயத்தை அடைய பணித்தது.

       

      மூளை கூறிய செய்தியில் சட்டென்று கீழே பார்க்க, சர்வஜனனின் கரமோ அவளின் அபாயகரமான இடத்தை சுற்றி அணைவாக பிடித்திருந்தது.

       

      அவனுக்கு அந்த யோசனையே இல்லை போலும். ஆனால், பெண்ணவளோ கூச்சத்தில் நெளிந்து கொண்டிருந்தாள். வாய் திறந்தும் கூற முடியாத நிலை அவளுக்கு!

       

      அவள் நெளிவதை சற்று தாமதமாகவே புரிந்து கொண்ட சர்வஜனனோ, “ஷ், யாரோ இல்ல எதுவோ இந்த பக்கமா தான் வர மாதிரி இருக்கு. சோ, கொஞ்ச நேரம் அமைதியா இரு.” என்று சூழ்நிலை புரியாமல் அதட்ட, சஞ்சீவனியோ எப்படி சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

       

      அவளின் முகபாவனையை பார்த்தவன், “என்னாச்சு? எதுக்கு இப்படி முழிக்குற?” என்று வினவ, அவளோ கண்களால் அவன் கரத்தை நோக்க, அவனும் அப்போது தான் அவன் கரத்தை, அது இருக்கும் இடத்தையும் கண்டான்.

       

      “ஓஹ் சாரி!” என்று வேகமாக கரத்தை இழுத்துக் கொண்டவன், மற்றைய புறம் திரும்பிக் கொண்டான்.

       

      இருவருமே படபடப்பில் இருந்ததை அவர்களின் உடல்மொழியே மற்றவர்களுக்கு காட்டிக் கொடுத்தது.

       

      இருவரின் அந்நிலையை கலைத்தது அருகில் கேட்ட சத்தம். அதைக் கேட்டு, லேசாக மறைவிலிருந்து எட்டிப் பார்த்தவர்கள் கண்டது….

       

      மாயம் தொடரும்…

        The post பிறை சூழ் மாயம் – 6 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

        ]]>
        https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/feed/ 0 17857
        71, இறுதி பகுதி – என் முதலோடு முடிவானாய் https://thoorigaitamilnovels.com/71-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae/ https://thoorigaitamilnovels.com/71-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae/#comments Wed, 08 May 2024 03:20:13 +0000 https://thoorigaitamilnovels.com/71-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae/ அத்தியாயம் 70 ஜெயராமனின் மூலம் தமனைப் பிடிக்கும் வேகம் அதிகரித்தது. அரண்மனையில் சுரங்கப் பாதை இருப்பதாகவும், அது மற்றவர்கள் கண்ணிற்கு புலப்படாதபடி அரண்மனைக்கு அடித்தளத்தில் பெரிய சுவற்றினால் ஆன கதவினைத் திறந்தால் மட்டுமே வெளிப்படும் எனவும் தெரிய வந்தது. இங்கு தமனின் முகம் சீற்றத்தில் சிவந்தது. ‘உத்ஷவிக்கு கொடுக்கப்பட்ட அதிர்ச்சியில், அவள் மீண்டும் இங்கு வந்திருக்க வேண்டுமே! இந்த ஆடியோவைக் கேளாமல் அவளால் எப்படி நிம்மதியாக இருக்க முடிகிறது. எப்படி

        The post 71, இறுதி பகுதி – என் முதலோடு முடிவானாய் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

        ]]>

        Loading

        அத்தியாயம் 70

        ஜெயராமனின் மூலம் தமனைப் பிடிக்கும் வேகம் அதிகரித்தது. அரண்மனையில் சுரங்கப் பாதை இருப்பதாகவும், அது மற்றவர்கள் கண்ணிற்கு புலப்படாதபடி அரண்மனைக்கு அடித்தளத்தில் பெரிய சுவற்றினால் ஆன கதவினைத் திறந்தால் மட்டுமே வெளிப்படும் எனவும் தெரிய வந்தது.

        இங்கு தமனின் முகம் சீற்றத்தில் சிவந்தது.

        ‘உத்ஷவிக்கு கொடுக்கப்பட்ட அதிர்ச்சியில், அவள் மீண்டும் இங்கு வந்திருக்க வேண்டுமே! இந்த ஆடியோவைக் கேளாமல் அவளால் எப்படி நிம்மதியாக இருக்க முடிகிறது. எப்படி வராமல் போயிருப்பாள்?’ என்று எண்ணி எண்ணி அவனது மனநிலைக் குலைந்தது.

        இங்கு ஜெயராமனோ, “அவன் அவ்ளோ சீக்கிரம் அந்த கதவை திறக்க மாட்டான். நான் வந்தா கூட. அவனுக்கா தோணுனா தான் திறப்பான். இல்லன்னா, அதுக்குள்ளே போகவே முடியாது” என்றிட,

        உத்ஷவி அப்போது தான் உறக்கத்தில் இருந்து விழித்து அங்கு வந்தாள். கூடவே ஒரு யோசனையும்.

        ஸ்வரூப், “இப்ப ஓகே வா டி” எனக் கேட்க, தலையசைத்தவள், “ஸ்வரூ, அவனை சீக்கிரமா பிடிச்சாகணும்” என்றிட, “ம்ம் பிடிச்சுடலாம். உள்ள தடாலடியா நுழைஞ்சுடலாம்.” என்றான்.

        “வேணாம். அப்படி நுழைஞ்சு அவன் தப்பிச்சுட்டா, மறுபடியும் பிடிக்கிறது கஷ்டம்.” என்றதும், “வேற என்ன பண்ண சொல்ற?” என்றான் சஜித்.

        “நான் போறேன்” என அவள் உறுதியுடன் கூற, ஸ்வரூப் அவளை முறைத்தான்.

        “என்கிட்ட அடி வாங்கிட்டு போயிடாத…” என ரௌத்திரத்துடன் கூற,

        “அவன் கடைசியா என்கிட்ட ‘நீயே என்னை தேடி வருவ’ன்னு சொன்னான் ஸ்வரூ. அதுக்கு என்ன அர்த்தம்? அந்த ஆடியோவை கேட்டே ஆகணும்ன்னு என்னை கண்ட்ரோல் பண்ணிக்க முடியாம, திணறி அங்க வருவேன்னு தான… அப்போ அவன் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பான். இந்த சான்சை விட்டா, ஈஸியா அவனைப் பிடிக்க முடியாது” என்றாள் தீவிரமாக.

        “அடி அறிவு கெட்டவளே அதுக்காக திரும்ப நீ அங்க போய் சிக்கப் போறியா. அதெல்லாம் வேணாம். அப்படி போகணும்ன்னா நான் போறேன்” என்று விஹானா மூக்கு விடைக்க முறைத்தாள்.

        அக்ஷிதாவும் “ஆமா, நானும் வரேன்.” என்று உடன் சேர, ஜோஷித் “நீங்க என்ன டூருக்காடி போறீங்க. ஆள் ஆளுக்கு கிளம்பிட்டு இருக்கீங்க. யாரும் போக வேணாம். அவனை வேற மாதிரி ஹேண்டில் பண்ணிக்கலாம்” என்றான்.

        உத்ஷவியோ, “நீங்க கொஞ்சம் சும்மா இருங்க டார்ல்ஸ்” என்று விட்டு, “ஜோ… இப்ப நான் போனா, அவனாவே அவனோட முயற்சி சக்ஸஸ் ஆகிடுச்சுன்னு என்னை உள்ள விடுவான். அதை யூஸ் பண்ணி நீங்களும் வந்துடுங்க.” என்றதும், சஜித் மறுப்பாக தலையாட்டினான்.

        ஸ்வரூப்போ கடினத்துடன் நிற்க, அவன் கையைப் பற்றிகொண்டவள் “டைனோசர்… நீயாவது புருஞ்சுக்கோ. இந்த ஐடியா கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும். நான் ஒண்ணும் உயிர்த்தியாகம் செய்யலாம் போகல. நீ என்னை காப்பாத்திடுவன்ற நம்பிக்கைல தான் சொல்றேன்.” என்றாள் அவனை சம்மதிக்க வைக்கும் பொருட்டு.

        “அதுக்காக உன்னை பணயம் வைக்க சொல்றியாடி?” குரல் தழுதழுக்க அவன் கேட்க, “இல்ல… நம்மளோட இத்தனை நாள் உழைப்பை பணயம் வைக்க சொல்றேன். இவ்ளோ கஷ்டப்பட்டு, எல்லாமே வேஸ்ட் ஆகிட கூடாது டைனசோர். நீ தான சொல்லிருக்க, நம்ம குடும்பம் ஊர் மக்கள்ன்னு வரும் போது நம்மளோட விருப்பு வெறுப்புக்கு இடம் இல்லைன்னு… நம்மளோட கடைசி வாய்ப்பு, அவன் தப்பிக்கக்கூடாது. அவ்ளோ தான்.” என்றதும், அவளை ஒருகணம் சலனமற்றுப் பார்த்தான்.

        “நீ ஸ்ட்ராங்கா இருக்கியா?” அவன் அழுத்தமாகக் கேட்க, அவள் உடனடியாக, “நீ என் கூட இருக்கும் போது ஸ்ட்ராங்கா இல்லாம எப்படி இருப்பேன். வெரி ஸ்ட்ராங்” என்றாள் கையை மடக்கிக்காட்டி.

        “ஒருவேளை உன்னைக் காப்பாத்த முடியலைன்னா…?” ஸ்வரூப் அவளை சுவாரஸ்யத்துடன் பார்க்க,

        “உன்மேல இருக்குற நம்பிக்கையை நீ என்னைக்கும் உடைக்க மாட்ட டைனோசர்.” என்றாள் தலையை சாய்த்து.

        அதில் ஒற்றைப் புருவம் உயர்த்தியவன், “லெட்ஸ் ப்ரொசீட்” என்றிட, “என்னடா நீயும்…” என்று ஜோஷித் கடுகடுத்தான்.

        “ஆமா இதுங்க நம்பிக்கையை வச்சு விளையாட அந்த சைக்கோ தான் கிடைச்சான்…” என அக்ஷிதா தலையில் அடித்துக் கொண்டாள்.

        திட்டமிட்டபடி, உத்ஷவி மட்டும் அரண்மனைக்குச் சென்றாள். இதயம் படபடவெனத் துடித்தாலும், தன்னவன் மீதிருந்த நம்பிக்கை துளியும் குறையவில்லை.

        உத்ஷவியை சிசிடிவி மூலம் கண்டதும், தமனின் விழிகள் சந்தோஷத்தில் மிதந்தது.

        அதீத சந்தோசம் அவனது கவனத்தை சிதற வைக்க, அவளை உள்ளே அழைத்து வர, ஆள்களை அனுப்பினான்.

        எங்கிருந்தோ வந்த இருவர், அவளை அரண்மனைக்கு அடியில் இருக்கும் மர்மப் பாதைக்கு இட்டுச் செல்ல, அந்த மிகப்பெரிய சுவர் திறந்தது. உள்ளே கும்மிருட்டு. அதன் வழியே தான் அவர்கள் வந்தாக வேண்டும். அந்த இருட்டு அவளை அழைத்துச் செல்ல வந்த இருவருக்கும் பழகிப் போனது போல.

        ஆனால், உள்ளே நுழைந்த கணம் சுவர் தானாக மூடிக்கொள்ள முனைய அதன் வழியே புகுந்த ஸ்வரூப் உத்ஷவியின் வாயை மூடி வெளியில் தள்ளி விட்டு, அந்த ஆட்களுக்கு இடையில் அவன் நின்று கொண்டான்.

        உத்ஷவிக்கு ஒரு கணம் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அதன் பிறகே கைகளில் கொடுத்த அழுத்தம் தன்னுடையவனது என்று புரிய அதிர்ந்து போனாள்.

        —-

        திட்டமிட்டபடி விஹானாவும் அக்ஷிதாவும் வந்து உத்ஷவியை அழைத்துக்கொள்ள, “இது உங்க பிளான் தானா” என்றாள் விழி சிவக்க.

        “ஆமாடி. ஸ்வரூப் என்ன ஆனாலும் உன்னை திரும்ப உள்ள அனுப்ப முடியாதுன்னு முடிவா இருந்தான். அதான்…” என விஹானா கூறியதில், “அவனுக்கு என்ன ஆகுமோ” என்ற பயம் அவளை பிய்த்துத் தின்றது.

        உள்ளே சென்றதும், ஸ்வரூப்பைக் கண்ட தமனின் கண்களில் அதிர்ச்சியும் ஆத்திரமும் வழிந்தது.

        “டேய்… என்னையவே ஏமாத்துறீங்களா?” என எகிறியவனின் மாஸ்க்கை கழற்றிய ஸ்வரூப், “உன்னை ஏமாத்துறது கஷ்டமாடா.” என இழிவாய் இதழ் விரித்தான்.

        கூடவே, பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்திட, தமன் மற்றவர்களுக்கு கண் காட்டியதில், அவனது ஆட்கள் நாயாய் மாறி அங்கும் இங்கும் திரிந்து மூர்க்கத்தனமாய் ஸ்வரூப்பை தாக்க முயன்றனர்.

        அனைவரும் இளைஞர்கள். அவர்களில் ஒருவனை அடக்குவதே பெரும் கடினம். அத்தனை பேரையும் நோக்கி சுட்டுத் தள்ளியவன், சிலரை அடித்து தள்ளி விட, அவர்களும் இவன் மீது விழுந்து பிராண்டி, தாக்கினர். அதற்குள், படபடவென சுட்டபடி ஜோஷித்தும் சஜித்தும் வந்து விட, அவர்களைக் கண்டதும் ஸ்வரூப் முறைத்தான்.

        “உன்னை தனியாலாம் விட முடியாது” என்று ஜோஷித்தும் முறைக்க, மூவரும் முடிந்த மட்டும் சுட்டுக்கொண்டே இருந்தனர். ஆனால் ஆள் குறைந்தபாடில்லை. இத்தனை பேரையும் எப்படி தான் அடைத்து வைத்திருக்கிறான் என்ற ஆச்சர்யமே எழுந்தது.

        வெளியில் ஸ்வரூப்பின் ஆட்கள் சுவரை ட்ரில் செய்து உடைக்க முயன்றனர். “சீக்கிரம் உடைங்க” என்று பெண்கள் மூவரும் அவசரப்படுத்த, அதற்குள் காவலர்களும் ஆம்புலன்சும் வந்து சேர்ந்தது.

        உள்ளே இருந்தவர்களை அடக்குவதற்குள் மூவருமே இரத்தக்களரி ஆகி விட்டனர்.

        தமன் கோபத்துடன் அங்கிருந்து நகரப்போக, ஸ்வரூப் அவனை வளைத்துப் பிடித்துக் கொண்டான். “எங்கடா எஸ்கேப் ஆகுற நாயே…” என அவனை இறுக்கிப் பிடிக்க, “என்னைப் பகைச்சுக்காத அது உனக்கு நல்லது இல்ல” என்று அந்நிலையிலும் மிரட்டினான்.

        “எங்களைப் பகைச்சுக்கிட்டா உனக்கு எவ்ளோ கெட்டதுன்னு தெரியாம போய்டுச்சு ராசா.” என சஜித் நக்கலுடன், அவனைப் பிடித்திட, வெளிச்சுவர் உடைக்கப்பட்டு அனைவரும் உள்ளே வந்தனர்.

        தத்தம் மனம் கவர்ந்தவர்களின் காயத்தைக் கண்டு மனம் கலங்கிப் போனது பாவைகளுக்கு.

        ஆனால், உள்ளே நுழைந்த மூவருமே அதிர்ச்சி மறையாமல் நின்றனர்.

        அங்கு நின்றது ராகேஷ் ஆகிற்றே! தமன் என்ற பெயரில் இத்தனை நாட்களும் சைக்கோ வேலையில் ஈடுபட்டது ராகேஷா? என முற்றும் குழம்பி விஹானா, “டேய் பாஸ்… நீயாடா சைக்கோ…” என மிரண்டவள், நல்லவேளை வெறும் அடியோட விட்டான் என கன்னத்தில் கை வைத்துக்கொண்டவளுக்கு திகைப்பு இன்னும் மறையவில்லை.

        உத்ஷவியோ, “என்னடா நடக்குது இங்க? இவன் ராகேஷ் தான?” எனக் கேட்க,

        “சாட்சாத் ராகேஷே தான். ராகேஷ் தமன் இவன் முழுப்பெயர். வெளி உலகத்துக்கு வெறும் ராகேஷ் தான். இவனுக்கு ட்வின் ஒருத்தன் இருக்கான். அவன் பேர் சுமன் ராகேஷ். ஆனா, அவனை பரிமளாவோட தங்கச்சி தானே வளர்த்துக்குறதா வெளிநாட்டுக்குக் கூட்டிட்டு போக, சமீபத்துல அவங்க இறந்துட்டாங்க. சோ, சுமன் இங்க வந்துட்டான். அவனையும் இந்த நாய் சோதனை எலியா யூஸ் பண்ணி, அடிமையாக்கி இருக்கு. என் ஆளுங்க இது தெரியாம ராகேஷ்க்கு பதிலா இவனோட டிவின்ன கடத்திட்டு வந்துட்டாங்க. ரிமெய்னிங் உங்களுக்கே தெரியும்.” என்றான் ஸ்வரூப் அவ்தேஷ்.

        “யப்பா போதும்டா. ஒவ்வொரு விளக்கமும் கேட்க கேட்க மயக்கம் வருது” என உத்ஷவி நொந்து கொள்ள, அக்ஷிதாவிற்கோ “எவ்ளோ தைரியம் இருந்தா சைக்கோ கொலைகாரனோட நீ திருட்டு வேலை பார்த்துருப்ப” என்று தன்னை தானே அறைந்து கொண்டாள்.

        ஜோஷித், ராகேஷை பாவம் பாராமல் வெளுத்து வாங்கினான்.

        அவன் கன்னம் தேய்ந்து சிவந்து போகும் அளவு அடித்துக் கொண்டே இருக்க, அக்ஷிதாவை விட்டு உத்ஷவியை வெளியில் அழைத்துச் செல்ல உத்தரவிட்டான் ஸ்வரூப்.

        அவளும் தனது மனநிலைக்கு பயந்து வெளியில் சென்று விட, விஹானா தான், “ஐயோ ஜோஷ். ஏன் அவனை இந்த அடி அடிக்கிற. சுட்டுத்தள்ளிடுங்க ஒரே வேலையா முடிஞ்சுடும்…” என்றவள்,

        “அய்யயோ நான் பாட்டுக்கு திருட்டிட்டு மட்டும் தான் இருந்தேன். இப்போ என்னை கொலை பண்ண சொல்ற அளவு ஸ்லீப்பர் செல்லா கொண்டு வந்துடீங்களே டா” என அங்கலாய்த்தாள்.

        “ஏய்…” என ஸ்வரூப் பல்லைக்கடித்து முறைக்க, ஜோஷித்தோ “உன்னை அடிச்சு கஷ்டப்படுத்துவன் செத்துப் போய்ட்டானேன்னு நானே பீலிங்க்ல இருந்தேன். நல்லவேளை சாகல. அதான் இப்ப ஆசை தீர அடிச்சுட்டு இருக்கேன்” என்றவனின் காதலில் மெய்யுருகிப் போனாலும்,

        “ஏண்டா பணங்கா மண்டையா நானே சைக்கோக்கு கைப்பிள்ளை வேலை பார்த்து இருக்கேன்ற மிரட்சில இருக்கேன். உனக்கு இப்போ பழி வாங்குறது முக்கியமா?” என இடுப்பில் கை வைத்துக் கேட்டதில், சஜித் “குட் பாயிண்ட்” என்று அவளுக்கு ஹைஃபை கொடுத்துக் கொண்டான்.

        “ப்ச் போதும் பேசுனது. இவனை வெளில விடுறது வெரி டேஞ்சரஸ். ஆனாலும் சட்டுன்னு கொல்ல மனசு வரல. என்ன பண்ணலாம்?” என யோசித்திட, அங்கு விக்னேஷும் ஜெயராமனும் அழைத்து வரப்பட்டனர்.

        மூவரையும் உத்ஷவிக்கு நேர்ந்தது போலவே அனைத்தையும் செய்து, தமன் மற்றவர்களை அடிக்க உபயோகித்த பிரம்பை வைத்து, அவர்கள் மூவரையும் உயிர் போகும் அளவு அடித்து வெறியை தீர்த்துக் கொண்டான் ஸ்வரூப் அவ்தேஷ்.

        இறுதியில் உயிர் தொக்கி நின்ற நேரத்தில், சஜித் அவர்களை படபடவென சுட்டு தள்ளினான்.

        “போதும் டா… உனக்கு பிபி ஏறிட போகுது. வா…” என்று ஸ்வரூப்பை அடக்கி வெளியில் அழைத்து வந்தனர். மீதி பேரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

        மிகப்பெரிய சுமையை இறக்கி வைத்தது போல அப்போது தான் ஆசுவாசமாக மூச்சு விட்டனர் ஆறு பேரும்.

        “ஹ்ம்ம்… சிங்கிள்ஸ் ஆ ஆரம்பிச்ச இன்வெஸ்டிகேஷன கபிள்ஸா முடிச்சு வச்சிருக்கோம்” என்று சஜித் சிலாகித்துக் கொள்ள, இதுல பெருமை வேற என உத்ஷவி முணுமுணுத்தாள்.

        அவளே ஸ்வரூப்பின் மீது கோபத்தில் இருந்தாள். அவன் வந்ததுமே படபடவென அடித்தவள், “ஏன்டா இப்படி போய் மாட்டுன. அவன் ஏதாச்சு செஞ்சுருந்தா… அறிவு இருக்காடா உங்க மூணு பேருக்கும்.” என்று மூவரையும் சேர்த்தே திட்ட,

        ஜோஷித் “உனக்கு மட்டும் பொங்குது பாரு. தெரிஞ்சே உன்னை ஆபத்துல எப்படி தள்ளி விடுவோம். அவனே ஒத்துக்கிட்டு இருந்தாலும் நாங்க ஒத்திருக்க மாட்டோம்” என்றான் முறைப்பாக.

        எப்போதும் போல் அவர்களது அன்பு இப்போதும் வியப்பையே கொடுத்தது.

        “ஓகே ஒரு மிஷன் கம்ப்ளீட்டட். இன்னொரு மிஷனையும் முடிச்சுடுவோமா?” எனக் கேட்ட சஜித்தை உத்ஷவி புரியாமல் பார்த்தாள்.

        இறுதி பாகம்

        விஹானாவிற்கும் அக்ஷிதாவிற்கும் புரிந்து விட, “அதை முதல்ல செய்ங்க. நான் ரொம்ப வெய்ட் பண்றேன்” என்றதும், உத்ஷவி கேட்டும் பதில் சொல்லவில்லை.

        “என்னங்கடி உங்க ஆளு சொன்னதும் என்கிட்டயே சஸ்பென்ஸ் வைக்கிறீங்க.” என்று சிலுப்பிக்கொண்டு, “நான் என் சைட்டு கிட்ட கேட்டுக்குறேன்” என்று ஸ்வரூப்பிடம் கேட்க, அவனோ அமைதி காத்தான்.

        “போடா…” என முறுக்கிக்கொண்டவள், ஜெட்டில் பயணித்தபோதும் உர்ரென வந்தாள். அவன் அதற்கு சமாதானம் செய்யாததால் இன்னும் கொஞ்சம் கோபம் வந்தது.

        நேராக ஆடவர்களின் வீட்டிற்கு தான் அழைத்துச் சென்றனர். ஒரு கணம் மூவரில் உத்ஷவி அதிகமாகத் தயங்க, அவர்களைக் கண்டதும் தான் வீட்டினருக்கு நிம்மதி பிறந்தது.

        அவர்களின் காயம் கண்டு வருந்தினாலும், இந்த அளவு இப்பிரச்சனை முடிந்ததே நிம்மதியாக இருக்க, சஜித் ஹஸ்கி குரலில், “ஏய் அரைவேக்காடுங்களா… உங்களை தான் கல்யாணம் பண்ணிக்க போறோம்ன்னு வீட்ல சொல்லியாச்சு. கொஞ்சம் சமத்தா, போய் சாஸ்டாங்கமா அவ அவ மாமனார் மாமியார் கால்ல விழுந்து கரெக்ட் பண்ணிடுங்க” என்று மூவருக்கும் அறிவுரை கொடுக்க, அவர்களோ விழித்தனர்.

        ஜோஷித் விஹானாவை பிடித்து தனது தாய் தந்தையிடம் ஆசி பெறும் பொருட்டு காலில் விழுந்து விட, சஜித்தும் அதனைப் பின் பற்றினான்.

        அக்ஷிதா, “எனக்கு ஒண்ணுமே புரியல சஜூ. நாளைல இருந்து தினமும் இதை பாலோ பண்ணிடுறேன்.” என்று பாவமாகக் கூறிட, “தினமுமா?” என சிரித்து விட்டான்.

        உத்ஷவியும் காலில் விழ வேண்டுமோ என ஸ்வரூப்பைப் பார்க்க அவனோ உள்ளே வந்ததுமே “எங்க அந்த ஆளு?” எனக் கேட்டான்.

        சாணக்கியர் உள்ளே கண்ணைக் காட்ட, சஜித் உடனடியாக உள்ளே சென்று அறையில் அடைத்து வைத்திருந்த பூமிநாதனை கிழிந்த நாராக வெளியில் இழுத்து வந்தான்.

        அவரைக் கண்டதும் உத்ஷவி அதிர, ஸ்வரூப் அவளை காட்டத்துடன் பார்த்தான்.

        “கடைசி வரை சொல்லுவன்னு எதிர்பார்த்தேன்” என்றவனின் கூற்றில் சிறிதான ஆதங்கம்!

        “உனக்கு எப்படி?” உத்ஷவி பேச இயலாமல் தடுமாற,

        “விக்னேஷ் உன் அத்தான்னு உன் பார்வையிலயே கண்டுபிடிச்ச நான், இந்த ஆளு உன் அப்பான்னு கண்டுபிடிக்க மாட்டேனாடி.” எனக் கோபத்துடன் கேட்க, அவள் இதழ் கடித்து நின்றாள்.

        இவர்கள் வரவை அறிந்து யசோதாவும் வந்து விட, அவருக்கு மனதே இடிந்திருந்தது.

        தகப்பனின் குணத்தைக் கண்டு பெண்கள் இருவரும் அங்கு இருக்க இயலாமல் அவர்கள் வீட்டிற்கு சென்று விட, இஷானாவிற்கு ஸ்வரூப்பைப் பார்க்க பயமாக இருந்தது. ப்ரீத்தன் வாடி வதங்கிய நிலையில் வீட்டிற்கு அனுப்பப்பட்டான். அந்த டாக்குமெண்ட்டும் அழிக்கப்பட்டதில், அவன் தளர்ந்து விட்டான்.

        அவர்களிடம் இருந்து அவ்தேஷ குடும்பத்தின் பட்டமும், சொத்துக்களும், மரியாதையும் பறிக்கப்பட்டது.

        ராகேஷின் தந்தையையும் சுட்டுக் கொன்றனர்.
        இத்தனையும் செய்தபிறகே வீட்டிற்கு வந்திருந்தனர்.

        ஸ்வரூப், உத்ஷவியை முறைத்து “உன் செருப்பை எடுத்துட்டு வா” என்றிட,

        அவள் புரியாமல் பார்த்தாள்.

        “உன் செருப்பை எடுத்துட்டு வாடி!” ஸ்வரூப் கடுமையுடன் கூற, அதில் வாசலில் கழற்றிய ஒரு செருப்பை எடுத்து வந்தவளிடம், “அடி!” என பூமிநாதனைக் கண் காட்டினான்.

        “ஸ்வரூ?” உத்ஷவி கண்களால் மறுக்க, “நீ தான சொன்ன, உன் அப்பனை தேடிக் கண்டுபிடிச்சா செருப்பால அடிக்கணும்ன்னு. ம்ம் கமான் அடி.” என்றான்.

        “ஐயோ வேணாம்…” அவள் மீண்டும் மறுத்ததில், அவன் கோபமுற்றான்.

