
அத்தியாயம் 38
அடுத்த நாள், காலை கண்விழித்தும், எழுந்து கொள்ள விரும்பாமல் படுத்திருந்தாள் பார்கவி.
மன்னவனின் மார்பை மஞ்சமாக கொண்டு, அவனின் அரவணைப்பில் படுத்திருந்தவளுக்கு அவனை விட்டு விலக துளியும் மனது வரவில்லை.
இருந்தும் எவ்வளவு நேரம் அப்படியே இருக்க முடியும், அவள் எழுந்து கொள்ள பார்க்க, அவன் அணைப்பு இறுகியது.
“அஸ்வந் விடு..
…மாமா விடுங்க…” என்று சொல்ல கண்கள் மூடி இருந்தவன் உடனே கண்கள் திறந்து அவளைப் பார்க்க
“என்ன? விடுங்க…” என்றாள் நெளிந்து கொண்டே, அவளை விட்டு விலகி பதறி அடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தவன்,
அவள் நெற்றியில் கையை வைத்து பார்த்து “என்னடி ஆச்சு?.. கால்ல தானே அடிபட்டுச்சு.. கால்ல அடிபட்டா மூளை குழம்பிடுமா என்ன…?” என்று அவள் தலையை பிடித்து அப்படியும் இப்படியும் பார்க்க
அவன் கையை தட்டி விட்டவள் “என்னாச்சு உங்களுக்கு?…” என்று கேட்க
“அதைத்தான் நான் கேட்கிறேன்.. திடீர்னு விடுங்க என்ற உங்க என்ற என்னாச்சு உனக்கு…” என்று கேட்க
சேலை முந்தானையை திருகியவள் “அது நான் உன்ன வாடா போடான்னு சொல்லும்போது அத்த உத்து பாக்குற மாதிரி இருக்கும்.. இதுவரைக்கும் எதுவும் சொன்னது இல்ல இருந்தாலும் மாத்திக்கணும்னு யோசிப்பேன்.. அதுதான் இன்னையல இருந்து மாத்திக்கலாம்னு ஒரு ஐடியா…”
“அடியே வேணாம்டி.. நான் என்னமோ உனக்கு ஆயிடுச்சுன்னு பயந்தே போயிட்டேன்.. நீ மரியாதை கொடுத்து கூப்பிடுறது எனக்கு ஒரு மாதிரி இருக்கு…” என்றவன்
அவளை இழுத்து அணைத்து “நீ வாடா போடான்னும் போது தான் ஒரு மாதிரி ஜிவ்னு இருக்கும்.. அதுல ஏதோ அதிகப்படியான ஒரு உரிமை இருக்கு டி.. ஆனா மாமானு சொன்னல…” என்று அவன் கண்கள் மின்ன கேட்க
வெட்கமாக அவன் நெஞ்சில் முகத்தை புதைத்தவள் “ம்ம்” என்று தலையை ஆட்ட
“இதுவும் நல்லா இருக்கு.. வாடா போடாவோட சேர்த்து மாமாவையும் கூப்பிட்டேன்…” என்று சொல்ல
“போடா மாமா…” என்றவள் அவனை தள்ளி விட்டு எழுந்து கொண்டாள்.
காலில் சற்றும் வலி இருக்கவில்லை. அந்த இடத்தை தடவிப் பார்த்தாள் அப்போதும் வலி தெரியவில்லை. அஸ்வந்தை பார்க்க, அவன் கடமையே கண்ணாக எழுந்து குளியலறை சென்று விட்டான்.
அவனிடம் கால் சரியாகிவிட்டது என்று சொல்லத்தான் நினைத்தாள். ஆனால் இன்று சனிக்கிழமை, வீட்டில் தான் இருப்பான்.
சரியாகிவிட்டதை சொன்னால் பகல் பொழுது என்று பார்க்காமல் இப்பொழுதே வேண்டுமென்று நிற்ப்பான்.
அவனை சமாளிக்க முடியாது என்பதால் காலில் வலி இருப்பது போல் இரவு வரை நடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
அவன் குளியல் அறை விட்டு வர, இவளும் குளிக்க சென்றவள், தாங்கி, தாங்கி தான் நடந்தாள்.
“ஹேய் கவி, கால் ரொம்ப வலிக்குதா?.. இரு நான் தூக்கிட்டு போறேன்…” என்றவன் அவளை தூக்கிக்கொண்டு குளியலறையில் விட்டான்.
