அத்தியாயம் 3
இராஜேந்திரன் வீட்டுக்கு ஏழு மணி போல் வந்து சேர்ந்தார்..வேலை செய்துவிட்டு வந்ததால் களைப்பு அப்பட்டமாக முகத்தில் தெரிந்தது..அதனை உணர்ந்த அவர் மனைவி வசந்த தேநீர் கலக்க சமயலறைக்கு சென்றார்..
தொலைக்காட்சியை உயிர்ப்பித்து பிளாஸ்டிக் கதிரையில் அமர்ந்துக் கொண்டார் அவர்..
“ஜெனனி எங்க வசந்தா?” அவர் கேட்க..
“ அறைல படிச்சிட்டு இருப்பா ப்பா..” என்றார் அவர்..
அறையை எட்டிப் பார்த்தார் மின்விளக்கு எரிந்து கொண்டு இருந்தது.. “ஜெனனி ” என்று அவர் அழைக்க..
“இருங்க ப்பா வாறன்..” என்றாள் அறையில் குரல் கொடுத்துக் கொண்டு கதிரையில் இருந்து எழுந்து ஹாலிற்கு வந்தாள்..
“ படிச்சிட்டு இருந்தீயா ஜெனனி ? ”
“ ஆமா ப்பா..நீங்க வந்தது கூட எனக்கு தெரியாது..” என்றாள்..
“ சரி இப்படி வந்து உட்கார் உனக்கு வடை வாங்கிட்டு வந்து இருக்கேன் சாப்பிடு ” என்றவர் சிறிய பேப்பர் பேக்கை அவளிடம் கொடுத்தார்..
பேப்பர் பேக்கை திறந்து வடையை ஒரு கடி கடித்து அவள் சாப்பிட மற்றதை தந்தையிடம் நீட்ட அவரும் எடுத்துக் கொண்டார்..ஜெனனிக்கு வடை என்றாலே அவ்வளவு பிடிக்கும் அவளுக்கு என்றே வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது வாங்கிக் கொண்டு வருவார் இராஜேந்திரன்..
வசந்தா தேநீரை கணவரிடம் கொடுத்து விட்டு அவரும் குஷனில் அமர்ந்து கொண்டார்..
“க்ளாஸ் எப்படிமா போச்சு ” இராஜேந்திரன் கேட்க..
“நல்லா போகுது ப்பா ” என்றாள்..
“ க்ளாஸ்ல சிங்கள பொடியன்மார்கள் உன்னட்ட வம்பு ஏதும் பண்றானுங்களா? ” அவரின் முகம் தீவிரம் அடைய..
“ அப்படிலாம் எதுவும் இல்ல ப்பா ”
“ஹம் அதுசரி எங்க பக்கத்து வீட்டுல சன்ஜீவ பொடியனும் நீ போற க்ளாஸ்க்கு தானே அந்த பொடியனும் வாறான் எண்டு அவனோட அப்பா குமாரசிங்க சொன்னார்.. க்ளாஸ்ல உனக்கு எதாவது பிரச்சினையா இருந்தா சன்ஜீவ கிட்ட சொல்லுமா” தேநீரை குடித்துக் கொண்டு சொன்னார்..
“சரி ப்பா..” என தலையசைத்தாள் ஜெனனி..‘ சன்ஜீவ நான் எப்ப க்ளாஸ் போக தொடங்குனேனோ அப்ப இருந்து ஆளே சரி இல்ல.. இன்டைக்கு கூட நான் உக்கார்ந்து இருக்குற கதிரைக்கு பக்கத்துல வந்து உக்காருறான் இவனுக்கு என்ன ஆச்சு..’ அவனை பற்றி அவள் நினைத்துக் கொண்டு இருக்க..