        “இது வெளில தெரிஞ்சா உனக்கும் இங்க இருக்குற எல்லாருக்கும் அசிங்கம். இவர் செஞ்ச தப்புக்கு எல்லாரும் ஏன் தலை குனியனும் ஸ்வரூ. நான் திருடியாக் கூட இருந்துட்டு போறேன். இந்த ஆளோட பொண்ணுன்ற அடையாளம் எனக்கு வேணாம்” என்றாள் விறைப்பாக.

        அதில் மெச்சுதலாகப் பார்த்தவன், “உனக்கு என் பொண்டாட்டின்ற அடையாளம் இருந்தா போதும். அசிங்கத்தைப் பார்த்தா தண்டனை குடுக்க முடியாது. இந்த ஆளுக்கு உன் கையால் தண்டனை குடுக்க வைக்க தான் இன்னும் உயிரோட விட்டு வச்சுருக்கேன். ம்ம்…” என கண்ணசைத்தான்.

        “ப்ச்…” என நொந்தவள், தனது தாய்க்கு நியாயம் செய்யும் பொருட்டு, பூமிநாதனின் கன்னத்தில் மாறி மாறி செருப்பால் அறைந்தாள்.

        யசோதாவிற்கு மனம் கனத்துப் போனது. இருந்தும், அதனைப் பார்த்தார். உத்ஷவி செருப்பு பிய்யும் வரை அடித்து தீர்த்தவள், அதை கீழே போட்டு விட்டு ஸ்வரூப்பின் மார்பில் முகம் புதைத்து தேம்பிட, அவளை வாகாக அணைத்துக் கொண்டவன், “தட்ஸ் குட்!” என்றான் உச்சந்தலையில் முத்தமிட்டு.

        அதன் பிறகே, பெரியவர்களிடம் தன்னவளுடன் சேர்ந்து ஆசி பெற்றான். யசோதாவிடமும். அவளுக்கு அவரைக் காண என்னவோ போல இருக்க, அவருக்கும் அவளைப் பார்க்க இயலவில்லை.

        சாணக்கியருக்கு அவள் பூமிநாதனை தண்டிக்காமல் தனது குடும்பத்திற்காக யோசித்தது பிடித்து விட, மகனின் தேர்வு சரிதானென மெச்சிக் கொண்டார்.

        ஏற்பட்ட காயங்களின் தாக்கத்தில், ஆடவர்கள் மூவரும் அவரவர் அறைக்குச் சென்று உறங்கி விட்டனர்.

        அதன் பிறகு, நடந்த கலவரங்களை உணர்ச்சி பொங்க, உமையாள் செய்த பலகாரங்களை சுவைத்தபடி அக்ஷிதா சுவைபடக் கூற, விஹானா அதனை நக்கலடிக்க, உத்ஷவி இருவரையும் கேலி செய்ய என சிறிது நேரத்திலேயே பெரியவர்களின் செல்லப்பெண்கள் ஆகி விட்டனர்.

        மனம் ஒன்றாமல் சம்மதித்த நந்தகோபாலனுக்கும், பாரிராமருக்கும் கூட இப்போது அந்த எண்ணமே இல்லை.

        அவர்களையும் சேர்த்து வைத்து, கிண்டலடித்து பெரியவர்களையும் பேச வைத்திருந்தனர் மூவரும்.

        ஜோஷித் தான் முதலில் எழுந்து வந்து திகைத்தான்.

        “ஏய்… நீங்க தூங்கவே இல்லையா. நான் தூங்க போறப்ப என்ன பொசிஷன்ல உட்காந்து இருக்கீங்களோ அதே பொசிஷன்ல உட்காந்துருக்கீங்க.” என்று வார, கனகரூபிணி ஜோஷித்தை முறைத்து “நீ சிகரெட் குடிச்சியா ஜோ” என்றார்.

        அவனோ பேந்த பேந்த விழித்தான். “கிராதகி உன் வேலை தானா?” என்று பல்லைக்கடிக்க, விஹானா வாயை மூடி சிரித்தாள்.

        ஒரு பக்கம் அக்ஷிதா சஜித்தின் மானத்தை வாங்க, மறு பக்கம் உத்ஷவி ஸ்வரூப்பின் மானத்தை வாங்கினாள்.

        இருவருக்கும் கான்பெரன்ஸில் அழைத்த ஜோஷித், “அடேய் உங்க மானம் கப்பலேறுது. சீக்கிரம் வாங்க” என்றதில், இருவரும் அடித்து பிடித்து கீழே வந்தனர்.

        அதற்குள் ஜோஷித் விஹானாவை தனியாக தள்ளிச் சென்றான்.

        “அடியேய் நான் தம் அடிச்சதை எல்லாம் உன்னை சொல்ல சொன்னேனா?” என முறைக்க,

        “நான் என்ன செய்ய ஜோஷ். தாரா அத்தை கிட்ட நீ நான் என்ன சொன்னாலும் கேட்பன்னு சொன்னேன். அதுக்கு யாழ் அத்தை இல்லவே இல்லைன்னு சொல்ல, நானும் விடல… அதுக்கு அப்பறம் கனா அத்தை ஒரு எக்ஸ்சாம்பில் கேட்டதுல நான் இந்த சிகரெட் மேட்டரை எடுத்து விட்டேன்.”என்றாள் உதட்டைக் குவித்து.

        “இரு.. இரு.. இரு… அதென்ன தாரா அத்த யாழ் அத்த கனா அத்தை” எனக் குழம்பிக் கேட்டதில்,

        “அட நம்ம சித்தாரா அத்தை, கனகரூபிணி அத்தை, உமையாள் அத்தை அவங்களை தான் ஷார்ட்டா கூப்பிட்டேன். வந்ததுமே உங்களுக்கு வச்ச மாதிரியே அவங்களுக்கும் பேர் வச்சுட்டோம்” என்றாள் நெளிந்து.

        இங்கு சஜித்தும் அதே முறைப்புடன் அக்ஷிதாவை பார்த்தான்.  தனக்கு சுட சுட உணவு வாங்கி கொடுப்பதில் அவனை மிஞ்ச ஆள் இல்லை என பெருமை பீத்திக் கொண்டிருந்தவளை தலையில் தட்டி மொட்டை மாடிக்கு கடத்தி இருந்தான். 

        “அம்மாக்களுக்கு மட்டும் தான் இந்த பேரா இல்ல அப்பாவுக்குமா?” என சஜித் கடுப்பாய் கேட்க,

        “அதெப்படி காட்ஸில்லா வைக்காம இருப்போம்… சானு மாமா, பாலு மாமா, ராமு மாமா எப்படி எங்க ரைமிங்?” என காலரைத் தூக்கி விட்டுக்கொள்ள, “ஐயோ” என தலையில் அடித்துக் கொண்டவன், அவளது பாவனையில் தன்னை தொலைத்து ரசித்தான்.

        அவளை தன்னருகில் இழுத்தவன், “இப்போ காதலைப் பத்தி பேசலாமா கேடி?” என குறும்பாய் கேட்க, “பேசலாமே…!” என்றவளுக்கு அத்தனை நேரம் இருந்த குறும்பு மறைந்தது வெட்கம் மினுமினுத்தது.

        “அப்போ கேட்டுக்கோ… ஐ ட்ரூலி லவ் யூ கேடி. இந்த கேடிக்கு காட்ஸில்லாவை கல்யாணம் பண்ணிக்க ஓகே வா?” என்று தலை சாய்த்துக் கேட்டதில், மனதில் பொங்கும் மகிழ்ச்சியுடன், தலையாட்டப் போனவள், “ஆனால் ஒரு கண்டிஷன் காட்ஸில்லா. கல்யாணத்துக்கு அப்பறம் சிப்சால குளிக்கக் கூடாது.” என்று கருவிழிகளை உருட்ட,

        “ப்ச் ப்ச்… நான் உன் கூட தான் குளிப்பேன்.” என்று கண்ணடித்தவன், அவளை இழுத்து அணைத்து முத்தமிட தொடங்க, நாணி சிவந்தாள் பாவை.

        —–

        “பாவம்டி எங்க அப்பாக்களை கூட விட்டு வைக்கலையா நீங்க ஜோஷித் நொந்து கொள்ள, நோ வே.” என்றாள் தலையை ஆட்டி.

        அதில் இருவருமே சிரித்துக்கொள்ள, விஹானா மெல்ல “என் மேல கோபம் போய்டுச்சு தான ஜோஷ்?” எனக் கேட்டாள் பரிதவிப்புடன்.

        “ம்ம். இனிமே தியாக செம்மலா மாறிடாதீங்க மேடம். என்னை விட்டுப் போகணும்ன்னு நினைச்சு பாரு… அப்பறம் இருக்கு உனக்கு” என்று கடிந்தான்.

        “நான் ஏன் போக போறேன்…” என்றவள் சட்டென முகம் மாறி, “நீ என் கூட இனி இருக்க மாட்டன்னு நினைச்சு எவ்ளோ அழுதேன் தெரியுமா. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ஜோஷ். ஐ… ஐ லவ் யூ!” என்றவளின் விழிகள் கலங்கி விட்டது.

        “ஐ லவ் யூ டூ சீட்டர்.” என அவள் கன்னம் தாங்கிட, அவள் உணர்ச்சி பெருக்கில் விழிகள் நனைந்தாள்.

        அந்த சூழ்நிலையை மாற்றும் பொருட்டு, “செம்ம டென்ஷனா இருக்குடி. ஒரு தம் அடிச்சா நல்லா இருக்கும்” என்று அவளை ஓரக்கண்ணில் பார்த்தபடி கூற, விஹானா முறைத்தாள்.

        “அட்லீஸ்ட் ஒரு ஹாட் கிஸ்?” என கேலி கூத்தாட, கண்ணில் காதல் வழிய அவன் கேட்க, அவள் வெட்கத்துடன் முகத்தை மூடிக் கொண்டாள்.

        முகத்தை மூடிய கையை எடுத்து விட்டவன், அவள் இதழ்களுடன் தன்னிதழ்களை கலந்தான் இம்முறை வெளிக்காட்டி விட்ட நேசத்துடன். 

        ____

        “உங்க பையன் ஒரு ரக்கட் பாய் அத்தை… சும்மா சும்மா அடிச்சுக்கிட்டே இருப்பான்…” என சித்தாராவிடம் குறை சொல்லிக் கொண்டிருந்த உத்ஷவியை குண்டு கட்டாகத் தூக்கிக்கொண்டு அறைக்கு வந்தான்.

        “அடேய்… என்னடா செய்ய?” என அவள் துள்ள, “நீ என்னடி செஞ்சுட்டு இருக்க” எனக் கேட்டு முறைத்தவன், வீட்டில் இருப்பவர்களுக்கு அவர்கள் வைத்த பெயரைக் கேட்டு தன்னை நொந்தான்.

        அவளோ ஈஈ என இளித்து வைக்க, அவன் முறைப்பு மாறாமல், “உனக்கு எப்போ தெரியும்? தெரிஞ்சு தான் திருட வந்தியா?” என கூர்மையாய் கேட்க, அவன் எதை பற்றி கேட்கிறான் என புரிந்தவள் மறுப்பாக தலையசைத்தாள்.

        “இல்ல… திருட வர்றப்ப எனக்கு தெரியாது. ஆனா, உன்கிட்ட மாட்டுனதும் என்னை ஒரு ஸ்டோர் ரூம்ல அடைச்சு வச்சல்ல. அங்க நிறைய பழைய போட்டோஸ் இருந்துச்சு.

        என்கிட்ட என் அம்மாவும் இந்த ஆளும் சேர்ந்து ஒரே ஒரு போட்டோ ஒன்னு இருந்துச்சு. அதுவும் என் அம்மா இறந்து கடன்காரங்க வீட்டுல இருக்குற பொருளை எல்லாம் வெளில போடும் போது தான் கைல கிடைச்சுது. அதை வச்சு யாருன்னு கண்டுபிடிக்க முடியலைனாலும், அம்மாவோட ஞாபகமா வச்சு இருந்தேன். அதே உருவத்தை உன் வீட்டு ஸ்டோர் ரூம்ல பார்த்ததும் உண்மையா எனக்கு செம்ம கோபம்.

        என்ன சொந்தம்ன்னு தெரியல, ஆனா நீங்க மூணு பேரும் அந்த ஆளோட உறவா இருப்பீங்கன்னு புரிஞ்சதும் உங்களுக்கு எந்த விதத்துலயும் ஹெல்ப் பண்ண கூடாதுனு ஸ்ட்ராங்கா இருந்தேன். ஆனா, நான் திருடி இருக்க மாட்டேன்னு என்னை நம்புனீங்கள்ல… அப்போ தான் எனக்கு உங்களை ஏமாத்தவோ பழி வாங்கவோ மனசு வரல. அந்த ஆளு செஞ்ச தப்புக்கு, நீங்க என்ன செய்வீங்க.” என்றவளை அள்ளி அணைத்துக் கொண்டான் ஸ்வரூப் அவ்தேஷ்.

        “ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லி இருக்கலாம்லடி” என ஆயாசத்துடன் கேட்டவனிடம், “எனக்கு சொல்ல தோணல. வெளில தெரிஞ்சா எல்லாருக்கும் கஷ்டம். அதான் அப்படியே விட்டுட்டேன். ஆனா இங்க வந்ததும் அந்த ஆளு நான் அம்மா மாறி இருக்கிறதை வச்சு என்னை பத்தி விசாரிச்சாரு. நானும் எதுக்கு மறைக்கணும்ன்னு போட்டோவை காட்டி சொல்லிட்டேன். அந்த பைத்தியம், அந்த போட்டோவை வாங்கி எரிச்சுருச்சு. இருந்த ஒரே எவிடன்ஸ் அது தான். அதுவும் இல்லன்னு ஆனதுக்கு அப்பறம் நான் சொல்லி, நீ அதை நம்பாம போய்ட்டா…” என தயக்கத்துடன் அவன் முகம் பார்க்க, அதுவோ கோபத்தில் சிவந்தது.

        தன்னவளை காயப்படுத்திய ஒருவரை கூட விடும் எண்ணம் இல்லை அவனுக்கு. ரங்கன் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால், தப்பித்து விட்டான்.

        “உனக்கு மட்டும் எப்படிடா கோபம் வந்தா முகம் சிவக்குது.” என வெகு முக்கியமான ஆராய்ச்சியில் அவள் புகுந்து விட, அதில் பட்டென புன்னகைத்தவன், “உனக்கும் சிவக்குதான்னு ஆராய்ச்சி செஞ்சுடலாமா திருடி?” என குறும்பாகக் கேட்டிட,

        “டைனோசர்…” என வெட்கம் தாங்காமல் காலை உதறியவளை, அப்படியே கையில் தூக்கிக்கொண்டவன், அவளை சிவக்க வைக்கும் பணியில் ஈடுபட்டான்.

        முற்றும்
        மேகா

        எபிலாக் இருக்கு டியர்ஸ். இந்த கதைக்கு நீங்க குடுத்த பெரிய ஆதரவு தான், ரெண்டே நாள்ல பத்தாயிரம் வார்த்தைக்கு மேல எழுதி என்னை முடிக்க வச்சுருக்கு. ஆல்வேஸ் யுவர் சப்போர்ட் இஸ் அ பிக் என்கரேஜ் டூ மீ! மனமார்ந்த நன்றிகள். இதுவரை வந்த கமெண்ட்ஸ் எதுக்கும் என்னால் சரியா ரிப்ளை பண்ண முடியல. ரொம்ப சாரி டியர்ஸ். இனி எல்லாருக்கும் ரிப்ளை பண்றேன். முழு மூச்சா கதையை போட்டிக்கு முடிச்சே ஆகணும்ன்னு டைப் பண்ணேன். சோ எதுக்குமே ரியாக்ட் பண்ண முடியல. ஒன்ஸ் அகைன் தேங்க் யூ சோ மச்.

         

          The post 71, இறுதி பகுதி – என் முதலோடு முடிவானாய் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

          ]]>
          https://thoorigaitamilnovels.com/71-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae/feed/ 5 17854
          69, 70 – என் முதலோடு முடிவானாய் https://thoorigaitamilnovels.com/69-70-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/ https://thoorigaitamilnovels.com/69-70-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/#comments Wed, 08 May 2024 03:17:44 +0000 https://thoorigaitamilnovels.com/69-70-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/ அவளைக் கவனித்து சட்டென பிடித்து விட்ட ஸ்வரூப், “விஹா இவளை உள்ள கூட்டிட்டு போ. நீ போடி. நான் வந்து எல்லாம் விளக்கமா சொல்றேன்” என்றிட, அவளுக்கோ உண்மை தெரிந்தே ஆக வேண்டும் போல இருந்ததில், “பரவாயில்ல இருக்கேன்” என்றாள் நெற்றியைப் பிடித்தபடி. அவள் முன் வன்முறையைக் கையில் எடுக்கக்கூடாது என்று தீர்மானித்தவன், உடனடியாக அவனுக்கு கட்டுப்போட மருத்துவரை பணித்தான். விக்னேஷ், வலியில் கத்தியது கூட அவளை பாதிக்க, அவன்

          The post 69, 70 – என் முதலோடு முடிவானாய் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

          ]]>

          Loading

          அவளைக் கவனித்து சட்டென பிடித்து விட்ட ஸ்வரூப், “விஹா இவளை உள்ள கூட்டிட்டு போ. நீ போடி. நான் வந்து எல்லாம் விளக்கமா சொல்றேன்” என்றிட, அவளுக்கோ உண்மை தெரிந்தே ஆக வேண்டும் போல இருந்ததில், “பரவாயில்ல இருக்கேன்” என்றாள் நெற்றியைப் பிடித்தபடி.

          அவள் முன் வன்முறையைக் கையில் எடுக்கக்கூடாது என்று தீர்மானித்தவன், உடனடியாக அவனுக்கு கட்டுப்போட மருத்துவரை பணித்தான்.

          விக்னேஷ், வலியில் கத்தியது கூட அவளை பாதிக்க, அவன் வாயில் துணியை வைத்து அடைத்த ஸ்வரூப், “மூச்… சத்தம் வந்துச்சு. மொத்தமா மூச்சு அடங்கிடும்” என்று அவன் காதிற்கு மட்டும் கேட்கும் படி உறும, அவன் மூச்சிரைத்து வலியை அடக்கினான்.

          கட்டிட்டு முடித்ததும், அவன் வாயில் இருந்த துணியை எடுத்த ஜோஷித், “இப்ப சொல்றியா? இல்ல இன்னொரு விரலும்…” என ஆரம்பிக்க சொல்றேன் என்றான் அவன் வேகமாக.

          “எனக்கு படிச்சு முடிச்சதுல இருந்தே பெரிய பணக்காரனாகணும்ன்னு ஆசை. ஆனா, நான் கல்யாணம் பண்ணுனது சாதாரண வீட்டுப் பொண்ணை தான். என் வீட்லயும் வசதி இல்லை. வேலைல இருந்து பெருசா காசு வரல. இப்படி எல்லாம் வேலை பார்த்தா பணத்தை சேர்க்க முடியாதுன்னு, ஊர் தலைவன் ரங்கனோட சேர்ந்து கோவில் திருட்டுல ஈடுபட்டேன். உள்ள இறங்கி திருடுறது நான். அதை பெரிய விஷயமாக்காம, மக்கள் கிட்ட இருந்து மறைக்க செய்றது அவனோட வேலை. கூலிக்கு அவனோட ஆளுங்களை ஏற்பாடு பண்ணி, அன்னைக்கு கோவில்ல திருட ஒரு மாசத்துக்கு முன்னாடியே திட்டம் போட்டுட்டேன். ஆனா, நாங்க எதிர்பார்க்காத விதமா, சவியோ அம்மா இறந்து, அங்க பிரச்சனை ஆகி, இவள் கோவில்ல வந்து அன்னைக்கு இருந்துட்டா.

          என்னை கட்டுன பைத்தியம், ஒரு நாளைக்கு இவளை வீட்டுக்குள்ள விடுன்னு சொன்னதுக்கு, என் பேச்சைக் கேட்கவே மாட்டேன்னு சதி பண்ணிட்டா.

          சரி சின்ன பொண்ணு தான, எதையும் கவனிக்க மாட்டான்னு நினைச்சு, எங்க திட்டத்தை நடத்தினோம். ஆனா, இந்த பிசாசு உள்ள வரை வந்து எல்லாத்தையும் பார்த்துடுச்சு. ரங்கனோட முகத்தையும் சேர்த்து. இதுல ஒரே நல்ல விஷயம், நான் அன்னைக்கு பிளானை சின்னதா மாத்தி, நான் மட்டும் உள்ள வரல. ரங்கன் வேற வழியில்லாம, இவள் மேல பழி போட, நான் வெளில இருந்து கடத்துன முக்கால்வாசி நகையை எடுத்துட்டுப் போயிட்டேன்.” என்றதும், உத்ஷவி உறைந்து விட்டாள்.

          “மேல சொல்லு!” ஸ்வரூப் கையை முறுக்கிக்கொண்டு கேட்க, அவன் விழித்தான்.

          “டாக்டரோட வீட்ல இவள் உன்னை பார்த்து எனக்கு சந்தேகம் வந்ததுமே, உன்னைப் பத்தி அக்கு வேரா ஆணி வேரா விசாரிச்சுட்டேன். இது ஜஸ்ட் வாக்குமூலம் தான்” என்றான் இகழ்ச்சியாக.

          அதில் கோபம் எழுந்தாலும், அதனைக் காட்ட இயலவில்லை விக்னேஷிற்கு.

          “அதுக்கு அப்பறம் ஒருநாள், வீட்ல பதுக்கி வச்சிருந்த கோவில் நகையை இவளோட அக்கா பார்த்துட்டா. பார்த்ததும் அழுது புலம்பி ஊரைக் கூட்ட பார்த்தா. நான் திருடுனதுக்கு என் தங்கச்சி மேல பழி போட்டுட்டேன். அவளை நானும் நம்பாம போய்ட்டேன், உன்னை இப்பவே போலீஸ்ல புடிச்சு குடுக்குறேன்னு என்னையவே மிரட்டுனா. நானும் என்னன்னமோ ஆசைக் காட்டினேன். ஆனா அவள் மசியல. அதான், நானே அவளைக் கொன்னுட்டு, விபத்து மாதிரி ஏற்பாடு பண்ணிட்டேன். என்கொயரிக்கு வந்த போலீசுக்கு ரங்கனே செட்டில் பண்ணி அமைதியாக்கிட்டான்.” என்றதில், உத்ஷவி அவனை பளாரென அறைந்தாள்.

          “பாவி… உன்னை கட்டுன பாவத்துக்கும், உனக்குப் பிறந்த பாவத்துக்கும் அவங்க என்னடா செஞ்சாங்க. இவ்ளவும் பண்ணிட்டு என்கிட்ட எப்படி எல்லாம் நடிச்ச நீ. நீ எல்லாம் மனுஷன் தானா. அந்த சைக்கோக்கும் உனக்கும் எந்த வித்தியாசமும் இல்ல. இவன்… இவன்லாம் இருந்து என்ன சாதிக்கப் போறான். கொன்னுடு ஸ்வரூ. இவனைப் பாத்தாலே பத்திகிட்டு வருது.” என்று ஸ்வரூப்பின் கையைப் பற்றிக்கொள்ள, “ரிலாக்ஸ்டி. ரிலாக்ஸ். இவனை யாரு இப்ப உயிரோட விடப் போறா. நமக்குத் தேவையானது கிடைக்குற வரை தான் இவனுக்கு உயிர் பிச்சை.”” என்றான் தீப்பார்வையுடன்.

          “இதெல்லாம் உனக்கு முன்னாடியே தெரியுமா? அப்பறம் ஏன் இவன் அன்னைக்கு பச்சையா பொய் சொன்னப்ப பேசாம இருந்த…” எனக் கேட்டதில்,

          சஜித் தான் பதிலளித்தான். “இவனுக்கும் அந்த சைக்கோவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமான்னு ஒரு சந்தேகம் இருந்துச்சு ஷவி. உடனே வெளில காட்டிக்கிட்டா, இவன் உஷார் ஆகிடுவான். அதான், அன்னைக்கு இவன் சொன்னதை நம்புன மாதிரி இருந்துக்கிட்டோம்.” என்றதில்,

          “இதுல மட்டும் மூணு பேரும் கூட்டுக்களவாணிங்களா இருங்க” என்று விஹானா முறைக்க, “அதை இன்னொரு களவாணி சொல்லுது பார்த்தியா…” என்று ஜோஷித் வாரினான்.

          “சரி அது இருக்கட்டும். இப்போ இவனுக்கும் அந்த சைக்கோக்கும் என்ன சம்பந்தம்? முதல்ல யார் அந்த சைக்கோ?” எனக் கேட்க, ஸ்வரூப் “நீயே கெஸ் பண்ணேன்.” என்றான் கேலியாக.

          “நானே மூளை சூடாகி போயிருக்கேன். என்னை விட்டுடுங்கடா சாமிங்களா.” என்று கையெடுத்துக் கும்பிட, விஹானாவோ, “இங்க இருக்கிறது ராகேஷ்ஷோட பாடி இல்லை தான. அப்போ அவன் எங்க போனான்?” எனக் கேட்டாள்.

          “சொல்றேன். சொல்றேன்…” என்ற ஸ்வரூப், உத்ஷவியிடம் “உன்னை நர்சிங்ல சேர்த்தது பரிமளா தான” எனக் கேட்டான்.

          அவளோ யோசித்தபடி “ம்ம் ஆமா ஸ்வரூ. நான் பாதில நின்னதுல அவங்களுக்கு கோபம் வேற.” என்றாள்.

          “நீ பாதில நிக்கலைன்னா, இந்நேரம் எப்பவோ அவங்களோட அடியாளா மாறி இருப்ப” என்று ஜோஷித் கூறியதில் எதுவோ புரியத் தொடங்கியது.

          “கைஸ்… ஆர் யூ சீரியஸ்?” என திகைப்புடன் கேட்டவள், “ஓ மை காட்!” என தலையில் கை வைத்து, “இதை எப்படி நான் மறந்தேன். பரிமளா மேம்க்கு ஒரு பையன் இருந்தான். அவனை அடிக்கடி ஜுவனைல்க்கு கூட்டிட்டு வருவாங்க. ஆனா, என்கிட்ட அவன் அவ்வளவா பேசுனது இல்ல. பசங்க கூட மட்டும் தான் பேசுவான். நானும் கண்டுக்கிட்டது இல்ல. சோ?” என்று நிறுத்தினாள்.

          ஜோஷித், “ஆமா எல்லாத்தையும் இப்ப வந்து சொல்லு.” என்று முறைத்திட, “நான் என்ன கனவா கண்டேன்… இப்படி எல்லாம் நடக்கும்ன்னு” என்றதில்,

          ஸ்வரூப், “எஸ் விஷா. ஹீ இஸ் த மேன். அந்த மிஸ்டர் எக்ஸ் தமன். பரிமளாவோட ஒரே பையன்.”” என்றான் உள்ளுக்குள் கனன்ற வெறியோடு.

          “வாவ்… எப்படி அவன் தான்னு கண்டுபிடிச்சீங்க. டாக்டர் எந்த டீடெயிலும் குடுக்கலையே” என விஹானா கேட்டதில்,

          “எனக்கு ஆரம்பத்துல இருந்தே, இதுவரை நம்ம சந்திச்ச ஆளுங்கள்ள ஒருத்தன் தான் கள்ப்ரிட்டா இருக்க முடியும்னு ஒரு இன்டியூஷன் இருந்துச்சு விஹா. எல்லாமே அந்த ஜுவனைல சம்பந்தப்படுத்தி தான் வந்துச்சு. சோ, ஜுவனைல்ல சம்பந்தப்பட்ட எல்லாரைப் பத்தியும் அலசும் போது, பரிமளாவும் அவன் பையனும் சிக்குனாங்க. நாட் ஒன்லி தெம். அவனோட அப்பாவும் இதுக்கு கூட்டு தான்.”

