Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!

அத்தியாயம் – 4 ( 4.2 )

 

வல்லி பாட்டி வெட்கபடுவதை உணராமல் , அமுதன் தன் பாட்டிற்கு ஏதோ உலர , அதை கேட்டு கடுப்பான வல்லி பாட்டியும் , வந்திதாவும் ஒரு சேர அவனை காரி உமிழ்ந்தனர்.

” ஏன் டா , நானே ரொம்ப நாள் கழிச்சு ஒரு ரொமாண்டிக் சீன் பாத்ததுல , வராத வெட்கத்த வெத்தலை பாக்கு வச்சு வரவச்சிருக்கேன் , நீ என்னனா , தரைய பேக்குறேன்னு சொல்லி என்னைய கிண்டல் பண்றியா ? ” என்ற வல்லி பாட்டி அமுதன்  உயரத்திற்கு எம்பி அவன் காதை பிடித்து திருகினார்.

” ஐயோ கிழவி  , வலிக்குது , விடு கிழவி…. ” என வலியில் கத்திய அமுதன் , படாத பாடுபட்டு வல்லி பாட்டியின் பிடியிலிருந்து தன்னை விடுவித்து கொண்டான்.

” ஸ்யபா தெய்வமே , நீ இப்படி தரைய சொரண்டுனதுக்கு பேரு தான் வெட்கம்னு எனக்கு தெரியாது.” என்றவனை நம்பாத பார்வை பார்த்த வல்லி பாட்டி ” ஏன் டா , இந்த பீலா விடுற கதையெல்லாம் என் கிட்ட வேண்டாம். இவ்ளோ நேரம் நல்லா அந்த புள்ள உதட்ட கடிச்சு வச்சிட்டு வெட்கம்னா என்னன்னே தெரியாதுனு சொல்ற ? ஏன் நீ அந்த புள்ள வெட்கபட்டு பாத்ததே இல்லையா ? ” என வினவினார்.

அது வரை இவர்கள் இருவரும் அடிக்கும் லூட்டியை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த வந்திதா , இறுதியில் பாட்டி கூறியதை கேட்டு ” ஐயயோ என்னயா தீடீர்னு வண்டிய நம்ம பக்கம் திருப்புறானுங்க. சூனா பானா எப்படியாச்சும் நடுவுல பூந்து ஆட்டத்த கலைச்சி விட்டுடு , இப்படியே போனா உன் அருமை பெருமைக்கெல்லாம் பங்கம் வந்துரும் போலயே ” என்றெண்ணியவள் இருவருக்கும் நடுவில் வந்து ஏதோ கூற வருகையில் , அவளை முந்திக்கொண்ட அமுதன் , தன் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க துவங்கினான். 

” ஐயோ கிழவி இவளுக்கு வெட்கம்னா என்னன்னே தெரியாது கிழவி. அப்படி தான் காலேஜ் படிக்கும் போது ஒரு நாள் என் பிரெண்டு கதிர் இருக்கான்ல அவன் இவ பிரெண்டு கார்த்திகா கிட்ட ப்ரோபோஸ் பன்னிருக்கான் . அந்த பொண்ணும் இவன் லவ்வ அக்செப்ட் பண்ணிட்டு , வெட்கத்துல கன்னம்லாம் செவந்து போயி இந்த மெண்டல் மேதாவி முன்னாடி போய் நின்னுருக்கு. ஆனா இவ இவ … ” என்றவன் அன்று தன் மெண்டல் மேதாவி செய்த ஜாக்கி சான் ஸ்டைலை நினைத்து கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரித்தான். 

இரண்டு வருடங்களுக்கு முன் …

கண்ட நாள் முதலாய் காதல் என்பது போல் , அமுதனின் உயிர்த்தோழன் கதிர்,  கார்த்திகாவை கண்ட மறுகணமே அவள் மேல் கண்மூடி தனமான காதல் கொண்டான். அவளை கண்ட மறுநொடியே அவளிடம் தன் காதலை சொல்ல வேண்டும் என்று வானுக்கும் பூமிக்கும் குதித்தவனை , அமுதன் தான் கார்த்திகாவின் பயந்த சுபாவம் கண்டு ஒரு இரண்டு மாதங்கள் கழித்து அவளிடம் பேச சொன்னான். 

