Loading

அத்தியாயம் இருபத்து எட்டு

  தான் கண்டுபிடித்தது சரியா தவறா என்றெல்லாம் உறுதியாக கூற முடியாது , தன்னால் முடிந்த வரை பிளைட் பாக்டீரியாவை அளிக்கும் மண்ணில் இருந்து மரபணு மாற்றங்களை செய்தவள் அதை நிலத்திலும் படற விட்டிருந்தாள் . இதன் விளைவு ஒன்று,  நாளை மதியத்திற்குல் தெரியும் இல்லையென்றால் அவள் செய்த அனைத்து முயற்சியும் குப்பைக்கே. எல்லா கடவுளிடமும் தன்னவனுக்காக வேண்டி மீதம் இருந்த பாக்டீயாவையும் மரபணு  மாற்றம் செய்தே ஆனந்த் அனுப்பிய பாக்டீரியாவையும் சித்திற்கு காட்டுவதற்காக சிறிது அளவு மட்டும் மீடியம் என்று அழைக்கப்படும் நுண்ணுயிர் வளரும் இடத்தில் வைத்து வீட்டிற்கு வந்திருந்தாள்.

குடித்து தடுமாறும் ரகம் எல்லாம் சித் இல்லை , இன்று வாழ்க்கையே வெறுத்தவனாய் இத்தனை குடி. சந்துருவும் தூக்கி நிறுத்த அவன் சரிய, இதுவே ரிப்பீட் ஆக, கடைசியில் பொறுமை இழந்தவனாய் தன் மச்சானை பொட்டலம் போல் மடித்து தன் தோளில் தூக்கி போட்டு நடக்க ஆரம்பித்தான்.

‘ தடி பையன் இவ்வளவு கட்ஸ் ஜிம்லாம் போயும் இந்த கனம் கனக்குறானே ? ஐயோ வீட்டுக்கு போனா….வாசு அப்பா வேற என்னமோ நான் தான் ஊத்தி குடுத்த மாறி அடிப்பாறே ‘ என தனக்குள்ளே புலம்பி அவனை தூக்கி காரின் பின் இருக்கையில் போட்டு சித்தார்த் வீட்டை நோக்கி பறந்தான். நேரம் பதினொன்றை நெருங்க , அவர்களும் வீடு வந்து சேர்ந்திருந்தனர்.

சித் வீடு :

வாசலிலே காத்திருந்தாள் மகி, தன்னவனை பார்க்க துடித்த கண்களை பொறுக்குமாறு கட்டளை இட,  அந்த காஃபி நிற விழிகளோ அவள் பேச்சை கேட்காது வாசலை பார்த்தவாறே இருந்தது. காம்பௌன்ட் கதவு திறந்ததும்  அவர்கள் வீடு வரும்வரை காத்திருக்க முடியாமல் கார் பார்க் செய்யும் இடத்திற்கே ஓடிச் சென்றாள்.

தன் இருக்கையை விட்டு எழுந்தவனாய் , சித்தை அப்போது போல் பொட்டலம் போடாமல் தன்னோடு அனைத்தவாறே வீட்டிற்குள் கூட்டி வந்தான் சந்துரு.

”  எல்லாம் போச்சு… நா இனி உயிரோடவே இருக்க கூடாது , என் ஆசை , என் உழைப்பு எல்லாம் ….” என வார்த்தைகளை உளரியவாறு   தடுமாறி சந்துருவையும் அங்கும் இங்குமாய் ஆட்டி கொண்டு வந்தான் சித்.

” ஐய்யோ …என் காதுல இருந்து ரத்தம் வந்திரும் போல ,  இவன அதான் போச்சுல விடவேண்டியது தானே ” என்று சந்துரு கடுப்புடன் கூற , மகி அவனை முறைத்துக் கொண்டு இருந்தாள்.

தன்னவன் படும் கஷ்டம் அவனுக்கு சிரிப்பாக இருக்கிறதா என அவளுக்கு ஆதங்கம்.