          “அன்னைக்கு நம்ம வீட்டுக்குப் போகும் போது கூட அந்த ஆளு அவனோட பையன் வெளில போயிருக்கான்னு சொன்னாரே…” என அக்ஷிதா யோசனையுடன் கூற,

          “ம்ம் அவன் வெளில போகல. நம்ம வந்ததுனால அங்க இருக்க கூடாதுன்னு போயிருக்கான். அது மட்டுமில்ல, எந்த தகவல் கேட்டாலும் சொல்ல சொல்லிருக்கான். அதனால தான் அவனோட அப்பா பரிமளா வச்சிருந்த போட்டோஸ் டீடெய்ல்ஸ் எல்லாம் காட்டுனான்.” என்று ஸ்வரூப் கூறும் போதே,

          சஜித் “பட் அப்பவே எங்களுக்கு இன்னொரு சந்தேகம் வந்துச்சு…”

          “ஒரு வார்டனா இருக்குறவங்க எதுக்காக அங்க வர்ற பசங்களோட லிஸ்ட் அண்ட் போட்டோஸ் எல்லாம் எடுத்து வைக்கணும்? அதோட இன்டென்ஷன் என்னன்னு தெரிஞ்சுக்க, அன்பார்ச்சுனேட்லி அவங்க உயிரோட இல்ல. பட் அதுக்கான ரீசனும் எங்களோட சந்தேக வட்டத்துல தான் இருந்துச்சு” என்றான்.

          ஜோஷித்தும், “அது மட்டுமில்ல, என்ன தான் டாக்டர்கிட்ட பேக் தகவல் குடுத்து இருந்தாலும், அவங்களே அறியாமை ஏதாவது ஒரு க்ளூவை விட்டு இருக்கலாம்ன்னு தான் அன்னைக்கு ஸ்வரா அவங்களோட வேலைய பத்தி கேட்டான். அவனோட அப்பா ஹாஸ்பிடல்ல வேலை பார்த்ததா டாக்டர் சொன்னாரு. எஸ், அன்னைக்கு தமனோட அப்பாவும் இதே தான் சொன்னாரு ஞாபகம் இருக்கா. சித்தூர்ல இருக்குற ஒரு ஹாஸ்பிடல்ல கம்பௌண்டரா சில காலம் வேலை பார்த்து இருக்காரு. சோ ஆப்வியஸ்லி அவருக்கு எங்க அப்பாவை தெரிஞ்சு இருக்கு. சித்தூரை பத்தி நல்லாவே தெரிஞ்சு இருக்கு. அண்ட் அவனோட அம்மா கவர்மெண்ட்ல வேலை பார்த்ததா சொன்னாரு. அஃப்கோர்ஸ் ஷீ வாஸ்.” என்று தோளைக் குலுக்கினான்.

          “எங்ககூடவே தானடா இருந்தீங்க?” அக்ஷிதா வாயில் கை வைக்க,

          உத்ஷவி “எனக்குப் புரியல. இதெல்லாம் ஏன் செய்யணும்?” எனக் கேட்டதில், மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

          ஸ்வரூப் அவ்தேஷ் தாடையை தடவியபடி அதற்கு விளக்கம் கொடுத்தான்.

          “இது எங்களோட தியரி மட்டும் தான். தமனைப் பிடிச்சா தான் முழு விவரம் நமக்குத் தெரியும். தமன் சின்ன வயசுல இருந்தே போன் கேம்ஸ்ல அடிக்ஷனா இருந்து இருக்கான். ரொம்ப வயலண்ட்டான கேமை தொடர்ந்து விளையாடுறது, அதுல அடிக்ட் ஆகுறதுன்னு ரொம்ப மூழ்கிட்டான்.
          அவனை அதுல இருந்து வெளில வரைக்க தான் மே பி பரிமளா அவனை ஜுவனைல்க்கு அப்போ அப்போ கூட்டிட்டு வந்துருக்கணும். திடீர்னு அவனை விளையாடக்கூடாதுன்னு அதட்டி இருக்கணும். அது அவனை பாதிச்சும் இருக்கணும். சின்ன வயசுலயே அவனுக்கு கொஞ்சம் மெண்டல் இசியூஸ் இருந்து இருக்கு. லைக், யார் கூடவும் பேச மாட்டான். விளையாட வர்ற பசங்களை கூட அடிச்சு அழ வைச்சுடுவான். ஸ்கூல்லயும் பசங்களோட சண்டை போடுறதுன்னு அவன் செய்றது எல்லாம் கொஞ்சம் வயலண்டா இருந்து இருக்கு.

          அஃப்கோர்ஸ் சின்ன பசங்கன்னா இதெல்லாம் பண்ண தான் செய்வாங்க. ஆனா, அவங்க பேரண்ட்ஸ் ஒரே பையன்னு செல்லம் குடுத்ததுல, அவன் தப்பு செஞ்சா கூட அதை அவன் முன்னாடி பெருமையா பேசி, அவன் செய்றது சரி தான்னு பீல் பண்ண வச்சுட்டாங்க.

          அது போக, அன்லிமிட்ட கேம்ஸ். அதை தடுக்க ஆள் இல்ல. கடைசியா பத்தாவது பரிட்சைன்னு அவனுக்கு திடீர்ன்னு வந்து ப்ரெஷர் குடுத்து இருக்காங்க. அவன் ஓரளவு ஆவெரேஜா படிப்பான்னாலும் பத்தாவதுல நிறைய மார்க் எடுக்கணும்ன்னு செல்போனை வாங்கி வச்சுருக்காங்க. அது அவனை ரொம்ப அட்டாக் பண்ணிடுச்சு. சோ கேம்ஸ்ல இருக்குற கேரக்டர்ஸ் மாதிரி ரியல் லைப்ல தான் சொல்றதை செய்ற ஆட்கள் வேணும்ன்னு அவனுக்கு தோனிருக்கு.

          அதுவே அவன் ப்ரெண்ட்ஸ்கிட்ட ஓவர் வன்முறையா நடந்துக்க வச்சு இருக்கு. அதை வச்சு நிறைய ரிசர்ச் பண்ணி இருக்கான். அப்பவே அவனுக்கு லேப்டாப் ப்ரீ இன்டர்நெட்ன்னு வீட்ல எல்லாம் இருக்க, சொல்லவா வேணும். அதுலயே மூழ்கிப் போனவனைப் பார்த்து பயம் வந்து தான் டாக்டர் கிட்ட கூட்டிட்டு வந்துருக்காங்க. ஆனா, வெளில தெரிஞ்சா தன்னோட பையனைப் பத்தி தப்பா பேசுவாங்கன்னு தப்பான அட்ரஸ் குடுத்து இருக்காங்க. அதுக்கு அப்பறம் டாக்டர்கிட்ட வரமாட்டேன்னு அவன் அடம்பிடிச்சு இருக்கணும்.” என நீண்டதொரு உரையாடலை முடிக்க, பெண்கள் மூவருக்கும் மூச்சு வாங்கியது.

          “வாவ்…” என விஹானா வியக்க, அக்ஷிதாவோ முதல் வேலையாக போனில் இருந்த கேண்டி க்ரஷ் கேமை டெலிட் செய்தாள்.

          “ஒரு கேம் விளையாடுனதுக்கு எல்லாம் சைக்கோ அளவுக்கு கொண்டு வந்துட்டானுங்க.” எனப் புலம்பியதில் சஜித் நமுட்டுப் புன்னகை பூத்தான்.

          உத்ஷவி புருவத்தை உயர்த்தி, “செம்ம டைனோசர். ஆனா எனக்கு இப்போ தான் ஒரு பெரிய டவுட்டே வந்து இருக்கு” என்றாள் யோசித்தவாறு.

          “உங்களுக்குலாம் சந்தேகம் எங்க இருந்து தான் வருதோ. இன்னும் என்னடி?” என அக்ஷிதா நொந்து கொள்ள,

          மெல்ல சிரித்தவள், “அவனுக்கு அப்போ பதினஞ்சு வயசு தான். என்ன தான் ரிசர்ச் பண்ணுனாலும் இதெல்லாம் நடைமுறைப்படுத்த குறைஞ்சது பத்து வருஷம் ஆகும். ஆனா, அப்பவே எப்படி அங்க இருந்த வார்டன் சூசைட் பண்ணிக்கிட்டாரு.” என்று கேட்க,

          “ஸ்மார்ட்!” என அவள் தலையை செல்லமாக கலைத்து விட்ட ஸ்வரூப், “அதான எப்படி பண்ணிக்கிட்டாரு?” என தீவிரமாக யோசித்தபடி நடந்து ஜெயராமனின் பக்கம் நிற்க, “அவரும் அதான… எ… எப்படி?” எனக் கேட்டார்.

          சஜித் அவர் தோள் மீது கை போட்டு “அதை நீங்களே சொன்னா நல்லா இருக்குமே டாக்… சாரி சாரி டாக்… டர்…” என்று இழுத்துக் கேலி போல கேட்க, ஜோஷித்தோ, “ப்ச்… டேய் என்னடா நீங்க… அவரைப் போய் கார்னர் பண்ணிக்கிட்டு…” என்று போலியாய் அதட்டினான்.

          விஹானாவோ, “யூ டூ ப்ரூட்டஸ்” என ஜெயராமனைப் பார்த்துக் கேட்க, அவருக்கு முத்து முத்தாக வியர்க்கத் தொடங்கியது.

          அத்தியாயம் 70

          சில நிமிடங்களிலேயே ஜெயராமனின் உதடு வீங்கி, இரத்தம் தெறித்தது. அது உத்ஷவியைப் பாதிக்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தன்னை அடக்கிக் கொண்ட ஸ்வரூப் அவ்தேஷ், “பேசி பேசி வாய் வலிக்குது ஜெயராமன் சார். கொஞ்சம் நீங்களும் வாயைத் திறந்தா, நான் ரெஸ்ட் எடுப்போம்ல” என்றான் துப்பாக்கியை அவர் வயிற்றில் அழுத்தியபடி.

          “இப்படி இக்கட்டில் மாட்டிக்கொள்வோம்” என்று அறியாதவர் தமனை மனதினுள் திட்டித் தீர்த்தார்.

          இவர்களுடன் இருந்து, தன்னைப் பற்றிக் கூறி, ஹைப் உருவாக்கச் செய்து, முழு உண்மை தெரியாமல், தன்னைப் பற்றியும் தெரியாமல் பித்துப் பிடித்தது போல அலைய வேண்டும் என்ற ஆசையில் இவர்களிடம் சிறு சிறு உண்மையைகளைக் கூறியது இத்தனை வருட ஆராய்ச்சி வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டது பாவம்!

          அதிலும், பூமிநாதன் பத்ரியை வைத்து உத்ஷவியைக் கடத்தி கொலை செய்ய எத்தனிக்க, தமனோ அவளை அவர்களுக்கே எதிரான ஆயுதமாய் மாற்ற முயற்சிக்க, அந்த முயற்சியையும் பாதியிலேயே முறியடித்தது இந்த கூட்டணி.

          ஆக, மொத்தத்துக்கும் சேர்த்து, வேட்டைக்கு காத்திருக்கும் சிங்கத்தின் தோரணையில் எமனாய் நின்றிருந்தான் ஸ்வரூப் அவ்தேஷ்.

          “தமன் என்கிட்ட ட்ரீட்மெண்ட்க்கு வந்தது உண்மை தான். அதுக்கு அப்பறம் அவன் என்னைப் பார்க்க வரலைன்னாலும், நான் அவனைப் பார்க்க போனேன். அவங்க குடுத்தது உண்மையான அட்ரஸ் தான்.

          நான் அப்பவே, ஹிப்னாடிசம் பத்தியும், மனுஷனை ரோபோவா மாத்தி, அவனுக்குள்ள அவனுக்கே தெரியாம என்னோட எண்ணத்தை விதைக்கிறதுல அதிக ஆர்வம் எனக்கு. எனக்கு வந்த சில பேஷண்ட்ஸ்கிட்ட இதை நடைமுறைப் படுத்தி இருக்கேன்.

          இதுக்கு இடைல, தமனோட பார்வை எனக்குப் புதுசா இருந்துச்சு. என்னோட ஆராய்ச்சிக்கு தீனி போடுற விதமா இருந்துச்சு. அவனோட பார்முலா படி, பயத்தை கொண்டு வர்றதுக்கான வழிமுறையை தேடுனப்ப தான், அவன் அடிச்சாலே பயந்துருவாங்கன்னு சொன்னான்.

          ஜுவனைல்ல, பசங்களை பிரம்பால் அடிக்கிறதை பார்த்து பார்த்து ரசிக்கிறவன், என்கிட்டயும் அதே மாதிரி அடிச்சு பார்க்குறவங்களை ரசிக்க வைக்கணும். அவங்களும் அந்த அடியை ரசிச்சு, நம்ம யாரை சொல்றோமோ அவங்களை அடிக்கணும்ன்னு சொல்லுவான். ஆனா, அது மட்டும் போதாது. வேறு சில விஷயங்களும் வேணும். அதுக்கு உருவாக்குனது தான், மெஸ்மரைசிங் ஆடியோ. வடநாட்டுல, சில பப்ல வர்ற பொண்ணுங்களுக்கு சில இசையை போட்டு வசியப்படுத்துவங்க. அந்த இசையைக் கேட்டு மயங்கி, வசியமாகுற பொண்ணுங்களை பாலியல் வன்கொடுமை செஞ்சு அதை வீடியோ எடுத்து வச்சு மிரட்டி காசு பறிப்பாங்க. அதை தான் இங்க இன்பியூஸ் பண்ண நினைச்சேன்.

          இசைக்கு பதிலா, இங்க நான் உபயோகிச்சது ஓலக்குரல்களும் சில சத்தங்களும் அதுலயே தமனோட குரலும் இருக்கு. அவன் அவங்களை கட்டுப்படுத்துற குரல். அதை தான் தினமும் கேட்டு, அது படி நடக்குறாங்க. கொஞ்ச நாள்ல எந்த கட்டளை கொடுத்தாலும் செய்வாங்க. சுயமா சிந்திக்க மாட்டாங்க.

          இதை நான் பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே இந்த பொண்ணு சொன்ன வார்டன்கிட்ட தமன் மூலமா ட்ரை பண்ணுனேன். ஆனா, அது பெயிலியர் ஆகி, அவன் சூசைட் பண்ணிக்கிட்டான். அதுக்கு அப்பறம் நிறைய ஆராய்ச்சி. இதுல தமனைப் பத்தி தெரிஞ்சு, அவனைத் தடுக்க முயற்சி செஞ்சாங்க அவனோட பேரண்ட்ஸ். ஆனா அப்படி தடுத்தா அவன் உயிருக்கே ஆபத்து ஏற்படும்ன்னு சொன்னதுல, பயந்த பரிமளாவும் அவ புருஷனும் பையனுக்காக எல்லா வேலையும் பார்க்க ஆரம்பிச்சாங்க.

          விக்னேஷ் எனக்கு பி. ஏ வா சேர்ந்ததுல இருந்தே அவன் நான் சொன்னதை செய்வான். அது போக, பரிமளா உத்ஷவியை நர்சிங் சேர்த்ததுக்கு காரணமே, இவள் அவங்ககிட்ட விசுவாசமா இருப்பா. சோ, ஏதாவது ட்ரக்ஸ் வேணும்ன்னா, அங்க இருந்து இல்லீகலா எடுக்கலாம். எங்களுக்கும் ஹெல்ப்பா இருப்பான்னு தான்.” என்று எச்சிலை விழுங்கிட, ஆறு பேரும் கொலைவெறியுடன் நின்றனர்.

          உத்ஷவி அவர் முகத்தில் குத்தி, “நிறுத்தாம சொல்லுய்யா. என்ன டீ பிரேக்கா விடுற” என்று மூச்சிரைக்க, அவர் வலியுடன் மீண்டும் தொடர்ந்தார்.

          “முதல்ல, ஜுவனைல்ல வந்த பசங்க கிட்ட இருந்து தான் எங்களோட ஆராய்ச்சியை ஆரம்பிச்சோம் அதுல நிறைய பேர் செத்துப் போய் இருக்காங்க. நிறைய பேர் எங்களுக்கு அடிமையா மாறி இப்ப உலாவிட்டு இருக்காங்க. அதுக்கு அப்பறம் இதை பொது மக்கள்கிட்ட கொண்டு போக நினைச்சோம். அப்போ தான், தமனோட அப்பா சித்தூர் பத்தி சொன்னாரு. ப்ரீத்தன் பத்தியும். அவன் அந்த ஊரை அழிச்சு கார்ப்பரேட் ஆக்க நினைக்கிறான்னு தெரிய வந்தப்ப, அவன் மூலமா அந்த ஊருக்கு நெருக்கம் ஆனோம். அவன் மூலமா பூமிநாதனுக்கும் நெருக்கமாகி, அவர் சொல்ற சில பல வேலைகளை பத்ரி செய்வான். ஆனா, அவருக்கு இதை தான் நாங்க செய்றோம்ன்னுதெரியாது.

          ஊர்ல இருந்து சிலரை கடத்தி வச்சா, உங்க மூணு பேருக்கும் அவப்பெயர் வரும். அதை வச்சு பெரிய பிரச்சனை வரும். அப்படியே அவங்களோட பதவியும் பறிக்கப்படும்ன்னு ஆசை காட்டி, பசங்களை கடத்த சம்மதிக்க வச்சோம். அவரும் அவரோட பையனும் அதுக்கு சம்மதிச்சாங்க. ஆனா, தமனுக்கு ஒரு யோசனை. அவரோட பொண்ணுங்க உங்களை கல்யாணம் பண்ணதுக்கு அப்பறம், அவரு மாறிட்டா பிரச்சனை ஆகிடும்ன்னு, உங்க அப்பா மூணு பேரையும் தாக்க ஆள் அனுப்புனான். இதுக்கு இடையில இந்த பொண்ணுங்களை வேற இஷானாவோட கம்பல்ஷன்ல டாக்குமெண்ட்டை திருட அனுப்ப, நீங்கல்லாம் கூட்டா சேர்ந்துட்டீங்க…” எனக் கூறி முடித்திட,

          அக்ஷிதா தனது வாயில் அடித்துக் கொண்டு, “ஆத்தாடி ஆத்தா! தலை கிண்ணுன்னு இருக்குடா டேய்… ஹியூமன்ஸாடா நீங்கள்லாம்” என்று கடிந்தாள்.

          “மனிதப் பிறவியே இல்லடி” என விஹானா எரிச்சலுற,

          உத்ஷவி, “இந்த நாயை சும்மாவே விடாதீங்கடா. நாய் மாதிரி அலைய விடுங்க.” என கோபத்தில் கொந்தளிக்க, மீண்டும் அவளுக்கு பிபி ஏறியது. ஹாலுசினேஷன் வரத் தொடங்க, அந்த ஆடியோவைக் கேட்க வேண்டும் போல அத்தனை செல்களும் அரித்தது.

          “அப்படியே செஞ்சுடுவோம்” என்று ஜோஷித் கூறும் போதே, ஸ்வரூப் அவளது மாற்றம் உணர்ந்து, “விஷா… என்னடி ஆச்சு?” எனக் கேட்க, அவளோ நடுங்கினாள்.

          அவளைக் கையில் அள்ளிக்கொண்டவன், தம்பிகளை ஒரு பார்வை பார்க்க, சஜித் அவ்தேஷ், “இவனைப் பிரிச்சு மேஞ்சு இதுக்கு சொலியூஷன் தெரிஞ்சுக்குறோம்டா. நீ அவளைப் பாரு.” என்றிட, ஸ்வரூப்பின் கவனம் இப்போது தன்னவளின் மீதே முழுதும் இருந்தது.

          அக்ஷிதா, கையை பாக்சிங் செய்வது போல வைத்துக் கொண்டு, “நான் ஒரு தடவை அடிக்கிறேன்டா” என அவரை பன்ச் செய்ய, விஹானா “நானு நானு…” என பங்கிற்கு வந்தாள்.

          அவரோ ஹிப்னோடைஸ் செய்வது போல அவள் கண்களை உற்றுப் பார்க்க, ஜோஷித் அவர் கண்களை குத்தினான்.

          “இவரு பெரிய போதி தர்மர்… பார்த்தே பணிய வைக்கிறாரு. இதுக்கு மாத்து மருந்து ஏதாவது சொல்லிடு. இல்லன்னா, நாள் பூரா நீ அந்த ஆடியோவைக் கேட்டு மயக்கத்திலேயே தான் இருக்கணும். வயசான காலத்துல பிபி வந்து ஹார்ட் அட்டாக் ஆகி சாவ.” என்று மிரட்டினான்.

          கண்களை தேய்த்துக் கொண்ட ஜெயராமன், “இதுக்கு மாத்து மருந்து எல்லாம் இல்ல. கொஞ்ச கொஞ்சமா அவங்களை டிஸ்ட்ராக்ட் பண்ணி, அந்த பாதிப்புல இருந்து வெளில கொண்டு வரணும். இந்த பொண்ணு நாலு நாள் தான இருந்துச்சு… ஒரு ரெண்டு மூணு மாசத்துல சரி ஆகிடும். அது அவங்க மன தைரியத்தையும், கூட இருக்குறவங்களோட சப்போர்ட்டைப் பொறுத்து.” என்றதில்,

          நால்வருக்கும் ஆதங்கமாக இருந்தது. இப்படி வேதனைப்படுகிறாளே… என வருத்தம் எழுந்ததில், சஜித்தும் ஜோஷித்தும் அவரை அடித்து நார் நாராகக் கிழித்தனர்.

          —-

          உத்ஷவியை அள்ளிக்கொண்டு அறைக்குச் சென்றவன், பிபியை குறைக்கும் மாத்திரையைக் கொடுத்து, தனக்குள்ளேயே அடைகாத்துக் கொள்ள, அவளோ “ஆடியோ கேட்கணும். அந்த ஆடியோ…” எனப் பிதற்றினாள்.

          அவள் எதைக் கேட்கிறாள் என உணர்ந்து கொண்டவன், “எந்த ஆடியோ விஷாம்மா. ம்ம்? ஹே… முதல் முதல்ல இங்க தான நீ திருட வந்த.” என பேச்சை மாற்ற, அவளோ தனக்கருகில் மனித உடல் பாகங்கள் இருப்பது போல எண்ணிக் குறுகினாள்.

          அவனோ அவளது தவிப்பில் அவனும் தவித்து, அதனை வெளிக்காட்டாமல் இன்னும் மிருதுவாய் பேசத் தொடங்கினான்.

          “இங்க திருட வந்து மாட்டிக்கிட்டதும் இல்லாம, என்கிட்டயே தைரியமா பேசுன உனக்கு எவ்ளோ ஏத்தம் இருக்கணும். ஹோட்டல்ல இருந்தும் தப்ப்பிச்சு போக பார்த்த ராஸ்கல்.

          உன்மேல எனக்கு செம்மயா கோபம் வரும். ஆனா, உன்னைப் பார்த்ததும் அதெல்லாம் எங்க தான் போகுமோ. அப்படியும் கோபப்பட்டே ஆகணும்ன்னு வீம்புக்கு கோபப்பட்டு கத்துவேன். நீ என்னமோ செஞ்சுட்டடி ராட்சசி.” என என்னன்னவோ பேசினான். தனக்குள் இருந்த காதல் அத்தனையையும் கொட்டினான்.

          அவள் பேச்சைக் கவனியாமல் அங்கும் இங்கும் பார்த்து பயத்தில் நடுங்கினாலும், பேசி பேசி அவன் பேசுவதைக் கேட்க செய்தான். அவ்வப்பொழுது அழுந்த முத்தமிட்டான். அவள் கழுத்தினுள் முகம் புதைத்து, வெட்ப மூச்சை உணர வைத்தான்.

          மெல்ல மெல்ல, அவனது முயற்சிக்கு பலன் கிடைத்தது. அவனது நெருக்கமும் பேச்சும் அவளை சற்று சமநிலைக்கு கொண்டு வந்தது.

          இரத்த அழுத்தமும் மெதுவாய் இயல்புக்குத் திரும்பியது. மார்புச் சூட்டில் அவள் முகத்தை அழுத்தியவன், நிஜம் எது நிழல் எது என்று புரிய வைக்க அரும்பாடுபட்டான். ஆதங்கம் நிறைந்த விழிகளில் அவ்வப்பொழுது கோர்த்த நீரை வெளியில் விடாமல் உள்ளிழுத்துக்கொண்டான்.

          ஆண்மகன் தன்னவள் படும் பாட்டைக் கண்டு உள்ளுக்குள் கதறினான். சில நிமிடங்களில் அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட, இன்னும் எத்தனை நாட்கள் இந்த துயரம் நீளுமென்ற விடை தெரியாமல், மலர் கன்னத்தில் முத்தமிட்டவன், “ஐ லவ் யூ விஷா. ஐ லவ் யூ சோ மச். உனக்கு என் குரல் மட்டும் தான் கேட்டுக்கிட்டே இருக்கணும். வேற எதையும் யோசிக்காத. நான் இருக்கேன் திருடி. என்று அவள் உறங்கிய பின்னும் உளறித் தீர்த்தான்.

          பிறை தேடும்
          இரவிலே உயிரே எதை
          தேடி அலைகிறாய் கதை
          சொல்ல அழைக்கிறேன்
          உயிரே அன்பே நீ வா

          இருளில் கண்ணீரும்
          எதற்கு மடியில் கண்மூட வா
          அழகே இந்த சோகம் எதற்கு
          நான் உன் தாயும் அல்லவா

          உனக்கென மட்டும்
          வாழும் இதயம் அடி உயிா்
          உள்ள வரை நான் உன் அடிமையடி

            The post 69, 70 – என் முதலோடு முடிவானாய் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

            ]]>
            https://thoorigaitamilnovels.com/69-70-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/feed/ 2 17852
            64, 65, 66 – என் முதலோடு முடிவானாய் https://thoorigaitamilnovels.com/64-65-66-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/ https://thoorigaitamilnovels.com/64-65-66-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/#comments Wed, 08 May 2024 03:14:23 +0000 https://thoorigaitamilnovels.com/64-65-66-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/ அத்தியாயம் 64 உத்ஷவி காணாமல் போய் முழுதாய் ஒரு நாள் சென்றிருந்தது. விஹானா அழுது புலம்பினாள். “வெளில வரைக்குமாவது அவள் கூட போயிருக்கணும். இப்ப எங்கப் போனான்னு தெரியல. அந்த சைக்கோவே கடத்தி இருந்தா…” எனத் தேம்பிட, அக்ஷிதாவும் அரற்றியபடி, “ஆனா, அவன் பசங்களை தானடி கடத்துவான். நீ வேணா பாரு. அவளே எங்கேயாச்சு போயிட்டு திரும்பி வந்துடுவா.” என்றாள் தனக்கு தானே நம்பிக்கை சொல்லியவாறு. ஜோஷித்தும் சஜித்தும் ஒன்றுமே

            The post 64, 65, 66 – என் முதலோடு முடிவானாய் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

            ]]>

            Loading

            அத்தியாயம் 64

            உத்ஷவி காணாமல் போய் முழுதாய் ஒரு நாள் சென்றிருந்தது. விஹானா அழுது புலம்பினாள்.

            “வெளில வரைக்குமாவது அவள் கூட போயிருக்கணும். இப்ப எங்கப் போனான்னு தெரியல. அந்த சைக்கோவே கடத்தி இருந்தா…” எனத் தேம்பிட,

            அக்ஷிதாவும் அரற்றியபடி, “ஆனா, அவன் பசங்களை தானடி கடத்துவான். நீ வேணா பாரு. அவளே எங்கேயாச்சு போயிட்டு திரும்பி வந்துடுவா.” என்றாள் தனக்கு தானே நம்பிக்கை சொல்லியவாறு.

            ஜோஷித்தும் சஜித்தும் ஒன்றுமே புரியாத நிலையில் இருந்தனர்.

            ஸ்வரூப்பின் நிலை வேறு வெகு மோசமாக இருந்ததில், அவனைப் பார்ப்பதா? மனம் கவர்ந்தவளை சமன் செய்வதா? காணாமல் போனவளைத் தேடுவதா? பல விதக் குழப்பத்தின் மத்தியில், ஜோஷித் “அக்ஷி சொன்ன மாதிரி அவள் எங்கயாவது போயிட்டு வந்துடுவா விஹா.” எனப் பலவீனத்துடன் ஆறுதலுரைக்க,

            “எனக்கு நம்பிக்கை இல்ல. ஏதோ நடக்கப் போகுதுன்னு மனசு உறுத்திக்கிட்டே இருக்கு ஜோஷ். ஏதாச்சு செய்ங்க ப்ளீஸ்.” என்றாள் கண்ணீருடன்.

