Loading

ஹாய் டியர்ஸ் எப்படி இருக்கீங்க? திஸ் இஸ் யுவர்ஸ் ஒன் அன் ஒன்லி “ஜிகர் தூது”

நம்ப கதை பெயர் “காமதேவனின் காதல் தூது” டியர்ஸ் , நவம்பர் 1-ம் தேதி-யில் இருந்து நம்ப கதையை ஆரம்பிக்க போறோம். நீங்க எல்லோரும் நம்ப காமதேவனின் காதல் தூதை தெரிஞ்சிக்க வந்திருங்க டியர்ஸ். அதுவரை ஒரு ஜிகர்தண்டா உங்களுக்காய் (ஹீஹீ டீ -அ தாங்க அப்படி சொன்னேன்)

டீசர் :

“மோகன சுந்தரியே!

இன்னும் எத்தனை காலங்களுக்கு உன் மோகனங்களால் என்னை மயக்கி கொண்டே இருப்பாய் . நான் நானாய் இருந்த காலங்கள் என்றால் குறைந்தது ஒரு ஐந்து வருடங்கள் இருக்குமா? என் மீதி வருடங்கள் அனைத்தும் உனது மோகனங்கள் மட்டுமே என்னை ஆழியாய் சூழ்ந்துள்ளது.

ஆயினும் இதற்கு நான் வருந்தவேண்டுமா என்ன? உன் மோகனங்கள் உன் ரூபங்கள் அல்லவா அவை என் இதயத்தின் உனக்கான ராகங்கள் அல்லவா?

அந்த ராகங்கள் அனைத்தும் சுககீதமாய் அன்று போல், இன்று போல் என்றுமே என்னை மீட்டிக்கொண்டிருக்கவே என் மனம் ஆசை கொள்கிறது.

என் மோகன சுந்தரியே! உன் ரூபங்கள் என்னை சுகமாய் வதைப்பதற்கு தண்டனையாய் என் இதய அம்புகளை உன்னை நோக்கி எய்ய என் இதழ்களுக்கும், கரங்களுக்கும் கட்டளை இட போகிறேன். என் அ(ன்)ம்புகளை தாங்கி கொள்ள உனக்கு சம்பந்தமா ?

இப்படிக்கு

-ரதிதேவன்”

கடிதத்தை படித்த பெண்ணவளின் கைகள் அனிச்சையாய் அக்கடிதம் வந்த உரையை எடுக்க, கண்கள் அந்த உரையில் எழுதியிருந்ததை மூளைக்கு கடத்தியதில் “காமதேவனின் இதய தூது” என அவள் இதழ்கள் அழகாய் உச்சரித்தது.

வாசித்த இருநொடிகள் அமைதியாய் இருந்தவள் அக்கடிதத்தில் இருந்த வார்த்தைகளை தனக்குள் ஒருமுறை ஓட்டி பார்த்து “இதை யார் அனுப்பி இருப்பாங்க ? நிஜமாவே இதை நம்ப சுந்தரிக்கு தான் எழுதுனாங்களா? ஆனா எனக்கு ஏன் இது எனக்காகனு தோணுது?” என யோசனைகளுக்கு இடையில் சிக்கினாள்.

“ரூபா! அடியே ரூபா… சீக்கிரம் இதை பாரேன்!”

என்று ஆர்பரித்த தோழி கிருபாகரியின் தன் தோள் பற்றிய குலுக்கலில்  யோசனையில் இருந்து வெளியில் வந்தாள்  மோகனசுந்தரரூபாவதி .

*****************

“தம்பி! அந்த லெட்டரை சரியா சேர்த்துட்டியா இல்லையா?” மூச்சிரைக்க, வியர்வையில் தெப்பமாய் நனைந்து தன்முன் நின்றிருந்த அந்த ஐந்தரை அடி ஆண்மகனை கண்கள் பிதுங்க பார்த்தான் அந்த சிறுவன்.

“என்ன? அண்ணா! நீ இதை கேட்கவா இவ்வளவு தூரம் வந்திருக்க?” அதிர்ச்சியாய் வாயை பிளந்த சிறுவனை கண்டு தன் அசட்டுதனம் உணர்ந்த ஆணவன் தன் இடக்கரத்தால் முகத்தை மறைத்தபடி கண்களை சுருக்கினான்.

“அவன் மட்டும் வந்திருந்தா பரவாயில்லையே எப்படியும் ராத்திரி நீ வீட்டுக்கு தான் வரபோறனு சொல்லியும் கேக்காம கிட்டதட்ட ஆறு கிலோமீட்டருக்கு இந்த லூசு பையன் என்னையும்ல நடக்கவச்சி கூட்டிட்டு வந்திருக்கான்” என நண்பனை முறைத்தபடி மூச்சிரைக்க அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தான் வினோதன்.

