Loading

அத்தியாயம் 7

 

 

 

 

ஜெனனி அவனை திரும்பியும் பாராது படிகளில் இறங்கி ஓடியதும், உடனே தாமதிக்காமல் ஜன்னல் அருகில் போய் நின்றுக் கொண்டான் அவள் செல்லும் முன் அவனை பார்த்துச் சென்ற பார்வைக்கு மற்றும் அவனுக்கு அர்த்தம் புரியவில்லை..

 

அவளோடு இருந்த அந்த பத்து நிமிடமும் அவனுக்கு வாழ் நாளில் மறக்க முடியாத மலர்ந்த நினைவுகளாக அவன் மனதில் பதிந்து போன பொக்கிஷமான நிமிடங்கள் அவை,

 

காதலை அவளிடம் கூறிவிடுவான் என்று நினைத்தும் பார்த்திருக்க மாட்டான்..அவன் முன்பு புடவையில் எப்போது வந்து நின்றாளோ, அவனால் அவளை புடவையில் பார்த்ததில் இருந்து பெரிய பெண்ணாகவே தெரிந்தால் , அழகிய பாவையாக வந்து நிற்பவளிடம் காதலை கூற முடியாமல் இருக்க முடியுமா ? தயக்கமும் எதுவும் இல்லாமல் காதலையும் கூறிவிட்டானே அவன்..

 

அவன் கேட்ட கேள்விக்கு தலையை மற்றும் அசைத்திருந்தாள் அவ்வளவே, ஆனால் அவளின் கலங்கிய விழிகள் அவனை அவள் காதலிக்கிறாள் என்று உணர்த்தியது..

 

அவன் இதழில் அதனை நினைத்து புன்னகை பூத்தது.. இருவருக்கும் இடையில் உள்ள நெருக்கமும், முத்தமும் முதல் தடவை அல்லவா அவனால் அதை உணர முடிந்தது..

 

ஜன்னல் வழியே அவள் வீட்டை பார்த்தான்..கேட்டை திறந்து வந்தவள் ஏதோ ஒன்று உள்ளுணர்வு உணர்த்த அண்ணாந்து பார்த்த போது விளங்கியது..

 

சன்ஜீவ தன்னை தான் எதிர்பார்த்து காத்து கொண்டு நிற்பதை அத்தோடு அவனோடு இருந்த இணக்கமும், அவனின் காதலும் கண் முன்பே தோன்ற அவனைப் பார்த்து வெட்கச் சிரிப்பை பூத்து , கண் சிமிட்டலோடு உள்ளே ஓடிவிட்டாள்..

 

ஜெனனி உள்ளே சென்றதும் அவனுக்கு பெருமூச்சு எழுந்தது‌…அவளை விட்டு வெகு தூரம் சென்று ஆக வேண்டும்..தன் கனவு , தான் ஒரு நிலைக்கு வர வேண்டும் அதற்கு பின் ஜெனனி வீட்டிற்கு சென்றே பெண் கேட்டுவிடலாம் என்று நினைத்து இருக்க…

 

“ அவுருது பஹக் ( ஐஞ்சி வருஷம்) ” என்று சொல்லிக் கொண்டான்..பெரும் மலைத் தொடரை கடப்பது போல் இப்போதே மூச்சு முட்டியது.. இன்னும் அவள் இதழின் தித்திப்பு அவன் இதழில் இருப்பதை போன்று இருக்க..

 

“ யன் நேதுவ ஹிடியோத் ( போகாம இருந்தா என்ன ? )” என்ற எண்ணம் மனதில் உதிக்க..தலையை உலுக்கி கடிகாரத்தை பார்த்தான்..

 

அவன் வீட்டையும், ஊரையும் விட்டு செல்ல வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டு இருக்க..வீட்டின் முன் கார் நிற்கும் சத்தம் கேட்டது..“ சஜித் அய்யா அவில்லா..( சஜித் அண்ணா வந்துட்டார்) ” உதட்டை குவித்து மூச்சை வெளி விட்டதன் பிறகு மீண்டும் ஒரு முறை ஜன்னல் அருகே நிற்க..

