Loading

என் உயிர் – 9 🧬

குளு குளு வெண்பனி போல..
சல சல சல்லடையாக..
பல பல கற்பனை மோத..
பறக்கவா உன் நினைப்பாக..

மனதிற்குள் இப்பாடல் ஒலித்தது டெல்லி ஏர்போர்ட்டில் இறங்கிய பொழுது கவிக்கு . சிறு வயதிலிருந்து விருதுநகரை தாண்டாதவள். எப்பொழுதாவது திருமலை வெளியூர் கூட்டி செல்வார் அதுவும் திருசெந்தூர், இராமேஸ்வரம் தான்.

அதோடு பஸ் பயணம் மட்டுமே அனுபித்தவளுக்கு விமான பயணம் வித்தியாசமாக தான் இருந்தது. ஆனால், அதை அனுபவிக்கும் மனநிலையில் அவள் இல்லை. ஏனென்றால், அவள் மதுரை விமான நிலையத்தில் மகிலனைக் கண்டாள்.

மற்றவர்களிடம் கூறினால் பிரச்சனை வரும் என்பதோடு , கண்மணியின் உடல் நிலை கருதியும் இவ்வாறு முடிவு எடுத்தாள்.

விமானத்தில் மனைவியுடன் அமர்ந்து மனம் விட்டு பேசலாம் என்று கற்பனைக் கோட்டை கட்டியவனின் மேல் ஒரு லோட் மணல் லாரியை அள்ளி வீசி விட்டினர் செல்வி மற்றும் வனஜா.

ஆம், திருமணம் நிலவனுடம் நடந்த அரை மணி நேரத்தில் சஞ்சய்யிடம் கூறி தீரன், நிலவன், கவி, கண்மணி, மற்றும் திருமலைக்கு டெல்லிக்கு டிக்கெட் போட சொல்லி விட்டார்.

ஆனால், எதிர்பாராத விதமாக வனஜா தானும் வருவேன் என்று கூறியதோடு செல்வியின் வீட்டில் சண்டை போட்டு பேத்தியின் மன ஆறுதலுக்கு அடித்து பிடித்து அழைத்து வந்து விட்டார்.

அதனால், இவர்கள் இருவருக்கும் இரு வரிசையின் பின்னால் கிடைத்தது. அந்த இடத்தில் தானும் தனது மனைவியும் அமருவோம் என்று நினைத்திருக்க , வனஜா மற்றும் செல்வி  கவியின் இரு பக்கத்தில் அமர்ந்து கொள்ள, திருமலை மற்றும் கண்மணி இருவர் சீட்டில் அமர, நிலவன் வேறு வழியில்லாமல் தீரனுடன் அமர்ந்து கொண்டான்.

பிள்ளையைப் பற்றி தெரியாதவரா ?ஓரக்கண்ணால் மகன் படும் எரிச்சல்களையும் , கடுகடுப்பையும் கண்டு ரசித்தவர், மகன் பார்க்கும் சமயம் நக்கலாக சிரித்து விட்டு கண் அயர்ந்து விட்டார்.

தான் கணவனுடன் அமரவில்லை என்ற  எண்ணம் கூட கவிக்கு தோன்றவில்லை மகிலனை கண்டதால். சுற்றி அவனே தோன்ற, மெது மெதுவாக மகிலனை விரும்பியது தோன்ற, தான் நிலவனிடம் நடந்து கொண்டது இறுதியாய் தோன்ற , தன்னை நினைத்து தானே வெட்கி உருகினாள்.

வனஜாவும் செல்வியும் பேசுவதை காதில் வாங்காதவாறு வேறு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். இறுதியாக, ஒரு முடிவெடுத்து விட்டு, வனஜா மற்றும் செல்வி வாயை மூடிவிட்டு கண் அயர்ந்து விட்டாள்.

