2022-10-28
அம்மு இளையாள்
வாசிப்பை நிழலாய் துரத்த எண்ணி வாகாய் சிக்கிக்கொண்ட இளையாள் நான். சிறு வயதிலிருந்தே தமிழ் பேச்சு போட்டியில் அதிக ஆர்வம். பத்து பேரில் ஒருவராய் மேடை ஏறாமல், புதிது புதிதாக தலைப்பை பேசும் ஆர்வத்தில் தொடங்கியது தான் வாசிப்பு. அலாதி தேடலின் இன்ப அதிர்ச்சியாய் எழுத்தாளர் எனும் வழி கிடைக்க...... எனக்கான இடம் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன். முழுநேர காதல் கதைகளை விட சமூகம் சார்ந்த கதைகளை எழுதவே அதிக விருப்பம். கண்கள் பேசும் என்பதை விட வாசிக்கும் என்பது உண்மை. கண்கள் வழி உள்ளம் நிறைந்து மனதில் இருக்கும் சிறு கற்பனையை விண்ணைத் தொட வைக்கும் மாயசக்தி வாசிப்பு ஒன்றே. அந்த மாய சக்தியை என்னில் இருந்து காட்டும் சிறு முயற்சியில் இதுவரை... மூன்று கதைகளும், ஐந்து சிறு கதைகளும் எழுதியுள்ளேன். மேலும் இரண்டு தொடர்கதைகளை.... எழுதிக்கொண்டிருக்கிறேன்.