Loading

எனதழகா – 59 ❤️

“யோவ் “என்று அர்ஜுனும், ஆகாஷும் ஒரு சேர கூவ, அதிர்ந்து திரும்பினர் தாஸும், தாமரையும்.

“ஏன்டா வராத நெஞ்சு வலியை கூட கத்தி வர வைச்சுருவீங்க போல ” என்று நெஞ்சை நீவிக் கொண்டே தாமரைக் கேட்டார்.

“ஆமாம் மம்மி, என்ன வளத்திருக்க உன் புருஷனை ….. கொஞ்சம் கூட ப்ரைன் இல்லாம ? ” என்று ஆகாஷ் தாமரையின் தோளில் கை போட்டு கேட்டான்.

“ஏன்டா ” என்று சீரியஸாக கேட்டார் தாமரை.

அர்ஜுன்”இப்படி லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்காரு. இவரு பேசித் பேசித் தான் காளியாத்தாவுக்கு முடியாம போச்சோ “

ஆகாஷ் “இருக்கும் டா அர்ஜுன் “

“டேய் ஒரு அளவுக்கு தான் நானும் கோரஸ் பாடுவேன். கிளம்பு மொத ” என்று தாமரை இருவரின் காதை திருகி வெளியில் தள்ளினார். அவர்கள் வெளியே சென்றவுடன் காவ்யாவும், ரியாவும் உள்ளே வந்தனர்.

அவர்கள் இருவரையும் ஒரு சேர பார்த்தவுடன் தாஸ் மற்றும் தாமரைக்கு கண்களில் முத்து பிறந்தது. தன் வயிற்றில் சுமந்ததால், அவரின் வயிற்றுக்குள் ஒரு கணம் தோன்றியது. அதே போல், மார்ப்பில் போட்டு சீராட்டி வளர்த்தவருக்கு நெஞ்சில் பாரம் கூடியது.

என்றும் பிள்ளைகள் முன்பு , தாமரையின் அருகில் கூட செல்லாதவர், இன்று என்ன செய்தததோ , அவர்கள் அருகில் வர வர தாமரையின் கைகளை இறுக்கி பிடித்தார்.

ஒரு நிமிடம் அதிர்ந்து திரும்பிய தாமரை, தாஸின் உணர்வுகளை புரிந்து அமைதியாக நின்றாலும், பிள்ளைகள் முன்பு என்பதால் நெளிந்து கொண்டே இருந்தார்.

காவ்யா கமுக்கமாக சிரிக்க, ரியாவும் சிரிப்பை அடக்க, பின்னிருந்து “அவளும் பெண் தானே அவளுக்கும் அச்சம்,மடம், நாணம், பயிர்ப்பு இருக்கத்தான செய்யும் ” என்று ஆதிரா கூற,

ஆகாஷ் “தகப்பா, பிள்ளைங்க முன்னாடி என்ன ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்க ? பிள்ளைகளைப் பார்த்துக் கண்ணீர் விட சொன்னா , மம்மியைப் பார்த்து ஹார்டின் விட்டுட்டு இருக்க ? யூ
ப்ளடி ? ” என்று அவனும் அவன் பங்கிற்கு வாரினான்.

அதன் பின்பே உணர்ந்த தாஸ்,  “டேய் யூவர்ஸ் மம்மி முன் மை உய்ப்பூ ” என்று கூறி, கையை விடுத்து தோளில் கை வைத்தார். அதில் தாமரைக்கு சாயம் பூசாமலேயே கன்னம் சிவந்தது. அதற்கும் பிள்ளைகள் அனைவரும் வார, அனைவரையும் அதட்டி ராதே தான், தாமரையை அழைத்துச் சென்றார்.

பின்பு, தாஸ் மற்றும் காவ்யாவை விடுத்து, மற்ற அனைவரும் வெளியில் வந்தனர். வந்தவர்களை வெற்று ஹாலே வரவேற்றது.

ஆகாஷ் தான் ராதேயிடம் வினவலாம் என்று சமையலறைக்கு செல்ல, அங்கு மணக்கும்  கறிக்கொழம்பும், தவாவில் பொறியும் மீனும், எண்ணெய்யில் கொப்பளிக்கும் கோழியும் அனைத்தையும் மறக்கச் செய்தது.

நாசியில் மணத்தை உள்வாங்கி உச்சந்தலைக்கு செலுத்தி கொண்டே உள்ளே வந்தவனை பின்னே தள்ளி ரியாவும் அதே போல் செய்து கொண்டே உள்ளே வந்தாள்.

அவளின் ஒரு கையை பிடித்து ஆகாஷ் இழுக்க, அதே நேரம் மறுகையை அபி பிடித்து இழுத்து கொண்டான். திரும்பி இருவரையும் பார்க்க, ஒரு சேர தலையை இடவலமாக ஆட்ட, “ஆமாம், இதுல மட்டும் ஒற்றுமையா இருங்கடா ” என்று முணுமுணுத்து கொண்டே மறுபடியும் உள்ளே சென்றாள். 

