காதல் வெப்சைட் - கல்யாணம் முதல் காதல் வரை Archives - தூரிகை தமிழ் நாவல்கள் https://thoorigaitamilnovels.com/category/காதல்-வெப்சைட்-கல்யாணம்/ Tue, 06 Feb 2024 02:55:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.2.2 https://thoorigaitamilnovels.com/wp-content/uploads/2021/08/favicon-32x32-1.jpg காதல் வெப்சைட் - கல்யாணம் முதல் காதல் வரை Archives - தூரிகை தமிழ் நாவல்கள் https://thoorigaitamilnovels.com/category/காதல்-வெப்சைட்-கல்யாணம்/ 32 32 197060226 அத்தியாயம் – 6 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-5/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-5/#respond Tue, 06 Feb 2024 02:55:26 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-5/ அத்தியாயம் – 6: வேர் வெறுத்த பூ இவனோ? தன் மார்மீது வந்து பூந்தென்றலாய் பதிந்தவளை அதே இனங்காண முடியாத பார்வையுடன் சூர்யா.. அதாவது ருத்ரப்ரதாபன் பார்த்திருக்க, அவனிடமிருந்து பதறி விலகினாள் அக்னி. ஆனால் அவள் கரத்தைத் தன் பிடியிலிருந்து விடாத ருத்ரனோ.. “என்ன? எனக்கே ஹனி டிராப்பா? இந்தியன் கவர்மென்டுக்கு என்ன பிடிக்கறதுக்கு வேற வழியே தெரியலையா?” என்று ஒரு மாதிரியாகக் கேட்டு அவன் சத்தமாகச் சிரிக்க, அவனது

The post அத்தியாயம் – 6 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

]]>

Loading

அத்தியாயம் – 6: வேர் வெறுத்த பூ இவனோ?

தன் மார்மீது வந்து பூந்தென்றலாய் பதிந்தவளை அதே இனங்காண முடியாத பார்வையுடன் சூர்யா.. அதாவது ருத்ரப்ரதாபன் பார்த்திருக்க, அவனிடமிருந்து பதறி விலகினாள் அக்னி.

ஆனால் அவள் கரத்தைத் தன் பிடியிலிருந்து விடாத ருத்ரனோ.. “என்ன? எனக்கே ஹனி டிராப்பா? இந்தியன் கவர்மென்டுக்கு என்ன பிடிக்கறதுக்கு வேற வழியே தெரியலையா?” என்று ஒரு மாதிரியாகக் கேட்டு அவன் சத்தமாகச் சிரிக்க, அவனது கேள்வியின் அர்த்தம் புரிந்தவள் கன்னங்கள் சூடாகின.

‘என்ன பத்தி என்ன நினைச்சுட்டான் இவன்?’ என்ற கோபத்தில்.. “ஹோ? ஒரு பொண்ணு செட்யூஸ் செஞ்சா ஈஸியா மயங்கிடுவியா நீ? அவ்வளவு வீக்கானவனா நீ?” என்று அவள் இளக்காரமாகப் பேசி அனல் வீசிட, “ஏய்.. ” என்று கத்தியபடி அவள் கழுத்தை இறுகப் பற்றினான் அவன்.

அவனது விரல்களின் அழுத்தத்தில் அக்னிக்கு விழிகள் பிதுங்கிக் குரல்வளை வலியெடுக்கத் துவங்க, அவள் மூச்சுக்குப் போராட ஆரம்பித்தாள்.

அவள் அப்படி போராடுவதை விழிகளில் எந்தச் சலனமுமின்றி பார்த்திருந்தவன், சில வினாடிகளில் அவளை விடுவிக்க, அப்படியே தோய்ந்து போய்த் தரையில் மடங்கி விழுந்தவள்.. பலம்கொண்டு இருமினாள்.

அவளையே பார்த்திருந்தவன், அங்கே வந்தவனிடம், அக்னியைக் காட்டி.. “இவளை நம்ம செல்லுக்குக் கூட்டிட்டுப் போ.. இனி இங்க இருந்து இவளுக்கு விடுதலையே கிடையாது.

இவளோட வாழ்வும், சாவும் இங்க தான் இருக்கணும்!

இவ எப்படி வாழணும்னும் நான் தான முடிவு செய்யணும்.. இவ எப்போ, எப்படி சாகணும்னும் நான் தான் முடிவு செய்யணும்..” என்று சிம்மத்தின் கர்ஜனையுடன் கூற, எழுந்து நிற்க்க கூடத் திராணியற்று இருந்தவளைத் தரையில் கால்கள் தேய இழுத்துக் கொண்டு சென்றான் அவன்.

அதே சமயத்தில் அவனது மாமா அமரேந்தர் இந்த விஷயம் கேள்விப்பட்டு இங்கே வர, அப்பொழுது தான் ருத்ரனின் அந்த அடியாள், அக்னியைத் தரையோடு இழுத்துக் கொண்டு போவதைப் பார்த்து..

“ப்ரதாப்.. இந்தப் பொண்ணு?” என்று அவர் அதிர்வுடன் கேட்க, அவரைப் பார்த்துக் கோபச் சிரிப்பொன்றை உதிர்த்தவன், “இவ தான் மாமா.. இந்த ருத்ரனையே அழிக்க, தன்னந்தனியா வந்த நாகப்பாம்பு!” என்று கூற.. அவனையே இன்னமும் திகைப்புடன் பார்த்திருந்த அமரேந்தரோ..

“ப்ரதாப்.. இது வரைக்கும் இந்த மாதிரி வந்தவங்க எல்லாரும் ஆண்கள். அதனால நாம அவங்கள செல்லுக்கு அனுப்பி கொடுமை செய்ததெல்லாம் சரி தான். ஆனா இது ஒரு பொண்ணு.. இவளையும் அதே செல்லுக்கு அனுப்பறது.. எனக்குச் சரியாப்படல..” என்று கூற, அவரையே ஊன்றிப் பார்த்த ப்ரதாப்போ..

“மாமா.. நமக்கு ஆண், பெண்ணுன்ற வித்தியாசம் எல்லாம் இல்ல.. நம்ம கண் முன்னாடி நிக்கறதெல்லாம் எதிரிங்க.. எதிரிங்க மட்டும் தான்.

இந்தக் காளிஷேத்ரா, மூணு பக்கம் நிலத்தாலையும், ஒரு பக்கம் நீராலையும் சூழப்பட்ட தேசம். இங்க நம்மள தரை மார்க்கமா மட்டும் தான் அட்டாக் செய்வாங்கன்னு இல்ல.. நீர் வழியாவும் நம்மளை அட்டாக் செய்ய வருவாங்க.

அதே மாதிரி தான் மாமா.. இந்தப் பொண்ணு வெறும் தண்ணி இல்ல மாமா.. இவ சமுத்திரம்! அக்னி சமுத்திரம்!!

இவளை நாம சாதாரணமா எடை போட்டுடக் கூடாது..” என்று கூற அவனை என்ன சொல்லி மாற்றுவது என்று புரியாது திகைத்தார் அமரேந்தர்.

இந்தக் காளிக்க்ஷேத்ரா, பெண்களின் மீது கை வைத்துத் தான் இப்படியொரு நிலையில் இருக்கிறது. காலம் காலமாய் பெண்களுக்கு இழைத்த அநீதியின் காரணமாகத் தான்.. அந்தக் காளி ரூபம் கொண்ட பெண்களின் மனதில் கொழுந்துவிட்டு எறிந்த தீயின் காரணமாகத் தான், இந்த மாகாணத்தின் ஒரு புறம் கடலாடினாலும், அந்த நெருப்பு.. அதன் வெம்மை இன்னமும் தனியாமல், ஊரோடு ஒட்டாமல்.. மற்ற மக்களைப் போல.. மற்ற தேசங்களைப் போலச் சாதாரண ஒரு வாழ்க்கை வாழாது.. க்ஷண நேரமும் தீயில் தகித்துக் கொண்டிருப்பதை போன்ற ஒரு அனலை கக்கிக் கொண்டிருக்கிறது.

இப்பொழுது இவனும் அதே தவறை செய்துவிடுவானோ என்று அஞ்சினார் அவர்.

ஆனாலும் இந்தக் காளிக்ஷேத்ராவை, அந்தக் கயவர்களிடம் இருந்து மீட்ட இவனே.. அந்தப் பாவத்தை எப்படிச் செய்வான் என்றும் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டார் அமரேந்தர்.

அதே வேளையில் அதே காளிக்ஷேத்ராவின், ருத்ரனின் அரண்மனைக்கு அருகே ஒரு சாதாரணமான குடிசையில், வானையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்த அந்த வயதான பெண்மணிக்கு இந்த விஷயம் காதில் விழ, கோபத்தில் முகமெல்லாம் ரத்த நிறம் கொள்ள, புயலைப் போல எழுந்தவரின் வேகத்தில் அவரைச் சுற்றி இருந்த மக்கள் அனைவரும் திகைத்துத் தான் போயினர்.

விறுவிறுவென எழுந்தவர், நேரே ருத்ரனின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தச் சிறைச்சாலைக்குச் சென்றார்.

அவருடன் சேர்ந்து அப்பகுதி மக்கள் முழுவதுமே அவரைப் பின் தொடர்ந்தனர்.

அவர் வருவதை பார்த்ததும் சிறைச்சாலையைச் சுற்றி ருந்த காவலாளிகள் நேரே முன்னே வந்து கீழே மண்டியிட்டு அமர்ந்து அவருக்கு வணக்கத்தைத் தெரிவிக்க, அதைக் கண்டுகொள்ளாது அவர் முன்னேறினார்.

அவர் செல்லும் வழியெங்கும் அவர் கேட்காமலேயே வாசல்கள் திறக்கப்பட.. அவரது கால்கள் மூன்று அடுக்கு கொண்ட அந்தச் சிறைச்சாலையின் பாதாள அடுக்குக்குச் சென்றன!

தன் போக்கில் சென்றுகொண்டிருந்த அந்தக் கால்கள், ஒரு சிறையின் முன்பு அசையாது நிற்க, அங்கு இருந்த ஒரு காவலாளியோ அவர் முன்பு வந்து நின்று..

“இந்தப் பொண்ணு தான் அம்மா நம்மள உளவு பார்க்கறதுக்காக இந்த அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்ட பொண்ணு..” என்று கூற, உள்ளே சோர்ந்து போய் அமர்ந்திருந்தவளைக் கண்களில் ஒரு தீவிரத்துடன் பார்த்தார் அவர்.

அந்தக் காளிக்ஷேத்ராவில், ருத்ரனின் அதிகாரத்திற்கு அடுத்து, ஏன்.. அந்த ருத்ரனையே அதிகாரம் செய்யும் அளவுக்கு ஒருவர் இருக்கிறார் என்றால் அது, இவர் தான்!

அவர் தான் ஜுவாலாமுகி! ருத்ரனின் தாய்!!

இத்தனை ஆண்டுகளாகத் தன் வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்புகளால் தனது அந்த ஒற்றைக் குடிசையை விட்டு வெளியே வராதவர், இன்று இந்தப் பெண்ணுக்காகச் சிறைச்சாலைவரை வந்த செய்தி, காட்டுத் தீயைப் போல அந்தத் தேசமெங்கும் பரவியது.

முதலில் அந்த விஷயத்தை அறிந்த அமரேந்தர், அடித்துப் பிடித்து அங்கு ஓடிவர, இன்னமும் அக்னியின் சிறை வாசலில் நின்று அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.

இதை அக்னி உணர்ந்தே இருந்தாலும், இங்கு வந்து இப்படி வசமாக மாட்டிக் கொண்டதில் தன் நிலைமை என்ன என்பதை முழுதாக அறிந்து வைத்திருந்தவள், எதன் மீதும் அக்கறை செலுத்தாமல், இப்படித் தான் ஏற்று வந்த காரியத்தை முடிக்காமலேயே இப்படி மாட்டிக்கொண்டோமே?

இனி அடுத்தென்ன? மரணம் தானே? என்ற நிலைக்கு வந்திருந்தாள்.

அதே வேளையில் அங்கு அடித்துப் பிடித்து வந்த அமரேந்தர், “அக்கா..” என்று நாத் தழுதழுக்க.. உடைந்த குரலில், நிமிர்ந்து நிர்க்கவும் திராணியற்று ஜுவாலாமுகியை பரிதாபத்துடன் அழைத்தார்.

ஆம்.. ருத்ரனுக்கு, அமரேந்தர் தாய் மாமா தான்! அவனது எல்லா செயல்களிலும் தோளோடு தோள் நிற்பவர். சிறு வயதில் இருந்தே ருத்ரனின் மனதில் வீரத்தையும், தீரத்தையும் ஊற்றி வளர்த்தவர்.

அப்பேர்பட்டவர், இப்பொழுது தன் அக்காவின் முன்பு தவறு செய்து மாட்டிக் கொண்ட சிறுவனைப் போன்ற முகபாவத்துடன் சங்கடத்துடன் வந்து நிற்க, அவரைப் பார்த்துக் கண்கள், உதடுகள் எல்லாம் ஒரு கணம் அழுகையில் துடிக்க நின்றிருந்தார் ஜுவாலாமுகி.

எத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்க்கிறார் உடன் பிறந்தவனை!

மகனோடு சேர்த்து, அவரையும் இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளாக ஒதுக்கியல்லவா வைத்துவிட்டார்.?

இப்பொழுது இத்தனை ஆண்டுகள் கழித்து தன் முன் நிற்கும், தான் தூக்கி வளர்த்த தம்பியைக் கண்டு ஒரு கணம் பாசம் பொங்கினாலும்.. முன்பு தான் தடுக்கத் தடுக்க அவர் செய்த காரியங்கள் எல்லாம் கண் முன்னால் வந்து போக, ஒரு கணம் கண்களை இறுக்க மூடித் திறந்தவர், அவரது கன்னத்தில் பளாரென்று அறைந்துவிட்டு, அக்னி இருந்த சிறையை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து அதே புயல் நடையுடன் சென்றுவிட்டார்.

அவர் அங்கிருந்து சென்றுவிட்ட போதும், தன் தமக்கையிடம் அடி வாங்கியவர், அதே குனிந்த தலையுடன் நிலம் பார்த்தது ஆடாது, அசையாது நின்றிருக்க.. அங்கே அப்பொழுது தன் வேக நடையுடன் உள்ளே வந்தான் ருத்ரன்.

வந்தவன், அக்னியின் சிறைக்கு முன்பு, குனிந்த தலையுடன் உறைந்து போய் நின்றிருந்த தன் மாமாவைப் பார்த்தது, தன் நடையை ஓட்டமாக மாற்றியவன், இரண்டே எட்டில் அவரை அடைந்து.. அவர் முகத்தைப் பிடித்து நிமிர்த்தி..

“என்ன ஆச்சு மாமா?” என்று இறுகிய குரலில் அந்தச் சிறையே அதிரும் வண்ணம் கேட்க, மெல்ல நிமிர்ந்து அவனது கண்களில் தனது பார்வையைக் கூறாகப் பதித்த அமரேந்தரோ.. “அக்கா வந்திருந்தாங்க ப்ரதாபா..” என்று கூற அப்படியே மடங்கி அமர்ந்துவிட்டான் அவன்!

கீழே அமர்ந்தவன், தலையைத் தூக்கி அமரேந்தரைப் பார்த்து.. “எதுக்கு வந்தாங்க? இத்தனை வருஷமா அவங்க பெத்த பையனைப் பார்க்க வராதவங்க.. அவன் கட்டி வச்ச அத்தனை வசதியான அரண்மனைல தங்க விருப்பப்படாதவங்க.. இன்னைக்கு எதுக்கு வந்தாங்களாம்?

அதுவும் இங்க எதுக்கு வந்தாங்களாம்?

பிச்சைக்காரி மாதிரி ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்காங்க மாமா என்னோட அம்மா!

இந்த ருத்ரனோட அம்மா.. பழைய புடவை கட்டி.. ஒரு சாதாரண குடிசை வீட்டுல.. நான் கொடுக்கர் சாப்பாட்டைக் கூடச் சாப்பிட மாட்டேன்னு.. பக்கத்து வீட்டுல இருக்கறவங்க கொடுக்கற சாப்பாட்டை சாப்பிட்டுட்டு இருக்காங்க மாமா..

