Loading

அத்தியாயம் 18..1

 

 ராம் அறைக்கு சென்று பார்த்தான்.. சீதா கட்டிலில் கால் மடித்து இருந்து முகத்தில் கை வைத்துக் கொண்டு ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்தாள் சீதா..

 

 

“ ஏய்..! லக்ஷ்மி ஏன்டா அழுற?.. இப்ப என்ன நடந்தது.. எதுவும் ஆகலயே..! அவனை உன்ன தொட விட்டுருவேனா?.. கொன்னுருப்பேன் அந்த நாயை.. ஆனா இப்படி ஒழுக்கம் கெட்ட பிள்ளையை பெத்தவங்களுக்கும் தண்டனை வேணும்.. அதுக்காக மட்டும்தான் அவனை உயிரோட விட்டு வச்சிட்டு வந்தேன்.. அவனை பார்க்கும் போதெல்லாம் பிள்ளையை இப்படி தப்பா வளர்த்ததுக்கு அவங்க நொந்து நொந்து கண்ணீர் வடிக்கணும்.. அதுதான் அவங்களுக்கு தண்டனை.. இனிமேல் அவனுக்கு கண் ஆப்ரேஷன் பண்ணி கூட கண் தெரிய வைக்கவே முடியாது..

 

இனி அவன் உயிர் இருந்தும் பொணத்துக்கு சமம் தான்.. இனி கை கால் செயல்படாது.. நாக்கை பிளேடால அறுத்து வச்சிருக்கேன்.. இனி பே பே தான்.. அவன் என்ன நினைக்கிறான் என்று பேசவும் முடியாது.. பார்க்கவும் முடியாது..எழுந்து அவன் தேவைகளை பூர்த்தி செய்யவும் முடியாது.. உதவிக்கு ஒரு ஆள் இருந்தாலும் அவங்களுக்கு அவனை சமாளிக்கிறது கஷ்டம் தான்.. கூடிய சீக்கிரம் இந்த வாழ்க்கையே வேணாம்னு அவனே மரணத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளணும்.. இதுதான் அவனுக்கு தண்டனை..

 

 

 நீ மூணு வருசமா ஒரு பாம்புக்கு பால் வார்த்து இருக்கடி.. அவனுக்கு எத்தனை பொண்ணுங்களோட தொடர்பு இருக்குன்னு அவனுக்கே தெரியாது.. பொண்ணுங்களை அவன் மயக்கம் அடைய வச்சு மிரட்டி தான் காரியத்தை சாதித்திருக்கிறான்.. அப்படியா பட்டவனுக்கு இந்த தண்டனை அதிகம்னு நினைக்கிறியா..” என்றான்..

 

 

 

“ அவனை என் கையால கொல்லணும் முத்து.. அவன் மட்டும் ஏர்போர்ட் பக்கத்துல இப்படி பிளான் பண்ணம வேற இடத்துக்கு என்னை கொண்டு போய் இருந்தால் அங்கேயே அவனை நானே உயிர் நாடியில மிதிச்சு கொலை பண்ணி இருப்பேன்.. இத்தனை வருஷமா கூடவே இருந்து என்னை பற்றி முழுசா தெரிஞ்சுகிட்டு என் வீக் பாயிண்ட் எதுன்னு பார்த்து அடிச்சிருக்கான்..

 

நான் எதுவும் கிரியேட் பண்ண கூடாதுன்னு அந்த இடத்தை சூஸ் பண்ணி இருக்கான்.. நம்பிக்கை துரோகி.. ஆனா உன்னையும் நான் நம்பினேன் நீயும் என்னை ஏமாத்திட்ட.. இது நடந்ததுக்கு முதல் காரணம் நீதான்.. ” என்றாள்..

 

 

“ என்னடி எப்ப பாரு நான்தான் காரணம்னு சொல்லிட்டே இருக்க.. இது சரி இல்லை சொல்லிட்டேன்..” என்றான்..

 

 

“ பின்ன நீ காரணம் இல்லையா?.. காலைல நான் உன்கிட்ட சொல்லிட்டு போனேன் தானே..! ராஜ் ஹோட்டலல்ல இன்னைக்கு ஈவ்னிங் கல்யாண பார்ட்டி கொடுக்குறேன்னு.. அப்போ நீ என்ன செஞ்சிருக்கணும் கல்யாண பார்ட்டி தனிய கொடுக்கக் கூடாது அவளுக்கு துணையா புருஷன் நாமளும் போயி அங்க இருக்கணும்னு நினைச்சு வந்திருக்கனுமா?.. இல்லையா?.. நீ அங்க வந்து இருந்தா நான் அந்த நாயை அழைச்சிட்டு போக சொல்லி இருப்பேனா?.. நீயும் நானும் மட்டும் வீட்டுக்கு வந்து இருக்கலாம்.. எனக்கு இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்திருக்காது.. அப்ப இது நடக்க யார் காரணம் நீதானே?..” என்றாள்..