            சஜித்தும், “அவள் போன் கால்ஸ் டிராக் பண்ண சொல்லிருக்கோம். எந்த நம்பர்ல இருந்து கடைசியா கால் வந்துருக்குன்னு செக் பண்ணிட்டு இருக்காங்க. வாசல்ல கேப்ல ஏறி தான் அவள் போயிருக்கா. ஆனா, கேப்ல மஞ்சள் கலர் நம்பர் போர்ட்ல நம்பரரே இல்ல. இங்க இருந்து எங்க எல்லாம் போயிருக்க முடியும்ன்ற அஸ்ஸம்ப்ஷன்ல எல்லா ரோட்ல இருக்குற சிசிடிவி புட்ஏஜ், டோல்ன்னு ஒன்னு விடாம போலீஸ் பார்த்துட்டு இருக்காங்க. இங்க அவளுக்கு தெரிஞ்சவங்கன்னு கூட யாரும் இல்ல. எங்கன்னு போய் விசாரிக்கிறதுப்பா. அவள் கால் ரெக்கார்டிங்ஸ் வரட்டும் அதை வச்சு அடுத்து மூவ் பண்ணலாம்.” என வருத்தத்துடன் கூறினான்.

            விஹானாவோ, “அதுக்குள்ளே அந்த சைக்கோ அவளை ஏதாச்சு பண்ணிட்டா? நினைக்கவே பயமா இருக்கு சஜி.” எனக் குமுறிட,

            ஸ்வரூப்பின் முகத்தில் தவிப்பின் சாயல் அதிகரித்தது.

            அதனைக் கண்ட ஜோஷித், “அவனே ஆள் சரி இல்லாம இருக்கான். நீ வேற ஏன் விஹா இப்படி பேசிக் கூட கொஞ்சம் பயமுறுத்துற. இங்க பாரு ஒன்னும் நடக்காது. அவள் சேஃப்பா தான் இருப்பா. நம்ம பாசிட்டிவ்வாவே திங்க் பண்ணலாம்.” என்றவனுக்கும் உள்ளுக்குள் நடுக்கமாகத் தான் இருந்தது.

            ஸ்வரூப் அவ்தேஷ்  மொத்தமாக கதிகலங்கிப் போயிருந்தான்.

            பல மாதங்களாக கடத்தப்பட்டிருந்த ஆட்களையே இப்போது தானே கண்டறிந்து, அதன் பின் இருக்கும் அதிர்ச்சிகளை எல்லாம் ஒன்றொன்றாக அறிகிறார்கள். இனி, அவளை எங்கு சென்று தேடுவது? அவளையும் மெஸ்மரைஸ் என்ற பெயரில் துன்புறுத்தி விடுவார்களோ! அதனை அவளால் தாங்க இயலாதே! தான் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டுமோ? என உள்ளுக்குள்ளேயே மருகி மடிந்து கருகிப் போனான்.

            அவ்வப்பொழுது, கலங்கி நின்ற கண்கள் பார்வையை மந்தமாக்கியது. நாற்காலியில் அமர்ந்தபடியே மடங்கி முகத்தை அவனது மடியில் புதைத்துக் கொண்டு,

            ‘ஏதாவது ஒரு க்ளூ! ஒரு சின்ன க்ளூ! சின்னதா இருந்தா கூட போதும், முருகா… ப்ளீஸ் ஒரே ஒரு க்ளூ. ஒண்ணே ஒன்னு. ஐ நீட் ஹெர். என்னால அவளை இழக்க முடியாது. ப்ளீஸ்ஸ்ஸ். முருகா… முருகா… முருகா…’ என அவனது இதழ்கள் நடுங்கி முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. பெரிய பெரிய மூச்சுக்கள் வாங்கியதன் அடையாளமாக, அவனது முதுகு ஏறி ஏறி இறங்கிட, இரும்பு தேகம் தளர்ந்து தொய்ந்தது.

            காதலின் வலி. அக்காதலியை கண் முன்னே இழந்த வலி! எத்தனைக் கொடூரம் நிறைந்தது என்பதை உணர்வுப்பூர்வமாக அனுபவித்தான்.

            சஜித்தும் ஜோஷித்தும் அவனை எழ வைக்க முயற்சி செய்து, “டேய் ப்ளீஸ்டா. அவளைக் கண்டுபிடிச்சுடலாம். நீ இப்படி இருக்குறதை பார்க்க முடியல.” என்று இருவரும் கெஞ்சினாலும் அவனிடம் மாற்றம் இல்லை.

            அந்நேரம், ஸ்வரூப்பிற்கு போன் வந்ததில், அவசரமாக அதனை எடுத்துப் பேசியவனின் புருவ மத்தியில் முடிச்சு எழுந்தது.

            நெற்றிக்கண் இருந்திருந்தால், அவ்விடத்தை ஆத்திரத்தால் எரித்திருப்பான்.

            “என்ன ஆச்சுடா யார் போன்ல” ஜோஷித் குழப்பமாகக் கேட்க, அப்பொழுது அவனுக்கும் உத்ஷவியின் கால் ஹிஸ்டரி பத்திய தகவல் வந்ததில்,  “பாஸ்டர்ட்.” என பல்லைக்கடித்தான்.

            அக்ஷிதா புரியாமல் “அவள் எங்க இருக்கான்னு தெரிஞ்சுதா?” எனக் கேட்க, “கூடிய சீக்கிரம் தெரியும்” என்ற ஸ்வரூப் சஜித்தைப் பார்க்க, அவன் அடுத்த அரை மணி நேரத்தில் ஜெட்டை ஏற்பாடு செய்தான்.

            “இப்ப எங்க போறோம் நம்ம?” ஜெட்டில் ஏறியபடி, விஹானா கேட்க, சஜித் விவரம் கூறியதும், இரு பெண்களின் விழிகளும் தெறித்து விடும் அளவு விரிந்தது.

            ஐவரும் அவசரமாக சென்றது, ஸ்வரூப் அவ்தேஷின் வீட்டிற்கு தான்.

            அங்கு பெரியவர்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்து, மகன்களின் முடிவை ஆலோசித்துக் கொண்டிருக்க, யசோதா “இங்க பாருங்கண்ணா, என் பொண்ணு தப்பு செஞ்சதாவே இருக்கட்டும். ஆனா, அதுக்காக நம்ம குடும்ப நடைமுறையை மாத்த முடியாது. கண்ட கண்டப் பொண்ணுங்களை எல்லாம் உறவாட விட்டா, குடும்பத்தோட பாரம்பரியம் என்ன ஆகுறது?” என்று மறுக்க,
            சாணக்கியர் யோசனையில் ஆழ்ந்தார்.

            சித்தாராவும், “இதுவரை நம்மகிட்ட எதையாவது ஆசைப்பட்டு கேட்டு இருக்காங்களா? சின்ன வயசுல இருந்து நெறி தவறாம வளர்ந்த பசங்க தான். அதையும் மீறி, அவங்க ஆசைப்பட்டாங்கன்னா, அந்த பொண்ணுங்க அவ்ளோ வொர்த்தா தான் இருக்க முடியும்ங்க. இது என்னோட அபிப்ராயம் தான். முடிவு உங்களோடது.” என்றிட,
            பூமிநாதன் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்.

            “அட என்னம்மா பேசுற நீ. இத எல்லாம் ஒத்துக்க முடியாது” என்றார் தீர்மானமாக.

            உமையாள் தான், “ம்ம்க்கும், இவரு மகன் மட்டும் ஊரை அழிக்க கங்கணம் கட்டிட்டு திரியுவானம். அதைப் பத்தி பேச்சைக் காணோம். வந்துட்டாரு நாட்டாமை பண்ண.” என்று கனகரூபிணியிடம் புலம்பித் தள்ள, “உஷ், சும்மா இரு உமா. அவரு காதுல விழுந்தா அவருக்கு பதிலா யசோதா தான் ஆட ஆரம்பிச்சுடுவா. அப்பறம் நம்ம புருஷன்மார்கள் உருகிப் போய்டுவாங்க தங்கச்சிகிட்ட.” என்று அடக்கினார்.

            நந்தகோபாலும் பாரிராமும் தமையனை தான் பார்த்தனர்.

            அவரோ, “உங்க மனசுல என்ன இருக்குன்னு சொல்லிடுங்க” என்று கேட்க, தம்பிகள் இருவரும் தயங்கினர்.

            “எங்களுக்கு மனசு ஒப்பல தான் அண்ணா. ஆனா இந்த பசங்க வீம்பா இருக்கறதை பார்த்தா மனசு விட்டுப் போச்சு. நீங்களே எந்த முடிவுன்னாலும் எடுங்க.” என்று பொறுப்பை அவரிடம் விட்டு விட,

            “நான் என்ன முடிவு எடுத்தாலும் உங்களுக்கு சரி தான? எல்லாரும் ஒரு மனசா ஒத்துப்பீங்க தான” என ஒரு முறை கேட்டுக்கொண்டார்.

            யசோதாவும் தமையன் எப்படியும் தங்களுக்கு ஆதரவாகத் தான் முடிவெடுப்பார் என்ற தைரியத்தில், “நீங்க சொன்னாலும் சரிண்ணா” என்றிட,

            “அப்போ சரிம்மா, பசங்க ஆசைப்பட்ட பொண்ணுங்களையே கல்யாணம் பண்ணி வச்சுடலாம்.” என்று ஒரே முடிவாக கூறி விட, சித்தாராவின் வேதனை தோய்ந்த முகம் சட்டென பிரகாசித்தது.

            மனையாளின் முகத்தை ஆராய்ந்தபடியே, கண்ணை மூடித் திறந்தவரை அன்பு பொங்க பார்த்திருந்தார்.

            சாணிக்கிய அவ்தேஷ், இளவயதாய் இருக்கும் போது, அந்நியப்பெண்ணின் மீது காதல் கொண்டார். ஆனால், தகப்பனின் சொல்படி, வேறு வழியற்று அத்தை மகளான சித்தாராவைத் திருமணம் செய்து கொள்ள, அவருடன் காதலுடன் இணைய மனம் அனுமதி கொடுக்கவில்லை.

            “என்னை மன்னிச்சுடு சித்துமா.” என்றவர் தான் வேறொரு பெண்ணை விரும்பியதாகக் கூற, அதில் அதிர்ந்தாலும், “உங்க விருப்பம் தான் என் விருப்பம் மாமா. பரவாயில்ல, இந்த கல்யாணத்தை முறிச்சுட்டு நீங்க விரும்புன பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோங்க. நான் எல்லாரையும் சமாளிச்சுக்குறேன்” என்று தனக்காக பேசிய பெண்ணை வியப்புடன் ஏறிட்டார்.

            “எங்க கல்யாணம் பண்ண, நான் தான் இன்னும் காதலையே சொல்லலையே. நம்ம வீட்ல ஒத்துக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சு, மனசுலயே வச்சு இருந்தேன். அப்பாவை எப்படியாவது சம்மதிக்க வச்சுட்டு காதல சொல்லலாம்ன்னு நினைச்சேன் சித்துமா” என்றவரை பே வெனப் பார்த்தார்.

            “சொல்லாத காதலுக்கா இவ்ளோ பீல் பண்றீங்க?” அவர் ஆச்சரியத்துடன் கேட்க,

            “சொல்லல தான். ஆனா என் மனசுல வேறொருத்திக்கு இடம் குடுத்தது தப்பு தான. இப்பவும் என்னால அவளை மறக்க முடியல. ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு. சாரி சித்துமா. இது உன்னையும் சேர்த்து கஷ்டப்படுத்துது. எனக்கு கொஞ்சம் டைம் குடுக்குறியா. நான்… நான் மாறிடுவேன். ப்ளீஸ்.” எனக் கெஞ்சலாகக் கேட்க, அவள் பதறினாள்.

            “என்ன மாமா நீங்க போய் என்கிட்ட கெஞ்சிக்கிட்டு… நீங்க சொன்னா நான் செய்யப்போறேன்.” என அதற்கு ஒப்புக்கொண்டவரின் அளவில்லா அன்பில் அவர் மனதில் காதல் வரவில்லை என்றால் தான் ஆச்சர்யம்.

            ஆனாலும், அவ்வேதனை அவரை அவ்வப்பொழுது குடையத் தான் செய்யும். இப்போது மகனது கண்களில் அதே வேதனை. அது அவரை சுட்டதோ என்னவோ, தன் மகன்களும் அத்தகைய கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டாம் என மனது அடித்துக்கொண்டது.

            தனக்கு வந்த மனைவி போல அவர்களுக்கும் அமைந்தால் பரவாயில்லை. தனது தங்கை மகள்கள் அந்த அளவு எல்லாம் பொறுமையின் சிகரம் கிடையாது என்று அவருக்கும் தெரியும்.

            யசோதாவும் பூமிநாதனும் இம்முடிவில் திகைத்தனர்.

            “என்ன மச்சான் நீங்க… உங்களுக்கு புத்திக் கெட்டு போச்சா?” என எகிறிட, “உங்களுக்கு புத்தி பொங்கி வழியுதோ!” எனக் கர்ஜித்த ஸ்வரூப் அவ்தேஷ் நெருப்பின் மறுஉருவமாக அவரை எரித்துக்கொண்டிருந்தான்.

            அவரது சட்டையைப் பற்றியவன், “எங்க அவ?” என மிரட்டலாகக் கேட்க, பாரி அவனைத் தடுத்தார்.

            பூமிநாதனோ, “யாரு” எனத் தெரியாதது போல வினவ,

            “ம்ம்… உன் சொந்த பொண்ணு. நீ திருட்டுப் பட்டம் குடுத்தியே அந்த பொண்ணு.” ஸ்வரூப் எகத்தாளத்துடன் கூற, பூமிநாதனுக்கு வியர்வைத்துளிகள் அரும்பியது. இது இவனுக்கு எப்படி தெரிந்தது என்ற அதிர்ச்சி அவரை சிலையாக்கியது.

            ஜோஷித், “ஷவி உன் பொண்ணு தானய்யா. அவளோட அம்மாவை நீ தான ஏமாத்தி இருக்க.” என்று அவரை தாக்க வர,

            “தேவை இலலாம என்மேல பழி போடாதீங்க. இதெல்லாம் அந்த திருடி சொன்னாளா? அவள் சொன்னதை நம்பிட்டு இருக்கீங்க” என்று அவர் கூறியதில்,

            சஜித், “ஹலோ மாம்ஸ்… பல வருஷத்துக்கு முன்னாடி நீங்க அவள் ஊருக்கு போனது, அங்க ஃப்ரீ சர்விசா ஸ்கூல்ல பசங்களுக்கு பாடம் எடுத்தது. அங்க சாவியோட அம்மாவைப் பார்த்து காதலிச்சது, எல்லா தகவலும் எங்க பிங்கர் டிப்ல இருக்கு.” என்றான் நக்கலாக.

            யசோதாவிற்கு நெஞ்சு வலியே வரும் போல இருந்தது.

            “என்னங்க இது?” எனத் தவிப்புடன் கேட்க, அவரோ அப்போதும் “இவனுங்க உளறுறங்கு யசோ. எனக்கு அவள் யாருன்னே தெரியாது” என்று மீண்டும் மறுக்க, ஸ்வரூப் அவரை அறைந்தே விட்டான்.

            அத்தியாயம் 65

            “வயசுக்குக் கூட மரியாதை குடுக்க தோணல எனக்கு. உன்னை அடிச்சு பிச்சு பீஸ் பீசா ஆக்குறதுக்குள்ள உண்மையை சொல்லல. இங்க என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது.” என்றவனின் கோப மூச்சுக்கள் அவ்விடத்தையே நிரப்பியது.

            “விஷா அவளை பத்தி சொன்னதுமே, அவளோட அப்பனை கண்டுபிடிச்சு நாலு மிதி மிதிக்கணும்ன்னு டிடெக்டிவ் ஏஜென்சி வச்சு விசாரிக்க சொல்லிருந்தேன். உருப்படியா ஒரு தகவலும் வரல. ஆனா, இங்க வந்து அவள் உன்னைப் பார்த்ததும் குடுத்த எக்ஸ்பிரஷனும் நீ அவளை பார்த்து ஷாக் ஆனதும் என் கண்ணுல அப்படியே விழுந்துருச்சு. அப்போதுல இருந்து நீ அவளை முறைச்சு பார்க்குறதும் அவள் உன்னைப் பார்க்காம அவாய்ட் பண்றதும் எனக்கு உறுத்துச்சு. அப்போ தான், உன்னை பத்தி உன்னோட ஆக்டிவிட்டிஸ் பத்தி டிடெக்டிவ் ஏஜென்சில விசாரிக்க சொன்னேன். அவங்க அழகா எல்லா தகவலும் எடுத்துட்டு வந்துட்டாங்க.

            ஏன்யா இப்படி செஞ்ச?” என மீண்டும் அவர் சட்டையைப் பற்றினான்.

            நந்தகோபாலோ, “ஸ்வரூ அவரை விடு. முதல்ல இதெல்லாம் உண்மையா இல்லையான்னு தெரியாம… ” என முடிக்கும் முன், “என்ன சித்தப்பா பேசுறீங்க. அது தெரியாமயா இங்க வந்து பைத்தியக்காரன் மாதிரி கத்திட்டு இருக்கேன். இந்த ஆளுனால, இங்க மகாராணியா வளர வேண்டிய ஜுவனைல்ல தேவையே இல்லாத திருட்டு பழியோட வளர்ந்து இருக்கா.” என்று மிதமிஞ்சிய சினத்துடன் உறுமினான்.

            “என்ன ஓவரா பேசுற. அவளை இங்க வந்து மஹாராணியா வேற வாழ வச்சுருப்பேனா. பொண்ணு பிறந்தா அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்ற கண்டிஷனோட தான் அவள் அம்மா கூட பழகுனேன். அவளும் எனக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு தெரிஞ்சு தான் என்கூட சுத்துனா.

            எனக்கு அடுத்து அடுத்து பொண்ணுங்களா போய்ட்டாங்க. இருந்த ஒரு பையனும் விவரம் இல்லாம வந்துட்டான். அதான் உங்களுக்கு போட்டியா பையனை பெத்துக்கணும்ற ஆசைல அவளை காதலிச்சேன். பையன் பிறந்தா கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். அந்த சனியன் பிறந்து தொலைஞ்சுருச்சு. அவள் அம்மாக்காரியும் அதுக்கு அப்பறம் என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லல. நானும் கிளம்பி வந்துட்டேன். அவ்ளோ தான்” என்று வெகு சாதாரணமாய் பேசிட, அவ்விடமே மயான அமைதியாய் காட்சியளித்தது.

            கணவனின் செயலில் அருவருத்துப் போன யசோதா, “அடப்பாவி… உனக்கு மனசாட்சியே இல்லையா. குத்து கல்லு மாதிரி பொண்டாட்டியும், முத்தா நாலு புள்ளைங்களையும் விட்டுட்டு… அவளுக்கும் உண்மையா இல்லாம எனக்கு உண்மையா இல்லாம… ச்சே…” என முகத்தை சுளித்தார்.

            இத்தனை வருட தாம்பத்தியம் அவருக்கு குமட்டலைக் கொடுத்தது.

            “அதுக்காக உன்னை கொடுமை படுத்தவா செஞ்சேன். நீ எதுக்குடி இப்ப எகுறுற?” என மனைவியை பேசிட, சாணக்கியர் கோபத்துடன் அமர்ந்திருந்தார்.

            “ஸ்வரூ… இந்த ஆளு என் கண்ணு முன்னாடியே வரக்கூடாது. பார்க்க பார்க்க ஆத்தரமா வருது. இங்கயே இப்பவே சுட்டுத் தள்ளிடு. யசோம்மா இவனை… இந்த மாதிரி பேயெல்லாம் உனக்கு புருஷனா இருக்குறதுக்கு சாகுறது மேல்மா” என்றார் தங்கையை பாசத்துடன் வருடி.

            “அண்ணா…” என அவர் நெஞ்சில் சாய்ந்து யசோதா அழுது தீர்க்க, ஸ்வரூப் “அப்படி எல்லாம் சாகடிச்சுட முடியாதுப்பா. இந்த ஆளு, விஷாவை கடத்தி வச்சிருக்கான். எங்கயா அவ?” என தீப்பார்வையுடன் வினவ, அவருக்கோ சுட்டு விடுவார்களோ என்ற அச்சம் எழுந்தது. மனைவியும் தனக்கு எதிராக அல்லவா இருக்கிறாள்.

            எச்சிலை விழுங்கியவர், அமைதியாக நிற்க, ஜோஷித் “அவளுக்கு கடைசியா நீ தான் கால் பண்ணி வெளில வர சொல்லி இருக்க. அந்த பைத்தியமும் உன்னைப் பார்க்க வந்துருக்கு. அப்பறம் என்ன நடந்துச்சு.” என்று கேட்டதில், “எனக்கு தெரியாது” என்று மறுத்தார்.

            மீண்டும் அவர்களின் கையால் அறை வாங்கியவர், “எனக்கு… எனக்குத் தெரியல. பத்ரியை வச்சு தான் அவளைக் கடத்த வச்சேன். கடத்தி, கழுத்தறுத்து எங்கயாவது போட சொன்னேன். அவன் அவள் இனிமே வெளில நடமாட மாட்டா. நாங்க பாத்துக்குறோம்ன்னு என்னை அவளுக்கு போன் பண்ணி வெளில வர வைக்க சொன்னான். அதுக்கு அப்பறம் என்ன ஆச்சுன்னு தெரியல…” என ரத்தம் வாய் வழியே கொட்ட கொட்ட அவர் கூறிய செய்தியில் ஸ்வரூப்பின் ஒவ்வொரு அணுவும் வலியில் சுருண்டது.

            கண்ணைக் கடினப்பட்டு திறந்த உத்ஷவிக்கு தலை கிண்ணென இருந்தது. சுற்றிலும் கும்மிருட்டு. ஒரு கணம் என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

            மெல்ல மெல்ல நினைவுகள் மீண்டிட, அதன் பிறகே பூமிநாதன் போன் செய்ததும், அவரைப் பார்க்கும் பொருட்டு வெளியில் வந்ததும், மர்ம நபரால் தான் சுயநினைவை இழந்ததும் நினைவு வர, பதறி எழுந்தாள்.

            அந்த இருட்டைப் பழகவே கண்களுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

            “டேய் யாருடா என்னை கடத்திட்டு வந்தது. யாராவது இருக்கீங்களா?” எனக் கத்திட ஒரு பயனும் இல்லை.

            ஏதோ ஒரு வித்தியாசமான வாடை வேறு குடலைப் பிரட்டியது.

            மூச்சை அடக்கிக் கொண்டவளால், ஒரு கட்டத்திற்கு மேல் முடியவில்லை. இருட்டுக்குள் எழுந்திடவும் பயமாக இருந்தது.

            ஆனாலும் இப்போது வேறு வழியில்லை, இந்த நாற்றத்தினுள் இருந்தால் மூச்சடைத்து இறந்தே விடுவோம் என்று தோன்றியது.

            மெல்ல மெல்ல எழுந்து சுவற்றைப் பற்றியபடி நடந்தவளுக்கு, காலடியில் ஏதேதோ தட்டுப்பட்டது.

            என்ன ஏதென்று தெரியவில்லை. ஊசியாய் பயமும் நெஞ்சைத் துளைக்க, தன்னை தைரியப்படுத்திக் கொண்டவளுக்கு, இந்த இருட்டு அறையெல்லாம் புதிதல்ல. திருடவே இரவு தானே செல்வாள். அதனால், பயத்தை அவளால் சமாளிக்க முடிந்தது.

            சில நொடிகளின் தேடலின் விளைவாக, கையில் ஸ்விட்ச் போர்ட் தட்டுப்பட்டது.

            அதனை அழுத்தியதும், மஞ்சள் நிற ஒளி அவ்விடத்திற்கு வெளிச்சமூட்ட, ஒரு கணம் உறைந்து வெளிறி கத்தி விட்டாள்.

            சுற்றிலும் மனித உடல் உறுப்புகள். கை, கால், தலை, இரத்தத்திட்டுகள், ஒடிக்கட்டப்ப விரல்கள், துண்டிக்கப்பட்ட மர்ம உறுப்புகள், வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட குடல் என நினைத்துப் பார்க்க இயலாத கொடூரத்தின் உச்சமாக அந்த அறை காட்சியளிக்க,

            உத்ஷவி கண்ணை மூடிக்கொண்டு ஆஆ.. ஆ என அலறினாள்.

            இதயத்துடிப்பின் வேகம் தாறுமாறாக இருந்தது. முகத்தை கைகளால் மூடிக்கொண்டவளுக்கு ஏதோ பிசுபிசுவென இருக்க, கை முழுக்க இரத்தம். சுவற்றில் படிந்திருந்த குருதி அவளது கையிலும் ஒட்டி இருந்தது. அதற்கும் சேர்த்து அலறியவள், ‘ரிலாக்ஸ்டி ரிலாக்ஸ்’ என்ற ஸ்வரூப்பின் குரலை தான் மனக்கண்ணிற்குள் கொண்டு வர முயற்சித்தாள்.

            அவனது நினைவும் பேச்சும் ஒன்றே அவளை இப்போது தைரியப்படுத்தும் ஒரே வழி என்றாகிப் போனது. “பயமா இருக்கு ஸ்வரூ. பயமா இருக்கு.” என மூச்சு வாங்க, அவன் அருகில் இருப்பது போலவே நடுங்கியவள், அவன் கை தனக்குள் இருப்பது போலவே கற்பனை செய்து கொண்டு, தன்னை நிதானப்படுத்தினாள்.

            நர்சிங் படித்த காரணத்தினால், தான் ஒரு போஸ்ட் மார்ட்டம் அறையில் இருப்பதாக எண்ணிக்கொண்டவள், அந்த பயத்தையும் வெற்றிகரமாக சமாளித்தாள்.

            நடுங்கிய கால்களுடன் அவ்வறையை விட்டு வெளியேறியவளுக்கு சுற்றிலும் சிறைச்சாலை போல இருந்தது. எங்கு செல்வது என்றே தெரியவில்லை. இது என்ன இடம் என்றும் புரியவில்லை.

            எச்சிலை விழுங்கியபடி முன்னேறிப் போனவள் வேறொரு அறையில் சிக்கிக்கொள்ள, அங்கு கதவு தானாக மூடியது.

            அதில் மிரண்டவள், அடுத்து என்னவென யோசிக்கும் முன், வசியப்படுத்தும் ஓலக்குரலும், ஏதேதோ சத்தங்களும் அவள் செவியை நிறைக்க, அவள் காதை இறுக்க பொத்தியும் பயனில்லை.

            அதைக் கேட்க கேட்க, இதயம் தாறுமாறாய் துடித்து, இரத்த கொதிப்பு அதிகமாகி, வியர்த்து வழிந்து, நடுங்கி ஒடுங்கினாள்.

            அதன் வீரியம் அவளை மயங்கச் செய்தது. எத்தனை மணி நேரங்கள் மயக்கத்தில் கிடந்தாள் என்று தெரியவில்லை. இன்னும் அந்த ஆடியோ ஒலித்துக் கொண்டே தான் இருந்தது.

            ஒரே நல்ல விஷயம் கதவு திறந்திருந்தது. எழுந்து வெளியில் செல்ல எத்தனித்தாள். ஆனால் முடியவில்லை. கைகளும் கால்களும் முற்றிலும் செயலிழந்தது போலொரு எண்ணம். கண்களோ மேல் நோக்கி மீண்டும் சொருகியது.

            ‘இல்ல… மறுபடியும் மயங்கக் கூடாது. எந்திரி ஷவி. எந்திரி.’ என தன்னை தானே கூறிக்கொள்ள, “விஷக்கிருமி…” என்ற ஸ்வரூப்பின் குரலை மீண்டும் தனக்குள் பதிய வைத்துக் கொண்டாள். ‘டைனோசர்… டைனோசர் நீ என் பக்கத்துல தான இருக்க.’ என தனக்கு தானே பேசிக்கொண்டு கண்ணை இறுக்கி மூடிக்கொணடவள், முயன்று அந்த ஆடியோவை தனக்குள் புகுற விடாமல் தவிர்த்து, எண்ணம் முழுதும் ஆடவனை மட்டும் நிரப்பினாள்.

            “ஐ லவ் யூ டி திருடி! இப்ப எல்லாம் உன்னை நினைச்சு கவிதை தோணுதுன்னா பார்த்துக்கோயேன்.” என்ற ஆண்மகனின் கொஞ்சும் சிரிப்பு இந்நிலையிலும் அவளுக்கு சிறு புன்னகைக் கொடுத்தது.