” சந்துரு என் கண்ணாவுக்கு தான் தெரியும் அந்த தோல்வி எவ்வளவு வலிக்கும்னு ” என்றவளில் வார்த்தைகள் கடுமையாகவே இருந்தது. அவளை பார்த்து சிரித்தவன்

” மகி தோல்வி , வலி எல்லாம் வரகூடாதுனு வேண்டலாம். அது வந்துட்டா  இதோ… ஏதோ இன்னைக்கே செத்து போய்றவன் மாறி குடிச்சிட்டு  அழுதா சரி ஆகாது. திரும்பவும் ஆரம்பிக்கனும் புதுசா… எவ்வளவு வெறி இருக்கோ அந்த அளவு மறுபடியும் முயற்சி செஞ்சு அதை வெற்றி பெற வைக்கனும். இதை சொல்ல ஈசி தான் ஆனா இதை செஞ்சா தான் வாழ்க்கைல சாதிக்க முடியும். இவனுக்கு உயிராய் நினைச்சதுல தோல்வி வர கூடாது , உண்ணோட காதலும் தான் தோற்றது அதுக்காக நீ என்ன எப்போபாறு குடிச்சிட்டு அழுதிட்டா இருக்க, இல்லைல வாழ்க்கைல அடுத்த கட்டத்த ஃபேஸ் பண்ற தானே . அது இவனுக்கு கொஞ்சம் சொல்லி குடு , நீயும் ஒப்பாரி வைக்காமல் ” என்று நீண்ட உரையை கூறி முடித்தான். 

அதற்கு மகியினாள் பதில் ஏதும் கூற முடியவில்லை ,சந்துரு கூறியதில் தவறேதும் இல்லையே ! என நினைத்தவள் தன்னவனை தானே பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டாள். சந்துருவின் நல்ல நேரமாய் வாசுதேவனும் ராதாவும் தூங்கி கொண்டு இருக்க , சிரித்துக் கொண்டே சித்தை அவன் அறை மெத்தையில் போட்டான்.

” மகி நீ ஏதோ சொன்னியே அதை பண்ணிடியா ” 

” ம்ம்ம் சந்துரு …நீங்களும் அங்க போய் மிச்ச இருக்குற பாக்டீரியாவை நிலத்துல பரப்பி விடுங்க. நான் சரியா பண்ணிருந்தா கண்டிப்பா நாளைக்கு மதியம் குள்ள பரவியிருக்க  பிளைட் பாக்டீரியா செத்திடும் ” என்றாள்.

” ஓஓஓஓ ” என்றே சந்துரு கூறி திரும்ப பார்க்க, மீண்டும் மகியின் குரல் பேசியது

” சந்துரு இதை வேனும்னு யாரோ பண்ணிருக்காங்க… சித் பண்ணது சரியா தான் வேலை செஞ்சிருக்கு . யாரோ பிளைட் பாக்டீரியா வீரியத்தை கூட்டி இப்படி பண்ணிருகாங்க ” என்றது வந்ததே சந்துரவிற்கு கோபம் , இப்போது வரை தன் நண்பன் ஏதோ சொதப்பி விட்டான் என்று நினைக்க, இப்போது பார்த்தாள் யாரோ செய்திருப்பது அவனின் கோபத்தை தூண்டியது.

” நினைச்சேன் கண்டிப்பா இது யாரோ வேலையா தான் இருக்கும்னு , அதானே சித் இத்தனை வருசம் உழைச்சது எப்படி வீனா போகும்னு. சரி  எந்த எருமைனு இப்படி பண்ணுச்சுனு நான் பாத்துக்கிறேன், இந்த குடிச்சிட்டு கடக்கான் பாறு அவனுக்கு ஏதாச்சு தின்ன குடு.  தின்னுட்டு மறுபடியும் பொலம்ப ஆரமிப்பான் அப்போ மண்டைலே ஒரு அடிய போட்டு தூங்க வை ” என்று கோபத்தோடு ஆரம்பித்து சிரிப்போடு முடித்தான்.

மகியும் அவன் கூறியது அனைத்திற்கும் தன்னவன் புலம்புவதை பார்த்தவாறே மண்டையை ஆட்டினாள்.

” அது எப்படி‌ மகி அவன் இத்தனை வருசம் கண்டுபிடிச்சத… நீ அசால்டா ஒரு ஐஞ்சு மணி நேரத்தில கண்டுபிடிச்ச” என பல மணி நேரம் இருந்த கேள்வியை கேட்க, 

” அது நா புதுசா கண்டு பிடிக்கல…நா சித் பண்ணதுல கொஞ்சம் மாற்றம் செஞ்சேன் அவ்வளவு தான் . இதுவே எக்ஸ்பர்ட் யாராச்சும் செஞ்சிருந்தா மூனு மணி நேரம் கூட போதும் ” என்று சாதாரணமாக கூறினாள்.

