Loading

இமை 34

 

 

நேத்ராவை எழில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து வந்த விஜய், அவன் சுதாரிக்கும் முன், நேத்ரா அங்கிருந்த பூங்காவை பார்த்து துள்ளி ஓட, அங்கு வாகனங்கள் எதுவும் வராததால், சிறு புன்னகையுடன் நேத்ராவை பார்த்து கொண்டு அவளை மெதுவாக பின் தொடர்ந்து வந்த விஜய்க்கு,  அவன் அலைபேசியில் அலுவலக சம்பந்தமாக அழைப்பு வர, நேத்ராவிடம் பார்வையை வைத்தபடி, சற்று தள்ளி நின்று அழைப்பை ஏற்று பேசி கொண்டு இருந்தான்..

 

 

 

நேத்ரா யாரோ ஒரு ஆடவன் மீது மோதி நிற்பதை பார்த்து, “அச்சோ பார்த்து போடா பேபி..” என்று சாதரணமாக நினைத்து குழந்தையை எச்சரித்து விட்டு மீண்டும் போனில் கவனம் வைத்து பேசிக்கொண்டு இருந்த விஜய் நேத்ரா யாரோ ஒரு ஆடவன் முன் பயந்து நிற்பதை கண்டு உடனே அழைப்பை துண்டித்தவன், நேத்ராவை நோக்கி வேகமாக வர..    அதற்குள்  அந்த ஆடவன் நேத்ராவை கீழே தள்ளி விடவும் 

 

 

 

நேத்ரா கீழே விழும் முன் பிடித்து குழந்தையை தூக்கிக் கொண்டு, “ஒண்ணும் இல்லைடா பேபி நான் வந்துட்டேன்..” என்று அவள் முதுகை தடவிக் கொடுக்க “நான் தெரியாம இந்த அங்கிள் மேல மோதிட்டேன்.. சாரியும் கேட்டுட்டேன் ஆனாலும் என்னை அந்த அங்கிள் திட்டி கீழ தள்ளிட்டாங்க..‌” என்று நேத்ரா உதடு பிதுக்கி அழுது கொண்டே கூற 

 

 

 

தன் கண் முன்னே தன் குழந்தையை கீழே தள்ளிவிட்ட அந்த ஆடவனை கோப விழிகளுடன் நிமிர்ந்து பார்த்தவன், அவன் அஷ்வின் என தெரிந்ததும் தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அஷ்வின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்..

 

 

 

விஜய் தன் கழுத்தை யாரோ இறுக்குவதை உணர்ந்து, அது நேத்ரா என்று உணர்ந்தவன்,  குழந்தை பயத்தில் நடுங்கி விஜய் கழுத்தை இறுக்கி அணைத்திருந்தாள்.. குழந்தை முன் வன்முறையாக நடந்து கொண்ட தன்னை மானசீகமாக திட்டி கொண்டு 

 

 

 

“அச்சோ பேபி பயந்துட்டியா?.. அந்த அங்கிள் கன்னத்தில் கொசு டா.. அதான் அடிச்சேன்..  கொசு கடிச்சா அந்த அங்கிள் காய்ச்சல் வந்து செத்து போய்ருவாங்கள்ல அதான் அந்த கொசுவை அடிச்சேன்..” என்று நேத்ராவை சமாதானம் செய்த விஜய் ‘செத்து போய்ருவ..” என்ற வார்த்தையை மட்டும் அழுத்தி கூறி அஷ்வினை முறைத்துப் பார்க்க. 