 

 

“ ஏய் என்னடி.. ஏதோ கல்யாணம் முடிச்சதுல இருந்து ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்து அப்புறம் நேத்து சண்டை புடிச்ச மாதிரியும் அந்த சண்டை காரணம் காட்டி நான் உன்னை அழைச்சிட்டு போக வராத மாதிரியும் பேசுற?.. யோசிச்சு பாரு நான் இங்க வந்ததுல இருந்து உன்னை காலேஜ் அழைச்சிட்டு தான் போனேன்.. ஆனா நீ ஒவ்வொரு முறையுமே என்னை திட்டி திட்டி அனுப்பி இன்ஸல் பண்ணுவ.. சரி அது கூட பரவாயில்லை என்று பொறுத்துக்கிட்டேன்.. ஆனா என்னை பார்த்து நீ வானு ஒரு வார்த்தை கூப்பிட்டியா?.. இல்லையே யாரோ ரோட்ல போறவங்க கிட்ட தகவல் சொல்ற மாதிரி சொன்ன.. சரி நான் தலையாட்டிக்கிட்டு கேட்டுட்டு இருந்தேன்.. நீ வான்னு சொல்லி நான் வராம போயிருந்தா தான் தப்பு.. நீ நினைச்ச மாதிரி நான் வந்து அங்க அவளவு ஆட்களுக்கு முன்ன உன்கிட்ட திட்டுவாங்கி அசிங்கப்பட்டு திரும்பி வருவதற்கு எதுக்கு வம்புன்னு பேசாமல் இருந்துட்டேன்..” என்றான்..

 

 

 

“ ஓஹோ அப்படியா?.. நடிக்காதடா.. முன்ன மாதிரி நான் இப்போ உன்னை அதிகம் திட்டிகிட்டே இருக்கேனா?. இல்லையே.. நேத்து நைட்டு நான் உன்னை கட்டி பிடிச்சிட்டு தூங்கினதை பார்த்ததுக்கு அப்புறமும் உனக்கு அப்படி தோணுதா?..பதில் சொல்லுடா?..” என்றாள்.. அவளுக்கு போகப் போக அவனை பிடித்ததை அவனிடம் நேரடியாக தெரியப்படுத்த முடியாமல் இருந்தாள்..

 

காரணம் தயக்கம்.. தற்போது ஒரு சில செயல்கள் மூலம் அதை தெரியப்படுத்தினாள்.. ஆனால் அவன் அதை புரிந்து கொள்ளாமல் தன்னை இப்படி ஒரு இக்கட்டில் சிக்க வைத்து விட்டானே.. என்கிற கோபம் அதிகமாக அவளிடம் இருந்தது..

 

 

 

“ ஏய் என்னடி சொல்ற?.. அப்போ நைட் நீ தெரிஞ்சுதான் கை கால் போட்டியா?.. அப்போ நான் உனக்கு முத்தம் கொடுத்ததும் தெரிஞ்சு இருக்குமே அதை நீ சொல்லவே இல்ல..” என்றான்..

 

 

“ ஆமா அதுதான் இப்ப ரொம்ப முக்கியம்.. போடா.. நீ அங்க வராம இருந்ததை நான் எப்பவுமே மன்னிக்கவே மாட்டேன்.. என்னால நடந்ததை மறக்கவே முடியல..” என்றாள்..

 

 

 

 “ அடியேய் பொண்டாட்டி.. ஆமா யாருடி சொன்னது.. நான் அங்க வரலைன்னு.. நீங்க புக் பண்ணி இருந்த அந்த பகுதிக்கு அடுத்த பகுதியில் தான் நான் இருந்தேன்.. நீங்க பேசியது. நீங்க ஆர்டர் பண்ணி சாப்பாடு சாப்பிட்டதுனு அங்க என்ன நடந்தது என்று நான் கண்ணால பார்க்கலையே தவிர அனைத்தையும் காதால் கேட்டுட்டு தான் இருந்தேன்..” என்றான் ராம்..

