உன் விழியாக நானாகிறேன் அத்தியாயம் -11

Loading

அத்தியாயம்-11

ம்ம்… நல்லா இருந்துச்சு இங்கே பாரு போட்டோஸ் அப்புறம் உனக்கு அம்மா டிரெஸ் வாங்கி இருந்தேன் பார்த்தியா?”

“ம்ம்… போட்டு பார்த்தேன் நல்லா இருக்கு” என்ற போது அவளது அம்மா அஞ்சலி  “அஜய்க்கும் டிரெஸ் வாங்கினியா?”

“ஆமாம் அம்மா நீங்க அண்ணனை பார்க்கும் போது அஜய் கையில கொடுங்க” என்றாள்.

அவளது அப்பா மூர்த்தி “அவன் தான் உன்னைப் பற்றி நினைக்கிறதே இல்லையே நீ ஏன் வாங்கிட்டு வந்தே?”

“இருக்கட்டும் அப்பா நான் இப்படியே இருந்துட்டு போறேன் ரெண்டுநாள் ஆபிஸ் வேலையா பெங்களூர் போக வேண்டி இருக்கு நீங்க இங்கே இருந்து வியன்காவை பார்த்துப்பீங்களா? இல்லை என்கூட அழைச்சிட்டு போகவா?”

அவளது அம்மா அஞ்சலி “நாங்க பார்த்துக்கிறோம் நீ போய்ட்டு வாம்மா” என்றார்.

“எப்போ கிளம்புற?”

“நாளைக்கு காலையில் போகனும்”

சரியென்றவர் சிந்தியா கொடுத்த பலகாரங்களை எல்லோருக்கும் சாப்பிட கொடுத்து விட்டு அவளும் சாப்பிட்டாள்.இதுவரை நடந்ததை எல்லாம் ஒரு குரல் பதிவாக சிந்தியாவிற்கு  அனுப்பி இருந்தாள்.அவளும் தன்னுடைய புதுவாழ்க்கையைப் பற்றி அனுப்பி இருந்தாள்.

ஆதிரை பக்கத்து வீட்டிற்கு பொருட்கள் கொடுத்தது அஞ்சலி அவருக்கும் தெரிய வந்தது.தன் மகளின் சிறு மாற்றம் அவரையும் கொஞ்சம் யோசிக்க வைத்தது.சிந்தியாவிடம் கைப்பேசியில் பேசி திருமணம் முடிந்ததைப் பற்றி  விசாரித்தார்.அவருடன் மதனும் பேசினான்.அவர்களை வீட்டிற்கு அழைத்தார்.

ஆதிரை அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசிக்கிறாள்.அவளது பெற்றோர்  மகன் வீட்டில் இருக்கிறார்கள்.மாதத்தில் ஒருவாரம் மட்டும் இங்கே வந்துச் சென்று விடுவார்கள்.

இப்போது விடுமுறையாக இருப்பதாலும் சொந்த ஊரில் திருமணம் இருந்ததால் வியன்காவையும் தங்களுடன் அழைத்துச் சென்றார்கள்.

அஞ்சலி தன் கணவனான மூர்த்தியிடம் “சிந்தியாகிட்டே போன்ல பேசினேன் அவக்கூட ஆதிரைக்கிட்டே ரெண்டாவது கல்யாணம் பத்தி பேசி இருக்கா முடியாதுன்னு சொல்லிட்டாங்க” என்றார் கவலையோடு….

மூர்த்தி “அஞ்சலி அவசரப்படாதே! இந்த தடவை அவ வாழ்க்கையை அவளே முடிவெடுக்கட்டும் அவளை இப்படி ஆக்கியதே  நம்ம தானே அவ படிக்கனும்னு ஆசைப்பட்டா  ஆதிரையை  கல்யாணம் பண்ணச் சொல்லி கட்டாயப்படுத்தி பண்ணி வைச்சோம் ஆனால் என்ன நடந்துச்சு அந்த வீணாப் போனவன் அவளை டார்ச்சர் செய்து இப்போ நாலைந்து வருஷமாகத் தான் எல்லாத்தையும் மறந்து கொஞ்சம் கொஞ்சமா அவ சரியாகிட்டு வருகிறாள் அதனால அவசரப்படுத்தாதே அஞ்சலி” என்று அவரது பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தன் அப்பா பேசியது எல்லாம் ஆதிரையின் காதில் விழுந்தாலும் அவள் எதுவுமே கேட்காதது போல் இருந்தாள்.பழைய வாழ்க்கையை அவள் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை.அன்றைய இரவும் வானொலியில் ருத்ரா நிகழ்ச்சியை நடத்தவில்லை.

