
அத்தியாயம் – 19
“நான் பிறந்தது ஒரு கிராமத்துல தான், என்னை பெத்தவன் என் தங்கச்சி கண்மணி பிறக்கும் வரைக்கும் நல்லா தான் இருந்தான், கூலி தொழில் செய்து எங்களை நல்லா தான் பார்த்துகிட்டான், ரெண்டாவது பொண்ணா பொறந்தது அவனுக்கு பிடிக்கலயாம், கண்மணி பிறந்ததுல இருந்தே குடிக்கும் பழக்கத்தை கொண்டு வந்தான், என்னை பெத்தவவள குடிச்சிட்டு வந்து தினமும் அடிப்பான் உதைப்பான், அப்போ என்னை பெத்தவ மேல நானும் அதிகளவு பாசம் வச்சிருந்தேன், அவளும் நல்லா தான் பாசமா பார்த்துகிட்டா, அவன் அவளை அடிக்கும் போதெல்லாம் பல முறை தடுத்திருக்கேன், அடியை நான் வாங்கியிருக்கேன், கண்மணிக்கு மூணு வயசு ஆரம்பத்துல எங்களை பெத்தவ காணாம போயிட்டா, எங்கெங்கேயோ தேடினாங்க அக்கம் பக்கத்துல உள்ளவங்க, ஆனா கிடைக்கல, ஓடிபோய்ட்டானு முடிவு பண்ணாங்க, அவ உண்மையாவே புருஷன் தொல்லை தாங்காம எவன் கூடவோ ஓடி போயிட்டான்னு ஒருமுறை அவளை நேரில் பார்த்த போது நானும் தெரிஞ்சிக்கிட்டேன்,…
அவ போன பிறகு கண்மணி முழுசா என் பொறுப்புக்கு வந்துட்டா, அவளை குளிக்க வைக்கிறதுல இருந்து, உடை மாற்றி, சாப்பாட்டு ஊட்டி தூங்க வைக்கிறது வரைக்கும் நான் தான் பார்த்துகிட்டேடேன், எங்களை பெத்தவன் குடிச்சிட்டு வந்து அவன் பொண்டாட்டிக்கு தண்டனை கொடுகிறதா நினைச்சு எனக்கு கொடுத்தான், இத்தனை வருடம் அவளுக்கு கொடுத்த அடி உதை எல்லாம் என்னை நோக்கி திரும்பியது, நானும் தாங்கிக்கிட்டேன், அந்த வயசுல என்னால வேற என்ன பண்ண முடியும்,…
ஒரு முறை கண்மணிக்கு அதிகமான ஜுரம், எங்களை பெத்தவன் கிட்ட சொன்னேன், அவன் செத்து தொலையட்டும்னு சொன்னான், கோபம் வந்தது, கோபத்தை காட்ட முடியாத சூழ்நிலையில அப்போ நான் நின்னேன், என் தங்கச்சியை தோள்ல தூக்கி போட்டுட்டு கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு ஓடினேன், என்கிட்ட காசு இல்ல, பக்கத்து வீட்டு அக்கா தான் அந்த ஆஸ்பத்திரி பத்தி சொன்னாங்க, எங்க கிராமத்துலருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவுல இருக்கு, பஸ்ல தான் போனேன் தனியா என் தோள்ல கண்மணியோட, தங்கச்சிக்கு சிகிச்சை பார்த்தாங்க, மருந்து கொடுத்தாங்க, வாங்கிட்டு வரும் வழியில தான் அவளை நான் பார்த்தேன்,…
யாரோ ஒருத்தன் கூட சிரிச்சு பேசி கைகோர்த்துட்டு போனா, “அம்மா”னு கத்திக்கிட்டு ஓடினேன், ஆனா அவ என்னை துட்சமா பார்த்து நான் பிடிச்ச என்னோட கையை உதறிவிட்டா, யார் நீ னு என்னை அந்நியமா பார்த்தா, நான் தான் மா உங்க பையன், தங்கச்சிக்கு உடம்பு சரியில்லமான்னு சொல்லி அழுதேன், ஆனா அவ அத காதுல வாங்கல, ச்சீ போன்னு தள்ளி விட்டா, நானும் தங்கச்சியும் ரோட்டுல போய் விழுந்தோம், கண்மணி விழுந்ததுல வீல்னு அழுத்துச்சு, ஆனா அவ அதை கண்டுக்கவே இல்லை, எங்களை தாண்டி போயிட்டா எவன் கூடவோ” இதை சொல்லும் போது அவன் கண்ணிலிருந்த கோபம் மறைந்து கண்ணீர் அருவியாய் வெளியேறியது,…. ‘இப்படியும் ஒரு தாய் இருப்பாளா’ நித்யாவிற்கு முகம் தெரியா கருணாவின் தாய் மீது கொலைவெறியே உண்டானது,….
