Loading

அறைக்குச் சென்று குளித்து சுத்தமாகிய பின் தாய் மீராவுக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்தான் விஐபி..

 

 

 ராமின் ஊருக்கு சென்றவர்கள் மீராவும் யசோதாவும் துர்கா வீட்டில் தங்கினார்கள்..

 

 

அவர்கள் அங்கே வந்ததும் துர்காவின் பாட்டி துர்கா மற்றுஅவள் கணவன் இருவரையும் சேர்த்து வைத்து ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்து விட்டு உள்ளே அழைத்து சென்றார்..

 

 

 துர்காவின் குழந்தை பருவத்திற்கு பின் அந்த வீட்டில் வரும் அடுத்த முதல் குழந்தை..

 

 

பெரியவர்கள் முகத்தில் சந்தோஷம் தாண்டவம் அடியாது..

 

 

 அனைத்து சந்தோஷமான விஷயத்துக்கும் சேர்த்து ஊருக்கே விருந்து வைப்பதற்காக விஐபி கண்மணி ஜோடி மற்றும் சீதா ராம் ஜோடியின் வரவிற்காக காத்திருந்தார்கள்..

 

 

 

 

 யசோதாவிற்கு 30 வருடத்திற்கு பின் இந்த இரண்டு நாட்களாக சொந்த ஊர் காற்றை சுவாசிப்பதே அவ்வளவு ஒரு மகிழ்ச்சியை கொடுத்தது..

 

 

 

 மீராவும் யசோதாவும் யமுனாவின் உதவியோடு அந்த ஊரில் வாய்க்கால் வரப்பு.. கோவில் என இயற்கை அழகோடு ஒன்றி போய் சுத்தி பார்த்தார்கள்..

 

 

 

 

 இருவரும் ஆளுக்கு ஒரு வீட்டில் தனித்தனியாக தனிமையை உணர்ந்து இருந்தவர்கள் இன்று ஒரே வீட்டில் ஒன்றாக பழைய கதைகள் எல்லாம் சுவாரசியமாக பேசிக்கொண்டு இளமை காலத்திற்கு திரும்பியது போல் சந்தோஷமாக இருந்தார்கள்..

 

 

 

 யமுனாவுக்கு அவர்களையும் அவர்களுக்கு யமுனாவையும் மிகவும் பிடித்து விட்டது..

 

 

 மீரா யமுனாக்கு தாயாகவே மாறிவிட்டார்..

 

 

 யமுனாவும் இத்தனை வருடங்களாக தாய் இல்லாத ஏக்கத்தை அவர்களோடு இணைந்து சந்தோசமாக அனுபவித்து தீர்த்துக் கொண்டாள்..

 

 

 

 தோழிகள் இருவருக்கும் 10 வயது குறைந்தது போல் இளமையாகவும் மனதில் சந்தோஷமாகவும் புத்துணர்ச்சியோடும் அந்த ஊரில் வளம் வந்தார்கள்..

 

 

 

 கிராமத்து மக்கள், கிராமத்து இயற்கை சூழ்நிலை, இயற்கையாக கிடைக்கும் உணவு பொருட்கள், இப்படி இயற்கையோடு ஒன்றாக ஒன்றி அந்த சென்னை மாநகரத்து வாழ்க்கை வேண்டாம் என்று முடிவு எடுக்கும் அளவுக்கு வந்து விட்டார்கள்..

 

 

 அன்றைய நாளும் உற்சாகமாக ஊர் சுற்றி திரிந்து விட்டு களைப்பாக மாலை நேரத்தில் வீட்டுக்கு வந்து குளித்து சுத்தமாகிவிட்டு டீயும் பச்சியும் சாப்பிட்டுவிட்டு அனைவரும் ஒன்றாக கூடத்தில் இருந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள்..

 

 

 

 அப்போதுதான் விஐபி தாய்க்கு அழைப்பு விடுத்தான்..

 

 

 

அருகே இருந்த மேசையில் மீரா மற்றும் யசோதா இருவரின் கைபேசியும் ஒன்றாக இருந்தது..

 

 

 

 அனைவரும் ஒன்று கூடி பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில் கைபேசி தொல்லை பேசியாக மாறிவிடக்கூடாது என்று முன் ஜாக்கிரதியாக அங்கே வைத்திருந்தார்கள்..

 

 

 அந்த வீட்டிலும் துர்காவை தவிர யாரிடமும் கைப்பேசி இல்லை..

 

 

 

 

 வீட்டில் ராம் இல்லாததால் துர்கா வீட்டில் இருந்து தான் கணேசன் மற்றும் யமுனா இருவரும் மூன்று வேளை உணவு உண்ணுவார்கள்..