” இருந்தாலும் நீ பண்ணது ரொம்ப பெரிய சாதனை ” என கூறி அவளை லேசாக அணைத்து , அலுவலக செல்ல தயாரானான். 

‘ எல்லாம் நாளைக்கு மதியம் தெரியும், கடவுளே பிலிஸ் எல்லாமே நல்லபடியா நடக்கனும் ‘ என கடவுளிடம் மீண்டும் அப்பிலிகேசன் போட்டு , கீழே உணவெடுக்க சென்றாள்.

ஒரு தட்டில் உணவை அடுக்கி கொண்டு தன்னவனை பார்க்க , சித்தோ வார்த்தைகளை உலரி கொட்டிக் கொண்டு இருந்தான். 

” கண்…சித் எழுந்திருங்க ” என்று கூறியது தான் தாமதம் பட படவென எழுந்து அமர்ந்தான். அதில் மகி தான் பதறி விலகினாள்.

” மகிமா …நா தோத்திட்டேன் ” என மீண்டும் கண்ணீரை வடிய விட, அவளுக்கும் விழிகள் கலங்கியது.

ஆனாலும் தான் தானே பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்தவள் 

” அது எல்லா ஒன்னும் இல்லை … இதை சாப்பிட்டு படுங்க, எல்லாம் சரி ஆகிரும் ” என கொஞ்சம் மெல்லிய குரலிலே கூறினாள்.  பேசி பல நாட்கள் ஆகிவிட  இப்போது கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கேட்டாள்.

” ஏய் அங்கேயே நில்லு  ” என சித் கத்த இப்போது நாலு அடிகள் பின்னே சென்றாள். 

” இத்தனை வருசம் நல்லா இருந்தேன்…. நீ வந்த,  என்ன விட்டு எல்லாம் போயிருச்சு ” என புத்தியற்று கூற அதை கேட்வளிலின் மனமோ தான் ஒரு வேலை காரணமாக இருப்போமோ என நினைக்க செய்தது. இருந்தாலும் தன்னை மீட்டுக் கொண்டவள் அருகில் வர

” அங்கேயே நில்லு மகிமா,  பக்கத்துல வந்த அவ்வளவு தான்  …நீ மட்டும் ஏன் இன்னும் இருக்க நீயும் போ ..என் காதலும் என்ன விட்டு போயிருச்சு ..நா  இப்போ வர உயிருக்கு உயிரா காதலிச்சதும் இன்னைக்கு இல்லாம போச்சு…நீயும் போ ” என்றவாறே போதையுடன்  மெத்தையில் சரிந்தான் சித்தார்த் கிருஷ்ணன் . அது அவனுக்கு வலித்ததோ இல்லை மகிக்கே அதிகம் வலித்தது. 

” சரி நான் போயிரேன் இப்போ மட்டும் இதை சாப்பிட்டா நா போறேன் ” என அவள் கூற, அதுவும் சித் காதில் விழ வில்லை. இருந்தாலும் தன் மகிமா உணவுடன் நிற்பதை பார்த்து எழுந்து அமர, மகி உடைந்து விட்டாள். அவளை பொறுத்தை வரை அவள் சென்று விடுகிறேன் என கூறியதும் சாப்பிட அமர்கிறான் என நினைத்தவள் கண்களில் இருந்து நீர் வடிந்தாலும் அவனுக்கு உணவை பிய்த்து , தன் கண்ணா வாயருகே கொண்டு செல்ல, அவனும் ஏதோ குழந்தையை போய் ஆ காண்பித்து வாங்கி கொண்டான்.

உணவை ஒவ்வொரு வாயாக வைக்க அவனும் மறுப்பு சொல்லாது வாங்க, மகி தான் அழுது விட்டாள். தான் சென்று விடுகிறேன் என்று ஒரு வார்த்தை கூறியவுடன் தன் பேச்சை கேட்கிறானே ! என துடித்து விட்டாள்.   அவளுக்கோ நிற்காது கண்ணீர் வடிய அதை கண்ட சித் மனதிற்கோ அவ்வளவு போதையிலும் கஷ்டமாக இருக்க

” நீ ஏன் அழுற மகிமா … நான் தான் அழனும் , கொஞ்சம் கூட ராசி இல்லாத பையன் நான் ” என கூறி மகியின் விழிகளில் இருந்து வடிந்த நீரை துடைக்க, மகிக்கோ மீண்டும் அழுகை பீரிட்டது.

