Loading

பூகம்பம் – 22

 

 

“அது எனக்கு வாங்குனது அபி.. அதான் நான் சாப்பிட்டேன்..” என்று சமாளிப்பாக கூற முயன்றாள் பெண்ணவள்.. “ஓஹோ” என்றவனின் வார்த்தையில் சிணுங்கியவள் “போங்க அபி.. என்னைய கிண்டல் பண்ணிட்டே இருக்கீங்க” என்று குற்றம் சுமத்தினாள்.

 

சிணுங்கலுடன் சேர்ந்து வந்த குரலில் கிறங்கி போனவன் “ஆதிமா” என்றழைக்க, இவளும் “அபி” என்றிட, “சீக்கிரம் உன்னைய பார்க்க வர்றேன்டா” என்றவனுக்கு அவளை அள்ளி கொஞ்ச வேண்டும் என்றிருந்நது.

 

“நீங்க எப்ப வருவீங்கனு தான் நானும் ரொம்ப ஆவலா இருக்கேன் அபி.. சீக்கிரம் வாங்களேன்..” என்று இவளும் ஆவலுடன் கூற, இருவரையும் மௌனம் தனக்குள் இழுத்து கொண்டது.

 

மௌனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து “நீங்க போய் சாப்பிடுங்க அபி.. வேலை இருக்கு” என்றதும் சரிடா போனை வெக்கறேன் என்று அவனும் கூறினான். இருவருக்கும் மனநிலை ஒன்றாக தான் இருந்தது எப்போது தன்னவளை(னை) காண்போமென்று.!!!

 

 

உன்னைய காணும்

போது உரிமையாக

அள்ளி அணைக்க

போகும் நொடிக்காக

தான் ஏங்கி தவித்து

காத்திருக்கிறேனடி(டா)!!

இந்த தவிப்பு

உனக்கானது என்பதாலோ

சுகமான சுமையாகவே

மனதில் கனக்கிறதடி(டா)!

 

 

 

பெற்றவர்களை காணாமல் நேரம் செல்ல செல்ல ஆதிராவின் படபடப்பு அதிகரிக்க, இதற்கு காரணமான ரஞ்சித்திற்கு அழைத்து விட்டாள்.

 

அவன் தான் விலகி விடுவதாக வாக்கு குடுத்து விட்டானே.. இதற்கு மேல் ஏன் பேசாமல் இருக்க வேண்டுமென்று ஆதிராவும் அவனுடன் நன்றாக பேச தொடங்கியதில் இருவரின் நட்பும் நன்றாக வளர்ந்திருந்தது.

 

அவன் எடுத்ததும் தான் தாமதம் “எல்லாம் உன்னால.. உன்னால தான்.. நான் பாட்டுக்கு ஜாலியா இருந்தேன்.. என்னைய போய் பயப்பட வெச்சிட்டியே.. உன்னைய விட மாட்டேன் விட மாட்டேன்..” என்று இவள் கத்திய கத்தலில் ஒருபுறம் ரஞ்சித் முழித்தான் என்றால் மறுபுறம் பைத்தியமா இவ.? என்ற ரீதியில் துருவினி அவளை முறைத்திருந்தாள்.

 

“இங்க நான் கத்திட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு ஜாலியா இருக்க.. உன்னைய மன்னிச்சுருக்க கூடாது.. அப்படியே மலைல இருந்து தள்ளி விட்டுருக்கணும்..” என்று பொரிந்து தள்ளினாள்.

 

“ஹேய் ஆதிரா.. வாட் ஹேப்பன்.? ஏன் திடீர்னு லூசு மாதிரி கத்தற.?” என்று சாதாரணமாக ரஞ்சித் வினவியதும் “எது நான் லூசா.?” என்று அதற்கும் சீறியவளின் செயலில் திருதிருவென முழித்து “என்ன ஆதிரா எதுக்கு கோவம்.?” என்று புரியாமல் கேட்டான்.

 

“ஆமா உனக்கு ஒண்ணுமே தெரியாது பாரு.. எல்லாம் உன்னால தான்.. உன்னால மட்டும் தான்..” என்று கூறியதையே திருப்பி திருப்பி கூறி “கடைசி வரைக்கும் நீ சிங்களா தான் இருப்ப பாரு..” என்றவளின் கூற்றில் “எதே.? எதே.? வொய்.?” என்று பதறி “எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் ஆதிரா.. சாபம் எல்லாம் குடுத்தராத.. மீ பாவம்” என்று கதறியவனின் வார்த்தை எங்கு பெண்ணவளை சென்றடைந்தது.