 

 

 

 அதனால் இரவு உணவிற்காக இருவரும் துர்கா வீட்டிற்கு வந்திருந்தார்கள்..

 

 

 

 மீராவின் கைபேசி அழைப்பதை பார்த்து யமுனா எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்..

 

 

 கைபேசியை வாங்கியவர் திரையில் விஐபி மற்றும் கண்மணி கல்யாண புகைப்படம் அழகாக ஒளிர்ந்தது..

 

 

 ஒரு முறை அதை ஆசையாக பார்த்துவிட்டு அழைப்பை ஏற்று காதில் வைத்தார்..

 

 

“ ஹலோ மை சன் ஹவ் ஆர் யூ?. ”

 

 

“ என்ன அம்மா முகத்துல 1000 ஃவால்ஸ் பல்பு எரியுது.. ஐ அம் பைன்.. நீங்க எப்படி இருக்கீங்க எல்லாரும் எப்படி இருகாங்க?..”

 

 

 கைபேசியின் பின் கேமராவை மாற்றி அனைவரையும் வீடியோ காள் மூலம் அவர்களுக்கு காட்டினார்..

 

 

 

எல்லாரும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தான்.. அனைவருடனும் அவன் நலம் விசாரித்து பேசினான்.. அவனுடன் அவர்கள் பேசினார்கள்..

 

 

 கண்மணியும் அனைவரையும் நலம் விசாரித்து பேசினாள்..

 

 

 மீண்டும் விஐபி தாயிடம் பேசினான்..

 

“ என்னம்மா ரொம்ப ஹேப்பியா இருக்கீங்க போல?..”

 

“ ஹேப்பின்னு வார்த்தையால சொல்லி முடிக்க முடியாது கண்ணா..

 ரொம்ப ரொம்ப ஹாயா,ஜாலியா ஃபன் பண்ணிட்டு இருக்கோம்.. உங்க அப்பாவோட ஊர் இல்லையா கண்ணா.. அப்பாவோட பழைய விஷயங்கள் பேசி நினைவுகளோட சந்தோசமா இருக்கோம்.. நீங்க கட்டாயம் வருவீங்க தானே கண்ணா?.. ”

 

“ யா கண்டிப்பா ஹனிமூன் முடிஞ்சு நாட்டுக்கு வந்ததும் அடுத்த பிளைட் பிடிச்சி அங்கதான் வருவோம்.. நோ அப்ஜக்ஷன்.. ஆமா ராம் சீதா எப்ப வருவாங்க?.. ”

 

 

“ சீதா ஈவினிங் தான் போன் பண்ணினா?.. நாளையோட எக்ஸாம் முடியுதாமே, ஒரு 2 டேஸ்ல வருவதா சொன்னா.. ” என்றார்..

 

 

“ சரி மா.. ராம் தான் பாவம். தனிய யாருமே இல்லாம சீதா கைல சிக்கிட்டான்.. என்ன பாடுபடுறானோ..!” என்று மீராவுடன் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கே யசோதா வந்தார்..

 

 

 

விஐ பி பேசியது அவர் காதிலும் விழுந்தது..

 

 

 

மீராவின் கையில் இருந்து கைபேசியை வாங்கி அதற்கு யசோதாவே அவனுக்கு பதில் சொன்னார்..

 

 

“ விஜய் அதெல்லாம் மாப்பிள்ளை சமத்தா என் பொண்ண சமாளிச்சிட்டுவார்.. ஆள் பாக்க தான் அமைதி. ஆனா இப்ப எல்லாம் சீதா அவர்கிட்ட அதிகமா உதாசீனப்படுத்தி பேசுறது குறைவு.. அப்படித்தான் நான் நினைக்கிறேன்.. ஆனா எனக்குத் தெரியாமல் இரண்டு பேருக்கு இடையில தனிப்பட்ட முறையில் சண்டை வருதோ தெரியாது.. ஆனா நீ வேணும்னா பார் விஜய்.. ராமும் சீதாவும் பேர் பொருத்தத்திற்கு ஏற்ற மாதிரி பொருத்தமான ஜோடியா உதாரணமா வாழ்ந்து காட்டுவாங்க.. மாப்பிள்ளை அப்படி வாழ வச்சுடுவார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. நீங்க ரொம்ப கவனமா எல்லாத்தையும் சுத்தி பாத்துட்டு வாங்க.. கண்மணிக்கு புது இடம் கண்மணியை ரொம்ப கவனமா பார்த்துக்கோ..” என்று யசோதா கூறினார்..