“சரி, சரி நீ போ.. நான் குளிச்சிட்டு வரேன்…” என்று அவள் சொல்ல
“நான் வேணும்னா நேத்து நீ ஹெல்ப் பண்ண மாதிரி உனக்கு ஹெல்ப் பண்ணட்டுமா…?” என்று அவன் கேட்க
“டேய் மாமா அடி வாங்குவ.. மரியாதையா வெளியே போ…” என்று அவனை பிடித்து வெளியே தள்ளி விட்டாள்.
குளித்து முடித்து வெளியே வந்தவளுக்கு செவ்வந்தி முன்பு நடிக்க தோன்றவில்லை. சாதாரணமாக சென்று காலை உணவை சமைத்தாள்.
அஸ்வந் சாப்பிடவர அவனுக்கான உணவை பரிமாறினாள். அவனும் சாப்பிட்டு விட்டு சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போதுதான் தற்செயலாக கவனித்தான், வீட்டை ஒதுங்க படுத்துவது என்று ஹாலுக்கும் அறைக்கும், மதிய உணவுக்கான வேலை செய்கிறேன் என்று ஹாலுக்கும் கிச்சனுக்கும் என்று நடையாக நடந்து கொண்டிருந்தாள்.
‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடக்க முடியல.. பெயினா இருக்குன்னு சொன்னா.. இப்போ சாதாரணமா நடக்குறாள்..’ என்று மனதில் நினைத்தவன்
“கவி..!” என்று அழைக்க, அவன் அருகில் வேகமாக வந்து அமர்ந்தவள், “சொல்லு.. என்ன வேணும்?…” என்று கேட்க
“உன் கால் வலி இப்ப எப்படி இருக்கு…?” என்று அவன் கேட்க
“கால் வலியா!.. அதெல்லாம் வலிக்கலயே…” என்று உண்மையை உளறியவள் நாக்கை கடித்து அவனைப் பார்க்க,
நெஞ்சில் கையை வைத்து அவளைப் பார்த்தவன் “அடிப்பாவி எங்கிட்டயே நடிக்கிற இல்ல…” என்றவன் நேரத்தை பார்த்தான்.
அது பதினொன்றாக இருந்தது. “ஐயோ பாதி நாளே வேஸ்டா போச்சே…” என்றவன் அவள் கையைப் பிடித்து வா என்று ரூமுக்கு இழுத்து வந்தான்.
“மாமா கைய விடுடா…” என்று அவன் கையில் இருந்து தன் கையை உருவி கொண்டவள், “என்ன பண்ற நீ?…” என்று கேட்க
“என்ன பண்றேனா.. அதான் உனக்கு கால்ல வலி இல்லையே, வா ஆரம்பிக்க…” என்று அவன் கையை பிடித்து இழுக்க
“அச்சோ! இது பட்ட பகல்.. விடு என்ன…” என்று அவள் விலக பார்க்க,
“அடியே, இதுக்கெல்லாம் காலம் நேரம் பார்க்க முடியாதுடி…” என்று அவன் இழுத்து அணைக்க
“ஐயோ! நம்ம ரூம்ல ரொம்ப நேரம் இருக்க முடியாது.. அத்தை வந்து கூப்பிடுவாங்க…” என்று நேற்று சொன்ன அதே காரணத்தை இன்றும் அவள் சொல்ல
“இப்ப என்ன யாரும் நம்மள டிஸ்டர்ப் பண்ண கூடாது அதுதானே…” என்றவன் அவளை விட்டு விலகி, கார் சாவியை எடுத்துக்கொண்டு அதனோடு இன்னொரு சாவியை எடுத்தவன்
“வா! வெளிய போலாம்…” என்று கூப்பிட
‘ஆஹா, பட்டப்பகல்லேயே இவன் பந்தி போட சொல்லுவான் போலயே…’ என்று நினைத்தவள்
” என் ஆசை மாமா இல்ல.. ராத்திரி வரைக்கும் பொறுத்துக்க முடியாதா?…” என்று கேட்க
அவளை முறைத்தவன், அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
எதிரே செவ்வந்தி வர “அம்மா நாங்க வெளிய போறோம்.. திரும்பி வர லேட் நைட் ஆயிடும்.. நீங்க லன்ச் சாப்பிடுங்க நைட்டுக்கும் சாப்பிட்டுத்து தூங்கிடுங்க.. என்கிட்ட இன்னொரு சாவி இருக்குல நான் திறந்து வந்துக்குவேன்.. என்று அஸ்வந் சொல்ல
