வெகு தூரம் நடந்து வந்தது போல் தோன்றியது மொழிக்கு. ‘என்ன இவன் ரொம்ப நேரம் நடக்க வெச்சது போல இருக்கே ஆனா இன்னுமே நம்ம போக வேண்டிய இடம் வந்தது போல இல்லை’ என்று நினைத்து கொண்டே நடந்தாள். இன்னும் அவ்விடம் வந்த பாடியில்லை. பொறுமை இழந்தவள் அவனிடமே கேட்டுவிட்டாள்.
மொழி, “நீ விழி கிட்ட தா என்ன கூட்டிட்டு போறியா?” என்றாள் .
அவளை மேலும் கீழும் பார்த்தவனோ ,” ஹ்ம்ம் . இன்னுமா உன்னை நான் கடத்தினேன்னு நம்பிகிட்டு இருக்க”, என்க .
மொழியோ,” ச்ச.ச்ச . அதெல்லாம் இல்லை . நீ அதுக்குலா சரிபட்டு வரமாட்டனு நல்லாவே தெரிஞ்சிகிட்டேன்”, என்றவள் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டாள்.
எழிலன்,” எதேய்ய. என் பவர் தெரியாம பேசுற நீ . எனக்குள்ள கொடுரூமான வில்லன வெச்சிக்கிட்டு இருக்குக்கேன். எங்க அத பார்த்து பயந்துருவீங்கனு அந்த வில்லனா அடக்கி ஒக்காரவெச்சிருக்கேன்”.
மொழி,” அதெல்லாம் இருக்கட்டும் . ஏன் இவ்ளோ நேரம் ஆகுது. வழி தெரியுமா மறந்துட்டியா?” என்க இவனோ திருட்டு மொழி முழித்தான் அதனை கண்டுகொண்டவள் .
மொழியோ அதிர்ச்சியாக,” அப்ப மறந்துட்டியா?”, என்க ,
அதற்கு எழிலனோ,” அப்படி பச்சையா சொல்ல முடியாது ஒரு யூகமா சொல்லலாம்”,என்க பதறியவள்,
மொழி,”அப்ப உனக்கு ரூட் மறந்திருக்கு. நிஜமாவே மறந்திருச்சா”
எழிலன், “ மறக்கல என்ன கொஞ்ச லைட் அ மாறி வந்திருக்கோம். சுத்தி பார்க்கலாமே னு கூட்டிட்டு வந்தேன். நல்லதுக்கே காலம் இல்லை”.
மொழி, “ தேடறதுக்கு ஆள அனுப்ப சொன்னா தொலைக்கிறதுக்கு ஆள் வந்து சேர்ந்திருக்கு பாரு”.
இப்படி பேசிய படி வரும் வழியிலேயே ஒரு மரத்தின் அடியில் பானை ஒன்றை கண்டுவிட்ட எழில்.
எழிலன், “ஹே இங்க எங்கயோ பீபிள் இருக்காங்க போல. பானையெல்லாம் இருக்கு பாரேன். என்றவன் அந்த உடைந்த பானையை எடுத்து காட்டினான்.
அதை வாங்கி பார்த்தவள், “ஓஹ். சூப்பர் அப்ப சீக்கிரம் வீட்டுக்கு போயிரலாம்”, என்க,
“கைண்ட் ஆப். நம்ம அவங்கள கண்டுபிடிக்கணுமே.அதுவும் இல்லாம இங்கிருந்து போக என்ன சோர்ஸ் . இது எந்த இடம் எப்படி இங்க வந்தோம்னு நெறைய தெரிஞ்சிக்கணும். இல்லாம எப்படி இங்க இருந்து போக முடியும்”, என்றான்.
அவன் சொல்வதும் சரிதானே. அதனை கேள்வியும் தனக்கும் தானே இருக்கிறது. இந்த இடத்தின் விவரங்கள் தெரியாது எப்படி தப்பிப்பது என்று நினைத்தவள்.
“அப்ப சீக்கிரமா போலாம் வாங்க வாங்க”, காதருகே என்றுவிட்டு என்றுவிட்டு அவனை அழைத்து வேக வேகமாய் சென்றாள்.