 

 

 

திடீரென்று ஒருவன் தன்னை அடிக்கவும் அதிர்ச்சியில் திகைத்து நின்ற அஷ்வின் விஜய்யை அடையாளம் கண்டு, “ஹலோ நான் பார்க்கும்போது எல்லாம் என்கிட்ட மோதிக்கிட்டே இருக்க?.. இப்ப எதுக்குடா என்னை அடிச்ச?. என கோபமாக கேட்டபடி அஸ்வின் விஜயை நெருங்க, அவன் தன்னை நெருங்க முடியாதபடி அஷ்வின் நெஞ்சில் கை வைத்து தடுத்த விஜய்

 

 

 

“என் கண் முன்னாடி என் குழந்தையை கீழே தள்ளி விட்ற உனக்கு எவ்வளவு தைரியம்?.! என் கையில் குழந்தை இருக்கிறதால் இப்போ உன்னை ஒரு அடியோடு விட்டு போறேன்.. இப்போ என்னை நோக்கி ஒரு அடி எடுத்து வச்சாலும் இந்த நிமிடம் நீ செத்திருவ..” என்று கர்ஜித்தவன் குரலில் திடுக்கிட்ட அஸ்வின் விஜய்யை நிமிர்ந்து பார்த்தவனின் பார்வை நேத்ராவின் மீது படிந்து விலகியது.., 

 

 

 

உன்னோட கணக்கு அதிகமாகிட்டே போகுது மிஸ்டர் அதுக்காக நீ ரொம்ப வருத்தப்படுவ..!” என்று கோபத்தில் கண்கள் சிவப்பேற எச்சரித்து விட்டு ஒரே தள்ளில் அஷ்வினை கீழே தள்ளியவன், நேத்ராவை தூக்கி கொண்டு மருத்துவமனை உள்ளே சென்றான்..

 

 

 

இங்கு அறையில் எழில் இன்னும் உறங்கி கொண்டு இருக்க, அவள் அருகில் சங்கவி அமர்ந்து இருக்க “மதி இடையில் எதுவும் முழிச்சாளா?!.. என்று சங்கவியிடம் விசாரிக்க அவள் இல்லை என்று மறுப்பாக தலையசைக்கவும் நிம்மதி பெருமூச்சு விட்டபடி திரும்பியவன், அங்கு தன் பெற்றோர் அங்கு இருப்பதை பார்த்து, 

 

 

 

“நீங்க எப்போ வந்திங்க?.” என கேட்டபடி எழில் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு தன் மடியில் நேத்ராவை அமர்த்தி கொண்டவன், எழிலின் காயத்தை ஒரு முறை ஆராய்ச்சியாக பார்த்துவிட்டு அதை மென்மையாக வருடி விட

 

 

 

தங்களிடம் கேள்வி கேட்டு அதற்கு பதிலை எதிர்பார்க்காமல் தன் கவனத்தை எழிலிடம் திருப்பிய மகனை ஆச்சரியமாக பார்த்தனர்.. சுமித்ராவும், மணிகண்டனும்… “நீ கேட்ட கேள்விக்கு நாங்க இன்னும் பதில் சொல்லலடா விஜி பதில் சொல்லவா?. வேண்டாமா?..” என்று நக்கலாக கேட்க, நீங்க வந்து பத்து நிமிஷம் ஆச்சு என்று எனக்கு தெரியுமே.. வெளியே நம்ம டிரைவர் இருக்காருல்ல..” என்றவன்,

 

 

 

“மதி முழிக்க நேரம் ஆகும் போல நீங்க  கிளம்பறதுன்னா கிளம்புங்க” என்று அவர்களை அனுப்ப, வீட்டுக்கு போய் நான் டிவி சீரியல் தானே பார்க்க போறேன் நான் இங்கேயே இருக்கேன் விஜய்யை முறைத்தபடி சுமித்ரா கூற, தான் சொன்னதை தனக்கே திருப்பி கூறிய அன்னையை விஜய் அசட்டு புன்னகையுடன் பார்த்து விட்டு மறுபக்கம் திரும்பி கொண்டான் 

 

 

 

தலையில் கட்டுடன் படுத்திருந்த எழிலை பார்க்க பயமும், தன் அன்னைக்கு என்ன ஆனதோ?.. என்று பதட்டத்தில் அழுகையுமாக நேத்ரா “அம்மா..!! என்று அழுகையுடன், “அங்கிள் அம்மாக்கு அடிபட்டிருக்கு.. அமாமாக்கு ரத்தம் வருது அம்மாவ முழிக்க சொல்லுங்க.. எனக்கு அம்மா வேணும்.. விஜய் சட்டை நுனியை  பிடித்துக்கொண்டு  அழுத நேத்ரா எழிலிடம் நெருங்க