அறையில் படித்து கொண்டு இருந்தவனுக்கோ “ ஹச்சிங் ” பெரிதாக தும்மல் போனது.. அவனின் தும்மல் சத்தம் இவளின் காதில் விழாமல் இல்லை..‘ அவன பத்தி நினைச்சது மட்டும் தான் பெரிசா தும்முறானே நான் தான் நினைச்ச எண்டு அவனும் நினைச்சி இருப்பானோ ’ அவள் சிந்திக்க..
“ ஜெனி மங் கென ஹிதுவம தமய் மட்ட கிவுசும் ஆவே ஏயா நேதுவ வென கவுத மங் கென ஹிதன்னே? ( ஜெனி என்னை பத்தி நினைச்சதும் தான் எனக்கு தும்மல் வந்துச்சு அவள தவிர வேற யாரு என்னை பத்தி நினைக்க போறாங்க? ) ” வாய்விட்டே அவனுக்கு விளங்க சொன்னதும் அவன் உதடுகள் புன்னகைத்தது..
அவள் மனதில் எண்ணிக் கொண்டது போல் , அவனும் சரியாக கணித்து சொல்லி இருந்தான்..
அதே சமயம் குமாரசிங்க சினத்துடன் அவர் வீட்டிற்குள் வந்தார்..வந்தவர் “ சன்ஜீவ காமரே இதங் எழிய எனவா? ( சன்ஜீவ ரூம்ல இருந்து வெளிய வா? ) ” வீடே அதிர அவர் குரல் உயர்ந்தது என்றால் வடையை சாப்பிட்டுக் கொண்டு இருந்த ஜெனனிக்கு இவரின் கோப குரல் கேட்டதும் பாதி வடை துண்டு தொண்டையில் சிக்கியது..
குமாரசிங்கனின் சத்தம் கேட்ட இராஜேந்திரன் தொலைக்காட்சியின் சத்தத்தை குறைத்தார்..என்ன பிரச்சினை என்று தெரியவில்லை அவரிடம் போய் கேட்கவும் முடியாது குடும்ப பிரச்சினையாக இருக்கலாம் என்று நினைத்து அமைதியாக இருந்தார்..
சன்ஜீவ விரைவாக மாடி அறையில் இருந்து ஓடி ஹாலிற்கு வந்ததும் அவனின் பெனியனை பிடித்து இழுத்து, அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தார்..
அறைந்த சத்தம் ஜெனனியின் வீட்டினருக்கும் கேட்கத்தான் செய்தது..அவளை நிலைகுலைக்காமல் இல்லை மனதில் அச்சம் பிறந்தது அவன் தனக்கு மைலோ பால் பாக்கெட் வாங்கி கொடுத்ததோடு ரோட்டில் இருவரும் பேசிக் கொண்டார்களே யாரேனும் கண்டு சொல்லி இருபார்களோ என்று அவள் சிந்தனை ஓடவும் நெஞ்சம் பதறியது..
வடை சாப்பிட்டு முடித்த தாளை கையில் சுருட்டி குப்பை தொட்டியில் வீச செல்வது போல் ஹாலில் இருந்து நழுவிச் சென்று பின் வாசலுக்கு ஓடினாள்..
அங்கு நின்றுக் கொண்டாள் அவர்கள் பேசுவது நன்றாக கேட்குமே..
தந்தையின் அறைந்தது எதிர்பாராதது ஒன்றாயிற்றே , ருவணி கூட பதறிவிட்டார்..“ ஒயாட மொனவ வெலாத மனுஷயோ கெதர ஆவ கமன் புதாட்ட கஹன்னே ( உங்களுக்கு என்ன ஆச்சு வீட்டுக்கு வந்ததும் மகனை அடிக்கிறீங்க? ) ” கோபமாக கலக்கத்துடன் அவர் கேட்க..
அவரிடம் பதிலை சொல்லாது மகன் புறம் திரும்பி “ கவுத ஏ கெல்ல கியபங்? ( யாரு அந்த பெட்ட சொல்லுடா?) ” அவர் கேட்க..
