Loading

அத்தியாயம் 11

 

” இல்லை டா கண்ணா . டான்ஸ் கத்துக்க நீ தானே ஆசைப்பட்ட.”  என்றார் அப்பா ராஜன்.

 

அந்த வயதில் எனக்கு காரணம் சொல்ல தெரியலை . எனக்கு எப்போதும் அந்த டான்ஸ் கிளாஸ் போக பிடிக்காமல் இருந்தது . ஆனா என்னை சமாதானம் செய்து அனுப்பினார்கள் .

 

” மாஸ்டர் , சந்தியா எப்படி டான்ஸ் ஆடுறா ? ” என்றுக் கேட்டார் ராஜன்.

 

” இவ்வளவு சின்ன வயதில் சந்தியா ரொம்ப அருமையாக ஆடுற ” என்றான் அந்த மாஸ்டர் .

 

அப்பா போயிட்டாங்க  . எப்போதும் என்னை ஒரு மாதிரி பார்ப்பவர்‌. அன்னைக்கு என் கிட்ட தப்பாக நடக்க முயற்சி செய்தார் . அன்னைக்கு அந்த நேரம் அங்கு யாரும் இல்லை நான்  ரொம்ப பயந்தேன்.

 

என் நல்ல நேரம் . அப்பாவின் போனை காரில் வரும்போது விளையாடிட்டு வந்தேன் , தெரியாமல் என்னோட வாட்டர் பேக்கில் வெச்சிட்டேன் . அதை வாங்க வந்தவர்  , ” டேய் பொறுக்கி நாயே ”

என்று கத்தினார் . பின்னர் அவனை நல்லா  அடித்தார் .

 

” ஏன் டா இப்படி பண்ண . சொல்லுடா பொறுக்கி.” என்றுக் கேட்டார் அப்பா .

 

” பணத்துக்காக தான் சார் . வீடியோ எடுத்து உங்க கிட்ட பணம் வாங்க தான் ”  என்றான் அவன் .

 

அந்த நாளின் நினைவில் இருந்து வெளியே வந்த சந்தியா அழுதாள் . தீப்ஷீயின் கண்களிலும் கண்ணீர் .                ‘ பெண்களாக பிறந்த பாவத்திற்கு இன்னும் என்னென்ன அனுபவிக்க வேண்டுமோ ‘ என்று நினைத்த தீப்ஷீ , சந்தியா அருகில் சென்று அவளை அணைத்துக் கொண்டாள் .

 

மன வேதனை தீரும் வரை அழுதவள் பின் தன் நிலைப்பெற்று , ” இன்னைக்கு வரை அவன் என்ன ஆனான் என்று எனக்கு தெரியாது தீப்ஷீ . என் அப்பாவை பற்றி எனக்கு நல்லா தெரியும்  கண்டிப்பாக அவனை உயிரோடு நரக வேதனையை அனுபவிக்கும் படி செய்திருப்பார் ” .

 

” எனக்கு எல்லாமே என் அப்பா தான் . ஆனால் அந்த சம்பவத்திற்கு பின் நான் அவர் கிட்ட கூட போகவில்லை . மூன்று மாதம் ஆனது எனக்கு என் அப்பா கிட்ட பயம் இல்லாமல் பேச . நிறைய கவுன்சிலிங் போனேன் . பழையபடி என்னை மாற்ற என் அம்மா, அப்பா நிறைய போராடினாங்க. ”

 

” அதுக்கு பின் எல்லா இடத்திற்கும் என்னை தனியாக தான் போகணும்னு டாக்டர் சொல்லிட்டாரு. இல்லை என்றால் நான் பயந்து வீட்டிற்குள்ளே முடங்கி போவேன் என்று சொல்ல , எல்லா இடத்திற்கும் என்னை தனியாக அனுப்பினார்கள். ”

 

” பணத்தால் தான் எனக்கு பிரச்சனை வந்தது அதனால் , எந்த இடத்திலும் என்னை பணக்கார வீட்டு பெண்ணாக காண்பிக்க மாட்டார்கள் எங்க வீட்டில். அதனால், எந்த இடத்திற்கும் காரில் போக மாட்டேன் , சாதாரண உடை தான் , நகை கூட போட மாட்டேன் ” .

 

” ஆனா , என்னால் இன்றளவும் என் அப்பாவின் தொடுகையை கூட ஏத்துக்க முடியலை ,ஒரு அடி தள்ளி நின்னு தான் அவர் கிட்டே பேசுவேன் . என்னால் இயல்பான குடும்ப வாழ்க்கை வாழ முடியுமா என்று தெரியலை . ஆனா டாக்டர் என் கிட்ட இருக்கும் பயம் போனால் முடியும் என்று தான் சொன்னார் ” .