பக்கத்தில் வியன்கா படுத்திருக்க அவளை கட்டியணைத்த படி ஏதேதோ யோசனைகள் வந்து அழுத்த அப்படியே தூங்கிப் போனாள்.ஒரு வாரமாக தூக்கத்திற்கான மாத்திரையை எடுக்காமல் இருப்பதால் இப்போது அதுவே பழக்கமானது.

மறுநாள் காலை பத்து மணிக்கு அதிவேமாகச் செல்லக்கூடிய இரயிலில் பயணம்  செய்து பெங்களூரை வந்தடைந்தாள்.

 

ஆதிரையும் அவளுடன் வந்த பெண்ணும் அவர்கள் செல்ல வேண்டிய நிறுவனத்திற்கு அருகில் ஆளுக்கொரு அடுத்தடுத்து அறையை விடுதியில் எடுத்து தயாராகி நேராக அந்த நிறுவனத்திற்குச் சென்றனர்.

 

அவர்கள் அனுப்பிய விவரங்களை அடங்கிய கோப்புகளை சரி பார்த்தப் போதும் அவர்களுக்கான சரியான விவரங்கள் கிடைக்கவில்லை.

இன்னும் பழைய கோப்புகளை பார்க்க வேண்டியது இருந்தது.அதனால் அந்நிறுவனத்தின் மேலாளரைப் பார்த்து மற்ற விவரங்களையும் பார்ப்பதற்கான அனுமதி வாங்குவதற்கு  வெளிநாட்டில் இருந்து இரண்டு நாட்கள் கழித்து  வருபவருக்காக காத்திருக்க வேண்டியதாக இருந்தது.

இதனால் மற்ற வேலைகளை தன் அறையில் இருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தாள்.தன் அம்மாவிடம் கைப்பேசியில் அழைத்தவள் “அம்மா வேலை முடிய இன்னும் நாளாகும்னு நினைக்கிறேன்” என்றாள்.

அவரோ “சரிம்மா நீ வியன்காகிட்டே பேசு” என்று அவளிடம் கைப்பேசியைக் கொடுத்தாள்.

“ஹலோ அம்மா”

 

“சொல்லும்மா அம்மா மேல கோபமா? உன்னை தனியா விட்டுட்டு நான் வந்துட்டேன்ல” என்று கவலையாகக் கேட்டாள்.

வியன்கா “அம்மா எனக்கு கோபம்லாம் இல்லை நீங்க உங்க வேலையை முடிச்சிட்டு வாங்க நான் தாத்தா,பாட்டியோடு இருந்துப்பேன் நீங்க பத்திரமா இருங்க” என்று சொன்னாள்.

அதைக் கேட்ட ஆதிரை மனதினுள் ‘இரண்டு வயது குழந்தையாக தன்னோடு அழைத்து வந்தாள்.அப்பொழுது இருந்தே நடப்பதைப் பார்த்து குழந்தைகள் ஓரளவு உள் வாங்கிக் கொள்ளுமா? என்று அவளுக்கு தெரியவில்லை.

ஆனால் வியன்கா சூழ்நிலைக்கு ஏற்றார் போல் இருந்துக் கொண்டாள்.

ஆதிரையிடம் எதுவும் வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கிக் கொள்ள மாட்டாள்.

ஆதிரையாக பொருட்கள்  வாங்கி கொடுத்தாள் தன் விருப்பப்படி வாங்குவாள்.

அதனால் தன்னுடைய குழந்தை வியன்கா அவளுக்கு ஒரு உற்ற துணையாகத் தான் இருக்கிறாள்’ என்று நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டாள்.

 

ருத்ரனின் நிகழ்ச்சியும் நடைபெறவில்லை இத்தனை நாட்களாக நிறைய பேருடன் இருந்து தனிமையாக இருக்கவும் ஒரு அழுத்தம் வந்து ஒட்டிக் கொண்டது.

இரண்டு நாட்கள் கழித்து நிறுவனத்திற்கு மேலாளரை சந்திக்க வெளியே காத்திருந்தவள் அவர் அழைத்ததும் கதவை திறந்து உள்ளே சென்றவளுக்கு அங்கே இருப்பவனைப் பார்த்து பெருத்த அதிர்ச்சியாக இருந்தது.

 

யாரை தன் வாழ்வில் திரும்ப சந்திக்கவே கூடாது என்று நினைத்திருந்தாளோ  அவனே அங்கு இவளைப் பார்த்து சிரித்தப்படி நின்றான்.அவனுக்கு பக்கத்தில் நின்றவர் “இவர் தான் எங்க கம்பெனியோட மேனஜர் அரவிந்த்” என்று அவனை அறிமுகம் செய்து வைத்தார்.

 

கோபமும் கண்ணீரும் இயலாமையும் அவளை மொத்தமாய் ஆட்டி வைத்தது.எதையும் வெளிக்காட்டாமல் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு நின்றவளை பார்த்து “வாங்க மிஸ் ஆர் மிஸஸ்” என்ற போது “மிஸ் ஆதிரை” என்று பதில் சொல்லி அவனுக்கு கைக்குலுக்காமல் வணக்கம் சொல்லி உட்கார்ந்தாள்.

