Loading

இமை 23

 

வகுப்பறையில் எழில் பாடம் நடத்திக் கொண்டிருக்க இடையிடையே லிட்டில் கேர்ள் என்று ஒரு மென்மையான குரல் அவள் மனதில் ஒலித்து அவள் சிந்தனையை கலைக்க, கரும்பலகையில் கணக்கு பாடம் எழுதிக் கொண்டிருந்த எழிலின் கரம் ஒரு நொடி அப்படியே அந்தரத்தில் நின்றது. கை வலி உணர்ந்த பிறகே தான் எழுதாமல் நிற்பதை உணர்ந்து தன்னையே கடிந்து கொண்டு மீண்டும் எழுத தொடங்கினாள்..

 

 

“நீ என்னை காதலிக்க வேண்டும் என்று நான் கட்டாயப்படுத்த மாட்டேன்.. ஆனால் உனக்கு காதல் வந்தால் அது என் மேல் தான் வரணும்..” என்று பிடிவாதமாக ஒரு குரல் மீண்டும் அவள் செவியில் கேட்க தன் நான் உன்னை விரும்புவதை நீ தடுக்க முடியாது..” என்று ஆளுமையான குரல் மீண்டும் அவள் செவியில் கேட்டு கொண்டே இருக்க, எழுதியதை நிறுத்திவிட்டு சோர்வாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்த தலையில் இரு கைகளையும் பிடித்து கொண்டு அமர,

 

 

“டீச்சர்!!” என்ற மாணவர்களின் குரல் கேட்டு  தன்னுணர்வு அடைந்தவள், இது என்ன வேலை நேரத்தில் இப்படி.. கவனத்தை சிதற விடுவது தப்பு எழில் நீ  ஸ்ட்ராங்!! இப்படி இருக்க கூடாது.. மனசுல கண்டதையும் நினைச்சு குழம்பி இருக்கக் கூடாது..’ என்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டு கவனத்தை வேறு எதிலும் சிதற விடாமல் முழுமையாக வேலையில் கவனம் செலுத்தினாள்..

 

 

உணவு இடைவேளை வரை தன் கவனத்தை பாடம் எடுப்பதில் தவிர வேறு நினைவுகள் வர விடாமல் மும்மரமாக இருந்தவள் உணவு இடைவேளையில் மாணவர்கள் வகுப்பறை விட்டு வெளியேறவும், சிறு ஆசுவாசமாக உணர்ந்து மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்த எழிலிற்கு நேற்று தன் வீட்டில் வைத்து விஜய் பேசியதே மனதில் ஓடிக்கொண்டிருந்தது

 

 

விஜய் தன்னை விரும்புவதாக கூறவும், முதலில் அதிர்ந்த எழில், பின் கோபமாக விஜய்யை முறைத்துப் பார்த்தாள், தனக்கு திருமணம் ஆகவில்லை என்பதை அறிந்த பிறகே விஜய் தன்னை விரும்புவதாக நினைத்து, அந்த கோபத்தில், தனக்கு திருமணம் ஆகவில்லை!! ஆனால், நேத்ரா தன் குழந்தை தான் என்று விஜய்யோடு சேர்த்து அங்கிருந்தவர்களை பார்த்து அழுத்தமாக கூற, 

 

 

நால்வரும் எழிலை ஒரு நொடி அதிர்ச்சியாக பார்த்து விட்டு மறு நொடியே இயல்பாகினர்..  “நீ எங்களிடம் இந்த அதிர்ச்சி தானே எதிர்பார்த்தாய்.. உன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் நாங்களும் அதிர்ந்து விட்டோம் என்பது போல் இருந்தது அவர்களின் அதிர்ச்சி..

 

 

நால்வரின் இயல்பான முக பாவனை எழிலை திகைக்க வைத்தது.. நான் எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்றேன் யாருமே எந்த அதிர்ச்சியும் காட்டாமல் இயல்பா இருக்காங்களே..” என யோசனையோடு அவர்களை பார்த்துக் கொண்டிருக்க, 

 

 

“வந்தவங்களுக்கு குடிக்க எதுவும் தர மாட்டிங்களா சிஸ்டர்?..” ஷக்தி கேட்க,

 

 

“அண்.. க்கும்.. அது வந்து கிட்சன் எந்த பக்கம் இருக்கு சொல்லுங்க எல்லாருக்கும் நானே காஃபி போட்றேன்”..  “அண்ணி” என அழைக்க வந்து  பாதியில் நிறுத்திய மலர் எழிலை கேள்வியாக பார்க்க, “அதோ அந்த பக்கம் இருக்கு ஆண்ட்டி..” என்று சமையல் அறை இருக்கும் இடத்தை சொன்ன நேத்ராவை முறைக்க முடியாமல் தன் கைகளை இறுக மூடிக் கொண்டு அமைதியாக நின்றாள்..

