“உன் கிட்ட ட்ரீட் கேட்டது ஒரு தப்பாடா… மூன்று மாசமா கேட்டு கேட்டு கெஞ்சி இப்ப தான் கொடுக்கிற ஆனா பரேன் கொடுமையை… இது எல்லாம் மனிசம் சாப்பிடுவானா இலையும் தழையுமா…. சரி குடிக்கவாது நல்லாத இருக்கா அதுவும் கீரை சூப் காராகுழம்புனு.. ஏன்டா” என்று பாவமாக மாதேஷ் தன் நண்பனான வெற்றியிடம் கேட்க,
” உனக்கு இதுவே அதிகம் தான்டா” என்று கையில் இருக்கும் சூப்பை குடிக்க,
“மச்சான் அட் லிஸ்ட் பீர் யாவது வாங்கி தாடா. இன்றைக்கு ட்ரீட்னு மைன்ட் செட் பண்ணிட்டேன்” என
“குடி குடியைக் கெடுக்கும்…. இது எல்லாம் தெரிஞ்சி எதுக்கு டா உடம்பை கெடுத்துகுனு… ” என
மாதேஷ் “எப்பா சாமி…. நீ ஆரம்பிக்காதடா…. எதோ மொடக்குடிகாரன் கிட்ட பேசற மாதிரி பேசு. உனக்கு ஒரு குடிகாரி மனைவியா வரனும்னு நான் சாபம் தரேன். இருந்தாலும் நீ சரியான சாமியார் டா உன் கிட்ட மாட்ட போற பொண்ணு ரொம்ப பாவம். நீயே ரொம்ப மென்மையான ஆள் உனக்கு எதுக்கு டா இந்த பொலிஸ் வேலை”
“என்னை பத்தி தெரியலைடா உனக்கு… நான் பார்த்தா சிங்கம் பாய்ந்தா புலி…. ஒடுனா சிறுத்தை” என
“அடங்குடா நாயே…. இனி உன் கிட்ட இதை பற்றி கேட்டா செருப்பாலே அடி. போஸ்டிங் டெல்லினு சொன்னியே எப்ப கிளம்ப போற”
“அடுத்த வாரம் டா. சவுத் சைட் தான் டீரை பண்ணேன். பட் அங்க கொஞ்ச மாசமா கிரைம் ரேட் அதிகமா இருக்குனு மேல் அதிகாரி சொன்னார் டா. அதான் நாட்டை திருத்த போக போறேன்” என
மாதோஷ் மனதில் ‘அதிர்ந்து கூட பேச மாட்டான். கண்ணுக்கு தெரியாத இடமும் மொழி புரியாத ஊருக்கு போறான். கடவுளே நீ தான் துணை இருக்கனும்’ என்று வேண்ட
‘நீ சொன்ன மாதிரியே ஐபிஎஸ் ஆகிட்டேன். ஆனால் பக்கத்தில் நீ இல்லையே. நான் என்ன தப்பு பண்ணேன் கூட தெரியலை. ஆனால் தண்டனை மட்டும் அனுபவிக்கிறேன். தண்டனை காலம் எப்ப தான் முடியுமோ’ என்று கையின் பிரேஸ்செடில் தொங்கும் மணியை வருடிக் கொண்டே இருந்தான் உதய வெற்றி ஐஏஎஸ்.