 

 

 

“ சரிங்க அத்தை.. சீதா வாழ்க்கை சந்தோஷமா இருந்தா எனக்கு ரொம்ப சந்தோஷம் அத்தை.. மாமா இடத்தில் இருந்து சீதாவோட வாழ்க்கையை நல்லபடியா அமைச்சு கொடுத்து அதை சீர்படுத்துவது என்னோட பொறுப்பு தானே.. அவங்க சந்தோஷமா இருந்தால் அதுவே போதும்..

 

 

ஆமாம் நீங்க ரெண்டு பேரும் அந்த ஊருக்கு போனதும் ரொம்ப ஜாலியா லைப் என்ஜாய் பண்றீங்க போல?.. உங்களை இப்படி பாக்குறதுக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அத்தை.. நீங்க கொஞ்ச நாளைக்கு அங்கேயே இருந்து சீதாவையும் ராமையும் சந்தோசமா வாழ வச்சிட்டு நீங்களும் சந்தோசமா இருந்துட்டு தோணும்போது இங்க வந்தா போதும்.. சரியா?..” என்றான்..

 

 

 

“ அது எங்கப்பா விஜய் நடக்கும். இப்ப நம்ம எல்லாரும் இங்க வந்துட்டோம்.. நீயும் வான்னு கட்டாயப்படுத்தியதால் எக்ஸாம் முடிய இங்க வருவதற்கு சம்மதிச்சிருக்கா.. படிப்பு முடிய இன்னும் அடுத்து மூணு மாதம் இருக்கு.. இங்க வந்ததும் ரெண்டு நாள் சேர்ந்த மாதிரி சீதா இங்கே தங்கினாலே பெரிய அதிசயம்.. அப்படி இருக்கும் போது எப்படி படிப்ப முடிஞ்சதுக்கு அப்புறம் சீதாவை இங்க இந்த குடும்பத்துக்கு மருமகளா வாழ வைக்க போறேனோ தெரியல.. ” என்றார்..

 

 மகள் வாழ்க்கையைப் பற்றிய கவலை யசோதா முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது..

 

 

 

“ என்ன அத்தை இப்படி திடீர்னு சோகமா இருக்கீங்க.. நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்.. மூணு மாசம் வரைக்கும் தான் சீதா மனம் மாறுவதற்கு டைம்.. அப்புறம் எல்லாரும் சேர்ந்து சீதாவை அங்கு அனுப்பினால் இரண்டு பேரும் பேசி பழகி சந்தோசமா அவங்க வாழ்க்கை வாழ ஆரம்பிச்சுடுவாங்கன்னு நம்புவோம்.. நல்லதே நடக்கும்.. சரி அத்தை அம்மா கிட்ட குடுங்க..” என்றான்..

 

 மீராவின் கைக்கு அலைபேசி வந்ததும் விஐபி கண்மணியிடம் அலைபேசியை கொடுத்தான்..

 

 

 

“ ஹலோ கண்மணி.. சந்தோஷமா இருக்கியாம்மா?.. அவனை சும்மா மட்டும் விட்டுடாத.. உனக்கு என்ன எல்லாம் பிடிக்குமோ எல்லாத்தையும் கேட்டு வாங்கி அவன் பர்சை காலி பண்ணி கூட்டிட்டு வந்துடு.. அது போதும்.. அங்க எல்லாம் புடிச்சிருக்கா?..” என்றார் மீரா..

 

 

“ நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் அத்தை.. இங்கே எல்லாமே ரொம்ப பிடிச்சிருக்கு.. நான் எதுவும் கேட்காமலே அவர் எல்லாம் வாங்கி தருவார்.. நீங்க எல்லாரும் சாப்பிட்டீங்களா அத்தை?..” என்றாள்..

 

 

 

“ இன்னும் இல்லம்மா.. எல்லாரும் கூடி இருந்து பேசிக் கொண்டிருந்தோம்.. நேரம் போனதே தெரியல.. இனித்தான் எல்லாருக்கும் சாப்பிடனும்.. அம்மா கிட்ட பேசினியா?.. ” என்றார்..

 

 

“ அம்மா கிட்டயும் பேசினேன் அத்தை.. சீக்கிரம் போய் சாப்பிடுங்க.. மாத்திரை போடணும் இல்ல.. மறந்துடாதிங்க அத்தை.. சரி நான் வைக்கவா?..” என்று மாமியாரின் உடல் நலையை கருத்தில் கொண்டு பேசிவிட்டு வைத்தாள்..

 

 

 

 அலைபேசி துண்டிக்கப்பட்டதும்..

 

 விஐபி இருவருக்கும் தேவையான உணவை அறைக்கு எடுத்து வரும்படி அறையில் இருந்த தொலைபேசி மூலம் அழைத்து கூறிவிட்டு வைத்தான்..