எதுக்கு வந்தாங்களாம்? இங்க எதுக்கு வந்தாங்களாம் இப்போ?” என்று தன் அன்னையின் மீதிருக்கும் கோபம், ஆற்றாமை, தவிப்பு, பாசம் என அனைத்தும் பெருகி யாருமற்ற பரிதவிப்பும் சேர்ந்து கொள்ள.. கர்ஜித்தான் அவன்!!

அவன் கர்ஜனையில் தானே மிரண்டு ஒரு கணம் கண்களை மூடித் திறந்த அமரேந்தரோ.. “எனக்குத் தெரியல ப்ரதாப்..

ஆனா அக்காக்கு கோபம்.. நம்ம மேல ஏற்கனவே இருந்த கோபத்தை விடவும் இன்னும் அதிகமா ஏதோ பாதிச்சிருக்கு..

ஏன்னா அவங்க இங்க சும்மா வந்துட்டுப் போகல.. அவங்க என்ன கோபமா அறைஞ்சாங்க..” என்று கூற ருத்ரன் அதிர்ந்தான்.

ஆம்.. அவனிடம் அவன் தாய் இங்கு வந்ததையோ, வந்து அமரேந்தரை அடித்ததையோ சொல்ல அச்சப்பட்ட அவனது ஆட்கள், வெறுமனே சிறைச்சாலையில் பிரச்சனை, அமரேந்தர் அங்கே இருக்கிறார் என்று மட்டும் கூறியிருக்க, ருத்ரனுக்கோ இப்பொழுது அவனது அம்மா இங்கே வந்ததும், அத்தோடு அவர் அமரேந்தரை கோபத்துடன் அறைந்துவிட்டுச் சென்றதை அறிந்ததும் பேரதிர்ச்சியை இருந்தது.

ஆனால் இம்முறை தனது கோபத்தை உள்ளுக்குள் அடக்கியவன், “ஏன்?” என்றான் ஒற்றை வார்த்தையாக!

அதற்கு அமரேந்தரோ.. “ஏன்னா.. ஏன்னா..” என்று சற்றுத் திணற, அப்பொழுது தான் அமரேந்தர் நின்றிருக்கும் அந்தச் சிறையைப் பார்த்த ருத்ரன், கண்களில் ஓர் இகழ்ச்சி பரவ..

“ஹோ?! எல்லாம் இவளுக்காகத் தானா?” என்றுவிட்டு அந்தச் சிறைக் கம்பிகளை இறுகப் பிடித்து நின்றான்.

அவன் குரலே உணர்த்தியது ருத்ரனின் மனதில் இருக்கும் வெஞ்சினத்தை!

இத்தனை நாட்கள் தன்னைக் காணாது.. தன் உழைப்பில் ஒரு பிடி சோறு கூட உண்ணாத தன் தாய், இன்று இவளுக்காக இங்கே வந்திருக்கிறார்.. என்பதில் அவன் உள்ளம் உதிர்த்த ரத்தத்தை உணர்ந்தார் அமரேந்தர்.

அதனாலேயே அவர் அஞ்சவும் செய்தார்!

அவன் உடைந்த இதயம், அவனை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பதை அவர் மிக நன்றாகவே அறிவார் அல்லவா?”

அவர் ருத்ரனைச் சமாதானப்படுத்தும் பொருட்டு ஏதோ கூறப்போக, அதே சமயத்தில் அந்தச் சிறையின் தலைமைக் காவலாளிகளில் ஒருவன் அவசரமாய் ஓடிவந்து ருத்ரனை நெருங்கினான்.

அதில் ருத்ரனின் கண்களில் ஆவேசமாய் விரிய.. “ஆஆஆஆ..” என்று வான் நோக்கிக் கத்தியவன்.. அதே ஆத்திரத்துடன் “இந்த செல்லோட சாவியைக் கொடுங்க..” என்று கேட்க, அதில் இன்னுமாய் பயந்து போன அமரேந்தரோ, “ருத்ரா.. எதுவா இருந்தாலும் கொஞ்சம் பொறுமையா பேசிக்கலாம்.. அவசரப்படாதே..” என்று அவனை நிதானத்துக்கு கொண்டு வர முயன்றார்.

ஆனால் அதைக் கேட்டும் ரௌத்திரமாய் சிரித்த ருத்ரனோ..

“மாமா.. என்னோட துரோகிகளுக்குச் சரியான பாடம் கற்பிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சுருக்கு. தடுக்காதீங்க..” என்று கூறி, அந்தச் சிறையின் சாவியை வாங்கி அதைத் திறந்தவன், உள்ளே சென்று தன் போக்கில் சுவரில் சாய்ந்து, கால்களை மடக்கி அதிலேயே முகம் புதைத்து அமர்ந்திருந்த அக்னியைக் கையைப் பிடித்து முரட்டுத் தனமாய் இழுத்துக் கொண்டு வெளியேறினான்.

    The post அத்தியாயம் – 6 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

    ]]>
    https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-5/feed/ 0 17277
    காதல் வெப்சைட் டாட் காம் – அத்தியாயம் 4 https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-4/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-4/#respond Fri, 02 Feb 2024 03:02:32 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-4/ மறுநாள் அதிகாலையிலேயே விழிப்புத் தட்டிய ஷனாயாவிற்கு உடல் அடித்துப் போட்டது போல் வலித்தது.   கண்களை மெதுவாகக் கசக்கியவாறே சுற்றும் முற்றும் நோக்க, முன்தினம் இரவு அவள் பால்கனியிலேயே தூங்கி விட்டதை உணர்ந்து தலையில் அடித்துக் கொண்டாள்.   சோம்பல் முறித்தவாறே எழ முயன்ற ஷனாயா அப்போது தான் அவளைப் போர்த்தியிருந்த போர்வையைக் கவனித்தாள்.   ‘யார் போர்த்தி விட்டு இருப்பாங்க?’ என யோசித்த ஷனாயாவின் கண் முன் ரிஷப்பின்

    The post காதல் வெப்சைட் டாட் காம் – அத்தியாயம் 4 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

    ]]>

    Loading

    மறுநாள் அதிகாலையிலேயே விழிப்புத் தட்டிய ஷனாயாவிற்கு உடல் அடித்துப் போட்டது போல் வலித்தது.

     

    கண்களை மெதுவாகக் கசக்கியவாறே சுற்றும் முற்றும் நோக்க, முன்தினம் இரவு அவள் பால்கனியிலேயே தூங்கி விட்டதை உணர்ந்து தலையில் அடித்துக் கொண்டாள்.

     

    சோம்பல் முறித்தவாறே எழ முயன்ற ஷனாயா அப்போது தான் அவளைப் போர்த்தியிருந்த போர்வையைக் கவனித்தாள்.

     

    ‘யார் போர்த்தி விட்டு இருப்பாங்க?’ என யோசித்த ஷனாயாவின் கண் முன் ரிஷப்பின் முகம் வந்து போக, இட வலமாக தலையை அசைத்தவள், “ச்சே ச்சே… அந்த சிடுமூஞ்சியா இருக்காது. அவனாவது எனக்கு நல்லது நினைக்கிறதாவது. யாருக்கு வேணும் அவன் உதவி? வேணியா தான் இருப்பா. இந்த வீட்டுலயே அவ மட்டும் தான் கொஞ்சம் நல்லவளா இருக்கா.” எனத் தன் பாட்டில் பேசிக்கொண்டே எழுந்தவள் போர்வையை எடுத்துக் கொண்டு அறையினுள் நுழைய, அதே சமயம் கொட்டாவி விட்டபடியே அறைக்குள் நுழைந்தான் ரிஷப்.

     

    இருவரின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொள்ள, இரு சோடி விழிகளும் அனலைக் கக்கத் தயாராகின.

     

    ஆனால் அறைக்கு வெளியே கேட்ட மோகனின் குரலில் தன்னிலை அடைந்த ரிஷப் போர்வையையும் தலையணையையும் கட்டிலில் வீசி விட்டு அவசரமாக குளியலறைக்குள் நுழைந்துகொள்ள, பல்லைக் கடித்தவாறு அவனை அவனை மனதில் அர்ச்சித்தாள் ஷனாயா.

     

    பால்கனியில் நின்று கீழே பார்க்கில் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த ஷனாயாவின் கைப்பேசி ஒலி எழுப்பவும் அதனை எடுத்து யார் என்று பார்க்க, வினிதா அழைத்திருந்தாள்.

     

    “சனா… ஆர் யூ ஓக்கே?” என்று தான் எடுத்ததும் கேட்டாள் வினிதா.

     

    “ஹ்ம்ம்… இந்த கேள்வியே அபாண்டமா தெரியலயா வினி? சொல்லு. என்ன விஷயமா கால் பண்ண?” எனக் கேட்டாள் ஷனாயா.

     

    வினிதா, “அது… நம்ம காலேஜ் கேங் ஃப்ரெண்ட்ஸ் உன் வெடிங் அட்டன்ட் பண்ண முடியாம போயிடுச்சுன்னு உன்ன இன்னைக்கு மீட் பண்ணணும்னு சொல்றாங்க. ட்ரீட் வேணும்னு…” எனத் தயக்கமாகக் கூற, “ஆமா… இது ஒரு வெடிங். இதுக்கு ட்ரீட் ஒன்னு தான் குறைச்சல். என்னைப் பொறுத்தவரைக்கும் கட்டாயத்துல என் கழுத்துல ஏறின தூக்குக் கயிறு இது.” என்றாள் ஷனாயா கடுப்பாக.

     

    “சனா… உனக்கும் கொஞ்சம் ரிலேக்ஸா இருக்கும்ல.” என வினிதா கூறிக் கொண்டிருக்கும் போது ஷனாயா மறுத்துப் பேச வாய் திறக்க, அதற்குள் குளித்து உடை மாற்றி வந்த ரிஷப்பைக் கண்ட ஷனாயா அவனின் முதுகை வெறித்தவாறு, “அதுவும் சரி தான். தெரியாத பேயை விட தெரிஞ்ச பிசாசே மேல் தான். இந்த நரகத்துக்குள்ள அடைஞ்சி கிடக்குறதுக்கு அது எவ்வளவோ பெட்டர். நான் வரேன்னு சொல்லு.” என்றாள்.

     

    ஷனாயாவின் பேச்சில் மனம் வலித்தாலும் ஒரு தோழியாக அவளின் மனதை நன்றாக அறிந்த வினிதா, “ஓக்கே சனா. நான் உனக்கு அட்ரஸ் அனுப்புறேன். நீ வந்துடு. அப்புறம் பார்க்கலாம். பாய்.” என அழைப்பைத் துண்டித்தாள்.

     

    ரிஷப் ஆஃபீஸ் செல்லத் தயாராகி தன் கப்போர்டைத் திறந்து ஏதோ தேடிக் கொண்டிருக்க, அறைக்குள் நுழைந்த ஷனாயா அவனை ஒரு ஆளாகக் கூட மதிக்காது அப்படி ஒருவன் அங்கே இல்லை என்பது போல் தன் சூட்கேஸில் இருந்து ஒரு உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழையப் பார்க்க, “ஏய்…” என அவளை நிறுத்தினான் ரிஷப்.

     

    ரிஷப்பின் குரலில் ஒரு நொடி தன் நடையை நிறுத்திய ஷனாயா மறு நொடியே மீண்டும் குளியலறையை நோக்கி நடக்க, “ஏய் உன்ன தான் டி.” என்றான் ரிஷப் கடுப்பாக.

     

    கோபமாக ரிஷப்பை நோக்கி வந்த ஷனாயா அவனின் முகத்தின் முன் விரல் நீட்டி, “என்ன ஏய்? நான் என்ன நீ வெச்ச வேலைக்காரியா? இல்ல உன்னோட அடிமையா? இந்த ஏய்னு பேசுறது, டி போடுறது எதுவும் என் கிட்ட வேணாம். நீ டி போட்டு பேசுறத கேட்டுட்டு சும்மா இருக்க நான் ஒன்னும் உன் பொண்டாட்டி கிடையாது.” என்றவள் தன் கழுத்தில் தொங்கிய தாலியை அவன் முன் நீட்டி, “இது வெறும் ஒரு மஞ்சள் கயிறு தான். இதை என் கழுத்துல கட்டிட்டேன்னு என் கிட்ட உரிமை எடுக்கலாம்னு நினைச்சா நடக்கிறதே வேற. முதல்ல மரியாதை முக்கியம்.” என்றாள் கோபமாக.

     

    ஷனாயாவின் பேச்சில் இவ்வளவு நேரமும் அதிர்ச்சியில் நின்றிருந்த ரிஷப் தன்னிலை அடைந்து தன் முகத்தின் முன் நீட்டியிருந்த ஷனாயாவின் கரத்தை பட்டெனத் தட்டி விட்டான்.

     

    இப்போது அதிர்வது ஷனாயாவின் முறை ஆயிற்று.

     

    “என்ன விட்டா ஓவரா தான் பேசிட்டு போற? நானும் பார்க்குறேன் பெரிய இவ ப

    மாதிரி பேசுற. இவ பெரிய உலக அழகி. நாம அப்படியே இவ கிட்ட மயங்கி இவ மேல உரிமை எடுத்துக்குறோமாம். உன்னை எல்லாம் நான் மனுஷியா கூட மதிக்கல. ஒருவேளை நான் அப்படி எல்லாம் நடந்துக்கணும்னு உனக்கு தான் ஆசை இருக்கு போல.” என்றான் ரிஷப் நக்கலாக.

     

    “யூ ப்ளேடி…” என மீண்டும் கோபமாக விரல் நீட்டி ஏதோ சொல்ல வந்த ஷனாயாவின் கரத்தை இம்முறை ரிஷப் சற்று ஆவேசமாகவே தட்டி விட, நிலை தடுமாறி கீழே விழப் போன ஷனாயா ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு ரிஷப்பை ஏகத்துக்கும் முறைத்தாள்.

     

    “சொல்லிட்டே இருக்கேன் திரும்ப திரும்ப என் முன்னாடி கை நீட்டி பேசுற. கிவ் ரெஸ்பெக்ட் அன்ட் டேக் ரெஸ்பெக்ட். இங்க பாரு. நான் ஒன்னும் உன்ன பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கல. உண்மைய சொல்லனும்னா நான் இப்போ கையாளாகத்தனத்தோட நிற்க காரணமே நீ தான். நீ மட்டும் அன்னைக்கு என் பேச்சைக் கேட்டிருந்தா இவ்வளவும் நடந்து இருக்காது. எல்லாம் விடு. இதை நல்லா மண்டைல ஏத்திக்கோ. நீ சொன்னது போல இந்த மஞ்சள் கயிறை உன் கழுத்துல கட்டிட்டேன்னு எனக்கும் உனக்கும் நடுவுல எந்த விதமான சம்பந்தமும் இல்ல. என்னைப் பொறுத்தவரை ரோட்டுல போறவனும் நீயும் ஒன்னு தான். சரி… சொல்ல வந்ததை சொல்லிடுறேன். இது என்னோட ரூம். நேத்து வந்த உனக்கு என் சம்பந்தப்பட்ட எதுவுமே சொந்தம் கிடையாது. நான் உட்பட. என் அப்பா, அம்மா இருக்குற கொஞ்சம் நாளைக்கு மட்டும் நீ இந்த ரூம யூஸ் பண்ணிக்கலாம். பட் என்னோட திங்ஸ் எதையும் என் அனுமதி இல்லாம நீ தொட கூடாது. அப்பாவும் அம்மாவும் கிளம்பினதும் நீ வேற ரூமுக்கு ஷிஃப்ட் ஆகிக்கலாம். அதுவரைக்கும் இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடு.” என்ற ரிஷப் ஷனாயாவின் பதிலைக் கூட எதிர்ப்பாராது அங்கிருந்து வெளியேறினான். 

     

    ஆத்திரத்தில் பல்லைக் கடித்த ஷனாயா, “ஆமா… பெரிய பொக்கிஷம் இவரோட திங்ஸ். நாங்க எடுத்துடுவோமாம்.” எனக் கிண்டலாகக் கூறி விட்டு ட்ரெஸ்ஸிங் டேபிள் மேல் இருந்த ரிஷப்பின் புகைப்படத்தைக் கையில் எடுத்த ஷனாயா ரிஷப்பின் மீதிருந்த கோபத்தில் அதனைத் தூக்கி கீழே போட முயன்றாள்.