 

 

“ டேய்.. என்னடா சொல்லுற?.. நீ அங்க இருந்தியா?.. அப்ப ஏன் என்னை வீட்டுக்கு அழைச்சிட்டு போக என் பக்கத்துல வரல நீ..” என்றாள்.. அவன் வந்தும் தன்னை கண்டு கொள்ளாமல் சென்றதால் தான் இப்படி நடந்து விட்டதோ என்று தான் நினைத்தாள்..

 

“ நான் ஏன் அங்க வந்தேன்.. ஏன் உன் பக்கத்துல வரல.. இப்படி உன்னோட எல்லா கேள்விக்கும் நான் தொடர்ந்து பதில் சொல்றேன்..” என்றான்..

 

 

“ எனக்கு எதுவும் தெரிஞ்சுக்க மூட் இல்ல.. இப்ப தெரிஞ்சுக்கவும் வேணாம்.. நான் உடனடியாக ஊருக்கு போகணும்.. அம்மா, மாமா, யமுனா, அத்தை எல்லாரையும் பார்த்து அவங்களோட பேசினால் மட்டும் தான் என்னால அதுல இருந்து வெளியே வர முடியும்.. இப்போதைக்கு எனக்கு இந்த சென்னை வேணாம்.. வா கிளம்பு உடனே ஊருக்கு போகலாம்..” என்றாள்..

 

 

அவள் மனம் கொஞ்சம் ஆறுதல் அடைய இந்த சென்னையில் இருந்து வெளியேறி அந்த இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை வேண்டுமென ஆசைப்பட்டாள்.. 

 

 

 

 

 

 

 

“ சரிடா காலையில் போகலாம்.. ஆனா இங்க நடந்தது வேற யாருக்கும் தெரியக்கூடாது.. நம்ம இரண்டு பேரோட போகட்டும்.. நான் கொஞ்சம் உன்கிட்ட பேசணும்டி.. மிர்ச்சி இப்ப நான் ஒன்னு கேக்குறேன் நீ அதுக்கு பதில் சொல்லு.. இப்ப அந்த கரண் பற்றிய உண்மை எல்லாம் அதாவது அவன் யார் என்று உனக்கு தெரிஞ்சிட்டு தானே..”

 

 

“ என்னடா முட்டாள் தனமாக கேள்வி கேக்குற?.. அவனால ரொம்ப கஷ்டப்பட்டு நொந்து நூலாகி வந்து இருக்கேன்.. அந்த துரோகி பேர் கூட இனி என் காதில் கேட்கக்கூடாது..” என்று கூறி விட்டு அவன் அருகில் இன்னும் நெருங்கி அமர்ந்தாள்..

 

 

 

“ அப்படியா?.. சரி இப்ப இதை படி..” என்று கூறி அவள் கையில் ஒரு பேப்பரை கொடுத்தான்..

 

 

 அதில் இருந்தவை இதுதான்..

 

‘ நான் சீதாராமன்.. சீதாலக்ஷ்மியின் கணவன் முத்துராமன்..

 

 

 லக்ஷ்மி நான் சொல்ல வர்றது என்னன்னா.. உன் தோழன் என்னும் பெயரில் இருக்கும் அந்த கரண் பச்ச பொம்பளை பொறுக்கி..

 

 

 இன்னைக்கு தான் நான் அவனை முதல் முதல் பார்த்தேன்.. ஆனா அவன் யாரு அவன் எப்படிப்பட்டவன் என்று புரிஞ்சுகிட்டேன்.. அவனோட பார்வையும் சரி உன்கிட்ட நடந்துக்கிற முறையும் சரி கொஞ்சமும் சரியில்ல.. நீ அவன் கிட்ட இருந்து ஒதுங்கி இருக்கிறது உனக்கு நல்லது..

 

 

 இவன் என்னடா நேற்று திடீர்னு தாலி கட்டிட்டு இன்னைக்கு என் பிரண்ட பத்தி தப்பா பேசுரான்னு நீ நெனச்சு எனக்கு திட்டணுமா இருந்தாலும் கீழ என் நம்பர் கொடுத்து இருக்கேன் அதுக்கு அழைத்து திட்டிக்கோ..

 

 

 நீ இதை நம்பி ஒதுங்கி இருந்தா உனக்கு எந்த செய்தாரமும் இல்லை.. நான் பொய் சொல்றேன் பொறாமைல பேசுறேன்னு நெனச்சு நீ இதை முக்கியமா எடுத்துக்காம விட்டா சேதாரம் வந்ததுக்கு அப்புறம் யோசிச்சு கவலைப்பட்டு அழுது பிரயோசனம் இல்லை..