 

 

மலர் சமையலறைக்குள் செல்ல, “ஹேய் மலர் இரு புள்ள நானும் வர்றேன்..” என்று கூடவே வெண்பாவும் மலருடன் சமையலறை சென்றாள்.. இங்கு நடப்பதை பார்த்து கொண்டு இருந்த எழிலிற்கு எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.. தான் வேலை பார்க்கும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் தன் மறுப்பை அழுத்தமாக கூறி அவரை எளிதாக அனுப்பி வைத்த எழிலிற்கு ஏனோ இவர்களை அப்படி கூறி அனுப்ப ஏனோ மனம் வரவில்லை.. தான் தன்னை தாழ்த்தி கூறியும் எதுவும் நடவாதது போல் இயல்பாக இருப்பவர்களிடம் வேறு எப்படி பேசுவது என்றும் புரியாமல் குழம்பி நிற்க

 

 

“என்னடா என்னை பத்தி இவ்வளவு தப்பாக பேசியும் யாரும் அதை பத்தி எதுவும் கேட்காமல் சாதரணமாக இருக்காங்களே என்று யோசிக்கிறியா ராங்கி?..” என்று அவள் மனதை படித்தவன் போல் விஜய்யின் குரலில் அவள் காதின் அருகில் கேட்க, அதில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்து அவனை உறுத்து விழித்த எழில், “இப்போ எதுக்கு இப்படி வந்து குழப்பம் செய்றிங்க?.. 

 

 

“குழந்தை முன்னாடி என்னால் உங்களை கோவப்பட்டு பேசவும் முடியலை.. நம்ம ரெண்டு தடவை பார்த்திருப்போமா என்ன பத்தி என்ன தெரியும் உங்களுக்கு?.. ரெண்டு தடவை எனக்கு உதவி செஞ்சு இருக்கிங்க.. அதுவும் ரொம்ப பெரிய உதவி.. அதுக்கு நான் மனசார நன்றி சொல்லிக்கிறேன்.. இத்தனை வருஷம் எப்படி என்னை பத்தி நினைக்காமல் இருந்திங்களோ இனியும் அப்படியே இருங்க.. 

 

 

 

*நான் அமைதியாக என் குழந்தையோட என் வாழ்க்கை வாழ்ந்திட்டு இருக்கேன்.. என்னை இப்படியே விடுங்க.. மீறி என்னை தொந்தரவு செஞ்சா நான் சும்மா இருக்க மாட்டேன்..” என்று விரல் நீட்டி எச்சரித்தவளை புன்னகையுடன் பார்த்து கொண்டு இருந்த விஜய்,

 

 

“நேத்ரா பேபி உனக்கு சாக்லேட் ரொம்ப பிடிக்கும்ல” இந்த ரெண்டு அங்கிளும் கார்ல நிறைய சாக்லேட் வச்சிருக்காங்க.. போய் வாங்கிக்கோங்க..” என்று கூறவும் விதுரன் ஷக்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, “புரிஞ்சி போச்சு.. நாங்க வெளியே நிக்கிறோம்..” என்று ஷக்தியும், விதரனும் கூறிக்கொண்டு

 

 

“வாங்க பேபி!? நம்ம சாக்லேட் எடுத்திட்டு வரலாம் என்று விதுரன் நேத்ராவை தூக்கி கொண்டு வெளியே வர ஷக்தியும் அவனுடன் வெளியேற, விஜய்யிடம் அதுவரை இருந்த குறும்புத்தனம் மறைந்து முகம் மென்மையாக, எழிலிற்கு மிக அருகில் வந்தவன், “லிட்டில் கேர்ள்!!.” என்று மயிலிறகால் வருடுவது போல மென்மையாக அழைத்து நீட்டி இருந்த அவள் விரலை பற்றினான்..