‘ மம ஜெனிவ ஆதரே கரன்னெக தாத்தட்ட கொஹமத தன்னே ( நான் ஜெனிய காதலிக்கிறது ப்பாக்கு எப்படி தெரிஞ்சிது?) ’ அவன் மனதில் நினைத்து தந்தையின் முகத்தை பார்க்க..
ருவணிக்கோ சின்ன மகனை பார்த்து பாவமாக இருந்தது..உடனே உள்ளே சென்றவர் பெரிய மகனுக்கு அழைப்பு விடுத்தார்..
“ மொகத மகே முஹுன பலன்னே உம்ப காவ ஹரி ஆதரே கரனவாத? ( என்ன என் முகத்தை பாக்குற நீ யாரையாவது காதலிக்கிறீயா ? ) ” சீற்றத்துடன் அவன் பெனியனை மீண்டும் அவர் அருகில் இழுத்து கேட்க..
“ நே தாத்தே ( இல்ல ப்பா) ” என்றான்.. அவன் ஜெனனி மேல் இருக்கும் காதல் ஒருதலை காதல் ஆயற்றே..அவனே இன்னும் அவளிடம் காதலை கூறவும் இல்லை.. தான் ஒருதலையாக காதலிப்பது இவருக்கு எப்படி தெரிந்தது என்றே அவனும் யோசனை படர்ந்த முகத்துடன் நின்றான்…
ஜெனனிக்கு சன்ஜீவ கூறிய பதில் கேட்டவுடன் அவள் மனமோ நிம்மதியடைந்தது..அது எதனால் என்றே அவள் ஆராய முற்படவில்லை..
அதனைத் தொடர்ந்து சஜீத்தின் கார் அவர்கள் வீட்டின் முன்பு வந்து நிற்கும் சத்தம் கேட்டதும்..“ சஜீத் அண்ணா வந்துட்டார் போல என்ன பிரயளம் வெடிக்க போகுதோ ? ” அச்சத்துடன் நகத்தை கடிக்க ஆரம்பித்தாள்..
காரை விட்டு இறங்கி வீட்டிற்குள் நுழைந்தான் சஜீத் , தம்பியை தந்தை அடித்துவிட்டாரே , அவன் முகத்தில் கோப தீச்சுவாளை எரிந்தது..“ தாத்தே! ( அப்பா! ) ” குரலை உயர்த்தி இருந்தான்..
பெரிய மகன் வீட்டுக்கு வந்ததும் சின்ன மகனின் பெனியனில் இருந்து கையை எடுத்தார்.. “ மல்லி ஒயா கமாரேட்ட யன்ன, மம தாத்தாத்தெக்க கதா கரன்ணம்..( தம்பி நீ ரூம்க்கு போ..நான் அப்பாகூட கதைக்கிறேன்..) ” அவனிடம் சொன்னான் சஜீத்..
“ நே அய்யே..மம ( இல்ல அண்ணா நான்..) ” அவன் பேச வர..“ மம செரயக் கிவ்வனே யன்ன ஒயா..( நான் ஒரு தடவை சொன்னேனே..நீ போ) ” தம்பியை அதட்டி அனுப்பினான்…
அவனும் சரியென்று தந்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு மாடிக்கு அவன் அறைக்குச் சென்றான்..
