Loading

என் உயிர் – 11 🧬

குளித்து முடித்து விட்டு வெளியில் வந்த கவி அதிர்ந்து விட்டாள். நிலவன் தலையைப்பிடித்து கொண்டு நிற்க, சஞ்சய் விழி பிதுங்கி நின்றான்.

நிலவன் மட்டுமே இவ்வீட்டில் இருப்பதாலும், சஞ்சய் மற்றும் தீரன் எப்போதாவது தான் இங்கே சாப்பிடுவதாலும் மிகவும் சிறு சிறு பாத்திரம் அதுவும் சில்வரில் இல்லாமல் ஸ்டார் உணவகத்தில் உபயோகிக்கும் செராமிக், நான் ஸ்டிக் மற்றும் கிளாசில்லும் வைத்திருந்தான்.

கண்மணிக்கும் உடம்பு சரியில்லததால் வனஜா தான் தானே பார்த்து கொள்வதாக கூற , அனைவரும் அறைக்கு சென்று விட்டனர். திரும்பி வந்த பொழுது, அமர்ந்திருந்த சஞ்சய்யை “டேய், இதுலாம் பாத்திரமா டா….. மனுசன் சாப்பிடுவானா …. போய் சில்வர் சாமான்லாம் மச்சில இருக்கும் எடுத்து கொடு ” எனக் கூறி மச்சை அந்த நவின அப்பார்ட்மென்டில் தேடிக் கொண்டிருந்தார்.

பின்னால் சென்ற சஞ்சய் , “மச்சா…. மச்சுலாம் இங்க இருக்காது. அதே மாதிரி சில்வர் பாத்திரம் யூஸ் பண்றதுலாம் ஓல்ட் ஃபேஷன் “

படக்கென்று திரும்பிய வனஜா அவனை ஏற இறங்க பார்த்து விட்டு, சட்டென்று அவனின் பேண்டை பிடித்து ” எதுக்கு ஓல்ட் பேஷன் மாதிரி பேண்ட் கீழயையும் சட்டை மேலையும் போட்டுறுக்க…. கழட்டு மாத்தி போட்டு விடுறேன் “

“எதே ……. மாத்தி போட்டு விடுறீங்களா ….. பாட்டி என்ன பேசுறீங்க….. “

“அப்போ இனிமே பாத்து பேசு…….. ” எனக் கூறி கையை எடுக்க, சஞ்சய்யுடன் நிலவனுக்கும் அப்பொழுதுதான் மூச்சு சீராக வந்தது . அதற்குள் வனஜா மறுபடியும் “நீ ரொம்ப பேசிட்ட…… அதனால எனக்கு பக்கத்து வீட்ல இருந்து பாத்திரம் வாங்கி தா…. இல்லைனா நான் உனக்கு டிரஸ்ஸ மாத்தி மாட்டி விடுவேன் ….. “

விழி பிதுங்கிய சஞ்சய்க்கு துணையாக நிலவன் குறுகிட்டு “பாட்டி அப்படிலாம் இங்க தர மாட்டாங்க…. நாங்க வேணா வாங்கிட்டு வரவா…… “

” அவ்ளோ நேரம் யாரு காத்துக்கிட்டு இருப்பா ? எனக்கே வயசாயிடுச்சு. நேரத்துக்கு சாப்பிடனும்… சுகர் வேற இருக்கு. அதனால முடியாது . நான் சொன்னது தான் செய்யனும் ஒன்னு பக்கத்து வீட்ல பாத்திரம் வாங்கு இல்லைனா அவன டிரஸ்ஸ கழட்டிருவேன் ” எனக் கூறிய வனஜாவை தான் அனைவரும் அதிர்ந்து பார்த்தது.

நிலவன் வெளியில் வந்த கவியை பாவமாக பார்க்க, பின்பு அவள் தான் பேசி வனஜாவை சரி செய்து, இருக்கும் பாத்திரங்களின் உதவியோடு சஞ்சய், நிலவனின் உதவியையும் கூட்டு சேர்த்து அனைவரும் உண்டு அன்றைய களைப்பை போக்கினர்.