     

    பின் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அதனை இருந்த இடத்திலேயே வைத்து விட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

     

    ரிஷப் அறையை விட்டு வெளியே வரும் நேரம் அவனின் பெற்றோர் அவனின் முகத்தையே நோக்கிக் கொண்டிருக்க, அதனைக் கண்டுகொள்ளாமல் வேலைக்குக் கிளம்பத் தயாரானான் ரிஷப்.

     

    “ரிஷப்… எங்க போய்ட்டு இருக்க?” எனக் கேட்டார் மோகன் அழுத்தமாக.

     

    “பார்த்தா தெரியலயா? ஆஃபீஸ் போக போறேன்.” என்றான் ரிஷப் அவரின் முகம் பார்க்காது.

     

    “நேத்து தான் கல்யாணம் ஆச்சு. ஒரு வாரமாச்சும் லீவ் போட்டுட்டு வீட்டுல இருக்காம அதுக்குள்ள ஆஃபீஸ்னு ஓடுற.” எனக் கடிந்து கொண்டார் மோகன்.

     

    பல்லைக் கடித்து தன் கோபத்தைக் கட்டுப்படுத்திய ரிஷப் மோகனின் புறம் திரும்பி, “வீட்டுல இருந்து மட்டும் என்ன பண்ண போறேன் நான்? வெட்டியா வீட்டுல உட்கார்ந்துட்டு இருக்குறதுக்கு எனக்கு வேற வேலை இல்லையா? ஏதோ ஆசைப்பட்டு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன் ஒரு வாரம் லீவ் போட.” என்றவன் பிற்பாதியை வாய்க்குள் முணுமுணுத்தான்.

     

    மோகன் கோபமாக ஏதோ கூற வாய் திறக்க, அதற்குள் இடையிட்ட மேகலா, “ரிஷப் கண்ணா. அதான் அப்பா சொல்றார்ல. ஒரு ரெண்டு மூணு நாளாச்சும் லீவ் போடுப்பா. சனாவுக்கு வேற புது இடம் இது. அவள எங்கேயாவது வெளிய கூட்டிட்டு போய் வாப்பா.” என்றார்.

     

    அதே நேரம் ஷனாயாவும் தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியே வர, மேகலாவுக்கு தலையில் அடித்துக்கொள்ளலாம் போல் இருந்தது.

     

    ரிஷப்பை ஏதாவது கூறி வழிக்குக் கொண்டு வரலாம் என்று பார்த்தால் ரிஷப்பின் மனையாளோ அவனுக்கு மேல் இருந்தாள்.

     

    நேராக ஹாலுக்கு வந்தவள், “நான் என் ஃப்ரெண்ட்ஸ மீட் பண்ண வெளிய கிளம்புறேன். வர கொஞ்சம் லேட் ஆகும்.” எனத் தகவல் கூறிய ஷனாயா யாரின் பதிலுக்கும் காத்திராமல் அங்கிருந்து வெளியேறினாள்.

     

    அதே நேரம் வாசலில் நின்றிருந்த ரிஷப்பையும் முறைக்க தவறவில்லை.

     

    ரிஷப்பும் பதிலுக்கு ஷனாயாவை முறைத்து வைக்க, மேகலா தயக்கமாக கணவனின் முகத்தை ஏறிட்டாள்.

     

    மோகனின் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்தது. 

     

    பெற்றோரை நக்கலாக ஏறிட்ட ரிஷப், “கட்டாயப்படுத்தி தாலி வேணா கட்ட வைக்கலாம். ஆனா வாழ வைக்க முடியாது.” என அழுத்தமாகக் கூறி விட்டு அவசரமாக வெளியேறினான்.

     

    _______________________________________________

     

    “எங்க வினி சனாவ இன்னும் காணோம்?”  எனக் கேட்டாள் ஷனாயாவின் கல்லூரித் தோழி மாலதி.

     

    “அது தாண்டி நானும் பார்க்குறேன். வரேன்னு தான் சொன்னா. வெய்ட் பண்ணு. வந்துடுவா.” என்ற வினிதா அக் கஃபேயின் வாயிலிலேயே பார்வையைப் பதித்தாள்.

     

    வினிதாவுடன் சேர்த்து ஷனாயாவின் கல்லூரித் தோழிகள் மூவர் அங்கு ஒன்று கூடி இருந்தனர்.

     

    “வினி… ஆர் யூ ஷியூர்? அவளுக்கு வேற இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்ல. அவளோட பாஸ்ட் தெரிஞ்சும் நாம அவள கட்டாயப்படுத்தி இருக்கக் கூடாது தான். பட் அவளுக்கும் கொஞ்சம் ஸ்ட்ரெஸ் ஃப்ரீயா இருக்கட்டும்னு தான் டி இந்த ஏற்பாடு. அது போக எங்களுக்கு அஷ்வின் பத்தி தெரியும்னு அவளுக்கு தெரியாதுல.” என்றாள் யாழினி.

     

    வினிதா, “ஐ நோ யாழ். எனக்கும் அது தான் வேணும். அந்த தருண் மட்டும் உங்க கிட்ட அஷ்வின், சனா பத்தி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி நீங்களும் உண்மை தெரியாம எங்க சனாவ தப்பா நினைச்சிடுவீங்களோன்னு தான் உங்க கிட்ட அஷ்வின பத்தி நான் சொன்னேன். இந்த விஷயம் யாருக்கு தெரியுறது சனாவுக்கு பிடிக்கல. பட் இது மூலமா அவளுக்கு கொஞ்சம் சேன்ஜா இருக்குமேன்னு தான் எல்லா உண்மையையும் நானே சொன்னேன். அதனால தான் அவளோட மனநிலை தெரிஞ்சும் நான் இந்தப் ப்ளேனுக்கு ஓக்கே சொன்னேன். நீங்க ட்ரீட் கேட்டீங்கன்னு தான் அவள வர சொல்லி இருக்கேன். வருவான்னு நினைக்கிறேன். பார்க்கலாம்.” என்றவாறு கஃபேயை சுற்றி கண்களால் அலசியவளின் பார்வை ஓரிடத்தில் நிலைக்க, கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

     

    “ஹேய் யாழ்… அது உன்னோட பாய் ஃப்ரெண்ட் கௌதம் தானே.” என வினிதா கை காட்டிய திசையில் பார்த்த‌ யாழினியின் கண்களும் குழப்பத்தில் சுருங்கின.

     

    “ஆமா வினி. கௌதம் தான். யாரோ க்ளயன்ட்ட மீட் பண்ண அவங்க பாஸ் கூட போறதா சொன்னான். இங்க வருவான்னு தெரியாது. கௌதம் கூட இருக்குறது…” என யாழினி கூறும் போதே, “சனாவோட ஹஸ்பன்ட் ரிஷப்.” என முடித்து வைத்தாள் வினிதா.

     

    அதே நேரம் ஷனாயாவும் கைப்பேசியில் பார்வையைப் பதித்தவாறு கஃபேயினுள் நுழைய, அங்கிருந்த ரிஷப்பைக் கவனிக்கவில்லை அவள்.

     

    அப்போது தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் வினிதா.

     

    “சாரி வினி. லேட் ஆகிடுச்சு. ஹாய் காய்ஸ்…” என்றவாறு வந்தமர்ந்தாள் ஷனாயா வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்.

     

    அதனை அவளின் தோழிகள் மூவரும் உணர்ந்தனர்.

     

    “சாரி டி சனா. எங்களால உன் மேரேஜுக்கு வர முடியல. நான் என் ஹஸ்பன்ட் கூட அவரோட நேட்டிவ் போயிருந்தேன். யாழ் வேற உடம்பு சரி இல்லாம இருந்தா.” என மாலதியே பேச்சை ஆரம்பிக்க, ஆமோதிப்பாகத் தலையசைத்தாள் யாழினி.

     

    பதிலுக்கு புன்னகைத்த ஷனாயா, “இட்ஸ் ஓக்கே டி.” என்பதோடு முடித்துக் கொண்டாள்.

     

    அது ஏனோ ஷனாயாவுக்கு யாரிடமும் தன் மனதில் உள்ள கவலையைக் காட்டிக் கொள்ள விருப்பம் இல்லை. எதையுமே மனதிலே போட்டு பூட்டிக் கொள்வாள். வினிதா மட்டுமே அதற்கு விதிவிலக்கு.

     

    பின் ஒரு சில வகை சிற்றுண்டிகளை ஆர்டர் செய்து விட்டு தோழிகள் மூவரும் பழைய கதைகள் பேசிக் கொண்டிருக்க, ஷனாயா மாத்திரம் வேறு ஓர் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.

     

    “சனா… சனா…” என ஷனாயாவின் தோளைப் பற்றி மாலதி உலுக்கவும் தன்னிலை அடைந்த ஷனாயா, “எ…என்ன? என்ன கேட்டீங்க?” எனக் கேட்டாள் அவசரமாக.

     

    ஷனாயாவின் மனம் ஒரு நிலையில் இல்லை என்பதைப் புரிந்துகொண்ட வினிதா ஷனாயாவை நெருங்கி, “சனா..‌ உன்னால முடியலன்னா நீ வீட்டுக்கு போ… நான் சமாளிச்சுக்குறேன்.” என்றாள் மெதுவாக.

     

    மறுப்பாக தலையசைத்த ஷனாயா முயன்று தோழிகளுடன் தன்னை ஐக்கியம் ஆக்கிக் கொண்டாள்.

     

    யாழினி வேண்டும் என்றே ரிஷப்பைப் பற்றிக் கேட்க, ஷனாயாவின் முகம் மாறியது.

     

    இருந்தும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தையில் பதிலளித்தவளால் அதற்கு மேலும் சமாளிக்க முடியவில்லை.

     

    சட்டென இருக்கையை விட்டு எழுந்த ஷனாயா, “நா…நான்… நான்… கிளம்புறேன். சாரி…” என்றவள் யாரின் பதிலுக்கும் காத்திராமல் அவசரமாக அங்கிருந்து கிளம்ப, அவளின் தோழிகளுக்கு தான் சங்கடமாக இருந்தது.

     

    “வினி… சனாவ சரி பண்றேன்னு நாம அவள இன்னும் ஹர்ட் பண்ணிட்டோமா?’ எனக் கேட்டாள் மாலதி தயக்கமாக.

     

    “ச்சே ச்சே… அப்படில்லாம் இல்ல மாலதி. அவளுக்கு உடனே எல்லாத்தையும் விட்டு வெளிய வர முடியல. அவளோட பாஸ்ட்ல இருந்து அவள் வெளிய வர முன்னாடியே கட்டாயக் கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. அதனால தான் அவளால எதையும் அக்சப்ட் பண்ணிக்க முடியல. விடுங்க. நாம தான் அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுக்கணும்.” என்ற வினிதா, “சரி டி. நானும் கிளம்புறேன். என் ஹஸ்பன்ட் கிட்ட பையன விட்டுட்டு வந்தேன். ரொம்ப நேரம் ஆகிடுச்சு. இந் நேரத்துக்கு அவன் என்னை தேடுறானா இருக்கும். பாய் கேர்ள்ஸ்.” என விடை பெற்றாள்.

     

    மாலதியும் கிளம்பி விட, யாழினிக்கோ தன் தோழியை அவ்வாறே விட மனமில்லாமல் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என முடிவெடுத்தாள்.

     

    அதே நேரம் அங்கு இன்னொரு மேசையில் அமர்ந்திருந்த ரிஷப் சில நிமிடங்களுக்கு முன் வெளிறிய முகத்துடன் கஃபேயில் இருந்து வெளியேறிய ஷனாயாவைப் பற்றித் தான் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

     

    ஷனாயா வரும் போதே அவளைக் கவனித்து விட்டான் ரிஷப்.

     

    ஷனாயாவை அங்கு எதிர்ப்பார்க்காதவன் முதலில் எரிச்சல் அடைந்து, பின் அவள் தன் தோழிகளை சந்திக்க வந்திருப்பதை அறிந்ததும் தான் அவனது எரிச்சல் மட்டுப்பட்டது.

     

    அதன் பின் அவளைக் கண்டு கொள்ளாத ரிஷப் சற்று நேரத்திலேயே முகமெல்லாம் மாறி, வெளிறி ஒரு வித பதட்டத்துடன் வெளிறிய ஷனாயாவைக் கண்டு குழப்பம் அடைந்தான்.

     

    அவளுக்கு ஏதாவது பிரச்சினையா என் யோசித்தவனுக்கு சில நொடிகளின் பின்னர் தான் அவன் ஷனாயாவைப் பற்றி எண்ணிக் கொண்டிருப்பது உரைத்தது.

     

    ‘ப்ச்… அவள் எப்படி போனா எனக்கென்ன வந்தது?’ என நினைத்தவன் அத்துடன் ஷனாயா பற்றிய யோசனையைக் கை விட்டான்.

     

    சற்று நேரத்தில் அவன் சந்திக்க வந்த க்ளையன்ட்டும் கிளம்பி விட, ரிஷப்பும் அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பினான்.

     

    ரிஷப்புடன் வந்திருந்த அவனின் பீ.ஏ கௌதமும் கிளம்பத் தயாராக, அவனருகில் வந்து நின்ற யாழினியை அவன் அங்கு சுத்தமாக எதிர்ப்பார்க்கவில்லை.

     

    “ஹேய் யாழ்… நீ இங்க என்ன பண்ணுற?” எனக் கேட்டான் கௌதம் ஆச்சர்யமாக.

     

    “அதான் என் ஃப்ரெண்ட்ஸ மீட் பண்ண போறதா சொல்லி இருந்தேனே கௌதம். இப்போ தான் எல்லாரும் கிளம்பினாங்க. சரி அதை விடு. இப்போ உன் கூட இருந்தவர் ரிஷப் தானே.” எனக் கேட்டாள் யாழினி.

     

    அவளைக் குழப்பமாக ஏறிட்ட கௌதம், “ஆமா… என்னோட பாஸ் அவரு. உனக்கு எப்படி அவரைத் தெரியும்?” எனக் கேட்டவன் யாழினி அதற்குப் பதிலளிக்கும் முன்னே, “பாவம். ரொம்ப நல்ல மனுஷன். ஒரு பொண்ண ரொம்ப டீப்பா லவ் பண்ணாரு. ஆனா என்ன நடந்துச்சுன்னே தெரியல. சடன்னா அவங்க வீட்டுல அவருக்கு வேற பொண்ணு கூட கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. இப்போ ஒரு ஆறு மாசமாவே முன்னாடி போல ஜாலியா இல்லாம நடை பிணமா சுத்திட்டு இருக்கார்.” என்றான் வருத்தமாக.

     

    “என்ன அவருக்கும் லவ் ஃபெயிலியரா?” எனக் கேட்டாள் யாழினி அதிர்ச்சியாக.

     

    “அவருக்குமான்னா என்ன அர்த்தம்? வேற யாருக்கு லவ் ஃபெயிலியர்?” எனக் கேட்டான் கௌதம் குழப்பமாக.

     

    அதில் தன் அதிர்ச்சியை விட்டு மீண்ட யாழினி, “அதெல்லாம் நான் அப்புறம் சொல்றேன். உன்னால எனக்கு ஒரு காரியம் ஆகணும்.” எனப் புதிர் போட்டாள்.

     

    _______________________________________________

     

    கஃபேயில் இருந்து வெளியே வந்த ஷனாயா தன்னை மறந்து ரிஷப்பின் வீட்டுக்கு செல்லாது அவளது பிறந்த வீடு இருந்த பக்கம் ஸ்கூட்டியை செலுத்தி இருந்தாள்.

     

    அவளின் வீட்டை நெருங்கும் போது தான் தன்னிலை மீண்டாள் ஷனாயா. 

     

    ஏனோ பெற்றோரை சந்திக்க மனமின்றி மீண்டும் ஸ்கூட்டியைத் திருப்பியவள் அவளின் வீட்டில் இருந்து சற்றுத் தூரத்தில் இருந்த பேரூந்து தரிப்பிடத்தில் தன் ஸ்கூட்டியின் வேகத்தைக் குறைத்தாள்.

     

    கலவையான நினைவுகள் நெஞ்சைத் தாக்க, ஸ்கூட்டியை ஒரு ஓரமாக நிறுத்திய ஷனாயாவின் கண்கள் அப் பேரூந்துத் தரிப்பிடத்தில் நின்றிருந்த கல்லூரிப் பெண்களைக் கண்டதும் அவளையும் அறியாமல் கலங்கின.