திருமலையின் மனதில் ஒரு போராட்டாமே நடந்து கொண்டிருந்தது. கட்டியவளைப் பார்ப்பதா, பெற்றவளைப் பார்ப்பதா, இல்லை கூடப் பிறந்தவளைப் பார்ப்பதா என்று பெரும் மனச் சங்கடத்தில் இருந்தார்.

திரும்பி தனது அருகில் பார்த்த பொழுது கண்மணி மருந்தின் வீரியத்தில் அசந்து தூங்கி கொண்டிருந்தார். அவ்வேளையிலும் அவரின் கண்ணிலிருந்து கன்னத்திற்கு கண்ணீர் கோடாக வழிந்து காய்ந்திருந்தது.

யாேசனையுடன்  ஆயாசாமாக திரும்ப, வனஜா தான் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். தனது பக்கவாட்டில் அமர்ந்திருக்கும் மகனை அருகில்  அழைத்து “நான் பெத்தவ…. நானே அந்த சிறுக்கியை விட்டுட்டேன். இத்தனை நாளும் அந்தாளை பொறுத்துக்கிட்டதே  பேரனுக்காக தான். அவனும் அவரை மாதிரி பொறுப்பில்லாம பொறம்போக்கா
சுத்திக்கிட்டு இருக்கான். அதை மறச்சு பச்சை பிள்ளையை கண்ணலாம் பண்ண பாத்துருக்காங்க. நான் நினைச்சது மகிலனை கண்ணாலம் முடிஞ்ச கொஞ்ச நாளுல தனியா வீடு பாத்து வச்சு, நான் கவி மகினு இருப்போம். அவனும் பொறுப்பா வருவானு நினைச்சேன். என்னைக்கு ரெளடி பயலுகளோட சகவாசம் வச்சுருக்கானு தெரிஞ்சுச்சோ முத வேளையா இந்திராக்குனு எழுதி வச்சு வீட்டு பத்திரத்தை தான் கிழிச்சேன்”

திருமலை திடுக்கிட்டு விட்டார். “பதறாத டா !  அது இந்திராக்கு அப்புறம் மகிக்கு அவன் வம்சத்துக்கு தான் போகும். விக்க முடியாதுனு தான் எழுதி வச்சேன். நான் உன் அம்மாடா எனக்கு தெரியாதா? அதே மாதிரி அந்த வீட்டில இருக்குறது ஒன்னும் மகி, இல்லை கவி இல்லைனா என் மகனும், மருமகளும் தான்னும் சேத்து எழுதி வச்சுட்டேன். இதலாம் அவளுக்கு தெரியாது. அதான் கிழிச்ச உடனே பேய் அறைஞ்ச மாதிரி அப்படியே நின்னுட்டா. அதனால நீ கவலப்படாத ராசா. உன் கூடப்பிறந்தவளை விடு . உன் மகளையும் விட்டுறு அவளை என் பேரன் பாத்துக்குவான் “

திருமலை எதுவோ பேச தொடங்குவதும் தயங்குவதுமாக இருக்க, ” என்னடா  திடீர்னு நிலவனுக்கு ஆதரவு தரேன்னு பாக்குறியா. அந்த பய என் பேத்திக்கு முன்னாடி என்னை கவர்ந்துட்டான். உன் அப்பாக்கு அப்புறம் நான் உடுத்துற துணில இருந்து நைட்டு தூங்கு போது பேசுனது அவன் தான். என்னனு தெரில அவனைப் பாத்தவுடனே  கவிக்கு நிலவன் தான் ஜோடியோ . தப்பு பண்ணிட்டோமோனு இரண்டு நாளால மனசை பிசைஞ்சுச்சு . இப்போ அதுவும் சரி ஆயிடுச்சு “

” இல்லை மா, கவிக்கு மகினா  உசுரு.  மனசுல ரொம்ப ஆசையை வளத்திருச்சு. இரண்டு பேரும் எப்படி வாழா போறாங்களோனு பயமா இருக்கு ” திருமலை குனிந்து நெற்றியை தேய்த்த வண்ணம் கூற,