 

 

 

நேத்ராவை தடுத்த விஜய் “பேபி நான் வீட்டில் இருக்கும் போது சொன்னேன் தானே அம்மாக்கு ஃபீவர்ன்னு..‌ அம்மா பாவம் அவங்க தூங்கட்டும்.. நாம டிஸ்டர்ப் செய்ய கூடாது.. அவங்களா எழற வரைக்கும்  பேபி சமத்தா இருந்தா அங்கிள் உன்னை வெளியே கூட்டிட்டு போவேன்..” என்று நேத்ராவை தோளில் தூக்கிக் கொண்டு சமாதானம் செய்ய

 

 

 

எழிலிற்கு குழந்தை இருப்பதை அறிந்து “மருமகளுக்கு குழந்தை இருக்கா அப்போ இந்த பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சா எழில் கணவன் என்ன ஆனாங்க..? என கேள்வியுடன் சுமித்ராவும், மணிகண்டனும் ஒருவரை ஒருவர் அதிர்ந்து பார்த்து கொண்டு இருக்க

 

 

 

 

“எனக்கு ஒன்று தேவை என்றால், அது எந்த தடைகள் வந்தாலும்,  அதை தாண்டி நான் எடுத்துப்பேன்..” என்று தீவிரமாக  தங்கள் மகன் எப்போதோ கூறியது இப்போது அவர்கள் நினைவில் வர, “அப்போ எழிலோட கணவனை தங்கள் மகன் விஜய் தான் எதாவது செய்திருப்பானோ.. என்று விபரீதமாக யோசித்த அடுத்த நொடி.. “சே..சே.. என் மகன் அதுக்கெல்லாம் சரிபட்டு வர மாட்டான்.. அவன் ஆண்ட்டி ஹீரோ இல்லை.. எதுவாக இருந்தாலும் அவனே சொல்லுவான்..”  என்று தங்களை தாங்களே சமாதானம் செய்து கொண்டனர்..

 

 

 

 

“அங்கிள் அம்மா வேணும்.. எனக்கு வெளியே போக வேண்டாம்..‌ அம்மா தான் வேணும்..” என்று நேத்ரா அழ, “அச்சோ என் செல்ல செல்ல பேபி அழக்கூடாது.. இங்க பாரு.. நீ தூங்கும்போது அம்மா என்ன செய்வாங்க?..”  என விஜய் அழுது கொண்டு இருந்த நேத்ராவின் கண்களை துடைத்தபடி பொறுமையாக கேட்க “நான் தூங்கும்போது அம்மா என்ன தட்டிக் கொடுப்பாங்க..” என்று நேத்ரா பதில் சொல்ல

 

 

 

“அப்போ அம்மா தூங்கும் போது பேபி நீ என்ன செய்யணும்?.. என கேட்க சில நொடிகள் யோசித்த நேத்ரா “நானும் அம்மாக்கு தட்டிக் கொடுக்கணும்..” என்று சொல்ல.. “ம் வெரி குட்.!! மை பேபி சரியா சொன்னிங்க..” என்று பாராட்டியவன்,  “அம்மா தூங்குறாங்க நீங்க அழகா சமத்தா அம்மாவுக்கு மெதுவா தட்டி கொடுங்க அம்மா தூங்கட்டும்..” என குழந்தைக்கு எடுத்துச் செல்ல,  

 

 

 

நேத்ரா தன் அழுகையை நிறுத்தி “ஆமால்ல அம்மா பாவம்..!! தூங்கட்டும்.. நான் தட்டி கொடுக்கிறேன்.. எனக் கூறியபடி எழில் வயிற்றில் தன் பிஞ்சு கரங்களால் மென்மையாக தட்டிக் கொடுக்க, அம்மாவை தேடும் சின்ன குழந்தையை எப்படி சமாதானம் செய்வது என்று சங்கவியும், சுமித்ராவும் யோசித்து நேத்ராவை நெருங்கும் வேளையில், விஜய் நேத்ராவை அழகாக சமாளித்த விதம் கண்டு அதிசயித்து நின்றனர்..

