Loading

அத்தியாயம்-7

முகிலினங்கள் வான் மேகத்திற்குள் தங்களை மறைத்து ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்க, சுற்றிலும் டூலிப் மலர்கள் தங்கள் வண்ண வண்ண இதழ்களால் நிலத்தை வண்ணமயமாக்க, அந்த டூலிப் மலர்களுக்கு நடுவே அவள் உடுத்தியிருந்த ஸ்லீவ் லஸ் மேக்ஸி உடையை காற்று அதன் போக்கில் இழுக்க,

சில்லென்ற காற்று உடலுக்குள் ஊடுருவி மேனியில் நடுக்கத்தை விளைவிக்க, கைகளை விரித்து, சிப்பி இமைகளை மூடி, கன்னக்குழியுடன் விரித்துவிட்ட கூந்தல் காற்றில் தவழ நின்றிருந்தவள் குளிர் காற்றினால், கைகளை மடக்கி மார்பின் குறுக்கே கட்டியவளை, பின்னிருந்து அவன் அணிந்திருந்த ஜெர்க்கினுள் சேர்த்து அணைத்திருந்தான் ஒருவன்.

ஆறடி உயரமும், காற்றில் ஆடும் சிகையும், உடற்பயிற்சி செய்து முறுக்கேறிய உடம்பும் அவன் அவளை அணைத்ததில் அவனுடன் ஒன்றிய அவளது முதுகுப்புரமும், அவன் அளவாக திருத்தப்பட்ட மீசை அவள் கழுத்தில் குறுகுறுப்பூட்ட, குளிர் காற்றில் சில்லிட்டிருந்த அவள் மேனி அவனின் செயலால் சூடேறியது.

ம்ம்ம் என்று முனகியவள் முன்னே திரும்பி அவன் அகன்ற மார்பில் தன் மலர் கைகளால் குத்தினாள். பின் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் …

பார்த்தவள் “அம்மு…” என்று அடித்துப் பிடித்துக் கொண்டு வேகமாக எழுந்தாள்.

“ஐயோ என்ன இது பகல்ல தான் அவரோட ஞாபகமா இருக்குன்னா, இப்போ கனவுலயும் அவரு தானா” என்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள்.

அருகிலிருந்த போன் ஒலியெழுப்பி அவள் சிந்தனையைக் கலைக்க, அதில் ஒளிர்ந்த வனிதாவின் பெயரைக் கண்டவள்,

“ஹா… வனிதா, எழுந்துட்டேன் டி” என்றாள்.

“ம்ம் சரி நேத்ரா, உன்னை எழுப்ப தான் கால் பண்ணேன், சீக்கிரமா கிளம்பி இன்டெர்வியூக்கு வந்துடு, லேட் பண்ணீடாத டி ப்ளீஸ், நீ இன்டெர்வியூ முடிச்சிட்டு எனக்கு கால் பண்ணு, ஆல் தி பெஸ்ட் டி பை ” என்றவள்

“என்னடி சத்தத்தையே காணோம் இருக்கியா” எனவும்

“ம்ம்ம் இருக்கேன், தேங்க்ஸ் வனிதா, நான் கரெக்ட் டைமுக்கு வந்துடுறேன்” என்றவள் வேகமாக படுக்கையிலிருந்து எழுந்து குளிக்கச் சென்றாள்.

குளித்து முடித்து இளமஞ்சள் சுடிதாரில் உயரக் கட்டிய போனிட்டெய்லுடன் மாடர்ன் தேவதை போல் கிளம்பி வந்தவளை,

“என்ன குட்டி பிசாசு இன்டெர்வியூவுக்கு ப்ரீபேர் பண்ணீட்டியா? இல்ல சும்மா டைம் பாஸுக்காக இன்டெர்வியூ போறியா” என்று

மேஜையில் அமர்ந்து காலை உணவை உண்டு கொண்டிருந்த நந்தன் வம்புக்கு இழுக்கவும்.

“அம்மா பாருங்கம்மா…” என்று ரேணுகாவை அழைத்தாள் நேத்ரா.

“டேய் நீ சும்மா இரு டா, பாவம் புள்ள நைட் பூராம் படிச்சுக்கிட்டு இருந்துச்சு” என்றார்.

