Loading

வணக்கம் மக்களே வாங்க கதைக்குள்ள போகலாம் ………..

 

                                      அஞ்சு  பேரும் காட்டுக்குள்ள  போய்ட்டு இருக்காங்க ………………..

இன்பா : இன்னும் எவ்ளோ தூரம் பா

முகில் : கிட்ட வந்துட்டோம் கொஞ்ச தூரம் தான்

ரகு : இதை தான் ரொம்ப நேரமா சொல்ற

முகில் : அவ்ளோ தான் வந்தாச்சு

இன்பா : வாவ் ……………..ரொம்ப அழகா இருக்கு

இனியன் : எவ்ளோ அழகா இருக்கு …………..

ரகு: சூப்பர் ஆனா கொஞ்சம் பாழடைஞ்சு இருக்கு

முகில் : இந்த பக்கம் யாருமே வரமாட்டாங்க …………அப்போ இப்படி தான் இருக்கும்

அஞ்சலி : இறக்கி விடுங்க

முகில் : இறக்கி விடணுமா

அஞ்சலி : 😠😠😠😠

முகில் : சரி சரி ………..

                   முகில் அஞ்சலியை இறக்கி விட்டான் ………………

இன்பா : நம்ப இந்த அரண்மனைக்குள போய்யா தங்குறது

முகில் : ஏன் மா

இனியன் : ஹே இந்த இடத்துல டென்ட் போட்டுக்கலாம்

அஞ்சலி : ஹான் போட்டுக்கலாம் ராத்திரி நேரம் இங்க இருந்து பாக்குறப்போ அங்க என்ன நடந்தாலும் நல்ல தெரியும்

முகில் : ம்ம்ம்………..அப்போ வாங்க டென்ட் ரெடி பண்ணலாம்

                 எல்லாரும் சேர்ந்து டென்ட் போட்டாங்க …………..

இன்பா : போட்டாச்சு…………..ரெண்டு டென்ட்

முகில் : சரி கொஞ்ச நேரம் ஓய்வு எடுங்க

இனியன் : ம்ம்ம்ம் …………

                        இவங்க வந்தது இவ்ளோ நேரம் இவங்க பண்ணதுலாம் ஒரு உருவம் பாத்துட்டு இருந்துச்சு …………………….அது இப்போ வேகமா அந்த கருப்பு உருவம் கிட்ட போச்சு …………….

உருவம் 1: குரு அவங்க வந்துட்டாங்க

கருப்பு உருவம் : தெரியும்

உருவம் 1 : எப்படி

கருப்பு  உருவம்  : இந்த காட்டுக்குள்ள ஒரு சின்ன எறும்பு வந்தாலும் எனக்கு தெரியும்

உருவம் 1: இப்போ நம்ப என்ன பண்ணனும்

கருப்பு உருவம் : இவங்க எனக்கு வேண்டியவங்க இவங்கள ஒன்னும் பண்ண கூடாது என்னோட எதிரி இன்னும் வரல அவனை தான் நம்ப கொல்லனும்

உருவம் 1 : சரி குருவே

                          கொஞ்ச நேரம் எல்லாரும் தூங்கிட்டாங்க …………..முகில் தான் முதல எழுந்தான் …………..

முகில் : இனியன் ………..இனியன்………

இனியன் : ஹான்

முகில்: எழுந்திருங்க

ரகு: ஏன் பா அதுக்குள்ள எழுப்புர

முகில்: அந்த அரண்மனைக்குள்ள போக வேணாமா

இனியன் : போகணும்

முகில் : அதுக்கு தான்

                        இவங்க மூணு பேரும் டென்ட் விட்டு வெளிய வந்தாங்க …………..

முகில் : இவங்க இன்னும் எழுந்திரிகள போல

                       இன்பா அப்போ தான் வந்தா ………..

முகில் : அவ எங்க மா

இன்பா : இன்னும் எழுந்திரிகள

முகில் : அப்போ  எழுப்பிடலாம்

                     டென்ட்க்குல போனான் ………

ரகு : போச்சு அவ கத்த போறா

இன்பா : ஏன்

ரகு : அவளுக்கு தூங்கறப்போ எழுப்புனா பிடிக்காது

இன்பா : ஓஓ

முகில் : அஞ்சலி

அஞ்சலி :😴😴😴😴

முகில் : அஞ்சு

அஞ்சலி : 😴😴😴😴

முகில் : அஞ்சுமா ………….

