உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. #competition_story
    #completed_story
    #ஏ_சண்டகாரி
    #தூரிகைதமிழ்நாவல்
    காதல் காத்தாடி அவர்கள் எழுதிய “ஏ சண்டக்காரி”
    மூன்று ஜோடிகள் மூன்று வகையான காதல்.. அவர்களின் காதலும் ஊடலும் சிரிப்பும் அழுகையும் கோபமும் அனைத்து உணர்வுகளையும் கொண்ட ஒரு அருமையான கதை 👏👏
    வருண் ஆதித்யன்.. கண்மணி.. கண்மணி அவளுக்கு இருந்த தனிமையையும் வலியையும் தன் குறும்புத்தனத்தாலும் தன் சந்தோஷம் தன்னிடம் மட்டுமே உள்ளது என்ற புரிந்துணர்வோடும் கலகலப்பாகி கொள்கிறாள் 🥰 அவள் மட்டும் கலகலப்பாக இல்லை சுற்றியுள்ளவர்களையும் மகிழ்வோடு வைத்துக் கொள்கிறாள்🥰 இவளின் மைண்ட் வாய்ஸ்ஸும் குழந்தைத்தனமான குறும்புத்தனங்களும் அழகுதான் 🥰
    வருண்.. குடும்பத்திடம் கோபம் முகம் கொள்கிறான்.. இந்நிலையில் கார்த்திக் இவனின் உயிர் நண்பனே இவனுக்கு வில்லனாக வருகிறான் 😔 இவனை தொழிலில் முன்னேற விடமாட்டேன் என வன்மத்தோடு.. 😔 காதல் தோல்வியிலும் உற்ற நண்பனின் எதிர்ப்பிலும் மனம் தளர்ந்து இருக்கும் இவனுக்கு வரமாக அவளின் காதலோடு வருகிறாள் கண்மணி இவன் வாழ்வில்🥰 அனைத்து சஞ்சலங்களையும் கலைந்து நண்பனின் நட்பையும் பெற்று கண்மணியோடு காதலாக ஒரு வாழ்வை ஏற்படுத்திக் கொண்டானா வருண் என்பது கதையில்🥰 மாதவன்.. அஸ்வினி.. தன் பஞ்சு மிட்டாய் மீது அளவு கடந்த காதல் மாதவனுக்கு ஆனால் அதை சொல்லும் நேரம் தான் அவனுக்கு கிட்டவில்லை.. திருமணம் நின்றதால் அதற்கு காரணம் தான் மட்டுமே என மன சஞ்சலத்தோடு சுற்றிக் கொண்டிருக்கும் அஸ்வினிக்கு தன் காதலை புரிய வைத்து அவளோடு கைசேர்ந்தானா மாதவன் என்பது கதையில் 🥰
    துருவ்.. சாத்வி.. மகள் மகிவுடன் வாழும் இவர்கள் வாழ்வு காதலோடு ஆரம்பித்தாலும் சிறு சிறு சண்டைகளால் பிளவு பட்டு நிற்கிறார்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தங்கள் வாழ்வை எப்படி வளமாக்கி கொண்டார்கள் என்பதும் கதையில் 🥰👏 விறுவிறுப்பாகும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை வாழ்த்துக்கள் ரைட்டர்ஜி 🥰நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰👏
    Good luck dear 🥰❤️🌹

    1. Author

      Thank you so much🥰🥰🥰🥰