 

 

 

 பத்து நிமிடத்தில் அவர்கள் கேட்ட உணவு வந்ததும் கண்மணி இருவருக்கும் தேவையான உணவை தட்டில் எடுத்து வைத்து கொடுக்கவும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டிக்கொண்டே சாப்பிட்டார்கள்..

 

 

 

 சாப்பிட்டதும் தட்டுகளை எடுத்து கழுவி வைத்துவிட்டு விஐபி பல்கனியில் இருந்தான்.. அவன் அருகே போய் கண்மணி நின்றாள்..

 

 

 

 மனைவியை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு வானத்தில் இருந்த நட்சத்திரங்களை பார்த்து பேசிக்கொண்டே இருவரும் அங்கிருந்து ஊஞ்சலில் இருந்தார்கள்..

 

 

 மனைவி ஆசைப்பட்டு கேட்டதால் ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம் ’ எனும் குணா திரைப்படத்தின் பாடலை மனைவிக்காக காதலோடு உருகி பாடினான் விஐபி… 

 

 

 

 கணவனின் காந்த குரலில் அவளுக்காக முதல் முதலாக பாடிய பாட்டை ரசித்து அதில் ஒன்றி போய் கேட்டுக் கொண்டே அவன் தோளில் சாய்ந்து இருந்தாள் கண்மணி..

 

 

 அரை மணி நேரம் அப்படியே அந்த ஏகாந்த பொழுதை ரசித்தார்கள்.. அதன் பின் அப்படியே கைகளில் மனைவியை ஏந்தி கொண்டு அறைக்கு வந்து மெத்தையில் அமர்ந்தான் விஐபி..

 

 

 முதல் இரவு அன்று அவர்கள் இருவரும் கூடியது..

 

 

 அதன் பின் மறுவீட்டு அழைப்பின் போதும் சரி இங்கு வந்த இரண்டு நாளும் சரி அவளை தொல்லை செய்யவில்லை..

 

 

 இங்கே வந்தும் இரண்டு நாட்கள் ஆகிவிட்டது..

 

 இன்று ஏனோ அவன் மனைவி அவனுக்கு வேண்டும் என்று தோன்றவும் அவளிடம் சம்மதம் கேட்பதற்காக அவள் பாதங்களில் முத்தமிட்டான்..

 

 

 கணவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டு மனைவியும் தாம்பத்திய மொழியில் சம்மதம் கொடுத்தாள்..

 

 

 மனைவியின் சம்மதம் கிடைத்ததும் பாதங்களை பிடித்து அமத்தி கொண்டே முத்தமிட்டு அப்படியே முன்னேறினான்..

 

 

 பாதத்தில் ஆரம்பித்த முத்தம் இதழில் வந்து முடிந்தது..

 

 

 

 இருவருக்கும் இடையே இடைவெளிகள் குறைந்து போர்வை ஆடையாகி அவர்களின் அழகிய சங்கமத்திற்கு சாட்சியாக சிருங்கார சினுங்கல்கள் சங்கீதமாக ஒலித்தது..

 

 

 

 கூடல் முடிந்ததும் அவளை அவன் தோளில் சாய்த்து தட்டிக் கொடுத்து உறங்க வைத்தான்..

 

 

 அவள் உறங்கியதும் அவன் கண்ணில் கண்ணீர் வழிந்தது..

 

 

 அவளுக்கு இருக்கும் இந்த சாபக்கேடு பற்றி தெரிந்ததும் அதை நினைத்து அவன் மனம் கலங்கியது..

 

 

அவன் எதிரிக்கு கூட இப்படி ஒரு கொடுமை வரக்கூடாது என்று இறைவனிடம் பிரார்த்தித்தான் விஐபி..

 

 

 

 என்னதான் பணத்திலும் சரி பதவியிலும் சரி வசதி வாய்ப்போடு இருந்தாலும் சிலவற்றை மாற்ற முடியாது..

 

 

 அதில் மரணமும் ஒன்று.. யாரின் மரணம் எப்போது என்று யார் கையிலும் இல்லை..

 

 

அது இயற்கையோடு ஒன்றியது இயற்கை விதியை மாற்ற முடியாது..

 

 

 ஆனால் விஐபி மனைவியின் மேல் வைத்திருக்கும் காதலால் மாற்ற முயற்சி செய்வான்..

 

 

 அந்த முயற்சி வெற்றி பெறுமா?.. இல்லை தோல்வி அடையுமா?.. என்று பொறுத்திருந்து பார்ப்போம்.. 

 

 

 

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்