Loading

ராகவன்  அன்று டீவி

பார்த்துக்கொண்டிருந்தார். வினோ

போன் பேசிக்கொண்டிருந்தான். ராகவன்

அருகில் வந்து அமர்ந்து  போனை

வைத்தவன்”  என்னப்பா  எதாவது

  இன்டிரஸ்டிங்க  ப்ரோக்ராம்  இருக்கா  ?”

“எங்கடா  இப்பலாம்  டீவி  ப்ரோக்ராம்

ஸ்லாம்  பார்கிறமாதிரியா  இருக்கு?”

“எதாவது டிக்கெட் புக் பண்ணவா 

படதுக்கு  போலாபா? “எல்லா படமும்

டிவியிலயே  போட்டுடறான்  இதுக்கு

எதுக்கு காசு தண்டமா  செலவு

செஞ்சிகிட்டு  ?!. ” என்னதான்

சொன்னாலும்   தியேட்டர்  ஃபீல் 

இருக்காதுபா “என்னமோ டா அந்த ஆச

யெல்லாம் உங்க அம்மாவோட போச்சு “

சிறிது நேரம் அங்கு மௌனம்

நிலவியது. “வினோ நாளைக்கு

கோயிலுக்கு போகனும் “” மறப்பேனாபா

  ” வருடாவருடம்  மீனாவின்

பிறந்தநாளைக்கு மட்டும் அப்பாவும்

மகனும் சேர்ந்து  கோயிலுக்கு போகும்

பழக்கம் உண்டு.

                அன்று ஆதிரைக்கு பிறந்தநாள்.

வீட்டின் அருகே இருக்கும் கற்பகாம்பாள்

கோயிலுக்கு  அம்மாவும் மகள்களும்

செல்வர்  .” ஆதிரா “டைம் ஆச்சு டா

சீக்கிரம் வாமா” தோ வந்துட்டேன்மா

“என்றவாரு   ஒருமுறை தன்னை

சரிபார்துக்கொண்டவாரு  தன் அன்னை

முன் வந்து நின்றாள். பச்சை வண்ண

புடவை  அரக்கு நிற பார்டர் தலைமுடியை

லூசாக  பின்னி இருக்க மல்லிகை

சரத்தை அதற்கேற்றவாறு

சூடியிருந்தாள். ” என் கண்ணே பட்டும்டி

“என்றவாறு

நெட்டி முறித்தாள்  ” அப்ப  நானு

என்றவாரு  “சூர்யா வந்துவிட “நீயும் தாடி

தங்கம்  என்றவாறு அவளுக்கும் நெட்டி

முறித்தாள்  “ஹேப்பி பர்த்டேகா  “

என்றவாரு கை பற்றி குலுக்க  தாங்கியு

குட்டிமா ” இந்த  சுடிதார் உனக்கு அம்சமா

இருக்கு”தாங்கியு”சரி போலாமா?

என்றவாரு  அவள் அன்னை வர

பெரியவளும் இளயவளும்  முன்னே

நடந்து செல்ல  ஆதிரை பைக்கை

ஸ்டார்ட் செய்தாள்  அவள் அங்கிருந்தபடி

அப்படியே ஆபிஸ் சென்று விடுவாள்.

வீடு பக்கம் என்பதால் சூர்யாவும்

அம்மாவும் நடந்தே வந்து விடுவர்.

லஷ்மிக்கு கோயிலுக்கு செல்வது

மிகவும் பிடிக்கும் ஆனால் நேரம்

வாய்பதில்லை . ஆதிரை யும் அவள்

அன்னை போலதான் ஆனால் என்ன

ஒன்று அவளுக்கு கூட்டம் ஆகாது. சூர்யா

இந்த ஆட்டத்திற்கே

வராதவள்.மகள்களின் பிறந்தநாளைக்

கிற்கு தப்பாமல்  கோயிலுக்கு வந்து

விடுவாள் லஷ்மி. இதோ கோயிலுக்கு

வந்த ஆயிற்று. அம்பாளை தரிசித்து

கோயிலை சுற்றிவிட்டு லஷ்மி யும்

சூர்யாவும் கிளம்பிவிட்டனர்  . ஆதிரை

மீண்டும் அம்மனை  வணங்க வந்தவள்

ராகவனையும் வினோ வையும்

பார்துவிட்டாள். ராகவன் தான்

அடையாளம் கண்டுகொண்டு  இவளிடம்

பேச வந்தார். “நீஈஈ…. ” ஆதிரை சார்”…”

“ஆ யூ ஆர் எஸ் கம்பனி கரெக்டா.?

“அவள் ஆமாம் என்பது போல தலை

யாட்டி விழியசைக்க  அவர் அறியாமல்

வினோவை  பார்தபடி “ஆமா  சார்

கரெக்டா” இப்ப தான் எனக்கு நியாபகம்

வருது  நீல புடவை ரோஜா பூ வணக்கம்

சரிதான்”இதழ் விரிதாள் ஆதிரை

கோயிலுக்கு அடிக்கடி வருவியா மா?