“அன்றைய நாளிலிருந்து நான் அவளை அடியோடு வெறுத்தேன், என் தங்கச்சியை தாய்க்கு தாயா தந்தைக்கு தந்தையா இருந்து வளர்த்தேன், அவளோட உலகமே நானா மாறினேன், என்னோட உலகமாவும் அவ தான் இருந்தா, எங்களை பெத்தவனோட அடி உதையையெல்லாம் சமாளிச்சி ஆறு வருசத்தை கடத்திட்டேன், பள்ளிகூடத்துக்கு போகல, மத்த பசங்களை போல விளையாட வெளியே போனதில்ல, என் தங்கச்சியோட மட்டுமே நேரத்தை கடத்துனேன் அத்தனை வருடங்களும்,
என் தங்கச்சிக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சது, அக்கம் பக்கத்து வீட்டு பிள்ளைங்க பள்ளி கூடத்துக்கு போறதை பார்த்து, நானும் போகட்டுமா அண்ணானு கேட்டா, என்னால அவ ஆசையை தட்டி கழிக்க முடியல, சரின்னு சொன்னேன், என் தங்கச்சி படிச்சி பெரியாளாகனும்னு ஆசை வந்தது, பக்கத்து வீட்டு அக்கா கிட்ட விசாரிச்சேன், அவங்க என்கிட்ட கொஞ்சம் நல்லா பழகுவாங்க, எதுவா இருந்தாலும் நான் அவங்க கிட்ட தான் கேட்பேன், அவங்களும் உதவி பண்ணுவாங்க, நாங்க ரேஷன் கடையில தரதை வச்சு தான் வயித்தை நிரப்பிட்டிருந்தோம், அப்பப்போ அவங்க நல்ல உணவுலாம் தருவாங்க, அந்தளவுக்கு அவங்க நல்லமனசு படைத்தவங்க,…
பள்ளிக்கூடத்துல போய் பேச சொன்னாங்க, அவங்களும் கூட வருவதா சொன்னாங்க, அன்னைக்கு என் கண்மனியை வீட்ல விட்டுட்டு போனேன், அவளை விட்டுட்டு போனது தான் அப்போ நான் செய்த மிகப்பெரிய தவறு, அன்னைக்கு தான் என் தங்கச்சி துடித்துடிச்சி இறந்து போனா…” இதை சொல்லும் போது அவன் விழிகளில் விவரிக்க முடியாதவிற்கு வலி தெரிந்தது…
“பள்ளி கூடத்துக்கு போன விஷயம் நல்லதாகவே முடிந்தது, சந்தோசமா அதை கண்மணிக்கிட்ட பகிர்ந்துக்க ஓடி வந்தேன், வந்த எனக்கு…அதை…அதை… என்னால சொல்ல முடியல ஸ்ரீ, அன்னைக்கு நான் பார்த்தது” என்று கூற முடியாமல் வெடித்து அழுதான் கருணா,,… அவனது அழுகை நித்யாவை ஆட்டம் காண வைத்தது, அவள் கண்களிலிருந்தும் கண்ணீர்,.. ‘அப்படி அவன் தங்கச்சிக்கு என்ன நடந்தது, அவளை துடிதுடிக்க கொன்னது யாரு’ மனம் படபடத்தது, ஏதோ அவளது சொந்தத்துக்கே நடந்தது போல் நாடிநரம்பெல்லாம் சிலிர்க்க தொடங்கியது,…
“கண்மணிக்கு என்னாச்சு” மனம் பதைபதைத்தாலும் அவள் அதை கேட்டாள், அவன் சொன்னதை கேட்ட பிறகு ஏன்டா கேட்டோம் என்று கதறி அழுதாள்,…
“கண்மணி.. வெறும் ஐந்து வயதேயான என் கண்மணியை அவன்… அவன் சிதைச்சுக்கிட்டிருந்தான், அவ.. அவ உடம்புல ஒட்டு துணி இல்ல, அவளோட அந்தரங்க உறுப்புலருந்து ரத்தம்… ரத்தம் கொட்டிக்கிட்டிருந்துச்சி, அதையும் மீறி அவன் அந்த ****** உச்சத்தை அடைந்து சுகம் கண்டுகிட்டு இருந்தான்” இதை கேட்ட நித்யாவிற்கு ஹாட் அட்டாகே வந்துவிடும் போல் இருந்தது, நெஞ்சை கரத்தினால் அழுத்தி பிடித்துக் கொண்டு பொத்தென்று அமர்ந்து விட்டாள், மூச்சு ஒரு மாதிரி முட்டியது, இதயம் தன் வேலையை நிறுத்த போவது போல் ஏதோ ஒன்று வந்து அடைத்தது, அழுகை கூட வெளிவரவில்லை, ஒரு மாதிரி மறத்து போய் அமர்ந்திருந்தாள்,…
தன்னாலேயே இதை கேட்க முடியவில்லையே, இவன் நேரில் பார்த்திருக்கிறான், கடவுளே இவன் எப்படி உயிரோடு இருக்கிறான், இத்தனை வருடங்கள் அவனால் எப்படி மனிதனாய் நடமாட முடிந்தது, இவனுக்கு ஏன் இப்படியொரு தண்டனை? அந்த சிறு பெண் என்ன தவறு செய்தாளென்று அவளுக்கு அப்படியொரு கொடுமையான தண்டனையை கொடுத்தாய்? என்று இறைவனின் மீது ஆத்திரமாக வந்தது,….