ஆகாஷ் அவளின் நடு உச்சியில் கைவைத்து பின்னே திருப்ப , “என்னடா, வாசனையை வாங்குன கூட உயிர் போயிடுமா ? “என்று ஏகத்துக்கும் முறைத்துக் கொண்டே கேட்க, அபிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. ஆனால் ஆகாஷ்”காளியாத்தா  என்ன சென்டிமென்டலா பேசி முழுங்கலாம்னு பாக்குறியா? போ போ …. “என்று கூறி, பிடரியில் அடித்து தள்ள, “ஹி ஹி…. கண்டுபிடிச்சுட்டியா பாண்டா ” என்று கூறி சிரித்தாள்.

ஒரு நிமிடம் அபியுடன் ராதே, தாமரை, இந்தரின் மனைவி அனைவருக்கும் அவளின் பேச்சு சங்கடத்தை உண்டாகியது. ஆனால், ஆகாஷின் பேச்சும், ரியாவின் மறுமொழியும் அனைவரையும் திகைக்க வைத்தது. அவள் வெளியில் செல்ல, ” லவ் பண்ணா மட்டும் போதாது… அவளை பத்தி தெரிஞ்சு வச்சிருக்கனும் ” என்று காலரை தூக்கி விட்டு சென்றான்.

“டேய் பாண்டா, அப்போ போய் அஞ்சலிக்கிட்ட உன் லவ்வ சொல்லு முதல . பாக்காமலே இத்தனை நாளும் சின்ன பிள்ளை ஃபோட்டோவோட சுத்திக்கிட்டு இருந்தல ” என்று அஞ்சலியின் காது படவே கூறிவிட்டு சென்றாள்.

ஒரு நிமிடம் அஞ்சலிக்கு அதிர்ச்சியாகவும்  ஆகாஷிற்கு அவஸ்தையாகவும் இருந்தது. அங்கிருந்து அவன் நழுவ பார்க்க, அபி அவன் முன் நின்று “லவ் பண்ணா மட்டும் போதாது… சொல்ல தைரியமும் வேணும் என் டொம்மேட்டோ” என்று கூற,

“எவனும் லவ்வ சொல்ல வேணாம். எல்லாரும் மேலே வாங்க ” என்று சொல்லி அர்ஜுன் திரும்ப , நிவான் ரியாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அர்ஜுன் யோசனையுடன் பார்க்க, அதே சமயம் ஆருஷி மேலிருந்து கை தவறி விழுவது போல் பூச்சாடியை அவனின் காலில் விழ வைத்தாள். ஒரு நிமிடம் துடித்து விட்டான். அதிர்ந்து மேலே பார்க்க “சாரி ” என்று முணுமுணுத்து கொண்டே சென்று விட்டாள்.

பின்பு, அபி, நிவான், அஞ்சலி, ஆதிரா, ரியா, ஆகாஷ் மற்றும் ஆருஷி அர்ஜுனுடன் ஒரு அறைக்கு சென்றனர். அங்கு ஏற்கனவே இளங்கோ, தீனா, குணா, வசுதேவர், கேசவர், அனு, இந்தர், ராகுல், ரோஹித் அமர்ந்திருந்தனர்.

தீனாவை எவ்வளவு கேள்வி கேட்டும், பதில் வரவேயில்லை . இளங்கோவும் , குணாவும் தான் பதிலளித்து கொண்டிருந்தனர். இதைக் கண்டு வீடியோ காலின் மூலம் பார்த்துக் கொண்டிருந்த  லெனின் தான் பொறுமையிழந்து அர்ஜீனிற்கு அழைத்து அனைவரையும் உள்ளே வர வைத்தார். ஈஸ்வரியும் அந்தப் பொழுது உள்ளே நுழைந்தார்.

மெதுவாக  உள்ளே நுழைந்தவர் இளங்கோவிடம் மட்டும்  தனியாக ஒரு போட்டோவை காண்பித்தார். அதை அருகில் அமர்ந்திருந்த குணாவும், தீனாவும் கண்டனர். அதை கண்டு வெகுண்டு எழுந்தவர் குணாவை அடிக்க பாய்ந்தார். ஆருஷி தான் நடுவில் வந்து நின்றாள். வேறு எவரும் அருகில் கூட வரவில்லை. அதை சில நொடிகளுக்கு பின்னரே உணர்ந்தாள். ஏன் மீராக் கூட அமைதியாக அமர்ந்து வேடிக்கை தான் பார்த்தார்.

தன் அன்னை தனக்கு உதவ மாட்டார் என்று புரிந்து, அபி மற்றும் நிவாளைக் கண்டாள். நிவான் கைக்கட்டி எந்தவொரு எதிர்வினையும் முகத்தில் காட்டாமல் நிற்க, அபிக்கு தான இரு தலை கொள்ளி எறும்பாக துடித்துக் கொண்டிருந்தான்.

நிவானிற்கு பயந்து , ஆருஷியிடம் கண்களாலேயே கெஞ்ச, வேறு வழியில்லாமல் சோர்ந்து  தலையை தாழ்த்தினாள். அதை தனக்கு சாதகமாக நினைத்து கொண்டு, நிவான் அவளின் அருகில் வந்து தோளோடு சேர்த்து அவளை அழைத்துச செல்ல,குணா  துடித்து நிவானின் கையைப் பிடித்தார்.