 

அவள் தான் திட்டி விட்டு அவன் பேசும் போதே போனை வைத்து விட்டாளே.. பாவம் ரஞ்சித் தான் அவள் எதற்கு திட்டினாள் என்பதே புரியாமல் “அவ்வ்வ்வ் நான் என்ன பண்ணுனேன்.? தலைவலினு லீவு தானே போட்டு படுத்திருந்தேன்.. அது தப்பா கோபாலு தப்பா.? இதுக்கு எல்லாம் சாபம் குடுப்பாங்களா.?” என்று அப்பாவியாக புலம்பி கொண்டிருந்தான்.

 

ஆதிராவின் தவிப்பை போக்கிட பெற்றவர்களும் வந்து சேர்ந்தனர்.. ‘துருவினி சொன்ன மாதிரி வேணாம்னு சொல்லிருவாங்களோ.?’ என்று ஒரு ஆர்வத்தில் அவர்களையே பார்த்திருந்தாள்.

 

“அம்மா என்ன சொன்னாங்க.?” என்று துருவினி கேட்க, “ஒரு ஆறு மாசம் கழிச்சு கல்யாணம் பண்ணுனா தான் இவளுக்கு நல்லா இருக்கும்னு சொல்றாங்க..” என்று கூறிய அன்னையின் வார்த்தையில் ஐஸ் மழை பொழிந்தது ஆதிராவின் தலையில்.

 

எப்படி.? என்று பார்வையால் தமக்கையிடம் கேட்ட துருவினி “வேற எதுவும் சொல்லலயா.?” என்றிட, “ஆறு மாசம் முடியட்டும் அப்பறம் பார்த்துக்கலாம்னு சொல்லிட்டாங்க” என்ற பாண்டியன் எழுந்து உள்ளே சென்றார்.

 

இப்போது தான் ஆதிராவால் சீராக மூச்சு விட முடிந்தது.. அவளின் அன்னையும் உள்ளே சென்றதும் “ஜாலி ஜாலி” என்று குதித்து தங்கையை அணைத்தவள் “நீ சொன்னது நடந்துருச்சு.. தேங்க்ஸ்டி” என்றாள் சந்தோசத்துடன்.

 

பின்பு “எப்படி சரியா சொன்ன.?” என்று கேட்க, “துருவினினா சும்மாவா.. அதெல்லாம் அப்படிதான்” என்று கெத்தாக கூறினாள் வீட்டிற்கு ஜோசியர் ஒருவர் வந்ததை மறைத்து.

 

ஊட்டிக்கு ஆதிரா சென்றிருந்த போது பாண்டியன் தான் மகள்கள் இருவரின் ஜாதகத்தையும் பார்க்க ஜோசியரை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்.. அவர் தான் இவ்வாறு கூறியது..

 

இருந்தும் மனதிருப்திக்காக வேறு ஒருவரிடமும் கேட்டு விடலாம் என்று இருவரும் முடிவெடுத்து செல்ல, அவரும் இவர் கூறியதையே கூறியதில் திருமணப் பேச்சை இதோடு முடித்து விட்டு பின்பு பார்க்கலாம் என்றிருந்தனர்.

 

குதூகலத்துடன் நடந்ததை ரூபனிடம் கூறியவள் “அம் சோ ஹேப்பி அபி.. அவ்ளோ சந்தோசமா இருக்கு.. நீ மட்டும் பக்கத்துல இருந்தேனா…” என்று ஆனந்தத்தில் தன்னை மறந்து கூற வந்து அய்யோ என்று நாக்கை கடித்து பேச்சை நிறுத்தினாள்.

 

“இருந்தா.?” என்று கேள்வியுடன் ரூபன் இழுக்க, “சந்தோசத்துல ரெண்டு அடி அடிச்சுருப்பேன்” என்று சிரிப்பு பொங்க கூறினாள்.

 

“என்னது அடிப்பீயா.? நான் வேற என்னமோனு நினைச்சேன்..” – ரூபன்

 

“நினைப்பு தான் பொழைப்பை கெடுக்குமாம்..” – ஆதிரா

 

“ஆஹான் மேடம் நீங்க சொன்னா சரிதான்.. சரிதான்..” – ரூபன்

 

“போங்க அபி..” – ஆதிரா

 

“போகட்டுமா.?” – ரூபன்

 

“…..” – ஆதிரா

 

“என்ன பேச்சை காணோம்.?” – ரூபன்

 

“……” – ஆதிரா

 

“ஆதிமா இருக்கீயா.? இல்ல அப்படியே தூங்கிட்டியா.?” என்று சிரிப்புடன் கேட்டதில் பெண்ணவளின் அமைதி கலைந்து “ஆமா தூங்கிட்டேன் போங்க” என்று செல்லக்கோவத்துடன் உரைத்தாள்.

