Loading

ஆதிரையும், நித்யாவும் முடிவுசெய்தபடி 

மாலை  மூனுமணிக்கே பர்மிஷன்

போட்டு  ஆதிரை வீட்டிற்கு சென்றனர்.

வாசலில் சத்தம் கேட்க லஷ்மி வந்து கதவை

திறந்தாள் . பெண்களின் பிறந்த

நாளிற்கு மட்டும் லஷ்மி மதியமே

வந்திடுவாள் அவர்களுக்கு பிடித்தை

செய்து வைத்து காத்திருப்பாள். “வா

ஆதிரை, நித்தி எப்படிடா  இருக்க ?

பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு வீட்ல

எல்லாரும் எப்படி இருக்காங்க?””அப்பாடி

கொஞ்சம் தண்ணி குடிங்க ,எனக்கும்

குடுங்க கேட்டது க்கே மூச்சு வாங்குது ,

சிரித்தபடி “இதோ வர்றேன் இரு” என

அவள் நகர “கிண்டல் டி   உனக்கு “

என்றவாறு அவளை  செல்லமாய்

தட்டினாள். அதற்குள் லஷ்மி வந்துவிட” 

இந்தாடா ” வாண்டு வர நேரமாகுமாமா? “

“அவள் வாயை திறக்கும் முன்” நானே

வந்துட்டேன்”என்றவாறு  சூர்யா

நுழைந்தாள் “எப்படி இருக்கீங்க அக்கா? “

ம்ம சூப்பர் “என்னடி சீக்கிரம் வந்துட்ட? _

ஆதிரை “லாஸ்ட்  டே கா அதான்

சீக்கிரமா வந்துட்டேன்  ” சூப்பர் அப்ப

சரியான டைம்குதான் நான்

வந்திருக்கேன் போ போய் சீக்கிரம்

ரெடியாகு  நாம பீச்சுக்கு போய்ட்டு

சினிமா போய்ட்டு  கையேந்திபவன்ல

சுடசுட சாப்ட்டு வரலாம் “நிஜமா வா “

என்றவாறு ஆதிரையை பார்க்க  அவள்

ஆம் என்பது போல கண்ணசைத்தாள்.

இதோ  “ஐச்சே  ஐச்சு நிமிஷம்”, என்றபடி

சிட்டாய் பறந்தாள்   “அம்மா நீயும் ரெடி

ஆகு  ” நா எதுக்கு ஆதி நீங்க வரை

போய்ட்டு வாங்க” அதெல்லாம்

கிடையாது முக்கியமா

உங்களுக்காகதான் இந்த திட்டம்

போட்டதே ப்ளீஸ் ஆண்டி மாட்டேன் னு

சொல்லாதிங்க  “என்று கெஞ்சலாய்

கொஞ்ச மறுக்க மனம் இல்லாமல்” சரி

சரி வர்றேன் “என்றவாறு . நகர்ந்தாள்.

பத்து நிமிடத்தில்  அவர்கள்  இருவரும்

பளிச்சென  ரெடியாகி வர ” வாவ் ஏய்

வாண்டு இந்த பிங்க் கலர் சுடில நீ

அட்டகாசமா இருக்க போ”! “தாங்யு

சோமச் கா”அப்ப நானு ” ,”பொறாம ?! “

“அதெல்லாம் ஒன்னும் இல்ல “

“கோச்சுக்காதடி “என்றவள்

தோளில் கை போட்டபடி ” நீ புடவ கட்டின

மகாலட்சுமி  அவ  மார்டன் மாலஷ்சுமி “

என கூற அங்கு சிரிப்பலை  உருவானது.
     
ஆதியும் நித்தியும் வண்டியில் வர

அம்மாவும் இளயவளும்  பின்னாடி

ஆட்டோவில்  கிளம்பினர். பீச்சு க்குள்

நுழைந்தவுடன்  “அக்கா அக்கா  பலூன்

ஸூடிங்  கா ” ஆமா அப்படியே

எல்லாதையும் சுட்டு தள்ளிடுவ பாரு “ம்ம்

ப்ளீஸ் கா ” சூர்யா”என ஆதிரை  அடிக்

குரலில் அழுத்தமாய்  கூற

திரும்பி  நித்தியை பார்க்க , “நீ ஏன் டி

அவள  போய் கேட்ட  வா நாம போலாம் “

என்றவாறு  அவளை அணைத்தபடி

நடக்க  ஆதியும் அம்மாவும் பின் தொடர்

தனர். முதல் இருமுறையும் புஸ்சென

போக இது சரி படாது என நித்தி நகர

“ஏய் எங்க போற? ‘ “வேடிக்கை பார்கறத

விட்டுட்டு என்கூட என்ன பேச்சு? “

என்றவாறு அவள் நடக்க இனி என்ன

நடக்கும் என்று அம்மா ஆதி

இருவருக்கும் தெரியும் சூர்யா

அனைத்தையும் சுட்டு விடுவாள் நித்தி

பின்னிருந்து பின்னால் குத்தி விடுவாள்.