“என்னடா திடீர்னு வெளியே போகணும்னு சொல்ற.. மதிய சாப்பாடு சரி சாப்பிட்டு போகலாமே…” என்று சொல்ல
“பார்கவியோ “ஆமா அத்தை, நானும் அதத்தான் சொன்னேன்.. லேட்டா போகலாம்னு.. கேக்க மாட்டேங்குறான்…” என்று, இதுதான் சாக்கு என்று போகாமல் இருக்க அவள் பக்கத்துணை தேட
“உங்கிட்ட யாராவது ஏதாவது கேட்டார்களா?.. ஒழுங்கு மரியாதையா போய் கார்ல ஏறு…” அவன் சொல்ல
பார்கவியை இழுத்து தன் பக்கம் நிறுத்திக் கொண்ட செவ்வந்தி “என்னடா நீ, அவள மிரட்டுற.. எனக்கு அவ்ளவு சொல்லுவ, அவள போட்டு கஷ்டப்படுத்தாத, பிடிக்காத விஷயத்தை போஸ் பண்ணி செய்ய வைக்காதனு.. இப்போ நீ அவள போட்டு பாடப் படுத்துற…” என்று கேட்க
“யாரு நான் அவள போட்டு படுத்துறேன்.. நீங்க அதை பாத்தீங்க.. என் கஷ்டத்த வாய் விட்டு சொல்ல முடியாது மம்மி…” என்றவன் பார்கவியை பார்க்க
அவளுக்கு அதற்கு மேல் அவனை தவிக்க விட விருப்பமில்லை “சரி அத்தை பாக்க பாவமா இருக்கு.. நான் போயிட்டு வரேன்…” என்று அவள் சொல்ல
செவ்வந்திக்கு உண்மையாகவே மனது குளிர்ந்தது. சில தினங்களாக இருவருக்கும் இடையில் புதிதாக ஒரு அன்னியோன்யம் வந்ததை அவரும் கண்டு கொண்டார்.
“சந்தோஷமா போயிட்டு வாங்க…” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அஸ்வந்தின் கார் வந்து நின்றது என்னவோ பீச் ஹவுஸ்க்கு தான்.
தன்னிடம் இருந்த சாவியைக் கொண்டு திறந்து கொண்டு அவன் உள்ளே சென்றான்.
அபர்ஜித்தும் அப்போதுதான் வெளியே சென்றிருந்தவன் உள்ளே நுழைய பார்க்க, அஸ்வந்தின் காரை கண்டு கொண்டான்.
“அஸ்வந் வந்து இருக்கானா! சொல்லவே இல்ல…” என்று நினைத்தவன்
வீதியிலேயே காரை விட்டுவிட்டு மெதுவாக எட்டி உள்ளே பார்த்தான். அஸ்வந்தும், பார்கவியும் வீட்டினுள் இருப்பது தெரிந்தது.
‘இவன் இங்க வர மாட்டானே.. பார்கவியோட வந்திருக்கான்னா ஏதோ இருக்கு…’ என்று நினைத்தவன் காரை எடுத்துக் கொண்டு அலுவலகம் சென்று விட்டான்.
உள்ளே வந்த அஸ்வந் அங்குள்ள அவனது அறைக்கு பார்கவியை அழைத்து வந்தான்.
வந்ததுமே அவன் போட்டிருந்த டி-ஷர்டை கழட்டி வீச “மாமா இப்பவே வா.. கொஞ்ச நேரம் போகட்டுமே…” என்று அவள் சொல்ல
“இனி ஒரு நிமிஷம் கூட உன்ன விட்டு வைக்க முடியாது டி…” என்றவன் அவளை நெருங்க
அவன் கையில் சிக்காமல் விலகி நின்றவள் “டேய் மாமா சொன்னா கேளுடா.. பட்ட பகல்.. வெளிச்சமா இருக்கு.. கண்டிப்பா என்னால முடியாது.. கொஞ்ச நேரம் பொறு, இருட்டுனதும் என்ன வேணும்னாலும் பண்ணிக்க…” என்று சொல்ல
“இருட்டுனதுக்கு பிறகு என்ன பண்ணனும்னு நான் பாத்துக்குறேன்.. நீ இப்ப கிட்ட வா…”
“முடியாது…” என்று அவள் ஓட இடம் பார்க்க,
“என்ன ஏதாவது கதவு இருக்குமா பால்கனி பக்கமா குதிச்சு ஓடிடலாம்னு பாக்குறியா.. அதுக்கு இங்க வாய்ப்பே இல்ல.. இருக்கிறது ஒரு கதவு தான்.. டைம் வேஸ்ட் பண்ணாம மாமன வந்து கட்டிக்க…” என்று அவன் கையை விரிக்க
“முடியாது…” அவள் வாய் தான் சொல்லியது கண்களில் குறும்பு மின்னியது,
இவன் அவளை எட்டிப் பிடிக்க பார்க்க, அவள் கட்டிலைச் சுற்றி ஓடினாள்.