“ தாத்தே ஒயாட மம கியல தியனவா அநித் அய கியன்ன கதாவ அஹன்ட எபா கியலா..மம கியன தே ஹன்னமே நேனே..மல்லி கொஹமத கெல்லெக்வ ஆதரே கரேன்னே ஒயாம கியன்னகோ? ஏயா பந்தி கியலா கெலின்ம கெதரட தமய் என்னே எஹம எக்கெனா கெல்லெக்வ ஆதரே கரன்னே எக பிஸ்சு கதாவக்..மகே யாழுவக் இங்கிலிஷ் அகாடமி எகே தமய் வெட கரன்னே ஏயா ஹொந்தடம சன்ஜீவ கென தன்னவா மொக்கக் ஹரி ஏயா கலோத் மட தமய் எயா இஸ்சரஹம கியன்னே தாத்தே..ஆயே மல்லிவ செக கரன்ட எபா எச்சரய் அநித் எக மே வெட கரபு எக்கெனா கவுத கியல மம தன்னவா..ஓகாட கவத ஹரி மகே அதேன் தமய் கன்னே பலங் கன்ட..( அப்பா நான் உங்களுக்கு சொல்லி இருக்கேன்..அடுத்தவன் சொல்லுற கதைய கேட்காதீங்க எண்டு நான் சொல்றது நீங்க கேட்குறதே இல்லையே..தம்பி எப்படி ஒரு பெட்டய விரும்புவான் நீங்களே சொல்லுங்க? அவன் க்ளாஸ் போயிட்டு நேரடியா வாரதே வீட்டுக்கு தான் அப்படி ஒருத்தன் பெட்டய விரும்புறது பைத்தியகார கதையா இருக்கே..என் ப்ரண்ட்டு ஒருத்தன் அகெடமில தான் வேலை செய்யுறான்.. அவனுக்கு சன்ஜீவ பத்தி நல்லா தெரியும் எதாவது அவன் செஞ்சா எனக்கு தான் முதல்ல சொல்லுவான் ப்பா..திரும்ப தம்பிய சந்தேக பட வேணாம் அவ்வளவு தான் அடுத்தது இந்த வேலைய செஞ்சவன் யாரு எண்டு எனக்கு தெரியும்.. அவனுக்கு எப்ப சரி என் கையால வாங்குவான் பாருங்க..) ” குமாரசிங்கயிடமே சீறினான் என்றால் அவன் கோபம் எத்தகையது சன்ஜீவ போல் நிதானமாக பதில் சொல்பவன் சஜீத் இல்லை.. இப்படித்தான் அவன் தந்தையிடம் பேசுவான்..
தம்பி ஒரு பெண்ணை காதலிப்பதாக பொய் கதை ஒன்றினை சித்தரித்து அவரிடம் கூறி வீட்டில் பிரச்சினை ஏற்படுத்த நினைத்து இருக்கிறான்..அதனாலயே வீட்டுக்கு வந்தவுடன் அவனிடம் எகிறி அடித்தும் விட்டார்..
அவர் தன் தவறை உணர்ந்தாலும் அவரின் தன்மானம் அதனை ஏற்க மறுத்தது..மூத்த மகனை உருக்கி பார்த்துவிட்டு அவர் உள்ளே சென்றுவிட்டார் காரணம் சஜித்தும் அவன் மனைவி சயூரி காதலித்து திருமணம் செய்தவர்கள் தான்..
வீட்டில் எதிர்ப்பை மீறி சயூரியை திருமணம் செய்துக் கெண்டான்.. இருவரும் வசதியான குடும்பங்கள் தான் சஜீத் சொந்தமாக ஒரு சூப்பர் மார்க்கெட் திறந்து அதனை நடத்தி வருகிறான்..சயூரியை திருமணம் முடித்தவுடன் அவன் வீட்டில் இருக்காது மனைவி வீட்டிற்கே சென்றுவிட்டான்..
சன்ஜீவ அவனுக்கு ஏதெனும் பிரச்சினை என்றால் மட்டுமே வீட்டுக்கு வருவானே தவிர மற்றபடி வீட்டிற்கு அவன் வருவது இல்லை..
குமாரசிங்க அவருக்கு அவரின் கெளரவத்திற்கு சமமாக தான் மகன்களை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிற எண்ணம் அவர் எண்ணத்தினை உடைத்தது மூத்த மகன் அதே போல் சின்ன மகனும் அவர் பேச்சினை கேட்காது தட்டிவிட போகின்றான் என்று அறிந்தால் என்ன செய்வாரோ..