அவன் தொடர்ந்தான், வார்த்தையில் உயிர் இல்லை, வாய் பாட்டிற்கு சொல்லிக் கொண்டே போனது,…. “என் தங்கச்சிகிட்ட ஓடினேன், அவளிடமிருடத்து அவனை தள்ளி விட்டேன், துணியை எடுத்து போர்த்தினேன், அவள் கன்னத்தை பற்றி எழுப்பினேன், ஆனா அவ கண்ணை திறக்கல, நெஞ்சிலடிச்சிகிட்டு கத்தினேன் கதறினேன், அவளை எழுந்து வர சொன்னேன், ஆனா அவ செவிசாய்க்கல, அவ தலையிலிருந்து என் கைக்கு வந்த ரத்தம் அவள் தலையிலும் ஆழமான காயம் பட்டிருப்பதை எடுத்து காட்டுச்சு, “டேய் அவனை பிடிடா” அழுது அழுது ஓய்ந்து போய் ஒரு குரல் கேட்டு நிமிர்ந்தேன், அவன் தான், என் தங்கச்சியை நாசம் செய்தவன், அவனோட பொண்ணு வயசுல இருக்கும் என் தங்கச்சியை துடிக்க வச்சவனை பார்க்க பார்க்க என் ரத்தமெல்லாம் சூடாச்சு, அவன் கூட தான் எங்களை பெத்தவனும் இருந்தான், அவனும் இதுக்கு உடந்தைன்னு புரிஞ்சது, பெத்தமகளை ஒன்னும் தெரியாத அந்த பிஞ்சை கதற கதற கற்பழிக்க விட்டு பார்த்திருக்கான் அந்த அரக்கன், ரெண்டு பேரும் என்னை பிடிக்க வந்தானுங்க, அப்போ எனக்குள்ள ஆயிரம் பேரை வீழ்க்கும் சக்தி வந்தது போல இருந்தது, ஓரமா கிடந்த அரிவாள்மனையை கையில எடுத்தேன், ஆட்டை அறுக்கிற மாதிரி அவன் கழுத்தை அழுத்தேன், என் தங்கச்சியை தொட்டவனோட ஆணுறுப்பை முதல்ல அறுத்து எறிஞ்சிட்டு அவனையும் கழுத்து துண்டாகும் வரைக்கும் அறுத்து கிழித்தேன்,….
சத்தம் கேட்டு எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்க, என்னை பிடிக்க வந்தாங்க, என் தங்கச்சியை தோள்ல தூக்கி போட்டுட்டு ஓடினேன் அவங்களையெலாளம் தள்ளி விட்டுட்டு, கால்ல வலி எடுத்த போது தான் ஓடுறதை நிறுத்தினேன், இருட்டிய அவ்விடத்துலருந்த ஒரு மரத்தடிக்கு கீழ உட்கார்ந்து மறுபடியும் கண்மணியை எழுப்பினேன், அவ செத்து போயிட்டான்னு புரிஞ்சது, கத்தினேன் பெருங்குரலெடுத்து கதறினேன், அழுது அழுது சோர்ந்து போய் படுத்துட்டேன், “யார்ப்பா அது” ஒரு குரல் கேட்கவும் பயந்து போய் எழுந்தேன், ஒரு வயசாவரு நின்னுகிட்டு இருந்தாரு, எனக்கு அப்போ என்ன பண்ணுறதுன்னு தெரியாம அவர் கிட்ட என் கஷ்டத்தை சொல்லி அழுதேன்,….