 

“ கசாதெட யன்ட அதி..( கல்யாணத்துக்கு போய் இருப்பா ) ” வாய்விட்டு சொன்னவன் , டிராவலிங் பையை கையில் எடுத்துக் கொண்டு அறை கதவை சாற்றி விட்டு கீழே சென்றான்…

 

ருவணி தான் நின்றிருந்தார்.. குமாரசிங்க இருக்கவில்லை வேலை விஷயமாக வெளியூர் செல்லும் நிலை வந்துவிட அவனிடம் கூறி விட்டே காலையில் புறப்பட்டு இருந்தார்..

 

“ மே ஒக்கோம ஒயாட்ட புதே..( இது அவ்வளவும் உனக்கு தான் மகனே..) ” அவன் கையில் பை அடங்கிய பார்சலை கொடுத்திருந்தார் அதில் அவனுக்கு பிடித்த நொறுக்கு தீனிகள் இருந்தது ( அதிரசம் , முறுக்கு , கொக்கிஸ், கொண்டை பலகாரம், ஆஸ்மி ) ..அதனை கையில் வாங்கிக் கொண்டு உடனே அவர் காலில் விழுந்து ஆசிர்வாதத்தை வாங்கினான்..“ தெவி பிஹிடய் புதே..( கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் உனக்கு இருக்கட்டும் மகனே) ” என்றவர் அவன் கன்னத்தில் முத்தம் ஒன்றை பதித்து விலகவும்..

 

அவர் அழ ஆரம்பித்தார்..தாய் அழுததும் அவனுக்கு தான் மனம் பாரமாகிப் போனது..“ அனன்ட எபா அம்மே..( அழாதீங்க ம்மா..) ” அவரை அணைத்து ஆறுதல் படுத்தி அவரின் கண்ணீரை துடைத்து விட்டான்..“ அவுருது துனக்னே அம்மே ஏக இக்மனட யய் ( மூனு வருஷம் தானே ம்மா கெதியா போயிடும்..) ” என்றான்..

 

சஜித்தின் கார் ஒலி எழுப்பும் சத்தம் கேட்கவும்..“ பரிஸ்சமின் இன்ன அம்மே இக்மனின் மம ஒயாவ பலன்ட எனவா ஹரித..( கவனமா இருங்க ம்மா சீக்கிரமா நான் உங்கள பார்க்க வருவேன் சரியா )..” கேட்டை திறந்து தாயிடம் விடைபெற்று காரில் ஏறிக் கொண்டான்..

 

கேட்டை திறந்து வெளியே நின்றாள் ஜெனனி..வசந்தா கதவை மூடிவிட்டு இன்னும் வரவில்லை..

 

சன்ஜீவ காரில் ஏறியதும் ஜெனனியை கண்டுவிட்டான்…“ அய்யே அபி ஜெனனியத் எக்ககென யமு..அபி யன பார நே தாலா யன்ட புழுவன் நே..( அண்ணா நாங்க ஜெனனிய கூட்டிட்டு போவம்.. நாங்க போற வழி தானே இறக்கிவிட்டுட்டு போக ஏழும் தானே..) ” 

 

“ எஹம கரமு ( அப்படி செய்வம்) ” என்று சஜித் சொன்னான்..

 

“ என்ன ம்மா இவ்ளோ நேரமாவ கதவை மூடுறதுக்கு ” புருவத்தை சுருக்கி அவள் வசந்தாவிடம் கேட்க..“ பிறகு என்னடி உன்ன கூப்ட கூப்ட உனக்கு காது கேட்குதில்ல எவ்ளோ நேரத்துக்கு பிறகு வார நீ ..” கேட்டை மூடிக் கொண்டு அவர் சொல்ல..

 

“ வெளிய செல்ஃபி எடுத்துட்டு இருந்த அப்ப ருவணி ஆன்டி கண்டதும் அவங்க வீட்டுக்கு கூப்டாங்க, ஏலா எண்டு சொல்ல மனசு இல்லாம அவங்க வீட்டுக்கு போனேன் அதான் நீங்க கூப்டது எனக்கு கேட்கல்ல..” என்று சொன்னவளுக்கோ சன்ஜீவனின் நினைவும், வந்து தொலைக்க..