மீண்டும் ஒரு இடத்தில நின்றுவிட்டாள் மொழி . முன்னே பேசிக்கொண்டே சென்றவன். பதில் வராமல் இருக்க “எங்க காணோம்” என்று திரும்பியவன் கண்களில் பட்டது என்னவோ ஒரு இடத்தை ஆராய்ச்சியாய் பார்த்துக்கொண்டிருந்த மொழி தான். ” இங்க இருந்து இன்னிக்கு போக மாட்டோம் போலயே ” என்று நினைத்தவன் . அவளிடம் சென்றான் . அவள் உன்னிப்பாக அங்கேயே பார்த்து கொண்டிருக்க அவள் காதருகே “என்ன தெரிகிறது “என்றான் எழிலன் .
திடீரென காதருகே கேட்ட சத்தத்தில் பயந்தவள் பதறி ஒரு அடி பின்னே வைத்தாள். மொழி ,”ஓஹ் ஷிட் பைத்தியம் பயந்துட்டேன். ஏன் சாதாரணமா கூப்பிட்டா ஆகாதா ” என்றாள். பின்னர் சற்று ஆசுவாசம் ஆன பிறகு,
மொழி,”அங்க பாரேன் ஒரு குட்டி குளம் போல இருக்கு தண்ணி குடிக்க போவோமா” என்றவிட்டு அவன் பதில் கூறும் முன்பே அதை நோக்கி நடக்கலானாள்.
எழில்,”எம்மா பரதேவதை எங்க மா போற எம்மா ஏற்கனவே வழி தெரியல தொலைஞ்சிட்டோம்னு நெனைக்கிறேன் நீ வேற ஏன் என்னை டார்ச்சர் பண்ற”
மொழி,” எனக்கு தண்ணி வேணும் மேன் . உனக்கு வேண்டாம் தான ஏன் வர நான் குடிச்சிட்டு வரேன் . நீ வந்த அவ்ளோதான் . அங்க வந்து தண்ணி குடிச்சு பாரு இருக்கு உனக்கு. உசுரையா வாங்குறேன்”.
அதில் பயந்தவன் அய்யயோ அவசரபட்டு பேசிட்டோமோ . சமாளிப்போம் என்று நினைத்தவன் .
எழில் ” எது உசுர வாங்குறியா . நான் உஷாரா இருக்க தண்ணி குடிக்க ‘வா’ ங்குறா அப்டினு சொன்னேன். உனக்கு தப்பா கேட்ருச்சு. ஹீஹீ”.
மொழி,” ஹான். நம்பிட்டேன் .நம்பிட்டேன்.வாய மூடிட்டு நட”, என்றுவிட்டு அவ்விடம் நோக்கி சென்றாள்.
மொழி,”இந்த தண்ணி என்ன கலர் இப்டி இருக்கு குடிக்கலாமா? பார்த்தா அப்டி தெரியலயே”
“இதுக்கா அந்த பேச்சு பேசிட்டு ஓடிவந்தாங்க மேடம்”, என்றவன் உதட்டை கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
உவர்க்கழி . அது கடல் நீரும் நன்னீரும் சேர்ந்த கலவை நீர் பரப்பு . அதில் கடல் நீரை போல் உப்பின் அளவு அதிகம் இல்லை என்றாலும் அதில் நன்னீரின் அளவு வெகு சிறிது. கடல் நீரும் நன்னீரும் சேரும் இடங்களில் இது காணப்படும். அதாவது அங்கிருந்து நன்னீர் இருக்கும் இடம் அருகில் அல்லது அருகாமையில் இருக்க வாய்ப்புகள் உண்டு.
எழிலன்,” என்ன அய்யாசாமி என்ன ஆச்சு “என்றவன் வாய்விட்டு சிரித்தான் .
மொழி,” இவன் வேற “, என்று நினைத்தவள் அதற்கு மேல் ஏதும் பேசாமல் நடந்தாள் அவனுடன்.
திடீரென மொழிக்கு மின்னலாய் தோன்றிய யோசனையில் நின்றவள்,” ஒரு நிமிஷம் ” என்க ,
அவனோ,” இப்ப என்ன ?”,என்றான்.
மொழி,” இல்லை கொஞ்ச தூரம் பின்னாடி பானை பார்த்தோமே. அதை யூஸ் பண்ணி எடுத்துட்டு போவோமா ?”.