     

    அஷ்வின் முதல் முறை ஷனாயாவிடம் காதலைக் கூறியது முதல் பேரூந்தில் அவளுடன் பயணித்தல், அவர்களின் மௌன பாஷைகள், விழிகள் பேசும் மொழிகள் என ஒவ்வொன்றாய் நினைவு வந்து ஷனாயாவின் இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது.

     

    ஸ்கூட்டியை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு அங்கு வந்த பேரூந்தில் ஏறிய ஷனாயா எப்போதும் போல ஜன்னல் இருக்கை ஒன்றில் அமர்ந்துகொள்ள, அவளின் பார்வையோ பேரூந்தில் ஏறிய பயணிகளையே தவிப்புடன் நோக்கின.

     

    ஒரேயொரு முறை தன்னவன் தன் பார்வையில் பட்டுவிட மாட்டானா என்ற ஏக்கத்தை தாங்கி இருந்தன ஷனாயாவின் விழிகள்.

     

    ஆனால் ஷனாயாவின் எதிர்ப்பார்ப்பை பொய்யாக்கி பேரூந்து கிளம்பவும் விழிகளை மூடி ஜன்னலில் தலை சாய்த்தாள்.

     

    இமை மூடிக் கிடந்தவளின் விழிகள் கண்ணீரை சிந்த, மனமெங்கும் அஷ்வினின் நினைவு தான்.

     

    ‘ஷனு… ஷனு…’ என் அஷ்வின் காதலுடன் அழைக்கும் குரல் ஷனாயாவின் செவிகளில் கேட்டுக் கொண்டு இருந்தது.

     

    சில நிமிடங்கள் கழித்து ஷனாயா இருந்த இருக்கைக்குப் பின்னே யாரோ வந்து அமர்வதை உணர்ந்தவளுக்கு இமைகளைப் பிரித்து மீண்டும் ஒரு ஏமாற்றத்தை சந்திக்க மனம் விரும்பவில்லை.

     

    ஷனாயா விழிகளை மூடி அஷ்வினுடன் இருந்த நிமிங்களை மனக் கண்ணில் கொண்டு வந்து மகிழ, யாரோ அவளின் தோள் தொட்ட உணர்வு.

     

    பட்டென விழிகளைத் திறந்த ஷனாயாவின் இதழ்கள் புன்னகையில் மலர, கண்கள் ஆனந்தக் கண்ணீரை சிந்தின.

     

    “அஷ்வின்…” எனத் தவிப்புடன் ஷனாயா திரும்பிப் பார்க்க, அவளுக்கு பின் இருந்த இருக்கையில் முகத்தில் புன்னகையுடன் அமர்ந்திருந்த அஷ்வின் ஷனாயாவைப் பார்த்து ஒற்றைக் கண்ணடிக்க, அவளுக்கோ வார்த்தைகளுக்கே பஞ்சமாகிப் போனது.

     

    எப்போதும் போல பின் இருந்தவாறே ஷனாயாவின் இருக்கையில் கரங்களை ஊன்றி தலையை சா

    ய்த்து ஷனாயாவையே விழி எடுக்காமல் நோக்கினான் அஷ்வின்.

     

    “அஷ்வின்…” எனக் கண்ணீருடன் அஷ்வினின் முகத்தை வருடிய ஷனாயாவுக்கு இத்தனை நாட்கள் மனதில் இருந்த வலிகள் எல்லாம் எங்கோ பறந்தன.

     

      The post காதல் வெப்சைட் டாட் காம் – அத்தியாயம் 4 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

      ]]>
      https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-4/feed/ 0 17261
      அத்தியாயம் – 22 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22/#respond Wed, 31 Jan 2024 03:38:57 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22/ அத்தியாயம் – 22 ராகவை, மணி அடித்ததும், ராகவ் பதிலுக்குச் சீறுவான். அதனால் அவர்களது சண்டை இன்னும் வலுப்படுமோ என்று பயந்த மூவரும் அச்சத்துடன் அவர்களையே பார்த்திருக்க, அவர்களை ஏமாற்றும் விதமாக ராகவ்., “சாரி மணி.. நான் தான் தப்பு பண்ணிட்டேன்.. ப்ளீஸ் சாரிடி..” என்று அவளது கையைப் பிடித்து அவன் கேட்க, அவளோ.. அவன் பற்றிய கரத்தை மெதுவாக விலக்கிவிட்டு.. “தர்ஷாவை வேலையைவிட்டுத் தூக்கிட்டியா என்றாள் நிதானமாக! அதற்கு

      The post அத்தியாயம் – 22 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

      ]]>

      Loading

      அத்தியாயம் – 22

      ராகவை, மணி அடித்ததும், ராகவ் பதிலுக்குச் சீறுவான். அதனால் அவர்களது சண்டை இன்னும் வலுப்படுமோ என்று பயந்த மூவரும் அச்சத்துடன் அவர்களையே பார்த்திருக்க, அவர்களை ஏமாற்றும் விதமாக ராகவ்.,

      “சாரி மணி.. நான் தான் தப்பு பண்ணிட்டேன்.. ப்ளீஸ் சாரிடி..” என்று அவளது கையைப் பிடித்து அவன் கேட்க, அவளோ.. அவன் பற்றிய கரத்தை மெதுவாக விலக்கிவிட்டு.. “தர்ஷாவை வேலையைவிட்டுத் தூக்கிட்டியா என்றாள் நிதானமாக!

      அதற்கு ராகவோ சந்தோஷமான முகத்துடன்.. “ஹா.. ஹா.. வேலையை விட்டுத் தூக்கறதா? நான் அவளைப் போலிஸ்லயே பிடிச்சுக் கொடுத்துட்டேன்..” என்றான் குரலில் உற்சாகம் கொப்பளிக்க.

      அதைக் கேட்டுச் சற்று அதிர்ந்த மணியோ.. “ஏய்.. உனக்கு அறிவு ஏதாவது இருக்கா? வயசுப் பொண்ணு.. போலீஸ், கேஸுன்னா.. அவளோட வாழ்க்கை என்ன ஆகும்?” என்று கேட்க, பதிலுக்கு அவள் கூறிய அதே வார்த்தைகளாலேயே அவளைத் திருப்பித் தாக்கினான் ராகவ்.

      “உனக்கு அறிவு ஏதாவது இருக்கா? உன் வாழ்க்கையை கெடுக்கப் பார்த்தவளுக்காகப் பரிதாபப்படறியே.. நீ பிறந்துல இருந்தே இப்படித் தானா? இல்ல அமாவாசை, பெளர்ணமிக்கு மட்டும் இப்படி ஆகிடுவியா?” என்று கேட்க, அவனைக் கடுகடுவென முறைத்த மணியோ..

      “அப்போ அவளைப் பழிவாங்கறதுக்காகத் தான் நீ அவளை ஜெயிலுக்கு அனுப்பினயா?” என்று அவள் கேட்க, அவளது கேள்விக்குக் கோபமாய் பதிலுரைத்தான் ராகவ்.

      “அவளைப் பழிவாங்கணும்னா நான் அவளைக் கொன்னே போட்டிருப்பேன்.. நான் நியாயமா சட்டப்படி தான் தண்டிச்சேன்..” என்றான் அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டே.

      “அப்போ உனக்கு யார் தண்டனை கொடுக்கறது?” என்று மணி திருப்பிக் கேட்க, திடுக்கிட்டுத் திரும்பிய ராகவோ.. “எனக்கு எதுக்கு தண்டனை கொடுக்கணும்? ஹோ உன்ன கல்யாணம் செய்ததுக்காகவா? அதெல்லாம் உன்கூட வாழறதே தண்டனை தான்.. வேணும்னா தியாகிப் பட்டம் வேணா கொடுக்கச் சொல்லு, சந்தோஷமா வாங்கிக்கறேன்..” என்று நக்கலாக மொழிய, அவளோ நெருப்பில் சுட்ட தங்கம் போலக் கோபத்தில் சிவந்தாள்.

      “என்ன கல்யாணம் பண்ணினதுக்காக உனக்குத் தியாகிப் பட்டம் வேற கொடுக்கணுமா? மண்ணாங்கட்டி..

      என்னோட டிசைனை, கண்டவளோடதுன்னு சொல்லி அவளுக்கு காபி ரைட்ஸ் கொடுத்தியே.. அதுக்காகத் தண்டனை கொடுக்க வேணாமா?

      அதை விட, அவளை வேலைய விட்டு அனுப்புன்னு சொன்ன பிறகும் கூட, கூடவே கூட்டிகிட்டு சுத்தினியே அதுக்கு உனக்குத் தண்டனை கொடுக்க வேணாமா?

      எனக்கு இவ்வளவு மன உளைச்சல் கொடுத்தியே அதுக்கு தண்டனை கொடுக்க வேணாமா?” என்று அவள் அடுக்கிக் கொண்டே போக, அவளை இடையிட்டுத் தடுத்த ராகவோ..

      “ஆமா.. ஆமா.. இது எல்லாத்துக்கும் தண்டனை கொடுத்தே ஆகணும் தான்.. அதனால தான் உன் கூடவே வாழ்ந்து என் தண்டனையை அனுபவிச்சுக்கலாம்னு வந்தேன்..” என்று அவன் கூற, மணிக்கு அவனது பேச்சில் சிரிப்பு வந்தாலும், அதை அடக்கிக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

      இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மற்ற மூவருக்கும் அங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

      அந்த மூவரில் முழுவதாகக் குழம்பியிருந்த நித்யாவோ.. “மனோ அண்ணா.. இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு தானே? எனக்கு என்னமோ இவங்கள பார்த்தா கல்யாணம் ஆனவங்க மாதிரியே பீலிங் வரல..

      ஏதோ ரெண்டு லவ்வர்ஸ் சண்டை போடற மாதிரி சின்னப்பிள்ளைத் தனமா சண்டை போட்டுட்டு இருக்காங்க..” என்று கூற, வர்ணாவோ..

      “ஆமா.. எனக்கும் அதே தான் சார் டவுட்டு.. இப்படி பொண்டாட்டி கோபமா வீட்டை விட்டு வந்துட்டா, புருஷன் சமாதானம் தான செய்வாங்க.. இங்க அந்த விஷயத்தைப் பத்தியே பேசாம இவங்க பாட்டுக்கு மாத்தி மாத்தி குத்தம் சொல்லறேன்னு காமெடி பண்ணிட்டு இருக்காங்க..” என்று கூற, அதற்குள் ராகவ் பேச ஆரம்பித்திருந்தான்.

      “ஏய்.. இன்னொன்னு சொல்லுடி.. என்னமோ ரொம்ப நல்லவ மாதிரி இத்தனை வாய் பேசறல்ல? என்ன உண்மையாவே காதலிக்கறவளா இருந்திருந்தா இத்தனையையும் நீ என்கிட்டே நேர்லயே கேட்டுச் சண்டை பிடிச்சிருக்கணும் இல்ல? எதுக்குடி இப்படி என்ன விட்டு வந்த? என்ன விட்டுட்டு போற அளவுக்கு உனக்குத் தைரியம் இருக்குல்ல?” என்று அவன் கேட்கையில் அவனது குரல் சற்று கம்மத் தான் செய்தது.

      “உன்ன நான் ஏன் விட்டுட்டுப் போனேன்னா.. அதுக்கும் காரணம் உன் மேல இருக்கற காதல் தான்.. நீ சந்தோஷமா இருக்கணும்னு நினச்சேன்..

      ஆனாலும் உன்ன உடனடியா விடணும்னு எல்லாம் யோசிக்கல.. நான் பாட்டி வீட்டுக்குப் போய் ரெண்டு நாள் தங்கியிருந்து இந்த விஷயத்தைப் பத்தி யோசிக்கலாம்னு நினச்சேன்..

      அதுக்குள்ள அந்த மனோ எருமை என்ன எவ்வளவு கேவலமா பார்த்தான் தெரியுமா? அதனால தான் எனக்குப் புருஷனும் இல்ல.. இப்போ அண்ணனும் இல்லன்னு சோகமா நினச்சுட்டே சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் வந்தேன்.

      நைட் எல்லாம் அங்க வெயிட்டிங் ரூமில் உட்கார்ந்து தான் யோசிச்சேன். அப்போ தான் புரிஞ்சுது, தர்ஷா உன்ன வளைக்க முயற்சி செய்யறா.. ஆனா இன்னும் நீ வளையல.. ஒருவேளை நான் உன்ன விட்டுப் போய்ட்டேன்னா நீ முழுசா வளைஞ்சுடுவியோன்னு பயந்துட்டு தான் திரும்பி வரலாம்னு யோசிச்சேன்..

      ஆனா அன்னைக்கு முழுக்கவே சரியா சாப்பிடாததால நான் மயங்கிட்டேன் போலிருக்கு.

      இவங்க தான் என்ன ஹாஸ்பிடல்ல சேர்த்தாங்க..” என்று வர்ணாவைச் சுட்டிக் காண்பிக்க, அவ்ளோ நடந்ததை விளக்கமாகக் கூறினாள்.

      “நீங்கப் பேசினதை வச்சு மணி, நேத்து காலைலயே வீட்டை விட்டுக் கிளம்பிட்டாங்கன்னு தோணுது. ஆனா நான் இன்னைக்கு விடியற்காலைல தான் அவங்கள பார்த்தேன்.

      ஊருக்குப் போயிட்டு திரும்பி வந்துட்டு இருந்த நான் எதேச்சையா வெயிட்டிங் ரூம் பக்கம் பார்க்க, அங்க இவங்க தூங்கிட்டு இருந்த மாதிரி தெரிஞ்சுது. இவங்க எங்கடா இங்க? அதுவும் தனியா வந்துருக்காங்கன்னு யோசிச்சுட்டு அவங்ககிட்ட போய் அவங்க தோளைத் தோட்டா, ஆள் அப்படியே மயங்கி விழறாங்க.

      எவ்வளவு நேரம் மயக்கத்துல இருந்தாங்களோ? அங்கேயே அம்புலன்சுக்கு போன் பண்ணி, அவங்கள இங்க ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்தேன்.

      வந்துட்டு இவங்களுக்கு ட்ரிப்ஸ் போட்டு முடிக்கற வரைக்கும் என்னால வேற யோசிக்கவே முடில.. இவங்க கண் விழிச்சதுக்கு அப்பறம் தான் மனோ சாருக்கு போன் செய்தேன்..” என்று அவள் முழுதாகக் கூறி முடிக்க, மணியோ அவளை ஆச்சர்யமாய் பார்த்தாள்.

      “என்ன தெரியுமா உங்களுக்கு? நாம இதுக்கு முன்னாடி மீட் பண்ணயிருக்கோமா?” என்று அவள் கேட்க, வர்ணாவோ.. “நான் ஆபரணால வேலை செய்றேன்.. உங்க கல்யாணத்துக்கு சார் என்ன இன்வைட் செய்திருந்தார். அப்போ பார்த்ததால தான் உங்களை இவ்வளவு சீக்கிரமாகக் கண்டுபிடிக்க முடிந்தது.” என்று அவள் கூறி முடிக்க, மணியோ.. “தேங்க்ஸ்..” என்றாள் மென்மையாக.

      அவளது உணர்வைப் புரிந்துகொண்ட வர்ணாவோ.. “தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு?” என்றாள் மெல்ல அவளது கையைப் பற்றித் தட்டிக் கொடுத்தபடி.

      சந்தடி சாக்கில் தானும் பாவமன்னிப்பு பெற்றுவிடலாம் என்று எண்ணி மணியின் முன்பு மனோ வந்த நிற்க, அவனை எரித்து விடுவதை போலப் பார்த்தாள் அவள்.

      “இந்த எருமை எதுக்கு இங்க வந்தான்?” என்று அவள் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க, மனோவோ.. ” சாரி மணி.. நான் ரொம்ப தப்பா நடந்துக்கிட்டேன்.. நீ எப்பவும் சொல்லற மாதிரி நான் காம்பிளான் பாய் தான்.. இன்னும் வளரவே இல்ல..

      எனக்கு இருந்த வேற பிரச்சனைல உன்ன போட்டு வறுத்துட்டேன்.. நிஜமா நான் மனசார உன்ன அப்படி நினைக்கலடி..” என்று இறைஞ்சுதலாகக் கேட்க, இன்னமும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தான் மணி இருந்தாள்.