**********

“இங்க பாரு சும்மாசும்மா என்னை சொல்லவைக்காத, நல்லா கேட்டுக்கோ! உனக்கும் எனக்கும் நடுவுல எதுவும் கிடையாது எதுவுமே கிடையாது”

அதட்டலாய் சொல்லியவளை சிறிதும் சட்டைசெய்யாதவன் அவளை பார்த்தபடியே அவள் அருகே எட்டுவைத்தான்.

அவனின் அசைவில் கண்களில் கலவரம் வர பின்னெட்டு வைத்தவளின் வாயோ தைரியமாய் வாயாடியது,

“பைத்தியகாரதனமா எதுவும் செய்யாத மதனா! இது ஒன்னும் உன்னோட வீடு இல்ல ‘சுந்தரி குரூப்ஸோட ஆபிஸ் ரூம்’. தள்ளி போ, அதான் நமக்குள்ள எல்லாம் முடிஞ்சிடுச்சினு சொல்றேன் தான”

படபடத்தவளின் நயனங்களை கண்டபடியே அவள் பேச்சை அசட்டைசெய்தவன்  இரண்டே எட்டில் அவளை நெருங்கியிருந்தான்.

அவள் உயரத்திற்கு ஏதுவாய் சற்றே குனிந்து முகத்தின் முன் முகம் வைத்தவனின் செயலில் அவளுக்கு மூச்சடைக்க,

அவனோ “தங்களையே தியாகிக்கிற அளவுக்கு அன்பு இருந்தா காதல் முறிவுக்கு பின்னும் சரி, காதல் பிரிவுக்கு பின்னும் சரி, மீண்டும் அந்த காதல் இணைஞ்சே தீரும் என் ரதி தேவியாரே”

அழுத்தமாய் உச்சரித்தவனை கோபமாய் பார்த்தவள், “வாய்ப்பே இல்ல! முறிஞ்ச காதல் முறிஞ்சது தான்..பிரிந்த நாமும் இனி பிரிந்தவர்கள் மட்டும்தான்”

அவனுக்கு நிகரான அழுத்தமும், ஆளுமையும் அவளின் உச்சரிப்பிலும் இருந்தது.

ஹாய் டியர்ஸ் எப்படி இருக்கீங்க? திஸ் இஸ் யுவர்ஸ் ஒன் அன் ஒன்லி “ஜிகர் தூது”

நம்ப கதை பெயர் “காமதேவனின் காதல் தூது” டியர்ஸ் , நவம்பர் 1-ம் தேதி-யில் இருந்து நம்ப கதையை ஆரம்பிக்க போறோம். நீங்க எல்லோரும் நம்ப காமதேவனின் காதல் தூதை தெரிஞ்சிக்க வந்திருங்க டியர்ஸ். அதுவரை ஒரு ஜிகர்தண்டா உங்களுக்காய் (ஹீஹீ டீ -அ தாங்க அப்படி சொன்னேன்)

டீசர் :

“மோகன சுந்தரியே!

இன்னும் எத்தனை காலங்களுக்கு உன் மோகனங்களால் என்னை மயக்கி கொண்டே இருப்பாய் . நான் நானாய் இருந்த காலங்கள் என்றால் குறைந்தது ஒரு ஐந்து வருடங்கள் இருக்குமா? என் மீதி வருடங்கள் அனைத்தும் உனது மோகனங்கள் மட்டுமே என்னை ஆழியாய் சூழ்ந்துள்ளது.

ஆயினும் இதற்கு நான் வருந்தவேண்டுமா என்ன? உன் மோகனங்கள் உன் ரூபங்கள் அல்லவா அவை என் இதயத்தின் உனக்கான ராகங்கள் அல்லவா?

அந்த ராகங்கள் அனைத்தும் சுககீதமாய் அன்று போல், இன்று போல் என்றுமே என்னை மீட்டிக்கொண்டிருக்கவே என் மனம் ஆசை கொள்கிறது.

என் மோகன சுந்தரியே! உன் ரூபங்கள் என்னை சுகமாய் வதைப்பதற்கு தண்டனையாய் என் இதய அம்புகளை உன்னை நோக்கி எய்ய என் இதழ்களுக்கும், கரங்களுக்கும் கட்டளை இட போகிறேன். என் அ(ன்)ம்புகளை தாங்கி கொள்ள உனக்கு சம்பந்தமா ?