“என்ன நைட் பூராம் படிச்சாளா, நம்புற மாதிரி இல்லையே” என்றவன் எழுந்து வந்து நேத்ராவின் பின் தலையை தொட்டு அங்கும் இங்கும் திருப்பிப் பார்த்தவனை,

“டேய் நெட்டை குரங்கு என்ன டா பண்ற… விடுடா” என்று விலகி நின்றாவள் சிலும்பியிருந்த முடிகளை நேராக எடுத்துவிட்டாள்.

“இல்லை… நைட் புல்லா படிச்சன்னு அம்மா சொன்னாங்க, அதான் பின்னாடி எதாவது ஒளிவட்டம் தெரியுதான்னு பாத்தேன்” என்றான் கண்களால் நேத்ராவின் பின் மண்டையை நோட்டமிட்டவாறு,

மீண்டும் “அம்ம்ம்ம்மா…” என்று அழுத்தமாக கத்தியவளை,

“டேய் நந்தா அவளே டென்ஷனா இருக்கா, அவளை ஏன் டா வம்பு பண்ற” என்ற ரேணுகாவிடம்

“சரி சரி சீக்கிரம் கிளம்ப சொல்லு, நானே கொண்டு போயி விட்டுடறேன்” என்றான் நந்தன்.

பின் சீக்கிரம் உணவு உண்டு கிளம்பியவளை, அவனுடன் அழைத்துச் சென்றான்.  

போகும் வழியில் அந்த நிறுவனத்தின் முகவரியைக் கேட்டவன், ஒரு நொடி பிரேக் இட்டு நேத்ராவைத் திரும்பிப் பார்த்தான்.

அவள் ‘என்ன’ என்பது போல் தலையை ஆட்டவும், ‘ஒன்றுமில்லை’ என்றவன் நேராக அந்த நிறுவனத்தின் வாயிலில் வந்து நிறுத்தினான். 

வண்டியிலிருந்து இறங்கி வந்தவளை “இங்க தான் வனிதா வேலை பாக்குறாளா” என்றான்.

“ஆமாண்ணா ஏன்?” என்றாள் நேத்ரா.

“இல்லை இந்த கம்பெனி யாரோடதுன்னு உனக்கு தெரியுமா” என்றான் சீரியசாக.

அவளும் சீரியசாக முகத்தை வைத்தவள் நந்தன் அருகில் வந்து “ஏண்ணா… உனக்கு தெரிஞ்சவங்க கம்பெனியா இது? ஐயோ ரொம்ப நல்லதா போச்சு, ப்ளீஸ் ணா நீயே இந்த இண்டெர்வியூ எல்லாம் இல்லாம, ஏதாவது பேசி வேலை வாங்கிக்கொடேன், காலம் முழுக்க உன்னை அண்ணான்னு மட்டும் தான் கூப்பிடுவேன்” என்றாள் கண்களை உருட்டி.

“கொழுப்பு… என்றவன் சரி எதாவது எமெர்ஜென்சின்னா கால் பண்ணு, ஆல் தி பெஸ்ட்” என்றவனுக்கு நன்றி உரைத்து உள்ளே சென்றாள் நேத்ரா.       

உள்ளே சென்றவள் நேராக ரிசெப்சனில் அமர்ந்திருந்த பெண்ணிடம் சென்றாள்.

“எக்ஸ்கியூஸ் மீ, ஐ கேம் ஹியர் போர் அன் இன்டெர்வியூ, மே ஐ நோ வேர் இட்ஸ் கோயிங் ஆன்?” என்றாள்.

“சுயர், மேம் மே ஐ நோ யுவர் குட் நேம் ப்ளீஸ்” என்ற அந்த ரிசெப்சன் பெண்ணிடம்

“நேத்ரா, நேத்ரா ஈஸ்வரமூர்த்தி” என்றாள்.  

“எஸ் மேம்…” என்று அப்பெண் இன்டெர்வியூ நடக்கும் இடத்திற்கு வழியைக் கூறியவுடன் அப்பெண்ணிற்கு நன்றியுரைத்துவிட்டு இன்டெர்வியூ நடக்கும் இடத்திற்கு நடந்தாள்.

இன்டெர்வியூ நடக்கும் அறைக்கு முன்னே வந்தவள், அவளுக்கு முன்பே பத்து பேர் அங்கே அமர்ந்திருப்பதைப் பார்த்தாள்.