 

 

அந்த குரல், அந்த அழைப்பு இறுகி இருந்த மனதை உருக வைக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. அவள் பார்வையில் அலைப்புறுதல் கண்டு மனம் உருக, “ மை லிட்டில் கேர்ள்..” மீண்டும் மென்மையாக அழைக்க, விழி உயர்த்தி விஜய்யை இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்த எழிலின் அலைபேசி சத்தமிட்டு தன் இருப்பை உணர்த்த, 

 

 

அதில் தன்னுணர்வு அடைந்து தீ சுட்டது போல் விஜயின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, அவனை எரிப்பது போல் பார்த்தவள் “எவ்வளவு தைரியம் உங்களுக்கு? என் கையை பிடிக்கிறீங்க?” என கோபமாக கேட்க, “இதுக்காக நான் மன்னிப்பு எதுவும் கேட்க மாட்டேன் ராங்கி..!” 

 

 

 

“நீ என்னை பார்த்து விரல் நீட்டின.. இந்த விரல் என் கண்ண குத்திடக்கூடாதுன்னு ஒரு தற்காப்புக்காக தான் இந்த விரலை புடிச்சேன்.. என்று கூசாமல் பொய் உரைத்து சமாளிக்க “அடப்பாவி!!” என்பது போல விழிகள் விரித்து அதிர்ந்து பார்த்த எழிலின் முகத்திற்கு வெகு அருகே தன் முகத்தை கொண்டு வந்த விஜய்யை திகைத்துப் பார்த்த எழிலிற்கு ஏனோ அஷ்வினை பார்த்ததும் தோன்றும் பயம் விஜய்யிடம் வரவில்லை.. அதன் காரணத்தை அவள் ஆராய முற்படாமல்,  அவன் கண்களை நேராகப் பார்த்தபடி நிற்க

 

 

 

“நேத்ராக்கு நீ தான் அம்மா என்றால், நான் தான் அப்பா..  இதை நீ மட்டும் இல்லை வேறு யார் மறுத்தாலும் ஐ டோண்ட் கேர்.. ‘குழந்தை பெத்துக்க கல்யாணம் தகுதி இல்லை பெண்ணாக இருந்தால் போதும்’ என்று சொன்னேல்ல.. அதே தான் குழந்தைக்கு அப்பாவா ஆவதற்கும் ஒரு ஆணாக இருந்தால் போதும்.. அது நானாக இருக்கணும்.. எனக்கு நீயும் வேணும் நேத்ராவும் வேணும்..” என்ற விஜயை இடைமறித்து எழில் “ஏன் இப்படி அராஜகம் பண்றீங்க.. எனக்கு உங்களை பிடிக்கல பிடிக்கவே இல்லை!!” என்று முகம் சுளித்தபடி கூற 

 

 

“ராங்கி.. நான் தான் உன்னை விரும்புகிறேன் என்று சொன்னேன் பதிலுக்கு நீ என்னை விரும்பியே ஆகணும் என்று சொல்லவே இல்லை.. உனக்கு காதல் வரலேன்னா பரவாயில்லை.. உனக்கும் சேர்த்து நான் காதலிச்சிட்டு போறேன்.. ஆனா உனக்கு காதல் வந்தால், அது என் மேல தான் வரணும்..” என்று பிடிவாதமாக கூறிய விஜய் இப்போது அவளுக்கு வில்லனாக தெரிந்தான்..‌ 

 

 

“முதல் தடவை அந்த அஷ்வினை நம்பி உன்னை தவற விட்டேன்.. ஆனால் இந்த முறை ம்கூம் விட மாட்டேன்..” என்று அவள் நெற்றி முட்டி கூற, அவன் மார்பில் கை வைத்து அவனை தள்ளி விட்டவள், “ம்கூம் நீங்க அவங்க இல்லை.. நான் முதன் முதலில் ஹோட்டல்ல பார்த்த அந்த ஹோட்டல்கார் நீங்க இல்லை.. 

 

 

அன்னைக்கு அவங்க கண்கள்ல அவ்வளவு கனிவு இருந்தது.. என்னை ஒரு குழந்தை மாதிரி ட்ரீட் செஞ்சாங்க.. ஆனால் இப்ப இருக்கிற நீங்க கெட்டவங்க.. உங்க கண்ணில் இப்போ ஆணவம் தெரியுது.. அலட்சியம் தெரியுது உங்களை எனக்கு பிடிக்கவில்லை.. உங்களை மட்டும் இல்லை எனக்கு யாரையும் பிடிக்காது பிடிக்க வேண்டாம்.. 