            ‘வெறும் நினைவுகள் மொத்த உணர்வையும் ஆட்டிப்படைக்க இயலுமா? என்னை எல்லாத்தை விட வசியப்படுத்துறது உன் சிரிப்பு தான்னு, இந்த கிட்னாப்பர்க்கு தெரியாம போய்டுச்சு டைனோசர்…’ மனதினுள் அவனது பிம்பம் அவளை அணைத்துக் கொண்டது. வெளியில் செல்லும் வரை, கண்ணை திறக்கவே இல்லை அவள். கண்ணைத் திறந்தாள், நிஜம் சுடும். இனிய கனவு கலைந்து விடும்.

            ‘இனி, அடுத்து என்ன?’ என்ற கேள்வி அவளைக் குடைந்து பரிதவிக்க விட்டாலும், ‘என்னை இங்க இருந்து கூட்டிட்டு போய்ட ஸ்வரூ வந்துடுவான்’ என்ற நம்பிக்கை மட்டும் அதிகமாக இருந்தது. ‘ஆனா, நான் காணாம போய்ட்டேன்னு கூட இந்நேரம் தெரிஞ்சு இருக்குமான்னு தெரியலையே?’ என்னும் போதே கண்கள் பனித்தது. “அதிகப்பிரசிங்கத்தனம் செய்யாத.” அவன் படித்து படித்து கூறிய வார்த்தை.

            அதனைக் கேளாமல் போனது இத்தகைய விபரீதத்தில் முடியும் என்று எண்ணவில்லை அவள்.

            ஒரு வழியாக அவ்விடத்தை விட்டு, வெளியில் சென்று விட்டவள், மிகப்பெரிய நீளமான ஹாலில் சில ஆள்களை கட்டிப்போட்டிருப்பது தெரிந்தது.

            மற்ற அனைவரும் முகத்தில் மாஸ்க் அணிந்திருக்க, அங்கு தலைவன் போல ஒருவன் இருந்தான். அவன் முகத்திலும் சிங்கத்தின் அமைப்பு போல மாஸ்க் அணிந்திருந்தான். கையில் ஒரு நீளமான சிவப்பு நிற லத்தி இருந்தது.

            அதைக் கண்டதும் மீண்டும் அச்சம் அவளை ஆட்கொண்டது. இருந்தும், நம்ம  வாங்காத அடியா? என தயாராக இருந்தாள்.

            ஆனால் அத்தலைவனோ அவளைக் கண்டு இகழ்ச்சிப் புன்னகை வீசி விட்டு, அங்கு கட்டிப் போடப்பட்டிருந்த ஆள் ஒருவனை விடுவித்தான்.

            அவனது உடைகளும் களையப்பட்டன. அதில் முகம் சுளித்து அவள் மறுபுறம் திரும்பிக் கொள்ள, வேறொருவன் அவளது கழுத்தைப் பிடித்துத் தூக்கி பார்க்க வைத்தான்.

            அவளுக்கோ தன் முன் நிர்வாணமாய் நின்ற ஆணைக் காண சகிக்கவில்லை. அவன் முகத்திலும் ஒரு வித பயம் தெரிந்தது.

            அந்த பயத்தினூடே கையிலிருந்த லத்தியை வைத்து, தலைவன் அவனது இடுப்புப்பகுதியை ஓங்கி ஒரு அடி அடிக்க, அவன் மடங்கி கீழே அமர்ந்தான்.

            வலி தாளாமல் அலறினான். ஆனால் அடியை நிறுத்தவில்லை. ஒவ்வொரு அடியும் அத்தனை அழுத்தமாய் ஈரக்குலையை பிடுங்கி எறிவதாய் இருந்தது. அந்த ஆடவன், உயிர் போக கத்தினான். அவனை அடிக்க அடிக்க, இத்தனை நேரம் பிடித்து வைத்திருந்த தைரியமெல்லாம் காற்றில் பறந்து போனது பெண்ணவளுக்கு.

            யாரென்று அறியா மனிதனின் வலியைக் காணவே அத்தனை பயமாக இருந்தது. ‘இப்படியும் கூட பயம் காட்ட இயலுமா? அடுத்து தன்னை அடிப்பானோ…? ஒரு அடிக்கே செத்து விடுவேனே!’ என்ற நடுக்கம் அதிகமாக, அத்தலைவன் அத்துடன் நிறுத்தாமல், அடுத்த அடுத்த ஆள்களை அதே போல துன்புறுத்தினான்.

            சிலர் அந்த அடியில் இறந்தே போக, அதே இடத்திலேயே இறந்தவர்களின் உடற்பகுதியைத் துண்டு துண்டாக வெட்டினர்.

            உத்ஷவி உயிரை கையில் பிடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிக்க முயல, எங்கும் நகரக்கூட இயலவில்லை.

            எப்போது தன்னிடம் வருவான் என்ற பயமே அவளை வெகுவாய் ஆட்டுவித்தது.

            அத்தியாயம் 66

            அடி வாங்கியவர்களை எல்லாம் தூக்கிக்கொண்டு வேறொரு இடத்திற்குச் செல்ல, உத்ஷவிக்கு அங்கிருந்து சென்றால் போதுமென்றிருந்தது.

            ஆனால், மீண்டும் அவளை இரத்தமும் உடற் பாகங்களும் இருக்கும் இடத்தில் தான் அடைத்தனர். அவளுக்கு இக்கொடுமை தாள இயலவில்லை.

            சிறிது நேரத்தில் மூச்சை இழுத்துப் பிடித்து மயங்கியும் விட்டாள்.

            சில மணி நேரத்தில் மீண்டும் விழிக்க, அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது.

            அந்த வாடை தாள இயலாமல் வெளியில் சென்றவள், இப்போதும் அந்த ஆடியோ ஒலிக்கும் அறையில் மாட்டிக்கொண்டு, அதன் வசியத்தில் மயங்கிப் போனாள்.

            சிறிது நேரத்தில் விழித்தவள், அந்த அறைக்கதவு திறந்திருந்ததில், வலுவிழந்த கால்களுடன் வெளியில் வர, இம்முறை உடலில் பலமே இல்லை. மனதிலும் தான். இங்கு வந்து எத்தனை மணி நேரங்கள், எத்தனை நாள் ஆனது என்று தெரியவில்லை. பசியில் காது அடைத்தது. வயிறு உணவுக்குக் கெஞ்சியது. இப்போதைக்கு ஸ்வரூப்பின் பெயர் மட்டுமே அவளை தாங்கிப் பிடித்தது.

            பசி மயக்கத்திலும், நேரும் அதிர்விலும் அவனது நினைவு கூட பின்னோக்கி சென்று விடுமோ என்று அஞ்சினாள்.

            மறுபடியும் அதே நீள அறை. அதே லத்தியுடன் தலைவன். வேறு சில ஆள்களை அடிக்கத் தொடங்கினான்.

            ஆனால் இப்பொழுது அவளுக்கு பயம் தோன்றவில்லை. கண்ணைக் கூட மூடவில்லை. அவர்களை அடிக்க அடிக்க ஏதோ ஒரு வெறி தோன்றியது. அரை மயக்கத்தில் அந்த அடிகளை மனது பிடித்ததுடன் பார்த்தது. ஒரு மனது, இது தவறு. என அறிவுறுத்தினாலும், பலவீனமான உடலும் மனதும் மிகப்பெரிய இராட்சசன் என்று அவள் உணர்ந்த தருணம்.

            இப்படியே போனால், அவளுக்குக்கூட உணர்வுகள் மரத்து விடும். சில நாட்களில் இவனுக்கு அடிமையாகி விடக்கூடும்.

            அங்கு அனைவருமே அப்படித்தான் இருந்தனர். நாய் போல தலைவனுக்கு சேவகம் செய்தனர். இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று யோசிக்க கூட அவளுக்குத் திராணி இல்லை.

            இரத்த அழுத்தம் அளவுக்கு மீறி உயர்ந்திருந்தது. இன்னும் ஒரு முறை இதே போல நிகழ்ந்தால் நிச்சயம் தானும் இப்படி மாறிவிடுவோமோ என்ற பதற்றம் எழுந்தாலும், அதனை சீர் செய்யக்கூட வலு இல்லை.

            அப்போது அத்தலைவனுக்கு அலைபேசி அழைப்பு வர, அதில் பேசியவனின் உடல் மொழியே அவன் அதிகபட்ச கோபத்தில் இருக்கிறான் என்று உணர வைத்தது. “நோ நோ…” என்று கத்த, மறுபக்கம் என்ன சொல்லப்பட்டதோ, மீண்டும் அவளை ஆடியோ ஒலிக்கும் அறையிலேயே அடைத்தனர். அங்கு சென்றதும், அந்த வசியத்தில் மயங்கி விட்டவளின் காதில், “இப்ப இங்க இருந்து அவன் உன்னைக் காப்பாத்திடலாம். ஆனா, நீயே திரும்பி வருவ. துன்புறுத்துறதை என்ஜாய் பண்ணிப் பார்க்க வேணாமா?” என்ற ஒரு குரல் ஒலிக்க, அவள் மனதிலும் அது பதிந்து போனது.

            இன்னும் சில குரல்கள் கேட்டது. அதில் ஒருவனது குரல் மட்டும் அவளை எழுச் சொல்லி உந்தியது.

            “விஷா… என்னைப் பாருடி. நான் பேசுறது கேட்குதா. திருடி… எந்திரிடி. என்னைக் கெஞ்ச வைக்கிறது உனக்குப் பிடிக்காதுல. அப்பறம் ஏன்டி என்னைக் கெஞ்ச வைக்குற. என்னை உடைய வைக்காதடி. ப்ளீஸ் திருடி. எந்திரிச்சுப் பாரு.” மங்கலாகக் காதில் விழுந்த வார்த்தைகள், இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் தெளிவாகக் கேட்டது.

            “டைனோசர்” அவள் உதடுகள் சத்தமின்றி அசைய, கிட்டத்தட்ட ஏழு மணி நேரமாக அவளை எழுப்ப அரும்பாடுபட்டு தொய்ந்து ஓய்ந்து போன ஸ்வரூப் அவ்தேஷிற்கு மீண்டும் புத்துயிர் வந்தது போல இருந்தது.

            “விஷா! விஷா நான் பேசுறது கேட்குதாடி.” எனக் கேட்டு அவள் கன்னத்தை மென்மையாய் தட்டிக் கொடுக்க, ம்ம் என முனகியவள், கடினப்பட்டு கண்களைத் திறந்தாள்.

            ஸ்வரூப்பின் கையணைப்பில் தான் இருந்தாள். அந்த கதகதப்பே தான் மீண்டும் தன்னவனிடம் சேர்ந்து விட்டோம் என்று உறைக்க, இன்னும் தலை கிண்ணென வலித்தது.

            அது ஸ்வரூப்பின் சென்னை பங்களா தான். ஆந்திரா பார்டரில் இருக்கும் ஒரு பாழடைந்த அரண்மனையில் தான் அவள் மயங்கிக் கிடந்தாள்.

            ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருந்தது. மற்ற நால்வரும் அவளைச் சுற்றி நின்று பரிதவிப்புடன் பார்த்திருக்க, உத்ஷவி சுற்றிலும் பார்வையை சுழல விட்டபடி மெல்ல எழுந்து அமர்ந்தாள்.

            அவனோ நகர விடவில்லை.

            “இப்ப பரவாயில்லையாடி” உடைந்த குரலில் கேட்டவனை நிமிர்ந்து பார்க்க, அவனது முகம் வாடி கருத்திருந்தது. கண்ணிற்கு கீழே கருவளையம் விழுந்திருந்தது. எத்தனை நாட்கள் தூங்காமல் இருந்தானோ?

            “நான்… நான் அங்க எவ்ளோ நாள் இருந்தேன்?” எனக் கேட்டவளைக் கண்டு துக்கம் தொண்டையை அடைத்தது.

            விஹானா, “நாலு நாள் இருக்கும்படி. அந்த பத்ரி எருமை, உன்னை எங்க வச்சுருக்கோம்ன்னு சொல்லவே இல்லை.” என அவள் கையைப் பிடிக்க விழைய, அவளுக்கோ இன்னும் தன்னை சுற்றிலும் மனித உடல்பாகங்கள் நிறைந்திருப்பது போல பிரம்மை.

            அதில் அவளுக்கு வேகமாக மூச்ரைக்க, தன்னைத் தொட வந்த விஹானாவின் கையைத் தட்டி விட்டவள், காலைக் குறுக்கி நடுங்கியபடி அமர்ந்தாள்.

            அவளது செய்கையில் அனைவரும் திகைத்திருக்க, விஹானாவிற்கு வேதனை தாளவில்லை.

            “டார்ல்ஸ்!” கண்ணில் நீர் மின்ன தேம்பியபடி அழைக்க, அதனை அவள் உணரக்கூட இல்லை.

            அக்ஷிதாவோ, நாய் போல மாறி ஏதாவது செய்து கொள்வாளோ என்ற அச்சம் மிளிர, “இவள்… இவள் நார்மலா தான இருக்கா? ராகேஷ், மேகனா மாதிரி…” என தவிப்புடன் கூற, ஸ்வரூப் “அப்படி எதுவும் நடக்காது” என்று தனக்கு தானே சொல்வது போல அதட்டினான்.

            ஜோஷித் தன்னை நொந்து, “ஷவி… எதை பார்த்து இப்படி பயந்து போற” எனப் பரிவுடன் கேட்க, அவளோ பதில் கூறாமல், இன்னும் அதே நிலையிலேயே நடுங்கினாள்.

            அவளுக்கு சிகிச்சை செய்த ஜெயராமன், “மன ரீதியா ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்காங்க ஸ்வரூப். கொஞ்சம் அவங்கள ப்ரீயா விடலாம்.” என்றதில், சஜித் “உங்க தெரபி மூலமா ஏதாச்சு செய்ங்க டாக்டர்” என்று வேதனையுடன் கூற, “என்ன மாதிரியான அட்டாக் நடந்துருக்குன்னு தெரியாம, உடனே அவங்களை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது சஜித். இது அவங்களோட மனநிலையை சீர்குலைச்சுடும். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி அங்க நடந்ததை பத்தி அவங்களே பேசட்டும்.” என்றிட, ஸ்வரூப் நடுங்கிக்கொண்டிருந்தவளின் மீதிருந்த உணர்வற்றப் பார்வையை சிறிதும் மாற்றவில்லை.

            அவளுக்கு உணவைக் கொடுத்து, அவனது அணைப்பிலேயே உறங்கவும் வைத்தான். இது எதையும் அவள் தடுக்கவில்லை. அவனை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை.

            அவனை தன்னுடன் இருப்பதாக உருவகப்படுத்தி வைத்திருந்தவளுக்கு, நிஜமாகவே அவன் தன்னுடன் இருக்கையில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

            அவன் கையை மட்டுமே பிடித்தபடி இருந்தாள். ஆனாலும் பேசும் நிலையில் இல்லை. இன்னும் அரை மயக்கத்தில் இருந்தவளை தொந்தரவு செய்யாமல், தலையைக் கோதி கொடுத்த ஸ்வரூப், மெல்ல அவளை தலையணையில் படுக்க வைத்து விட்டு இறுகிய நிலையில் வெளியில் வந்தான்.

            இத்தனை நடுக்கத்திலும், தன்னை மட்டும் அவள் விலக்காதது மனதோரம் சிறு திருப்தியைக் கொடுத்தது.

            ஆனால், அது போதவில்லை. சிறகொடிந்து அவளை ஒடுங்க வைத்தவனின் மீது சினம் மழையாய் பொழிந்தது.

            தப்பித்து விட்டானே! தன்னிடம் சிக்காமல் போக்குக் காட்டும் அந்த சைக்கோ மனிதன் வசமாய் மாட்டிக்கொள்ளும் நாள் வெகு தூரம் இல்லை.

            அவளைக் கண்டுபிடிப்பதற்கான ஏற்பாடுகள், உடனுக்குடன் நடந்திருந்தது. அப்படியும் அவளை மீட்க நான்கு நாட்கள் ஆகி விட்டதில் தன் மீதே கோபம் எழுந்தது ஸ்வரூப்பிற்கு.

            பத்ரியிடம் கடத்தச் சொல்லியதாக பூமிநாதன் கூறியதில், அவர் மூலம் பத்ரியைப் பிடித்தனர்.

            அவனோ கையில் சிக்காமல் ஆட்டம் காட்ட, போன் லொகேஷனை வைத்து அவனைப் பிடித்து விட்டனர்.

            அவனை அடித்து துவைத்துக் கேட்டும் எந்த சரியான பதிலும் கிடைக்கவில்லை. “அவளைக் கொலை பண்ண சொன்னதுனால நான் கொன்னுட்டேன்.” என்ற பத்ரியின் கூற்றில் ஸ்வரூப் மிருகமானான்.

            “இல்ல… நீ பொய் சொல்ற. அவள் உயிரோட தான் இருக்கா. இருப்பா. உண்மையை சொல்லுடா.” என்று அவனை அடித்துப் பிரித்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அவனுக்கு அடிகள் உறைக்கவே இல்லை.

            அவன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் கண்டறிந்து இறுதியில் அந்த அரண்மனையையும் கண்டுபிடித்து விட்டனர். அங்கே தான் இருக்க வேண்டும் என்ற கணிப்பில் அரண்மனைக்குச் சென்று பார்க்க, அதற்கு முன்னர்,

            அவர்கள் கண்டுபிடித்து விட்டதை உணர்ந்த பத்ரி, அவசரமாக அவனது பாஸிற்கு போன் செய்தான்.

            “பாஸ்… ஸ்வரூப் கண்டுபிடிச்சுட்டான். உள்ள வந்து நோண்டுனா எல்லாம் தெரிஞ்சுடும். அவளை இப்போதைக்கு விட்டுடுங்க.” என்றதில் தான் அவன் கோபமானது.

            பின், அவளை அரண்மனையின் முன் வாசலிலேயே விட்டு விட்டனர்.

            அந்த அரண்மனை முழுக்க தேடிப் பார்த்தும் ஒரு துப்பும் கிடைக்கவில்லை. அவளை எங்கு வைத்திருந்தார்கள் என்று இன்னும் கூட புரியவில்லை.

            இரகசிய அறை எதுவும் இருக்கிறதா என்றும் ஆராய்ந்து விட்டார்கள் ஆனால், விடை என்னவோ பூஜ்ஜியம் தான்.

            “நம்ம எதிர்பார்க்காத அளவு மோசமானவனா இருப்பான் போல.” என விஹா பெருமூச்சு விட,

            “அவன் யாருன்னே தெரியலையே முதல்ல. எதுக்கும் அஞ்சாத ஷவியையே இப்படி நடுங்க வச்சு இருக்கான். அவன்லாம் நாசமா தான் போவான்.” என்று அக்ஷிதா சாபமிட்டாள்.

            “அவன் யாருன்னு தெரியும்.” ஜோஷித் மெதுவாகக் கூறிட, அவனை விழி விரித்துப் பார்த்த விஹானா, “நிஜமாவா? யாரு ஜோஷ். தெரியும்ன்னா அவனை பிடிக்க வேண்டியது தான?” எனப் பரபரக்க,

            “அது தான முடியாம குழம்பிப் போய் இருக்கோம்” என்றான் சஜித்.

            “கொஞ்சம் புரியிற மாதிரி பேசுங்கடா…” என அக்ஷிதா கடிந்து கொள்ளும் போதே, காப்பாற்றப்பட்ட ஆடவர்களில் ஒருவன் வெறித்தனமாக நடந்து கொண்டான்.

            அங்கிருந்த மருத்துவர்களைத் தாக்கி, நாய் போல மண்டியிட்டு பக்கவாட்டில் இருந்த ஜன்னலை உடைத்து, அந்த கண்ணாடியை வைத்து அனைவரையும் தாக்க முயல, ஒரு மருத்துவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

            ஸ்வரூப், சஜித், ஜோஷித் மூவரும் அந்த ஒற்றை ஆடவனை அடக்க முற்பட, மிகவும் சிரமமாகவே இருந்தது அவனது பலத்தை அடக்க.

            ஜெயராமன் ஏதோ ஒரு ஊசியை போட்டு அவனை மயக்க நிலைக்கு கொண்டு சென்ற பிறகு தான் அங்கு இயல்பு நிலை மெல்லத் திரும்பியது.

            உத்ஷவியும் மயக்கம் கலைந்து அங்கு வந்திருக்க, ஸ்வரூப் “நீ ஏண்டி வந்த? ட்ரிப்ச ஏன் கழட்டுன. இப்ப ஓகே வா?” எனப் படபடப்புடன் கேட்க, “ஓகே தான். இங்க என்ன ஆச்சு?” என்றவள் இப்போது சற்று இயல்பாய் இருந்தாள்.

            ஆனாலும் விஹானாவும் அக்ஷிதாவும் அவளைத் தள்ளி நின்றே மிரண்டு பார்க்க, “நீங்க ஏண்டி இப்படி பாக்குறீங்க” என்றாள் முறைப்பாக.

            விஹானாவோ, “போடி. நீ தான் நான் தொட வந்ததுக்கு தள்ளி விட்டியே” என்று அழுகுரலில் கூற, “நானா? நான் எப்ப தள்ளி விட்டேன். எனக்கு இப்ப தான் மயக்கமே கொஞ்சம் க்ளியர் ஆகியிருக்கு டார்ல்ஸ்” என்றதில்,

            “இப்படி சொல்லாம கொள்ளாம எங்கயும் போய் தொலையாதடி. எங்களுக்கு உயிரே போயிடிச்சு” என்ற அக்ஷிதா அவளை அணைத்துக் கொள்ள, விஹானாவும் அவர்களுடன் இணைந்தாள்.

            முதலும் முடிவும் நீ

            மேகா

             

              The post 64, 65, 66 – என் முதலோடு முடிவானாய் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

              ]]>
              https://thoorigaitamilnovels.com/64-65-66-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/feed/ 1 17848
              பிறை சூழ் மாயம் – 5 https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/#respond Tue, 07 May 2024 13:00:30 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/ பிறை 5   சஷாவில் சர்வஜனனைக் கண்டதுமே சஞ்சீவனிக்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதனுடன், அவனும் தன்னைப் பற்றி நினைத்திருப்பானோ என்ற குறுகுறுப்பும் மனதிற்குள் எழுந்தது.   அதே சிந்தனையுடன் அவர்கள் கேட்ட காஃபி மோச்சாவை தயாரித்து அவர்களின் மேஜைக்கு அருகே செல்ல, அப்போது தான் சர்வஜனனின் அலைபேசியிலிருந்த புகைப்படத்தைக் கண்டாள்.   அனிச்சையாக மனதிற்குள் பல காட்சிகள் விரிய, அவளே அறியாமல் தான், “வேர்உல்ஃபோட காலடித்தடம்!” என்று கூறியிருந்தாள்.  

              The post பிறை சூழ் மாயம் – 5 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

              ]]>

              Loading

              பிறை 5

               

              சஷாவில் சர்வஜனனைக் கண்டதுமே சஞ்சீவனிக்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதனுடன், அவனும் தன்னைப் பற்றி நினைத்திருப்பானோ என்ற குறுகுறுப்பும் மனதிற்குள் எழுந்தது.

               

              அதே சிந்தனையுடன் அவர்கள் கேட்ட காஃபி மோச்சாவை தயாரித்து அவர்களின் மேஜைக்கு அருகே செல்ல, அப்போது தான் சர்வஜனனின் அலைபேசியிலிருந்த புகைப்படத்தைக் கண்டாள்.

               

              அனிச்சையாக மனதிற்குள் பல காட்சிகள் விரிய, அவளே அறியாமல் தான், “வேர்உல்ஃபோட காலடித்தடம்!” என்று கூறியிருந்தாள்.

               

              அதைக் கூறிய மறுநொடி, தானா அப்படி கூறினோம் என்ற சிந்தனைக்குட்பட்டவளிற்கு அதற்கான அவகாசம் கிடைக்காமல் போனது, திடீரென்று ஏற்பட்ட வலியினால்.

               

              அவளே மறந்திருந்த முதுகிலிருந்த தழும்பு சுருக்கென்று வலிக்க, அதை தாங்க முடியாமல் கத்திவிட்டாள்.

               

              ஆனால், இப்போது வரை அவள் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், சர்வஜனன் அவளை நெருங்கும் சமயம் மட்டும் அந்த வலி எப்படி மாயமாக மறைந்து விடுகிறது என்பது தான்.

               

              இப்படி பல குழப்பங்கள் மனதிற்குள் எழ, முதுகுவலியும் சேர்ந்து கொள்ள, அதற்கு மேல் அங்கு வேலை செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்தவளாக, பிரத்யூஷா வெளியே சென்றிருப்பதால், ஸ்டெஃபியிடம் கூறிவிட்டு வீட்டிற்கு செல்ல ஆயத்தமானாள்.

               

              அப்போதும் ஸ்டெஃபி, “சஞ்சுக்கா, பிரத்யூக்கா வர வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன். அவங்களே உங்களை வண்டியில டிராப் பண்ணிடுவாங்கல. இப்போ நீங்களா எப்படி போவீங்க? அதுவும் பார்க்கவே ரொம்ப டையர்ட்டா இருக்கீங்க.” என்று கூற, “இல்ல ஸ்டெஃபி, ஐ கேன் மேனேஜ். பிரத்யூ எப்போ வருவான்னு வேற தெரியல. இப்போ கால் பண்ணா, அவளையும் டிஸ்டர்ப் பண்ற மாதிரி இருக்கும். வெளிய ஆட்டோ பிடிச்சு நான் போயிக்குறேன். இங்க நீங்க ரெண்டு பேரு மட்டும் தான் இருக்கீங்க. சோ, கேர்ஃபுல்லா இருங்க.” என்று அறிவுரை வழங்கிவிட்டே சென்றாள்.

               

              தான் சொன்னபடியே ஆட்டோவிற்காக காத்திருந்தபோது தான் மீண்டும் சர்வஜனனை சந்திக்க நேர்ந்தது. கூடவே, அவன் பெயர் தனக்கு எப்படி தெரியும் என்ற கேள்வியும் எழுந்தது.

               

              சரியாக அதே சமயம் ஆட்டோவும் வந்ததால், அந்த கேள்வியை ஒதுக்கிவிட்டு பயணத்தை துவங்கினாள்.

               

              முதலில் வீட்டிற்கே சென்று விடலாம் என்று எண்ணியவள், முதுகில் வலி சற்று அதிகரிக்க, செல்லும் வழியில் இருக்கும் சிறிய மருத்துவமனையிலேயே இறங்கி விட்டாள்.

               

              அங்கு மருத்துவர் கேட்ட, “எப்படி இப்படி அடிப்பட்டுருக்கு?” என்ற கேள்விக்கு, “தெரியல!” என்ற அரிய பதிலைக் கூறி, அவரின் ஒரு மாதிரியான பார்வையை வாங்கிக் கொண்டதெல்லாம் தனி கதை!

               

              அங்கிருந்து வெளிவந்தவள், திரும்பவும் ஆட்டோவிற்காக காத்திருக்க வேண்டுமா என்று மலைத்து, பின்னர் சிறிது தூரம் தானே, நடந்தே சென்று விடலாம் என்று நடக்க ஆரம்பித்தாள்.

               

              அது மதிய நேரம் என்பதால் ஆளரவமின்றி வெறிச்சோடி இருந்தது அவள் செல்லும் பாதை. சில நிமிடங்கள் தான் நடந்திருப்பாள், அதற்குள் கண்கள் இருட்டிக் கொண்டு வர, பொத்தென்று அதே இடத்தில் மயங்கி விழுந்தாள்.

               

              *****

               

              ரோஹித்தை சஷாவிலிருந்து நேரே தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான் சர்வஜனன். ஒரு அறையை ரோஹித்திற்கு தந்துவிட்டு, தானும் தன் அறைக்கு குளிக்கச் சென்றான்.

               

              குளியலறை கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்துக்கொண்டே தன் தாடியை ட்ரிம் செய்து கொண்டிருக்க, சட்டென்று அவன் முகம் மறைந்து அவள் முகம் கண்ணாடியில் தெரிய, அவன் கைகளோ அந்தரத்தில் மிதந்தன.