“ அம்மே மல்லிவ பலா கன்ட மம கிஹில்லா என்னம்..( அம்மா தம்பிய பார்த்துகோங்க..நான் போயிட்டு வாறேன் ) ” அவர் காலில் விழுந்து ஆசிர்வாதத்தை வாங்கினான்..“ ஹரி புதே ( சரி மகன்..) ” தாயை பார்த்து மெல்லிய புன்னகை உதட்டில் படர விட்டே வீட்டை விட்டு வெளியேறி காரில் புறப்பட்டு இருந்தான்..
அறைக்கு வந்த சன்ஜீவ அண்ணன் சத்தம் போடுவது அவனுக்கு கேட்கத்தான் செய்தது.. ஜன்னல் அருகில் ஆழ மூச்சை வெளியே விட்டு ஜன்னலை மூடலாம் என்று இருக்கும் போது அவன் பார்வை மஞ்சள் மலரில் நிலைத்தது..
ஜெனனி தான் நீலமும் மஞ்சள் பூக்கள் நிறைந்த ஷர்ட் அணிந்து அதற்கு பொருத்தமான மஞ்சள் நிற முட்டிக்கு கீழ் வரை நீளமான பாவடை ஒன்றினை அணிந்து நகத்தை கடித்துக் கொண்டு சன்ஜீவனின் வீட்டை பார்த்துக் கொண்டு இருந்தாளே!
அவள் பதட்டமாக நகத்தை கடித்து துப்பி கொண்டு இருப்பதை பார்த்து அவனுக்கு சிரிப்பு தான் வந்தது..அரிசி பற்கள் தெரிய சிரித்தான்..
மேலே நின்று இருப்பவனுக்கு அவளை எப்படி அழைப்பதென்றே தெரியவில்லை..மேசையை பார்த்தான் நீல நிற பேனாவை எடுத்து ஜன்னல் வழியாக சரியாக அவளை குறி பார்த்து பேனாவை வீசினான்..
சரியாக அவள் நெற்றியில் வந்துபடவும் “ ஸ்ஸ் ” நெற்றியை தேய்த்து கீழே குனிந்து கையில் பேனாவை எடுத்து பார்க்க, சன்ஜீவனின் வேலை தான் என்று நினைத்து விழி உயர்த்தி நோக்க..அவனோ ஒற்றை கண்ணை அடித்து இரு கைலால் கொஞ்சுவது போல் அவளுக்கு அனுப்பி வைத்தான்..
அவள் அதிர்ந்து போய் விழி விரித்து அவனைப் பார்த்தாள்..போததாதற்கு இதய வடிவம் போல் இரு விரலால் அவன் இடது பக்க இதயத்தை வைத்து அவளை நோக்கி காட்ட..
அதிர்ச்சியில் இருந்து முழித்து அங்கிருந்து ஓடி இருந்தாள்..‘ சரியான லூசா இருப்பான் ’ என்றும் திட்ட தவறவில்லை..
இராஜேந்திரன் “ சன்ஜீவ வீட்டுல ஏதோ காதல் பிரச்சினை போல வசந்தா.. குமார் சரியா விசாரிக்காம பொடியன அடிச்சிட்டார்.. அதுக்கு தான் சஜித் வீட்டுக்கு வந்து கத்திட்டு போறான் போல..” தொலைக்காட்சி சத்தத்தை கூடிவிட்டு அவர் சொல்ல..
“ அப்படிதான் போல நாளைக்கு ருவணி அக்காகிட்ட கேட்கணும்..” என்றார்..“சரி நான் போய் குளிச்சிட்டு வாறன் ” தாய் தந்தை பேசுவதை கேட்டுக் கொண்டே குஷனில் வந்து அமர்ந்தாள்..
தொடரும்…