Loading

அன்றிரவு ருத்ரன் வழக்கு விஷயமாக பேச வேண்டுமென்று அழைத்ததால் வேறுவழியின்றி செல்ல முடிவெடுத்தவள் ரேயனை காணவேண்டுமென்று நொந்து குழந்தை இருவரையும் அழைத்து கொண்டு ஆர்யன் வீட்டியிலிருந்து யாழிசையை கூட அழைக்காத தியா காரில் பறந்து விட்டாள்.

 

ஆர்யன் தான் அவனின் செயலில் கடுப்பாகி தானே விட்டு வருவதாக கூற, பெண்ணவளோ ஏனோ மறுத்து இன்று இங்கேயே இருந்து கொள்கிறேன் என்று கூறிவிட, அவனும் சரியென்று அவளுக்கான பணிவிடையை செய்து பார்த்து கொண்டான்.

****

 

இரவில் சாப்பிட்டு முடிய ரேயன் அறைக்குள் வழக்கு விஷயமான கலந்துரையாடல் இருக்க, பெண்ணவளுக்கு அவனை சந்திக்க வேண்டுமென்றும் என்றதிலே சாப்பாடு தொண்டைக்குள் செல்ல மறுக்க, வேண்டா வெறுப்பாக சிக்கி தவிக்கும் உணவை முழுங்கிவிட்டு ருத்ரன் உடன் ரேயன் அறைக்குள் நுழைந்து அவனை பாராமல் படுக்கையில் விளிம்பில் அமர்ந்து கொண்டாள்.

 

அவளை அழுத்தமாக பார்த்த ரேயன் “மச்சி.. நான் சொன்ன வேலை என்னாச்சு” என்றதும்,

 

குரலை செருமிய ருத்ரன் “ரேயன் மந்தாகினி த்ரீ இயர்ஸா அங்க வொர்க் பண்றாங்க.. அவங்க ஒரு விடோ குழந்தைங்க ஃபேமிலின்னு யாருமே இல்ல.. சோ இங்க ஸ்டே பண்ணிட்டே வொர்க் பண்றாங்க.. வேற எதுவும் சந்தேகம் படுற மாதிரி சிக்கல.. நான் ஃபாலோ பண்ணின டூ டேஸ்ல அவங்க பெருசா வெளிய எங்கையும் போகல.. ஒன்ஸ் கோவிலுக்கு மட்டும் போனாங்க” என்றதை கேட்டு நெற்றியை நீவியவன்

 

“சரி ஓகே மச்சி.. நாளைக்கு யாழிசைய கிட்னாப் பண்ணின இடத்தில தான் உனக்கு வேலை அங்க போகும் போது யாழிசை சிம்மையும் கையோட வாங்கிட்டு போயிடு” என்க,

 

புரியாமல் விழித்த ருத்ரன் “புரியல ரேயா”

 

“மச்சி.. இனியும் வெயிட் பண்ண முடியாது சோ நாளைக்கு சத்யா கேஸ் விஷயமா ஹோம் நுழையனும்..” என்று தன் திட்டத்தை கூற,

 

குனிந்து அமர்ந்திருந்த தியாவும் காதை தீட்டி கேட்டுக் கொள்ள, அவன் கூறியதற்கு சம்மதமாக தலையாட்டிய ருத்ரன் “சரி தான் ரேயன்.. யாழிசைய கிட்னப் பண்ண டிரை பண்றாங்கங்குற விஷயத்த இப்போ அவ இருக்கிற நிலமைல பயப்பட கூடாதுன்னு தான சொல்லல.. இப்படி வாய்ஸ் அனுப்பும் போது அவளுக்கு தெரிஞ்சிடுமே” என்றதில் புன்னகைத்த ரேயன் “வாய்ஸ் அனுப்ப போறோம்ன்னு தான் சொன்னேன்.. யாழிசை தான் வாய்ஸ் கொடுக்கணும்ன்னு சொல்லவே இல்லயே” என்றவனின் பார்வை தியாவை விட்டு சிறிதும் நகலவில்லை,

 

அவனை பார்ப்பதை தெரிந்தும் நிமிராத தியா, ஆடவனின் கூற்றுக்கான அர்த்ததையும் உணர்ந்து கொண்டு எதிர்ப்பு பேசாமல் அமைதியாக தான் அமர்ந்திருந்தாள்.