               

              ஒரேயொரு நொடி அந்த காட்சிப்பிழையில் மயங்கியவன், அடுத்த நொடியே சுதாரித்துக் கொண்டான்.

               

              ‘இவ்ளோ நாள் ஸ்டெடியா இருந்துட்டு இப்போ மட்டும் ஏன் தடுமாறுற?’ என்று தன்னையே திட்டிக்கொண்டு, அவள் நினைவை முயன்று ஒதுக்கினான் சர்வஜனன்.

               

              அதன்பிறகு எல்லாமே வேகம் தான். எப்போதும் இல்லாத வகையில் சோம்பிய உடலை விரட்டி, தன் பணியை முடித்துக் கொண்டு அறையிலிருந்து வெளிவந்தான் அவன்.

               

              அங்கு ரோஹித் அலைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதை பார்த்தவன், சமையலறைக்கு சென்று இருவருக்குமான உணவை தயாரிக்க ஆரம்பித்தான்.

               

              சிறிது நேரத்தில் அவனுடன் இணைந்து கொண்ட ரோஹித், “உஃப் ஒருநாள் ஊர்ல இல்லைன்னா கூட, எல்லாருக்கும் போன்ல அட்டெண்டன்ஸ் போட வேண்டியதா இருக்கு!” என்று அலுத்துக் கொள்ள, “ரோஷினி கிட்ட பேசுனியா?” என்றான் சர்வஜனன்.

               

              “உன் தங்கச்சி கிட்ட பேசாமையா? அவளுக்கு தான் ஃபர்ஸ்ட் காலே! இதுல மேடமுக்கு நான் ரீச்சானவுடனே கால் பண்ணலன்னு கோபம் வேற! அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் எது ஒத்துப்போகுதோ இல்லையோ, இந்த கோபம் மட்டும் நல்லா ஒத்துப்போகுது!” என்றான் ரோஹித்.

               

               

              அதன்பின்னர், சாதாரணமாக அவர்களின் உரையாடலும் தொடர்ந்தது. இருவரும் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில், “சர்வா, இனி என்ன ஸ்டெப் எடுக்கப்போற?” என்று வினவினான் ரோஹித்.

               

              “அந்த பொண்ணோட ஹஸ்பண்டை தேடுறதை தீவிரப்படுத்தணும். அவரு கிடைச்சுட்டா, மேபி இந்த கேஸ்லயும் பிரேக்த்ரூ கிடைக்கும். மீன்வைல், அந்த பாடியையும் கண்டுபிடிக்க முயற்சி பண்ணனும். பட் என்னோட இன்டியூஷன் படி, அந்த பாடி இனிமே கிடைக்குறது கஷ்டம் தான். ஹ்ம்ம், லெட்ஸ் ஸீ…” என்றான் சர்வஜனன்.

               

              “இது லாங் பிராசஸா இருக்கும் போலயே சர்வா. அதுவரை உன்னோட ஹையர் அஃபிஸியல்ஸ் சும்மா இருப்பாங்களா என்ன? அவங்க சும்மா இருந்தாலும், மீடியா, புதுசா முளைச்ச யூட்யூப் சேனல்ஸ் – இவங்க சும்மா இருப்பாங்களா என்ன? ஏற்கனவே, ‘பாடியை காணோம்’னு அவங்க இஷ்டத்துக்கு கதையளந்துட்டு இருக்காங்க.” என்றான் ரோஹித்.

               

              “ம்ம்ம், இதைப் பத்தி ஹையர் அஃபிஸியல்ஸுக்கு முதல்ல ரிப்போர்ட் பண்ணனும். அவங்க புரிஞ்சுகிட்டா சரி. இல்லன்னா, ஸ்பீட்டா கேஸை சால்வ் பண்ற யாரையாவது கொண்டு வந்து முடிச்சுக்கட்டும். அது அவங்க இஷ்டம். அப்பறம் அந்த மீடியா, யூட்யூப் சேனல்ஸ் எல்லாம்… ஐ டோன்ட் கேர் அபவுட் தி **** தே ஸ்ப்ரெட்.” என்று அழுத்தமாக கூறியவன் அடுத்த வேலைகளை பார்க்க சென்றுவிட, ‘இவன் என்ன டிசைன்’ என்று நினைத்துக் கொண்டிருந்தான் ரோஹித்.

               

              *****

               

              சஞ்சீவனிக்கு லேசாக விழிப்பு தட்ட, மெதுவாக விழிகளை திறந்தவளுக்கு தான் எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை. தெரியாத இடம், குழப்பமான மனநிலை என்று விழி பிதுங்கியவளுக்கு மேலும் பதட்டத்தை உண்டு செய்தது அவள் இருந்த நிலை.

               

              மேலாடை கழட்டப்பட்டு போர்வையால் சுற்றப்பட்டிருப்பதை கண்டவளுக்கு உலகமே தட்டாமாலை சுற்றுவது போலிருக்க, இது மீண்டும் ஒரு கனவோ என்று எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டாள் சஞ்சீவனி.

               

              தலையை கையால் தாங்கியபடி பரிதாபமாக இருந்தவளின் தோற்றமே அங்கிருந்த பெண்மணிக்கு அவளின் சிந்தனையை தெளிவாக கூற, “பயப்படாத மா. உன் முதுகுல இருக்க காயத்துக்கு மருந்து போட்டு, அது ஒட்டாம இருக்க உன் துணியை நான் தான் கழட்டுனேன்.” என்றார் அவர்.

               

              திடீரென்று கேட்ட சத்தம் கூட அந்நிலையில் அவளுக்கு பயத்தை விளைவிக்க, அவளருகே வந்து மெதுவாக அவளின் தலையை தடவினார் அந்த வயதான பெண்.

               

              சற்று நேர ஆசுவாசத்திற்கு பிறகு சுயத்தை அடைந்த சஞ்சீவனி, அந்த பெண்ணை நோக்கி, “நீங்க… இல்ல நான்… எப்படி இங்க வந்தேன்?” என்று தெளிவற்ற குரலில் வினவினாள்.

               

              “மெயின் ரோட்டுல நடந்து வரப்போ நீ மயக்கம் போட்டு விழுறதை பார்த்தேன். அதான் எனக்கு தெரிஞ்ச ஆட்டோக்காரனை கூப்பிட்டு உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்.” என்றார் அவர்.

               

              தனக்கு உதவி செய்தவரிடம் நன்றியை கூறியவள், அங்கிருந்து செல்ல எத்தனிக்க, அவளை தடுத்த அந்த பெரியவர், “எழுந்ததும் உடனே கிளம்புனா, திரும்ப தலை சுத்தும். தொண்டைக்கு இதமா கொஞ்சம் காப்பியை குடிச்சுட்டு போ மா.” என்று கூற, அதை மறுக்க முடியாமல் அந்த பெரியவரின் பின்னே சமையலறைக்கு சென்றாள் சஞ்சீவனி.

               

              குளம்பி தயாரிக்கும் அந்த சில மணித்துளிகளிலேயே, அந்த பெரியவரைப் பற்றிய விபரங்களை அறிந்து கொண்டாள் சஞ்சீவனி.

               

              அவரின் பெயர் பொன்னம்மா. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவரை இழந்தவர். பெற்ற பிள்ளைகளும் வெளிநாட்டில் வசிக்க, இவரோ தாய்நாட்டை விட்டு செல்ல விரும்பாதவராக, இதே ஊரிலேயே அருகிலிருக்கும் எஸ்டேட் ஒன்றில் வேலை செய்து தன் வாழ்நாளை கழிக்கிறார்.

               

              “ஏன் பாட்டி, நீங்க உங்க பசங்க கூட ஃபாரினுக்கு போய் ஜம்முன்னு இருக்குறதை விட்டுட்டு இங்க கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்க?” என்று அவர் தந்த குளம்பியை வாங்கிக்கொண்டு அவள் வினவ, அவரோ சிரித்தவாறு, “பிறந்த மண்ணை விட்டு போக மனசு இடம் கொடுக்க மாட்டிங்குதே! அதுவுமில்லாம, இங்க எனக்கு இன்னும் சில வேலைகள் இருக்கு.” என்றார்.

               

              அவர் கூறியதில் கவனமில்லாமல் அவர் கொடுத்த குளம்பியை ருசி பார்த்தவள், “சூப்பர் டேஸ்ட் பாட்டி. நாங்க கூட டவுன்ல ஒரு காஃபி ஷாப் வச்சுருக்கோம். அடுத்த முறை டவுனுக்கு வரப்போ நீங்க கண்டிப்பா வரணும்.” என்று அழைப்பும் விடுத்தாள்.

               

              அதற்கு மையமாக தலையசைத்த பாட்டியோ, “உன் வீடு எங்க இருக்கு? இந்நேரம் போனா, உன் வீட்டுல ஆளுங்க இருப்பாங்களா?” என்று வினவ, அவளும் அக்கேள்வியை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, “அச்சோ, என்னைப் பத்தி சொல்லவே இல்ல பாருங்க. என் பேரு சஞ்சீவனி. இங்கயிருந்து ஒரு பத்து நிமிஷ நடையில தான் என் வீடு இருக்கு. எனக்கு அப்பா அம்மா இல்ல. நானும் என் ஃபிரெண்டும் தான் அந்த வீட்டுல இருக்கோம். நான் சொன்னேன்ல, அந்த கஃபே கூட நானும் அவளும் சேர்ந்து பார்த்துக்குறோம்.” என்று தன்னைப் பற்றி அனைத்தையும் அந்த பாட்டியிடம் ஒப்பித்தாள்.

               

              “ஓஹோ, ஆமா உன் பிறந்தநாள் என்னைக்கு?” என்று பொன்னம்மா வினவ, அப்போது தான் சற்று சுதாரித்த சஞ்சீவனி, “அது… அது எனக்கு தெரியல பாட்டி. அனாதை ஆசிரமத்துல தான வளர்ந்தேன். அவங்களுக்கே நான் பிறந்த தேதி எதுவும் தெரியாதப்போ, எனக்கு எப்படி தெரியும்?” என்றாள்.

               

              ஆனால், சஞ்சீவனிக்கு தேதி தெரிந்தே இருந்தது. அவளை கண்டெடுக்கும்போதே அவளுடன் இருந்த சிறு குறிப்பையும் சேர்த்தே எடுத்திருந்தனர். அதில் அவளின் பெயர், பிறந்த தேதி, ராசி, நட்சத்திரம் என அனைத்தும் இருக்க, அதை அவள் புரிந்து கொள்ளும் வயது வந்தவுடன் அந்த ஆசிரமத்தின் நிர்வாகி அவளிடம் பகிர்ந்திருந்தார்.

               

              அதைக் கேள்விப்பட்டதும் ஏகப்பட்ட கேள்விகள் மனதில் எழுந்தாலும், அவற்றை எல்லாம் தேவையற்றவை என்று மனதின் அடியாழத்தில் புதைத்திருந்தாள்.

               

              அதே யோசனையில் இருந்தவளை கலைத்த பொன்னம்மா, ஏதோ வினவ, இனிமேல் அங்கிருக்க வேண்டாம் என்று எண்ணியவளாக, “பாட்டி, என் ஃபிரெண்டு வர நேரமாச்சு. சாவியும் என்கிட்ட இருக்கு. சோ, நான் கிளம்புறேன்.” என்று வேகவேகமாக கிளம்ப எத்தனித்தாள்.

               

              அவள் எதிர்பார்க்காத சமயம், அவளின் கையை இறுக்க பற்றிய பொன்னம்மா, “உன் பிறந்தநாள் ஃபிப்ரவரி பத்தொன்பதாம் தேதி. உன் ராசி கும்பம், உன் நட்சத்திரம் சதயம். நீ எப்படி பிறந்த தெரியுமா? இறந்துபோன உன் அம்மா வயித்தை வெட்டி உன்னை வெளிய எடுத்தாங்க.” என்று கூற, சஞ்சீவனியோ அதிர்ச்சியில் சிலையாகவே மாறிவிட்டாளோ என்று எண்ணும் அளவிற்கு ஒரு அசைவும் இல்லாமல் நின்றிருந்தாள்.

               

              அவள் உடல் அசையவில்லை என்றாலும் மனமோ பல மண்டலங்களை நொடியினில் கடந்து விடும் வேகத்தில், பல நினைவுக் குவியல்களால் ஆட்கொள்ளப்பட்டாள்.

               

              அந்த சமயம், அவளின் முதுகில் உள்ள தழும்பு பொன்னிற வெளிச்சத்தை கக்க, லேசான வலியும் உண்டானது.

               

              மூளை, மனம், உடல் என அனைத்தும் வெவ்வேறு திசைகளில் இழுபடுவது போலிருக்க, அதன் காரணமாக தலை சுற்றி, கால்கள் தள்ளாடி, அங்கிருந்த நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தாள்.

               

              அவள் சமன்பட சிறிது அவகாசத்தை கொடுத்தவராக தள்ளி நின்ற பொன்னம்மா, சில நிமிடங்கள் கழித்து அவளிடம் தண்ணீர் குவளையை நீட்டினார்.

               

              அதை வாங்க தயங்கிய சஞ்சீவனியை நோக்கி லேசான புன்னகையை சிந்திய பொன்னம்மா, “பயப்படாத சஞ்சீவனி. அம்மா வயித்துலயிருந்து என் கையால முதன்முதலா தூக்குன பிள்ளையை நான் எதுவும் செஞ்சுட மாட்டேன்.” என்று கூற, அடுத்த அதிர்ச்சி அவளுக்கு.

               

              அப்போதும் தண்ணீரை வாங்காமல், “நீங்க… நீங்க..?” என்று அவள் வார்த்தைகள் வராமல் திணற, “முதல்ல தண்ணீரை குடி. நீ யாரு, உன் பிறப்புக்கான நோக்கம் என்னன்னு எல்லாத்தையும் சொல்லத்தான் நான் இருக்கேன், இந்த உசுரை கையில பிடிச்சுக்கிட்டு.” என்றார்.

               

              இத்தனை வருடங்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்த தன்னைச் சுற்றி இப்போது ஏதோ மாயவலை பின்னப்படுவது போலிருந்தது சஞ்சீவனிக்கு. பொன்னம்மா பாட்டி அவளிடம் எதையோ பெரிதாக சொல்லப் போகிறார் என்பது நிச்சயமாக தெரிந்து போனது அவளுக்கு. மெல்ல மனதை அதற்கு தயார்படுத்தியவள், இம்முறை அவர் நீட்டிய குவளையையும் வாங்கிக் கொண்டாள்.

               

              பொன்னம்மா ஒரு பெருமூச்சு விட்டவராக, “நீ ஒரு வேடகுலத்தை சேர்ந்தவ.” என்று கூற, “ஹண்டரா?” என்று புருவம் சுருக்கினாள் சஞ்சீவனி.

               

              “ஹ்ம்ம், சாதாரண ஹண்டர் இல்ல, ஓநாய் மனிதர்களை வேட்டையாடும் வேர்உல்ஃப் ஹண்டர்!” என்று அவர் கூற, இம்முறை தலையோடு உடலும் சுற்ற கீழே விழுந்தாள் சஞ்சீவனி.

               

              *****

               

              “பாஸ், போலீஸோட விசாரணை எந்தளவு இருக்குன்னு ஊருக்குள்ள விசாரிக்கிறப்போ, நாங்க வேறொன்னை கவனிச்சோம்.” என்று அலைபேசியில் மறுமுனையிலிருந்து பேசியவன் விஷயத்தை சொல்ல தயங்க, “லுக், எனக்கு இப்படி பார்ட் பார்ட்டா கதை மாதிரி கேட்குற அளவுக்கு பொறுமையும் இல்ல, டைமும் இல்ல. சோ, சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லி முடி!” என்று கர்ஜித்தான் அந்த பாஸ்.

               

              “அது வந்து பாஸ்… நாங்க வழியில… ஹண்ட்ரை பார்த்தோம்…” என்று அவன் கூற, “வாட் ஹண்டரா?” என்று வினவினான் பாஸ்.

               

              பாஸின் குரல் தன்னை நம்பாததை போலிருக்க, தன்னை நிரூபிக்க வேண்டி, “ஆமா பாஸ், அவங்க முதுகுல ஹண்டருக்கான டேட்டூ கோல்டன் கலர்ல ஒளிர்ந்ததை பார்த்தோம்.” என்றான்.

               

              சில மணித்துளிகள் மறுபுறம் அமைதியாக இருக்க, அந்த அமைதியே அவனுக்கு பீதியை கிளப்பியது.

               

              “பாஸ்…” என்று பயத்திலேயே அவன் விளிக்க, “க்கும், இவ்ளோ வருஷமா நமக்கு பயந்து ஒளிஞ்சுட்டு இருந்த இனம் இப்போ வெளிய வருதா. ஹாஹா, வரட்டும் வரட்டும், முன்ன எப்படி அவங்களை பயமுறுத்தி ஓடி ஒளிய வச்சோமோ, அதையே திரும்ப செய்ய வேண்டியது தான். இவங்களை அப்பறமா கவனிச்சுக்கலாம். நீங்க நான் சொன்ன வேலையை மட்டும் பாருங்க போதும்!” என்று கூறிவிட்டு அலைபேசியை துண்டித்தான் அந்த பாஸ்.

               

              என்னதான் அடியாளிடம் அப்படி கூறிவிட்டாலும், உள்ளுக்குள், ‘இவ்ளோ வருஷம் இல்லாம, இப்போ ஏன்?’ என்ற கேள்வி எழாமல் இல்லை.

               

              “ஹ்ம்ம், இவங்களுக்கும் சேர்த்து ஸ்கெட்ச் போட்டுட வேண்டியது தான்!” என்று முணுமுணுத்தவனை அடுத்த வேலை அழைக்க, அதை பார்க்கச் சென்றான்.

               

              மாயம் தொடரும்…

                The post பிறை சூழ் மாயம் – 5 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                ]]>
                https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/feed/ 0 17845
                பிறை சூழ் மாயம் – 3 https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-2/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-2/#respond Mon, 06 May 2024 13:00:57 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-2/ பிறை 4   இரவிலும் கூட அந்த காவல்நிலையம் பரபரப்பாக இருந்தது. பிணவறையிலிருந்து இறந்தவரின் உடல் காணாமல் போனதிலிருந்து மேலிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கொண்டிருக்க, அதன் வெளிப்பாடாக அனைவரும் முடுக்கி விட்டது போல வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.   ஒருவழியாக, அந்த மருத்துவமனை வெளியே இருந்த சிசிடிவி காட்சிகளை ஓடவிட்டு, பல மணி நேரங்களுக்கு பின்னர், உடலை கடத்திச் சென்ற வாகனத்தை கண்டுபிடித்திருந்தனர் காவலர்கள்.   அதனுடன், அந்த

                The post பிறை சூழ் மாயம் – 3 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                ]]>

                Loading

                பிறை 4

                 

                இரவிலும் கூட அந்த காவல்நிலையம் பரபரப்பாக இருந்தது. பிணவறையிலிருந்து இறந்தவரின் உடல் காணாமல் போனதிலிருந்து மேலிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கொண்டிருக்க, அதன் வெளிப்பாடாக அனைவரும் முடுக்கி விட்டது போல வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

                 

                ஒருவழியாக, அந்த மருத்துவமனை வெளியே இருந்த சிசிடிவி காட்சிகளை ஓடவிட்டு, பல மணி நேரங்களுக்கு பின்னர், உடலை கடத்திச் சென்ற வாகனத்தை கண்டுபிடித்திருந்தனர் காவலர்கள்.

                 

                அதனுடன், அந்த வாகனம் சென்ற வழித்தடத்தையும் ஓரளவு கண்டுபிடித்துவிட்டனர். ஆனால், இப்போதைய பிரச்சனை என்னவென்றால், அங்கு கடும்மழை பெய்து கொண்டிருந்தது.

                 

                மேலும், அந்த வாகனம் சென்ற பாதையில் வெள்ள எச்சரிக்கை வேறு விடப்பட்டிருந்ததால், இந்த இரவு நேரத்தில் அங்கு செல்வது ஆபத்து என்று தோன்றியது சர்வஜனனுக்கு.

                 

                வேறு வழியில்லாததால், அடுத்த நாள் காலை அங்கு செல்வது என்று முடிவு செய்துவிட்டு வீட்டிற்கு கிளம்பும் வேளையில், அந்த காவல்நிலையத்திற்கு மழையில் முழுவதுமாக நனைந்தபடி ஒரு பெண் ஓடி வந்தாள்.

                 

                அவளின் தோற்றமே அவள் பெரும் பதட்டத்தில் இருப்பதாக கூற, சர்வஜனன் அங்கிருந்த பெண் காவலரை அனுப்பி அப்பெண்ணை சமன்படுத்தக் கூறினான்.

                 

                அந்த பெண் காவலர் கொடுத்த தண்ணீரைக் கூட வாங்காமல், அங்கிருந்த காவலரிடம், “சார் சார், என் புருஷன் என்னை அடிச்சு போட்டுட்டு ஓடிப்போயிட்டாரு. அவரை எப்படியாவது கண்டுபிடிச்சு கொடுங்க.” என்று கண்ணீர் வடிக்க, அங்கிருந்தவர்களோ அவளை வேற்றுக்கிரகவாசி போல பார்த்தனர்.

                 

                அப்போது அங்கு வந்த பழனியப்பன், “அட நீதானம்மா போன மாசம் வந்து உன் புருஷனை காணோம்னு கம்பலைன்ட் பண்ண. அப்பறம் கொஞ்ச நாள்ல உன் புருஷன் கிடைச்சுட்டான்னு வேற சொன்னியே.” என்றார்.

                 

                “சார், ஆமா சார். காணாம போன கொஞ்ச நாள்லயே கிடைச்சுட்டார் தான். ஆனா, அதுக்கப்பறம் அவரோட பிஹேவியர்ல ரொம்ப மாற்றம் தெரிஞ்சுது. எதுக்கெடுத்தாலும் கோபப்படுறது, எப்போவும் சிடுசிடுன்னு இருக்குறதுன்னு ரொம்ப மாறிட்டாரு. இவ்ளோ ஏன், அடிக்கடி உறுமிட்டு மிருகம் மாதிரி தான் இருந்தாரு. நாங்களும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனோம். அப்படியும் ஒன்னும் சரியாகல. அக்கம்பக்கத்துல இருக்கவங்க தர்காக்கு போய் மந்திரிக்க சொல்ல, இன்னைக்கு அங்க போற வழில, என்னை அடிச்சுப் போட்டுட்டு ஓடிட்டாரு.” என்று கூறி முடித்தாள்.

                 

                அவள் கூறியதற்கேற்ப, அவளின் நெற்றியில் லேசாக இரத்தம் எட்டிப்பார்த்தது.

                 

                “சார் பிளீஸ் சார், அவரை எப்படியாவது கண்டுபிடிச்சு கொடுங்க. அவரு அவராவே இல்ல. எங்க போனாருன்னும் தெரியல.” என்று அந்த பெண் கதற, சர்வஜனனோ அவள் கூறிய ‘மிருகம் மாதிரி தான் இருந்தாரு’ என்ற வாக்கியத்திலேயே தேங்கி நின்றான்.

                 

                பழனியப்பனோ, “இங்க பாரும்மா, மழை அடிச்சு ஊத்திட்டு இருக்கு. இந்த நேரத்துல வெளிய போய் தேடவெல்லாம் முடியாது மா.” என்று கூற, அதற்கு அந்த பெண் அழுதே கரைந்தாள்.

                 

                அதில் சுயத்திற்கு வந்த சர்வஜனன், “பழனி சார், அவங்ககிட்ட கம்ப்லைன்ட் எழுதி வாங்கிக்கோங்க. அண்ட் அவங்க காயத்துக்கு ஃபர்ஸ்ட் எய்ட் கொடுங்க.” என்றவன், அப்பெண்ணை நோக்கி திரும்பி, “நாளைக்கு காலைல உங்க ஹஸ்பண்ட்டை தேடச் சொல்றேன். இப்போ நீங்க ரெஸ்ட் எடுங்க.” என்று எதிரிலிருப்பவர் மறுக்க முடியாத குரலில் கூறிவிட்டு தன் வீட்டிற்கு கிளம்பினான்.

                 

                அந்த இரவு முழுவதும், காலையில் பார்த்த காலடித்தடங்களும், சற்று முன்னர் அப்பெண் கூறிய ‘மிருகம் மாதிரி இருந்தாரு’ என்பதுமே அவன் மனதை அலைகளித்துக் கொண்டிருந்தன.

                 

                தான் ஒருத்தியின் கனவில் வந்து அவளை தொல்லை செய்வதை அறியாமல், இதிலேயே உழல, அவன் உறக்கமும் தொலைந்து போனது.

                 

                ******

                 

                அடுத்த நாள் காலை, ஒரு குழுவினரை அந்த பெண்ணின் கணவனைத் தேட அனுப்பியவன், தானும் இன்னும் சில காவலர்களுடன், இறந்தவரின் உடலை கடத்திச்சென்ற வாகனத்தின் தடத்தை தொடர்ந்து சென்றான்.

                 

                முதல் நாள் பெய்த மழையில், அந்த வாகனம் இறுதியாக இருந்ததாக சொல்லப்பட்ட இடம் முற்றிலும் மாறிப்போயிருந்தது.

                 

                ஆங்காங்கு மரங்கள் கீழே சாய்ந்திருக்க, சில இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டிருந்தது. சேறும் சகதியுமாக இருந்த இடத்தில் கண்களுக்கு நேரே இருப்பதை தேடவே சிரமமாக இருக்கும்போது, அந்த வாகனம் எங்கு சென்றது என்று தெரியாமல் தேடுவது அத்தனை எளிதான காரியம் அல்லவே.

                 

                ஆயினும் அந்த காவலர்களை ஒவ்வொரு திசையில் தேட அனுப்பியவன் தானும் ஒரு பக்கம் தேடினான். ஒரு மணி நேர தேடுத்தலுக்கு பலன் என்னவோ பூஜ்யம் தான்.

                 

                இன்னும் ஒரு இடம் மட்டுமே பாக்கியிருக்க, அந்த இடமோ சிறு செடிகளாலும் புதர்களாலும் மண்டிக்கிடந்தது. எதன் வேர் எதில் சிக்கியிருக்கிறது என்று அறிய முடியாத வண்ணம் மொத்தமாக கலைந்திருந்தது.

                 

                “சார், இதை கிளியர் பண்ணிட்டு தான் ப்ரோஸீட் பண்ண முடியும்.” என்று சரவணன் கூற, “சீக்கிரம் கிளியர் பண்ண சொல்லுங்க.” என்றான் சர்வஜனன்.

                 

                அந்த நேரத்தில் மற்றொரு குழுவினருக்கு அழைத்தவன், அவர்களின் தேடுதல் வேட்டை எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கேட்டான்.

                 

                “சார், நாங்க தேடிட்டு தான் இருக்கோம். நேத்து பெஞ்ச பேய் மழைல வழியெல்லாம் சகதியாக இருக்கு சார். சோ, தேடுறது கொஞ்சம் டிலே ஆகுது சார்.” என்ற பதிலே கிடைத்தது.

                 

                “ப்ச், இந்த மழையினால ஒரு காரியமும் நடக்க மாட்டிங்குது.” என்று முணுமுணுத்தவனுக்கு அடுத்த அழைப்பு மேலிடத்திலிருந்து வந்தது.

                 

                அவர்களுக்கும் தகுந்த காரணத்தை சொல்லி சமாளித்தவன், ஒரு பெருமூச்சுடன் அழைப்பை துண்டிக்க, அதற்கென காத்திருந்ததை போல அடுத்த அழைப்பு வந்தது.

                 

                சிறு எரிச்சலில் யார் அழைப்பது என்று பார்க்க, அதில் ரோஹித்தின் பெயரைப் பார்த்ததும் தான், அவனை வரச்சொல்லியது நினைவிற்கு வந்தது.

                 

                அதில் தன்னையே நொந்து கொண்டு அழைப்பை ஏற்க, மறுபுறத்திலோ, “சர்வா, எங்க இருக்க? நான் இங்க உன் ஸ்டேஷனுக்கு வந்துட்டேன். உன்னைக் கேட்டப்போ நீ இங்க இல்லன்னு சொன்னாங்க.” என்றான் ரோஹித்.

                 

                “நான் இங்க ஸ்பாட்டுக்கு வந்துருக்கேன் ரோஹித்.” என்று சர்வஜனன் கூற, “நான் வேணும்னா அங்க வரவா?” என்றான் ரோஹித்.

