Loading

அத்தியாயம் 15..

 

 

 

 

 காதல் மனைவியை விஐபி சுவிஸ் நாட்டுக்கு ஹனிமூன் அழைத்து சென்றான்..

 

 

 

இருவருக்கும் இடையே திருமணம் பேசிய நாட்களில் இருந்து ஹனிமூன் செல்வதை பற்றி திட்டமிட்டு அவளிடம் பாஸ்போர்ட் மற்றும் வீசா எடுப்பதற்குரிய ஆவணங்களை வாங்கி அதற்கு உரிய முறையில் விண்ணப்பித்து இரண்டையும் பெற்றுக்கொண்டான்..

 

 

 

 

  சென்னை மாநகரத்தை தாண்டி எங்கும் சென்று இருக்காதவள் வெளிநாடு சென்று கணவனுடன் வீதியில் கைகோர்த்து சந்தோஷமாக ஒவ்வொரு இடத்தையும் ரசித்து ரசித்து சுற்றிப் பார்த்தாள்..

 

 

அவள் இந்த பூமியில் வாழும் காலம் எவ்வளவோ அது அவனுக்கும் தெரியாது.. இன்று அவள் முகத்தில் தன்னை கரம் பிடித்ததால் இருக்கும் சந்தோசத்தால் வந்த புன்னகை அவள் வாழும் காலம் வரை வாடாமல் அந்த புன்னகை நிரந்தரமாக இருக்க வேண்டும். என நினைத்துக் கொண்டான்..

 

 

 

 சேர்ந்தார் போல் ஒரு நிமிடம் கண்மணி அவள் கண்ணால் ஒரு பொருளை ரசித்துப் பார்த்தாலே அந்த பொருள் அடுத்த நிமிடம் அவள் கையில் இருக்கும்..

 

 

 

 

 அவளுக்கு எது பிடிக்கும் பிடிக்காது என அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டான்..

 

 

 

 அழகிய மாலை பொழுது.. அந்த ரம்யமான பொழுதை அவர்கள் காதலால் இன்னும் அழகாக்கினார்கள்..

 

 

“ என்ன தங்கமே ரொம்ப அமைதியா வாரிங்க.. என்னடாப்பா அப்படி அவ்வளவு சிந்தனை.. என்ன இந்த சுவிஸ் நாட்டையே விலை பேசலாம் என்ற எண்ணமா?.. அம்மணியின் சித்தமே அடியேனின் பாக்கியம்.. நீங்க சொல்ற பேச்சுக்கு மறு பேச்சே இல்லை.. சொல்லுடா என்ன இவ்வளவு யோசனை?.. ” என்றான்..

 

 

 

“ ஒன்னும் இல்லங்க.. இப்படி உங்களை கல்யாணம் பண்ணி இவ்ளோ பெரிய நாட்டுக்கு நான் ஹனிமூன் வந்து சுத்தி பார்ப்பேன்னு நான் கனவுல கூட நினைச்சு பார்க்கவில்லை.. நினைக்காதது நடக்கும் போது வரும் சந்தோஷத்தை எனக்கு வெளிக்காட்டிக்க தெரியல.. சாதாரணமான என் வாழ்க்கைக்கு இந்த உயரமான வாழ்க்கை அதிகமோன்னு எனக்கு தோணும்.. ஆனா நான் உங்க மேல வச்ச காதல் சாதாரணமானது இல்லை.. இதே மாதிரி இந்த விஐபி ஒரு சாதாரண குடும்பத்துல அதாவது எங்களை மாதிரி ஒரு வறுமை பட்ட குடும்பத்துல பிறந்த ஒரு திறமையான சிங்கரா இருந்தாலும் இதே அளவு என்னோட காதல் இருக்கும்.. உங்க குரலில் பாடல் கேட்டால் எவ்வளவு பெரிய கவலை சோகமா இருந்தாலும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.. இந்தக் குரலில் இருந்த மயக்கம் நான் நினைக்கும்போதெல்லாம் நேர்ல பாட வச்சி கேக்கணும்னு தீவிரம் வந்தது அந்த தீவிரம் காதலா மாறியது.. ஆனாலும் உங்ககிட்ட தெரியப்படுத்தி உங்க பக்க காதலை வாங்கணும்னு நான் நினைத்ததில்லை.. கண்மூடி திறக்கிறதுக்குள்ள எல்லாமே வேகமா நடந்ததுவிட்டது.. அதைப்பற்றி தான் யோசிச்சிட்டு இருக்கேன்.. எப்படி என் வாழ்க்கைல இந்த மேஜிக் நடந்தது என்று.. ” கூறி கணவனை மையலாக பார்த்து அவன் தலையை கோதிவிட்டாள்..