உலகத்துல நல்லவர்களும் இருக்க தான் செய்றாங்க, அதுல அவரும் ஒருத்தர் போல, என் தங்கச்சி உடலை தகனம் பண்ண உதவி பண்ணாரு, அவருக்கு தெரிஞ்ச தகனம் செய்பவரை வரவழைச்சு தங்கச்சி உடலை தகனம் செய்தோம், என் தங்கச்சியோட உடலுக்கு நான் தான் என் கையால நெருப்பு வச்சேன், நெருப்பு முழுசா அணையுற வரை அங்கேயே நின்னேன், உதவி செய்தவரு கிளம்பி போயிட்டாரு, நெருப்பு அணையை அணையை என் மனசுல இருக்க வலி வேதனை எல்லாம் நெருப்பாய் கொழுந்துவிட்டு எரிந்தது, அவனுங்களை கொன்னும் என் ஆத்திரம் அடங்கல, என் தங்கச்சி எனக்கு வேணும்னு மனம் கூப்பாடு போட்டது, மறுபடியும் கொல்லணும்னு கையெல்லாம் பரபரத்தது, கோபம் வெறுப்பு எல்லாம் எங்களை பெத்தவ மேல வந்து நின்னது, அவ அன்னைக்கு கண்மணியை மட்டுமாவது கூட கூட்டிட்டு போயிருந்தா அவளுக்கு இந்த நிலை வந்திருக்காதுலனு ஆவேசப்பட்டேன், மனசு மிருகமானது, அவளை தேடி அழைஞ்சேன், அவளையும் கதற கதற கொன்னேன், அந்த ஊர் ஆளுங்க என்னை விரட்டி விரட்டி துரத்துனானுங்க, ஓடினேன் ஓடினேன், தப்பிக்கும் நோக்கத்தோடு ஓடினேன், ஒரு புதருக்குள்ள மறைஞ்சுகிட்டேன், வந்தவனுங்க என்னை காணாம வேற பக்கம் தேடி ஓடினாங்க, அப்போ தான் கொஞ்சம் தொலைவுல யாரோ கத்தற சத்தம், ஓடி போய் என்னனு பார்த்தேன், ஒருத்தன் கையில அரிவாளோட நின்னான், இன்னொருத்தன் மண்ணுல கிடந்தான் தோள்ல ரத்தம் கசிய,…
“வேணாம்டா, எனக்கு ஏதாவது ஆச்சு என் ஆளுங்க உன்னை சும்மா விடமாட்டாங்க” கீழே கிடந்தவன் அந்த நிலமையிலும் கண்களில் கொஞ்சமும் பயம் இல்லாமல் தன்னை வெட்ட துணிந்து நிற்பவனை மிரட்ட,… “இப்போவும் உன் ஆணவம் குறையலல பாஸ்கர், உன் சாவு என் கையால தான்டா” என்ற உறுமலுடன் அவன் கழுத்தை நோக்கி அரிவாளால் வீச வர, அந்த நேரம் கருணா என்ன நினைத்தானோ வேகமாக உள்ளே நுழைந்து தாக்க வந்தவனின் வயிற்றை பிடித்து தள்ளி விட்டான், இதை எதிர்பார்க்காதவன் தடுமாறி கீழே போய் விழுந்தான், கையிலிருந்த அரிவாளும் ஒரு பக்கம் போய் விழுந்தது,…
“எட்றா எட்றா அரிவாளை கையில எடுடா” பாஸ்கர் என்பவன், ஏதோ கருணா இதற்கு முன்பு பழக்கப்பட்டவன் போல அவனை உரிமையுடன் துரிதப்படுத்த, அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டவன் போல கருணாவும் கையில் அரிவாளை எடுத்தான்,….