அஞ்சலி : அச்சோ என்ன …………….(திட்ட வாய் திறந்தா இவனை பார்த்துட்டு நிறுத்திட்டா )

முகில் : என்ன டி திட்ட போறியா

அஞ்சலி : இப்போ எதுக்கு என்ன எழுப்புனீங்க

முகில் : அரண்மனைக்குள்ள போகணும் அதுக்கு தான்

அஞ்சலி : இப்போவேவா

முகில் : ஆமா

அஞ்சலி : சரி வரேன் போங்க

                முகில் வெளிய வந்தான் ………..

ரகு : அவ திட்டுனால

முகில் : இல்லையே

ரகு : இல்லையா

முகில் : ம்ம்ம்

                      அஞ்சலி வெளிய வந்த ……………….முகம் கழுவிட்டு இவங்க கூட வந்து சேர்ந்துட்டா ……………..

இனியன் : சரி போலாமா

அஞ்சலி : ரொம்ப இருட்டா இருக்கே

                   எல்லாரும் ஒரு டார்ச் எடுத்துகிட்டாங்க ……………..

முகில் : நம்ப மூணு பேரும் இந்த பக்கம் போகலாம் ……….நீங்க ரெண்டு பேரும் இந்த பக்கம் போங்க …………..

இனியன் : ஒரு சின்ன மாற்றம்

முகில் ; சொல்லு பா

இனியன் :பொண்ணுகளை தனியா அனுப்ப வேண்டாம் ………….

முகில் : அப்டினா சரி நானும் அஞ்சலியும் இந்த பக்கம் போகுறோம் …………நீங்க இன்பா ரகு இந்த பக்கம் போங்க …………….

ரகு : அது ஏன் நீங்களும் அஞ்சலியும் தான் போகணுமா

முகில் : ஆமா

                      அஞ்சலியை இழுத்துட்டே போய்ட்டான் ……………..

இன்பா : இவங்களுக்குள்ள என்னமோ இருக்கு

இனியன் : ஆமா

ரகு : சரி வாங்க நம்ப இந்த பக்கம் போலாம் ………….

                 ரெண்டு ஆளுக்கு ஒரு சைடு போனாங்க ……………….

அஞ்சலி : இப்படியா இழுத்துட்டு வருவீங்க

முகில் : ஆமா

அஞ்சலி : என்ன ஆமா

முகில் : ஆமானா ஆமா தான்

அஞ்சலி : ரொம்ப ஓவரா போறீங்க

முகில் : அப்டியா

அஞ்சலி : ஆமா

                   அவளை இவன் கிட்ட இழுத்தான் ………

அஞ்சலி : என்ன பண்றேங்க …….

முகில் : பார்த்தா தெரில

அஞ்சலி : இப்படியா நடந்துக்குவீங்க தள்ளுங்க …………

முகில் : உன் கனவுல நான் வந்தேன் தான

அஞ்சலி : அப்படி ……..அப்படிலாம் இல்லை …………

முகில் : பொய் சொல்லாத

அஞ்சலி : ……………..

முகில் : உன்னை முதல் தடவை பார்தபோவே நான் பாக்குற மாறி தான் நீயும் என்னை பார்த்த ……………அப்போவே புரிஞ்சுக்கிட்டேன்

அஞ்சலி : ………………

முகில் : சொல்லு

அஞ்சலி : ஆமா …………

முகில் : எனக்கும் வந்த

அஞ்சலி : ஆனா நீங்க இப்படி இல்லை பாக்க

முகில் : தெரியும் ராஜாகாலத்துல இருந்த மாறி இருந்தோம்

அஞ்சலி : ஆமா

ரகு : ஹான் ………………

அஞ்சலி : நீங்கல்லாம் எப்போ வந்திங்க …………..

இனியன் : ராஜாகாலத்து பத்தி பேசும் போதே வந்துட்டோம்

அஞ்சலி :அது …………..வந்து …………..

