Loading

அத்தியாயம்−5

மனோஜ்குமார், துமியிடம் துகிலனின் போட்டாவைக்கொடுத்துப்பிடித்திருக்கிறதா? என்றுக்கேட்க.

துமி ,”கண்கள் கலங்கி இதயத்தை யாரோ இரண்டாக கிழித்ததுபோல் உணர்வில்” உடைந்துப்போன சிலையாக நின்றுக்கொண்டிருந்தாள்.

மனோஜ்குமார், என்னம்மா பதிலே காணோம். “மாப்பிள்ளை போட்டாவைப்பிரித்துப்பார்க்காமல்” சிலையாக நிற்கிற. ஏய்! துமி உன்கிட்டதான் கேட்கிறேன்.

துமி, அப்பா, எனக்கு இரண்டுநாள் டைம் கொடுங்க. உங்களுக்கு நான் பதில் சொல்கிறேன். என்று, கண்களில் வடிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு, ஓடினாள் தன் ரூமிற்கு. “ரூமிற்குபோய், கதவை சாத்தி தாழிட்டவள்”.கையிலிருந்த போட்டாவை தூக்கி எறிந்துவிட்டு, பெட்டில் குப்புறப்படுத்துக்கொண்டு “விம்மி விம்மி” அழுதுக்கொண்டிருந்தாள்.

எழிலன், ஏய்! துமி லேப்டாப் எங்கடி? வெச்சனு கத்தியப்படியே!அங்குமிங்கும் “லேப்டாப்பை” தேடிக்கொண்டிருந்தான்.

புவனா, ஏன்டா? இப்ப “காலாங்காத்தாலே” கத்திக்கொண்டிருக்கிறனு தன் மகனை திட்ட.

 

எழிலன், அம்மா, லேப்டாப் காணோமா, காலேஜ்ஜில “பிராஜக்ட்” பண்ணிட்டு வர சொல்லியிருக்காங்கனு சொல்ல.

புவனா, “உங்களோடு இதே! வேலையா போய்விட்டது. அதைக்காணோம், இதைக்காணோம்னு சண்டைப்போடுவது”, இல்ல அவசரமாக தேடிக்கொண்டிருப்பதுனு புலம்பிக்கொண்டே தேடினாள். கிடைத்தப்பாடில்லை.

துமி, விம்மி, விம்மி அழுதவள். அழுகையை நிறுத்திவிட்டு, தன் போனை எடுத்து, “அகிலனுக்கு” போன் பண்ணினாள்.தன் வீட்டில் “மாப்பிள்ளைப்பார்த்த விஷயத்தை” சொல்வதற்காக.

அகிலன், போன் “லாங் ரிங்” போய் கட்டாகியது.

துமி, அகிலன் போனை எடுக்காததைக்கண்டு, வேதனையுற்று, “ஆத்திரத்தில் போனை தூக்கிப்போட்டு உடைத்தாள்”. அந்தப்போன் சின்னாப்பின்னமாக சிதறியது.

 

மருந்தாளுனர், ஹலோ! மிஸ்டர் மருந்தை வாங்கிக்கொண்டு காசு தருவதற்கு இவ்வளவு நேரமா?. உங்களுக்காகல்லாம் காத்திருக்கமுடியாது. “பணத்தை எடுத்து வைத்துவிட்டு மருந்தை வாங்கி செல்லுங்கள்னு” விரட்டிக்கொண்டிருந்தார்.

அகிலன், பிளிஸ் சார், ஒரு ஐந்து நிமிசம் பொறுத்துக்கொள்ளுங்கள் என் நண்பர்கள் வந்துவிடுவாங்க. என்னிடம் “ஆயிரம் ரூபாதான்” இருக்கு. ஐயாயிரம் ரூபா பணம் இல்லைனு “கெஞ்சிக்கூத்தாடிக்கொண்டிருந்தான்.”

மருந்தாளுனர், அகிலனின் நிலைமையைக்கண்டு “பரிதாபமாக” இருந்ததுபோல. சரிப்பா! மருந்தை வாங்கிக்கொண்டுப்போய் நர்ஸிடம் கொடுங்கள். முதலில் ஊசிப்போடட்டும். “உங்கள் நண்பர்கள் வந்ததும் காசுக்கொடுத்தால் போதும்னு மருந்தை அகிலன் கையில் கொடுக்கும்பாது”, அகிலனின் நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள்.

நண்பர்கள், அகிலா என்னாச்சுடா? “அவசரமா” எங்களை வர சொன்னனு கேட்க.

அகிலன், மச்சி மருந்து வாங்க பணம் இல்லைடா அதுதான் உங்களிடம் கேட்கலாம்னு “பரிதாபமாக” சொன்னான்.