      அதனால் மனோவின் முகம் காற்று போன பலூனாய் தொங்கிவிட, அவனைக் காப்பற்ற ராகவ் தான் களத்தில் குதிக்க வேண்டியதாய் இருந்தது.

      “டி.. பாவம்டி.. அவனும் சின்னப் பையன் தான? அவனுக்கே வீட்டுல தனியா இருக்கோம்.. கடைய தனியா பார்த்துக்கறோம்னு ஏகப்பட்ட டென்சன்.. அதுல அவன் ஏதோ சொல்லிட்டான்னு நீ ஏன் இப்படி இருக்க?

      என்னையே மன்னிச்சுட்ட.. அவனை மன்னிக்க மாட்டியா?” என்று கேட்க, அவனை ஆச்சர்யம் கலந்த கேலிப்பார்வை பார்த்தாள் மணி.

      “ஓஹோ?! கதை அப்படிப் போகுதா? ஒரு இருபத்து நாலு மணி நேரம் நான் உங்களுக்கு நடுவுல இல்ல.. அந்த கேப்புல ரெண்டு பேரும் இப்படி சமாதானமாகிட்டீங்க!” என்று அவள் கலாய்க்க, அதற்கும் மனைவியைச் சமாதானப்படுத்தும் பொருட்டு.. “நீ தாண்டி நாங்க சண்டை போட்டதுக்கும் காரணம்.. இப்போ சமாதானமாகி ஒத்துமையா இருக்கவும் காரணம்..” என்று அவள் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினான் அவன்.

      அதைப் பார்த்து வெட்கத்துடன் திரும்பிக் கொண்ட மனோவோ.. “அடேய்.. அவளை இப்போ என் கூடத் தாண்டாச் சமாதானம் செய்து வைக்கச் சொன்னேன்.. நீ அவ கூட ஏற்கனவே சமாதானமாகிட்ட.. இப்போ நீ ஓவரா சமாதானம் செய்யறதுக்கு பார்த்துட்டு இருக்க..

      இது பப்ளிக் பிளேஸ்.. பார்த்து நடந்துக்கடா..” என்று கூற, அதில் சட்டென விலகினார்கள் மணியும், ராகவும்.

      அப்பொழுது தான் மணியின் பார்வை, எதேச்சயாக நித்யாவின் பக்கம் பாய.. “ஏய் நித்யா.. நீ இங்க என்னடி செய்யற?” என்று கேட்க, அவளைப் பார்த்தது இடுப்பில் கை வைத்த முறைத்தாள் அவள்.

      “ஏண்டி கேட்கமாட்ட.. உனக்காகப் பதறியடிச்சு ஓடி வந்தேன் பாரு.. நீ என்ன நல்லா கேள்வி கேட்ப..” என்று சற்று குறைப்படுதலோடு நித்யா கூற, மனோ தான் அவள் வந்த காரணத்தையும், அவளால் தான் தங்களுக்கு தர்ஷாவைப் பற்றிய உண்மை தெரிந்தது என்ற விவரத்தையும் கூறி முடிக்க, அவளது அண்ணனின் நிலையை எண்ணி வருந்திய மணியோ அவளது அண்ணனின் வைத்திய செலவுகளைத் தானே பார்த்துக் கொள்வதாய்க் கூற, நித்யாவோ, தோழியை ஓடிச் சென்று கட்டிக் கொண்டாள்!

      ஒரு வழியாக மணியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வரும் போது தான் ராகவுக்கு அவன் தந்தையிடமிருந்து போன் வர, இவர்களது இந்தச் சண்டை விவகாரம் அவர்களுக்குத் தெரிந்திருக்குமோ என்று சிறு திகிலுடன் அவன் அந்த அழைப்பை ஏற்றால்.. அவர் ஒரு சந்தோஷமான விஷயம் கூறத் தான் அழைத்திருந்தார்.

      இன்னும் ஒரு வாரத்தில் பாட்டி, பாலாஜி, தேவகி மூவரும் தங்களது உலகச் சுற்றுப் பயணம் முடிந்து தாய்நாடு திரும்பப் போவதாக அறிவித்தார். அதில் மூவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

      வர்ணாவையும், நித்யாவையும் அழைத்துக் கொண்டு உணவு விடுதிக்குச் சென்றவர்கள், சந்தோஷமாகப் பேசிக்கொண்டே உண்டு முடிக்க, அனைவரின் வயிறோடு, மனதும் நிறைந்தது!

      இப்படியே ஒருவாரம் ஓடியிருக்க, அன்று தான் பாட்டி, மற்றும் ராகவின் பெற்றோர் வீடு வர, வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது.

      வந்தவர்களுக்கு ஆச்சர்யமளிக்கும் விதமாக.. மணியும், ராகவும் அன்னியோன்னியமாகத் திகழ்ந்தார்கள் என்றால், அவர்கள் மயக்கம் போட்டு விழும் அளவிற்கு ராகவுக்கும், மனோவுக்குமான நட்பு இருந்தது.

      போலியாய் சற்றுத் தள்ளாடியபடியே.. “அம்மா.. நம்ம பசங்களுக்கு யாரோ சூனியம் வச்சுட்டாங்க.. இங்க பாருங்க இந்த மூணுங்களும் எப்படி ஒத்துமையா இருக்குதுங்க..” என்று பாலாஜி அவர்களைக் கேலி செய்ய, தேவகியோ..

      “ஹையோ.. போதும்.. நீங்களே அவங்க மேல கண்ணு வைக்காதீங்க..” என்று செல்லமாய் கடிந்து கொண்டார்.

      அவர்கள் வந்து சாப்பாடெல்லாம் ஆன பிறகு, ராகவும், மணியும் தங்களது சூட்கேசை எடுத்துக்கொண்டு கீழே வந்தார்கள்.

      குடும்பமே அவர்களை வியப்பாய் பார்க்க.. “என்ன பார்க்கறீங்க?” என்று கேட்ட ராகவோ, மேலும் தொடர்ந்தான்.

      “கல்யாணம் முடிஞ்சு எங்களை ஹனிமூனுக்கு அனுப்புவீங்கன்னு பார்த்தா.. நீங்க ஊர் சுத்திட்டு வரீங்க.. இப்போ இது எங்க டர்ன்..

      நாங்களும் ஒரு மாசம் ஹனி மூனுக்குப் போறோம்..” என்று கூற, அனைவருக்குமே ஏகத்துக்கும் மகிழ்ச்சி!

      “சந்தோஷமா போயிட்டு வாடா பையா..” என்று தேவகி ராகவின் முதுகைச் செல்லமாகத் தட்டிவிட்டு, மணியின் புறம் திரும்பி.. “என் அழகுப்புள்ள..” என்று கூற, சட்டென ராகவுக்கும், மனோக்கும்.. “இது அழகா? அகோரம்..” என்று அவளைக் கேலி செய்வது நினைவு வந்துவிட, அதை அடக்கிக் கொண்ட இருவரும், கண்களில் சிரிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

      அதைத் தானும் உணர்ந்த மணியோ.. “தெரியுதுடா நீங்க ரெண்டு பேரும் என்ன நினைக்கறீங்கன்னு தெரியுது.. தைரியம் இருந்தா அதை இப்போ சொல்லுங்க பார்ப்போம்..” என்று மிதப்பாகக் கூற, இருவரும் வாயில் கை வைத்துக் கொண்டு மறுப்பாகத் தலையசைக்க..” அந்தப் பயம் இருக்கணும்..” என்று பொதுவாகக் கூறிவிட்டு, மனோவின் புறமாகத் திரும்பி..

      “நாங்க டூர் முடிச்சுட்டு வர வரைக்கும் எங்க அலங்காரையும் ஒழுங்கா பார்த்துக்கணும்.. சரியா?” என்று கூற, அவனோ அதற்கு.. “உத்தரவு எஜமானி..” என்றான் கேலியாக.

      ஆனால் மணி அதோடு நிறுத்தாது..

      “அப்பறம் நீயும், பாட்டியும் இனி இங்க தான் தங்கறீங்க. இது என்னோட ஆர்டர்.. உனக்குப் பிடிக்கலைனாலும், நான் சொல்லறத்தைத் தான் நீ கேட்கணும்.. ஏன்னா.. நீ என்கூட பொறந்துத் தொலைச்சுட்ட..

      நீ கடைக்குப் போறது, வரதுன்னு இருக்கும் போது பாட்டியைத் தனியா விட்டுட்டு இருக்க முடியாது. அதுக்குன்னு பாட்டிய மட்டும் இங்க கூட்டிட்டு வந்துட்டு உன்னையும் தனியா விட முடியாது.. அதனால பாட்டியும், நீயும் இனி இங்க தான் இருக்கீங்க..

      அது என்னோட வீடுன்னா.. இது உன்னோட வீடும் தான்..” என்று பெரிய மனுஷியாய் உத்தரவு பிறப்பிக்க, அதைக் கண்ட அனைவருக்குமே வியப்பாய் இருந்தாலும்.. அவளது உத்தரவுக்கு ஆசையாகவே அடிபணிந்தார்கள்.

      இப்படிப் பேசிக்கொண்டே ராகவும், மணியும் கிளம்ப அவர்களுக்கு விடை கொடுப்பதற்காக அனைவரும் வெளியே வந்தனர்.

      ராகவும், மணியும் காரில் ஏறிக்கொள்ள, அவர்களுக்கு அனைவரும் கையசைத்து விடை கொடுக்க.. மனோவோ.. “இப்படி ஆளாளுக்கு டூர் போயிட்டு வரீங்க.. இங்க சிங்கிள் பையன் ஒருத்தன் இருக்கானே.. அவனும் பாவம்னு யாராவது நினைச்சீங்களா?” என்று பெருமூச்செறிய, பாட்டியோ அவன் தோளில் தட்டினார்.

      “சிங்கிள் பையா.. உன்ன சீக்கிரமே மிங்கிள் பண்ணறதுக்கான வேலையெல்லாம் நடந்துட்டே இருக்குடா..” என்று கூற, அவனோ.. “இல்ல.. எனக்கு நீங்கப் பார்க்கற பொண்ணெல்லாம் பிடிக்கல..” என்று கூற, அவரோ.. “இன்னும் பொண்ணு போட்டோவையே காண்பிக்கல.. அதுக்குள்ளே உனக்குப் பிடிக்கலையா?

      இதோ.. இங்கப் பாரு.. இந்தப் பொண்ணு பிடிக்கலையா? சரி விடு.. அப்போ நாங்க பொண்ணு வீட்டுல இந்தச் சம்மந்தம் செட் ஆகாதுன்னு சொல்லிடுறோம்..” என்று கூறி அவர் காண்பித்த புகைப்படம் வர்ணாவினுடையது.

      அதைப் பார்த்த மனோவின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிய, பாட்டியிடம்.. “எப்படி பாட்டி?” என்றான் தன் வியப்பை குரலிலும் காட்டி.

      அதற்குச் சென்று கொண்டிருந்த காரை பாட்டி சுட்ட, காருக்குள் இருந்து ராகவின் குரல் கேட்டது.

      “என்ஜாய் மச்சி.. நாங்க திரும்பி வரதுக்குள்ள கல்யாண தேதியை ஃபிக்ஸ் பண்ணிடு..” என்று கூற, மனோவுக்கோ என்ன கூறுவதென்றே தெரியவில்லை.

      ஆம்.. ராகவ் தான், மனோவுக்கு, வர்ணாவின் மேலிருக்கும் விருப்பம் அறிந்ததும் வர்ணாவின் பெற்றோரிடம் பேசி.. மதம், ஜாதி என்று பேசியவர்களைத் தன் பேச்சு சாமர்த்தியத்தால் வளைத்து, இங்கு அவர்கள் வீட்டிலும் பேசி இந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தான்.

      அதை உணர்ந்த மனோவுக்கு ராகவ் மீது அத்தனை மதிப்பு ஏறியது. அவன் இங்கிருந்தே, “தேங்க்ஸ் டா மச்சான்..” என்று கத்த, ராகவோ காருக்குள்ளிருந்து தன் வலக்கையை வெளியே நீட்டி வான் நோக்கி ஆட்டினான்.

      அதே சமயம் காருக்குள்ளிருந்த மணியோ.. ராகவை ஆசையாகப் பார்த்து.. “லவ் யூ டா..” என்றாள் குரல் கரகரக்க!

      அவளது ஒவ்வோர் காதல் உரைப்புக்கும் ராகவ் மொத்தமாய் நெகிழ்வான் தான்.

      அதிலும் இப்பொழுது தனவளுடனான தனிமைப் பயணம் மேற்கொள்ளப் போகிறோம். அந்த நிலையில் இப்படித் தோள் சாய்ந்து கண்களில் மயக்கத்துடன் தன்னவள் காதல் உரைக்கும் பொழுது முழு மொத்தமாய் சரணாகதி அடைந்தவன்.. “லவ் யு டி பொண்டாட்டி..” என்று கூறி அவள் இதழில் தன் வல்லின இதழால் மெல்லினம் படித்தான்!

      சுபம்!

        The post அத்தியாயம் – 22 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

        ]]>
        https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22/feed/ 0 17248
        அத்தியாயம் – 20 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-2/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-2/#respond Tue, 30 Jan 2024 17:51:56 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-2/ அத்தியாயம் – 20 “உன்ன ரீபிலேஸ் செய்யத் தான் நான் இங்கே வந்திருக்கேன்..” என்று தர்ஷா கூறியது தான் தாமதம், “வாட் நான்சென்ஸ்?” என்று வெகுண்டு தனது இருக்கையில் இருந்து எழுந்தேவிட்டாள் மணி. அதைக் கண்டு சத்தமாகச் சிரித்த ராகவ்.. “அடியேய்.. இப்போ எதுக்கு இவ்வளவு டென்சன் ஆகற? அவ நீ செய்யற ஜூவல்லரி டிசைனிங் வேலைக்குத் தான் வந்திருக்கா..” என்று கூற, இதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலவில்லை மணியால்.

        The post அத்தியாயம் – 20 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

        ]]>

        Loading

        அத்தியாயம் – 20

        “உன்ன ரீபிலேஸ் செய்யத் தான் நான் இங்கே வந்திருக்கேன்..” என்று தர்ஷா கூறியது தான் தாமதம், “வாட் நான்சென்ஸ்?” என்று வெகுண்டு தனது இருக்கையில் இருந்து எழுந்தேவிட்டாள் மணி.

        அதைக் கண்டு சத்தமாகச் சிரித்த ராகவ்.. “அடியேய்.. இப்போ எதுக்கு இவ்வளவு டென்சன் ஆகற? அவ நீ செய்யற ஜூவல்லரி டிசைனிங் வேலைக்குத் தான் வந்திருக்கா..” என்று கூற, இதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலவில்லை மணியால்.

        “இப்போ என்ன அவசியம் அதுக்கு?” என்று அவள் முறைப்புடனே கேட்க, ராகவுக்குப் பதில், தர்ஷா பதில் கூறினாள்.

        “என்ன செய்யறது அழகு? உனக்கு வீட்டுலையும் வேலை, இங்கயும் வேலை.. அதனால தான் உனக்கு எல்லாத்துலயும் கூட மாட ஒத்தாசையா நான் இருந்தா, அது சாருக்கும் வசதி தானேன்னு என்ன வேலைக்கு வரச் சொன்னார்.” என்று இரு பொருள்படக் கூற, அது ராகவுக்குப் புரிந்ததோ இல்லையோ, மணிக்கு மிகவும் தெளிவாகப் புரிந்தது.

        ஆனால் அந்த நேரத்தில் தான் ஏதாவது பதில் கூறினால், வேண்டுமென்றே தர்ஷாவின் பேச்சை குதர்க்கமாக எடுத்துக் கொண்டு சண்டை பிடிக்கும் சந்தேகம் பிடித்தவள் என்ற பட்டம் தான் வருமே தவிர, இதனால் உருப்படியாக எதுவும் நடந்துவிடாது என்று கருதியவள், அப்போதைக்கு எதுவும் பேசாது அமைதியானாள்.

        ஆனால் அந்த அமைதியெல்லாம் வெறும் வெளிபபார்வைக்கு மட்டும் தான். உள்ளுக்குள் அணு உலையாக கொதித்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.

        ஒவ்வொரு நாளும் ராகவுக்கும், தர்ஷாவுக்கும் நெருக்கம் அதிகமாவைப் போலத் தோன்ற அதைச் சகித்துக்கொள்ளவே இயலவில்லை அவளால்.

