Loading

சக்கரை தழுவிய நொடியல்லவா!

அத்தியாயம் 26

கோயம்புத்தூரில் பயிற்சியில் இருந்தவனுக்கோ மதுவின் நினைப்பு தான். முன்பு ஐந்து மாதம் பயிற்சியில் இருந்த நேரம் மதுவிடம் பேசவில்லை திரும்பி வந்து பேசிக்கொள்ளலாமென நினைத்திருந்தபொழுது கூட அவளுக்காக இந்தளவுக்கு அவன் ஏங்கவில்லை.

ஆனால் இப்போது அவளை மணமுடித்து, ஒருநாள் என்றாலும்கூட அவளுடன் வாழ்ந்து விட்டவனுக்கு அவள் இல்லாமல் இருப்பது மிகவும் சிரமாயிற்று. அதாவது பசியில் இருப்பவனை அப்படியே விட்டாலாவது பசியை மறந்து இருக்க பழகிக் கொள்வான். ஆனால் கொள்ள பசியில் இருக்கும்போது கொஞ்சம் ருசியைக் காட்டிவிட்டு மீண்டும் பட்டினி போட்டால் எப்படி இருக்குமோ அந்த நிலையில் இருந்தான்.

எப்பொழுது தான் இந்த டிரைனிங் முடியும், அவனவளை காண, அவளை அள்ளிக்கொஞ்ச துடித்துக் கொண்டிருந்தான். அவளிடம் காணொளி வழியாக பேசும்போதெல்லாம் அவன் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். அன்று இரவு எல்லா வேலைகளும் முடிய அவளை அழைத்திருந்தான் காணொளி அழைப்பில். அவளோ அப்போது தான் குளித்து இரவு உடையை அணிந்து கொண்டு வந்தவள் அவசர அவசரமாக அழைப்பை எடுத்தாள்.

அவள் பிம்பத்தை அலைபேசியில் பார்த்தவனுக்கு ஒரு நிமிடம் மூச்சடைத்தது காரணம் அவளது இரவு உடை அநியாயத்து கீழிறங்கி அவனுக்கு மூச்சடைக்க வைத்தது. சும்மாவே ருசிகண்ட பூனையாகக் குறுக்கும் நெடுக்குமாக அவன் அழைய, இவள் வேறு பால் பாத்திரத்தைக் கண்முன் வைத்துச் சீண்டுவது போலத் தூண்டிவிட்டாள்.

“சித்தத்துதுதுதுது.. என்ன நான் பேசிட்டே இருக்கேன்.. அமைதியா இருக்கீங்க என்னாச்சு?” என இவள் கத்த,

“ஹான் சொல்லு.. என்ன கேட்ட”

“சாப்பிட்டிங்களா?”

“ம்ம் கண்ணாலயே சாப்பிட்டேன்” என்றான் குறும்பாக,

“எதே! யாராவது கண்ணால சாப்பிடுவாங்களா.. லூசு சித்தத்து வாயால தான் சாப்பிடனும்”

“ஆமாம்.. ஆமாம்.. வாயால தான் சாப்பிடனும். ஆனா முடியலயே..”

“ஏன் முடியல? உடம்புக்கு முடியலயா? காய்ச்சலா?” எனப் பதட்டமாக அவள் கேட்க,

“ம்ம்.. ஆமா ரொம்ப ஹாட்டா இருக்கு” என்றான் மோகமாக,

“அச்சோ! ஹாஸ்பிடல் போனீங்களா? ஊசி, மாத்திரை எல்லாம் போட்டீங்களா?”

“அதெல்லாம் போடாமலே ஹாட்டா தான் இருக்கு”

“லூசு சித்தத்து அது போடலனா காய்சலா தான் இருக்கும்.. போட்டா தான் காய்ச்சல் சரியாகும்”

“இது சரியாகாத காய்ச்சல்”

“ஐய்யய்யோ.. டெங்கு, மலேரியா எதும் வந்துருச்சா? நீங்க வீட்டுக்கு வாங்க என்னனு பார்க்கலாம். இல்ல நான் ஆதவனை கூட்டிட்டு வரவா?”