எழிலன் ,” இதுவே அழுக்கு தண்ணி இதை எடுத்துட்டு போய் என்ன பண்ண”.
மொழி,” நம்ம மேன் வெஸ் வைல்ட் பார்த்தது இல்லை. வெண்ணீர் வெச்ச எல்லாமே சுத்தமா ஆகிரும், குடிக்கலாம். அதுல னு இல்லை பொதுவாவே பாயிலிங் மெத்தட் ல கெட்டது எல்லாமே போய்டும்.ஈவேன் எங்க சர்ஜிகள் திங்ஸ் ளாம் பாயிலிங் வாட்டர் ல டிஸ்இன்பக்க்ஷன் பண்ணுவோம் சேனிடைசர், இன்னும் வேற கெமிக்கல்ஸ் அ போல எபெக்ட்டிவ். ரூரல் ல கேம்ப் போறப்ப அந்த கிளீனிங் லிகுய்ட்ஸ் காலி னா பாயிலிங் வாட்டர் தான் யூஸ் பண்ணுவோம் “, என்க ,
எழிலன்,”அதுவே ஒடஞ்ச பானை அதுல எப்டி”.
மொழி,” முழுசா ஓடையலயே மேல் பகுதி தான் ஒடஞ்சிருந்துச்சு ஒரு கிண்ணம் போல பார்ம் இருக்கே முடிஞ்சது கொண்டு போவோம்”.
எழிலன்,” அதுக்கு எங்க அடுப்பு , நெருப்பு ல இருக்கு ” என்றுவிட்டு அவனே ” ஓகே ஓகே ஒரு வேலை சேன்சஸ் இருந்தா வேஸ்ட் பண்ண வேண்டாம் எடுத்துட்டே போவோம். தண்ணி கண்டிப்பா வேணும்”, என்றவன் வேகமாய் சென்று அந்த உடைந்த பானையை எடுத்து கொண்டு வந்து தண்ணீர் நிரப்பி கொண்டான்.
பின் சற்று நேரம் நடந்தவர்கள் அனைவரும் சந்திக்கும் இடம் வந்து சேர்ந்தனர் இருவரும்.மொழியும் எழிலனும் தான் முதலில் அவ்விடத்தை வந்து சேர்ந்தார்கள்.
எழில், “இங்க தான் திரும்ப வர சொன்னேன்”, என்றவன் ஒரு சிறிய பாறையில் அமர்ந்துவிட,
கைகளில் இருந்த அந்த தண்ணீர் பானையை கல் ஒன்றின் மேல் வாகாக வைத்தவள் அதன் அருகில் இருந்த பாறையில் அமர்ந்து கொண்டாள்.
அவர்கள் இருந்த இடம் கடலிற்கு சற்று தூரத்தில் அமைந்திருந்தது. இவர்களுடன் வந்தவர்கள் இன்னும் சற்று தொலைவில் இருந்தார்கள். அந்த பெரிய பாறையின் பின் இருப்பார்கள். கண்ணுக்கெட்டும் தொலைவில் தான் இருந்தது அந்த பாறை. இவர்கள் இருவரும் வந்ததும் சென்றுவிடலாம் என்று காத்திருந்தனர் எழிலனும் மொழியும்.
அவர்கள் வந்து சேர்ந்து வெகு நேரம் கடந்ததை போல் இருக்க, இன்னுமே விழியும் வந்து சேரவில்லை. விழி அந்த இடத்தில் தான் இருக்கிறாளா என்றே சந்தேகம் வந்துவிட்டது மொழிக்கு.
மொழி, “ஏய் என் பிரென்ட் எங்க?. என்ன பண்ணீங்க அவளை. ஒரு வேலை அவளை தான் கடத்திட்டீங்களா?”
எழிலன், “அதான் நான் அதுக்குலாம் சரிபட்டு வரமாட்டேனே. மறுபடியும் சந்தேகமா?.
மொழி, ” உன் மேல இல்லை. நீ உண்மையாவே சரி பட மாட்ட தான் . ஆனா உன் கூட ஹைட்டா ஒட்டகத்துக்கு ஹேர் கட் பண்ணது போல ஒருத்தன் வெறப்பா இருந்துட்டு ஜன்னல் சீட்டுக்கு ரெண்டு பேரும் அடிச்சிக்கிட்டீங்களே அந்த ஆள பார்த்ததா தான் கொஞ்ச பீதியா சந்தேகமா இருக்கு . நீங்க ஆர்கன்ஸ் திருடுற கும்பலோனு”.