இன்பா : சொல்லு மா

அஞ்சலி : எனக்கு கொஞ்ச நாளாவே நான் ராஜாகாலத்துல இருந்த மாறி கனவு வருது

இனியன் : அப்டியா

அஞ்சலி : ஆமா பா

இன்பா : உங்களுக்கு எப்படி வருது

முகில் : எனக்கும் அதே தான் நிறைய பேரு வருவாங்க ஆனா அவங்க முகம் ஞாபகம் இல்லை இவளோட முகம் மட்டும் தான் ஞாபகம் இருக்கு

அஞ்சலி : எனக்கும் ……………

இன்பா : அது எப்படி ரெண்டு பேத்துக்கும் ஒரே மாறி

முகில் : தெரிலயே நான் இவளை முதல் தடவை பார்த்தப்பவே கண்டுபிடுச்சுட்டேன் …………இவளுக்கு என்னை தெரியுமான்னு சந்தேகம் …………ஆனா இவள் என்ன பார்த்த பார்வையிலேயே புரிஞ்சுக்கிட்டேன் இவளுக்கும் இதே மாறி கனவு வந்துச்சுனு ………………

இனியன் : சூப்பர் போங்க ……………..

முகில் : சரி ஏதாது பார்த்திங்களா

இன்பா : இல்லை பா ஒன்னுமே தெரில

அஞ்சலி : காலைல வந்து பார்க்கலாமா

இன்பா : ஆமா பா

முகில் : சரி இப்போ டென்ட்க்கு போகலாம் நாளைக்கு காலைல வரலாம்

                       இவங்க போறத ஒரு உருவம் அரண்மனைக்குள இருந்து பாக்குது ……………….இவங்கல்லாம் டென்ட்க்கு வந்துட்டாங்க ………………

ரகு : பசிக்குது பா ………

முகில் : என் பைல பழம் இருக்கு எடுத்து சாப்பிடுங்க

ரகு : ஓஹ் இதோ சாப்பிடுறேன் ………..

                        எல்லாரும் எடுத்து வெச்சு சாப்பிட ஆரமிச்சாங்க ……………

அஞ்சலி : நாளைக்கு காலைல போலாம்

முகில் : கண்டிப்பா

                       எல்லாரும் அவங்க அவங்க டென்ட்க்குல போய்ட்டாங்க …………..நம்ப இன்பா புக் படிக்கச் ஆரமிச்சுட்டா……….

                                                                       🧡🧡🧡🧡🧡🧡🧡

 

அடுத்த நாள் காலை ,

 

ராஜா : என்ன தளிர் அகில் சம்மதம் சொல்லிட்டாளா

ராணி : 😠😠😠😠😠

ராஜா : என்னவாயிற்று தளிர்

ராணி : நான் தங்களிடம் முன்பே கூறி இருந்தேன் இது அவள் முடிவு என்னால் எதுவும் செய்ய இயலாது

ராஜா : இவ்வாறு கூறினால் நான் என்ன செய்வது

ராணி : எமக்கு தெரியாது

                        ராணி ராஜாவிடம் சண்டை போட்டுவிட்டு அவர்கள் இடத்திற்கு சென்றுவிட்டார்கள் …………

ராஜா : மாலை ரணதீரன் அகிலை பெண் பார்க்க வருகிறார் ……..அகில் ஏதாது கூறிவிட்டாள் என்ன செய்வது

                ராஜா தனியாக பூலம்பி கொண்டு இருந்தார் ……………..

மாலை நேரம் ,

ராஜா : ரணதீரன் வந்துவிட்டார்

ராணி : ம்ம்ம்

ராஜா : நம் மகளை தயார் ஆகா செய்

ராணி : சரி

                   ராணி அகில தயார் படுத்த சென்றுவிட்டார் …………

ராணி ; அகில்

அகில் : ……….

ராணி : ஏதாவது கூறு அகில்

அகில் ; என்ன கூற வேண்டும் அன்னையே

ராணி : இன்று உன்னை ரண ………..

அகில் : போதும் ……………..

ராணி ; அது ……….