இவ்வளவு பாசமாய், தான் போகிறேன் என்று கூறியதும் பேசுகிறானே என நினைத்தவளாய் அவனுக்கு முழு உணவையும் ஊட்டி அங்கிருந்து நகர்ந்தாள். உண்டு முடித்தவன் வயிறு புல் ஆகியதும்  அப்படியே படுத்து உறங்க ஆரம்பித்தான்.

கீழே சென்றவளுக்கோ அழுகை முட்டிக் கொண்டு வந்தது. எத்தனை முறை முயற்சி செய்தும் கடுகளவு கூட தன்னவன் மனதில்  இல்லையா என நினைக்க, அது மாறாகவே இருந்தது. சித்திற்கோ முதலில் மகியை சுத்தமாக பிடிக்காமல் போகி விட, இருந்த வெறுப்பு அனைத்தையும் அவள் மேல் காட்டினான். பிறகு போக போக அவளை திட்டுவதை குறைத்துக் கொண்டு இருந்தான். 

அன்று மகி கண்களில் தெரிந்த ஏக்கம் ஏனோ அவனை உடைத்து விட்டது.  அடுத்த கொஞ்ச நாளில் அமிழுக்கு திருமணமானதும் தெரிய வர, அடுத்தவன் மனைவியை நினைக்கும் அளவு தான் இல்லையென , நிதர்சனத்தை உணர்ந்து கொண்டான். பிறகு மகியிடம் பேச நினைக்க, அவள் விலகி போவதே அவனுக்குள் மகி மெல்லமாக உள்ளே நுழைந்து விட்டாள். அவ்வபோது சந்துருவிடம் மட்டும் அவள் சிரித்து பேசுவது அவன் பொறாமையை தூண்டி விட, சித் மனதில் அதிகம் வந்து விட்டாள். தன் கண்ணாவின் மனதில் தாமே இருக்க, அதை அறியாத பேதையோ அவனை விட்டு போக சொல்கிறானே என நினைத்து நிரந்தரமாக தன்னவனை பிரிய நினைத்தாள். 

சரி என்று மேலே வந்தவள் அவன் உறங்குவதை பார்த்தே அமைதியாக சோஃபாவில் அமர்ந்தாள். அப்போது அவள் அழைப்பேசி ஒலி எழுப்ப, சந்துரு தான் அழைத்திருந்தான்.

” சொல்லுங்க சந்துரு ” என்றவளின் குரலில் மாற்றத்தை கண்டு கொண்டான்.

” என்னாச்சு மகி …ஏன் ஒரு மாறி பேசுற ” என்று அவன் கேட்க, உண்மையை கூறி விடுவாளா என்ன, அவனிடம் எதுவும் இல்லை என சாதித்து விட்டாள்.

” சரி‌ மகி நீ சொன்ன எல்லாத்தையும் பண்ணிட்டேன்… அந்த நாயி யாருன்னு தெரிஞ்சிருச்சு . அது ஆனந்த்னு ஒரு கெமிக்கல்ஸ் இன்தஸ்ரி வச்சிருக்கவன் , நாளைக்கு இருக்கு அவனுக்கு ” 

” சரிங்க சந்துரு இருக்க எல்லா பாக்டீரியா, மருந்து எல்லாத்தையும் நிலத்துல போடுங்க  ” என அவள் கூறி, சிறிது நேரம் பேசிவிட்டு சந்துருவையும் வேலை முடித்து வீட்டிற்கு செல்லும் படி அறிவுறித்தி அழைப்பை துண்டித்தாள். 

ஒரு மனமோ போதையில் தன்னை மறந்து உறங்கி கொண்டு இருக்க, அங்கிருந்த இன்னொரு மனமோ  தான் செய்த கண்டுபிடிப்பு சரியாக செயல்படுமா என்றும் தன்னைவனை விட்டு சென்றுவிடுவோமா?  என்ற கவலையிலே உறங்க மறுத்தது.