“வீசுடா” பாஸ்கர் கீழே கிடந்தவனை நோக்கி துட்சமாய் பார்த்து, உதட்டை மடித்து கட்டளையிட, ஏற்கனவே ரத்த வெறிக்காக காத்து கொண்டிருந்த கருணாவும், அவன் கழுத்தில் அரிவாளால் வீச, அவன் தலை தனியாக கழன்று விழுந்தது,… விழிகளில் பரவசத்துடன் கருணாவின் கரம் பிடித்து எழுந்த பாஸ்கர்,… “இந்த பாஸ்கர் உயிரை காப்பற்றின உனக்கு பெரிய விழாவே ஏற்பாடு பண்ணுறேன், வாடா இனி நீ என் விசுவாசி இந்த பாஸ்கரின் விசுவாசி” என தோளோடு அவனை அழைத்து சென்றான் பாஸ்கர், யாரும் இல்லா நிற்கதியில் நின்ற கருணாவும் அவன் பின்னால் சென்றான், அன்றிலிருந்து அவன் வாழ்க்கை புதுவிதமாக ஆரம்பமாகியது,….
பாஸ்கருடன் சென்ற பிறகு தான், அவன் பெரிய தாதா என்பது தெரிய வந்தது கருணாவிற்கு, அவனுக்கு அடியாட்களே ஐநூறு பேருக்கு மேல் இருந்தார்கள், அனைவர் முன்னிலையிலும் கருணாவை நிறுத்தி, இவனும் தங்களுள் ஒருவன் என்று அறிமுகப்படுத்தினான், அன்றிலிருந்து அவனது வாழ்க்கை கொலை கொள்ளை கடத்தல் என்றாகி போனது, வளர வளர உடம்போடு சேர்த்து மனதையும் இரும்பாக்கி கொண்டான், கண்மணியை பற்றி வலுக்கட்டாயமாக மறக்க நினைத்தான், அவளை பற்றி நினைத்தால் அவன் பலவீனமாகி விடுவான் என்பதாலேயே கண்மணி ஒருவள் இருந்தால் என்பதையே மறந்து தவறு என்று தெரிந்தும் ரவுடிகளின் குரூப்பில் சேர்த்து ரவுடி என்ற பெயர் வாங்கினான், தன் உயிரை காப்பாற்றியதாலேயே பாஸ்கர் கருணாவை நன்றாகவே பார்த்துக் கொண்டான் மகனை போல, கருணாவின் இருபதாவது முடிவில் பாஸ்கர் இறந்து போனான் உடல்நலகுறைவால், தங்கைக்கு பிறகு பாஸ்கருக்காக அன்று கண்ணீரை சிந்தினான், பாஸ்கரின் மறைவுக்கு பிறகு ஒரு கூட்டமாக இருந்த அவர்களின் அணி கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து போனது, அப்படி பிரிந்து போனவர்கள் தான் ஒரு க்ரூப்பாய் இணைந்த கருணா மற்றும் அவனது அடியாட்கள் ஐந்து பேர், காசு கொடுத்தால் கொலையும் செய்வார்கள், அதிக பணத்திற்காக கொள்ளையும் அடிப்பார்கள், பெரிய தலைகள் யாரையாவது கடத்த சொன்னால் கடத்தவும் செய்வார்கள், தேவைபட்டால் அவர்களின் மகள்களையும் கடத்துவார்கள், இப்படி தான் போய் கொண்டிருக்கிறது கருணாவின் வாழ்க்கை, நித்யாவை பார்த்த பிறகு அவளுடன் வாழ வேண்டும் என்ற ஆசை பிறந்தது, அதை அவளிடமும் பகிர்ந்து கொண்டு, தன் கதையையும் கூறி முடித்தான்…. நித்யா கருணாவின் வாழ்வில் இப்படியெல்லாம் நடந்திருக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, ரவுடியான இவனின் மனதில் இத்தனை பெரிய துன்பமான சம்பவங்களும் நிகழ்ந்தேறி இருக்கிறதா என்று வேதனை பட்டாள், சூழ்நிலையால் ரவுடியாகியவன் திருந்தி வாழ ஆசை படுகிறான், அவன் ஆசையை ஏன் நிறைவேற்ற கூடாது, அவன் சொன்னது போல தான் யாரோ ஒருவனை கல்யாணம் செய்து கொண்டு அவனுடன் தான் இருக்க போகிறோம், அது ஏன் கருணாவாக இருக்க கூடாது, அன்புக்காக ஏங்கி போயிருக்கிறவனுக்கு தான் ஏன் அன்பு செலுத்த கூடாது, அரவணைக்க கூடாது என அவள் மனம் கேள்வி கேட்டது, அந்த நிமிடம் முடிவு செய்தாள் தான் கருணாவுடனே இருந்துவிடலாம் என்று, தன் முடிவை கருணாவுடனும் பகிர்ந்து கொண்டாள், உன்னை விட்டு போகமாட்டேன் எந்த நிலையிலும் உன் கூடவே இருப்பேனென்று வாக்கு கொடுத்தாள், அந்த கணம் அவன் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை, அன்றிலிருந்து தான் இனி கத்தி துப்பாக்கி என்று எந்த வித ஆயுதத்தையும் எடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தான் அவள் கேட்பதற்கினங்க, அவளது சொல்லுக்காக அந்த நொடியே துப்பாக்கியை தூக்கி எறிந்தான்,…
நித்யா எப்படியாவது தன் தாய் தமையனிடம் கருணாவை பற்றி கூறி அவனையே கல்யாணம் செய்து கொள்ளவேண்டுமென்று திட்டமிட்டாள், அவர்கள் உடனடியாக சம்மதிக்க மாட்டார்கள் என்பது தெரியும், அதனால் அவர்களை எப்படி சம்மதிக்க வைப்பது என்பதை பற்றி தான் அடுத்த இரண்டு நாட்களும் ஆரவாரமாக சிந்தித்து கொண்டிருந்தாள், இதற்கிடையில் “கிளம்பு ஸ்ரீ, நான் உன்னை உன் வீட்டுல விட்டுடுறேன், சீக்கிரமே உன் வீட்ல உள்ளவங்க கிட்ட நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கு” என்றபடி வந்து நின்றான் கருணா….