அகில் : நிறுத்துங்கள் அவன் பேரை கூட சொல்லாதீர்கள் ……வெறுப்பாக உள்ளது ……….

ராணி ; ஆனால் நீ அவனை தான் மணந்து கொள்ள வேண்டும்

அகில் : நான் யாரை மணந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம் அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்னை பெற்றவர்களாக இருந்தாலும் சரி

ராணி : ம்ம்ம் உன் பிடிவாதம் ஒரு பக்கம் உன் தந்தையின் பிடிவாதம் மறு பக்கம் நான் என்ன தான் செய்வேன்

அகில் : நீங்கள் ஒன்றும் செய்ய  வேணாம்  காலம் பார்த்து கொள்ளும் …………

ராணி ; நல்லது நடந்தால் சரி தான்

ராஜா : அரசியாரே அகிலை அழைத்து வா

ராணி ; செல்வோமா

                          அகிலை அழைத்து கொண்டு வந்தார் ………….

ராஜா : ரணதீரா என் மகள்

ரணதீரன் : தெரியும் அரசே ……..நான் தங்களின் மகளிடம் சிறிது நேரம் உரையாட வேண்டும்

ராஜா : கண்டிப்பாக அகில் அழைத்து கொண்டு செல்

                   அகில் எழுந்து சென்றால் …………..அவள் பின்னாடியே ரணதீரணும் சென்றான் …………..

அகில் : என்னை பற்றி தங்களுக்கு தெரியாது

ரணதீரன் ; தெரியும் ……….உன்னை பற்றி யான் அனைத்தும் அறிவேன்

அகில் : என்ன அறிவீர்கள்

ரணதீரன் : உமக்கு வீரம் நிறையா உள்ளது ………….யார் என்றாலும் முகத்திற்கு நேராக கூறிவிடுவாய் ………….அதும் மட்டும் இல்லாமல் ருத்திரனை விரும்புகிறாய்

அகில் ; அப்படியென்றால் என்னை பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டு தான் வந்து உள்ளீர்கள்

ரணதீரன் : ஆம் நிலவுப்பெண்ணே

அகில் : என்ன

ரணதீரன் : ஆம் நீ எனக்கு நிலவுப்பெண் தான் அந்த நிலவே உன்னிடம் தோற்று போய்விடும்

அகில் ; நான் ருத்திரனை தான் விரும்புகின்றேன்

ரணதீரன் : அது எனக்கு தேவைல்லாத விசியம் அகில் எனக்கு நீ வேண்டும்

அகில் : என்ன பிதற்றுகிரகள்

ரணதீரன் ; ஆம் நீ யாரை வேண்டுமானாலும் விரும்பி இருக்கலாம் ஆனால் விவாகம் என்னுடன் மட்டும் தான்

அகில் : இவ்வாறு கூற தங்களுக்கு உறுத்தவில்லை

ரணதீரன் : இல்லை நிலவுப்பெண்ணே ………

அகில் : 😠😠😠😠

ரணதீரன் :கோவம் கொள்ளும் போதும் மிக அழகாக உள்ளாய்

அகில் : போதும் இங்கிருந்து செல்

ரணதீரன் : செல்கிறேன் ஆனால் சிறிது நாளில் நீ என் அவையில் இருப்பாய் என் ராணியாய் …………

அகில் : ஒருபோதும் அது நடக்காது

ரணதீரன் : பார்க்கலாம் நிலவுப்பெண்ணே

                             ரணதீரன் அங்க இருந்து கிளம்பிட்டான் …………..அகில் அவளுடைய அறைக்கு வந்துவிட்டால் …………….

                                                                                         🧡🧡🧡🧡🧡🧡🧡

 

அஞ்சலி : ஹே

இன்பா ; என்ன டீ

அஞ்சலி : ரொம்ப ஆர்வமா படிக்குற போல

இன்பா : ஆமா டீ

அஞ்சலி : சரி சரி வ அவங்க என்ன பண்றங்கன்னு பார்க்கலாம்

இன்பா : சரி வா

                                 அடுத்து என்ன நடக்கும் ………….அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம் ……………….

 

 

மீண்டும் வருவாள் ……………..

 

           

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்