“என்ன நாமளே சரியான நேரத்துக்கு தான் வந்திருக்கோம் இங்க நமக்கு முன்னாடி இதனை பேரு உக்காந்திருக்காங்க, நமக்கு வேலை கிடைச்ச மாதிரி தான், ரொம்ப சின்சியர் சிகாமணிகளா இருப்பாங்க போலயே” என்று நினைத்தவள் அங்கு போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்தாள்.

“இந்த இன்டெர்வியூலாம் எவன் தான் கண்டுபிடிச்சானோ தெரியலை, இங்க உக்காந்திருக்கவங்கள்லாம் பாத்தா ரொம்ப தைரியமா இருக்க மாதிரி இருக்கு, நாம மட்டும் தான் பயப்படுறோமா?” என்று தன்னுள் பேசியவள்,   

அவளுக்கு முன்னே அமர்ந்தவர்கள் உள்ளே அழைக்கப்பட உள்ளங்கை வியர்த்து வடிய பதட்டமாக அமர்ந்திருந்தாள் நேத்ரா.

உள்ளே நான்கைந்து பேர் அழைக்கப்பட அடுத்த ஆளாக “நேத்ரா ஈஸ்வரமூர்த்தி” என்ற பெயர் அழைக்கப்பட்டது.

நிதானமாக எழுந்தவள் ஆழ மூச்செடுத்து விட்டு, கிரே நிற பெயர் பலகையில் கருப்பு நிற வண்ண எழுத்துக்கள் மின்ன வினோத் சக்கரவர்த்தி என்ற பெயர் பலகையைத் தாங்கிய அறைக் கதவை திறந்தாள்.

அந்த கனமான கதவை தள்ளியவள் எதிரே கண்டது, அமர்ந்திருந்த இருவரை அதில் ஒருவன் வினோத், மற்றொருவன் நளன்.

இந்தியா கிளம்புவதற்கு முன்பே நளனுக்கு உதவுவதற்காக வினோத்தின் கம்பெனி மூலம் கார்ஜியஸ் கிளாத் ஹவுஸ் சென்னையில் வரபோவதற்கான ஆரம்ப கட்ட வேலையான ப்ரொஜெக்ட்டிற்கு ஆள் எடுக்கும் வேலையை ஆரம்பித்திருந்தனர் இருவரும்.

அதாவது வினோத்தின் கம்பெனி மூலம் இந்த ப்ரொஜெக்ட்டுக்கு ஆள் எடுக்க விளம்பரம் கொடுத்திருந்தனர்.

அதற்க்கு தான் நம் நேத்ரா அப்ளை செய்தது, இந்த விஷயம் வனிதாவுக்கும் தெரியாது. 

எதிரில் இருந்த கம்ப்யூட்டரில் ஏதோ வேகமாக டைப் செய்து கொண்டிருந்த நளனைக் கண்டு ஒருநொடி ஸ்தம்பித்து நின்றாள். 

கதவைத் திறந்தவுடன் நேத்ராவைக் கண்டு கொண்ட வினோத் அவன் இருக்கையிலிருந்து எழுந்து நின்றான்.

“இந்தியா வந்து ரெண்டு நாள் தான் ஆகுது அதுக்குள்ளேயேவா, ஆண்டவா இது என்ன சோதனை, இவனோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்னே தெரியலையே” என்று நேத்ராவையும் நளனையும் பார்த்தவன் அமைதியாக நேத்ராவை வெறித்தான்.

வினோத்தைக் கண்டவுடன் “அண்ணா…” என்று முணுமுணுத்த வார்த்தைகள் வாய்க்குள்ளேயே அடங்கி விட, திருதிருவென விழித்துக்கொண்டு நின்றாள் நேத்ரா.

வினோத் எழுந்தவுடன் அவன் கம்ப்யூட்டரில் டைப் செய்து கொண்டிருந்த நளன் “என்னடா வினோ ஏன் எழுந்துட்ட, பிரேக் எடுக்கணும்மா?” என்றான் அவன் கணினியில் பார்வை பதித்து.

வினோத்திடம் பதில் இல்லாமல் போகவே, நிமிர்ந்து “டேய் என்ன டா…? பிரேக் எடுக்கணும்மா?” என்றவன்,

வினோத்தின் பார்வை சென்ற திசையைத் தானும் நோக்கினான்.

அங்கே நின்றிருந்த நேத்ராவைக் கண்டவனின் கண்கள் கூர்மை பெற, தாடைகள் இறுக, பற்களை நறநறவென்று கடித்தவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு,

டைப் செய்து கொண்டிருந்த விரல்களை நிறுத்தி, இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தவன் “எஸ் கம் இன்” என்றான்.