மேலிருந்து கீழ்வரை அவளை முறைத்து பார்த்தவன் ஏளனமாக சிரித்தப்படி “என்ன விஷயம்  சொல்லுங்க மிஸ் ஆதிரை ரெண்டுநாளா வெயிட் பண்ணுறீங்களாமே” என்று கேள்வியோடு கேட்டான்.

 

அவளோ சிறிதும் தயங்காமல் “சார் நாங்க அனுப்பின அக்கவுண்ட்ஸ் டீடெய்ஸ்ல ஐம்பதுலட்சத்திற்கு மேல் அதிகமாக கணக்கு காட்டி இருக்கோம்னு பதில் அனுப்பி இருக்காங்க ஆனால் எங்க அக்கவுண்ட்ஸ் செக்ஷன்  நீங்க அனுப்பின டீடெய்ஸ் வைச்சு தான் பைல் ரெடி பண்ணோம்” என்றாள்.

 

உடனே அவனோ “அப்போ நாங்க அனுப்பின பைல்ஸ்ல செக் பண்ண வேண்டியது தானே” என்றான் அசட்டையாக…

 

உடனே அவளோ “அந்த பைல்ஸ் செக் பண்ணியாச்சு சார் ஆனால் அதைப் பத்தி எதுவும் இல்லை”

“அப்போ உங்க வேலையில் கவனக்குறைவாக இருந்திருக்கீங்க அது தப்பு தானே” என்று அவளை குற்றம் சாட்டினான்.

 

அவளோ  அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் “ நாங்க எல்லாத்தையும் சரியாக பார்த்து தான் பைலை ரெடி பண்ணோம் ஆனால் எப்படின்னு தெரியலை உங்க பழைய கணக்குவழக்கையும் இதில் சேர்த்து இருந்திருந்தால் இந்த மாதிரி நடக்க வாய்ப்பு இருக்கு அதனால நாங்க ரெடி பண்ணுறதுக்கு முன்னாடி நீங்க ஏற்கனவே முடித்திருந்த லெச்சர்ஸையும் பார்த்தால் தான் சரியாக பார்க்க முடியும்

எங்க மேல எந்த தப்பும் இல்லை சார் நீங்க பழைய பைல்ஸ் பார்க்கிறதுக்கு பர்மிஷன் தாங்க” என்று அவள் வந்த வேலையிலேயே கவனமாக இருந்தாள்.

 

அவளின் பேச்சில் இருந்த உறுதியை அவனால் மறுத்து பேச முடியவில்லை.இந்த நாலைந்து வருடங்களில் ஆதிரை நன்றாகவே மாறிப் போய் இருக்கிறாள் என்பது அவனைக் கண்டும் அவள் சிறிதளவு கூட தடுமாற்றம் இல்லாமல் பேசியது ஆதிரையைப் பற்றி யோசிக்க வைத்தது.

 

“ம்ம்… சரி உங்க ஐ.டிக்கு எல்லா பைல்ஸ்ஸும் அனுப்ப சொல்றேன்” என்றான்.

 

உடனே அவளோ “தாங்க்யூ சார் கூடவே நீங்க முக்கியமான பைல்ஸ்ஸ பேப்பர் வொர்க்கா வைச்சி இருப்பீங்க அந்த விவரங்களையும் கொடுங்க” என்றாள்.

தன் பக்கத்தில் உள்ளவரிடம் அரவிந்த்  “அவங்க கேட்கிற டீடெய்ஸ் கொடுங்க” என்றதும் ஆதிரை தன்னுடன் வந்த பெண்ணிடம் “அவங்க கொடுக்கிற பைல்ஸ்ஸ வாங்கிட்டு வாங்க நமக்குன்னு கொடுத்து இருக்கிற கேபினுக்கு வாங்க” என்று ஆதிரை அந்தப் பெண்ணை அனுப்பி விட்டு இவள் எழுந்திருக்கும் போது  அரவிந்த்  “தனியா இருந்தும் உன் திமிரு குறையலை அதான் இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லாமல்  இப்படியே இருக்கே” என்றான்.

 

அவனைப் பார்த்து முறைத்தவள் எதுவும் பேசாமல் நகரப் போக அவனோ “என் பொண்ணு உன்னை மாதிரி தான் இருக்காளா? இப்படி திமிர் புடிச்சவ நடந்துக்கிற போல” என்றதும் அவனை நேருக்கு நேராக பார்த்தவள் “ஆமாம் என் பொண்ணு என்னை மாதிரித் தான் இருப்பா கண்டவனை மாதிரி இல்லை”என்று வார்த்தையை  வீரியமாக பேசினாள்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்