இரவு நெருங்க நெருங்க கவிக்கு இதயத்துடிப்பு கூடியதை விட, நிலவனுக்கு தான் அதிகமானது. வேர்த்து விதிர்விதிர்த்து இருந்தான். தனது அறைக்கு தேவைக்கு கூட செல்லாமல் போக்கு காண்பிப்பவனை தோழனாக சஞ்சய் கவனித்து கொண்டு தான் இருந்தான். இருந்தும் அவனே கூறட்டும் என்று நினைத்து விட்டு அமைதியாக இருக்க, வனஜா டிவி பார்த்துக் கொண்டிருக்கும் நிலவனின் ரிமோட்டை வாங்கி சீரியல் பார்ப்பதற்கு ஏதுவாக சஞ்சய்யையும் எழுப்பி விட்டு சோபாவில் படுத்து விட்டார்.

அதோடு, தீரனும் திருமலையும் எப்பொழுதும் தீரன் வரும் பொழுது உபயோகிக்கும்  அறையில் தங்கி கொண்டனர். மீதம் உள்ள இரண்டு அறையில் தனது அறையில் முதலிரவுக்கு அனுப்பி விடுவார்கள் என்று நிலவனுக்கு பயமாகவும், “ஒரு அறையில் நிலவன் மற்றும் கவி, இன்னொரு அறையில் செல்வி மற்றும் கண்மணி  ….. அப்படியென்றால் நாம கிழவி கூடத் தான் படுக்கனுமா? ” என பயங்கரமாக நினைத்தான் சஞ்சய்.

ஐந்து நிமிடம் ஐந்து மணி நேரம் போன்று சென்றது. வனஜா சீரியல் பார்ப்பதை பார்த்த கண்மணி “அத்தை நாங்க படுக்க போறோம் “

“சரி சரி ” எனக் டிவியைப் பார்த்துக் கொண்டே கூறிய வனஜாவை சஞ்சய் மற்றும் நிலவன் உறுத்து விழித்தனர். செல்லும் கண்மணியும் அவர்களை மார்க்கமாக பார்த்துக் கொண்டே சென்றார்.

கண்மணி சென்றும் நிழலாடுவதை உணர்ந்து திரும்பி பார்த்த வனஜா புருவம் சுருக்கி ” எதுக்கு இப்போ எனக்கு பாதுகாப்பு மாதிரி நிக்கிறீங்க ? “

“நீ என்ன பாட்டி அவங்க அவங்க போய் தூங்குங்கனு சொல்லிட்ட ” என சஞ்சய் சம்மத்தில்லாமல் கேள்வி கணைகள் தொடுக்க,

“வேற என்ன பண்ணனும் ? தாலாட்டா பாட முடியும் “

“நீ தாலாட்டு பாட ரூமுக்கு போனா , அவன் எப்படி தாலாட்டு பாடுறதுக்கு பாப்பா ரெடி பண்ணுறது “

“அடிங் எடுப்பட்ட பயலே …… ” வனஜா அலறி கொண்டு எழ, இரவு நேரம் வீட்டில் அனைத்தும் அமைதியாக இருக்க, பக்கத்து அறையில் இருந்த கண்மணி, செல்வி மட்டும் கவிக்கு நன்றாகவே கேட்டது.

கண்மணி சட்டென்று தனது மகளைத் தான் கண்டார். அவளோ முகத்தில் அச்சத்தை பிரதிபலித்துக் கொண்டிருந்தாள். தன் மகளுக்கு நேரம் கொடுக்க வேண்டும் என்று தீர்க்கமாக முடிவெடுத்து விட்டு, மாமியார் கூறுவதை செவி சாய்த்தார்.

இந்த இடைவெளியில் வனஜா சஞ்சய்யை கெட்ட வார்த்தையும் அல்லாமல் நல்ல வார்த்தையும் அல்லாமல் கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருந்தார். ஒரு வழியாக மூச்சு வாங்கும் இடைவெளியில் “இப்ப என்ன கேட்டுடேனும்  இந்த கிழி கிழிக்கிற? “

“டேய் நீ படிச்சியா இல்லை பன்னி மேச்சியா டா ? “

இவ்வளவு நேரம் ஸ்தம்பித்து ஏதோ யோசனையில் உழன்று கொண்டிருந்த நிலவன் , வனஜா கேட்ட இறுதி கேள்வியில் சிரிப்பு பிறீட்டு வந்தது. முயன்று அடக்கினான். சஞ்சய்யோ  பாவமாக நண்பனை நோக்கும் சமயம் நிலவன் சிரித்தது மேலும் கடுப்பாகி விட்டான்.