                 

                “இல்லல்ல, இப்போ நான் ஸ்டேஷனுக்கு கிளம்பிட்டேன். நீ அங்கயே இரு.” என்ற சர்வஜனன் காவல்நிலையம் நோக்கி விரைந்தான்.

                 

                *****

                 

                ஓவியம் வரைந்தபடி அப்படியே உறங்கியிருந்த சஞ்சீவனியை உலுக்கி எழுப்பினாள் பிரத்யூஷா.

                 

                “இங்க எப்போ வந்து தூங்குன சஞ்சு? ஆமா, நேத்து நீ கத்தவே இல்லயா என்ன? நான் இடையில முழிச்ச மாதிரி இல்லையே!” என்றாள் பிரத்யூஷா.

                 

                அவள் அப்படி கேட்டதும், அந்த கனவு நினைவுக்கு வர, மானசீகமாக தலையிலடித்துக் கொண்டாள் சஞ்சீவனி.

                 

                தான் கேட்டதற்கு எதுவும் சொல்லாமல் ஏதோ மந்திரித்து விட்டதை போல அமர்ந்திருந்தவளைக் கண்ட பிரத்யூஷாவோ, ‘கண்டிப்பா இவளை இந்த வீகெண்ட் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயே ஆகணும்.’ என்று நினைத்துக் கொண்டாள்.

                 

                “ஹே சஞ்சு, என்ன இப்படியே உட்கார்ந்து இன்னைக்கு வேலைக்கு மட்டம் போட்டுடலாம்னு நினைப்போ? ஒழுங்கா போய் குளிச்சுட்டு வா.” என்று சமையலறை நோக்கி சென்று விட்டாள் பிரத்யூஷா.

                 

                சஞ்சீவனியும் தன்மீது கிடக்கும் ஓவியத்தாள்களை எடுத்து வைக்கும்போது தான் அதை கவனித்தாள். அவளின் கைவண்ணத்தில், அவனின் படம்! அச்சில் வார்த்ததை போல அத்தனை அழகாக இருந்தது.

                 

                அவனின் காந்தக்கண்களிலிருந்து, கழுத்திலிருக்கும் சிறு மச்சம் வரை அத்தனையும் தெளிவாக இருக்க, சஞ்சீவனிக்கே அதைக் கண்டு ஆச்சரியம் தான்.

                 

                ‘அவனை இவ்ளோ கவனிச்சுருக்கேனா?’ என்று அவள் நினைக்கும்போதே சமையலறையிலிருந்து பிரத்யூஷாவின் குரல் கேட்க, வேகவேகமாக அந்த தாள்களை தன் அலமாரியில் ஒளித்து வைத்தாள்.

                 

                மனதிற்குள், ‘நல்லவேளை, கனவுல வந்த எல்லாத்தையும் வரைஞ்சு வைக்கல!’ என்று நினைத்துக் கொண்டாள்.

                 

                *****

                 

                காவல்நிலையத்திற்கு வந்த சர்வஜனனை ஆரத்தழுவி வரவேற்றான் ரோஹித்.

                 

                சர்வஜனனுக்கும் நண்பனைக் கண்டதும் அத்தனை நேரமிருந்த எரிச்சல் மனநிலை மாறியிருந்தது.

                 

                “எப்படி இருக்க ரோஹித்? ரோஷினி எப்படி இருக்கா? என்ன இவ்ளோ சீக்கிரமா வந்துருக்க?” என்று கேள்விகளை அடுக்க, “அட மெதுவா கேளு  சர்வா. நான், உன் தங்கச்சி, அவ வயித்துல இருக்க உன் மருமகன் ஆர் மருமகள் எல்லாரும் நலம். இவ்ளோ சீக்கிரம் கிளம்புனதால தான் வர முடிஞ்சுது. இல்லன்னா உன் தங்கச்சி கிளம்ப விடுவாளா?” என்று சிரித்தபடி கூறினான் ரோஹித்.

                 

                “ஹ்ம்ம், அவகிட்ட இங்க இப்போ வரவேண்டாம்னு சொல்லிட்டியா? என்ன சொன்னா?” என்று சர்வஜனன் விசாரிக்க, “நீ கொஞ்ச நாள் டெல்லிக்கு போறன்னு சொல்லி சமாளிச்சுருக்கேன் சர்வா. யப்பா, எவ்ளோ கேள்வி கேட்குறா? போலீஸ்காரனோட தங்கச்சின்னா இப்படியா? அவகிட்ட அப்பாவியா சிக்கிக்கிட்ட என் நிலைமை தான் மோசம் போ.” என்று விளையாட்டாக பேசினான் ரோஹித்.

                 

                அதைக்கேட்டு சர்வஜனன் சிரிக்க, இருவரையும் காணாததை கண்டது போல அந்த காவல்நிலையத்தில் இருந்த அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களை சொல்லி குற்றமில்லை, மருந்துக்கு கூட சிரிக்கவே செய்யாத சர்வஜனன் வாய்விட்டு சிரித்தான் என்றால், அதை வியந்து பார்க்கத்தானே செய்வார்கள். அதை சர்வஜனனும் கவனித்திருந்தான்.

                 

                “சரி வா நாம பக்கத்துல இருக்க கஃபே போய் பேசலாம்.” என்று சர்வஜனன் கூற, ரோஹித்தும் அவன் பின்னே சென்றான்.

                 

                சர்வஜனனின் கால்கள் அனிச்சையாக சஷாவிற்குள் நுழைந்தன. அப்போது கூட அவனுக்கு சஞ்சீவனியைப் பற்றிய நினைவு எழவில்லை.

                 

                ஆனால், அவன் உள்ளே நுழைவதைக் கண்டவளுக்கோ தானாகவே முகம் சிவக்க ஆரம்பித்தது.

                 

                “இவனுக்கு இங்க வரதுக்கு வேற டைமிங்கே கிடைக்காதோ? இந்நேரம் பார்த்து மத்த மூணு பேரும் மெட்டிரியல்ஸ் வாங்கன்னு வெளிய போயிட்டாங்க.” என்று முணுமுணுத்தவளை சுயத்திற்கு அழைத்து வந்தது, “டூ கஃபே மோச்சா.” என்ற குரல், இம்முறை சர்வஜனனுடன் வந்தவனின் (ரோஹித்) குரல்.

                 

                அதற்கு தலையசைத்தவளின் கண்களோ சர்வஜனனை தான் தேடின. அதை ஒரு மாதிரி பார்த்த ரோஹித்தோ எதுவும் கூறாமல், அவர்களுக்கு முதுகுகாட்டி அமர்ந்திருந்த சர்வஜனனுக்கு எதிர்த்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். அப்போது தானே அங்கு நடக்கும் நாடகத்தை பார்க்க இயலும்!

                 

                தேடியவனை கண்டுகொண்ட மகிழ்ச்சியோ என்னவோ, அவளின் கரங்கள் பரபரவென்று வேலைகளை பார்க்க ஆரம்பித்தன.

                 

                ரோஹித்தின் பார்வையோ சந்தேகமாக சர்வஜனனை நோக்க, அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தான் பார்க்கும் வழக்குகளை பற்றி கூற ஆரம்பித்தான்.

                 

                நண்பர்களுக்கு இடையில் இது வழக்கமான ஒன்றென்பதால், ரோஹித்தும் மற்றவை மறந்து நண்பனின் பேச்சை கவனிக்கலானான்.

                 

                சர்வஜனன் தனக்கு தோன்றிய அனைத்தையும் கூறி முடித்து ரோஹித்தை பார்க்க, “அப்போ ரெண்டு கேஸுக்கும் சம்பந்தம் இருக்கும்னு. நினைக்குறியா சர்வா?” என்றான் ரோஹித்.

                 

                “என் இன்ட்யூஷன் சரின்னா, கண்டிப்பா சம்பந்தம் இருக்கு. அதுவும் அந்த பொண்ணு சொன்ன ‘மிருகம்’ங்கிற வார்த்தையும் அந்த காலடித்தடமும்… ஏதோ கனெக்ஷன் கண்டிப்பா இருக்கு.” என்று கூறிய சர்வஜனன், தன் அலைபேசியிலிருந்த காலடித்தடத்தின் புகைப்படத்தை திறந்து மேஜையின் மீது வைத்தான்.

                 

                சில நொடிகள் அதை உற்றுப்பார்த்த ரோஹித்தோ, “இப்போ நீ என்ன சொல்ல வர சர்வா? இது…” என்று இழுக்க, “வேர்உல்ஃபோட காலடித்தடம்!” என்று அவர்களின் அருகிலிருந்து குரல் வந்தது.

                 

                அதில் இருவரும் திரும்பிப் பார்க்க, அங்கு இவர்களுக்கான பானத்துடன் நின்றிருந்தாள் சஞ்சீவனி.

                 

                அவளைக் கண்டதும் தான் அவளின் நினைவே எழுந்தது சர்வஜனனுக்கு. அதில் தன்னை மறந்து அவளை பார்த்துக்கொண்டிருக்க, பதில் பார்வை தர வேண்டியவளோ, பார்வை முழுவதையும் அந்த காலடித்தடத்திலேயே பதித்திருந்தாள்.

                 

                அங்கு நடக்கும் நாடகத்தை சில நொடிகள் மௌனமாக பார்த்த ரோஹித் அதற்கு மேல் முடியாதவனாக, “க்கும் க்கும்” என்று செறுமி இருவரையும் சுயத்திற்கு அழைத்து வந்தான்.

                 

                அப்போது சஞ்சீவனிக்கு முதுகில் ஏற்பட்டிருந்த தழும்பில் வலியெடுக்க, ஆவென்று கத்தியிருந்தாள்.

                 

                திடீரென்று அவள் கத்துவாள் என்று எதிர்பார்க்காத ஆண்கள் இருவரும் முதலில் அதிர, சர்வஜனன் தான் முதலில் அதிர்ச்சியிலிருந்து வெளிவந்து அவளை அங்கிருந்த நாற்காலியில் அமரச் செய்தான்.

                 

                அவன் கைப்பட்டதும் என்ன மாயமோ மந்திரமோ, அந்த வலி நின்றிருக்க, வலி இல்லையென்றாலும் நடக்கும் நிகழ்வுகளின் தாக்கத்தால் பெண்ணவளின் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.

                 

                “ஈஸி ஈஸி மிஸ். எங்கயும் அடிப்பட்டுருக்கா உங்களுக்கு?” என்று சர்வஜனன் வினவ, அவனிடமிருந்து அப்படி ஒரு தொனியை இதுவரை பார்த்திராத ரோஹித்தே வாயில் கைவைத்து வியப்பை அடக்க வேண்டியிருந்தது.

                 

                சஞ்சீவனியோ அதை கருத்தில் கொள்ளும் நிலையிலேயே இல்லையே. சூரியனை மறைக்கும் கருமேங்கள் போல, பெரும் குழப்பங்கள் அவளின் மனதை ஆக்கிரமிக்க, ஒருவித தடுமாற்றத்துடனே இருந்தாள்.

                 

                அவளை கைத்தாங்கலாக பற்றியிருந்த சர்வஜனனும் அவளின் நடுக்கத்தை உணர்ந்து தன் பிடியை அழுத்தமாக்க, அப்போது தான் அவன் கைகளுக்குள் தான் இருப்பதை உணர்ந்தாள் சஞ்சீவனி.

                 

                சரியாக அதே சமயம், அந்த கனவும் மனக்கண்ணில் வந்து போக, அதற்கு மேல் அவளால் அங்கு இருக்க முடியவில்லை.

                 

                “சாரி…” என்று இருவரையும் பார்த்து பொதுவாக கூறியவள், சர்வஜனன் பக்கம் திரும்பி, அவனை நேராக பார்க்காமல், இமையை தாழ்த்தியபடி, “தேங்க்ஸ்…” என்று முணுமுணுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

                 

                அவள் சென்றதும் தன்னிலை அடைந்த சர்வஜனன் நண்பனை பார்க்க, அவனோ ‘என்னடா நடக்குது இங்க? நானும் இங்க தானடா இருக்கேன்.’ என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருந்தான்.

                 

                சர்வஜனனுக்கு அவனின் பார்வை புரிந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல், “நீயும் அது வேர்உல்ஃபா இருக்கும்னு நினைக்குறியா ரோஹித்?” என்று வினவினான்.

                 

                “நான் நினைக்குறது இருக்கட்டும். நீ ஏதாவது யோசிச்சு வச்சுருப்பியே, அதை சொல்லு!” என்றான் ரோஹித்.

                 

                “வேர்உல்ஃப் ஒரு அர்பன் லெஜன்ட் மாதிரி தான். அது உண்மையா இருக்கும்னு எனக்கு தோணல. ஆனா, அதையே ஏன் ஆர்ட்டிஃபிஸியலா ட்ரை பண்ணக் கூடாது?” என்றான் சர்வஜனன்.

                 

                “ம்ம்ம் பாசிபில் தான். இப்போ தான் கண்டதையும் ஆராய்ச்சிங்கிற பேர்ல பண்ணி மனுஷனை கொஞ்சம் கொஞ்சமா மிருகமாக்க ட்ரை பண்றாங்களே!” என்றான் ரோஹித்.

                 

                “ஹ்ம்ம், இது ரொம்ப டேஞ்சரஸ் கேஸ். சீக்கிரம் அக்யூஸ்ட்டை கண்டுபிடிக்கணும்.” என்றான் சர்வஜனன்.

                 

                “அக்யூஸ்ட்டை கண்டுபிடிக்குறது இருக்கட்டும், இங்க என்ன நடக்குது இன்ஸ்பெக்டர் சார்? அந்த பொண்ணு நம்ம வந்ததுலயிருந்து உன்னை தேடுது, நீயென்னனா, அந்த பொண்ணு கத்துனதும் உருகுற!” என்றான்.

                 

                ஒருமுறை அவள் எப்போதும் நின்றிருக்கும் இடத்தை பார்த்தவன், அது வெறுமையாக இருக்க, ஒரு பெருமூச்சுடன் திரும்பி, “நீ நினைக்குற மாதிரி எதுவும் இல்ல. இப்போ இருக்க சூழ்நிலைல இருக்கவும் கூடாது.” என்றவன் மேஜையிலிருந்து கிளம்பி கவுண்டரை நோக்கி நடந்தான்.

                 

                அங்கு ஸ்டெஃபி நின்றிருக்க, அவளிடம் தொகையை செலுத்திவிட்டு, கண்களில் சஞ்சீவனியை தேடியபடி வெளியே வந்தான்.

                 

                அங்கு ஓரமாக நின்றிருந்த சஞ்சீவனியை நோக்கி நடந்தவன், “ச…ஞ்…சீ…வ…னி…” என்று பெயருக்கு வலிக்காத வண்ணம் அழைக்க, அத்தனை நேரம் வலியுடன் போராடிக் கொண்டிருந்தவள், பட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.

                 

                “ஆர் யூ ஆல்ரைட்?” என்று அவன் வினவ, வலி இல்லாததை வியப்பாக உணர்ந்தவள், அதே நிலையில் தலையை மட்டும் அசைத்தாள்.

                 

                “ஓகே டேக் கேர்.” என்றவன் அவளிடம் விடைபெற, அவளோ ஆச்சரியத்தில் அதே இடத்தில் நின்று விட்டாள்.

                 

                “அந்த பொண்ணு பேரு சஞ்சீவனியா டா? நல்ல பேர்ல.” என்று ரோஹித் வினவ, அப்போது தான் தனக்கு எப்படி அவளின் பெயர் தெரிந்தது என்ற கேள்வி சர்வஜனனுக்கு எழுந்தது. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அந்த கேள்வியே காதில் விழாததை போல சென்று விட்டான்.

                 

                “ஹ்ம்ம், இவன்கிட்ட ஒரு பதிலை வாங்கிட முடியுமா?” என்று பெருமூச்சு விட்டபடி அவனைத் தொடர்ந்தான் ரோஹித்.

                 

                இவர்களின் பேச்சு சஞ்சீவனியின் செவியிலும் விழுந்தது.

                 

                ‘ஆமா, எப்படி அவங்களுக்கு என் பேரு தெரியும்?’ என்று அவள் யோசிக்க, ‘உனக்கு எப்படி அவரோட பேரு தெரியுமோ அப்படி தான்!’ என்று பதில் கொடுத்தது அவளின் மனசாட்சி!

                 

                மாயம் தொடரும்…

                  The post பிறை சூழ் மாயம் – 3 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                  ]]>
                  https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-2/feed/ 0 17842
                  17 – இதயத்தின் நிறம் பார்த்ததால் https://thoorigaitamilnovels.com/17-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ https://thoorigaitamilnovels.com/17-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/#respond Mon, 06 May 2024 12:57:27 +0000 https://thoorigaitamilnovels.com/17-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ நிறம் 17   ஒருவழியாக இரவு நேர சிறுவிருந்து முடிந்து ஷ்யாம் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பும் வேளையில், அவனிடம் வந்த வர்ஷினியோ, “ஆமா, உங்க ஃபிரெண்டு பாட்டுக்கு என்னை கடத்திட்டு வந்துட்டாரே. உங்க போலீஸ் டிப்பார்ட்மெண்ட் இன்னும் எந்த ஆக்ஷனும் எடுக்கல? நீங்களும் ஏதோ வெகேஷனுக்கு வந்த மாதிரி ஜாலியா சுத்துறீங்க?” என்று வினவினாள்.   அதைக் கேட்டுக் கொண்டே அவர்களருகே வந்த ஸ்வரூபனோ, “ஆமா, இவ இந்த

                  The post 17 – இதயத்தின் நிறம் பார்த்ததால் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                  ]]>

                  Loading

                  நிறம் 17

                   

                  ஒருவழியாக இரவு நேர சிறுவிருந்து முடிந்து ஷ்யாம் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பும் வேளையில், அவனிடம் வந்த வர்ஷினியோ, “ஆமா, உங்க ஃபிரெண்டு பாட்டுக்கு என்னை கடத்திட்டு வந்துட்டாரே. உங்க போலீஸ் டிப்பார்ட்மெண்ட் இன்னும் எந்த ஆக்ஷனும் எடுக்கல? நீங்களும் ஏதோ வெகேஷனுக்கு வந்த மாதிரி ஜாலியா சுத்துறீங்க?” என்று வினவினாள்.

                   

                  அதைக் கேட்டுக் கொண்டே அவர்களருகே வந்த ஸ்வரூபனோ, “ஆமா, இவ இந்த நாட்டோட பி.எம். இவளைக் காணோம்னு போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டே அல்லோலகல்லோல படுது!” என்று கேலியாக கூற, அவனை முறைத்த வர்ஷினியோ, பதிலை வேண்டி ஷ்யாமின் முகத்தை பார்த்தாள்.

                   

                  அவனோ எதுவும் கூறாமல் தன் அலைபேசியை எடுத்து காவல்துறை துணைத்தலைவருக்கு அழைப்பு விடுத்து ஸ்பீக்கரை ஆன் செய்ய, மறுமுனையில் அவரோ அழைப்பை ஏற்றதும், “விக்ரம் பத்தி நியூஸ் கிடைச்சதா?” என்று வினவினார்.

                   

                  ஷ்யாமோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், “இல்ல சார். விக்ரம் பத்தி எந்த நியூஸும் கிடைக்கல. ஹாஸ்பிடல்லயிருந்து காணாம போன அந்த பொண்ணு பத்தி தான் க்ளூ கிடைச்சுருக்கு. அதை வச்சு ப்ரோசீட் பண்ணலாம்னு இருக்கோம்.” என்றான்.

                   

                  “வாட்? அந்த பொண்ணை கண்டுபிடிச்சு என்ன பண்ண போறீங்க? இட் இஸ் வேஸ்ட் ஆஃப் டைம். நீங்க என்ன பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா, எலெக்ஷனுக்கு முன்னாடி அந்த விக்ரம் சிங்கை கைது பண்ணியே ஆகணும். மேலிடத்துலயிருந்து செம பிரஷர் ஷ்யாம்.” என்று அவர் கூற, எப்போதும் போல ஒரு ‘ஓகே’வுடன் அழைப்பை துண்டித்தான் ஷ்யாம்.

                   

                  “அடப்பாவிங்களா, இப்படி தான் உங்க விசாரணை எல்லாம் போகுதா?” என்று வர்ஷினி வாயில் கைவைத்து ஆச்சரியப்பட, அவளை முறைத்த ஷ்யாமோ, “உன்னை பிடிச்சுட்டா, விக்ரமை ஈஸியா கண்டுபிடிச்சுடலாம்னு தான் அந்த ஆளு உன் பக்கம் எங்க கவனத்தை திருப்ப விடமாட்டிங்குறாரு.” என்றான்.

                   

                  “அட ஆமா, அவரை விக்ரம் கூட ஒருமுறை பார்த்துருக்கேன். அப்போ அவரும் அந்த மாஃபியா கேங்கோட கூட்டா? விளங்கிடும்!” என்ற வர்ஷினியோ, “அதுசரி, ஆனா இந்த விக்ரம் கூட என்னை தேடலையா?” என்று அடுத்த கேள்வியை கேட்க, ஷ்யாமோ ஸ்வரூபன் புறம் பார்வையை திருப்பினான்.

                   

                  “ஏன் தேடலை? உன்னை தேடி வரிசையா வந்தவனுங்களை எல்லாம் நம்ம குடவுன்ல தான் ‘பாதுகாப்பா’ தங்க வச்சுருக்கோம்.” என்று அந்த பாதுகாப்பை அழுத்தி கூற, அந்த தோரணையே அவன் ஏதோ வில்லங்கம் செய்திருக்கிறான் என்பதை கட்டியம் கூறியது வர்ஷினிக்கு.

                   

                  எவ்வளவு கேள்விகள் கேட்டாலும், வர்ஷினிக்கு குழப்பங்கள் தீரவில்லை போலும்.

                   

                  இதோ, அடுத்த கேள்வியாக, “கிட்னாப் எல்லாம் சரி. அது எப்படி நான் சொன்ன மாதிரியே என் லவர்… க்கும், இந்தரா நீங்க வந்தீங்க?” என்று ஸ்வரூபனிடம் வினவ, அவள் இடையில் திக்கியதை அவனையும் மீறி ரசித்தவனோ, “ஹ்ம்ம், அதை ஒரு பட்சி லைவ் ரிலே பண்ணுச்சு.” என்றான்.

                   

                  சரியாக அதே சமயம் அங்கு ஆஜரான அந்த ‘பட்சி’யோ, “என்ன என்னை விட்டு இங்க ஒரு மாநாடு நடக்குது?” என்று கேட்க, அவனை வழக்கம் போல முறைத்தாள் வர்ஷினி.

                   

                  அவளின் முறைப்பு பழகிப் போனதாலோ என்னவோ, ஷ்யாமை நோக்கி திரும்பிய அகில், “என்னடா நீ உன் ஆளை பார்க்க நாளைக்கு போற தான?” என்று வினவ, “எது கஞ்சி சட்டைக்கு காதலா?” என்று எட்டாவது உலக அதிசயத்தை நேரில் கண்டது போல வியந்தாள் வர்ஷினி.

                   

                  அண்ணனையும் தங்கையையும் ஒருசேர முறைத்த ஷ்யாமோ, “மவனே, ஊருக்கு வருவேல, அப்போ வச்சுக்குறேன்.” என்று அகிலிடம் கூறியபடி கிளம்ப முற்பட, “அடேய், சத்தமா சொல்லாத. இப்போ தான் என் பொண்டாட்டியை மலை இறக்கி இருக்கேன்.” என்று போலியாக வருத்தப்பட்டான் அகில்.

                   

                  சிரிப்பும் குதூகலமுமாக கரைந்த அந்த நிமிடங்களை மனப்பெட்டகத்தில் பத்திரப்படுத்திக் கொண்டாள் வர்ஷினி. இனி, இவை போன்ற தருணங்கள் கிடைக்காது என்று எண்ணினாளோ என்னவோ!

                   

                  *****

                   

                  மறுநாள் தன் அன்னையிடம் சொல்லிக் கொண்டு சென்னை கிளம்பினான் ஷ்யாம். ஆனால், அவன் மனமோ அவன் தேடுதலுக்கு உரியவள் அங்கிருக்க மாட்டாள் என்று அடித்துக் கூறியது.

                   

                  ஊருக்கு வந்ததும் வேலைகள் அவனை இழுத்துக் கொண்டன. முதலில், ஷர்மிளா வேலை செய்த பத்திரிக்கை அலுவலகத்திற்கு சென்று விசாரித்தான். அங்கு அவனிற்கு தேவைப்படும் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

                   

                  அவள் வீட்டிற்கு சென்றும் விசாரித்தான். வீட்டின் உரிமையாளரும், அவளை பார்த்து இரண்டு நாட்கள் ஆகிற்று என்ற தகவலையே கொடுக்க, ‘அப்போ நான் லாஸ்ட்டா பார்த்த அன்னைக்கே காணாம போயிருக்கா.’ என்று எண்ணியவன், அடுத்து என்ன என்று குழம்பி தான் போனான்.

                   

                  அவன் நிலையற்று நின்றதெல்லாம் ஒருநொடி தான். அடுத்தடுத்த செயல்கள் எல்லாம் துரித நிலையில் நடக்க ஆரம்பித்தன.

                   

                  திருட்டு வழக்கை விசாரிக்கும் செல்வத்திற்கு அழைத்தவன், அந்த திருடர்களை உடனடியாக தேடி கண்டுபிடிக்குமாறு பணித்து விட்டு, ஷர்மிளா அலுவலகத்திலிருந்து வீடு செல்லும் வழியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை பார்க்க ஆரம்பித்தான்.

                   

                  அதில், ஆளரவமற்ற சாலையில் ஷர்மிளாவை வழிமறித்த மர்மநபர் ஒருவர் ஏதோ கூற, அதில் அதிர்ந்த ஷர்மிளா தன் வாகனத்தில் அந்த மர்மநபரின் வாகனத்தை பின்தொடர்வது பதிவாகி இருந்தது.

                   

                  உடனே, அந்த வாகனம் செல்லும் வழியிலுள்ள சிசிடிவி காட்சிகளை பார்க்க ஆரம்பித்தான் ஷ்யாம். அது சென்று நின்ற இடம் ஒரு கைவிடப்பட்ட ஆலை.

                   

                  அதை பார்த்ததும், அந்த இடத்திற்கு அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தவன், அவனும் அவ்விடத்திற்கு விரைந்தான்.

                   

                  அவன் சந்தேகப்பட்டது போல, அங்கு சிலரை கடத்தி வைத்ததற்கான சான்றாக அறுந்த கயிறுகள், சங்கிலிகள், சிகரெட் துண்டுகள், ரத்த துளிகள் முதலியவை தென்பட, ஆட்கள் யாரும் தென்படவில்லை.

                   

                  ‘ஷிட், லேட்டா வந்துட்டேன்.’ என்று ஷ்யாம் தன்னையே திட்டிக் கொண்டபடி, அந்த இடத்தை மேலும் பார்வையால் அலச, அங்கு ஓரமாக கிடந்த அலைபேசி அவன் பார்வையில் சிக்கியது.

                   

                  அதன் முகப்பு படத்தை பார்த்த ஷ்யாமோ, “வினய்…” என்று முணுமுணுக்க, சரியாக அதே சமயம், செல்வத்திடமிருந்து அழைப்பு வந்திருந்தது.

                   

                  “சார், அந்த திருட்டு கும்பலை கண்டுபிடிச்சுட்டோம். ஆனா, ரெண்டு நாளைக்கு முன்னாடி, அவங்க குரூப்புக்குள்ள ஏதோ சண்டை வந்து, அடிதடில இறங்கிருக்காங்க. அதுல, எல்லாருக்கும் நல்ல காயம். இப்போ **** ஹாஸ்பிடல்ல இருக்காங்க சார். ஒருத்தன் மட்டும் தான் அபாய கட்டத்தை தாண்டிருக்கான். மத்தவங்க எல்லாம் இன்னும் ஐசியூல தான் இருக்காங்க.” என்றான் செல்வம்.

                   

                  “ஓகே செல்வம். நான் இப்பவே அங்க வரேன்.” என்ற ஷ்யாமோ, அடுத்த இருபது நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்திருந்தான்.