நித்யாவும் சரி என்றாள், அந்த நேரம் தான் அவர்களே எதிர்பாராவிதமாய் அவர்கள் இருக்கும் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு காக்கிஉடை அணிந்தவர்கள் அவர்களை சுற்று போட்டனர், நித்யா மிரண்டு போனாள், அவர்களை பின்தொடர்ந்து வந்த தமையன் வருணேஷை கண்டு கொண்டதும் அவள் மனது நிம்மதி கொள்ள, “அண்ணா” என்று அவள் வருணேஷை நெருங்க போன நேரம், கருணாவின் கரம் நித்யாவின் கரம் பிடித்து தடுத்து நிறுத்தியது, அவள் தன்னை விட்டு செல்வதை அந்நொடி ஏற்க முடியாமல் தான் அவன் தடுத்தான், அவர்களுக்குள் என்ன நடந்தது என்பது தெரியாத ஒரு காவல் அதிகாரியின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட குண்டு, அவளை போக விடாமல் அவன் தடுப்பதை கண்டு கருணாவின் தோள்பட்டையை பதம் பார்த்தான், நித்யா வாயை பொற்றி அலறினாள்,…
அவன் பதட்டம் கொள்ளவில்லை, ஆனால் கோபம் வந்தது, தன் சட்டையின் பின்புறமிருத்து துப்பாக்கியை எடுக்க நினைத்தான், ஆனால் அதை தான் எங்கோ தூக்கி போட்டு விட்டானே அவளுக்காக, நொடியில் புரிந்து கொண்டவனின் முகத்தில் ஏமாற்றம், அவனை அவர்கள் என்கவுன்டர் செய்து விடுவார்களோ என்று பதட்டம் கொண்டான், நித்யாவுடன் வாழ முடியாமல் போய்விடுமோ என்று பயந்தவன், தன்னை காப்பாற்றி கொள்ளவே நித்யாவை தன் பக்கமாக இழுத்து, அவளை பகடை காயாய் உபயோகிக்க நினைத்தான், அதை பற்றி மெல்லிய குரலில் நித்யாவிடமும் அவன் உரைக்க, ஏற்கனவே அவன் ஆயுதத்தை தூக்கி போட வைத்து விட்டோமே, அவன் கையில் ஆயுதம் இருந்திருந்தால் இந்நேரம் தப்பி சென்றிருப்பானே என்ற தவிப்பில் நின்ற நித்யாவும், அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டாள், ஆனால் காவல் அதிகாரியோ நித்யாவை அவன் கொல்ல பார்க்கிறான் என்று தவறாக புரிந்து கொண்டு, அவனது மற்றொரு தோள்பட்டையில் இன்னொரு குண்டை பாய்ச்சியது அவன் அசந்த நேரத்தில், நிலை தடுமாறி கீழே விழுந்தான், விழுந்தவனின் தலையில் பலத்த அடி பட்டது, மண்டை உடைந்து ரத்தம் கரகரவென்று வெளியேறியது, நித்யா “வேணாம், அவனை சுடாதீங்க,” என்று கத்தி கதறியவள், ரத்தம் வெளியேறிய நிலையில் பேச்சு மூச்சுற்று போய் கிடைந்தவனை பார்த்து மயக்கம் வரவே அங்கேயே மயங்கி சரிந்தாள்,….