 

ரேயனின் பேச்சில் பேவென முழித்த ருத்ரன் “ரேயன் எனக்கு வசனமே புரியல.. யாழிசை வாய்ஸ்க்கு அவ பேசாம யாரு பேசுவா மிமிக்ரி ஆர்டிஸ்ட் யாரும் வர சொல்ல போறீயா.. ஆனாலும் மிமிக்ரி ஆர்டிஸ்ட் தேடி அவ்வளவு ஏர்லியா எப்படி எல்லாத்தையும் முடிக்க முடியும்” என்க,

 

அதை கேட்டு சத்தமாக சிரித்த ரேயன் “மச்சி மிமிக்ரி ஆர்டிஸ்ட்ட மைக் போட்டு கூவி கூப்பிட அவசியம் இல்ல.. நம்மகிட்டயே சூப்பர் ஆளுயிருக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க தான் அதுவும் உன் ஃபியூச்சர் வைஃப் சிஸ்டர்” என்றதில் முதலில் முழித்தவனுக்கு பிறகு தான் மண்டையில் பல்பு எரிய,

 

பெண்ணவள் காதல் கதையை கூறும் போது அவனின் அன்னை போல் பேசியது நினைவில் வந்து செல்ல “ரேயன் மச்சி தான் பேச போறாளா” என்றதும் ஆமென தலையசைத்த ரேயன் “பரவாலயே கப்புன்னு புடிச்சிட்ட.. சரி அப்போ நாளைக்கு ரெடியாகி என் ரூம்ல ஆஜாராகிடுங்க மிமிக்கிரி வொர்க் முடிய சாப்பிட்டுட்டு நானும் தியாவும் ஹோம் போவோம்.. நீ ஆர்யா வீட்டுக்கு போய் யாழிசை சிம் வாங்கிட்டு அந்த இடத்தில ரெடியா வெயிட் பண்ணு.. தியா உன்ன அலார்ட் பண்ணவும் உடனே நான் சொன்ன நம்பருக்கு செண்ட் பண்ணி விட்டுட்டு.. யாழிசை சிம்மோட சேத்து நீ வாய்ஸ் அனுப்புற சிம்மையும் அங்கயே வீசிட்டு வந்துரு” என்றதும் தலையாட்டி எழுந்த ருத்ரன் அவனிடம் தலையசைத்து விடை பெற,

 

குனிந்த தலை நிமிராமல் செல்ல போன தியாவை “தியா..” என்று அழைத்த ஆடவனின் அழைப்பில் பெண்ணவளின் கால்கள் அப்படியே நின்றது.

 

ஏனோ அவளின் வாடிய முகத்தை காண பொறுக்காத ரேயன் பெண்ணவளை சீண்டும் நோக்கில் குரலை செருமி “நான் இன்னைக்கும் டேப்லெட் போடல.. கிடைக்குமா தியா” என்றவனின் பார்வை பெண்ணவளின் மீது குறு குறுப்பாக படிந்தது.

 

அவனின் பேச்சில் விழி விரித்து அதிர்ந்தவள் பார்வை வீச்சில் சிலிர்த்து நெளிய, அவளின் பாவனையை ரசனையாக வருடிய ரேயன் “நான் கேட்டது காதுல விழுந்துச்சா இல்லையா.. எனக்கு டேப்லெட் வேணும்” என்றதும் பெண்ணவளும் பெருமூச்சுவிட்டு அவனுக்கான மாத்திரைகளை எடுத்து நீட்ட,

 

அவளை புருவம் உயர்த்தி பார்த்தவன் “எனக்கு கரைச்சி குடிக்க பிடிச்சிருக்கு சோ நேத்து கொடுத்த போல கரைச்சி கொடு” என்றவன் நேத்து என்ற வார்த்தையை அழுத்தி சொன்னவனின் பார்வை நேற்றைய நிகழ்வில் பெண்ணவளின் இதழிலே படிந்தது.

 

அதிலும் அதிர்ந்தவளுக்கு புரையேறிவிட பெண்ணவள் தலையை தட்டி கொண்டிருக்க, அதை கண்டு கொள்ளாது பெண்ணவளின் கையிலிருந்த மாத்திரையை போட்டு முடித்து தண்ணீர் குடித்தவன்,

 

அவள் விடாமல் இருமமும் மறுபடியும் தண்ணீரை வாயிலில் இறக்கிவிட்டு கையிலிருந்த தண்ணீரை கீழே வைத்துவிட்டு பெண்ணவள் உணரும் முன்னே இழுத்து அவளின் இதழுக்கு தண்ணீரை பாய்ச்சினான்.

 

அவனின் முத்தத்தை தியாவிற்கு தடுக்கமால் விட்டாலும், அதனை ஏற்க மறுத்து அவளரியாமலே கண்ணீர் கன்னத்தில் பயணம் செய்ய, நேற்று போல் இன்றும் பெண்ணவளின் கண்ணீர் படவும் கடுப்பானவன் அழுத்தமாக இதழ் பதித்துவிட்டு விலகி பெண்ணவளின் முகம் பார்க்க, அவளோ அசையாது இருந்தாள்.

 

நேற்று போல் ஓடி விடுவாள் என்று விலகியவன், அப்படியே இருந்தாலும் அவளின் கண்ணீர் மற்றும் நிற்காமல் வடிந்து கொண்டிருக்க, அதில் உள்ளம் துடித்து “யாழி..” என்று மென்மையாக அழைத்திருந்தான்.

 

அவ்வளவு தான் அவனின் பழைய அழைப்பை கேட்டதில், அவனை தாவி அணைத்து கொண்ட பாவையோ மொத்தமாக உடைந்து கதறி அழுதுவிட்டாள்.

 

ஏனோ, அவள் மேல் கோவமிருந்தாலும் அவனின் யாழி அழுகையை வேடிக்கை பார்க்கும் கொடுமைக்காரன் இல்லையே அவன்,

 

காதலை திகட்ட திகட்ட அள்ளி கொடுத்தவனாயிற்றே, அவளின் பிரிவில் வலியில் துடித்ததோடு தன்னவள் அதனால் காயப்படுகிறாளே என்று அதிகம் துடித்ததே ஆடவன் தானே,

 

அப்படியிருக்கையில் தன்னவள் மறுகுவதை எப்படி பார்த்து கொண்டு இருக்க எழும், கோவத்தை தூக்கி எரிந்து விட்டான், ஆம் மொத்தமாக கோவத்தை தூக்கி எரிந்து விட்டான்.

 

அவள்மேல் தவறேயிருந்தாலும் அதனையும் துடைத்து எரிந்து விட்டு இந்த நிமிடம் அவனின் யாழியின் ரேவாக தன்னை அணைத்து கதறும் பெண்ணவளை தன் காயத்தின் வலியை கூட பொருட்படுத்தாமல் நெஞ்சோடு இறுக்கி அணைத்திருந்தான்.

 

மொத்தமாக அழுது களைத்த பெண்ணவளும் தன்னவனின் அழைப்பில் அவன் மார்பிலே நிம்மதியான தூக்கத்திற்கு சென்றிருக்க, மெல்ல அவளை படுக்கையில் கிடத்தியவன், கதவை அடைத்துவிட்டு பெண்ணவளை அணைத்தவாறே உறங்கி போனான்.

*****

 

மறுநாள் காலையில் வழக்கத்தை விட முன்னவே தயாராகிய ருத்ரன், ரேயனின் கூறியதால் நேராக அவனின் அறைக்கு வந்து நின்று கதவு இன்னும் திறக்கப்படாததை கண்டு ‘சீக்கிரம் வர சொல்லிட்டு.. இவன் இன்னும் தூங்குறானா’ என்று கதவை தட்டுவோமா வேண்டாமா என்று சிந்தித்தவன் “தட்டுவோம்.. அப்புறம் ஏன் எழுப்பலன்னு நம்ம தலைய உருட்டினா” என்றவாறே கதவை தட்ட,

 

நீண்ட நாட்கள் பின் தங்களின் உயிர்யானவர்களின் அருகிலிருந்ததால் இருவருமே விடிந்தது கூட உணராமல் உறங்கி கொண்டிருக்க, கதவு தட்டும் சத்தம் கேட்டு மெல்ல கண் விழித்த ரேயனின் இதழ்கள் மங்கையின் முகம் கண்டு புன்னகைத்தது.

 

தன் மீதிருந்த அவளின் கையை எடுத்துவிட்டு எதிரேயிருந்த கடிகாரத்தை கண்டு ‘டைம் ஆயிடுச்சா’ என்றுவிட்டு தன்னவளின் நெற்றில் இதழ் பதிக்க, அவனின் ஸ்பரிசம் மங்கை உணர்ந்தாளோ என்னவோ இதழ்களில் மெல்லிய புன்னகை எட்டி பார்க்க, அதில் புன்னகைத்து புத்துணர்ச்சியுடன் தலை கோதிவிட்டு எழுந்து கதவை திறந்தான்.

 

அவன் திறந்ததும் ருத்ரன் “என்ன சீக்கிரம் வர சொல்லிட்டு.. உனக்கு இன்னும் தூக்கமா” என்று அவனை தள்ளிவிட்டு உள்ளே வந்தவன் படுக்கையில் உறங்கி கொண்டிருந்த நம்பியை கண்டு விழிகள் தெறித்து விரிய, அதில் சிரித்து அவனின் தோலில் கைப்போட்ட ரேயன் “என்ன மச்சி பேய் முழி முழிக்குற” என்க,

 

தன் கண்கள் தான் சரியில்லையோ என்று எண்ணிய ருத்ரன் நன்றாக கசக்கிவிட்டு பார்க்க, அப்போதும் பெண்ணவளே தெரிந்ததில் “எனக்கு புரியல.. இங்க என்ன நடக்குது” என்று பேவென்று அவன் விழித்ததில் குபீரென்று சிரித்த ரேயன் “வேற யாரும் நடக்கலயே.. நீ தான் இப்போ நடந்து வந்த” என்றதை கேட்டு அவனை மார்க்கமாக பார்த்து வைத்து,

 

தோழியின் அருகில் சென்று அவளை எழுப்ப, பெண்ணவளோ சிணுங்கி அவனின் கையை தட்டிவிட்டு “ரே சும்மா இருடா.. நைட் உன்னால தூக்கம் கெட்டு போச்சு” என்றுவிட்டு முகத்தை மூடி உறங்க, அவளின் பேச்சில் “எதெய்..” என்று விழித்த ருத்ரன் எதிரே நின்றவனை பாவமாக பார்க்க,

 

இரு பக்கமும் தலையாட்டிய ரேயன் “நோ மச்சி அப்படி பாக்காதடா நைட் எதுவுமே நடக்கல.. அவ கனவு கண்டு ஏதோ உலருறா” என்றதை கேட்டு அவனை நாம்பாத பார்வை பார்த்த ருத்ரன் மறுபடியும் தோழியை எழுப்பும் பணியை மேற்கொள்ள,

 

இம்முறை வெற்றியாகியதில் மெல்ல கண்ணை விழித்து சோம்பல் முறித்த தியா, அருகில் நின்ற நண்பனை கண்டு “குட் மார்னிங்” என்றுவிட்டு “கதவை லாக் பண்ணியிருக்கும் போது எப்படி வந்தடா” என்று கதவின் புறம் பார்வையை கொண்டு சென்றவள்,

 

அப்போது தான் அங்கே ரேயன் அவளை நிற்பதை கண்டு நிதர்சனம் புரிய, உள்ளுக்குள் நொந்துவிட்டு தன்னை பார்த்திருக்கும் நண்பனின் பார்வையில் “அது.. அது* என்று திணறி எழுந்தவள்,

 

எதிரேயிருந்த கடிகாரத்தை கண்டு “இன்னைக்கு ஹோம் போகனும்ல அதுக்கு முன்ன நிறைய வேலையிருக்கே நான் போய் சீக்கிரம் ஃப்ரெஷ் ஆயிட்டு வரேன் மத்த விஷயம்னாலும் நைட் பேசிக்கலாம் மச்சி” என்று கட கடவென்று ஒபித்துவிட்டு தன்னறைக்குள் பெண்ணவள் ஓடி விட, தோலை குலுக்கிய ரேயன் “சரி நானும் ரெடியாயிட்டு வரேன்” என்று அவனும் குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

******

 

ஒருவழியாக இருவரும் தயாராகி வந்திருக்க, இருவரும் வருவதற்குள் ருத்ரனும் சாப்பிட்டு வந்திருந்தான்.

 

இப்போது ரேயனோ “மச்சி ஓல்ட் சிம் எதுவும் வச்சி இருக்கியா”

 

“இல்ல ரேயன்.. ஆனா ரெண்டு சிம் வச்சிருக்கேன்.. ஒரு சிம் ரேர்ரா தான் யூஸ் பண்ணியிருப்பேன் அது ஓகேவா என்றதுக்கு ரேயன் சம்மதமாக தலையாட்டிவிட்டு,

 

ஆர்யாவிற்கு அழைத்து யாழிசை திறன்பேசியிலிருந்த மந்தாகினி எண்ணையும் பெற்று கொண்டவன், ருத்ரன் திறன்பேசியை வாங்கி ஆர்யன் கொடுத்த எண்ணை பதிந்துவிட்டு அவனின் கூறிய எண்ணியிலிருந்த பகிரிக்குள் சென்று, யாழிசை குரலில் தியாவை தான் கூறியது போல் பேச வைத்தான்.

 

பின் ருத்ரனிடம் திறன்பேசியை ஒப்படதைத்து “மச்சி.. மறுபடியும் சொல்லுறேன் போகும் போது யாழிசை சிம் வாங்கிக்க ஆல்ரெடி ஆர்யாகிட்ட சொல்லிட்டேன் விஷயத்த.. அப்புறம் அந்த இடத்துக்கு போய் தியா நார்மல் மெசேஜ்ல அளார்ட் பண்ணவும் நெட் ஆன் பண்ணி இந்த ஆடியோ செண்ட் பண்ணிட்டு ரெண்டு சிம்மையும் உடைச்சு தூர வீசிட்டு அங்கிருந்து வெளிய வந்துரு.. ஆனா மச்சி மறந்தும் அங்க போகிறதுக்குள்ள நெட் ஆன் பண்ணிடாதடா..” என்க,

 

அவனும் இருவரிடமும் தலையாட்டிவிட்டு விடை பெற, ரேயன் தியாவுடன் உணவருந்தி விட்டு அன்பு இல்லத்தை நோக்கி சென்றான்.

****

 

ரேயன் கூறியது போல் முதலில் ஆர்யன் வீட்டை நோக்கி சென்றவன், வாசலில் நின்று, அவனுக்கு அழைப்பு விடுத்து வர கூறினான்.

 

ரேயன் அழைக்கும் போது பெண்ணவள் தூங்கி கொண்டிருக்க, சத்தம் வராமல் மந்தாகினி எண்ணை கண்டுபிடித்து ரேயனிற்கு தன் திறன்பேசியிலிருந்து அனுப்பி வைத்தவன்,

 

அப்போதே அவன் விஷயத்தை கூறியதால் அவளின் சிம்மையும் அப்போதே கழட்டி வைத்திருக்க, ருத்ரன் அழைக்கவும் வெளியே சென்று கொடுக்க, ருத்ரனும் வாங்கி கொண்டு வண்டியில் பறந்தவன் யாழிசையை கடத்தி கற்பழிக்கப்பட்டதாக கூறிய அந்த இடத்திற்கு பெண்ணவளின் குறுஞ்செய்திக்காக காத்திருந்தான்.

****

 

அன்பு இல்லத்தில் பெண்ணவளுடன் அதிரடியாக உள்ளே நுழைந்த ரேயன், நேரே சென்றதோ அங்கிருந்த வரவேற்பு அறைக்கு தான்.

 

அவன் அடாவடியாக உள்ளே நுழைந்ததில் வரவேற்பிலிருந்த பெண் “யாரு நீங்க.. என்ன வேணும்” என்றதும் இருவரும் தங்களின் அதிகார அட்டையை அவள் முன் நீட்ட,

 

தியாவோ “நாங்க ஒரு முக்கியமான விசாரணையா வந்திருக்கோம்.. ஹோம் ஓனர் மேனஜர் வார்டன்ஸ் அப்புறம் வொர்க் பண்ற எல்லாரையும் வர சொல்லுறீங்களா” என்க,

 

அவர்கள் அதிகாரி என்றதும் மிரண்ட பெண்ணோ “என்ன பிராப்ளம்.. எதுக்கு எல்லார்கிட்டயும் விசாரணை மேம்” என்க, இம்முறை ரேயன் “எல்லாரும் வந்ததும் உங்களுக்கே தெரியும் தனி தனியாலாம் கூவிட்டுருக்க முடியாது.. சோ சொன்னத செஞ்சா நல்லது” என்றவனின் குரல் காரமாகவே இருக்க,

 

அதில் மேலும் பயந்த பெண், அவன் கூறிய அனைவரைக்கும் அழைப்பு விடுத்து விஷயத்தை எடுத்து கூறி வரவழைக்கும் பணியை செவ்வன முடித்துவிட்டு அவர்கள் இருவரையும் பயத்துடன் பார்த்திருந்தாள்.

 

தொடரும்…

– ஆனந்த மீரா 😍😍

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்