நளன் என்ன செய்வான் என்று பயந்துகொண்டிருந்த வினோத் அவனது “எஸ் கம் இன்” என்ற வார்த்தையில் மீண்டும் அவன் சேரில் ஸ்லோ மோஷனில் அமர்ந்தான்.

நளனைக் கண்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் கதவருகில் நின்றிருந்த நேத்ரா, திரு திருவென விழித்துக் கொண்டிருக்க, நளனின் “எஸ் கம் இன்” என்ற வார்த்தை அவள் காதுகளில் விழாமல் போனது.  

மீண்டும் அடிக்குரலில் “ஆர் யூ ஹியர் போர் அன் இன்டெர்வியூ?” என்றான் சிம்மக்குரலில்.

இப்போது ஆம் என்று தலையை மேலும் கீழும் ஆட்டியவளை,

“தென் கம் இன்” என்றான் துளைக்கும் பார்வை கொண்டு.

நேத்ரா அவன் முன்னே வந்ததும் கையை நீட்டியவன் அவளிடம் பைலை பெற்றுக் கொண்டவன் “சீட்…” என்றான்.

நடப்பதை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தது ஒரு ஜீவன் அது நம் வினோத்.

நேத்ரா அமர்ந்ததும் பைலைத் திருப்பி பார்த்தவன் “லாஸ்ட் வீக் வேலை பாத்திட்டு இருந்த கம்பெனில இருந்து ஏன் நின்னுட்டீங்க?” என்றான் பைலை பார்த்துக் கொண்டே.

“அது…அது… எனக்கு விருப்பம் இல்லை…, அதாவது பிடிக்கலை” என்றாள் உண்மையை மறைத்து.

“அப்போ இங்கேயும் வேலைக்கு சேந்துட்டு பிடிக்கலைன்னா பாதியில நின்றுவீங்களா?” என்றான் குதர்க்கமாக.

“வேகமாக நோ நோ என்றவள் இல்ல அப்படிலாம் பண்ண மாட்டேன் சார்” என்றாள் அமைதியாக,

பைலை மூடி வைத்துவிட்டு கணினியில் பார்வையைச் செலுத்தியவன், ப்ராஜெக்ட் சம்மந்தமாக சில கேள்விகளை நேத்ராவிடம் கேட்டான் அவன் கணினியை பார்த்துக்கொண்டே,

“கார்ஜியஸ் கிளாத் ஹவுஸ் ப்ரொஜெக்ட்ல வேலை செய்யணும்னா பங்ச்சவாலிட்டி ரொம்ப முக்கியம், அண்ட்… என் கூட அதிக நேரம் இருக்க வேண்டி வரும்” என்றவன் நிறுத்தி அவள் முகம் பார்த்து,

“அதுவும் தனியா” என்றவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தவளிடம், 

“ஐ மீன்… ப்ராஜெக்ட் சம்மந்தமா சைட்டுக்கு போக வேண்டி வரும், தென் உங்களுக்கே தெரியும் இது பாரின் கம்பெனி சோ எல்லாமே எனக்கு பக்காவா இருக்கணும்”

“இதெல்லாம் உங்களால முடியுமா” என்றவனிடம்,

“அப்போ நம்ம ஊரு கம்பெனில பர்பெக்ஷன் தேவையில்லையா? என்று கேட்கத் துடித்த நாவை அடக்கியவள், எஸ் சார் என்னால முடியும்…” என்றாள் நேத்ரா.

“நீங்க இப்போ சரின்னு சொல்லீட்டு அப்புறம் நீங்களே நினைச்சாலும் உங்களால என்கிட்டே இருந்து… சாரி இந்த ப்ரொஜெக்ட்ல இருந்து விலக முடியாது, நல்லா யோசிச்சுக்கோங்க” என்றான் அழுத்தமான பார்வையுடன்,

“இல்லை சார் நான் கண்டிப்பா பண்றேன்” என்றவளை

“தென், வாட்ஸ் யுவர் நேம்?” என்றான்.

எதே என்பது போல் பார்த்து வைத்த வினோத் “டேய் உனக்கே இது ஓவரா இல்ல” என்றான் மனதிற்குள்.

பின் நேத்ரா கொடுத்த பைலை எடுத்து பார்த்த நளன் “நேத்ரா… மிஸ் ஆர் மிஸ்ஸஸ்?” என்றான்.