நண்பர்கள், டேய்! உங்கக்கிட்ட இருக்கும் பணத்தையெல்லாம் அகிலனிடம் கொடுங்கடானு ஒருவன் சொல்லினான்.

ஒவ்வொருத்தரும், “ஆளுக்கு ஆயிரம் ரூபா சட்டைப்பாக்கெட்டிலிருந்து எடுத்து”, நான்காயிரம் ரூபாதான்டா இருக்கு. என்று சொல்லி அகிலனின் கையில் நான்காயிரம் ரூபாயை கொடுத்தார்கள்.

அகிலன், அதை வாங்கிக்கொண்டு தன் நண்பர்களுக்கு நன்றிக்கூறியவன். “மருந்தாளுனர் கையில் மருந்திற்கான பணத்தைக்கொடுத்துவிட்டு, மருந்தை வாங்கிட்டுப்போனவன் நர்ஸிடம் கொடுத்துவிட்டு” தன் நண்பர்களைப்பார்க்க வெளியே வந்தான்.

நண்பர்கள், அகிலன் வந்ததும் மச்சி இந்த வேலை உனக்குப்பிடிச்சிருக்காடானு கேள்விகளைக்கேட்டனர்.

அகிலன், பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் நான் இந்த வேலை செய்துதானே! ஆகனும். “என் அம்மா ஆபரேஷனுக்காக பணத்தை வாங்கி கடன்பட்டுவிட்டேனேனு” குமறிக்கொண்டிருந்தான்.

நண்பர்கள், அகிலா, நீ இந்த வேலையில் சேர்ந்திருப்பது துமிக்கு தெரியுமாடானு கேட்க.

அகிலன், இல்ல, துமி நேற்றிலிருந்து, இப்போ வரைக்கும் மெசேஜ் மேல மெசேஜ்ஜையும், போன் மேல போனும் போட்டுக்கொண்டிருக்கிறாள். நான்தான் அவள் போனை அட்டன்ட் செய்யவில்லை, “மெசேஜ்க்கும் ரிப்ளை பண்ணலை. துமிக்கு எக்காரணம் கொண்டு இவ்விஷயம்” தெரிந்திடக்கூடாதுனு தன் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

நண்பர்கள், சரி! மச்சி. துமிக்கு போன்போட்டு பேசுடா. துமி வருத்தப்படப்போறானு தன் நண்பனிடம் கூறினார்கள்.

அகிலன், தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து துமிக்குப்போட்டவன். நாட் ரீச்சப்புள்னு வந்தது. “மறுபடியும்,மறுபடியும்” போட்டான். திரும்ப திரும்ப அதே! பதிலை சொல்லியது. அகிலன், மச்சி “துமி” போன் எடுக்கமாட்டேங்குது. என்மேல் வருத்தமாக இருக்கிறாள் போல.

நண்பர்கள், சரி விடு மச்சி. துமியை நேரில் பார்த்து சமாதானம் செய்டானு “அகிலனின் தோளை தட்டிக்கொடுத்தனர்”.

டேய், பீட்டர், ரவி நேத்து சரக்கு மொத்ததையும் வித்துவிட்டிங்களானு கோச்சா கேட்க.

இல்ல, மச்சி, நேத்து காலேஜ் பசங்ககிட்ட விற்கும்போது, “ஹீரோவாக” வந்து நின்று கேள்விமேல கேள்விக்கேட்கிறான். பீட்சானு சொல்லி சமாளித்தோம். அப்புறம் காலேஜ் பசங்க அந்த ஹீரோவிடம் தகராறு செய்யப்பார்த்து நாங்கள் நழுவிட்டோம்டா.

ஜான், மச்சி நமக்கு நேரமாச்சு வாங்க நாம் கிளம்பலாம்.

நண்பர்கள் நான்குபேரும், அகிலனிடம் சொல்லிவிட்டு விடைப்பெற்றனர்.

துகிலன், தன் அண்ணன் அமுதன் கூட “கேண்டினிற்குப்புறப்பட்டான்” துமியை காணும் ஆர்வத்தில்.

பாவம் துமி இன்னைக்கு காலேஜ்க்கு வரமாட்டாள் என்று தெரியாமலே!.

தொடரும்….

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    14 Comments

    1. Oosi Pattaasu

      அகி விக்கப் போனான் ட்ரக்கு, வைக்கிற ட்விஸ்டுல படிக்கிறவங்க ஹார்ட்டெல்லாம் ஆகுது ஸ்ட்ரக்கு…

    2. Author

      அருமையான காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்!

    3. Author

      நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.

    4. Author

      நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.

    5. Author

      நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.

    6. Author

      நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.

    7. Author

      நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.

    8. Author

      நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.

    9. Author

      நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.

    10. Author

      கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

      1. jeevethamurugesan
        Author

        உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏🙏🙏🙏