                   

                  அவன் ஏன் இந்த வழக்கில் இத்தனை தீவிரம் காட்டுகிறான் என்பதை அறியாத செல்வமோ, அவனை அழைத்துக் கொண்டு குற்றவாளி இருக்கும் அறைக்கு சென்றான்.

                   

                  அங்கு கட்டிலில் பலத்த காயங்களுடன் படுத்திருந்தவன் வினய் தான்.

                   

                  அதுவரை வலியுடன் விரக்தி கலந்த உணர்வில், எதிரிலிருந்த சுவரை வெறித்துக் கொண்டிருந்த வினய்யின் விழிகள், உள்ளே நுழைந்த ஷ்யாமை கண்டு அதிர்ந்து பின் நிர்மலமாகின.

                   

                  அவன் பாவனைகளை எல்லாம் சரியாக கணித்துக் கொண்ட ஷ்யாமோ, அவனருகே இருந்த முக்காலியில் அமர்ந்தபடி, “என்ன  நடந்துச்சு?” என்று அடிக்குரலில் வினவினான்.

                   

                  அந்த குரல் வினய்க்கு கிலியை கிளப்பினாலும், வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல், “அதான் சொன்னேனே சார், எங்க குரூப்புக்குள்ள சண்டைன்னு.” என்று கூற, அவன் தலை முதல் கால் வரை அளவிட்ட ஷ்யாமோ மீண்டும் அதே கேள்வியை இன்னும் இறுக்கத்துடன் கேட்க, வினய் பயத்தில் எச்சில் விழுங்கியபடி அதே பதிலை கூறினான்.

                   

                  அத்தனை நேரம் இருந்த பொறுமை பறந்து போக, அடிபட்டு கட்டு போடப்பட்டிருந்த வினய்யின் கரத்தை மேலே இழுத்த ஷ்யாமோ, “இந்த காயமெல்லாம் உங்களுக்கு நீங்களே உண்டாக்கிக்கிட்டீங்க, அப்படி தான?” என்று மிரட்ட, வலியிலும் பயத்திலும் வினய் அலற, அவனின் மிரட்டலில் பயந்து போன செல்வமும், “சார் சார், வேண்டாம் சார்.” என்று தடுக்க முற்பட்டான்.

                   

                  “இடியட், உன்னால உன் அக்காவை அவனுங்க கடத்தி இருக்கானுங்க. நீ என்னன்னா, இப்பவும் அவனுங்களுக்கு முட்டு கொடுத்துட்டு இருக்க! ராஸ்கல்.” என்று ஷ்யாம் பேச பேச, மற்ற இருவரும் அதிர்ந்து தான் போயினர்.

                   

                  ‘இதென்ன திருட்டு கேஸ்னு நினைச்சா, கடத்தல்னு சொல்றாரு?’ என்று செல்வம் யோசிக்க, வினய்யோ, “சார் சார், எப்படியாவது அவளை காப்பாத்துங்க சார்.” என்று கதறினான்.

                   

                  அப்போது தான் பிடித்து இழுத்த அவனின் கரத்தை விடுவித்தான் ஷ்யாம்.

                   

                  “சொல்லு அன்னைக்கு என்ன நடந்துச்சு?” என்று ஷ்யாம் வினவ, வினய்யும் அன்றைய நிகழ்வை கூற துவங்கினான்.

                   

                  *****

                   

                  “வினய்… எங்க எல்லாம் உன்னை தேடுறது? சேகரண்ணா எல்லாரையும் கூப்பிடுறாரு டா.” என்று வினய்யின் சகாக்களில் ஒருவன் கூற, “ப்ச், இங்க பாரு குமாரு, நமக்கு இந்த போதைப்பொருள் மேட்டர் எல்லாம் செட்டாகாது. ஏதோ சின்ன சின்ன திருட்டுன்னு சொன்ன, அதுக்கு நான் ஒத்துக்கிட்டேன். போக போக நமக்கு கொடுக்குற வேலையெல்லாம் ரிஸ்க் ஜாஸ்தியா இருக்கு. இந்த மாதிரி வேலைக்கு எல்லாம், இனிமேல் என்னை கூப்பிடாத.” என்றபடி அவனுடன் சென்றான் வினய்.

                   

                  “அதை நீயே சேகரண்ணா கிட்ட சொல்லிடு.” என்ற குமாரோ வினய்யை அழைத்துக் கொண்டு அந்த கைவிடப்பட்ட ஆலைக்குள் நுழைந்தான்.

                   

                  உள்ளே நுழைந்ததும் வினய்யின் தலையில் யாரோ பலமாக அடிக்க, அது யாரென்று தெரியாமல் மயங்கி விழுந்தான் வினய்.

                   

                  அடுத்து அவன் லேசாக கண் விழித்தபோது, ஷர்மிளா பதற்றத்துடன் உள்ளே வருவது தெரிந்தது. அவளை வர வேண்டாம் என்று சொல்வதற்கு எத்தனை முயன்றும் அவனால் அதை செய்ய முடியவில்லை.

                   

                  “வினய்…” என்று ஷர்மிளா கத்தும்போதே, அவளிற்கு யாரோ மயக்க மருந்து கொடுத்து மயக்கமடைய செய்வதை எதுவும் செய்ய முடியாத கையாளாகத்தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் வினய்.

                   

                  பின், அவனும் அதிக உதிரபோக்கினால் மயங்கிப் போக, மீண்டும் கண்விழித்தது இந்த மருத்துவமனையில் தான்.

                   

                  *****

                   

                  வினய் இதை கூறி முடிக்க, “ஏன் இதை முன்னாடியே சொல்லல?” என்று கேட்டான் ஷ்யாம்.

                   

                  வினய்யோ செல்வத்தை ஒரு பார்வை பார்த்தபடி, “சார், சேகர் ரொம்ப பவர்ஃபுல்லான ஆளு. அவனுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கு. போலீஸ் செல்வாக்கும் இருக்கு. எங்க நான் இதை பத்தி வாயை திறந்தா அக்கா உயிருக்கு ஆபத்து வந்துடுமோன்னு பயந்து தான் சொல்லல சார்.” என்றவன், “சார், நான்… நான் ரெண்டு முறை தான் பிக்-பாக்கெட் அடிச்சுருக்கேன். அதுவும் என் ஃபிரெண்டு சொல்லி, அதுல கிடைக்குற த்ரில்லுக்காக… தப்பா…” என்று சொல்லும்போதே ஷ்யாம் முறைக்க, “நானே அதுலயிருந்து வெளிய வரத்தான் முயற்சி பண்ணேன். அதுவும், அக்காக்கு இப்படி நடக்கும்னு தெரிஞ்சுருந்தா நிச்சயமா இதுக்குள்ள வந்துருக்க மாட்டேன்.” என்றான்.

                   

                  அப்போதும் ஷ்யாம் நம்பாத பார்வை பார்க்க, “சார், நான் சொல்றது உண்மை தான். என்னதான் அவ என்கூட பொறக்காதவன்னாலும், அவ மேல எனக்கு பாசம் இருக்கு சார். பிளீஸ், அவளை எப்படியாவது காப்பாத்துங்க.” என்று கெஞ்சினான் வினய்.

                   

                  ஷ்யாமோ ஒரு பெருமூச்சுடன், “அவங்க உன் அக்காவை எங்க கூட்டிட்டு போனாங்கன்னு ஞாபகம் இருக்கா? ஏதாவது சின்ன க்ளூ கிடைச்சா கூட போதும். நல்லா யோசிச்சு பாரு.” என்று கூற, வினய்யும் யோசித்து பார்த்தான்.

                   

                  அவனிற்கு சட்டென்று ‘சோலைப்புதூர்’ என்று அவர்கள் பேசிக் கொண்டது நினைவுக்கு வர, அதை ஷ்யாமிடமும் பகிர்ந்தான்.

                   

                  அதைக் கேட்டதும், ‘நம்ம ஊருக்கு எதுக்கு கூட்டிட்டு போறாங்க?’ என்று ஷ்யாம் குழம்ப, “சார், இந்த வேலையை அவனுக்கு கொடுத்தது விக்ரம்னு பேசிட்டு இருந்தாங்க.” என்று வினய் கூற, அந்த பெயரே ஷ்யாமின் கோபத்தை அதிகரிக்க போதுமானதாக இருந்தது.

                   

                  ‘இவன் எதுக்கு ஷர்மியை தூக்கி இருக்கான்?’ என்ற யோசனை ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்க, மறுபுறம் அவன் ஊருக்கு மீண்டும் பயணிக்க ஆயத்தமானான் ஷ்யாம்.

                   

                  *****

                   

                  பெரிய வீட்டில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் குழுமி இருந்தனர். காரணம், ரூபியின் வளைகாப்பிற்கான திட்டம் தீட்ட தான்.

                   

                  “எனக்கு லீவு டைம்மா பார்த்து வளைகாப்பு வைங்க.” என்று முதல் ஆளாக அகில் கூற, “க்கும், அப்போ குழந்தை பொறந்ததுக்கு அப்பறம் தான் வைக்கணும்.” என்று நொடித்துக் கொண்டார் பெரியநாயகி.

                   

                  அதைக் கேட்டு அனைவரும் சிரிக்க, “ப்ச் கிழவி, என்னை அசிங்கப்படுத்துறதே பொழப்பா வச்சுருக்கியோ!” என்று சலித்துக் கொண்டான் அகில்.

                   

                  அப்போது வாசல் புறமிருந்து, “அட, எல்லாரும் ஒண்ணா சந்தோஷமா இருக்கீங்க போல!” என்ற குரல் கேட்க, திரும்பி பார்த்த ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு பாவனையை வெளிப்படுத்தியது.

                   

                  அங்கு வாசலை மறைத்துக் கொண்டு நின்றிருந்தது சாட்சாத் விக்ரமே!

                   

                  அவனை அங்கு கண்டதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நிற்க, வர்ஷினியோ தமயந்தி பக்கம் வந்து நின்று, அவரின் கரத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.

                   

                  “அட, என்ன இது? வீட்டுக்கு வந்தவங்களை வரவேற்க மாட்டீங்களா?” என்ற விக்ரமின் பார்வை தமயந்தியையும் அவரருகே நின்ற வர்ஷினியையும் தொட்டு விட்டு சென்றது.

                   

                  “உனக்கெல்லாம் வரவேற்பு ஒரு கேடா?” என்று அனைவரும் மனதில் நினைத்ததை பெரியநாயகி வெளியே சொல்லிவிட, “என்ன அத்த இப்படி சொல்லிட்டீங்க? உங்க மாப்பிள்ளை என்ன பழைய மாதிரி ஒன்னும் இல்லாதவன்னு நினைச்சீங்களா? இன்னும் கொஞ்ச நாள்ல சென்ட்ரல் மினிஸ்டர் நான்.” என்று கர்வமாக கூறினான் விக்ரம்.

                   

                  “நீ சென்டுரல் மினிஸ்டரா இருந்துக்கோ இல்ல யாரா வேணும்னா இருந்துக்கோ, உனக்கெல்லாம் இந்த வீட்டுல எந்த மரியாதையும் கிடைக்காது!” என்று கத்தி, அதன் விளைவாக மூச்சுக்கு சிரமப்பட்டார் பெரியநாயகி.

                   

                  வைத்தீஸ்வரனோ மனைவியை கவனிக்க, பாட்டியின் பேச்சில் முகம் கறுக்க நின்ற விக்ரமை, ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு பார்வையால் சுட்டெரித்தான் ஸ்வரூபன்.

                   

                  அவனருகே வந்த அகிலோ, “மச்சான், அவன் பக்கத்துல நிக்கிற பொண்ணை பார்த்தியா?” என்று வினவ, அப்போது தான் விக்ரமை விடுத்து மற்றவளை பார்த்தான் ஸ்வரூபன்.

                   

                  சட்டென்று அடையாளம் தெரியாமல் போனாலும், அவளை எங்கோ பார்த்த ஞாபகம் ஸ்வரூபனிற்கு!

                   

                  அவனை அதிகம் யோசிக்க விடாமல், “அந்த பொண்ணு தான் ஷர்மிளா, நம்ம ஷ்யாம்…” என்று அகில் கூற வந்ததை பாதியிலேயே நிறுத்த, அதை புரிந்த கொண்ட ஸ்வரூபனோ குழப்பத்தில் ஆழ்ந்தான்.

                   

                  இருவரின் பேச்சுவார்த்தைகளை விக்ரம் ஒருபுறம் கவனித்தான் என்றால், மறுபுறம் வர்ஷினியும் கவனித்து அவர்களருகே வந்து நின்றாள்.

                   

                  அதே சமயம், மூச்சிரைக்க ஷ்யாமும் அவ்வீட்டுற்கு வர, அவனைக் கண்ட விக்ரமோ, “ஓஹோ, ஆடு பகை குட்டி மட்டும் உறவோ?” என்று கேலியாக வினவ, கட்டுப்படுத்திய கோபம் கட்டுடைத்து வெளியே வர, அதை எதிரிலிருந்தவனிடம் காட்டிவிடும் வேகத்தில் ஸ்வரூபன் முன்னே செல்ல, அவனை இருபக்கமும் தடுத்து நிறுத்தினர் வர்ஷினி மற்றும் அகில்.

                   

                  விக்ரமோ இந்த மூவர் கூட்டணியை பார்த்து நக்கலாக சிரித்தபடி, “சரி சரி, ஆடு பகையாவே இருக்கேன். இதோ இன்னொரு குட்டி வந்துருக்கே, அதையாவது வரவேற்பீங்களா?” என்றவனின் பார்வை மொத்த குடும்பத்தை வட்டமடித்து தமயந்தியிடம் நிலைக்க, அந்த ஒரு நொடி அங்கு குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதியாக இருந்தது.

                   

                  தாங்கள் கேட்டதும், உணர்ந்ததும் சரியா என்று அனைவரும் யோசித்துக் கொண்டிருக்க, ஷ்யாமோ விக்ரமின் சட்டையை பற்றி இருந்தான்.

                   

                  வர்ஷினிக்கு எதுவும் விளங்காமல் இருக்க, “அகிலண்ணா, இங்க என்ன நடக்குது?” என்று சந்தேகம் கேட்டாள்.

                   

                  அகிலோ ஸ்வரூபனை அடக்கிக் கொண்டிருந்தபடி, “ஹ்ம்ம், அவங்க ரெண்டு பேரும் அண்ணன் தங்கச்சின்னு சொல்றாரு உன் அப்பா.” என்று ஷ்யாம், ஷர்மிளா மற்றும் விக்ரமை முறையே காட்டி கூறினான்.

                   

                  அதைக் கேட்ட வர்ஷினியோ திகைப்பின் எல்லைக்கே சென்றாள் என்று தான் கூற வேண்டும்!

                   

                  எல்லாமே உடனே தெரிஞ்சுக்கணும்னு நினைக்காத மயூரா. அது, உனக்கு தான் வலியை தரும்.” என்று ஸ்வரூபன் கூறியது மீண்டும் அவளின் மனக்கண்ணில் வந்து போனது.

                   

                  தொடரும்…

                    The post 17 – இதயத்தின் நிறம் பார்த்ததால் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                    ]]>
                    https://thoorigaitamilnovels.com/17-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/feed/ 0 17839
                    உயிரெங்கும் குளிர் ஊசி அவன் விழி வீச்சில் – 6 ❄️ https://thoorigaitamilnovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%85-6/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%85-6/#respond Mon, 06 May 2024 04:21:03 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%85-6/ குளிர் ஊசி – 6 ❄️ “ஆஆ….. அம்மா ….. “ “ஏய் சீட்டு தான இடிச்சது எதுக்கு இவ்ளோ கத்துற? ” சரண் அவளின் அலறலில் பரபரத்து விட்டான். பின்னிருந்து தோளைச் சுரண்டிய மாயா, ” இப்படிலாம் இங்க கத்த கூடாது. புரியுதா…..” என்று பாவமாக கேட்டாள். அதன் பின்பே தான் கத்தியது அவ்வளவு தூரம் ஒலி எழுப்பி இருக்கிறது என்று புரிந்து “கொஞ்சம் ஓவரா போய்டோமோ ?

                    The post உயிரெங்கும் குளிர் ஊசி அவன் விழி வீச்சில் – 6 ❄️ appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                    ]]>

                    Loading

                    குளிர் ஊசி – 6 ❄

                    “ஆஆ….. அம்மா ….. “

                    “ஏய் சீட்டு தான இடிச்சது எதுக்கு இவ்ளோ கத்துற? ” சரண் அவளின் அலறலில் பரபரத்து விட்டான்.

                    பின்னிருந்து தோளைச் சுரண்டிய மாயா, ” இப்படிலாம் இங்க கத்த கூடாது. புரியுதா…..” என்று பாவமாக கேட்டாள்.

                    அதன் பின்பே தான் கத்தியது அவ்வளவு தூரம் ஒலி எழுப்பி இருக்கிறது என்று புரிந்து “கொஞ்சம் ஓவரா போய்டோமோ ? ” …. என்று வினவ,

                    “ரொம்ப ” என்று லாரா பதில் மொழிய, “ஹேய் நீ தமிழ் படம்லாம் பாப்பீயா? ” ஆச்சர்யமாக கேட்டாள் ஜனனி.

                    “தமிழ் பேசுறதே அதனால தான் ” சிரித்துக் கொண்டே கூறினாள்.

                    இதற்கு மேல் இருந்தால் மித்ரன் கோபப்படுவான் என்றும், ஜனனி பேசிக் கொண்டே இருப்பாள் என்று சரண் தான் “வெல்கம் டூ மை ஹோம் பம்கின் ” என்று கூறி வெளியில் இறங்கினான்.

                    அதன் பின்பே அனைவரின் பேச்சும் நின்று மூவரும் கீழே இறங்கினர். டிக்கியைத் திறந்து பொருட்களை எடுக்க, ஜனனி சார்லி , மித்ரன் மற்றும் லாரா மூவருக்கும் பொதுப்படையாக கூறி விடைபெற்றுக் கொண்டாள்.

                    லாராவும் அங்கேயே விடைபெற்றுக் கொள்ள, சார்லி மற்றும் மித்ரன் காரை பார்க் செய்து விட்டு சரண் மற்றும் மாயா குடி கொண்டிருக்கும் வீட்டிற்கு எதிரில் உள்ள அப்பார்டமெண்டிற்குள் நுழைந்தனர்.

                    முன்பு இருந்த குறும்பும், குழந்தை தனமும் காணாமல் போகி இருந்தது இருவருக்கும். அமைதியாக இருவரும் உள்ளே நுழைய சார்லி தன்னை சுத்தபடுத்தி கொள்ள அவனின் அறைக்கு சென்று விட்டு , ஹாலிற்கு அரை மணி நேரம் கழித்து வந்தான்.

                    சென்ற போது இருந்த தோரணையிலேயே இருந்தான் மித்ரன். கைகளை கட்டிக்கொண்டு தன் முன் இருக்கும் ஆளுயுரக் போட்டோவா வீற்றிருப்பத்தையே கண்ணெடுக்காமல்  பார்த்துக் கொண்டிருந்தான்.

                    பெருமூச்சு விட்டு, தனது தலையை இடவலமாக அசைத்துக் கொண்டே மித்ரனின் அருகில் நின்று சார்லியும் அப்போட்டோவைக் கண்டான்.

                    அதில் ஒரு வயதானவர் கம்பீரமாக நின்றுக் கொண்டிருந்தார். அவரது தோரணையில் கம்பீரம் நிறைந்து வயது குறைந்து இருந்தது. அவரின் அருகில் பெண்மைக்கு இலக்கணமாக நின்று கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.

                    அப்பெண்னின் இரு பக்கவாட்டிலும்  இருவர் நின்றுக் கொண்டிருந்தனர். அக்கம்பீர மனிதனின் கால் பக்கத்தில் ஒரு ஆங்கில சிறுவன் கையில் விரலை சப்பிக் கொண்டு, கசங்கிய ஆடைகளை போட்டுக் கொண்டு நின்றிருந்தான்.

                    அதனையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த இருவரின் பின் இருந்து “ச்சீ…….”என்ற ஒலி எழுப்பியதில் பயந்து இருவரும் திரும்பி பார்க்க, அங்கிருப்பவனைக் கண்டு அதிர்ந்தனர்.

                    அதே சமயத்தில் , சரண் தலையை கையில் வைத்துக் கொண்டு ஹால் சோபாவில் அமர்ந்திருந்தான். இறங்கியவுடன் வெளியில் பொருட்கள் வாங்க கடைக்கு சென்ற மாயா , வீட்டை அடைந்த பொழுது அவரை வரவேற்றது சரணின் இவ்வதாரத்தைத் தான்.

                    அதில் புருவம் சுருக்கி சரணின் அருகில் சென்று அவனின் தோளைச் சுரண்ட , சரண் அரண்டு கத்தி விட்டான். அதில் மாயாவும் கத்தி விட்டாள்.
                    உள்ளிருந்து வெளியில் வந்த ஜனனி , சரணுடன் மாயாவையும் திட்டி விட்டு உள்ளே சென்றாள்.

                    அவள் ஏப்ரான் அணிந்து கிட்சனுக்குள் நுழைவதைக் கண்டு திடுக்கிட்டு மாயாவும் சமையலறைக்கு சென்று எட்டிப் பார்க்க, ஜனனி ஸ்டவ்வை பற்ற வைக்க தெரியாமல் இருப்பது சாதாரணம், லைட்டர் எதுவென்று தெரியாமல் இருப்பதே அசாதாரணம் என்று நினைக்கும் பொருட்டு ஜனனி தன் கண்முன் இருக்கும் லைட்டரை விட்டு சுற்றி தேடிக் கொண்டிருந்தாள்.

                    அதை கண்டு ஆச்சர்ய படாமல் “ஹப்பாடா ” என்று வாய் அசைத்து விட்டு சத்தமில்லாமல்  வெளியேறிவள்  போய் நின்றாள் தன் கணவனின் முன் .

                    சரணிடம் ஒன்னும் ஆகாது விடுடா என்று கூறி அவனின் அருகில் அமர்ந்து நெட்ஃபிளிக்ஸில் சீரியஸ் பார்க்க தொடங்கினாள் அதுவும் வாங்கி வந்த சிப்ஸை எடுத்துக் கொண்டு. புரிந்தும் புரியாமலும் சரணும் சேர்ந்துக் கொண்டான்.

                    கதையின் வீரியம் அதிகமாக அதிகமாக அசையாமல் நேரம் போவது தெரியாமல் இருவரும் பார்த்துக் கொண்டிருக்க , சிப்ஸில் இன்னொரு கையும் உள்ளே நுழைந்தது. அதை முதலில் கண்டு கொண்ட சரண் ஜனனியின் கையில் அடித்தான். ஆனால், அவளோ “ச்ச….. ” என்று கூறி அவள் பாட்டிற்கு படத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்.

                    நேரம் நேரம் செல்ல செல்ல, கதையின் இறுதியில் பயம் தொற்றி சரணை இடித்துத் தள்ளி மாயா மற்றும் சரணிற்கு இடையில் அமர்ந்து கால்களை மடிக்கி கைகளால் முட்டுகையிட்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.

                    முகத்தை சரணின் புறம் திரும்பி வாயைப் பிளக்க , சரண் “என் தலையெழுத்து ” என்று கூறி அவளுக்கு சிப்ஸை ஊட்டிக் கொண்டிருந்தான்.

                    படம் முடிந்த பின்பே திரும்பி பார்த்த மாயா, ஜனனியும் அமர்ந்திருப்பதைக் கண்டு “என்ன ஜனனி இவ்வளவு சீக்கிரம் சமைச்சுட்டியா ? வாவ் யூ ஆர் ரியலி கிரேட் “என்று கூறி அவள் எழ , சிறிதும் அசைந்து கொடுக்காமல் “சமைக்க தான் போனேன் பட் இங்க இருக்கிற ஸ்டவ் யூஸ் பண்ணத் தெரில. அதான் பண்ணல ” என்று இறுதி வார்த்தையை வாயிலேயே முழுங்கினாள்.

                    “ஆன் பண்ணத் தெரியலைனா என்னையோ இவனையோ கூப்பிட்டு கேட்டா சொல்ல போறோம் “

                    ” அதுக்கு தான் வந்தேன். படம் பார்த்துக்கிட்டு இருந்தீங்க. அதை நானும் பார்த்தேன். நல்லா இருந்துச்சு அந்த சீன். இந்த சீன் முடிச்சுட்டு கூப்பிடலாம்னு உட்காந்தேன் “

                    “சீன் முடிஞ்சவுடனே கூப்பிட்டிருக்காலேமே?”

                    “அடுத்த சீனும் நல்லா இருந்துச்சு . நான் என்ன செய்ய? “

                    “இப்படியே போய் படத்தையும் முடிச்சாச்சு, சிப்ஸையும் முடிச்சாச்சு ” என்று கூறி சிப்ஸ் பாக்ஸ்ஸை காண்பித்தான்.

                    “சரி…. இப்பவும் ஒன்னுமில்லை. நான் ஆன் பண்ணித் தரேன். நீ சமை …. “என்று கூறி மாயா கிச்சனுக்கு செல்ல போக, தடுத்து நிறுத்திய ஜனனி “அதான் லேட் ஆகிடுச்சே… வெளியிலேயே வாங்கி சாப்பிடுவோம் “

                    ” வெளியிலேயா ? ” என்று மாயா புருவம் உயர்த்தி கேட்க,

                    “ஆமாம், சரண் தான் சொன்னான் ” என்று கூறி சிரித்தாள்.

                    “ஆனால் , நீ சமைக்க காய்கறிலாம் வெட்டி வச்சிருப்ப . அது வேஸ்ட் ஆகிடும். வா, நாங்க இரண்டு பேரும் ஹெல்ப் பண்ணுறோம் ” என்று சரணை  பார்க்க, சரணும் எழுந்துக் கொண்டான்.

                    ஜனனி அசையாமல் அவ்விடத்திலேயே அமர்ந்திருக்க, புருவம் இடுங்க மாயா பார்த்து விட்டு ,அவளின் அருகில் வந்து அவளின் தாடையை நிமிர்த்தி “இனிமே சமைக்க போறேனு சொன்ன அவ்ளோ தான். நாங்களே கஷ்டப்பட்டு லவ்வை பண்ணி இப்போ தான் கல்யாணம் பண்ணிருக்கோம் . நீ எங்களை கொல்ல பாக்குற “

                    “கொலை கேசுல உள்ள போகவும் வாய்ப்பு இருக்கு பாப்பு ” என்று சரணும் ஆமோதித்தான்.

                    இருவரின் சம்பாஷனைகளை கண்டு மூக்கு விடைக்க ஜனனி அமர்ந்திருக்க,

                    “டொய்ங் ….. ” என்று காலிங் பெல் அடித்தது .

                    சரணை கதவைச் சாற்றி விட்டு ஜனனியின் அருகில் வந்து அவளுக்கு பிடித்து சிக்கன் பிட்ஷா, அல்ஃரெடோ பாஸ்தா, ஹார்லிக் பிரட் ஆகியவை கடை பரப்பினான்.

                    அவையின் சுவையில் மெல்ல மெல்ல அவள் கோபம் குறைந்தது. இறுதியில் மூவரும் சிரித்து மகிழ்ந்து உண்டு அவரவர் அறையில் நித்திரையில் ஆழ்ந்தனர்.

                    ஜனனியின் ஜன்னலில் எட்டிப் பார்த்த நிலவு அவள் உறங்கி கொண்டிருப்பதைக் கண்டு புன்னகை சிந்தி விட்டு, மித்ரனின் அறையில் எட்டிப் பார்த்தது. நிலவின் வரவை எதிர்ப்பார்த்து காத்திருப்பது போல் நின்றுக் கொண்டிருந்தான். அவனைக் கண்டு வருந்திய நிலவு இருவருக்கும் பொதுவாக தென்றலை வீசியது.

                    அதில் மித்ரனுக்கு மனம் லேசாகுவது போன்ற பிரம்மை. ஜனனிக்கு அன்னையின் மடி போன்ற பிரம்மை.

                    மறுநாள் விடியல் எவ்வாறு இருக்கப் போகிறது ?

                    கீர்த்தி ☘

                     

                      The post உயிரெங்கும் குளிர் ஊசி அவன் விழி வீச்சில் – 6 ❄️ appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                      ]]>
                      https://thoorigaitamilnovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%85-6/feed/ 0 17837