கதிரும் தன் நண்பனின் அறிவுரையில் இருந்த எதார்தத்தை புரிந்து கொண்டவன் , அவன் கூறியது போலவே ஒரு இரண்டு மாதங்கள் அமைதியாக இருந்தான். 

ஆனால் அதற்கு மேல் அவனால் அவன் பொறுமையை இழுத்து பிடிக்க முடியவில்லை , ஆதலால் ஒரு நல்ல நாள் பார்த்து , கையில் ஒரு டெடி பியருடன் கல்லூரி வந்தவன் , நேரே சென்று கார்த்திகாவிடம் ப்ரொபோஸ் செய்துவிட்டான். கார்த்திகாவும் கதிருக்காகவே காத்திருந்தவள் போல் அவளும் அவன் காதலை ஏற்றுக்கொண்டாள். 

காதல் புறாக்கள்  தம் காதல் வெற்றி அடைந்த ஆனந்தத்தில் , இச்செய்தியை  தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்ள அவரவர் உயிர்தோழகர்களை காண சென்றனர்.

கதிர் அமுதனை தேடி நூலகம் விரைந்தவன் , அவனிடம் அன்று காலையில் நடந்ததை ஒன்று விடாமல் ஒப்பித்தவன் , கார்த்திகா அவன் காதலை ஏற்றுக்கொண்டதை மகிழ்ச்சியாய் பகிர்ந்துகொண்டவன் , சந்தோஷத்தில்  தன் நண்பனை ஆரத்தழுவி கொண்டான்.

இங்கே கார்த்திகா கதிர் குடுத்த டெடி பியரை தன் கல்லூரி பையில் பத்திரப்படுத்தியவள் , தனக்கு தானே சிரித்துக்கொண்டே வந்தவளுக்கு தன் காதல் விவகாரம் தன் தந்தைக்கு தெரியவந்தால் என்ன நடக்கும் ? என்ற பயம் நெஞ்சை கவ்வ , சூரியனை கண்ட தாமரை போல் மலர்ந்திருந்த அவளது முகம் நொடிப்பொழுதில் மிமோசா பியூடிக்கா போல் சுருங்கிவிட  , அவள் கண்களோ ஏஞ்சல் நீர்விழிச்சி போல், சோடியம் குளோரைடு கலந்த உவர்நீரை தெரிக்கவிட்டு கொண்டிருந்தது.  

அப்போது தான் தன் பிரக்டிகல் கிளாஸ் முடித்து லேப் கோர்ட்டை கிழட்டி கொண்டிருந்த வந்திதாவின் கண்ணில், கலங்கிய விழிகளோடும் , கதிர் என்னும்  ரோடு சைடு ரோமியோவால் செர்ரி நிறத்தில் சிவந்திருந்த கன்னங்களோடும் , எதையோ கண்டு அரண்டவள் போல் வரும் கார்த்திகா தென்பட்டாள்.

கார்த்திகாவை அந்நிலையில் கண்ட வந்திதா , எப்பொழுதும் போல தனக்கு தானே ஒரு கணக்கு போட்டுக்கொண்டவள் விரைந்து கார்த்திகாவை நெருங்கியவள் அவள் கைகளை சற்று வன்மையாக பிடித்து தன் புறம் இழுத்தவள் , ” யாருனு சொல்லு ” என்று தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் கேட்க , கார்த்திகா அவள் இழுத்த வேகத்திலேயே தடுமாறியவள் , இறுதியாக அவள் கேட்ட கேள்வியில் ஒன்றும் புரியாமல் பதட்டத்தில் பட்டென்று அமுதன் பெயரை கூறிவிட்டாள். 

அமுதன் பெயரை கேட்ட மறுநொடி சில்லி சாஸை வெறுமனே அருந்தியவள் போல் , கார்த்திகாவை தர தரவென இழுத்துக்கொண்டு , நூலகம் விரைந்தவள் , அங்கே கதிருடன்  சிரித்துப்பேசிக்கொண்டிருந்த  அமுதனை அதே காரத்தோடு நெருங்கிய வந்திதா , யாரும் எதிர்பார்க்கா நேரத்தில் அவன் கன்னத்தில் பளாரென்று  அறைய , அமுதனின் இடது கன்னம் ரெட் வயின் நிறத்தை பூசிக்கொண்டது. 