“நேத்து கால்ல அடிபட்டதால என்ன புடிச்சிட்ட.. இப்ப எல்லாம் பிடிக்க முடியாது ராஜா…” என்று இன்னும் அவனை அவள் வம்புக்கு இழுக்க
“அடியே புடிச்சுட்டேன்னு வை.. நான் சொல்றது எல்லாமே நீ கேக்கணும் ஓகேவா…” என்று அவன் டீல் பேச
“முதல்ல புடிடா மாமா…” என்றவள் அவன் கையில் சிக்காமல் கட்டிலின் மீது ஏறி குதித்து ஓடினாள்.
சிறிது நேரம் அவளை விட்டு பிடித்தவன், கட்டிலின் பின் புறம் நின்று இருந்தவளை எட்டிப் பிடித்து இருந்தான்.
இருவருக்கும் மூச்சு வாங்கியது. “ஏன்டி எல்லாம் முடிஞ்சதுக்கு பிறகு வாங்க வேண்டிய மூச்ச இப்பவே வாங்க வைக்கிற…” என்றவன்
அவளைப் பிடித்து சுவரில் சாய வைத்தான். “பாத்தியா மாமா ஸ்டாமினா குறைஞ்சிடுச்சு.. அதனால நீ ரெஸ்ட் எடு.. நைட் பார்த்துக்கலாம்…” என்று அவள் சொல்ல
“அடிங்க, உன்ன விடுறதா இல்லடி…” என்றவன்
“உன்ன பிடிச்சிட்டேன்னா நான் சொல்றதெல்லாம் செய்றேன்னு சொல்லி இருக்க…” என்று சொல்லி அவளை விட்டு சற்று விலகி நின்று, இரண்டு கையையும் விரித்தவன்
“எப்படி வேர்த்து இருக்கு பாரு.. ஒழுங்கு மரியாதையா நீயே துடைச்சு விடு…” என்று சொல்ல
“இவ்வளவுதானா…” என்றவள் தன் சேலை முந்தானை எடுத்து அவனை துடைக்க போக,
அவள் சேலை முந்தானை பிடித்து இழுக்க,
“சேலை..
…பின் குத்தி இருக்கேன்..
…கிழியுது விடுடா…”
அவள் மறுப்புகள் எதையும் காதில் வாங்காமல் மொத்தமாக அவள் புடவையை உருவி தூர வீசியிருந்தான்.
அவள் அவனை திகைத்துப் பார்க்க “என்ன, உன்ன தொடச்சி விடச் சொன்னேன்…” என்று சொல்ல
அவள் ஒற்றைக் கையை தன் மார்பின் குறுக்கே வைத்தவள், மற்றைய கையால் அவன் முகத்தை துடைக்க போக,
அவள் கைப்படாமல் விலகி நின்றவன் “ஹாஹா, உன் கை என் மேல படவே கூடாது.. இப்ப உன் துணியாலதானே தொடச்சி விட வந்த.. அதே மாதிரி உன் துணியால தொடச்சி விடு…” என்று அவன் சொல்ல
அவள் புடவை எடுக்க செல்ல பார்க்க, கையை நீட்டி தடுத்தவன் “புடவைய எடுக்கக் கூடாது.. புடவை மட்டும் தான் உன் துணிய என்ன…” என்று கேட்க
அவன் நோக்கம் புரிய “நான் மாட்டேன்…” மார்பின் குறுக்கே கையை வைத்துக் கொண்டு திரும்பினாள்.
“அடியே, நீ தான் ஒத்துக்கிட்ட.. உன்ன புடிச்சிட்டா நான் சொல்றதெல்லாம் கேட்கிறேன்னு.. வாக்கு மீறக்கூடாது டி பொண்டாட்டி…” என்று அவளை திருப்பியவன்
“நான் சொல்றத பேசாம செய்ய போறியா.. இல்ல நான் கிளம்பி போகட்டுமா…” என்று கேட்க
அவனா போவான். இருந்தாலும் “இல்ல, இல்ல போக வேணாம்.. செய்றேன்…” என்றவள் கூச்சத்தை ஒதுக்கி வைத்து விட்டு, மேலாடையை கழட்டி அவன் மார்பில் இருந்த வியர்வையை துடைக்க
அவள் மீதே அவன் பார்வை, எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டான். முதல் முறை ஒரு பெண் மேனியை இப்படி பார்க்கின்றான். உடல் காய்ச்சல் கண்டது போல் கொதித்தது.
நாணத்துடன் அவன் மார்பில் இரண்டு தடவை ஒற்றி எடுத்து இருப்பாள். அந்த துணியையும் பறித்து எடுத்தவன், தூரவீசினான்.
அவள் அவனை அப்பாவியாய் முகத்தை சுருக்கி பார்க்க, “என்ன மிச்சமா இருக்கு இல்ல…” என்றான் கண்களால் அவளின் மேலாடையின் மிச்சத்தை காட்டி
“ம்ஹ்..” சிணுங்கியவள் அதையும் கழட்ட, அடுத்த நொடி அவளை அணைத்து, அவள் உடலில் இருந்த மிச்ச சொச்ச ஆடையையும் விலக்கி, கைகளில் அள்ளிக்கொண்டவன் கட்டிலில் அவளுடன் தஞ்சமானான் .
அதன் பின் என்ன, அவனும் அவளும் ஒரே நிலையில், முத்தங்கள் முடிவின்றி தொடர்ந்தன.
அவன் எச்சில் படாத பாகமே அவளிடம் இல்லை என்று ஆனது.
பார்கவிக்கு மூச்சு முட்டியது.
எங்கு தொடங்க…
எங்கு கிறங்க…
எங்கு மயங்க… எதுவும் புரியவில்லை இருவருக்கும்.
ஒருவரில் ஒருவர் கலந்து காமத்தை கத்துக் கொண்டிருந்தனர்.
அஸ்வந்தோ பயின்ற வரை போதும் என்று இருதி கட்ட சங்கமத்திற்கு அவள் இடைக்கு கீழ் அவன் போக,
அடுத்து என்ன என்பது ஓரளவு புரிந்த பார்கவி கண்களை மூடி தயாராக இருக்க,
வெகு நேரமாக அவன் தடவிக் கொண்டிருக்க, தலையைத் தூக்கிப் பார்த்தாள்.
அவள் பார்கவும் “அது.. எங்க…. எப்படி… தேடிட்டு இருக்கேன்டி….” என்று அவன் சொல்ல
அவளுக்கு அவன் நிலையைப் பார்த்து பக்கென்று சிரிப்பு வர, சத்தமாக சிரித்து விட்டாள்.
“சிரிக்காதடி.. தியரியா தெரிஞ்சுக்கறது வேற.. பிராக்டிகல் வேற…” எனறு அவன் சொல்ல
“டேய் மாமா! இன்னைக்கு தேறிடுவியா?…” என்று அவள் கிண்டலாக கேட்டு, சிரிக்க
அவள் கிண்டலில் ரோசம் வர, அவன் வீறுகொண்டு அழுத்த,
சிரித்துக் கொண்டிருந்தவள் “அம்மாஆஆ…” என்று கத்த
அப்படியே அவள் மீது படர்ந்து, உதடு, கன்னம் என்று முகம் முழுவதும் முத்தம் வைத்தவன் “சாரிடி, சாரிடி.. ரொம்ப வலிக்குதா.. நான் விலகட்டுமா?…” என்று கேட்க
அவன் பின்தலையில் கையை வைத்து, ஆழமான இதழ் முத்தம் கொடுத்தவள் “விலகாத…” என்று சொல்ல
விடுவானா அவன்,
சீரான வேகத்தில் இயங்க ஆம்பித்தான். அவள் முனக ஆரம்பித்தாள்.
முடிவில்லா பந்தத்தின் முதல் சங்கமத்தின் முடிவு, சிறிது நேரத்தில் இருவரின் உணர்வின் உச்சத்தோடு முடிவுக்கு வந்தது.
அஸ்வந் கூறியது போன்று இரவு முடியும் வரை அவன் இஷ்டம் போல அவளை வளைத்தான்…
ரசித்தான்…
சுகித்தான்…
அடுத்த நாளும் புலர்ந்தது. அவளை விடும் என்னமே அஸ்வந்திற்கு இல்லை. “கவி, கவி, கவி…” என்று அவளை சுருட்டிக் கொள்ள
“டேய் மாமா.. இதுக்கு மேல ஒரு முத்தத்த கூட என்னால தாங்க முடியாது.. கொஞ்ச நேரமாவது ரெஸ்ட்டு கொடுடா…” என்று கெஞ்சி கொஞ்சி தான் வீட்டிற்கு அவனை அழைத்து கொண்டு வந்தாள்.