 

 

 

உறக்கம் கலைந்து விழித்த எழில், தன் முன்னே நின்று இருந்த ஆட்களை குழப்பத்துடன் பார்த்து தான் எங்கிருக்கிறோம் என ஒரு நொடி குழம்பி சுற்றும் முற்றும் பார்க்க தான் ஒரு மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தவள் தலையை வேகமாக நிமிர்த்தி நேரம் பார்க்க,  அதில்  தலையில் காயம் பட்ட இடம் வலியை கொடுத்தது.. வலியை  உணர்ந்த பிறகு தான் தனக்கு என்ன நடந்தது என்பதை உணர்ந்த எழில், வலியில் முகம் சுளித்தபடி தலை குணிய

 

 

 

எழில் எழுந்ததில் இருந்து அவள் அசைவுகளை கவனித்து கவனத்தைக் கொண்டிருந்த விஜய் அவள் வலியில் முகம் சுளிக்கவும், “ஹேய் பார்த்து லிட்டில் கேர்ள்.. உனக்கு தான் தலையில் அடிபட்டு இருக்குல்ல அப்பறம் எதுக்கு இப்படி வேகமாக தலையை திருப்புற..? என கனிவாக கடிந்து கொண்ட விஜய்யை நிமிர்ந்து பார்த்த எழில் அம்மு குட்டி எங்க?.. எடுத்ததுமே நேத்ராவை பற்றி கேட்க  அம்மு குட்டி என்னை தேடுவாளே..” என்று அன்னையின் தவிப்புடன் சொல்ல

 

 

 

“மயக்கத்துல இருந்து முழிச்சதும் எல்லாரும் நான் எங்க இருக்கேன்னு தான் கேட்பாங்க.. ஆனால்,  நீ எடுத்ததும் அம்மு எங்கன்னு கேக்குற நீ ஹிஸ்டரியவே மாத்திட்ட ராங்கி..” என்று விளையாட்டாக கேலி செய்த விஜய்யை முடிந்த மட்டும் முறைத்து பார்த்த எழிலை சிறு புன்னகையுடன் பார்த்து

 

 

உன் ஃப்ரெண்ட் சங்கவி தான் பேபியை கடைக்கு கூட்டிட்டு போய்ருக்காங்க.. என்று சொல்ல, “அம்மு குட்டி ரொம்ப நேரம் வெளியே இருக்க வேண்டாம்.. சீக்கிரம் வர சொல்லுங்க..” என்று எழில் அவனுக்கு உத்தரவிட, இப்போ தான் போனாங்க பத்து நிமிஷம் ஆகட்டும் நானே கூப்பிட்றேன்..” என்று சமாதானம் செய்ய அவள் அமைதியாக இருந்தாள்..

 

 

“எப்படி இருக்கம்மா காயம் ரொம்ப வலிக்குதா?..” என்று பரிவாக கேட்டபடி சுமித்ரா எழில் அருகில் வர, அவரோடு மணிகண்டனும் வந்தார்.. அவருக்கும் எழில் முகத்தை  பார்த்து முதலில் அதிர்ந்தவர், தன் மகன் முடிவு செய்தால் அது சரியாக இருக்கும் என்று முழுமையாக நம்பி எழிலை மருமகளாக ஏற்று கொண்டார்..

 

 

 

விஜய்யின் பெற்றோரை பார்த்த எழில் மரியாதையாக எழுந்து நிற்க முயன்றாள்.. அதில் சட்டென்று தலை சுற்றி கீழே விழ அவளை தாங்கி தூக்கி பிடித்த விஜய், உனக்கு தான் உடம்பு சரியில்லை தான அப்பறம் ஏன் எழுந்து நிக்கிற?..” என்று கடிந்தவன், அவளை படுக்கையில் அமர வைக்க,

 

 

 

“பரவாயில்லைமா நீ உட்கார்ந்துக்கோ” சுமித்ரா எழில் தலையை வருடியவாறு பரிவாக கூறிய சுமித்ரா, “உன்னை நான் கன்னியாகுமரி கல்யாணம் மண்டபத்துல தான் கடைசியா பார்த்தது அதுக்கப்புறம் இப்போதான் உன்னை பார்க்கிறேன் என்று சுமித்ராவை விஜயும், எழிலும் திகைத்து பார்த்தனர்..