        தயக்கத்தை உடைத்து ராகவிடம் கேட்கவும் முடியவில்லை. அவளது ஒரு மனம் ராகவ் தப்பானவன் அல்ல.. அவனை சந்தேகப்படாதே என்று எச்சரிப்பதால், தான் இப்படி அவனைச் சந்தேகித்துக் கேட்பதால், நேர்மையாளனான அவன் மனம் புண்படுமே என்று எண்ணி தன்னையே கேவலமாய் நினைத்துக் கொண்டது.

        ஆனால் அதே சமயம் அவளது மற்றொரு மனமோ.. “உன் முன்னாடியே இவ்வளவு கூத்தடிக்கறாங்கன்னா.. உன் கண்ணுக்கு மறைவா இன்னும் என்னவெல்லாம் செய்வாங்க?

        உனக்குத் துணையா இருக்கட்டுமேன்னு உன் ப்ரண்ட கூப்பிடணும்னா முதல்ல உன்கிட்ட தான சொல்லியிருக்கணும்? எதுக்காக உன்கிட்ட ஒரு வார்த்தை கூடக் கேட்காம அவன் தர்ஷாவை வேலைக்கு வரச் சொல்லணும்?” என்று ஓத, மணியின் ஆழ்மனமோ.. “ஆமா.. ஆமா.. அவன் தான சொன்னானே.. கல்யாணத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்திருந்தாலும், கல்யாணம்னு பேச்செடுத்ததும் என் முகம் தான் நினைவு வந்துச்சுன்னு..

        அப்போ கல்யாணத்துக்கு முன்னாடி ஊர் சுத்த அவ, காசு.. பணத்தோட கல்யாணம் செய்ய நான்?

        இப்போ விட்டுட்டுப் போனவ திரும்பி வரவும் மறுபடியும் அவனுக்கு சபலம் தட்டுது..” என்று எண்ணி எண்ணி தன்னையே காயப்படுத்திக் கொண்டாள் அவள்.

        தன் மனதுக்குள் கொண்ட இந்த சந்தேகத்தால் தன்னையும் வருத்திக் கொண்டு, ராகவிடம் எதையும் வெளிப்படையாகப் பேசாது அவனிடமும் முகம் திருப்பினாள்.

        முதலில் அவளது முகம் திருப்புதலை ராகவ் கவனிக்கக் கூட இல்லை. ஆனால் சில நாட்களிலேயே கண்டுகொண்டவனுக்கு.. மீண்டும் என்ன? என்று ஒரு சலிப்பே பரவியது.

        அதிலும் கண்காட்சிக்கான நாட்கள் நெருங்கிவிட்ட இந்த நிலையில் அவனுக்கு கடையிலும் வேலைகள் அதிகம் இருக்க, இங்கு மணிக்கு இப்பொழுது என்ன புதிய பிரச்சனை என்றும் புரியாத நிலையில் மண்டை காய்ந்தது அவனுக்கு.

        அதில் ஒருநாள் வெடித்தே விட்டான் அவளிடம்!

        “உன் மண்டைக்குள்ள அப்படி என்ன கருமத்தைத் தான் யோசிச்சுட்டு இருக்க? ஒரு மனுஷன் எத்தனை முறை உன் கால்ல விழுந்து கேட்கணும் மணி? இன்னும் எவ்வளவு நாள் தான் இப்படி மெச்சூரிட்டி இல்லாமலேயே இருக்கப் போற நீ?

        மனுஷன வதைக்காம உன்னோட பிரச்சனை என்னனு மட்டும் என்கிட்டே சொல்லு..” என்று அவன் கத்திய பிறகு தான் ஒருவாறாக வாயைத் திறந்தாள் அவள்.

        “யாரைக் கேட்டு நீ தர்ஷாவை வேலைக்கு சேர்த்த?” என்று அவள் வெறித்த பார்வையுடன் கேட்க, ராகவுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை.

        “வ்.. வாட்? இதுல தர்ஷாக்கும், நமக்கும் என்ன சம்மந்தம்? நீ இப்படி மூஞ்சியைத் தூக்கி வச்சுட்டு இருக்கறதுக்கும்.. தர்ஷாவுக்கும் என்னடி சம்மந்தம்?” என்றான் அவன் ஒன்றுமே புரியாத விரக்தியில்!

        “அவளை வேலைய விட்டு துரத்து.. அப்போ தான் நான் நார்மல் ஆவேன்..” என்று அவள் கூறிய விதத்தில் ராகவின் கோபம் கரையைக் கடந்தது! அவள் பேசுவதின் அர்த்தமும் புரிந்தது!

        “இங்கப் பாரு மணி.. உன் மண்டைக்குள்ள இருக்கற சாக்கடையெல்லாம் வெளில தூக்கி வீசறது தான் உனக்கும் நல்லது.. எனக்கும் நல்லது..

        உன்னோட அசிங்கமான கற்பனைக்கெலலாம் நான் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது. அதுவும் இல்லாம போன வாரம் வேலைக்கு சேர்த்துட்டு இந்த வாரம் வேலைய விட்டு அனுப்பறது.. அதுவும் இப்படிப்பட்ட கேவலமான காரணத்துக்காக அனுப்பறது என்னால முடியாது..

        நீ சொல்லற பைத்தியக்காரத் தனத்துக்கெல்லாம் ஆட, ரோட்டுல நிஜமாவே பைத்தியக்காரன் எவனாவது சுத்திட்டு இருப்பான்.. அவன்கிட்ட போய் சொல்லு இதெல்லாம்..” என்று அவளை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அவன் செல்ல, உயிர் கரைந்தது மணிக்கு!

        ‘ஐயோ.. நான் ஏன் அவன்கிட்ட இப்படிப் பேசினேன்? நான் இப்படிப் பேசியிருக்கக் கூடாது தானே? நான் சந்தேகப்படறேன்னு என்ன கேவலமா நினைச்சுட்டான் அவன்..’ என்று அதே போல ஒரு மனம் கலங்கினாலும், அந்த சாத்தான் குடியிருந்த மற்றொரு மனமோ..

        ‘நான் இவ்வளவு வேதனைப்படறேன்னு தெரிஞ்சும்.. நான் இவ்வளவு இன்செக்குயூரா பீல் பண்றேன்னு தெரிஞ்சும்.. அந்த தர்ஷாவை வேலையை விட்டு அனுப்ப முடியாதுங்கறான். அப்போ என்னைவிட அவனுக்கு அந்த தர்ஷா தானே முக்கியமாகிட்டா?’ என்று அவன் மீதான கறுப்புச் சாயத்தை இன்னும் கெட்டிப்படுத்தியது.

        அன்றிலிருந்து முற்றும் முழுமையாக அவனிடம் பேசுவதையே நிறுத்திவிட்டிருந்தாள் மணி. இரண்டு, மூன்று முறை அவளை சமாதானப்படுத்த ராகவ் எடுத்த முயற்சிகள் யாவும் பலனின்றித் தான் போனது.

        அவனுக்குத் தெரியும், தங்களது திருமணத்திற்கு முன்பு தன்னையும், தர்ஷாவையும் அவள் தவறாக நினைத்துக் கொண்டு தர்ஷாவிடமே கண்டபடி உளறிக் கொட்டியதும், அவளது உளறலில் தலையும் புரியாது, காலும் புரியாது தர்ஷா திணறியதும்.

        ஆனால் இப்பொழுதும் அதே போல உளறுவதற்கெல்லாம் மதிப்பு கொடுத்தால் தன்னுடைய தன்மானத்தத்துக்கு இழுக்கு என்று எண்ணினான் அவன். ஆம்.. அவனை அசிங்கப்படுத்துவது போலத் தானே மணியின் சந்தேகம் இருக்கிறது என்று கருதினான் அவன்.

        கண்ணில் பார்க்கிற பெண்களின் பின்னாடியெல்லாம் போகின்ற கயவனா நான்? என்ற எண்ணத்தில் தான் மணி இவ்வளவு செய்தும் அவன் தர்ஷாவை வேலையை விட்டு விலக்குவதாக இல்லை. ஆனால் அவனது இந்தப் பிடிவாதம் பின்னாளில் எத்தகைய பாதிப்பை அவன் வாழ்க்கையில் ஏற்படப்போகிறது என்று அவன் மட்டும் அறிந்திருந்தால், தர்ஷாவை வேலைக்கு அமர்த்தியே இருக்க மாட்டான்.

        அவன் அதை அறிந்திராத காரணத்தால் மணியின் பிடிவாதத்தில் தானும் முறுக்கிக் ஒண்டு தான திரிந்தான்.

        இது வெளிப்பார்வைக்குக் கூட அப்பட்டமாக வெளிப்பட்டு, ஊழியர்களுடையே சிறு கிசுகிசுப்பை ஏற்படுத்தியது. அனால் அதில் பாதிக்கும் மேற்போட்டவர்கள் அவர்களது ஸ்தாபனங்களில் வெகு காலமாகவே வேலை செய்து வருபவர்கள். அதனால் இதுவும் அவர்களது சிறுவயது சண்டை போலவே தெரிய, அந்த கிசுகிசுப்புகளும் சந்தோஷமான ஒன்றாகவே அமைந்தது.

        ஆனால் அங்கு வேலைக்கு வந்ததே சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் உள்ளே புகுந்து, ராகவை அடைந்து விடவேண்டும் என்று சபதம் எடுத்து வந்த தர்ஷாவுக்கு, இந்த ஊடல், அவளுக்கான ஒரு வாய்ப்பாகவே தெரிந்தது.

        ராகவ், மணியிடம் காட்டும் முறைப்புகளுக்கெல்லாம் தர்ஷா இன்னும் இன்னுமாய் அவனிடம் நெருங்கினாள்!

        நகை வடிவமைப்பில் தர்ஷாவின் திறமையையும் யாரும் குறைத்து மதிப்பிட முடியாது தான்.

        அவள் தன்னுடைய சில யோசனைகளை ராகவிடம் கூற, ராகவோ அதற்கு ஒப்புதலும் கொடுத்துவிட்டு, மறுபுறம் திரும்பி.. “மணி.. நீ செய்துட்டு இருந்த வேலை என்ன ஆச்சு? முடிச்சுட்டியா?” என்று கேட்க, ஏற்கனவே அவன் மேல் அத்தனை கோபத்தில் இருந்தவளோ..

        “அது தான் என்ன ரீபிலேஸ் செய்ய ஒரு ஆள் வந்தாச்சுல்ல? அவங்ககிட்டையே வேலை வாங்கிக்கோ..” என்று கூறிவிட்டு சென்றவள், அதன் பிறகு அன்றைக்கு முழுவதுமே கடைப்பக்கம் வரவே இல்லை.

        அவள் தனது வேலைகளை எல்லாம் முடித்தே விட்டாள் தான்! அவள் வடிவமைத்த ஒவ்வொரு நகையிலும், ராகவ் – மணியின் சிறு வயது வாழ்க்கை முதல் படமாக ஓடியது.

        கால் கொலுசில், ராகவும், மணியுமாக துரத்தி விளையாடுவது ஒரு சிறுவனும், சிறுமியும்!

        கை வளையல்களில் சற்று வளர்ந்த பதின் பருவத்து ஆணும், பெண்ணும் கை பிடித்திருக்க, கண்களில் மட்டும் சிறு கோபம்.. அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும். அவர்களுக்கான சிறு சண்டையை அந்த வளையலில் வடிவமைத்திருந்தாள். அந்த வளையலின் வடிவமைப்பில் கூட அவர்களது முக உணர்ச்சி அவ்வளவு தெளிவாக வெளிப்பட்டது.

        சின்னஞ்சிறு மோதிரத்தில் கூட, அவர்களது நிச்சய தினத்தன்று அவன், அவள் விரலில் மோதிரமிட்ட நிகழ்வே வடிவமைக்கப்பட்டிருக்க.. காது ஜிமிக்கியில் பெண்ணவளின் பின் நின்ற ஆண், அவள் செவியில் முத்தமிடுவதை வடிவமைத்திருந்தவள்.. தன்னவன் உறையும் மார்பைத் தொடும் நீண்ட ஆரத்தில், ராகவ், மணிக்கு மங்கள நாண் பூட்டியதை வடிவமைத்திருந்தாள்.

        முழு வடிவமைப்பு ராகவ், மணியின் முகத்தோற்றத்தை அப்படியே பிரதியெடுத்து எல்லா வேலையும் முடிந்திருக்க, இந்த ஈகோ பிரச்சனையால் அதை அவனிடம் நேராகக் கூறாது, தனது லாப்டாப்பை மட்டும் அவனது டேபிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டாள்.

        ஆனால் அதை ராகவ் பார்க்கும் முன்பு, அவன் வெளியே சென்றிருந்த நேரத்தில் தர்ஷா அதை எடுத்துப் பார்த்துவிட, அவளது கண்கள் தனக்குள் உதித்த குயுக்தியான யோசனையில் சிரித்தது!

        மறுநாள் ராகவ் அலுவலகத்திற்கு வரும் முன்னே அங்கு வந்திருந்த தர்ஷா, தன்னுடைய வடிவமைப்பை எடுத்துக் காண்பிக்க, ராகவின் கண்கள் விரிந்தன.

        “தர்ஷா.. என்னதிது?” என்று அவன் கண்கள் மகிழ்ச்சியில் விரிய.. தர்ஷாவோ.. “ராகவ்.. எனக்கு உங்களுக்கும், மணிக்கும் இருக்கற பாண்டிங் ரொம்பப் பிடிக்கும்.. அதனால தான் உங்கள ரெஃபெரென்ஸா வச்சு இதை நான் டிசைன் செய்தேன்..” என்று முந்தைய நாள் மணியின் லேப்டாப்பில் இருந்து எடுத்த அவளது டிசைன்களை, தனதாகக் காட்டிக் கூற, ராகவுக்கு அத்தனை சந்தோசம்!

        “எனக்கு.. எனக்கு.. என்னோட சந்தோஷத்தை எப்படி எக்ஸ்பிரஸ் பண்றதுன்னே தெரியல.. பட்.. தேங்க்ஸ்.. தேங்க்ஸ் சோ மச்..” என்று அவன் கூறி, வெளியே கூட்டிச் சென்று கடை ஊழியர்களிடத்தில் அதை காண்பித்து தர்ஷாவைப் பாராட்டிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்தாள் மணி.

        அவள் உள்ளே வருவதைக் கண்டவன்.. இப்படி இந்த தர்ஷா தங்களது உறவை புனிதமாகக் கருதி அதை நகை வடிவமைப்பில் கொண்டு வந்திருக்கிறாள் என்ற எண்ணத்தில்.. ‘இந்தப் பெண் இவ்வளவு நல்லவளா இருக்கா.. ஆனா இவளையே இப்படி சந்தேகப்படறா இந்த லூசு..’ என்று எண்ணியவன்.. உள்ளே வந்த மணியிடம் சத்தமாக..

        “ஹ்ம்ம்.. உனக்கு கட்டின புருஷனோட கடை மேல இருக்கற அக்கறைய விட, உன்னோட ஈகோ தான் பெருசா தெரியுது.. ஆனா தர்ஷாவைப் பாரு.. வந்து ஒரு மாசம் கூட ஆகல.. ஆனா எக்ஸ்போக்கு தேவையான ஜூவல்லரி டிசைனெல்லாம் எவ்வளவு சீக்கிரமா முடிச்சுட்டா..” என்று நக்கலாகக் கூற மணிக்கோ.. அத்தனை பேர் முன்னிலையில் அறை வாங்கிய உணர்வு!

        கூடவே அந்த டிசைன்களை பார்த்தவள் அதிர்ந்தாள்! இது.. இது தன்னுடைய உழைப்பு.. அதற்கு எப்படி இவன், தர்ஷாவின் பெயரைச் சூட்டலாம் என்ற கோபமும் பொங்க.. அவள், “ராகவ்..” என்று ஏதோ கூற வருவதற்குள், அவனுக்கு அலங்காரின் மற்றொரு கிளையில் இருந்து ஒரு முக்கியமான அழைப்பு வர, இவளைத் திரும்பியும் பார்க்காது அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

        அத்தனை ஊழியர்களின் முன்னிலையில் எதுவும் பேச முடியாத மணியோ, தர்ஷாவின் கையைப் பற்றி இழுத்தபடி விறுவிறுவென தங்களது அறைக்குள் வந்தாள்.