 

 

 இப்ப நான் ஊருக்கு போக வேண்டிய கட்டாயம்.. அதனால போறேன்.. நீ தான் உன்னை பாதுகாத்துக் கொள்ளணும்..

 

 இப்படிக்கு

 முத்துராம்….’ என்று அந்த கடிதத்தில் ராம் கல்யாணத்தின் பின் சென்னைக்கு வந்த முதல் நாள் காலேஜுக்கு அழைத்து சென்று விட்டு வந்து இந்த கடிதத்தை எழுதி அவள் கண் படும்படி அந்த மேசையில் வைத்து விட்டு ஊருக்கு சென்றான்..

 

 

 சீதாவிற்கு கரணை பற்றி உண்மையை உணர்த்துவதற்காக காலமே அவள் கண்ணில் இருந்து அந்த கடிதத்தை மறைத்து வைத்திருந்தது..

 

 

 அவள் அந்த கடிதத்தை படித்து பார்த்ததும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

 

 

“ என்னடி அப்படி பார்க்கிற?. கடிதத்தை படிச்சிட்டு முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்ல.. சரி நான் இப்ப கேட்கிறேன் பதில் சொல்லு.. இந்த கடிதம் ஒருவேளை அன்னைக்கு உன் கையில கிடைச்சிருந்தா நீ என்ன பண்ணி இருப்ப?..” என்று கேட்டான் ராம்..

 

 

 அவளால் இதை நம்ப முடியவில்லை.. ஆனால் இன்று நடந்ததை பார்த்தால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை..

 

 

 

 மூன்று வருடமாக நண்பன் எனும் பெயரில் அவளுடன் சுற்றிக் கொண்டிருந்தவனை பற்றி அவளுக்கு எதுவும் தெரியவில்லை.. அவனை மட்டும் ஒரே ஆண் நண்பனாக ஏற்று முழுதாக நல்லவன் என்று நம்பி பழகினாள்..

 

 

 

 ஆனால் ஒரே பார்வையில் தன் கணவன் துரோகியை கண்டுபிடித்து விட்டான்..

 

 

 இன்று அவனால் அனுபவப்பட்டதால் உண்மை தெரிந்தது..

 

 

இல்லையென்றால் முத்து சொன்னது போல் இந்த கடிதம் அன்றே கிடைத்திருந்தால் இதை எடுத்து படித்துவிட்டு உடனடியாக அவன் கைபேசிக்கு அழைத்து வாய்க்கு வந்தபடி திட்டி சண்டை போட்டிருப்பாள்.. அது மட்டும் உறுதியாக அவளுக்கு தெரிந்தது..

 

 

“ இதுல நீங்க சொல்லி இருக்கிற மாதிரி படிச்சிட்டு உங்களை நம்பாமல் திட்டி சண்டை பிடிச்சிருப்பேன்..” என்றாள்..

 

 

 “ அதுதான் இந்த கடிதம் உன்கிட்ட கிடைக்காம அந்த மேசைக்கு கீழே போய் இருந்திருக்கு.. இவ்ளோ நாளும் இந்த அறையை சுத்தம் பண்ணியவங்க இந்த மேசைக்கு கீழே எல்லாம் சுத்தம் பண்ணலன்னு இதுல இருந்தே தெரியுது.. நானும் நெனச்சேன்.. என்ன இவ அந்த கடிதத்தை படிக்கலையோ.. கடிதம் அவளுக்கு தெரியாமல் எங்கேயோ தவறி போயிருச்சோன்னு நினைத்தேன்.. ஆனா நேத்து தான் நான் அறைய சுத்தம் பண்ணும் போது இந்த மேசைக்கு கீழே இருந்த கடிதம் வெளியே வந்துச்சு.. அப்பதான் நீ கடிதத்தை படிக்காததுக்கு காரணம் என்னன்னு தெரிந்தது..” என்றான்..

 

 

“ சரி என் மேலையும் தவறு இருக்கு.. அந்த நேரம் உங்களை எனக்கு பிடிக்காது.. அதை விட நான் அந்த துரோகி மேல நம்பிக்கை வைத்திருந்தேன்.. அப்ப அப்படி பண்ணி இருப்பேன் சரிதான்.. ஆனா உங்களுக்கு அவனை பற்றி முன்கூட்டியே தெரிஞ்சி இருந்தும் இன்னைக்கு நீங்க ஹோட்டலுக்கு வந்திருந்தும் ஏன் என்கிட்ட அப்பவே சொல்லி இதை தடுக்கல.. அதுக்கும் ஏதாவது காரணம் இருக்கா?..” என்றாள்..

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
5
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்