இப்படிக்கு

-ரதிதேவன்”

கடிதத்தை படித்த பெண்ணவளின் கைகள் அனிச்சையாய் அக்கடிதம் வந்த உரையை எடுக்க, கண்கள் அந்த உரையில் எழுதியிருந்ததை மூளைக்கு கடத்தியதில் “காமதேவனின் இதய தூது” என அவள் இதழ்கள் அழகாய் உச்சரித்தது.

வாசித்த இருநொடிகள் அமைதியாய் இருந்தவள் அக்கடிதத்தில் இருந்த வார்த்தைகளை தனக்குள் ஒருமுறை ஓட்டி பார்த்து “இதை யார் அனுப்பி இருப்பாங்க ? நிஜமாவே இதை நம்ப சுந்தரிக்கு தான் எழுதுனாங்களா? ஆனா எனக்கு ஏன் இது எனக்காகனு தோணுது?” என யோசனைகளுக்கு இடையில் சிக்கினாள்.

“ரூபா! அடியே ரூபா… சீக்கிரம் இதை பாரேன்!”

என்று ஆர்பரித்த தோழி கிருபாகரியின் தன் தோள் பற்றிய குலுக்கலில்  யோசனையில் இருந்து வெளியில் வந்தாள்  மோகனசுந்தரரூபாவதி .

*****************

“தம்பி! அந்த லெட்டரை சரியா சேர்த்துட்டியா இல்லையா?” மூச்சிரைக்க, வியர்வையில் தெப்பமாய் நனைந்து தன்முன் நின்றிருந்த அந்த ஐந்தரை அடி ஆண்மகனை கண்கள் பிதுங்க பார்த்தான் அந்த சிறுவன்.

“என்ன? அண்ணா! நீ இதை கேட்கவா இவ்வளவு தூரம் வந்திருக்க?” அதிர்ச்சியாய் வாயை பிளந்த சிறுவனை கண்டு தன் அசட்டுதனம் உணர்ந்த ஆணவன் தன் இடக்கரத்தால் முகத்தை மறைத்தபடி கண்களை சுருக்கினான்.

“அவன் மட்டும் வந்திருந்தா பரவாயில்லையே எப்படியும் ராத்திரி நீ வீட்டுக்கு தான் வரபோறனு சொல்லியும் கேக்காம கிட்டதட்ட ஆறு கிலோமீட்டருக்கு இந்த லூசு பையன் என்னையும்ல நடக்கவச்சி கூட்டிட்டு வந்திருக்கான்” என நண்பனை முறைத்தபடி மூச்சிரைக்க அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தான் வினோதன்.

**********

“இங்க பாரு சும்மாசும்மா என்னை சொல்லவைக்காத, நல்லா கேட்டுக்கோ! உனக்கும் எனக்கும் நடுவுல எதுவும் கிடையாது எதுவுமே கிடையாது”

அதட்டலாய் சொல்லியவளை சிறிதும் சட்டைசெய்யாதவன் அவளை பார்த்தபடியே அவள் அருகே எட்டுவைத்தான்.

அவனின் அசைவில் கண்களில் கலவரம் வர பின்னெட்டு வைத்தவளின் வாயோ தைரியமாய் வாயாடியது,

“பைத்தியகாரதனமா எதுவும் செய்யாத மதனா! இது ஒன்னும் உன்னோட வீடு இல்ல ‘சுந்தரி குரூப்ஸோட ஆபிஸ் ரூம்’. தள்ளி போ, அதான் நமக்குள்ள எல்லாம் முடிஞ்சிடுச்சினு சொல்றேன் தான”

படபடத்தவளின் நயனங்களை கண்டபடியே அவள் பேச்சை அசட்டைசெய்தவன்  இரண்டே எட்டில் அவளை நெருங்கியிருந்தான்.

அவள் உயரத்திற்கு ஏதுவாய் சற்றே குனிந்து முகத்தின் முன் முகம் வைத்தவனின் செயலில் அவளுக்கு மூச்சடைக்க,

அவனோ “தங்களையே தியாகிக்கிற அளவுக்கு அன்பு இருந்தா காதல் முறிவுக்கு பின்னும் சரி, காதல் பிரிவுக்கு பின்னும் சரி, மீண்டும் அந்த காதல் இணைஞ்சே தீரும் என் ரதி தேவியாரே”

அழுத்தமாய் உச்சரித்தவனை கோபமாய் பார்த்தவள், “வாய்ப்பே இல்ல! முறிஞ்ச காதல் முறிஞ்சது தான்..பிரிந்த நாமும் இனி பிரிந்தவர்கள் மட்டும்தான்”

அவனுக்கு நிகரான அழுத்தமும், ஆளுமையும் அவளின் உச்சரிப்பிலும் இருந்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0
  • Select

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்