        “தர்ஷா.. என்னதிது?” என்று அவள் கேட்க, அவளோ அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு..

        “எனக்கு எதுவும் தெரியல அழகு.. அவர் தான் இதோ.. இந்த லாப்டாப்பிலிருந்த டிசைன் எல்லாம் காண்பிச்சு, இதையெல்லாம் நான் செஞ்சதா சொல்லி எனக்கு க்ரெடிட் கொடுக்கறதா சொன்னார்..” என்றாள்.

        மணி அவளை சந்தேகமாக நோக்கவும்.. “நான் என்ன செய்யறது மணி.. நானும் வெறும் ரத்தமும், சதையும், உயிரும், உணர்ச்சியும் இருக்கற மனுஷி தானே?

        உனக்கு கல்யாணம் முடிஞ்ச பிறகு நான் அவரைவிட்டு விலகத் தான் செஞ்சேன்.. ஆனா அவர் தான் என்ன தேடிக் கண்டுபிடிச்சு இங்க கூட்டிட்டு வந்தார். இப்போ.. அவரோட சரி பாதி நான் தான்ற மாதிரி, யாரோ செஞ்ச டிசைனுக்கு எனக்கு க்ரெடிட் தந்து.. அவரோட உயிரா இருக்கற இந்தக் கடைல, என்ன முக்கியமானவளா சேர்த்திருக்கார்.

        இதுல இருந்தே உனக்குப் புரியலையா மணி? அவர் உன்ன கல்யாணம் செய்துக்கிட்டது உங்க குடும்பத்துக்காகத் தான்.. அவங்களுக்காகத் தான் அவர் உன்கூட வாழ்ந்ததும்.. ஆனா.. அவர் மனசு முழுக்க நான் தான் இருக்கேன்..

        இனியாவது எங்கள வாழவிடு மணி.. ப்ளீஸ்.. அவரோட கடை, சொத்து, காசு, பணம்னு எல்லாமே நீயே எடுத்துக்கோ.. எனக்கு ராகவ் மட்டும் போதும் ப்ளீஸ்..” என்று அவள் காலிலேயே விழுந்துவிட.. அதிர்ந்து போன மணியோ அவளிடம் எதுவும் பேசாது கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள்.

        அவள் வெளியேறுவதை அபார்த்த தர்ஷாவோ, குரூரமாகச் சிரித்தபடியே நிமிர்ந்தாள்!

        தர்ஷாவுக்கு, மணியின் குணம் பற்றி நன்றாகத் தெரியும்.. பாசக்காரி தான். ஆனால் முன்கோபி! பிடிவாதமும் அதிகம்!

        எனவே தான் ராகவுக்கும், தனக்கும் காதல் என்று கூறி, ஏற்கனவே இவர்களுக்குள் தோன்றியிருக்கும் ஊடலை, முழு பிரிவாக மாற்றிவிட முயற்சித்தாள். அவளது முயற்சி, இதோ.. இப்பொழுது பலனளித்தும் தான் விட்டது.

        தன் கால் போக்கில் நடந்து சென்ற மணி, தான் வந்த காரிலேயே தனது பிறந்த வீட்டிற்குச் சென்றாள். அவளுக்கு இதைப் பற்றி நன்றாக யோசிக்க வேண்டியிருந்தது. அது ராகவை அருகிலேயே வைத்துக் கொண்டு யோசிக்க முடியாது. அவனிடம் ஏதாவது கேட்டாலும், அவன் மறுபடியும் பாட்டிக்காகவோ, அல்லது அவன் பெற்றோருக்காகவோ தர்ஷா கூறியதை இல்லை என்று தான் மறுப்பான் என்று எண்ணினாள் அவள்.

        ஆம்.. மணி, தர்ஷா கூறியதை முழுவதுமாக நம்பிவிட்டாள்! ஏற்கனவே தர்ஷாவை வேலைக்கு அவன் அழைத்து வந்ததிலேயே மனம் சலனமுற்று இருந்தவள், இப்பொழுது அவனது மேஜையில் தான் வைத்துவிட்டு வந்திருந்த லாப்டாப்பிலிருந்த டிசைன்களுக்கெல்லாம் தர்ஷாவுக்கு உரிமை கொடுத்ததை, தர்ஷாவின் மீதான அவன் காதலாகத் தான் பார்த்தாள் அவள்.

        எனவே தான் ராகவிடம் எப்படிக் கூறிப் பிரிவது என்று யோசித்தபடியே அவள் வீட்டுப் படியேறி உள்ளே வந்தால்.. அங்கு அப்பொழுது தான் வெளியே கிளம்பத் தயாராகி வந்த மனோ.. வந்தவளை ஆத்திரமாகப் பார்த்தான்.

        அவனது ஒற்றைப் பார்வையிலேயே மணிக்குப் புரிந்துவிட்டது.. ‘இல்லை.. இல்லை.. இதுவும் என் வீடு இல்லை.. என்னைச் குற்றி இருக்கும் எதுவுமே எனக்குச் சொந்தமில்லை..’ என்று எண்ணம் பலமாகத் தாக்க.. மனதுக்குள் கதறியவள், அமைதியாகத் தலைகுனிந்து வெளியே நடக்கலானாள்.

        கால் கடுக்க தன் போக்கில் நடந்தவள் எங்கே செல்கிறோம் என்ற இலக்கின்றி வெகு தூரம் நடந்தாள். அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு பேருந்தைப் பார்த்தவள், அதைக் கைகாட்டி நிறுத்தி அதில் ஏறி அமர்ந்து கண்மூடிக் கொண்டாள்.

        அவளது மூடிய இமைகளில் இருந்து சூடான கண்ணீர் வழிந்தது!

          The post அத்தியாயம் – 20 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

          ]]>
          https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-2/feed/ 0 17244
          அன்பே. இறுதி அத்தியாயம்….02 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-02/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-02/#respond Tue, 30 Jan 2024 16:11:36 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-02/ எவ்வளவு கட்டுப்படுத்தி வைத்தும் முடியாமல் உடைந்து போய் அவள் முன்பே அழுதுவிட்டான்..        ஊர் அறிந்த செலிபிரிட்டி. ஆறடி ஆண்மகன் என்றாலும் அவனுக்கும் வலி வேதனைகள் இருக்கும் தானே..      மடை திறந்த வெள்ளமாக அனைத்தும் வெளியே வந்தது..     “ பிளீஸ் டா தங்கம்.. இந்த மாமாவுக்கா கொஞ்சம் சீசர் பண்ண சப்போர்ட் பண்ணுடா..” என்று கெஞ்சி கேட்டுக்கொண்டான்..      அவளும்

          The post அன்பே. இறுதி அத்தியாயம்….02 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

          ]]>

          Loading

          எவ்வளவு கட்டுப்படுத்தி வைத்தும் முடியாமல் உடைந்து போய் அவள் முன்பே அழுதுவிட்டான்..

           

           

           

           ஊர் அறிந்த செலிபிரிட்டி. ஆறடி ஆண்மகன் என்றாலும் அவனுக்கும் வலி வேதனைகள் இருக்கும் தானே..

           

           

           மடை திறந்த வெள்ளமாக அனைத்தும் வெளியே வந்தது..

           

           

          “ பிளீஸ் டா தங்கம்.. இந்த மாமாவுக்கா கொஞ்சம் சீசர் பண்ண சப்போர்ட் பண்ணுடா..” என்று கெஞ்சி கேட்டுக்கொண்டான்..

           

           

           அவளும் சரி என்று தலை ஆட்டிவிட்டு கையை நீட்டினாள்..

           

           

          “ என்னடா வேணும்..” என்றான்..

           

           

           தண்ணீர் ஏதும் கேட்கிறாளோ என்று பார்த்தான்..

           

           

          “ சத்தியம் பண்ணுங்க மாமா..”

           

           

          “ என்ன சத்தியம்.. அதெல்லாம் பண்ண மாட்டேன் போடி.. ”

           

           

           ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று மட்டும் அவனுக்கு புரிந்தது..

           

          “ சத்தியம் பண்ணாட்டி.. நான் சப்போர்ட் பண்ண மாட்டேன்.. ” என்றாள். அதில் பேச வேண்டியதை பேசி முடிக்க வேண்டும் என்ற வைராக்கியம் தெரிந்தது 

           

           

          “ என்னடி இப்படி பாடா படுத்துற?.. சரி என்னன்னு சொல்லு..”

           

           

          “ ஒருமுறை நான் தூங்கிட்டேன்னு நினைச்சு நீங்களும் அத்தையும் பேசிக்கிட்டதை நான் கேட்டேன்.. பிறக்கிற எல்லாருமே ஒரு நாள் மண்ணுக்குள்ள போவாங்க அது விதி..

           

          ஆனா நான் அவங்க எல்லாருக்கும் முன்னாடி கூடிய சீக்கிரமே போயிடுவேன்னு விதி இருக்குன்னு நீங்க பேசிக்கிட்டதை கேட்டேன்..

           

           

           அடுத்த நாள் என்னோட ஜாதகத்தை எடுத்துட்டு நானே ஒரு ஐயர சந்திச்சு என்ன பிரச்சனை என்று கேட்டு தெரிந்துகொண்டேன்..

           

           

           அதுல என்னென்ன சொல்லணுமோ எல்லாத்தையும் அவர் சொல்லிட்டார்..

           

           

           நான் உங்க மேல வச்ச காதலா இல்ல நீங்க என் மேல வச்ச காதலா தெரியாது.. நம்ம ரெண்டு பேரையும் சேர்த்து வச்சுடுச்சு..

           

           

          என் ஆயுள் குறைவுன்னு தெரிஞ்சே நீங்க கல்யாணம் பண்ணிக்கிறீங்கன்னா அப்போ உங்க காதல் எவ்வளவு புனிதமானதா இருக்கணும்.. 

           

           

           அந்த காதலுக்கு நான் மரியாதை செய்ய வேண்டாமா?.. அதுதான் நம்ம காதலுக்கு சாட்ச்சியா இந்த பாப்பாவை பெத்து கொடுக்கலாம் என்று முடிவு செஞ்சு எல்லாத்தையும் தாங்கி கிட்டேன்..

           

           

           

           

           அப்புறம் முக்கியமான விஷயம் அம்மாக்கு இந்த விஷயம் இதுவரைக்கும் தெரியாது. அது தெரியாமலே போகட்டும்..

           

           அவங்ககிட்ட சொல்லாம மறைச்சுட்டீங்கன்னு உங்களை வெறுத்திடுவாங்க..

           

           

           நான் போனதுக்கு அப்புறம் எங்க அம்மாவுக்கு நீங்க மட்டும் தான் இருக்கீங்க..

           

           

           நீங்கதான் அவங்களை பாத்துக்கணும்.. இந்த விஷயம் தெரிஞ்சா அவங்க உங்க உதவி எதையும் ஏற்றுக்கொள்ளாமல் தனியாகவே வாழ முடிவெடுத்துடுவாங்க..

           

           

           அடுத்து அவங்ககிட்ட உண்மையை மறைத்து நீங்க என்னை வேணும்னு கல்யாணம் பண்ணி இப்படி பண்ணிட்டதா தான் நினைப்பாங்க..

           

           

           உங்க செயலில் இருக்கும் காதல் அவங்க கண்ணுக்கு தெரியாது.. மக உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சும் இப்படி பண்ணிட்டாங்களேன்னு கோவம் தான் அவங்களுக்கு வரும்..

           

           உங்களையும் அத்தையையும் தவிர மற்ற எல்லாருக்குமே நான் சிக்கலான பிரசவத்துல இறந்து விட்டதாகவே இருக்கட்டும்.. 

           

           

           

           அத்தை கிட்டயும் இந்த விஷயத்தை சொல்லிடுங்க தெரியாதது தெரியாததாவே இருக்கட்டும்..

           

           

           சரி வெளியே இருக்க எல்லாரையும் கூப்பிடுங்க பேசணும்..” என்று தாயைப் பற்றி நன்றாக தெரிந்து கொண்டு கணவனை எச்சரித்தாள்.. 

           

           

           

           விஐபிக்கு கண்மணி மீது மிகுந்த கோபம் இருந்தது.. அவள் மட்டும் உடல்நிலை சரியாகி இருந்தால் இந்நேரம் அவள் அப்படி பேசியதற்கு அவனே அவளை உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பான்..

           

           

           தற்போது கையறு நிலையில் நின்றான்..

           

           

           அவள் கூறியது போல் வெளியே நின்ற மற்றவர்களை உள்ளே அழைத்து வந்தான்..

           

           

           ஒரு கையில் தாயையும் மற்றொரு கையில் கணவனையும் பிடித்திருந்தாள்..

           

           

           “ அத்தை உங்களை உங்க மகன் நல்லா பார்த்துபார்.. என் கவலை எல்லாம் என் மாமாவை நல்லபடியா பார்த்துக்கணும்..

           

           

           நான் இல்லாத உலகத்துல அவர் வாழ பழகிக்கணும்..

           

           

           அதே மாதிரி என் அம்மாவையும் நல்லா பாத்துக்கோங்க..

           

           

           நான் இந்த உலகத்தை விட்டு போனதுக்கு அப்புறம் எங்க காதல் சாட்ச்சியா பொறந்த எங்க குழந்தையை யாரும் என்னை காரணம் காட்டி வெறுக்க கூடாது..

           

           

           கூடிய சீக்கிரம்.. என் பிரிவில் இருந்து வெளியே வந்து என் மாமாவுக்கு என் பாப்பாக்கும் அடுத்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கணும்..

           

           

           இந்த உடல் மட்டும்தான் உங்களையெல்லாம் விட்டுப் போகுது இந்த உயிர் எப்பவுமே உங்களை சுத்திக்கிட்டே இருக்கும்..

           

           

           நான் நிம்மதியா ஆத்மா சாந்தி அடையிறதும் இந்த உலகத்துல சுத்திட்டு இருக்கறதும் உங்க கையில தான் இருக்கு..

           

           

           அவருக்கு ஒரு நல்ல மனைவியும் என் பாப்பாக்கு ஒரு நல்ல தாயையும் என்னைக்கு தேடி கொடுத்து அவங்க வாழ்றதை சந்தோஷமா பார்க்கிறேனோ அன்னைக்கு நான் இந்த உலகத்தை விட்டு போயிடுவேன்..

           

           

           

           

           

          இவ இந்த உலகத்தை விட்டு போயிட்டா இவளுக்கு என்ன தெரியும்னு நெனச்சு மாமா வேற கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னாலும் யாரும் அத கேட்டுட்டு இருக்காம கட்டாயம் பண்ணி வைக்கணும்..

           

           

           இது இந்த கண்மணி மேல சத்தியம்..

           

           

          இது என் கடைசி ஆசை.. நான் போயிட்டு வருவேன் மாமா.. உங்க மறு காதலுக்கு பரிசாக உங்க பாப்பாவா பிறந்து வருவேன் ” என்று கூறிவிட்டு அனைவரையும் பார்த்து காய்ந்து போன இதழை விரித்து கண்ணில் கண்ணீர் வழிய சிரித்தாள் பாவை..

           

           

           அவளை சுற்றி உள்ள அனைவர் கண்ணிலும் இரத்த கண்ணீர்..

           

           

           பிரசவ வாட்டிற்கு கண்மணியை அழைத்து சென்ற சிறிது நேரத்தில் குழந்தை கத்தும் சத்தம் கேட்டது..

           

          சீசர் மூலம் அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தாள் பேதை..

           

           

           

           குழந்தை பிறந்த சந்தோஷத்தை கூட அங்கு யாரும் அனுபவிக்கவில்லை..

           

           

           மருத்துவர்கள் எவ்வளவு போராடியும் பிபி மற்றும் சுகர் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை..

           

          அதற்கு அவள் உடல் ஒத்துழைக்க வில்லை என்பதே சரியானது 

           

           

           

           இறுதியில் அவள் ஆயுசு குறையும் என்கிற பலனே உண்மையாகிவிட்டது.. கணவனை மட்டும் அழைத்து வரும்படி கூறினாள்.. அவன் வந்ததும் அவன் கையில் குழந்தையை குடுக்கும் படி கூறினாள்..

           

           ஒவ்வொரு வார்த்தையும் அவள் பேசுவதற்கு இடையில் மிகவும் சிரமப்பட்டு விட்டாள்..