 

அவள் இடையில் அவன் கரம் பதித்த வேளையில் தோன்றாத குறு குறுப்பு தற்போது தோன்றி அவளை இம்சை செய்திட..அதன் இணைப்பாக அவன் முத்தமிட்டதும் நினைவு வரவும் நேரம் காலம் தெரியாமல் முகமோ வெட்கத்தில் குங்குமம் பூவாக சிவந்து போனது…

 

காரில் அமர்ந்திருந்தவன் அவளின் முக பாவனையை அவதானிக்காமல் இல்லை.. அவளின் முகத்தில் வந்து போன வெட்கத்தை நினைத்தே அவனுக்கே சிரிப்பாக இருக்க மனதிற்குள் சிரித்து கொண்டான்…

 

சஜித்தை நோக்கி “ மம கார் டிரைவ் கரன்னம் அய்யே..(நானே கார் டிரைவ் பண்றேன் அண்ணா )  ”

 

“ ஹரி பரிஸ்சமின் (சரி கவனமா ) ” தம்பிக்கு டிரைவர் சீட்டை கொடுத்ததும் அவன் பக்கத்தில் இருந்த சீட்டில் அமர்ந்து கொண்டான்..

 

காரை உயிர்ப்பித்து இருக்க மண் பாதையில் கார் சென்று ஜெனனி அருகில் நின்றது..

 

“ நடந்தா ம்மா போகணும்..” தாயிடம் கேட்ட போது “இந்த நேரத்துல ஆட்டோ இல்ல ஜெனனி..” என்க..“திரும்ப ஒரு தடவை ஆட்டோக்கு கால் பண்ணி பாருங்க ” அவளின் நச்சரிப்பு தாங்காமல் ஆட்டோவிற்கு அழைத்து பார்த்தும் தூர சவாரி சென்று இருப்பதால் வர முடியாது என்று கூறிவிட்டனர்..“ தூர ஹயர் போயிட்டாங்க எந்த ஆட்டோவும் வராது வா போவோம்..” என்றார் வசந்தா ..

 

வெயில் வேறு அதிகமாக இருக்க..நடந்து செல்ல வேண்டுமா கோபமாகவும் சலிப்பாகவும் இருந்தது அவளுக்கு..

 

அப்படி இருக்கும் போது தான் சஜித்தின் கார் அவர்கள் அருகில் நின்றதும் கார் உள்ளே இருந்த சஜித் “ ஆன்டி , ஜெனனி கார் எகே நகின்னகோ மம யன பாரேன்ம ஒயாலவ தாலா யன்னம்..( ஆன்டி‌, ஜெனனி கார்ல ஏறுங்க நான் போற வழிலயே உங்கள இறக்கி விட்டுட்டு போறேன்..) ” அவன் சொன்னதும் சரி என்று இருவரும் காரில் ஏறிக் கொண்டனர்..

 

காரை உயிர்பித்ததோடு ரேடியோவையும் போட்டிருந்தான் சன்ஜீவ..மண் பாதையில் சென்ற கார் தார் சாலையில் மிதமான வேகத்தில் செல்ல ரேடியோவில்,

 

உயிரே என் உயிரே

என்னவோ நடக்குதடி

அடடா இந்த நொடி

வாழ்வில் இனிக்குதடி

 

ஓ…. ஒரு நிமிடம்

ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே

எனதருகில் நீ இருந்தால்

தலைகால் புரியாதே….

 

நிஜம் தானே கேளடி

நினைவெல்லாம் நீயடி

நடமாடும் பூச்செடி

நீ என்னை பாரடி….

 

இந்த பாடல் ஓடிக் கொண்டிருக்கும் போது ஜெனனி பார்வை மிரர் வழியே பார்க்க..அப் பாடல் வரிகள் அவள் மனதை தாக்கி இருக்க கலங்கிய விழிகளுடன் உதடு துடிக்க அவனைப் பார்த்தாள்..

 

அவளே பார்த்திருந்தவனுக்கு அவளின் கண்கள் அவளின் நிலையை எடுத்துரைக்க பட்டென்று ரேடியோவை அணைத்து விட்டான்..

 

அந்த பாடலை கேட்டுக் கொண்டு இருந்த சஜித் “ அய் சிந்துவ நெவேத்துவே மல்லி லஸ்ஸன சிந்துவக் தன்னவத ம்ப்ச்.. ( ஏன் பாட்ட நிப்பாட்டுன தம்பி அழகான பாட்டு தெரியுமா ம்ப்ச் ) ”  சொல்லிவிட்டு ரேடியோவில் கை வைக்கும் முன் “ ரேடியோவ தான்ட எபா அய்யே மெயின் ரோட் லங்க கியாம ரேடியோவ தான்ட ( ரேடியாவ போடாதீங்க அண்ணா மெயின் ரோட்டுக்கு போனதும் ரேடியோவ போடுங்க..) ” என்று சொல்லும் தம்பியை வித்தியாசமாக நோக்கி விட்டு “ ஹரி ( சரி ) ” என்று சொன்னதும் சன்ஜீவனுக்கு மனம் நிம்மதியாக இருந்தது..

 

அவளின் கலங்கிய கண்களை பார்த்ததில் இருந்து அவசரப்பட்டு காதலை கூறி விட்டோமா என்று கூட நினைத்தான்.. ஆனால் காதலை அவளிடம் சொன்னது நல்லதுக்கு என்று நினைத்தான்…

 

அவர்கள் இறங்க வேண்டிய திருமண ஹால் வந்ததும் காரை நிறுத்தினான்..காரை திறந்து முதலில் இறங்கிய வசந்தா அதன் பின் ஜெனனி இறங்கும் போது சன்ஜீவனை ஆழமாகவும் அழுத்தமாகவும் பார்த்துவிட்டே இறங்கிக் கொண்டாள்…

 

“ பரிஸ்சமின் யன்ட புதே களுத்துற யனவா கியல அம்மா கியலா இய்யே ஏடுவத்தெக்க..மொனவ கரன்னத இகன கன்ட எபே ஒயா என்ட அவுருது துனக் யய் கியல ஏகத் அம்மா கிவ்வா..( கவனமா போங்க மகன் களுத்துறை போற எண்டு அம்மா சொல்லி நேத்து அழுதாங்க கூட..என்ன செய்றது படிக்க போகணுமே..நீங்க வர மூனு வருஷம் ஆகும் எண்டு அதுவும் அம்மா சொன்னாங்க..” என்றார் வசந்தா..

 

“ ஏகம தமய் ஆன்டி ஏனம் மம யன்னங் ஜெனனி கிஹில்லா என்னம்..( அது தான் ஆன்டி அப்ப நான் போறன்..ஜெனனி போயிட்டு வாறன் ) ” சொல்லிவிட்டு அவளைப் பார்த்து கண்களுக்குள் நிரப்பிக் கொண்டான்..

 

‘மூனு வருஷமா ? என்னட்ட சொன்னது ஐஞ்சி வருஷம் எண்டு தானே ’ குழம்பி போய் நின்றவள் தலையை அசைத்து வைக்க..“ வாய திறந்து சொல்லலாமே ஜெனனி..” அவன் தமிழில் பேச..அவனை ஆச்சிரியமாக வசந்தாவும், சஜித்தும் பார்த்தனர்..“ சுட்டய் தன்னே ( கொஞ்சம் தான் தெரியும் ) ” சிரிப்புடன் சொல்ல..

 

‘கொஞ்சம் கூட கவலை இருக்கா பாரு சிரிக்கிறத ’ மனதில் நினைத்து “ சந்தோஷமா போயிட்டு வாங்க ” முகத்தை தூக்கி வைத்து அவனுக்கு சொல்லிட்டு “ பாய் சஜித் அய்யே ( பாய் சஜித் அண்ணா ) ” என்றுவிட்டு அவனை பார்க்கமல் உள்ளே சென்று விட்டாள்…

 

ஹால் உள்ளே சென்றதும் பாடசாலையில் அவளுடன் சேர்ந்து படித்த தோழிகள் வந்ததும் அனைத்தையும் மறந்து அவர்களுடன் அந்த நாளை சந்தோஷமாக கழித்தாள்…

 

 

 

தொடரும்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்