“ஏய்யயயயய்  “,என்று  சூர்யா அலப்பரிக்க

ஆதி காதோடு என்னமோ ‘நீயே  சுட்ட

மாதிரி பில்டப் பன்ற ” ,”தள்ளு இங்க

என்ன குசு குசு “,என்று அவளை நித்தி

விளக்கி விட “சூப்பர் சுர்யா கைகுடு”,  என

கையை நீட்ட ” விளங்கும் “என ஆதி கூற

அன்னையவள்  சிரித்தாள். சிறிது

தூரம் நடந்திருப்பாள்  ” அக்கா ரிங்

போடறேன்கா”, என வினவ ஆதிரை வாய்

திறக்கும் முன் “இதுல தகிடு தத்தம்

பண்ண முடியாது சுர்யா  , ” ஆமால” ,என

அவள் கிசுகிசுக்க”அங்க பாரு சூடா

பஜ்ஜி இருக்கு இன்னும் கொஞ்சம் அந்த

பக்கம் நடந்தா மீன் ப்ரை  செஞ்சு

தருவாங்க  சுடச்சுட செம டேஸ்டா

இருக்கும் “ஆக மொத்தத்துல நீங்க

ரெண்டு பேரும் சாப்பிட வந்த இருக்கீங்க

அலய ரசிக்கவும் கால் நனைக்கவும்

இல்ல அப்படித்தானே? “Definetly  இதுல

என்ன சந்தேகம் உனக்கு அதான் உனக்கு

செட்டுக்கு  அம்மாவ கூடிட்டு

வந்திருக்கோம்ல  …. ” அடுத்து  அவள்

வாய் திறக்கும் முன் “அடி பாவி திட்டம்

போட்டுதான்  கெஞ்சினியா ” அச்சச்சோ

கண்டுபிடிசிட்டிங்களா “என்றவாறு

அவள் தலையை சொரிந்தவாறு நடிக்க

அங்கு அலையையும் தோற்கடித்தது

அவர்கள் சிரிப்பலை.நித்தியும்

சூர்யாவும் ஒரு பக்கம் செல்ல அம்மாவும்

ஆதி ரையும் இன்னொரு பக்கம்

நடந்தனர். “அம்மா மணலில் அமரபோக

அம்மா என்ன மா நீ வா அலையில் கால்

நனைக்கலாம்? “போடி நா என்ன சின்ன

குழந்தையா? ” அட இங்க என்ன சின்ன

பசங்க மட்டுமா கால் நனைக்கறாங்க”

என்றவள் சொன்னதும் சுத்தி முத்தி

பார்தவள்

ஆம் நண்டு செண்டிலிருந்து

பெரியவர்கள் சேர்ந்தே குதூகலித்தனர்.

“வேண்டாம்  ஆதி ” ப்ச்  நீ வா எனக்காக

ப்ளீஸ் ?எனவும் அவ்வளவுதான்

கரைந்துவிட்டாள்  பெரியவள்  “சரி வா “

என” இருஇரு “என்றவாரு  அவள்

சேலையை தூக்கி செருக “ம்ம கை பிடி”

என  கைகொடுக்க   அவளும்

கைபிடித்தாள்

இருவரும் அலையில் கால் நினைத்தனர்.

அலை கால் நனைத்து திரும்ப., லஷ்மி

க்கு பாதத்தில் ஏற்படும்  குறுகுறுப்பு

அவளை ஏதோ செய்தது அது மிகவும் 

பிடித்திருந்தது.சிறுபிள்ளைபோல

உணர்ந்தாள் சொல்லமுடியாத சுகமான

அனுபவமாக இருந்தது. இது அவள்

இரண்டாம்

முறையோ மூன்றாம் முறையோ பீச்சுக்கு

  வருவது  முதல்முறை விவரம் தெரிந்து

மிகவும் ஆசை பட்டு தந்தைக்கு

தெரியாமல்  தாயோடு  வந்தாள்.

இரண்டாம்  முறை   கல்யாணம் ஆன

புதிதில்  அத்தை யோடு  ஒருமுறை.

ஆனால் இரண்டு முறையும் அவள்

மிகவும் ரசித்ததுண்டு  . அதன் பிறகு

வாழ்வே ரசனையற்றுப்போனது. ஆதிரை

வேலைக்கு போக ஆரம்பித்ததும்  ஏதோ

வாழ்வில் சிறு பூவின் வாசமாய்  ஒரு

மாற்றம் வந்தது வாழ்வில். “ஆதி “

என்னும் குரல் அவளை கலைக்க

இருவரும் திரும்பி பார்க்க  நித்தியும்

சூர்யாவும் நின்றிருந்தனர். அவர்கள்

உடை பாதி நனைந்து மண்ணா கி ஓர்

வழியாகி  இருந்தது. இருவரும்

அவர்களை நோக்கி சென்றனர். “என்னடி

அலையில் ஆட்டமா “_ஆதிரை ” ம்ம்

ஆட்டம் மட்டுமா நல்ல சாப்பாடு

“சரிதான்”

” இந்தா உனக்கும் அம்மாவுக்கும் பஜ்ஜி

ப்ளஸ் ஃபிஸ் “என்றவாரு கையில்

தந்தாள். சரி மணி ஆறாகபோகுது

பக்கதுலதான் சினிமா தியேட்டர் நாம

போகறதுக்கும்  படம் ஆரம்பிக்கறதுக்கும்

சரியா இருக்கும் போலாமா”என்னம்மா

சொல்லற ஆதிரை வினவ? ” சரி”

என்றவாறு அம்மா தலையசைத்தாள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்