 

 

நான் எல்லா ஆசைகளையும் விட்டு என் குழந்தைக்காக இருக்க விரும்புகிறேன்.. என்னைய டிஸ்டர்ப் செய்யாதிங்க..” என்று கோபமும், தான் மனதில் வரித்திருந்த நல்ல ஹோட்டல்கார் இப்போது அதற்கு நேர்மாறாக மாறி போனதில் ஏமாற்றமாக உணர்ந்து வார்த்தைகள் வாள் வீசுவது போல் விட

 

 

அனைத்தையும் அமைதியாக கேட்டிருந்த விஜய்க்கு மனதில் நிறைவான புன்னகை.. தன்னை இவள் கவனித்து இருக்கிறாள்.. அன்றும், இன்றும் அப்படி என்றால் ஏதோ ஒரு இடத்தில் அவள் மனதின்  ஓரத்தில் என் நினைவுகளும் நானும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம் இது போதுமே எனக்கு.. இந்த ராங்கி மனச மாத்துறதுக்கு..” என்று மனதில் நினைத்து கொண்டு

 

 

 

“ஆமா நான் மாறிட்டேன்.. நீ மட்டும் அப்படியே இருக்கியா என்ன.. அன்னைக்கு அவ்வளவு இன்னோசென்ட் இருந்த நீ இப்ப இவ்வளவு ரகடா மாறி இருக்க.. அன்னிக்கு உன்கிட்ட குழந்தை தனம் இருந்துச்சு அதனால குழந்தை மாதிரி ட்ரீட் செஞ்சேன் ஆனால் இப்போ உம்மனா மூஞ்சி ஆகிட்ட..” என்று தன் பேச்சை நிறுத்தி தோள் குலுக்க அவனை உறுத்து விழித்த எழில்

 

 

 

“அதை தான் நானும் சொல்றேன் இப்ப நான் உம்மனா மூஞ்சி தான்.. இந்த உம்மனா மூஞ்சி உங்களுக்கு எதுக்கு..” என்று எழில் கோபமாக கேட்க.. என்ன செய்யறது அந்த குழந்தை மாதிரி இருந்த லிட்டில் கேர்ளை விட முகத்தை இப்படி உம் என்று வச்சிருக்க இந்த ராங்கியை தானே பிடிச்சிருக்கு..” என்ற விஜய்யிடம் 

 

 

 

“என்ன இந்த முகத்தைப் பார்த்து பரிதாபத்தால் வந்த காதலா?..”  என்று எழில அவனை பார்த்து நக்கலாக கேட்க, “ஹா ஹா பரிதாபமா?. குட் ஜோக்.. அப்படி இந்த முகத்தை பார்த்து பரிதாபத்தால் வந்த காதல் என்றால் இதைவிட மோசமா எவ்வளவு பேர் இருக்காங்க அவங்க மேல் இந்த காதல் வரலயே… இங்க பாரு ராங்கி நான் எல்லாருக்கும் நல்லவன்.. 

 

 

 

ஆனால் உனக்கு மட்டும் வில்லன்.. என்னமோ தெரியலை உனக்கிட்ட மட்டும் எனக்கு வில்லனாக இருக்க தான் பிடிச்சிருக்கு.. சீக்கிரமே உனக்கும் இந்த வில்லனை பிடிச்சிரும் பிடிக்க வைப்பேன்..!!” என்று உறுதியாக கூறிய விஜய்யை கேலியாக பார்த்த எழில் அது உங்களால் முடியாது..” என்று அழுத்தமாக மறுக்க..

 

 

ஓ என்கிட்டயே சவாலா..?” என்று விஜய் வியப்பாக கேட்க, “ஆமா சவால் தான் என் மனம் பற்றி என்னை விட யாருக்கு தெரியும் நிச்சயமா என் மனசு மாறாது உங்க பக்கம் சாயாது..” என்று உதடு வளைத்து கூறிய எழில் குறுஞ்சிரிப்புடன் பார்த்து  “அப்பா இதற்கு தானே ஆசை பட்டேன் ராங்கி..” என்று மனதில் குதூகலம் கொண்டு

 

 

அதையும் தான் பார்ப்போம் மிஸ் ராங்கி.. இன்னும் மூணு மாசத்தில் உன் மனசை மாத்தி இந்த விஜயேந்திரன் தான் என்னோட விருப்பமான வில்லன்.. இந்த ஹோட்டல்கார் தான் என் வாழ்க்கை முழுவதும் பயணம் செய்ய போற ஹூண்டாய் கார் என்று உன்னை சொல்ல வைக்கல நான்.. நான் விஜயேந்திரன் இல்லை..” என்று மீசையை முறுக்கியபடி கூற

 

 

விஜய் கூறிய கடைசி பஞ்ச் டயலாக் நினைத்து பார்த்த எழிலிற்கு இப்போதும் சிரிப்பு வர, அதை அடக்கியவள்,  நிமிர்ந்து பார்க்க அங்கே கைகளை மார்பின் குறுக்காக கட்டிக்கொண்டு எழிலை முறைத்து பார்த்தபடி சங்கவி நின்று இருந்தாள்.. 

 

 

“கவி! நீ எப்போ வந்த?.. வந்திட்டு ஏன் அமைதியாக இருக்க?.. எழில் கேட்க, “நான் அப்போவே வந்திட்டேன் மேடம் ஏதோ தியானத்தில் இருந்திங்க.. உங்களை தொல்லை செய்ய கூடாது என்று தான் அமைதியாக நின்னுட்டு இருந்தேன்..” என்று நக்கல் செய்த சங்கவியை எழில் முறைத்துப் பார்க்க… ஆனால் உன் முகத்தில் இருக்க இந்த புன்னகை ரொம்ப அழகா இருக்கு டி.. இந்த சிரிப்புக்கு யார் காரணம்?? என்று ஆர்வமாக கேட்ட சங்கவியின் தோளில் வலிக்காமல் அடித்த எழில்

 

 

“ம் தியானம் தான் செஞ்சிட்டு இருந்தேன்.. ஒரு மூணு மாசம் மட்டும் இப்போ இருக்கிறதை விட இன்னும் எனக்கு மனவலிமை கொடுக்க வேண்டும் என்று தவம் செஞ்சிட்டு இருந்தேன்..” என்று கூற

 

 

“உனக்கு ஏற்கனவே இருக்க மனவலிமைக்கு யாரும உன் பக்கத்துல வர பயப்பட்றாங்க  இன்னும் இதுக்கு மேல போச்சுன்னா அவ்வளவு தான்” என்று கேலி செய்த சங்கவிக்கு எழில் கூறிய மூணு மாசம் மனதில் உரைக்க

 

 

“ஆமா அது என்னடி மூணு மாசம் கணக்கு?..” என்று குழப்பமாக கேட்க அப்போது தான் தான் உளறியது உணர்ந்த எழில், அது மூணு மாசம் தான்.. ஏன்னா நேத்து ஹெட் மாஸ்டர் வீட்டுக்கு வந்தாங்க..” என்று ஆரம்பித்து அங்கு நடந்த விசயத்தை கூற

 

 

இவங்களுக்கு எவ்வளவு நல்ல எண்ணம் பாரேன்.. கிழவனுக்கு உன்னை கல்யாணம் பேச வந்திருக்காங்க.. ஏன் கேட்க யாரும் இல்லை என்று நினைச்சீங்களா.. வா நான் கேட்கிறேன்.. இதே அவங்க பொண்ணா இருந்தா இப்படி பேசி இருப்பாங்களா என்று படபடத்த சங்கவி, “வாடி போய் அவங்களை என்னன்னு கேட்போம்..” என்று எழில் கை பிடித்து இழுக்க 

 

 

“ஹேய் கவி அவங்களுக்கு நான் சரியான பதில் கொடுத்துட்டேன்.. இனி அவங்க அதை பத்தி பேச மாட்டாங்க.. ஆனாலும் இன்னும் அவங்க மூணு மாசம் தான் இங்க வேலை பார்ப்பாங்க.. ஒரு வேளை அவங்க அப்பப்ப இடையில ஏதாவது வந்து தொல்ல செஞ்சா அவங்களை சமாளிக்கணும் அதனால தான் மூணு மாசம் டைம் கேட்டேன்..” என்று சமாளித்த எழிலை ‘நிஜமாகவே வேறு எதுவும் பிரச்சினை இல்லை தானே..” என்று கேட்க

 

 

“இல்ல கவி.. அப்படி வந்தாலும் அதை சமாளிக்கிற திடம் எனக்கு இருக்கு..” என்று எழில் உறுதியாக கூற, சங்கவி அமைதியானாள்..

 

 

இங்கு நால்வரும் விஜய்யை முறைத்துப் பார்த்தபடி அவனை சுற்றி கோபமாக அமர்ந்து இருக்க அவர்கள் நடுவில் விஜய் பலி ஆடு போல் பரிதாபமாக அமர்ந்து இருந்தான்..

 

எதுக்காக இந்த கோபம்?.. விஜய் ஏன் பலி ஆடு போல் அமர்ந்து இருக்கிறான்.. அடுத்த பதிவில்

 

 

இமை சிமிட்டும்

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்