Loading

 

தனிமையிலேயே உலாவருகின்ற 

         நேரத்திலேயே!..  

 

என் இரு விழிகள் வானத்தை.    நோக்கியதன்றோ!… 

 

அந்திமாலைப் பொழுதிலேயே 

        இருள் சூழ்ந்த வேளையிலேயே!…

 

மேகத்தோடு செந்நிற வண்ணமாக 

              தோன்றிடுமே பிறையே!  …. 

 

      ஆகாயமோ, அழகான       வண்ணத்திலேயே!….  

             அந்திவானத்தில் அத்தனை காட்சிகளல்லவா!..

 

     அந்தி நேரத்தில் மழைப்பொழிந்தாயோ!…

              சூரியன் மறைகின்ற பொழுதிலேயே!.. 

     சந்திரனின் பிரகாசம் 

            மிளிருமோ!..   

 

            அந்தி வேளையில் பறவைகள் 

      உல்லாசமாக பறக்கின்றனவே!..  

 

அனைத்துமே ஒன்றாக இணைந்திடும் 

      காட்சிகளை ரசித்தனவே!..    

      

               

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment