Loading

யாழினியின் அருகில் இருந்த அவளது உயிர்த்தோழி காவ்யா, “இன்னும் நீ யாருக்காக யோசிக்கிறாய். உன் தந்தை என்றாவது ஒரு நாள் உன் மேல் பாசம் வைப்பார் என்று இவ்வளவு காலம் யோசித்து யோசித்து எதுவும் செய்யாமல் அவர்களுடனே இருந்து விட்டாய். இன்னும் பத்து நிமிடங்கள் தான் உள்ளது. உன் வாழ்க்கை இனிமேல் இன்னும் மோசமாக இருக்கும் என்பதை சற்று நினைத்துப் பார். தயவு செய்து நான் சொல்வதைக் கேள்” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படியாக கெஞ்சிக் கொண்டு நின்றிருந்தாள். 

சற்று நேரத்திற்கெல்லாம் அந்த இடம் சற்று பரபரப்பாக ஆவது போல் தோன்றியது மணமகன் வந்து கொண்டிருக்கின்றார் என்பது தெளிவாக புரிய காவ்யாவிடம் தான் படபடப்பு கூடியது. 

யாழினியின் தோளை பற்றி உலுக்கி, “யாழினி… யாழினி…. ” என்று கூப்பிட்டாள். 

யாழினியோ அப்பொழுதும் சிறிதும் உணர்ச்சி இன்றி அப்படியே அமர்ந்திருந்தாள். 

அப்பொழுது அவர்களின் அருகில் ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வந்தார். 

வந்தவர் யாழினியை மேலும் கீழுமாக உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை அளவெடுப்பது போல் பார்த்தார். 

பின்னர் அவளின் நாடியை பிடித்து தன்னை பார்க்கச் செய்து, “உனக்கு இந்த திருமணத்தில் மனப்பூர்ண சம்மதம் தானே? அப்படி சம்மதித்தால் தான் நல்லது. விரும்பாமல் கல்யாணம் செய்தால் என் தம்பிக்கு மந்திரி பதவி கிடைக்காது” என்று சற்று அதிகாரமாக நாடியை பிடித்து அழுத்தியபடி கேட்டார். 

  1. அவரின் பிடியில் வலி ஏற்பட்டாலும் எந்த பதிலும் சொல்லாமல் எந்த உணர்வையும் தன் முகத்தில் காட்டாமல் வெரித்த பார்வையுடன் நின்றிருந்தாள் யாழினி.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்