 

இருவருக்கும் மனநிறைவாக இருந்தது. பேசி கொண்டே இருக்கலாம் என்று தான் இருக்க, ஆனால் அவர்களின் வேலை அவர்களை விடாமல் துரத்திட, வேறு வழியின்றி காதலை ஓரமாக தள்ளி வைத்து விட்டு வேலையில் முழ்கினர்.

 

ஜோசியர் கூறியதை ரஞ்சித்தின் பெற்றவர்களின் மனம் நோகாமல் கூறிய பாண்டியன் பின்பு பார்த்துக்கலாம் என்றிட, அவர்களும் சரியென்றனர். ஆனால் நிவேதா மட்டும் ரஞ்சித்தின் பெற்றோரிடம் எப்படியும் ஆதிரா தான் அவர்களின் மருமகள் என்றாள்.

 

ஆதிராவின் தந்தை இருந்ததால் ரஞ்சித்தும் அமைதியாக இருக்க வேண்டிய சூழ்நிலை.. அவளின் காதலை ஆதிராவே இன்னும் வீட்டில் கூறாதபோது தான் கூறினால் பிரச்சனை பெரியதாகி விடும் என்று பயந்து மறுமொழி கூற முயலவில்லை. ஆதிரா தான் சம்மதம் கூற மாட்டாளே.. நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விட்டான்.

 

குளித்து விட்டு வந்த ரூபன் கண்ணாடியின் முன்பு நின்று தலையை துவட்டி கொண்டிருந்த நேரத்தில் சிவா அவனுக்கு அழைத்தான்.. ‘சிவா அண்ணா’ என்ற சந்தோசத்தில் “சொல்லுங்க அண்ணே.. எப்படி இருக்கீங்க.?” என்று நலம் விசாரித்தான்.

 

பொதுவான விசயத்திற்கு பிறகு தான் கூற வந்ததை கூறிய சிவா “உன் முடிவு தான் ரூபன்” என்றதோடு வைத்து விட, யோசனையில் அப்படியே அமர்ந்தான்.

 

இதே நேரம் அன்னை கூறிய விடயத்தில் அசோக்கும் ‘இது சரியா வருமா.?’ என்ற சிந்தனையில் இருந்தான்.

 

 

 

பூகம்பம் – 24

 

 

 

 

சிவா கூறியதை கேட்டதில் இருந்து சிந்தனையிலே இருந்தான் ரூபன்.. அன்னையிடம் கூறலாம் என்று நினைத்தாலும் விசயத்தை கேள்விபட்டால் விடாமல் புலம்புவார் என்றறிந்து அமைதியானான்.

 

பேசாமல சிவா கூறியதை போல் வீரச்சாமியை அழைத்து சென்று பேசினால் என்ன.? என்றும் தோன்றியது.. தந்தை கஷ்டப்பட்டு மீட்ட நிலமாயிற்றே அது..

 

இந்நேரம் வீரச்சாமியும் “அவன் என்னடா நினைச்சுட்டு இருக்கான்.? அந்த நிலத்தை அவங்க அப்பன் கடனுக்காக குடுத்துருக்காரு.. அந்த கடனை அடைச்சு நிலத்தை மீட்டது பொன்னுச்சாமி தானடா.. இவன் ஒத்த பைசா குடுத்தானா.?

 

அப்பறம் எப்படி அந்த நிலத்தை இவன் விற்க நினைக்கலாம்.? சொல்ல போனா இவனுக்கே அந்த நிலம் உரிமையில்லை.

. இதுல எப்படி அவன் பெத்த தறுதலைகளுக்கு சொந்தமாகும்.? கேட்க யாருமில்லனு நினைச்சுட்டு இருக்கானா.?

சிவா கூறியதை கேட்டதில் இருந்து சிந்தனையிலே இருந்தான் ரூபன்.. அன்னையிடம் கூறலாம் என்று நினைத்தாலும் விசயத்தை கேள்விபட்டால் விடாமல் புலம்புவார் என்றறிந்து அமைதியானான்.