உடனே “நீங்க எல்லாரும் என்னை ரொம்ப பேசுறீங்க. நான் எங்க வீட்டுக்கு போறேன் . போங்கடா ” எனக் கூறி வாசலை நோக்கி சென்றான்.

“இந்த அர்த்த இராத்தில எப்படி போவ? ” வனஜா படுத்துக் கொண்டு, தலைக்கு கையை முட்டுக் கொடுத்துக் கொண்டு கேட்ட போஸில் இன்னும் சூடேறி “ரொம்ப கவலைப்படாத …. இந்தா இதுக்கு கீழ நாலாவது ஃப்ளோர்ல தான் இருக்கேன் நான் போய்க்குவேன். “

“இங்க தான் உன் வீடு இருக்கா? உன் அப்பா அம்மாவை நாளைக்கு வீட்டுக்கு வர சொல்லு. உன்னைப் பத்தி சொல்லனும் ? “

“எதே? நீ என்ன ஸ்கூல் ஹெட்மாஸ்டரா ? பேரண்டஸ் மீட்டிங் (பெற்றோர் சந்திப்பு ) மாதிரி பேசுற ? “

“ஆமா ! கிட்டதட்ட அதுதான் “

செல்வியும் கவியும் தனக்குள் பேசிக்கொண்டனர் . “பய சிக்கிட்டான் கிழவிக்கிட்ட …. வச்சு செய்ய போகுது ” என்று செல்வி கவியிடம் கூறி அவளின் மனநிலையை மாற்ற முயற்சி செய்தாள்.

கண்மணிக்கு அது புரிந்ததால் சிரித்துக் கொண்டு அமைதியாக கண் மூடிக் கொண்டார்.

” என்ன சொல்லனும் ? ” நிலவன் ரொம்ப நேரம் கழித்து வாயைத் திறந்தான்,

“ஆமாம் டா! இவன் சரியில்லை. மனசும் சரியில்லை . உடம்பும் அங்க அங்க வீங்கி அதுவும் சரியில்லை “

சஞ்சய் தனது சிக்ஸ் பேக்கை கண்டு வனஜாவையும் கண்டான். அவரோ தொடர்ந்து “காலையில பாத்திரத்துக்கு எவ்ளோ அலைஞ்சோம். ஒரு வார்த்தை சொன்னானா இங்க தான் அவன் வீடு இருக்குனு? “

“அது ஏதோ ஞாபகத்தில மறந்துட்டேன் “

“எது ஞாபகத்தில மறந்துட்டேனா? பக்கி பைத்தியம் மாதிரி பேசுறான். நிலவா நான் கண்டிப்பா இவங்க அப்பன் ஆத்தாவா பாத்தே ஆகனும் “

“எதுக்கு? ” சஞ்சய் பாவமாகக் கேட்க,

“ஹான் உனக்கு மந்திரிச்சு விட தான் “

ஒரு நிமிடம் கண்மணி கண் திறக்க, கவி கண்கள் இரண்டும் வெளியில் வந்து விடும் அளவு விழித்தாள். செல்வியோ வயிற்றை பிடித்துக் கொண்டு தரையில் உருண்டு பிரண்டு சிரித்து விட்டு, இறுதியாக “செத்தான் சிவனான்டி ” எனக் கூறி மறுபடியும் சிரித்துக் கொண்டே வெளியில் வந்தாள் இருவருக்கும் போர்வையை எடுத்துக் கொண்டு.

அதில்  புரிந்து கொண்ட நிலவனுக்கு மனதிற்குள் ஏமாற்றம் நிலவுவது போல் இருந்தது. ஒன்றும் கூறாமல் மற்றொரு  அறைக்கு சென்று படுத்து விட்டான். சஞ்சய் இன்னும் நகராமல் இருப்பதைக் கண்டு செல்விக்கு துடுக்குத்தனம் வெளியில் எட்டிப் பார்த்தது.