“டேய், கவிக்கு ஆசையை வளத்தது உன் தங்கச்சி தான். அவளுக்கா தோணலை.  மாறிடும் “

“அவளுக்கா தோணல தான். ஆனா, இப்போ வயசறிஞ்சு மேடைல இன்னொருத்தனோட தாலியை வாங்கிட்டு இப்படி ஆகிடுச்சு. அதான் மனசை குழப்பிக்குமோனு பயமா இருக்கு “

அதன் பின்பே , வனஜாவிற்கும் மெலிதாக அச்சம் வெளிப்பட்டது. இதை அனைத்தையும் யோசித்தார் தான். ஆனால், திருமலை கூறும் பொழுது வீரியம் பெரிதாக இருப்பது போன்று இருந்தது.

இதற்கு மேல் பேசினால் இன்னும் குளம் குட்டையை குழம்பிவிடும் என்று கண் மூடி அயர்ந்து விட்டார்.

இங்கு நிலவனோ தனது நண்பனுக்கு வாட்ஸ் அப் மூலம் நடந்ததை தெரியப்படுத்திக் கொண்டிருந்தான் மெசேஜ் மூலம்.ஆனால், அங்கு படித்து பதில் அனுப்பியது சீமா மற்றும் பூஜா.

❤️❤️❤️

சீமா பூஜாவின் சொல்படி நிலவனை குழப்ப நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன் இறுதியில் அவள் இன்னொருவனை விரும்பியவள். அவளுக்கு விருப்பம் இல்லையெனில் விவகாரத்து கொடுப்பது மேல். அதோடு அவள் கிராமவாசி . எதையும் வேண்டும் என்று கேட்டு வாங்கி பழகாதவர்கள். அதனால், நீயே அவளுக்கு விவகாரத்து பத்திரத்தை கொடுத்து விடு நிம்மதி அடைவாள் “என்று தட்டச்சு செய்து அனுப்பி விட்டனர்.

❤️❤️❤️

இவனுக்கு அவள் அருகில் அமராததோடு திரும்பியும் காணாமல் இருப்பதும், ஏர்போட்டிற்கு வரும் முன் நடந்து கொண்டதும், இப்பொழுது நடந்து கொள்வதும் வெவ்வேறு விதமாக இருந்தது. ஒருவேளை பெரியவர்களுக்காக நடந்து கொண்டாலோ என்ற யோசனையில் மூழ்கி விட்டான்.

இவ்வாறு வெவ்வேறு சிந்தனையில் அனைவரும் உழன்று கொண்டிருக்க , “லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன்,  இந்திரா காந்தி ஏர்போர்ட் வெல்கம்ஸ் யூ டு டெல்லி . த டைம் இஸ் 12.00 ஏ . எம். ” ( அன்பர்களே, இந்திரா காந்தி விமான நிலையம் உங்களை டெல்லிக்கு வரவேற்கிறது. இப்பொழுது நேரம் இரவு 12 மணி ) என்று கூறிய பின்பு, அனைவரும் மெலிதாக விழிக்க ஆரம்பித்தனர்.

சாலமேட்டிலிருந்து மதுரைக்கு ஏற்கனவே இரண்டு மணி நேரம் பயணம் செய்த கலைப்போடு , விசேஷத்திற்காக அனைவரும் விடியற்காலையில் எழுந்த அலுப்பும் சேர்ந்து அனைவரையும் அமுக்கியது.

அனைவருக்கும் முழிப்பு வரவே சிரமமாக இருந்தது. கவியும் கூட கண்முழிக்க முடியாமல் திணறினாள். ஆனால், நிலவன் மற்றும் வனஜாவிற்கு தான் தூக்கம் வரவில்லை. இருவரும் வெவ்வேறு விஷயத்தை மனதில் தப்பாக போட்டு குழப்பிக் கொண்டிருந்தனர்.