அவள் கண்விழித்த போது மருத்துவமனையில் இருந்தாள், அவளுடன் தாயும் தமையனும் இருந்தனர், இருவர் முகத்திலும் நித்யா நலமாக கிடைத்து விட்டாள் என்ற நிம்மதியை காண முடிந்தது, ஆனால் நித்யா அவர்களை கண்டு கொள்ளவில்லை,… “கருணா எங்கே? அவனுக்கு என்னாச்சு?” என்று கத்தினாள், செந்தூரமும் வருணேஷும் அவளை குழப்பமாய் பார்த்தனர், “ஸ்ரீமா,…நீ நல்லா இருக்கல்லடா, இவ்வளவு நாள் உன்னை காணாம எவ்வளவு பயந்து போனோம் தெரியுமா, நீ கடத்தப்பட்ட விஷயம் தெரிஞ்சதும் துடிச்சு போயிட்டோம்” என்ற அன்னையின் வார்த்தைகள் அவளது காதில் விழவில்லை,…
“கருணா எங்கே இருக்கான், தயவு செஞ்சு சொல்லுங்க” என்று கேட்டு சத்தமிட்டாள்,….
“கருணான்னு யார சொல்ற,” வருணேஷ் புரியாமல் வினவ,.. “அவன் தான், என்கூட இருந்தானே, போலீஸ் சுட்டாங்களே, யாரை கேட்டு அவனை சுட்டாங்க, அவனை ஏன் சுட்டாங்க, அவனுக்கு ஏதாச்சும் ஆச்சு, அவங்களை சும்மா விட மாட்டேன்” என்று எகிறியவளை இருவரும் அதிர்ச்சியாய் பார்த்தனர்,…
“ஸ்ரீ நீ என்ன பேசிக்கிட்டு இருக்க, சுயநினைவோடு தான் இருக்கியா?, அவன் உன்னை கடத்திட்டு போனவன், அவனுக்காக எங்க கிட்ட எகிறிக்கிட்டு இருக்கியா?” ஆதங்கத்துடன் கேட்டார் செந்தூரம்,
“அவன் என்னை கடத்திட்டு போனான் தான், ஆனா என்னை பத்திரமா பார்த்துகிட்டான், ஏன் ஏன் இப்படி பண்ணாங்க அந்த போலீஸ்காரங்க, இப்போ கருணா எங்கே இருக்கான், நல்லா தானே இருக்கான்” என்று கேட்டவளை இருவரும் பைத்தியத்தை பார்ப்பது போல் பார்த்தனர், அவள் மீண்டும் மீண்டும் கருணாவை பார்க்க வேண்டும் என்று கதறியதில் தூக்க மருந்தை செலுத்தி தூங்க வைத்தனர், தூக்க மருந்தின் வீரியம் குறைந்து எழுந்த போதும் அவள் கருணாவை பற்றியே கேட்க, செந்தூரம் தான் அவளை சமாதானம் செய்தார், வேறு வழியே இல்லாமல் கருணா சிகிச்சையில் இருக்கும் விஷயத்தை வருணேஷ் கூறினான்,….
வீட்டிற்கு டிஸ்சார்ஜ் ஆன பிறகும் கருணாவை பார்க்க வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தாள் நித்யா, மருத்துவமனையில் இருந்த போதே கேட்டால் தான் அவர்கள் தான் சமாதான வார்த்தை கூறி அப்போதைக்கு சமாதான படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர், வீட்டிற்க்கு வந்ததும் அவள் மீண்டும் கருணாவை பற்றி கேட்க, பொறுத்து பொறுத்து போன செந்தூரம் மகளின் மீது கோபத்தை காட்டினார், “அவன் உன்னை கடத்திட்டு போய் எங்களை கதற வச்ச ரவுடி, அவனை போய் பார்க்கணும்னு அடம் பண்ணிக்கிட்டு இருக்க, பைத்தியமா பிடிச்சு போச்சு உனக்கு” என சத்தம் போட்டார்…
“அம்மா அவன் ரவுடி தான், ஆனா எனக்காக எல்லாத்தையும் விட்டுடுறேன்னு சொன்னான், சின்ன வயசுலருந்து ரொம்ப கஷ்டப்பட்டுட்டான், சூழ்நிலை அவனை அப்படி மாத்திவிட்டுடுச்சு, அன்புக்காக ஏங்குறான், நான் அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு போதும் போதுங்கிற அளவுக்கு என்னால முடிஞ்ச வரைக்கும் அன்பை கொடுக்கணும், சந்தோசமா வச்சுக்கனும், எனக்காக நான் சொன்னதுகாக தான் அவன் துப்பாக்கியை தூக்கி போட்டான், அவன் கையில அவனோட ஆயுதம் இருந்திருந்தா இந்நேரம் அவன் நலமா இருந்திருப்பான்” என தன் பாட்டிற்கு பேசிக் கொண்டே அழுதவளை, தாயும் மகனும் அதிர்ந்து போய் பார்த்தனர்….