 

பேசாமல சிவா கூறியதை போல் வீரச்சாமியை அழைத்து சென்று பேசினால் என்ன.? என்றும் தோன்றியது.. தந்தை கஷ்டப்பட்டு மீட்ட நிலமாயிற்றே அது..

 

இந்நேரம் வீரச்சாமியும் “அவன் என்னடா நினைச்சுட்டு இருக்கான்.? அந்த நிலத்தை அவங்க அப்பன் கடனுக்காக குடுத்துருக்காரு.. அந்த கடனை அடைச்சு நிலத்தை மீட்டது பொன்னுச்சாமி தானடா.. இவன் ஒத்த பைசா குடுத்தானா.?

 

அப்பறம் எப்படி அந்த நிலத்தை இவன் விற்க நினைக்கலாம்.? சொல்ல போனா இவனுக்கே அந்த நிலம் உரிமையில்லை.. இதுல எப்படி அவன் பெத்த தறுதலைகளுக்கு சொந்தமாகும்.? கேட்க யாருமில்லனு நினைச்சுட்டு இருக்கானா.?

 

விசயத்தை ரூபன் கிட்ட சொல்லிட்டியா.? அவன் வரட்டும்.. அவனே வேணாம்னு சொன்னாலும் விட கூடாது.. அப்படி விட்டா பொன்னுச்சாமி என்னைய மன்னிக்கவே மாட்டான்..” என்று கோவமாக சீறினார்.

 

இவரும் ரூபனின் தந்தையும் அண்ணன் தம்பியாக பழகியவர்கள்.. அதற்காக எப்போதும் ஒன்றாக சுற்றுபவர்களும் இல்லை.. எப்போதாவது பார்த்து பேசி கொள்வார்கள் அவ்வளவே.

 

ஒருவருக்கு ஒன்றென்றால் அழைக்காமலே மற்றொருவர் வந்து நின்று உதவுவார்கள். அப்படிதான் இந்த நிலத்தை மீட்க பொன்னுச்சாமி போராடிய நேரம் பணம் பத்தவில்லை என்று வீரச்சாமி அறிந்ததும் அவர் கேட்காமலே உதவிக்கரம் நீட்டினார்..

 

இதற்கு கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்தபோதும் அதை சிறிதும் அசட்டை செய்யாமல் அந்த நிலத்தை மீட்கும் வரை அவருக்கு உறுதுணையாக இருந்தவரும் இவரே.

 

அப்போதெல்லாம் ஏனென்றும் ஒரு வார்த்தை கேட்காமல் இருந்த வேலுச்சாமி இப்போது அண்ணன் இல்லையென்றதும் தன் மகன்களின் எதிர்காலத்திற்காக அந்த நிலத்தை விற்க முயல்கிறார் அதுவும் ரூபனிடமும் ஒரு வார்த்தை கூறாமல்.!!

 

“அவங்க என்னமோ பண்ணிட்டு போறாங்க.? நீங்க ஏன் இடைல போறீங்க.?” என்று இப்போதும் கஸ்தூரி எதிர்ப்பு தெரிவிக்க, “என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்.. உன் வேலை என்னவோ அதைய மட்டும் பாரு..” என்றார் சுள்ளென்று.

 

“நல்லது சொன்னா யாரு கேட்கறா..” என்று கஸ்தூரி முணுமுணுக்க, “அப்பா ஒண்ணும் தெரியாதவங்க வீட்டு விசயத்துல தலையிடல.. ரூபனுக்காக தான் பேசறாங்க..” என்று சிவாவும் கூறினான்.

 

அப்போதும் விடாமல் கஸ்தூரியோ “அதான் எதுக்குனு கேட்கறேன்.? இப்ப அவங்க அடிச்சுக்குவாங்க அப்பறம் சேர்ந்துக்குவாங்க.. நம்ம ஏன் இடைல போகணும்.?” என்றிட, பல்லை கடித்த வீரச்சாமி “ரூபன் வரட்டும் நான் விட போறது இல்லை” என்று தன் முடிவில் உறுதியாக இருப்பதை உரைத்து விட்டு சென்றார்.

 

“உன்னால கம்முனே இருக்கு முடியாதாமா.? நீயும் தான் தேவையில்லாத ஊரு விசயத்துல தலையிட்டுட்டு இருக்க.. அப்பா ஏதாவது சொன்னாரா.?” என்று சிவாவும் சிடுசிடுக்க, தோளை குலுக்கி கொண்டார் கஸ்தூரி.

 

தொடரும்..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்