“நீ மட்டும் வேணா வா.. அந்தக் கரடிய எதுக்கு கூட்டிட்டே வர?”

“நான் மட்டும் தனியா வந்தா எனக்குக் கோயமுத்தூர்ல என்ன தெரியும்? அவன் இருந்தா வெளியே ஹாஸ்பிடலுக்கு  கூட்டிட்டு போகத் துணையா இருக்கும்ல”

“நீ வந்தா நம்ம ரூம விட்டே வெளியே போகமாட்டோம்”

“ரூம்குள்ளயே இருந்தா காய்ச்சல் எப்படி சரியாகும்? ஹாஸ்பிடல் போக வேணாமா?”

“நீ வந்தாலே சரியாகிடும்”

“நான் என்ன டாக்டரா?”

“இந்த நோய்க்கு நீ மட்டும் தான் டாக்டர்”

“அய்யோ நீ என்னனென்னமோ ஒலறுற.. காய்ச்சல் அதிகமா இருக்கு போல.. இரு நான் மாமா, ஆதவன கூட்டிட்டு அங்க வரேன்” என அழுவது போலப் பேச, சத்தமாகச் சிரித்தவன்,

“அட லூசு பொண்டாட்டி.. நீ இல்லாம இருக்குறதே எனக்குக் கஷ்டமா இருக்கு.. இதுல நீ இப்படி டிரஸ் போட்டு என்ன மூடேத்துனா அ..ந்..த..க்காய்ச்சல் வராம என்ன வரும்? மண்டு மண்டு” எனக்கூறி இன்னும் சத்தமாகச் சிரிக்க, அப்போது தான் உடையைப் பார்த்துச் சரிசெய்துவிட்டு அவனைப் பார்த்து அசடு வழிய சிரித்தாள்.

“சாரி சித்தத்து.. கவனிக்கல”

“நான் நல்லா கவனிச்சேன்”

“ச்சீ போ.. நீ அசிங்கமா பேசுற.. அப்போ இவ்ளோ நேரமும் நீ டபுள் மீனிங்ல தான் பேசினியா?” எனக் கண்ணைவிரித்தாள். அவளைப் பார்த்துக் கண்சிமிட்டி சிரித்தான் அவள் கள்வன்.

“நான் போனை வக்கிறேன்.. எனக்கு வெட்கமா இருக்கு”

“அய்யோடா வெட்கமா.. உனக்கா.. அன்னைக்கு நீ என்ன பண்ணனு நான் சொல்லவா?” எனக்கேட்க,

“ஏய்.. ஏய்! சும்மா இரு சித்தத்து.. என்னால முடியல.. நான் போறேன் போ” என அழைப்பை நிறுத்தியவள் தலையணையில் முகத்தை மறைத்துச் சிரித்துக் கொண்டாள். இருவரும் மற்றவரை நினைத்துக் கொண்டு உறக்கத்தை தொலைத்தனர்.

எந்தன் குரல் கேட்டால் என்ன தோன்றுது.. உன்னக்கென்ன தோன்றுது..

ஓ.. நேரில் பார்க்க சொல்லி என்னை தூண்டுது.. அது என்னை தீண்டுது.

மறுநாள் மதியம் சாப்பாடு வாங்குவதற்காக ஈகை வீட்டுக்குச் சென்றான் ஆதவன். மது திருமணத்திற்கு பிறகு இன்று தான் மீண்டும் அங்குச் செல்கிறான். அன்று சனிக்கிழமை வீட்டில் அனைவரும் இருந்தனர். அனைவருக்கும் தெரியும் மதுவுக்காக ஈகை சமைக்கிறாரென. ஆதவன் கூறிய காரணத்தைத் தான் ஈகையும் வீட்டில் கூறியிருந்தார்.