______

எந்த கவலையும் இல்லாத வெய்யோனோ தன் பணிகளை செவ்வனே செய்து உலகிற்கு வந்து விடியலை தந்தது. 

இரவு முழுவதும் உறங்காமல் விடிய விடிய தன் விழிகளை அகற்றாது தன்னவனையே பார்த்திருந்தாள் மகி.

நேரமாவதை உணர்ந்து அவள் பணியை செய்ய எழுந்தவள் குளித்து முடித்து சமைக்க ஆரம்பிக்க , அப்போது  ராதா கிட்சனுள் நுழைந்தார்.

” என்ன மகி இரண்டு பேரும் எவ்வளவு நேரம் தான் ஆபிஸ்ல இருப்பிங்க  ” என இடுப்பில் கைவைத்து முறைத்துக் கொண்டே கேட்க, அதித உளைச்சலில் இருந்தவளுக்கு எப்போதும் போல் குறும்பாக கூட பேச முடியாமல், 

” கொஞ்சம் வேலை அத்தை ” என்றவள் மீண்டும் சமைக்கும் பணியை தொடர்ந்தாள். அவரும் தொல்லை செய்யாமல் ஏதோ களைப்பில் இருக்கிறாள் என விட்டு  விட்டார்.

அனைத்து வேலையும் முடித்தவள் மேலே செல்ல, நேற்று எப்போது படுத்திருந்தானோ அதே போல் இன்னும் உறங்கி கொண்டு இருக்க, வெளியே கிளம்ப தயாரானாள். 

சந்தியாவிற்கு போனை போட்டு தான் கல்லூரிக்கு வரவில்லை என கூறியவள் சித் அலுவலகம் செல்ல விரைந்தாள். 

சித் அலுவலகம் : 

” என்ன மேம் நீங்க இந்த பக்கம்  ” என சந்துருவின் பிஏ  ராம் கேட்க, அதற்கு சிரிப்பை மட்டுமே உதிர்த்து நிலம் இருக்கும் இடத்திற்கு வந்தாள். 

நுழைந்தவள் வளர்ந்த கதிர்களை எல்லாம் பார்க்க நேற்று இருந்தது போலவே இருந்தது , வேலை செய்ய நேரம் எடுக்கும் என மகிக்கே தெரியும் இருந்தாலும் ஒன்பது மணிக்கே வந்துவிட்டாள் எவ்வாறு இருக்கிறது என பார்க்க. நேற்று இருந்த மாறியே இருக்க அதுவே அவளுக்கு நம்பிக்கை கொடுத்தது, பிளைட் பாக்டீரியா எளிதில் பரவிவிடும்  காற்று அடித்தாள் போதும் பரவி அனைத்தையும் நாசம் ஆக்கி விடும் , இப்போது அப்படி ஒன்றும் ஆகாமல் பயிர்கள் நேற்று பாதித்தது போலவே இருக்க, அதுவே மகி மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

இரவு முழுவதும் இங்கிருந்து வேலையெல்லாம் முடித்து வீட்டு ஒன்றரை மணி போல தான் சந்துரு வீட்டிற்கு சென்றான். அதனாலே பொறுமையாக எழுந்து இப்போது அவன் அலுவலகம் வர, சந்துருவிற்கு  முன்பாக மகி உள்ளே இருக்க கொஞ்சம் ஷாக் தான்.

” என்ன மகி எப்போ வந்த ” என்றவறே அவனும் நெற்கதிர்களை பார்க்க, அது பரவவில்லை என தெரிந்ததும் சந்துருவிற்கு அளவில்லா மகிழ்ச்சி.

” அது கொஞ்சம் நேரம் முன்னாடி தான் சந்துரு ” என்று கூறும்போதே , அவள் முகத்திலும் குரலிலும் இருந்த சோர்வு தெரிந்தது.

” என்ன மகி நைட் எல்லாம் தூங்கலையா ” என அனைத்தும் புரிந்து அவன் கேட்க, அவனுக்கு தலையசைப்பை மட்டும் கொடுத்தவள் அமைதியாக நின்றாள்.