இவ்வாறு தன் கடந்த காலத்தின் சில பக்கங்களை புரட்டிய அமுதன்,  வல்லி பாட்டியிடம் தன் காதல் தாரிகையின் வீர தீர செயல்களை பகிர்ந்துகொண்டவன் , அன்று வாங்கிய அறைக்கு இன்று தன் தேவதையிடம் அதே கன்னத்தில் வேறொன்றுக்கு ஹஸ்கி வாயிசில் பேரம் பேசிக்கொண்டிருந்தான்.

அவளும் அவன் கேட்பதின் அர்த்தம் புரிந்து , தன் உதடு குவித்து அவனுக்காய் ஒரு பறக்கும் முத்தத்தை பறக்க விட , ஆனால் என்ன செய்வது அங்கு தான் நம் நந்தி ( வேற யாரு எல்லாம் நம்ம வல்லி பாட்டி தான் ) குறுக்கே வந்துவிட்டாரே. 

  ” ஏன்டி உனக்கு எவ்ளோ கொழுப்பிருந்தா , என் அமுதன அடிச்சிருப்ப ? என்ன அவன அடிச்சா கேக்கறதுக்கு ஆள் இல்லனு நெனச்சியா ? நா இருக்கேன் என் அமுதனுக்கு … ” என்ற  வல்லி பாட்டி  வந்திதாவிடம் அமுதனுக்காய்  வரிந்து கட்டிக்கொண்டு சென்றார்.

 இத்தனை நாட்கள் வெறும் வாய் வார்த்தைக்காக  “உனக்கு நான் இருக்கேன் ” என்கிறார் என்றெண்ணிய அமுதனுக்கு , இன்று என்றோ ஓர் நாள் தன்னை அடித்ததற்காய் வந்திதாவிடம்  வல்லி பாட்டி தனக்காக பேசுகிறார் என்பது உரைக்க , அதனூடே அவன் அவரிடம் கூறும் பொய்களும் சேர்ந்து அவன் நினைவலைகளை தாக்க , அமுதனின்  மனம் குற்ற உணர்ச்சியில் இறுகிப்போனது. 

நிலைமை சற்று காரமாகவும் , காட்டமாகவும் போவதை இருவரின் இரு வேறு முக பாவனைகளை வைத்தே கண்டுக்கொண்ட வந்திதா , அவ்விடத்தை மீண்டும் தித்திப்பாக்கும் பொருட்டு , வல்லி பாட்டியை திசை திருப்பினாள். 

” ஹலோ கேடி மேடம் , என்ன வாய் ரொம்ப தான் நீளுது. ஆமா நா தான் உன் அமுதனுக்கு  கன்னத்துலையே நாலு  குடுத்தேன். அதுக்கு இப்போ என்னங்குற ? ஓஹ் நீ அந்த காட்சிய லைவ்வா பாக்கலையேன்னு பீல் பண்றியா ? சரி பரவால்ல விடு , நீ இவ்ளோ ஆச படுற , அதுக்காகவாச்சும் அந்த சீன ரீகிரேட் பண்றேன். ஹலோ மிஸ்டர் அமுதன் இந்த பக்கம் வந்து நில்லுங்க , அப்ப தான் உங்க மேல நல்லா போர்ஸா குடுக்க சரியா இருக்கும். எம்மா கேடி மேடம் தள்ளி நில்லுமா அப்புறம் அவனுக்கு குடுக்குறது தப்பி தவறி உன் மேல விழுந்துற போகுது. ” என்ற வந்திதா வல்லி பாட்டியை நோக்கி கண்ணடித்தாள்.

அதை கேட்ட வல்லி பாட்டிக்கு மூக்கிற்கு மேல் கோவம் வர , தன் மொத்த கோபத்தையும் அமுதனின் மேல் காட்ட துவங்கினார்.

” டேய் அமுதா , இங்க என்ன தான் டா நடக்குது? அவளுக்கு எவ்ளோ திமிர் இருந்தா , என் வீட்டுக்குள்ளையே வந்து என் அமுதனயே அடிப்பேன்னு சொல்லுவா ? ” 

” ஹலோ கேடி மேடம் , உங்க வீட்ல இருக்குறவன அடிக்கிறதுக்கு உங்க வீட்டுக்கு வராம , எதிர்த்த வீட்டுக்கா போக முடியும் ? ” என்ற வந்திதா , ஏதோ பெரிய காமெடி சொன்னது போல் தனக்கு தானே கைதட்டி சிரித்துக்கொள்ள , வல்லி பாட்டியோ 

” ஏன் டா அமுதா , உன் டேஸ்ட் ஏன் டா இவ்ளோ மட்டமா போச்சு ? நல்லா புடிச்சிருக்கான் பாரு …” என்று தலையில் அடித்துக்கொண்டார்.

” ச்ச ச்ச அப்படி எல்லாம் என் மெண்டல் மேதாவிய குறை சொல்லாத கிழவி, அவ எவ்ளோ பெரிய மேதாவி தெரியுமா ? எங்க யூனிவர்சிட்டி கோல்டுமேடலிஸ்ட் அவ , ஆனா என்ன கொஞ்சம் அடிக்கடி மூளை மட்டும் கழண்டு விழுந்துரும். மத்தபடி என் ஆளு சூப்பர் தான். அவ்ளோ ஏன் எங்க காம்பினேஷன் எவ்ளோ செம்மையா இருக்கும் தெரியுமா ? ” என்ற அமுதன் தன்னவளை பற்றி பெருமை பீத்திக்கொண்டே சென்றான்.

” டேய் போதும் போதும் ரொம்ப லெங்த்தா போய்கிட்டு இருக்கு , இத்தோட இந்த மேட்டர முடிச்சிடுவோம் ” என்ற வல்லி பாட்டியிடம் , ” என்னது மேட்டரா ? ” என்று அமுதன் வாயை பிளக்க , இது தான் நேரம் என்று அமுதனை நெருங்கிய வந்திதா அவன் கன்னத்தில் தன் பல்தடம் பதியும் அளவு கடித்து வைத்தவள் , அதற்கு மருந்தாய் ஓர் முத்தமும் வைத்தாள்.

வந்திதாவிடமிருந்து இதை சற்றும் எதிர்பாராத வல்லி பாட்டி அவளையே வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருக்க , அவரது மனமோ தாயில்லா பிள்ளைக்கு இன்று தாயாகவும் , தாரமாகவும் ஒரு தேவதையே கிடைத்திருப்பதை நினைத்து ஆனந்த கூத்தாடியது.

நாம் ஒன்று நினைக்க விதி ஒன்று நடத்துமாம் ….

தொடரும் ….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. அப்பாடா கவிஞ்சாவே படிக்க ஸ்டார்ட் பண்ணிட்டேன் 😌😌😌😌😌 ரியலி சூப்பரா கொண்டு போறீங்க சிரிப்புக்கு பஞ்சமில்ல🤣🤣🤣🤣🤣பாட்டி vs கேடி காம்போநல்ஔஆ இருக்கு.

      ஸ்ட்ராங்கான பேஸ் வித் சோஷியல் கன்டென்டே ஃபன்னாவும் கொண்டு போற விதம்😍😍😍😍 wow சும்மா மிரசல் தான்.

      பார்ட் பார்ட்டா கொடுக்கிறதே சேர்த்து ஒரே யூடியா கொடுத்தா இன்னும் நல்லா இருக்கும்🙃🙃🙃🙃

      இந்த பையன் ஏன் கஞ்ஜூஸா இருக்கான்னு யோசிக்க வெக்குது🤪🤪🤪🤪🤪 சிரிப்பு சிரிப்பா படிச்சுட்டே வர இடத்திலே இந்த எபிலே ட்விஸ்ட்டோட முடிச்சது ஷாக்கிங்கா இருக்கு😶😶

      1. Author

        Thank you reader ji . adhe maadhiri neenga sonnadhu polave inime single epilaye konjam perusaa poda try pandren.

    2. Nalla Thane poittu iruku theivam enna ninaka poghuthu…. Poghum pothu ipdi oru kunda potta Nan ennannu ninakirathu…. Nic ud sis

      1. Author

        Thank you so much sangu ji…
        Inime ud regular ah varum, adhuku indha pencilu guarantee…