ஆதவன் வீட்டிற்குள் நுழையக் கூடத்தில் அமர்ந்திருந்த அஸ்வந்த் அவனைப் பார்த்தும் ‘வா’ எனக்கூட அழைக்காது அவனறைக்கு செல்ல, அவன் பின்னாலே அகிலாவும் ஆதவனை முறைத்துக் கொண்டே சென்றாள். அன்பு தான் “வா ஆதவா” என்றார். அவனுக்குத் தான் அவருடன் பேசத் தயக்கம்.

“ஆமாம் மாமா” என்றவன் அவர் முகத்தைப் பார்க்கமுடியாமல், குனிந்து கொண்டே கிட்சனுக்கு வந்துவிட்டான்.

“அத்தை ரெடியா?” எனக்கேட்க அவர் கட்டி வைத்ததைக் கொடுத்தார்.

“அத்தே இது என்ன லஞ்ச் பேக்ல டிப்பன் பாக்ஸ்ல வச்சிருக்கிங்க? உங்க மக என்ன கொன்னுடுவா.. இதெல்லாம் மாத்துங்க கடையில வாங்கினது போல இருக்கனும். இந்தாங்க இதுல யூஸ் அண்ட் த்ரோ டப்பா இருக்கு. இனி இதுல பேக் பண்ணி கவர்ல போட்டு வைங்க. நான் வந்து வாங்கிக்கிறேன்” எனக்கூற அவன் கூறியபடி கடையில் பார்சல் செய்வது போலச் செய்து கொடுக்க அதை வாங்கி கொண்டு கிளம்பிவிட்டான்.

“வரேன் மாமா” என அன்புவிடம் கூற, “மதும்மா எப்படி இருக்கா?”

“நல்லா இருக்கா மாமா”

“சித்தார்த்?”

“நல்லா இருக்கார் மாமா”

“மதுக்கிட்ட கோவமா இருந்தாரே?”

“சமாதானம் ஆகிட்டாங்க. நல்லா பேசுறார் மாமா”

“ஆனந்தி?”

“கொஞ்சம் பிரச்சனை தான் மது சமாளிச்சுகிறா. பெரியப்பா மிரட்டி வச்சிருக்கார்”

“மது நல்லா இருக்கால பிரச்சனை இல்லையே?”

“அதெல்லாம் இல்ல மாமா. நல்லா இருக்கா மாமா” என அவர் கேள்விகளுக்குப் பம்மிக்கொண்டே பதிலளித்தான்.

“சரிப்பா கிளம்பு” எனக்கூற, அங்கிருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என ஓடிவந்தவனை பிடித்துக் கொண்டான் தரூண்.

“மாமா! மாமா! நானும் நானும்” என அவனுடன் அழைத்துச் செல்லக்கூறி அடம் பிடித்தான் தரூண்.

“டேய்! மாமா கடைக்குப் போகனும்டா. உங்கம்மா திட்டுவா டா. நான் வரும்போது உனக்குச் சாக்கி வாங்கிட்டு வரேன் இப்போ உள்ள போ. அப்பத்தா கிட்ட ஓடு” எனச் சமாளிக்க அசைவதாய் இல்ல தரூண். பின் அவனைச் சமாளிக்க முடியாமல் அவனையும் தூக்கிக்கொண்டு மது வீட்டுக்குச் சென்றான்.

அன்றும் அவன் கண்டது ஆனந்தியும், சிந்துவும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததை. இவனைக் காணவும் அவர்களுக்குப் பொசு பொசுவெனத் தான் வந்தது. கூடவே வந்த தரூணை பார்த்ததும், அவனைப் பெற்றவன் சிந்துவை நிராகரித்தது தான் நினைவுக்கு வரப் பொடு பொடுவெனப் பொறிந்தார் ஆனந்தி.