” இப்போ எதுக்கு நீ இப்படி இருக்க …அதான் பிளைட் பரவ இல்லையே , அப்பறம் என்ன நீ கண்டிபிடிச்சது வேலை செய்து. இப்போ இருக்குற நெல் எல்லாம் நல்லா வளர்ந்தா கூட போதும் நம்ம கவர்மெண்ட் கிட்ட நார்மல் விளைச்சல விட கொஞ்சம் அதிகம் காட்ட முடியும் . நீ கவலை படமா இரு ” என்று அவள் அருகில் வந்து கூற, எல்லாம் அவளுக்கே தெரிந்திருந்தாலும்  மகியின் மனமோ தன்னவனை விட்டு எப்படி தன்னாள் செல்ல முடியும் என்றே இருந்தது.

” என்ன உனக்கே இன்னும் சிரிப்பு வரல…இப்போ வரும் பாரு ” என்றவன் தன் மச்சானிற்கு அழைத்து அலுவலகம் வருமாறு  அனைவர் முன்னிலையிலும் பணித்தான்.

ஏற்கனவே எழுந்திருந்த  சித்தோ ,  அனைத்தும் நியாபகம் வர அப்படியே அறையிலே இருந்து விட்டான். ராதா சாப்பிட அழைத்தும் வரவில்லை. வீட்டிலிருந்த யாருக்கும் இந்த செய்தி தெரியவில்லை,  யாரும் கூறவும் இல்லை.சந்துரு ஏதேதோ கூறி அவனை அலுவலகம் வரவழைத்திருந்தான்.

உள்ளே நுழையவே அவனுக்கு பயமாக இருந்தது. உள்ளே நுழைய பார்த்தவன் நான் உயிராய் நினைத்த  நெற் கதிர்களை பார்க்க திராணி இல்லாமல் மீண்டும் ரோட்டிற்கு சென்று விட்டான். 

ரோட்டிலிருந்து அவன் அலுவலகத்தை பார்க்க, பசுமையாக இருந்தது. உள்ளே நுழைய அவனால் முடியவில்லை. 

மீண்டும் தைரியத்தை வரவழைத்து உள்ளே வர பார்க்க, 

” கண்ண்ணாணாணா….” என்ற சத்தத்துடன் ஓடி வந்த மகி அவனை தள்ளி விட, சித்தின் உயிரை பறிக்கும் வெறியில் வந்த லாரியோ  மகியின் இட பக்கத்தை பதம் பார்த்து அவளை அடித்துச் சென்றது.

பிரியாமல் தொடரும் 😍💋….

உங்களின் புல்லட் வெடி 🎉

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
24
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    9 Comments

    1. Padupaavi payale mahi ye yenda ipdi varthayala kollura mahi niyum thapaaa eduthukitta irunthalum chandru ku kolupu korayala avenay kavalai la bar la drink pannuran ithula chandru va iven kupudala athum 7 bottle drink pannirukanu kavalai 😠😠 ayo Mahi ku accident athu sidh kapatha poyee athu kannanuu sollita apo next epi la unma Ella sidh ku teriyum pola but happy ya tha irukku but Mahi ku accident agituchey…..☹️☹️☹️ waiting for next epi ❣️❣️❣️

    2. Janu Croos

      டேய் எருமை…போதையில இருந்தாலும் சரி …தெளிவா இருந்தாலும் சரி மகிய வார்த்தையால காயப்படுத்துறத மட்டும் விட மாட்டல…நீயும் தெளிவா பேசமாட்ட…அவளும் சரியா புரிஞ்சுக்க மாட்டாள்…இப்படியே மாறி மாறி திட்டிட்டே திரிங்க…

      எந்த எடுபட்ட பய பாத்தா வேல டா இது….அய்யோ லாரி அடிச்சு தூக்கிட்டு போயியிச்சே….சித்து மகிய காப்பாத்துடா…..

      இதுக்கெல்லாம் காரணம் ஆனந்த்னு தெரிஞ்சா அத பண்ணது மகியோட அப்பானு தெரியலயா…எல்லாம் அந்த ஆளால வந்தது….

    3. Archana

      அடேய் ஆனந்துஉஉஉ சித்தே போட்டு தள்ளூர அளவு போய்ட்டியா டா😑😑😑😑😑 இந்த புள்ள மகிக்கு மட்டும் எவ்வளவு கஷ்டம்😶 பாவம் பா மகி😒😒