அதில்  நிவான் திரும்பி, அவளின் இடையை இறுகப்பற்றி அவர்களின் காதலை பறைச்சாற்றினான். அதில் வெகுண்டவர் “இதுக்கு தான் உன்னையும் போட்டு தள்ளணும்னு நினைச்சேன். ஒன்னு இல்லாத பய ….. ? ” என்று அவர்  கூறி முடிப்பதற்குள், தீனா குணாவின் கன்னத்தில் பதம் பார்த்து விட்டார்.

அதில் இன்னும் வெறியாகி நிற்க , அவனை மறுபடியும் மறுபடியும் அடித்து மயங்க செய்தார் தீனா. பின்பு, அவரின் சட்டையிலேயே ஒரு ஊசி மற்றும் மருந்தை எடுத்து அவரின் உள்ளே செலுத்தினார். அதற்கும் யாரும் வினா எழுப்பவில்லை. பின்பு, அவரை கட்டி போட்டு விட்டு, அனுவை பார்க்க, அவளின் கன்னை முன்பு வைத்து, குணாவின் முன்பு அமர்ந்தாள்.

பின்பு, தீனா அங்கிருந்த ஆதிராவை அழைத்து “பசிக்குது சாப்பிட எதாச்சும் எடுத்துட்டு வா ” என்று கூறியவுடன், அவரை ஏற இறங்க பார்த்தாள். அதைக் கண்ட தீனா, “என்ன? ” .

“இல்லை, நீங்க பண்ணத பார்த்துக் கிளைமேக்ஸ் வரப்போகுதுனு நினைச்சேன். அதான் பரபரப்பா இருக்கீங்க. முக்கிய வில்லனை கைப்பற்றி ஹீரோ போஸ்ட்டுக்கலாம் வந்திருக்கீங்கனு நெனைச்சேன் ” என்று ஆதிரா கூற கூற ,

அர்ஜுன் தலையில் அடித்துக் கொள்ள, தீனா “அதுக்கு பசிக்காதா ? கிச்சனுக்கு போய் சாம்பில் பாக்குறேன் எல்லாம் ஒரு ரவுண்ட் முடிச்சுட்டு தான வர்றீங்க. அப்பறம் என்ன? ” என்று கூறியவுடன், ஆதிரா சிரித்துக் கொண்டே சென்றுவிட்டாள்.

பின்பு அனு குணாவை தண்ணீர் தெளித்து எழுப்பினாள். கண்கள் மங்கலாக தெரிய, நொடிகள் செல்ல செல்லவே அவருக்கு புலப்பட்டது. கண்களை இறுக மூடி மூடி ஓரிருமுறை திறந்த பின்னரே மங்கலான ஒளி தெளிவான வெளிச்சமாக மாறியது.

பின்பு , சற்று ஆசுவாசப்பட்டு நன்கு உற்று பார்த்தார் தன் முன் இருப்பவரை. புருவ இடுக்கில் நெற்றியை சுருக்கி விட்டதில், அவர் யோசனையில் இருக்கிறார் என்று புலப்பட்டது. சிறிது நேரம் உற்று நோக்கியபடியே இருந்தவர் அனுவைப் பார்த்து “ராதே ………. ரா…… ராதே மகளா நீ “என்று கேட்டார்.

அனைவரும் அதிர்ந்து பார்க்க, ஆகாஷ் தான் ” போச்சு, உண்மையா வாங்குறேனு மறக்க வச்சுட்டாங்கய்ய ……. இனி என்ன பண்ணறது ? ” என்று தலையில் கைவைக்க, அர்ஜுனும் எரிச்சல்பட்டான். ஆதிரா அர்ஜுனின் தோளில் கைவைத்து “நான் இருக்கேன் ” என்று சைகையில் காண்பித்து  விட்டு குணாவிடம் சென்று ஃபிரண்டஸ் படத்தில்  ” நான் பாஸ் நேசமணி, இவன் கிச்சுன மூர்த்தி, நீ கோபாலு லேபர் “கூறுவது போல் “இவரு மாமா வசுதேவர், இவர் கேசவரு , நீ வெங்கடேஷன் மருமயன் ” என்று கூற , அர்ஜுன் இம்முறை வெளியாகி அவளை அடிக்க பாய்வதற்குள், குண வெங்கடேஷன் கன்னத்தில் ஒரு அறை விட்டார்.

நொடி பொழுதில் அனு அவரின் கன்னத்தில் அறைந்து விட்டு அவரின் முன் சில காகிதங்களை அவர் முன் விட்டெறிந்தார். அதை பார்த்து படபடத்து வியர்த்து விட்டது குணாவிற்கு . அதற்குள் அவரின் கன்னத்தில் பளார் பளார் என அறைந்தார். அதிர்ந்து பார்க்க , அங்கு ருத்ர மூர்த்தியாக நின்று கொண்டிருந்தார்கள் அர்ஜுன் மற்றும் அனு .

கீர்த்தி ☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்