“சாவுகிராக்கி வந்துட்டான்” என முனங்கியவர், “டேய் சும்மா சும்மா என் வூட்டுக்கு வராத.. இந்தாண்ட ஒன்னும் சாப்பாட்டுக்கு பஞ்சமில்ல.. நீ கொண்டு வந்த குடுக்க” எனக் கத்த,

“நானும் பார்த்தேனே கரப்பான்பூச்சி சாப்பாடு.. நான் சும்மா சாப்பாடு குடுத்துட்டு போகலானு தான் வந்தேன். ஆனா இன்னைக்கு இங்கயே இருந்து இளங்கோ பெரியப்பாவ பார்க்கனும் போல இருக்கு. அப்போ தான் சரிவரும்” எனக்கூற, இருவரும் வெடுக்கெனத் திரும்பி அவர்களது வேலையைக் கவனிக்கலாயினர்.

அப்போது தான் அறையிலிருந்து வந்தாள் மது. ஆதவன் வருவானெனத் தெரியும் ஆனால் இன்று அண்ணன் மகனும் கூட வரச் சந்தோஷமாயிற்று.

“தரூண் குட்டி” என அழைக்க, ஆதவனிடமிருந்து மதுவிடம் தாவினான். அவனை வாங்கிக்கொண்டாள் மது.

“அத்தை! ஏன் வீட்டுக்கு வல்ல? தரூ தேடி”

“அச்சோ என் வெல்லக்கட்டி என்னை தேடுச்சா.. அத்தை இனி இங்க தான் இருப்பேன், மாமா வரும்போது நீயும் மாமா கூட வா அத்தை வீட்டுக்குச் சரியா?” எனக்கூற சமத்தாக மண்டையை ஆட்டினான் தரூண்.

ஆதவன் “இந்தா சாப்பாடு சாப்பிடு. நான் கிளம்புறேன். வாடா கிளம்பலாம்” எனத் தரூணை அழைக்க,

“அத்தை கூட விளாட போதேன்”

“டேய் மாமா சாப்பிட்டு கடைக்குக் கிளம்பனும்டா. வா லேட் ஆகிடுச்சு” எனக்கூற வரமாட்டேன் என மல்லுக்கட்டினான் தரூண்.

“இரு ஆரு கொஞ்ச நேரம் இருக்கட்டும். அப்புறம் கூட்டிட்டு போ. உள்ள வா” மாமியாரும், நாத்தனாரும் அவர்களையே முறைத்துப் பார்க்க எங்கே சண்டை வந்துவிடுமோவெனப் பயந்து இருவரையும் அறைக்குள் அழைத்துச் சென்றாள்.

“ஊசி போட்டிட்டியா மது?”

“ஹ்ம்ம் போட்டுட்டேன்”

“டைம் ஆகிடுச்சுனா சாப்பிடு” எனக்கூற, உணவு டப்பாக்களை எடுத்துப் பிரித்து வைத்து, முதலில் தரூணுக்கு ஊட்டினாள். அதன் பின்பே ஒரு வாய் சாதத்தை எடுத்து வாயில் வைக்க, கண்களில் கண்ணீர் கோர்த்தது.

“சாப்பாடு எங்க வாங்கின?” எனகேட்க, சமாளிப்பாய் “நம்ம கடையில தான்”

“மாஸ்டர் மாத்திட்ட போல டிஃப்ரண்ட் டேண்டா இருக்கு இன்னைக்கு”

“அதே மாஸ்டர் தான். உனக்காக ஸ்பெஷலா செய்யச் சொல்லி வாங்கிட்டு வந்தேன்”