நேத்ரா அமைதியாக இருக்கவும் அவள் முன் இருமுறை சொடுக்கிட்டவன் பின் அவன் சுழல் நாற்காலியில் நன்றாக பின்னே சாய்ந்து, கால்களை குறுக்கிட்டு அமர்ந்து கொண்டவன்,

“ஐ ஆம் ஆஸ்கிங் யூ… மிஸ் ஆர் மிஸ்ஸஸ்?” என்றான் மீண்டும் துளைக்கும் பார்வையுடன்.

வார்த்தை வெளி வராமல் “மிஸ்ஸஸ்…” என்றவளை

“ஆஹ் கேக்கலை…” என்றவன் அவன் வலக்கையைக் காதுக்கு கொடுக்க,

 “மிஸ்ஸஸ்” என்றாள் மீண்டும் சற்று அழுத்தமாக,

“மிஸ்ஸஸ் வாட்…”என்று அவன் மேஜையில் கைவைத்து சற்று முன்னே வந்து அடிக்குரலில் கர்ஜித்தவனிடம்,  

கண்களில் கண்ணீர் குளம் கட்டியிருக்க, இந்த அறையிலிருந்து வெளியேறிச் சென்றால் போதும் என்ற தொனியில் இருந்தவள்,

எழுந்து நின்று அவன் முகத்தை நேராக பார்த்து “மிஸ்ஸஸ் நேத்ரா… மிஸ்ஸஸ் நேத்ரா நளன்” என்று சத்தமாகக் கத்தியவள், அந்த இடத்தை விட்டு வெளியேற நினைத்து, பின்னால் நகர்ந்தாள்.

மீண்டும் சொடுக்கிட்டவன் “ஹலோ மிஸ்ஸஸ் நேத்ரா நளன், யுவர் பைல்” என்றவன் பைலை அவளிடம் கொடுத்துவிட்டு,

“சீ யூ சூன், வி வில் கால் யூ பாக்” என்றான் நளன்.

நேத்ரா அவள் பைலை வாங்கிக் கொண்டு வெளியே சென்றவுடன், நளன் அவன் கால்கள் இரண்டையும் டேபிள் மேல் தூக்கி வைத்தவன், கைகளை மடக்கி அவன் தலைக்கு பின்னே கொடுத்து ஆழ மூச்செடுத்து கண்களை மூடினான், சிரிப்புடன்.

“டேய் என்னடா நடக்குது இங்க, நீ என்ன பண்ண போறியோன்னு நான் பயந்துகிட்டு இருந்தா, நீ இவ்வளவு கூலா பேசீட்டு இருக்க, சிரிக்க வேற செய்யுற” என்றான் வினோத் நளனின் முகத்தைப் பார்த்து.

“தெரியலை வினோ, என்னோட ஹனிய பாக்குறதுக்கு முன்னாடி வரைக்கும் கோபமா தான் இருந்தேன், ஏன் அவள் கூட பேசும் போது கூட கோபமா தான் இருந்தேன்,

ஆனா அவள் என்கூட இருந்த இந்த நிமிடங்கள் என்னையும் அறியாம எனக்கு சந்தோஷத்தை கொடுக்குது, அவளை என் கூடவே இருக்க வைக்கனுன்னு தோணுது” என்று கண்களை மூடி விரிந்த புன்னகையுடன் ஆழ்ந்து அனுபவித்துப் பேசியவன். 

சரி இதுக்கு மேல என்னால இங்க இருந்து இன்டெர்வியூ கண்டெக்ட் பண்ண முடியாது, நான் கிளம்புறேன், நீயே கவனிச்சுக்கோ” என்றவன் அறையை விட்டு வெளியேறியிருந்தான்.

 

“உன் கன்னக்குழியில் வீழ்ந்து

 

மூழ்க நினைத்த நான்…

 

உன் கரம் கோர்த்து

 

முடிவில்லா தூரம்

 

நடக்க நினைத்த நான்…

 

உன் அண்மையில்

 

எனக்குள் இருக்கும் மென்மையை

 

உணரும் நான்…

 

இப்போது நீ என் முன்னே வருகையில்

 

என்ன உணர்கிறேன் நான்…?”

 

இந்த நாவலை ஆடியோ வடிவில் நீங்கள் கேட்க விரும்பினால் உங்களுக்காக லிங்க் https://www.youtube.com/@SofiRanjithNovels

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்