“என்னடா என்ன பேசிக்கிட்டு இருக்கா இவ, புத்தி எதுவும் பேதழிச்சு போச்சா” என தாய் மகனிடம் புலம்ப,…. “அவன் நம்ம ஸ்ரீயை ஏதோ பிரைன்வாஷ் பண்ணிருக்கான்மா, அதான் அவ இப்படி பேசிக்கிட்டு இருக்கா, அவளை நாம இப்படியே விட்டுட கூடாதுமா, ஏதாச்சும் பண்ணனும்” என்றான் கவலையுடன்,….
“என்னடா என்னென்னமோ சொல்ற, எனக்கு பயமா இருக்கு,” என ஒரு தாயாய் அவர் உள்ளம் மகளை நினைத்து பதற,… “கவலை படாதம்மா, நான் பார்த்துகிறேன்” என்றவன் வெளியே எங்கோ கிளம்பி சென்றான்,…
சில மணி நேரத்தில் தாயிடம் வந்தவன்,… “அம்மா,… நாம நம்ம ஸ்ரீக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம்” மகனின் கூற்றில் திகைத்தவர்,… “என்னடா சொல்ற, கல்யாணமா? திடீர்னு எப்படிடா கல்யாணம் பண்ணுறது” என்றார்,…
“அவ மனசு அந்த ரவுடி பயலால நிறையவே குழம்பி போயிருக்கு, என்ன சொல்லி அவளை இந்தளவுக்கு மாத்தி வச்சிருக்கான்னு தெரியல, போக போக சரியாகிடுவான்னு இதை நாம இப்படியே விடுறதும் எனக்கு சரியா படல, அவ எதிர்காலம் இதனால பாதிக்கபட்டுட கூடாது, அதனால தான் நான் இந்த முடிவை எடுத்திருக்கேன்” என்றான்,..
“திடீர்னு எப்படிடா கல்யாணம் பண்ணுறது, முதல்ல நம்ம ஸ்ரீக்கு ஏத்த மாப்பிளைய பார்க்கணும், அப்புறம்” அவர் கூற வருகின்ற அனைத்தும் புரிந்தவன்,… “மாப்பிளை ரெடியா இருக்கான்” என்றுவிட்டு தன் நண்பனை பற்றி கூறினான், நித்யாவிடம் இவ்விஷயத்தை பற்றி கூற அவள் முடியவே முடியாது என திட்டவட்டமாக மறுத்தாள், செந்தூரம் தன் மகள் வாழ்க்கை நல்முறையில் அமைய வேண்டும் என்பதற்காக செத்து போய்விடுவேன் என மிரட்ட, முதலில் தன் தாயின் மிரட்டலை அலட்சிய படுத்தியவள், அவர் சாக துணிந்ததை அறிந்து பதறி விட்டாள், திருமணத்திற்கு சம்மதம் சொன்னாள், ஒரே வாரத்தில் விருப்பமே இல்லாமல் ரிஷியின் கரம் பற்றினாள், அவன் தன் கழுத்தில் தாலி அணிவிக்கும் போது அவள் எதிர்பாக்கவில்லை அவனை தான் நேசிப்போம் என்று, கருணாவை பற்றி தன் கணவனானவனிடம் கூறி எப்படியாவது கருணாவிடம் போய் சேர்ந்து விட வேண்டும் என கணக்கு போட்டவள், இப்போது அவனது அன்புக்கு அடிமையாகி அவனை மனதார காதலிக்க ஆரம்பித்து விட்டாள், கருணாவின் மீது வந்தது காதல் அல்ல என்பதை ரிஷியுடன் இருந்த நேரத்தில் அறிந்து கொண்டாள், இப்படியாக அவள் தன் கடந்து காலத்தை நினைத்து எண்ணிக் கொண்டிருக்க, அங்கு அவனது கணவனை ஒட்டு மொத்தமாக உலகத்தை விட்டு அனுப்புவதற்காக சில கயவர்களால் திட்டம் தீட்டப்பட்டுக் கொண்டிருந்தது…