பின்பு, அனைத்து செயல்முறைகளும் முடிந்து, தனது லக்கேஜ்களை எடுத்து கொண்டு விமான நிலையத்திற்கு வெளியில் வந்து காற்றை ஆழ சுவாசிக்க , அவள் மனதில் ஒலித்த பாடல்,

குளு குளு வெண்பனி போல..
சல சல சல்லடையாக..
பல பல கற்பனை மோத..
பறக்கவா உன் நினைப்பாக..

இறுதி வாக்கியத்தில் ஒரக்கண்ணால் நிலவனைக் காண , அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அதில் வெட்கம் கொண்டு தாங்க முடியாமல் திரும்ப , நிலவனோ புருவ முடிச்சோடு ஆராய்ச்சி பார்வைப் பார்த்தான்.

பின்பு, அனைவரும் தீரனின் வீட்டிற்கு பயணம் மேற்கொண்டனர். கவி காரின் ஜன்னலின் வழியே டெல்லியை ரசித்து கொண்டு வந்தாள்.

மகிழனோ, நிலவனோ  எதையும் மனதிற்கு இடம் கொடுக்காமல் இந்த நிலையை அனுபவித்து கொண்டிருந்தாள். அதற்கு காரணம் செல்வி தான். தோழியைப் பற்றி தெரிந்ததால் அவள் தான் இயற்கையை பற்றி கூற , அதனை ரசித்து கொண்டே வந்தாள்.

டெல்லி! யமுனை ஆற்றங்கரையில் இருக்கும் ஒரு அழகிய நகரம். அங்கு பழமை முதல் புதுமை அனைத்தும் உள்ள இடம். இயற்கையிலிருந்து மேம்பட்ட தொழில்நுட்பம் வரைக்கும் அனைத்தும் உள்ள இடம். இந்தியா என்றால் இது தான் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்.

அனைத்து ஊர் மக்களும் பிழைப்பு தேடி வரும் இடம். கன்னாடு பிளேஸிருந்து சாந்தினி செலிக் வரை படித்தவர்களும் படிக்காதவர்களும் வாழும் இடம். இங்கு சுற்றி பார்க்கும் இடங்கள் அநேகம். அதோடு அரசாங்கம் உரியதான இடங்கள் மிக அற்புதமாக இருக்கும். அனைத்து மாநிலங்களும் தனித்தனி இடம் ஒதுக்கி இருக்கின்றனர் .

இவ்வாறு பார்த்துக் கொண்டே செல்லும் வழியில், இந்தியா கேட் இருப்பதாக கூற , இறங்கி அதற்குள் சென்றனர் .

சென்ற ஐந்தே நிமிடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. என்ன ஏதென்று அனைவரும் பார்க்க, அருகில்  சென்றவர் “ஏதோ ஒருத்தனை வெட்டி போட்டுடாங்க ” என்று ஹிந்தியில் கூறினான்.

தீரன் மற்றும் நிலவனை தவிர அனைவரும் அதிர , இது சகஜம் இங்கே என்பது போல் நின்று கொண்டிருந்தனர். நிலவன் மட்டும் போகும் வண்டியில் மகிலனை வெறித்து பார்த்தான். மகிலனும் சளைக்காமல் காண , வண்டியும் பறந்தது.

❤️❤️❤️❤️

அதே சமயம் செழியன் மற்றும் ஆதவ் செழியன் இருவரும் அடுத்த ஆராய்ச்சி முதல் துவக்கத்தை தொடங்கியதாக பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

❤️❤️❤️

திருமலைக்கு அலைபேசியில் செய்தி வந்தது “இன்னும் இரு வாரத்தில் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான ரிசல்ட் வெளியாக உள்ளது ” என்று .

நாமும் பார்ப்போம் என்ன நடக்க போகின்றது என்று.

கீர்த்தி ☘️

ரேடிங்க்ஸ் அண்ட் ரிவ்யூஸ் கொடுங்கோ மக்களே! மீ பாவம் ☹️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்