அவள் பேசியவற்றை கேட்டவன் கோபத்தில் மூக்கு விடைக்க நின்றிருந்தான். அவன் முறைத்ததில் சற்று பயந்தவன் திருட்டு முழி முழித்தவாறு .
மொழி ,”சரி சரி எதோ தெரியாம சொல்லிட்டேன் ஜாமி மொறைக்காத”, என்றதும் அவன் திரும்பி கொண்டான்.
எழிலன் ” ரெண்டு பேருமே உன்னை தேடி தான் போனாங்க. ஆளுக்கு ஒரு ரூட் ல தேட வந்தோம் என் கெரகம் உன் கிட்ட வந்து மாட்டிகிட்டேன்”.
மொழி, ” அவ தொலஞ்சிட்டா? பாவம் அவளுக்கு ரூட்டு கூட தெரியாதே”, என்று புலம்ப ஆரம்பிக்க அதற்குள்,
எழிலன்,” என் ப்ரெண்டும் தான் தனியா தேட போயிருக்கான். அதுக்கு என்ன பண்றது. உன்ன யாரு தனியா ஒரு எடத்துல மயங்கி கிடைக்க சொன்னாங்க. அதுவும் அவ்ளோ தூரம்”.
இப்படியே இவர்கள் சண்டை தோடர்ந்து கொண்டே தான் இருந்தது. அவர்களின் நண்பர்கள் இருவரும் வந்து சேரும் வரையிலும். ஏன் எதற்கு என்றெல்லாம் தெரியாது ஆனால் சண்டை மட்டும் நின்ற பாடில்லை. ஒருவரை ஒருவர் வெறுப்பேற்றி குளிர் காய்ந்து கொண்டிருந்தனர் இருவரும்.
தங்களுக்குள் பேசியபடி ஒன்றாக அவ்விடம் திரும்பி கொண்டிருந்த நிறைமதியன் மற்றும் வைவிழியை தூரத்திலேயே கண்டுவிட்ட எழிலன் ,” என்னடா நடக்குது இங்க இவன் சரியான உமுனா மூஞ்சியாச்சே வெளிய யார்கிட்டயும் இப்டி பேசுனதில்லையே. பரவால்ல சோசியலைஸ் ஆக கத்துக்கிட்டான் போலயே . இத்தனை வருஷம் இல்லாம இப்ப”.
திடீரென நினைவு வந்தவனாய் ,” ஆமா இவங்கள நம்ம பிரிச்சு தான அனுப்பி விட்டோம் .” என்று தனக்குள் கேட்டுக்கொண்டவன். வேகமாய் சென்று தன வலது காய் கொண்டு அவன் கழுத்தை வளைத்து கொண்டான்.
” ஏன் டா . நன் உன்னை அந்த பக்கம் தானே அனுப்பினேன்”, என்று அவன் அனுப்பிய பாதையை காட்ட அவனை முறைத்த நிறைமதியன்.
” ஏன் ஏற்கனவே ஒருத்தர தேடுறது பத்தாதா. இன்னொரு பொண்ணையும் தொலைச்சிட்டு தேடணுமா”, என்றுவிட்டு அவ்விடம் விட்டு அகன்றான் நிறைமதியன்.
அங்கிருந்து நிறைமதியனின் கால்களில் பாம்பு தீண்டியதாய் கூறிக்கொண்டிருந்தான் நிறைமதியன். பாம்பு தீண்டியதை வெகு சாதாரணமாய் பொறுமையாய் தற்பொழுதுதான் கூறுபவனை விசித்திரமாக பார்த்தனர் மற்ற மூவரும்.
இவன் என்ன பாம்பு தீண்டினத ஏதோ பட்டாம்பூச்சி உரசினது போல இவ்வளவு பொறுமையா சொல்லிக்கிட்டு இருக்கான் 🙄🙄
அஞ்சா நெஞ்சன் போல கா 🙂😌
காரு காரு உன் வாய் இருக்கே.. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல