Loading

நினைவுகள் -18

அன்று…

அனன்யாவை முறைத்த ராதிக்வோ,” ஹே! அணுகுண்டு! எப்பப் பார்த்தாலும், ஏதாவது குண்டைத் தூக்கிப் போட்டுட்டே இருக்கேன்னு சொல்லி முடிக்கலை. அதுக்குள்ள உன் வேலையை காண்பிக்க ஆரம்பிச்சுட்ட. இப்ப ஏன் உனக்கு இந்த கொலைவெறி? எங்கம்மாட்ட சொன்ன நான் தொலைஞ்சேன். நீ அவங்களோட சுவீகார புத்திரி. உன்னை ஏதாவது சொன்னது தெரிஞ்சது , அவ்வளவு தான்.”

” தெரியுதுல. ஒழுங்கா மரியாதைக் கொடுத்து அக்கான்னு சொல்லு புரியுதா?” என்று விட்டு அனு ஓட, ராதிகா துரத்த கலாட்டாவாக ஜிப்னி ஏறும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

ஆம் இப்போதெல்லாம் சுந்தரிக்கு நல்ல முன்னேற்றம். சைக்யாட்ரிஸ்டிடம் காண்பித்து மனமெல்லாம் இலகுவாக இருக்க, ராதிகாவுக்கும் மகிழ்ச்சி. இருவருக்கும் அனு என்றால் உயிர்.

அதுவும் சுந்தரிக்கு தன் மகளே திரும்பி வந்ததாக தோன்றியது. அதனால் அவளை ஒரு வார்த்தை யாரும் சொல்லக் கூடாது. ராதிகா ஏதாவது கிண்டலாக பேசினாலும், காதில் ரத்தம் வரும் வரை, பொறுத்து போ… அவளை ஏன் வம்பிழுக்குற… அனுமா பாவம்… எக்ஸ்ட்ரா… எக்ஸ்ட்ரா… என அட்வைஸ் மழை பொழிவார். அதைத் தெரிந்துக் கொண்டு தான் அனுவும், ராதிகாவிடம் சுந்தரிமாவிடம் சொல்லுவேன் என வம்பு வளர்ப்பாள்.

அப்புறம் என்ன காலேஜ் வரும் வரைக்கும் ஜிப்னியில் பேசிக் கொண்டே வந்தனர்.

“அப்படி என்ன வீட்ல சொன்னாங்க அனு? காலையில ரொம்ப எக்ஸைட்டா இருந்த?”

” அதுவா மேடம்ம ரொம்ப புகழ்ந்து தள்ளிட்டாங்க. ” என்று தன்னை காண்பித்துக் கூற.

” யாரு? அம்மாவா சொன்னாங்க?” என்று ஆச்சரியமாக ராதிகா வினவ.

” ம்கூம் சொல்லிட்டாலும்… பூமி சுத்துறதை நிறுத்திடாது. எல்லாம் எங்க ஸ்வீட் அத்தை அவங்க தான் சொன்னாங்க.” என்று சொல்லி நிறுத்த…

” அதானே பார்த்தேன்… நம்ம அத்தை தானா பாராட்டினாங்க” என்று ராதிகா கூற…

 ” என்னது நம்ம அத்தையா? என்னடி கதை புது ரூட்டில் போகுது ? ” என்ற அனு தோழியை ஆராய்ச்சியாகப் பார்க்க…

ராதிகாவோ, தனது சிவந்த முகத்தை மறைத்துக் கொண்டு, ” உங்க அத்தை என்று சொல்ல வந்தேன். டங்க் ஸ்லிப் ஆகிடுச்சு. சரி சொல்லு. என்ன திடீரென்று பாராட்டு மழை.” என்று பேச்சை திசை திருப்பினாள் ராதிகா.

பின்னே இந்த ஒன்றரை வருடத்தில் அனு, அவங்க குடும்பத்தைப்பற்றியும், விஸ்வரூபனைப்பற்றியும் கூறி, கூறியே ராதிகாவின் மனதில் விஸ்வரூபன் மீதான நேசத்தை வளர வைத்திருந்தாள். ராதிகாவோ, தனக்குள்ளே காதலை வளர்த்துக் கொண்டிருந்தாள். அனுவிடம் கூட மனதிலுள்ள ஆசையை தெரிவிக்கவில்லை. அவ்வப்போது பேச்சிணுடே, தெரியாமல் வாயை விடுவதும், பிறகு சமாளிப்பதுமாக நாளை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

இன்றும் அப்படித்தான் நடந்தது. பிறகு ஒரு வழியாக, அனன்யா தான் கூற வந்ததைக் கூறினாள். ” அதுவா… இன்னைக்கு ஃபோன் பண்ணுனாங்கள்ல, அப்ப சாப்டியா என்ன டிஃபன் என்று கேட்டாங்க… நான் சாப்பாடு பத்தி சொன்னேன். உனக்கு பொங்கல் பிடிக்காது தானே என்று ஃபீல் பண்ணாங்க. அவங்க தான் எங்க வீட்டு அன்னப்பூரணியாச்சே… யாருக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது… எல்லாம் அத்துப்படி… அவங்க கவலை அவங்களுக்கு…

 இங்க வந்து எல்லாம் பழகிட்டேன் அத்தை என்று சொன்னேனா… அவங்களுக்கு ஒரே பெருமை. நான் பொறுப்ஸ் ஆகிட்டேன் என்று…”

” அது உண்மை தான அனு. வந்த புதுசுல ஹாஸ்டல் சாப்பாட்டை கஷ்டப்பட்டு தானே சாப்பிட்ட. “

 லேசாக சிரித்த அனு,” அது… எனக்கு சாப்பாட்டுல நிறைய ரெஸ்ட்ரெக்ஷன் இருக்கு ராது. எல்லாம் நான் சாப்பிட மாட்டேன். அதுவுமில்லாமல் வீட்ல இருக்குற இடத்துலே வந்து கொடுப்பாங்க. இங்கே நாமே போய் சாப்பிடணும். இது பிடிக்காது, வேண்டாம் என்று சொல்லுற சிச்சுவேஷன்ல நான் இல்லை. பசிக்கு புடிக்குதோ, இல்லையோ சாப்பிட்டு தான் ஆகணும். எல்லா நேரமும் ஹோட்டல்ல சாப்பிட முடியாதுல்லையா… அதுவும் இல்லாமல் அப்போ புது இடம் வெளியே போகவும் பயமா இருந்தது. இப்போ இதுவே பழகிடுச்சு. அதைப் பத்தி அத்தைக் கிட்ட பேசும் போது தான், பொறுப்பாயிட்டேன்னா புகழ்ந்தாங்க.” என்றவள் டீசர்டில் இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டாள்.

” சரி வா காலேஜ் வந்துடுச்சு.” என்றவாறே ராதிகா இறங்க, அவளைப் பின்பற்றி அனன்யாவும் இறங்கினாள்.

 காலேஜ்ஜிற்குள் நுழைந்ததும், ” ராது சினாப்ஸிஸ்ல டான்ஸூம் ஆடுறதா தானே கமிட்டி மெம்பர்ஸ் கிட்ட பேர் கொடுத்திருந்த… இப்போ பாட்டு மட்டும் பாடுறதா சொன்னியாமே. ஏன் இப்படி பண்ணுற. டூ மன்த்ஸ் ப்ராக்டீஸ் பண்ணிட்டு, இப்போ முடியாதுண்ணு சொன்னா, அவங்களும் என்ன பண்ணுவாங்க. நீ பார்ட்டிஸிபேட் பண்றதால தான் நானும் ஆடுறேன் என்று சொன்னேன். இப்போ இப்படி நீ பண்ணுனா, என்னப் பண்றது. நீ ஆடுவன்னு சொல்லிட்டேன். ஒழுங்கா ப்ராக்டீஸ்க்கு வா…” என்றாள் அனு.

” சரி…” என தலையாட்டுவதைத் தவிர ராதிகாவிற்கு வேறு வழியில்லை.

 சினாப்ஸிஸ் என்பது ஃப்ரெஷ்ஷர்ஸ்க்கான பார்ட்டி… ஃபைனல் இயர் ஸ்டுடென்ட்ஸூக்கு ஸ்டடிஸ் ரொம்ப முக்கியம் என்பதால, ஃபோர்த் இயர் ஸ்டூடெண்ட்ஸ் தான் கமிட்டி மெம்பர்ஸா இருந்து, ப்ரோக்ராம ஆர்கனைஸ் பண்ணுவாங்க.

மோஸ்ட்லி நியூ ஸ்டூடெண்டுக்கு தான் இம்பார்ட்டன்ஸ். இருந்தாலும் மத்த ஸ்டுடென்டும் பார்ட்டிஸிபேட் பண்ணுவாங்க.

கமிட்டி மெம்பர்ஸ், ப்ரெஷ்ஷர்ஸோட திறமையை, பார்த்து அவர்களுக்கான ப்ரோக்ராமை அலார்ட் பண்ணுவாங்க. டான்ஸ்… சிங்கிங்… ட்ராமா… ஆங்கரிங் பண்றது என்று நிறைய இருக்கு.

இதுக்காக ஒரு பெரிய ஹோட்டல்ல ஹால் புக் பண்ணிடுவாங்க. சாப்பாடும் அவங்களே புரொவைட் பண்ணிடுவாங்க. ஸ்டூடண்டோட ஃபேமிலியும் இந்த பங்ஷன்ல கலந்துக்கலாம்.

மோஸ்ட்லி யாரும் வர மாட்டாங்க. பட் அனுவோட வீட்லருந்து ஆட்கள் வருவாங்க என்று அவள் சொன்னதிலிருந்து, தான் ராதிகாவிற்கு டான்ஸ் ஆடுவதில் ஒரு தயக்கம்.

அவங்க வீட்டில் இருந்து, எப்படியும் விஸ்வரூபன் தான் வருவான். அவன் முன் எப்படி ஆடுவது? அதுவும் அவர்கள் செலக்ட் செய்த பாடலை நினைத்தவளின் முகம், செவ்வண்ணத்தை பூசிக் கொண்டது.

இன்று…

உன்னுடைய நட்பை என்றும் மறக்கமாட்டேன் என்று ஆதிக்கு உறுதி கொடுத்த ராதிகா, ‘ தன்னை சுற்றி ஏதோ நடக்கிறது. அது என்ன என்று தான் புரியவில்லை.’ என்று எண்ணியவள், அதற்கு பிறகு, சலசலவென ஆதியிடம் பேசிக்கொண்டு வகுப்பறைக்கு சென்றாள்.

 ஆதியும், ராதிகாவின் உறுதியில் நிம்மதியாக வகுப்புகளை கவனித்தான்.

அடுத்த வகுப்பு கிருஷ்ணனோடது. கிருஷ்ணனோ, கேஷுவலாக பார்ப்பது போல, ராதிகாவையும், ஆதியையும் மீண்டும், மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதைக் கண்டு கொண்ட ராதிகா, குறும்பாக அவரைப் பார்த்து கண்ணடித்து சிரித்தாள்.

 அவரோ நெஞ்சில் கை வைத்துக்கொண்டு எதற்கு வம்பு என்று பாடத்தை நடத்தி விட்டு வெளியே சென்று விட்டார்.

 அவர் போனதும் சிரித்துக் கொண்டிருந்த ராதிகாவை பார்த்த ஆதி, ” ராதிகா… அவர் வயசு என்ன? அவருடைய திறமை என்ன? இந்தியாவுல உள்ள பெஸ்ட் கார்டியாலஜிஸ்ட். அவரைப் போய் ஏன் இவ்வளவு பாடு படுத்துற…”

” சும்மா ஜாலிக்கு ஆதி. நம்ம டீனும் வந்ததிலிருந்து நம்மளையே பார்த்தாரா. அதான் சின்ன ஷாக் ட்ரீட்மெண்ட்.” என்ற ராதிகா சிரித்தாள்.

அவளது புன்னகை, அவனையும் தொற்றிக் கொண்டது. ” ஹலோ… மேடம்… சார் உங்களைத் தான் குறுகுறுன்னு பார்த்தார். என்ன ஆளை விடு.” என்று ஆதி கும்பிடு போட…

” சரி… பொழச்சு போ ஆதி. இனி உன்னை இழுக்கலை. பட் அவர பார்த்தா எனக்கு எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.” என்று மீண்டும் கூறினாள்.

 ஆதிக்கு தெரியும், விஸ்வரூபனின் தந்தை தான் கிருஷ்ணன் என்பது. ஆனால் அவளிடம் தெரிவிக்கவில்லை. அவளே தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டான். ஆனால் விஸ்வரூபனை மட்டும் எப்படி ராதிகாவிற்குத் தெரியும் என்று தான் அவனுக்கு குழப்பம். எதுவா இருந்தாலும் தெரியும் போது தெரிந்து கொள்வோம் என்று கேஷுவலாக இருந்தான்.

 லஞ்ச் ப்ரேக்கில், பியூன் வந்து, ” இங்கே ராதிகா யார்? க்ளாஸ் முடியவும்,கிருஷ்ணன் சாரை ஆஃபிஸ் ரூமில் வந்து பார்க்க சொன்னாங்க.” என்று கூறினான்.

யார் ராதிகா என்று கேட்கவுமே எழுந்தவள், ” நீங்க போங்கண்ணா… நான் பார்த்துக்கிறேன்.” என்றுக் கூறி புன்னகைத்தாள்.

பியூன் சென்றதும், உட்கார்ந்தவளைப் பார்த்து முறைத்த ஆதவன், ” ஏய்… வாலு… சும்மா இருன்னு சொன்னா கேட்டியா ? இப்ப பாரு உன்ன வர சொல்லி இருக்காரு. திட்ட போறாரு. ” என்றுக் கூற…

” எவ்வளவோ பாத்துட்டோம். இதையெல்லாம் சமாளிக்கமாட்டோமா…”என்று அசால்டாக கூறினாள் ராதிகா.

அவள் பேசிய பாங்கு எல்லாமே அவனுக்கு, அவனது பேபியை ஞாபகப்படுத்தியது.

” ம் அதுவும் சரி தான்…” பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

 ஒரு வழியாக வகுப்பு எல்லாம் முடிந்தவுடன் துள்ளலுடன் ராதிகா ஆஃபீஸ் ரூமிற்கு சென்றாள்.

” என்ன பெண் இவள்!” என்று எல்லோரும் அதிசயமாக பார்த்தனர்.

” மே ஐ கம் இன் டாக்டர்.” என்றாள்.

” யெஸ் கம் இன். ” என்ற டாக்டரின் அனுமதிக்கு பிறகு உள்ளே சென்றாள்.

” சிட் டவுன் ராதிகா. உனக்கு இந்தப் படிப்பு எவ்வளவு முக்கியம், என்று எனக்கு தெரியும். பீ சீரியஸ் ராதிகா. உன் விளையாட்டுத்தனத்தை படிப்புல காட்டாத.” என்றுக் கூற…

” சார் படிப்புல நான் எந்த காம்ப்ரமைஸும் பண்ண மாட்டேன்‌. அதை நீங்கள் நம்பலாம்.” என்றவள் மனதிற்குள், ‘ ஐயோ! படிப்பு முக்கியமில்லை என்று நான் எப்போ சொன்னேன். ஆளாளுக்கு இதே டயலாக்க சொல்லி கொல்லுறாங்களே.’ என்று எண்ணினாள்.

” அதுக்கு சொல்லல ராதிகா. நீ எவ்வளவுக்கு ஹாஸ்பிடல்ல வொர்க் பண்ணுறீயோ, அவ்வளவும் உனக்கு எக்ஸ்பீரியன்ஸ் தான். ப்ரைடே நீ வெளியில் போனதால் தான் இவ்ளோ ப்ராப்ளம்.

உன்னோட பேரு ஸ்பாயில் ஆகுது. அப்புறம் நம்மளுடைய ஹாஸ்பிடல்…” என்று சொல்ல வந்தவர் பிறகு, “உன்னோட நல்லதுக்காக தான சொல்றேன். ” என்றார்.

” ஆதி என்னோட ஃப்ரெண்ட்… மத்தபடி இப்படி பின்னால் பேசுற எந்த பேச்சுக்கும் நான் இம்பார்ட்டன்ஸ் கொடுக்க மாட்டேன் சார்.நான் என் வரைக்கும் கரெக்டா இருப்பேன்.” என்றுக் கூறியவள், அவரைப் பார்க்க…

” ஓகே உன்னுடைய பர்ஸனல் விஷயத்துல நான் இனி தலையிடல… பட் என்னுடைய எல்லா சர்ஜரியிலும், இனி நீ தான் எனக்கு ஹெல்ஃப்புக்கு வர…”

” டபுள் ஓகே சார். உங்களோட வொர்க் பண்ண காத்திட்டுருக்கேன்‌. அது தான் என்னுடைய விருப்பமும் கூட…” என்றவள், அவரை ஆர்வமாக பார்க்க…

” அப்புறம் ராதிகா… என்னோட வயசுக்கு மரியாதை கொடு மா… நான் உனக்கு அப்பா மாதிரி…” என்று ஆரம்பிக்க…

” ஐயோ! சார்… அப்படி மட்டும் சொல்லி என்னுடைய ஹார்ட்ட உடைக்காதீங்க. பை சார். ஹாஸ்பிடல்ல பார்க்கலாம்.” என்றவள் சிட்டாக பறந்து விட…

அவளது பதிலில் அதிர்ந்து விழித்தார் கிருஷ்ணன்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்