“ஒஹ்ஹ்” என்றபடி, சாப்பிட்டு முடித்தவள், “இந்த மாஸ்டர் சாப்பாட பிறந்ததிலிருந்து சாப்பிடுறேன் எனக்குத் தெரியாதா? இனிமேல் இந்த மாஸ்டர் வேணாம், எப்பவும் உன் கடையில இருக்க அந்தப் பழைய மாஸ்டர் சாப்பாடே போதும். என்னைக்கு என் சித்தத்து இந்த மாஸ்டர் கையால சாப்பிடுறாரோ அன்னைக்கே நானும் வந்து சாப்பிட்டுக்கிறேன்” எனக்கூற, அவன் எதோ பேச வரும் முன்,

“திரும்பவும் சித்தத்து கோபத்துக்கு ஆளாக முடியாது. இனி அவர் என்ன சொல்றாரோ அதான் என் முடிவு” எனத் திடமாக மறுத்துவிட்டாள் மது. அவன் தான் இதை எப்படி ஈகையிடம் கூறுவதெனக் கலங்கிப்போய் நின்றான். தருணும் சிறிது நேரம் விளையாண்டு முடித்து வீட்டுக்குக் கிளம்ப ஆயத்தமாகவும் அவனையும் அழைத்துக்கொண்டு கிளம்பி கடைக்குச் சென்று அவனுக்கு மிட்டாய்கள் வாங்கிக்கொடுத்தான்.

ஈகையிடம் எப்படி கூறுவதெனக் கலக்கத்தில் சென்றவன் கண்முன் ஈகையே வந்து நின்றார். அவன் முகத்தைப் பார்த்தவர் “என்ன என் சமையல்னு கண்டுபிடிச்சுட்டாளா?” எனக்கேட்க ‘ஆமாம்’ என்னும் விதமாக மண்டையை ஆட்டினான்.

“இனி எங்கிட்ட வாங்காதனு சொல்லிருப்பாளே?” அதே தலையசைப்பு.

“நினைச்சேன். அவ அத தான் செய்வானு. பரவாயில்ல என் புள்ள என்னைக்கு என்கையால சாப்பிடனும்னு விதி இருக்கோ அப்பச் சாப்பிடட்டும்” எனக் கண்ணீரை உள்ளிழுத்தபடி கூறி, தரூணை அழைத்துச் சென்றார். அவன் தான் என்ன செய்வதெனப் புரியாத வருத்தத்தில் மதுவை மனதுக்குள் வறுத்தெடுத்தான்.

அவளோ தாய் தகப்பன் ஏக்கத்தில் அவள் தலையணையை கண்ணீரால் ஈரம் செய்துகொண்டிருந்தாள். பிரிவால் தவிக்கும் ஜீவன்களின் தவிப்பு குறையுமா? சித்தார்த் கோபம் மறைந்து அனைவருடனும் இணைவானா? பொருத்திருந்து பார்க்கலாம்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
13
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. நல்ல முடிவு தான் மது .. இல்லனா சித்து என்ன பண்ணுவானோ ..

  2. சாப்பாட்டுக்கு பஞ்சமில்லையா?
    மது சமச்சு போடறத சாப்டிட்டு அவளயே சாப்பிட விடாம செய்றது. இதுல மத்தவங்க அவளை சாப்பிட வச்சாலும் பொறுக்காம பொறும வேண்டியது.

    தருண் குட்டிய பார்த்து கூட கோவம் வருது அம்மாக்கும் பொண்ணுக்கும்.

    பிறந்ததுல இருந்து சாப்பிடறவளுக்கு தெரியாதா அவ அம்மாவின் கைப்பக்குவம்.

    சித்துவும் எப்போ அவங்க கையால சாப்பிடரானோ அப்போவே நானும் சாப்பிடரேனு சொல்லிட்டா.

    ஒரு முறை அவன் பேச்சை மீறி அம்மா அப்பாகிட்ட பேசின குற்றயுணர்வில், இப்பொழுது அவனது சொல்லில் மிக தீவிரமாக இருக்கிறாள். சித்தார்த் அம்மா வீட்டுக்கு போக வேண்டும் என்றால் போகட்டும் என கூறியும் கூட.

    சித்தார்த் வரும்வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும்.