 

 

 

“அம்மா மதியை மருமகன்னு கண்டுபிடிச்சீங்க அது என்னோட பதட்டத்தை பார்த்து சொன்னதுனால  அது ஒகே..‌ ஆனா இவ தான் கன்னியாகுமரில இருந்த பொண்ணு தான் என்று  உங்களுக்கு எப்படி தெரியும்?” என விஜய் வியப்பாக கேட்க “எழில் மயங்கி இருக்கும் போது பதட்டத்தில் ‘நீ லிட்டில் கேர்ள்’ என்று சொன்னாயே.. அத வச்சு நான் கண்டுபிடிச்சிட்டேன்டா இந்த பொண்ணு தான் அந்த பொண்ணு என்று..” சுமித்ரா விளக்கம் கூற

 

 

 

“தெய்வமே..!! நீங்க எங்கேயோ போய்ட்டிங்க..” என்று விஜய் சுமித்ரா கைபிடித்து  சினிமா வசனம் சொல்ல, அவன் சொன்ன விதம் எழிலுக்கு சிரிப்பை கொடுக்க லேசாக புன்னகை செய்தாள்..

 

 

 

“மேடம் நீங்க கன்னியாகுமரி வந்திருந்த இவங்களா?..” என்று எழில் வியப்பாக கேட்க, “ஆமாடா அதுக்கு முன்னாடி ஒரு நகை கடையில் பார்த்திருக்கோம்.. உனக்கும் அது தெரியும்.. நான் சொல்றது சரிதான..?.” என்று சுமித்ரா கேட்க, எழில் ஆம் என்று ஒத்துக் கொண்டாள்..

 

 

 

“அதோடு நீ உனக்கும் என்னை தெரியும்.. நான் இவனோட அம்மா என்று என்னை ஸ்கூல்ல பார்த்த போதே கண்டுபிடிச்சிட்ட சரியா.?.” என்று எழிலை அப்படியே படித்தவராக கூற எழில் விழிகள் விரிய அவரை பிரம்மிப்பாக பார்த்து கொண்டு இருக்கும் போதே..

 

 

 

தன் முழங்கையை பிடித்தபடி உள்ளே வந்த சங்கவியிடம் விஜய் “சங்கவி நேத்ரா எங்க..? என கேட்க “சார்.. என்கிட்ட இருந்து நேத்ராவை யாரோ தூக்கிட்டு போறாங்க.. தடுத்த என்னை கீழ தள்ளி விட்டு போறாங்க..  சீக்கிரம் போங்க சார்..” என்று விஜய்யிடம் பதட்டமாக  சொல்ல

 

 

“நான் அப்போவே சொன்னேல்ல கேட்டிங்களா?.. அவளுக்கு வெளியே ஆபத்து ன்னு.. போங்க போய் என் அம்முவ நீங்க தான் கூட்டிட்டு வரணும்..” என்று எழில் விஜய்க்கு உத்தரவிட..  அதே நேரம்  காரில் தன் அருகில் மயக்கத்தில் இருந்த நேத்ராவை கோணல் சிரிப்புடன் பார்த்து கொண்டு இருந்த அஷ்வின்.. 

 

 

 

உன்னால தான் நான் தப்பிச்சேன் என்று உன் அப்பன் சொல்றான்..  என்னைய அடிச்சான்ல உன் அப்பனை பழி வாங்க தான் உன்னை தூக்கினேன் குட்டி சாத்தானே.. உன்னை தூக்கி அவனை துடிக்க வைக்கிறேன்..” என்று மனதில் வன்மமாக நினைத்தபடி காரை வேகமாக செலுத்தி கொண்டு இருந்தான் அஷ்வின்..

 

 

இமை சிமிட்டும்..

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்