ஆசான் சார் ஆனா நேரம்

அமையறதில்ல அதான்

பிறந்தநாளுக்காவது  வரலாமேனு”.. ஓ

பிறந்தநாள் வாழ்துக்கள்மா “மெனிமோர்

ஹாப்பி ரிடர்ன்ஸ் என்றவாரு” கைநீட்ட

அவளும் நீட்டினாள். உள்ளுக்குள்  உருகி

விட்டாள் பேதையவள். போன்

மணியடிக்க எடுத்தவள் “சரி” என்றபடி

அனைத்தாள் . “சாமி கும்பிடுடியாமா? “

ஆமா சார் ஆச்சு “என்றவள் அவர்

கண்கள் யாரையோ தேட புரிந்தவளாய்

அம்மாவும் தங்கச்சியும் வீடு க்கு

கிளம்பிடாங்க சேர்ந்துதான் வந்தோம்

வீடு பக்கம்தான் சரி அவங்க

போனதுக்துக்கப்புறம் கிளம்பலாம்னு

அவங்க தான் போன் வீடு போய்டாங்க

நானும் கிளம்பனும்”ஓ சரிமா  நாங்க

இனிமே தான் கும்பிடனும்  நீ கிளம்புமா

பார்த்து பத்திரமா போ”சரி சார்  அப்ப

நான் வரேன் “என்றவாரு இருவரையும்

பார்க்க  ஏனோ  இந்த நேரம் மிகவும்

சிறியதாய் அமைய கொஞ்சம் ப்ள்ககென

ஆனது அவளுக்கு. ராகனுக்கு ஏனோ

ஆதிரையை மிகவும் பிடித்துப் போனது.

தனக்கு  மருமகளாக இவள் வந்தாள்

மிகவும் நன்றாக இருக்கும் என

தோன்றவும்   கோயில் மணியடிக்க வும்

சரியாக இருந்தது. மனம் மிகவும்

நிறைவானது மீனாவே சரி சொல்வது

போல்  சந்தோஷ பட்டார். அதே சமயம்

வினோ “அப்பா  பிரகாரம் சுத்தியாச்சு

கிளம்பலாமா?” ஒரு நிமிடத்தில்

அவருக்கும் போக்கென ஆனது.

இவனிடம் எப்படி பேசுவது  ?

இருந்திருந்து  இப்பொழுதுதான்

கம்பெனி வேலையில்  நாட்டம்

கொண்டிருக்கிறான் இதில் மறுபடியும்

கல்யாணம் என ஆரம்பித்தால் என்ன

சொல்வானோ என நினைக்கையில்

சந்தோஷம் எல்லாம் எங்கோ காணாமல்

போனது.
                      ஆதிரை பைக்கை ஸ்டான்ட்

போட்டு நிறுத்தவும்  இருள் அவளை

சூழ்ந்துக்கொண்டது. “ஹேய் நித்தி

ஆரம்பிசிட்டியா? ” இல்ல இன்னும்

ஆரம்பிக்கல  வா அப்படியே “ஓர் இடம்

சென்றதும் இருள் அகல அவள் மீது பூ

மழை பொழிந்தது” சுற்றிலும்  பலூன்

நிறைந்திருக்க அவள் அதை

தள்ளிக்கொண்டே  நடக்க  ஹாப்பி

பர்த்டே டூ யூ பாடலை இன்னும் சிலர்

அங்கிருந்தவர்கள் பாட  “ஆதிரை

நித்தியை இருக்கக் கட்டிக்கொண்டு

அழுத்தமாக இதழ்பதித்தாள் “தாங்கி யூ

சோமச்டி ” ம்ம்  போதும் போதும் கேக்

வெட்டு  எனவும் அவள் வெட்டினாள்

அங்கு இருந்த அனைவரும் கேக்

சாப்பிட்டு மீண்டும்  அவளை வாழ்த்தி

விட்டு சென்றனர். ஆதி இன்னைக்கு

லஞ்சுக்கு வெளியில போறோம்

சாயங்காலம் பர்மிஷன்  போட்டு

என்ஜாய் பண்றோம்” எதுக்கு டி

இதெல்லாம் “அதெல்லாம் எனக்கு

தெரியாது நாம போறோம் இல்லனா நீ

என்கூட பேசவேண்டாம் என்றவாறு

கோபித்தபடி நகர ” சரி சரி ஓவர் சீன்

போடாத போலாம்”.இருவரும் மதியம்

ஹோடலில்   அமர்ந்திருந்தனர். என்ன

வேனும் உனக்கு ஆர்டர் பண்ணு. இதுல

உனக்கு சந்தேகமே வேண்டாம்…

பிரியாணி தானே”, கரெக்ட்” சரி சொல்லு

சாயங்காலம் எங்க போலாம் ?”முதல்ல

வீட்டுக்கு சூர்யாவை பாத்து ரொம்ப

நாளாச்சு அம்மாவையும்  கூடி கிட்டு பீச்சு

போய்ட்டு டைம் இருந்தா படதுக்கு

போலாம் ஓகேவா” ஓகே ஓகே , சுர்யாவும்

ரொம்ப  நாளாவே  எங்காவது போகனும்

னு சொல்லி கிட்டே இருக்கா

இன்னைக்கு  அத நிறைவேத்திடலாம். “

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்