 

 

 

 அவள் தலைக்கோதிய கையை எடுத்து அதில் முத்தம் பதித்துவிட்டு.. “ அடடே..! என் தங்கத்தின் குட்டி மூளையில இவ்வளவு விஷயம் ஓடுதா என்ன?.. வாழ்க்கையே ஒரு மேஜிக் தானே.. யார் யாரிடம் வந்து சேரனும் என்று எழுதி இருக்கோ அதுதான் நடக்கும்.. அப்படி அந்த எழுத்து மட்டும் இல்லன்னா எவ்வளவுதான் உயிருக்கு உயிரா காதலிச்சாலும் அந்த காதல் கடைசி வரை சேராது.. காதலர்கள் பிரிவதற்கு இது தான் காரணம்.. 

 

 

 

 அதுதான் கணவன் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சொல்லுவாங்க.. அப்படிதாண்டி எனக்கு நீ அமைஞ்சிருக்க.. உனக்கு நான் அமைந்திருக்கேன்.. இதுல சந்தேகப்பட என்ன இருக்கு.. நம்ம ஜோடி சேரனும்னு எழுதி இருக்கு. அதுதான் அந்த கடவுள் உன்னை என் கண்ணுல காட்டி இருக்கார்.. பார்த்ததுமே உன்னை எனக்கு பிடிச்சிருச்சு.. நீதான் என்று தெரியாமலே நீ அனுப்பிய விஷஸ் எனக்கு புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்தது.. அப்புறம் தான் உன்னை தேட ஆரம்பிச்சேன்.. எங்க அம்மா மூலம் உன்னை கண்டுபிடிச்சேன்.. இதுதான் மேட்டர் அவ்வளவு தான் சிம்பிள்.. நமக்கு பாப்பா வரும் வரைக்கும் மாதம் ஒரு முறை நம்ம வேற வேற நாடுகளுக்கு ஹனிமூன் போகணும்.. உனக்கு தெரியாததை தெரியப்படுத்தி உனக்கு எல்லாத்தையும் சுத்திக் காட்டணும்.. அப்படி அவுட்டிங் வர உனக்கு சம்மதமா?. தங்கம்.. ” என்று கேட்டுக்கொண்டே அங்கே இருந்த ஒரு ரெஸ்டாரண்டில் காபி குடிப்பதற்கு இருவரும் போய் ஒரு மேசையில் அமர்ந்தார்கள்..

 

 

 

“ என் விஐபி சாரோட வர எனக்கு கசக்குமா என்ன?.. கட்டாயம் வருவேன்..” என்றாள் சந்தோசமாக..

 

 

 

“ நீ என்னடா சாப்பிடுற?.. இந்த ரெஸ்டாரன்ட் காபி ரொம்ப வித்தியாசமான டேஸ்டா இருக்கு.. ட்ரை பண்ணி பாக்குறியா?.. ”

 

 

“ ம்ம் பண்ணலாமே.. அப்போ நீங்க..” என்றாள்..

 

 

 

“ எனக்கும் அதே காபி தான்.. நாம வந்து ரெண்டு நாள் ஆச்சு.. இன்னும் சரியா வீட்டுல பேசல.. இங்க காபி குடிச்சிட்டு நேர ஹோட்டல் போயிடலாம்.. போய் அம்மா அத்தை எல்லாரோடையும் பேசலாம் சரியா?..” என்றான்..

 

 

“ சரிங்க.. ஆனால் எனக்கு அதுக்கு லஞ்சம் வேணும்.. ”

 

 

“ என்னது லஞ்சமா?. நீங்க ரொம்ப மோசமான மனைவியா இருக்கீங்க போல?.. லஞ்சம் எல்லாம் கொடுத்து எனக்கு பழக்கமில்லை. என்ன பண்ணலாம்.. நீயே சொல்லு..”

 

 

 

“ அப்படி என்ன நான் பெருசா கேட்டுட்ட போறேன்.. எல்லாம் என்னைக் கவர்ந்த உங்க குரல்ல ஒரு பாட்டு கேக்கணும்.. அவ்வளவு தான் சிம்பிள்… ” என்றாள்..

 

 

 

“ ஓஹோ.. இவ்வளவுதானா?.. நானும் என்னவோ ஏதோன்னு நினைச்சுட்டேன்..” என்றான். முகத்தில் குறும்பு புன்னகை தாண்டவம் ஆடியது..

 

 

 

“ நினைப்பீங்க சாரோட நினைப்பெல்லாம் எப்பவுமே அங்க தான் போகுது..” என்றாள்..

 

 

“ அப்புறம் என்னடி.. கோவில் தரிசனத்துக்கா வந்திருக்கோம்.. பய பக்தியா இருக்க.. ஹனிமூன் வந்தால் நினைப்பு எல்லாம் அங்க மட்டும் தான் இருக்கும்.. நினைப்பு அங்க இல்லாட்டி தான் பிழை.. ” என்றான்..

 

 

“ ஏங்க நான் ஒன்னு கேட்கணும் கோவிக்க மாட்டிங்களே..”

 

 

“ கோவமா? எனக்கா? அதுவும் உன் மேலயா?.. வாய்பே இல்லை ராணி.. என்னன்னு கேளுடா..” என்றான்..

 

 

 

“ இங்கே இருந்து ஊருக்கு போனதும் முன்ன மாதிரி நான் பொட்டிக் போகலாமா?.. உங்க மதிப்புக்கும் மரியாதைக்கும் பெருமைக்கும் நான் இந்த வேலை செய்வது உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லிடுங்க.. உங்க பேருக்கு எந்த ஒரு அவச்சொல்லையும் தேடித்தர எனக்கு விருப்பம் இல்லை.. நீங்க என்ன சொல்றீங்க?.. உங்க முடிவு தான் பைனல்..” என்றாள்..

 

 

 

“ அடியே..! என் செல்ல பொண்டாட்டி.. இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி கல்யாணம் நடந்ததால் நீ காலங்காலமா ஆசையா பிடிச்சு செய்து வந்த உன்னோட சுய தொழிலை எனக்காக ஏன் நீ விடனும்?.. கல்யாணம் முடிஞ்சதும் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் கலந்து பேசி ஒரு முடிவு எடுக்கணும் என்று ஏன் சொல்றாங்க?.. பிள்ளைகளுக்கு தாய் தகப்பனிடம் சொல்ல முடியாத சில விஷயங்கள் இருக்கும்.. ஆனால் கணவன் மனைவியிடையில் சொல்ல முடியாது என்ற விஷயம் இருக்க வாய்ப்பு குறைவு.. அதாவது திருமணத்துக்கு பின் நடக்கிற விஷயம்.. பாஸ்ட் இஸ் பாஸ்ட் தான்.. மனைவிக்கு ஒரு விஷயம் படிச்சிருக்கு அதை செய்யணும் என்றால் கணவனிடம் அதை சொல்லணும்.. மனைவிக்கு ஒரு விஷயம் சரியா இருக்கிறது கணவனுக்கு தவறா படலாம்.. அதில் இருக்கிற பாதகங்கள் தெரியாம இருக்கலாம்.. கணவன் கண்ணோட்டத்துல பாதங்களை கொஞ்சம் அலசி செய்யலாமா கூடாதா என்று பேசி முடிவெடுக்க வசதியா இருக்கு.. பாதகம் அதிகமா இருக்குன்னா செய்யாம இருக்கிறது நல்லது.. சாதகம் அதிகம்னா கணவனே சந்தோசமா தன் மனைவியை ஊக்கப்படுத்துவான்.. அதுக்குத்தான் அப்படி பெரியவங்க சொல்றதே தவிர கணவனுக்கு பிடிக்காதது செய்யக்கூடாது.. அடிமையா வாழனும்னு அர்த்தமில்லை..

 

 அதுவே உன்னோட விஷயத்தை எடுத்தால் ஆடை அலங்கார வடிவமைப்பு உனக்கு ரொம்ப பிடிச்சு நீ பண்ணுற வேலை.. அதை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க நினைக்க கூடாது.. இந்த வேலையோட சாதக பாதகங்களை நல்லா அலசி ஆராய்ந்து தான் முன்கூட்டியே நீங்க இதை ஆரம்பித்திருப்பீங்க.. வெற்றிகாரமா ஓடிக்கிட்டு இருக்கிறதை ஏன் இடையில் நிறுத்தணும் தேவையே இல்லை..

 

 

 

இன்னொரு முக்கியமான விஷயம்.. தேடிக்கிட்டு இருந்த உன்னை என் கண்ணுல காட்டினது இந்த பொட்டிக் தான்.. அதுதான் என்னோட லவ் ஸ்டார்ட் ஆகினா இடம்.. அப்படி பார்க்க போனா என்னோட தாஜ்மஹால் அதுதான்.. எனக்கு ரொம்ப ஸ்பெஷலான இடமும் கூட.. நீ தினமும் அங்க போகணும் நானே உன்ன பிக்கப் பண்ணி டிராப் பண்ணுவேன்..

 

 

ஆனால் ஒரு கண்டிஷன்.. பாப்பா வரும் வரைக்கும் நீ பொட்டிக் போகலாம்.. அப்புறம் உன் ஹெல்த் ரொம்ப பாத்துக்கணும்.. நீ வீட்ல இருந்து பண்ணக்கூடிய வேலைகளை வரவழைத்து பண்ணிக்கோ.. அதுக்கு நான் எந்த தடையும் போட மாட்டேன்.. ஆனால் நல்லா ரெஸ்ட் எடுக்கணும்..

 

 

 

 உனக்கு ஒரு விஷயம் பிடிச்சிருக்கு அது சரியா இருக்கும் பட்சத்துல நீ எனக்கா அதை விடனும் என்பது அவசியமில்லை..” என்று கூறி அவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டிவிட்டு இருவரும் காபி குடித்ததும் பில் செட்டில் பண்ணிவிட்டு அங்கிருந்து அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலை நோக்கி சென்றார்கள்..

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்