 

” மகளின் கல்யாணம் பற்றி யோசிக்க பயந்தவங்க கிட்ட , நான் ஒருவரை விரும்புவதாக  சொன்னேன் , அவர் மகிழ்ந்து போய் சம்மதித்தார் . ஒரு வேளை எனக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்திருந்தால் அவரும் ஸ்டேட்டஸ் , ஜாதி என்று யோசிச்சி இருப்பாரோ என்னவோ .

 

ஆர்.ஈ.எஸ் இன் ஒரே வாரிசை அப்படி எளிதாக யாரோ ஒருவனை விரும்ப அனுமதிப்பார்களா ? அப்பா சத்யாவை பற்றி தெரிந்துக் கொள்ள டிடெக்டிவ் ஏஜென்ட் மூலம் ஒருவரை அனுப்பினார் . அப்படி தான் எனக்கு சத்யா அம்மா , அப்பா, பின் கமலாமா , உன்னை பற்றி எல்லாம் தெரிந்தது ” .

 

” சத்யாவின் அம்மா , அப்பாவை பத்தி தெரிந்ததால். பெரியதாக நானோ, என் பெற்றோரோ, சத்யாவை தப்பாக நினைக்கலை . அவனின் மேல் எனக்கு காதல் தான் அதிகமானது . சத்யா என்னை ஏற்றுக் கொள்வானா என்று எனக்கு தெரியாது ஆனா சத்யாவை தவிர வேற யாருக்கும் என் வாழ்க்கையில் இடம் இல்லை ”  என்று முடித்த சந்தியா அமைதியாக சேரில் சாய்ந்து அமர்ந்தாள் தீப்ஷீயின் பதிலை எதிர்பார்த்து .

 

சந்தியா சொல்லியதைக் கேட்ட தீப்ஷீ ஐந்து நிமிடங்கள் அமைதியாக இருந்தாள். அவள் சொன்னதை உள்வாங்கி, தனக்குள் யோசித்தாள், பின்  சந்தியாவிடம்,

 

” சந்தியா என்னால எளிதாக எந்த முடிவையும் எடுக்க முடியலை . இது சத்யாவின் விருப்பத்தை பொருத்தது . ”

 

” உன்னையும் சத்யாவை சேர்த்து வைப்பேன் என்று என்னால  உறுதியாக சொல்ல முடியாது‌.”

 

” சத்யாவிற்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. காரணம் அவனின் அம்மா , அப்பா. முதல அவனை கல்யாணத்திற்கு சம்மதிக்க முயற்சி செய்யணும் . பின், உன்னை சத்யாவிற்கு பிடித்திருக்கா இல்லையா என்று தெரிஞ்சிக்கணும் . கண்டிப்பாக உன்னை பற்றி எல்லாம் தெரிந்தவரை தான் நீ கல்யாணம் செய்ய வேண்டும் . சத்யா உன்னுடைய கடந்த காலத்தை வைத்துக் கண்டிப்பாக உன்னை வேண்டாம் என்று சொல்ல மாட்டான் . சத்யாவை போன்ற ஒருவனால் தான் உன்னுடைய காயத்திற்கு மருந்தாக இருந்து காலம் முழுக்க உனக்கு துணையாக இருக்க முடியும் .”

 

” சத்யா கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லும் வரை காத்திருப்பீயா? அவன் சம்மதம் சொன்னால் , என்னை தான் பெண் பார்க்க சொல்வான் , நான் உன்னை தான் அவன் கிட்ட கல்யாணப் பெண்ணாக காட்டுவேன். ” என்றாள் தீப்ஷீ .

 

” எவ்வளவு வருடங்கள் ஆனாலும் நான் சத்யாவிற்காக காத்திருப்பேன் . அவனை தவிர வேறு யாருக்கும் என் வாழ்வில் இடமில்லை. ” என்றாள் சந்தியா.

 

‘ பெண்ணே ! பல வருடங்கள் இல்லை பல ஜென்மம் காத்திருக்க வேண்டும் ‘ என்றது விதி .

 

” சத்யாவிற்கு என்னதான் நான் , கமலாமா இருந்தாலும் அவனுக்கு தாய் அன்பு கிடைக்கல்லை . அதனால் , நீ என் சத்யாவை நல்லா பார்த்துக்குவியா ? அவனுக்கு உன்னுடைய முழு அன்பை தருவியா ? அவனை உன் குழந்தையாக பார்த்துக்குவியா ? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .

 

அவளின் நட்பின் ஆழத்தைக் கண்டு வியந்தவள் , ” கண்டிப்பாக நான் சத்யாவை நல்லா பார்த்துப்பேன் ” என்றாள் சந்தியா .

 

” ஓகே சந்தியா , நீ இப்போ சத்யா கிட்ட காதலை பற்றி சொல்ல வேண்டாம் . நேரம் வரும் போது நானே சொல்கிறேன். ஆனா சந்தியா உன்னுடைய கடந்த காலத்தை பற்றி நான் சத்யா கிட்ட இன்னைக்கு பேசட்டுமா ? ”  என்றுக் கேட்டாள் தீப்ஷீ .

 

” என்றாவது ஒரு நாள் சொல்லித்தானே ஆகணும். அது இன்றாக இருப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை தீப்ஷீ . எனக்கு சத்யா கிட்ட காதல் சொல்லும் தைரியமெல்லாம் இல்லை. ” என்றாள் சந்தியா .

 

சத்தமாக சிரித்தாள் தீப்ஷீ , ” சரி வா கிளாஸிற்கு போவோம் . கிளாஸ் கட்டடிச்சது மட்டும் சத்யாவிற்கு தெரிந்தால் அவ்வளவு தான் என் நிலை.”

 

*****

 

ஊஞ்சலில் தீப்ஷீ அமர்ந்திருக்க அவள் அருகில் நின்றிருந்த சத்யா , ” காலைல எங்க போனா அம்மு ? கிளாஸ்ல உன்ன பார்க்கமுடியல . ” என்றுக் கேட்டான் .

 

” அது எப்படி சத்யா ? நான் என்ன பண்ணாலும் உனக்கு தெரியுது . ”  என்றுக் கேட்டாள் தீப்ஷீ .

 

” அதெல்லாம் அப்படி தான் . எனக்கு உன்னை கவனித்துக் கொள்வதைவிட வேறு எந்த வேலையும் இல்லை . பதிலை சொல்லு அம்மு ”

 

” அது வந்து சத்யா , நான் சந்தியாவோடு கேன்டீன் போனேன். முக்கியமான விசயத்தைப் பத்தி பேச . ”

 

” அதுக்கு கிளாஸ்ஸை கட்டடிப்பியா ? டிகிரி இல்லை என்றால் ஐ.பி.எஸ் பத்தி கனவு கூட காணமுடியாது நினைவில் வைத்துக்கொள் அம்மு . ” .

 

” சத்யா ,  ஹாஃப்  டே கிளாஸ் கட்டடுச்சதற்கு , நான் என்னமோ அரியர் வெச்ச மாதிரி பேசுற . சந்தியாவின் பாஸ்ட் பத்தி பேச போனேன் . ”

 

” அப்படி என்ன சந்தியாவுக்கு நடந்தது ? ” என்றுக் கேட்டான் சத்யா .

 

” அது வந்து சத்யா.”  என்று தொடங்கியவள் சந்தியாவின் கசப்பான கடந்த கால நிகழ்வுகளை சொன்னாள் .

 

சந்தியாவின் காதலை தவிர்த்து சந்தியா இன்று அவளிடம் சொல்லிய அனைத்து விஷயத்தையும் சத்யாவிடம் சொன்னாள் தீப்ஷீ.

 

” சில ஆண்களால் , அனைத்து ஆண்களுக்குமே தலை குனிவு தான் . ”  என்றான் சத்யா .

 

சந்தியா மேல் அவனுக்கு மரியாதை வந்தது . மீண்டும் அவளோடு பேசலாமா என்றுக் கூட நினைத்தான் .

 

” அம்மு , சந்தியாவோட நட்பை எப்பொழுதும் விட்டுவிடாதே . ” சத்யா .

 

‘ எனக்கு தெரியாதா என்னோட சத்யாவை பற்றி . ‘ என்று மனதில் நினைத்தவள் , ” இல்ல சத்யா , எப்பவும் நாங்க நல்ல நண்பர்களா இருப்போம் . ” என்று சத்தமாக சொன்னவள் மெதுவாக,” பின்ன உன்னோட மனைவியோடு என் பந்தம் எப்படி முடியும் ? ” என்றாள் தீப்ஷீ .

 

” இப்போ என்ன சொன்ன ? ” என்றுக் கேட்டான் சத்யா .

 

” நான் ஒன்னும் சொல்லலையே ” என்றாள் தீப்ஷீ .