போர்வை கொடுக்கும் சாக்கில் அவனின் அருகில் சென்று , ” ஹாய் செல்லம் “

அவன் முறைக்க ” கூல் டவுன் …. கூல் டவுன்…. கூல் டவுன்”

அவனுக்கு நேரம் பார்த்து எதுவும் தோன்றாமல் இருக்க, முறைத்து விட்டு கோபமாக நகர முயற்சிக்கும் பொழுது சோபாவில் சுண்டு விரல் நசுங்கியது. அதில் முகம் சுருங்க, தோளைத் தட்டி ” எதா இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணனும் …. பிளான் பண்ணாமா   பண்ணா இப்படி தான் ஆகும் “

“நீ பிளான் பண்ணாமா இருந்தாலே போதும் …. போய் தூங்கு ” வனஜா கண் மூடிக்கொண்டே கூற, இப்பொழுது சிரிக்கும் முறை சஞ்சயுடையது ஆகிற்று.

வாய்க்குள்ளேயே முனங்கி கொண்டு படுக்க செல்ல, நிலவன் யோசனையுடன் இருப்பதை கண்டு சஞ்சய் வனஜாவின் கீழேயே பாய் விரித்து படுத்துக் கொண்டு விட்டத்தை பார்த்து காலாட்டி கொண்டிருந்தான்.

“என்ன கேக்கனும்? “

“செம ஷார்ப்பு பாட்டி நீ “எனக் கூறி துள்ளிக் குதித்து எழுந்து அமர்ந்தவன் , ” ஏன் முத ராத்திரி வேணாம்னு சொன்னீங்க? “

“அதுக்குலாம் நல்ல நேரம் பாக்கனும்டா “

” அது தான் கல்யாணத்துக்கு நாள் குறிக்கும் போதே இதுக்கும் சேத்து தான சொல்லிருப்பாங்க “

“டேய் ! அது மதிக்கும் கவிக்கும் பாத்ததுல ?”

“ஓஹோ…… “என யோசித்தவன், “ச்சை….. நான் என்னை அவங்க இரண்டு பேரும் கொண்டாட போறாங்கனா சொல்லுறேன் ! மனசு விட்டு பேசுவாங்கல “

“அதுக்கும் தான் அனுப்பல ” புருவம் சுருக்கி சஞ்சய் பார்க்க, வனஜாவே தொடர்ந்தார் ” நம்ம வீட்டுக்கு மட்டும் புருஷன் பொண்டாட்டியா இருப்போம்னு சொல்லுறது, ஒரு வருவும் கழிச்சு பிரிச்சுரலாம்னு சொல்லுறது எல்லாம் இந்த முதல் ராத்திரில தான் “

“அட ஆமா ! யூ ஆர்  ஸ்மார்ட் பாட்டி “எனக் கூறி வனஜாவின் கன்னம் கிள்ளி கொஞ்சி சிறிது நேரம் பேசி விட்டு தூங்க,

முழு பெளர்ணமி நிலவில் அந்த விலாசமான மொட்டை மாடியில் யாருமில்லா தனிமையில் இரவு ஒரு மணி அளவில் நிலவனும் கவியும் நின்றுக் கொண்டிருந்தனர்.

கவி பௌர்ணமியை ரசிக்க, நிலவன் அவனது இனியை ரசித்துக் கொண்டிருந்தான் !

மண்டையில் உள்ள கொண்டையை மறந்தது போல் வனஜா மாத்திரையின் வீரியத்தில் தூங்க , சஞ்சய் படுத்தால் உலகம் மறக்கும் அளவிற்கு தூங்குவான் என்பது தெரியாமல் கவியும், நிலவனும் சந்திக்காமல் இருக்க பாதுகாப்பிற்கு வைத்திருந்தார்.

அடுத்த அத்தியாத்தில் எப்படி சந்தித்தார்கள் என்று பார்க்கலாம் ! பைபை…..

கீர்த்தி ☘️

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்