 

” சத்யா , உன் ப்யூச்சர் பிளான் என்ன ? ”

 

” என்ன அம்மு திடீருனு கேக்குற. ”

 

” சும்மா தான் சத்யா , நீ எப்படியும் எம்.பி.ஏ ரெகுலர் கோர்ஸாகவும் எம்.சி.ஏ கரஸாகவும் முடிச்சிடுவ . ஆல்ரெடி நீ நிறைய அப்பிளிகேஷன் கிரியேட் செஞ்சுட்டு இருக்க. இனி என்ன உன் பிளான்? பேங்க் சைட் ஜாபா இல்லை, டெக்னிக்கல் ப்ரோக்ராமிங் சைடா ? ”

 

” கண்டிப்பா டெக்னிக்கல் தான் அம்மு . நான் தனியாக ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி  ஆரம்பிக்க போறேன் . ”  என்றான் சத்யா .

 

” வாவ் சூப்பர் சத்யா , அப்போ எம்.பி.ஏ முடித்ததும் நீ கம்பெனி ஆரம்பிப்பியா ? ” .

 

” இல்ல அம்மு , இரண்டு வருடம் எதாவது சாஃப்ட்வேர் கம்பெனியில் ப்ரோக்ராமராக வேலை பார்க்க போகிறேன் . அப்போ தான் எனக்கு கம்பெனியை எப்படி நடத்த வேண்டும் என்று எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும் . அதுக்கு அப்புறம் தான் கம்பெனி ஆரம்பிப்பேன் . ”

 

” நல்ல ஐடியா சத்யா . ”

 

” அம்மு நாளைக்கு நான் காலேஜ் வர மாட்டேன் . நேத்து சொன்னேனே ப்ராஜெக்ட் பத்தி . அது சம்பந்தமா பெங்களூர் போக வேண்டும் . இன்னைக்கு நைட் பஸ்ஸில் போகிறேன் . நாளைக்கு நைட் வந்துவிடுவேன் . ” .

 

” ஓகே சத்யா . பார்த்து ஜாக்கிரதையா போயிட்டு வா . ”

 

” நீ எப்படி காலேஜ் போவ ? ”

 

” காலையில் அப்பாவோடு போய்விடுவேன் . வரும்போது தான் தெரியலை என்ன செய்றதுனு ”  என்றாள் தீப்ஷீ .

 

” நாளைக்கு காலேஜ் லீவ் போட்டுடு அம்மு ” .

 

” இல்லை முடியாது சத்யா , நாளைக்கு கண்டிப்பா போக வேண்டும், கம்ப்யூட்டர் லேப் இருக்கு . ” என்றாள் தீப்ஷீ .

 

” சரி , லேப் இருக்குன்னா போக தான் வேண்டும் . நீ கவனமா இரு அம்மு . தனியா காலேஜில் இருந்து வராதே . நான் வேணும்னா பாலாவை உன்ன டிராப் பண்ண சொல்லவா ? ” என்றுக் கேட்டான் சத்யா .

 

” இல்ல, வேண்டாம் சத்யா . அப்பாவையே வர சொல்கிறேன் . ”

 

” சரி வா அம்மு , வீட்டிற்கு போலாம் நேரமாகுது . அப்புறம் கமலாமாவை பார்த்துக்க. ”

 

” நீ சொல்ல தேவையில்லை , எங்க அம்மாவை எனக்குப் பார்த்துக்கத் தெரியும் . ஒரு நாள் தான போற . ”  என்று உதட்டை சுழித்தாள் தீப்ஷீ .

 

” சரி வாயாடி , வா போவோம் . ”  என்றான் சத்யா .

 

தேவ்வோடு தான் தீப்ஷீ காலேஜிலிருந்து வீட்டிற்கு வருவாள் என்று முன்பே தெரிந்திருந்தால் தீப்ஷீ காலேஜுக்கு லீவ் போட்டிருப்பாளோ ?????

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. சந்தியா நல்ல பொண்ணு தான் … சத்யா சந்தியா சேரலாம் … நினைச்சேன் சத்யா போயிட்டா தேவ் ரெடியா இருக்கானே … எப்போ டா அப்படின்னு காத்துகிட்டு இருக்கான் …

  2. சந்தியாவின் கடந்த காலம் காயங்கள் நிறைந்ததாய். சத்யாவின் கடந்த காலமும் கூட அவ்வாறே. இருவரும் இணைந்தால் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் அனுசரணையாய் இருப்பர். பார்ப்போம் காலம் என்ன வைத்திருக்கின்றது என்று.

    சத்யாவின் மனதில் திருமண வாழ்க்கை குறித்த எண்ணங்களை சரிப்படுத்தி அதன் பிறகு சந்தியாவின் காதலை கூற நினைக்கும் தீயின் எண்ணம் எந்த அளவு செயல் ஆகுமோ?

    சத்யாவின் எதிர்காலம் குறித்தான தெளிவான யோசனைகள் அருமை.