           

          அதை கேட்டு விஐபி கையில் குழந்தையை வாங்கிகொண்டு மனைவி அருகே வந்தான்..

           

           

          கணவன் கையை பிடித்துக் கொண்டே “ மா.. மா மா இது நம்ம பாப்பா.. நல்லா அன்பா, பாசமா,செல்லமா பாப்பாவை பார்த்துக்கோங்க.. அவளுக்கு அம்மா இல்லாத குறை தெரியாம இ இருக்க நீங்க கல்யாணம் பண்ணியே ஆகணும்.. இது என் கடைசி ஆசை.. மாமா எனக்காக ஒரு பாட்டு.. உங்க குரல் கேட்டு எப்படி என் வாழ்கை உங்களோடு அழகாக ஆரம்பித்ததோ அப்படியே அஸ்தமிக்கட்டும்..” என்று கேட்டாள்..

           

           

          இருவர் கண்ணிலும் கண்ணீர்..

           

           

          அவள் விரும்பிய அவன் குரலையும் அவளோடு முடிவுக்கு கொண்டு வர நினைத்தானோ என்னவோ அவள் ஆசைப்படி பாடினான்..

           

          “ நீ இல்லை என்றால் வாழ்க்கையும் இல்லை.. கண்மணியே..

           

           உன் முகம் பார்த்து இனி என் விடியல் எங்கே..

           

          உன் காதல் என்றாலும் உன் வார்த்தை பொல்லாதது..

           

           

           அவ்வார்த்தை போல் என்னை கூர்வாளும் கொல்லது..

           

          (ஓஹோ ஓஹோ )

           

          [ நீ இல்லை என்றால் ]

           

           அன்பே அன்பே உன் ஆணை என்று இதை ஏற்றால் என் வாழ்வில் மரணம் மிஞ்சும்..

           

           

           என் மௌனம் அதை சொல்லும் சொல்லும்..

           

           என் உள்ளம் உன் காதல் மட்டும் ஏற்கும்..”

           

           அவன் பாடும் பொழுது அவள் கை அவள் உயிர் பிரிந்ததை எடுத்துக்காட்டுவதற்காக அவன் கையில் இருந்து தொய்ந்து விழுந்தது..

           

           

          முதலிரவு அன்று அவன் காதலாக பாடும் பொழுது அவனுக்கு போட்டியாக அவள் எசப்பாட்டு பாடியது தான் நினைவு வந்து இன்னும் அவனை வாட்டியது

           

           

           அவள் ஆசைப்படியே கணவனின் குரலில் பாடலைக் கேட்டுக் கொண்டே அவள் உயிர் உடல் கூட்டை விட்டு பிரிந்தது..

           

           

           

           கையில் இருந்த குழந்தையையும் கவனிக்காமல் விஐபி அந்த இடத்திலேயே ஓய்ந்து அமர்ந்து விட்டான்..

           

           

           வேகமாக அங்கே வந்த தாதி ஒருவர் குழந்தையை வாங்கி பரிசோதித்து விட்டு தாய் உயிர் பிரிந்ததால் குழந்தை ஆரோக்கியமாக இருந்ததோ என்னவோ இப்படி எட்டு மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் நிறைகுறைவாகவும் சிறு சிறு ஆரோக்கிய குறைபாட்டோடும் பிறப்பார்கள்…

           

           

           ஆனால் கண்மணியின் குழந்தை குறைவான நிறையோடு இருந்தாலும் ஆரோக்கியத்தோடு பிறந்தது..

           

           

          தாதி வெளியே போய் மீராவிடம் குழந்தையை குடுத்துவிட்டு கண்மணியின் மரணத்தை கூறினாள்..

           

           

           அதைக் கேட்டதும் ராம் வேகமாக ஓடிவந்து விஐபி தூக்கி நிறுத்தினான்..

           

           

           மீராவும் விஐபியும் அவர்களுக்கு இப்படி ஒருநாள் வரும் என்று தெரிந்து கொண்டார்கள் தான்.. ஆனால் இவ்வளவு வேகமாக அந்த நாள் வரும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை..

           

           

           மருத்துவமனையில் அனைத்தையும் முடித்துக் கொண்டு கண்மணியின் உடலை பெற்றுக் கொண்டு விஐபியின் குடும்பம் அவர்கள் வீட்டிற்கு சென்றது..

           

           

           சீதா தான் குழந்தையை தன் கையில் வாங்கி பாக்கெட் பால் கலந்து பருக்கினாள்..

           

           

           பிறந்த பச்சை குழந்தை அந்த பாலை குடிக்க முடியாமல் அதை அப்படியே துப்பியது..

           

           

           சீதாவை தவிர யாரும் குழந்தையின் பக்கமும் திரும்பி பார்க்கவில்லை..

           

           

           ஊரில் இருந்து கணேசன், யமுனா, துர்கா, அவள் கணவன், பாட்டி,தாத்தா என அனைவரும் விமானம் மூலம் வந்து சேர்ந்து விட்டார்கள்..

           

           

           கண்மணியின் தாய் தான் மகளின் இழப்பை தாங்க முடியாமல் மிகவும் வருந்தினார்..

           

           

           விஐபி ஹாஸ்பிட்டலில் வைத்து கொஞ்சம் அழுதான்.. அதன் பின் அவன் மனம் அப்படியே கல்லாக இறுகி விட்டது…

           

           

           கண்மணிக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகள் அனைத்தையும் செய்து கண்மணி உடலை தகனம் செய்தார்கள்..

           

           

           அந்த வீட்டில் தன் மனைவியாக மருமகளாக உயிரும் உடலுமாக வாழ்ந்த ஒருத்தி அந்த நேரத்தோடு இனி அங்கு இல்லை..

           

           

          வாழ்நாளில் இனி அவளை யாரும் மீண்டும் பார்க்க முடியாத இடத்திற்கு சென்றுவிட்டாள்..

           

           

           அத்தோடு கண்மணியின் அத்தியாயம் முடிந்து விட்டது..

           

           

          கண்மணியின் மறைவில் சீதாவும் ராமும் மிகவும் மனதளவில் ஒடிந்து விட்டார்கள்..

           

           

           

           

           சீதாவின் ஆசை அத்தானின் இந்த நிலையை பார்த்து அவளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்..

           

           

           இந்த துன்பத்தில் சீதாவின் வயிற்றில் உருவாகிய கருவை பற்றி அவளுக்கும் தெரியவில்லை.. யாருக்கும் தெரியவில்லை..

           

           

           தாய் தன் வரவை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் கரு அதன் வரவை தெரியப்படுத்தியது..

           

          சீதாவிற்கும் வாமிட். சோர்வு மயக்கம் என அவதிப்பட்டாள்..

           

          ராம்தான் அவளை பார்த்துக்கொண்டான்..

           

          ராம் அவன் குழந்தையின் வரவால் ஒரு நிமிடம் சந்தோஷப்பட்டான்..

           

          ஆனாலும் துக்க வீட்டில் அவன் சந்தோசம் நீடிக்க வில்லை..

           

           

          கணேசன், யமுனா,துர்கா வீட்டினார் ஊருக்கு சென்று விட்டார்கள்..

           

          அங்கே ஹோட்டல் முன்புபோல் ராம் நண்பன் மற்றும் துர்கா கணவன் பார்த்துக்கொண்டார்கள்.. 

           

          அதனால் சீதா ராம் ஜோடி மீரா,விஐபி,குழந்தை, கண்மணியின் தாய் நால்வருக்கும் ஆறுதலாக சென்னையில் இருந்தார்கள்..

           

           

           

          சீதாவும் மாசக்கையில் வாடுவதால் யசோதா மற்றும் மீரா தான் தற்போது குழந்தையை பார்த்துக்கொண்டார்கள்..

           

          குழந்தையை இன்னும் அதன் பின் விஐபி தூக்கவில்லை..

           

           

           

          கண்மணியின் மறைவின் பின் அவர்கள் வாழ்ந்த அறை மற்றும் அவள் உடைதான் அவனுக்கு மூச்சு விடுவதற்கு வழிகாட்டியது..

           

           

           

          விஐ பி காதல் மனைவியின் மறைவோடு பாடல் உலகத்திற்கே ஒரு முழுக்கை போட்டுவிட்டு விஐபியே இனி இல்லை என்று முடிவை எடுத்தான் இந்திர பிரகாஷ்..

           

           

           அதுவே மீடியா உலகத்திற்கு தீனியாக அமைந்ததால் தொடர்ந்து பேசப்பட்டது.. 

           

           

           இனி இந்திர பிரகாஷின் வேட்டை தொடரும்..

           

           

          ************* முற்றும் **********

           

           

           

           

           

           

           

           

           

           

            The post அன்பே. இறுதி அத்தியாயம்….02 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

            ]]>
            https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-02/feed/ 0 17242
            அன்பே இறுதி அத்தியாயம்…..01 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-01/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-01/#respond Tue, 30 Jan 2024 16:08:35 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-01/ ஏழாவது மாதத்தில் கண்மணிக்கு வளைகாப்பு செய்வதாக ஏற்பாடு பண்ணினார்கள்..      ஆனால் அதற்குரிய நாள் இல்லாததால் ஒன்பதாவது மாதத்தில் வளைகாப்பு வைப்பதாக திட்டமிட்டு இருந்தார்கள்..      துரதிஷ்டவசமாக ஒன்பதாவது மாதத்தில் அந்த வளைகாப்பை அனுபவிப்பதற்கு கொடுத்து வைக்கவில்லை அவளுக்கு..      இதற்கு மேல் முடியாது என்னும் கட்டத்தில் எட்டாவது மாதத்திலேயே கண்மணிக்கு பிபி,சுகர் வந்து அதனால் கை கால் முகம் அதிக வீக்கம் கொண்டது..  

            The post அன்பே இறுதி அத்தியாயம்…..01 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

            ]]>

            Loading

            ஏழாவது மாதத்தில் கண்மணிக்கு வளைகாப்பு செய்வதாக ஏற்பாடு பண்ணினார்கள்..

             

             

             ஆனால் அதற்குரிய நாள் இல்லாததால் ஒன்பதாவது மாதத்தில் வளைகாப்பு வைப்பதாக திட்டமிட்டு இருந்தார்கள்..

             

             

             துரதிஷ்டவசமாக ஒன்பதாவது மாதத்தில் அந்த வளைகாப்பை அனுபவிப்பதற்கு கொடுத்து வைக்கவில்லை அவளுக்கு..

             

             

             இதற்கு மேல் முடியாது என்னும் கட்டத்தில் எட்டாவது மாதத்திலேயே கண்மணிக்கு பிபி,சுகர் வந்து அதனால் கை கால் முகம் அதிக வீக்கம் கொண்டது..

             

             

             விஐபிக்கு கண்மணியை பார்க்க பயமாக இருந்தது அப்படி இருந்தாள்..

             

             

             நாளுக்கு நாள் கால் வீக்கம் அதிகமாகிக் கொண்டே போக பயந்து போய் உடனடியாக அவளை மருத்துவமனையில் சேர்த்தார்கள்..

             

             

            கண்மணியை மருத்துவமனைக்கு அழைத்து வந்த போதே மீரா ராமுக்கு அழைத்து விஷயத்தை கூறிவிட்டார்..

             

             

             

             உடனே ஹோட்டலை நண்பன் மற்றும் துர்கா கணவனின் பொறுப்பில் விட்டுவிட்டு வேகமாக தயாராகி காரில் ஏறினான் முத்து..

             

             

            “ ஏங்க சீக்கிரம் சென்னைக்கு மூன்று பிளைட் டிக்கெட் போடுங்க..” என்றாள் சீதா..

             

             

            “ என்னது பிளைட் டிக்கெட்டா?.. யாருடா மூணு பேர்.. ” என்றான்..

             

             

            “ நீங்க, நான், அம்மா,.. அங்க கிரிடிக்கல் சிட்டுவேஷன்.. அத்தை சொன்னாங்க.. நம்ம இங்க ஆறுதலா கார்ல அவ்வளவு தூரம் போக டைம் இல்லங்க.. இப்பதான் அவங்களுக்கு நம்ம சப்போர்ட் தேவைப்படும்.. என்னை பற்றி யோசிக்காதீங்க.. இப்ப எனக்கு தான் பக்கத்துல நீங்க இருக்கீங்களே.. இப்படி ரொம்ப எமர்ஜென்சின்னா பிளைட்ல போவோம் மத்தபடி நம்ம கார் தான்..” என்றாள்..

             

             

            காதல் அவளின் இயலாமையும் கையால வைத்தது.. 

             

             

             சூழ்நிலையை புரிந்து கொண்டு அவள் செயல்பட்டதை பார்த்து சந்தோஷப்பட்டான் ராம்…

             

             

             

             ராம் சீதாவுடன் பேசுவதை வைத்து அவன் எந்த மூடில் இருக்கிறான் என்று தெரிந்து கொள்ளலாம்..

             

             

             என்னடி என்று கேட்டால் அவன் காதல் கணவன் மூடில் இருக்கிறான் என்று அர்த்தம் ..

             

             

             அதுவே என்னடா, என்னமா. என்று கேட்டால் அவன் அக்கறையாக பாசமாக இருக்கிறான் என்று அர்த்தம்..

             

             

            போக போக சீதாவும் அவன் அழைப்பை புரிந்து கொண்டாள்..

             

             

             வேகமாக மூன்று பிளைட் டிக்கெட் போட்டுவிட்டு நண்பன் உதவியோடு காரில் ஏர்போர்ட் சென்றார்கள்..

             

             

             

            சென்னையில் — மருத்துவமனை 

             

             

            அந்த நேரம் பார்த்து ஆரம்பத்தில் இருந்து கண்மணிக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் செமினார் ஒன்றிற்காக அமெரிக்கா சென்று இருந்தார்..

             

             

             அவளை தற்போது பரிசோதித்த டாக்டர் அவளது ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்து விட்டார்..

             

             

             

             கொஞ்சமும் கண்மணியாள் குழந்தையை தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லை..

             

             

            அதை தெரிந்து கொண்டு இந்த டாக்டர் ஏன் இப்படி செய்தார் என்று குழப்பமாக இருந்தது..

             

             

             உடனடியாக கண்மணிக்கு முக்கியமாக செய்ய வேண்டிய மருத்துவத்தை செய்து விட்டு உடனடியாக சீப் டாக்டரை சந்தித்து ரிப்போர்டை காட்டி விஷயத்தை கூறினார்..

             

             

            “ சார் அந்த பொண்ணு இப்ப ரொம்ப வீக்கா இருக்காங்க.. சீசர் பண்ணி குழந்தையை வெளியே எடுத்தாலும் குழந்தை பிழைகிறதுக்கு வாய்ப்பு இருக்கான்னு எனக்கு தெரியாது.. அந்த சீசர் தாங்க கூடிய அளவு சக்தி அந்த பொண்ணோட உடம்புக்கு இருக்கானு எனக்கே சந்தேகமா இருக்கு.. எவ்வளவு முயற்சி செஞ்சாலும் ஏதாவது ஒரு உயிரைத் தான் காப்பாற்றலாம்.. சீசர் பண்ணி அந்த குழந்தையைக்கு ஆபதுன்னா குழந்தை வெளியே எடுத்துட்டு கர்ப்பப்பை அகற்ற கூடிய சூழ்நிலை வரும்..

             

             

             அப்படி இல்லைன்னா அவங்களுக்கு ஏதும் ஆபத்துனா பாதுகாப்பா குழந்தையை மட்டும் வெளியே எடுக்கலாம்.. 

             

             

             நமக்கு இரண்டு உயிருமே உயிர்தான்.. இரண்டு உயிரும் முக்கியம்.. எந்த உயிரை காப்பாற்றுவது இந்த உயிரை கைவிடுவதுனே தெரியல சார்..

             

             

             இந்த டாக்டர் ஏன் இப்படி பண்ணினாங்க?.. ஆரம்பத்திலே இதை தெரிஞ்சுக்கிட்டவங்க உடனே அந்த குழந்தையை அபார்ஷன் பண்ணி இருந்தா இந்த பிரச்சினையே வந்து இருக்காது..

             

             

             இப்ப அவங்களும் இல்ல நமக்கு தான் சிக்கல்.. ” என்று கூறிவிட்டு அவள் ரிப்போர்ட் எடுத்துக்கொண்டு அங்கே சென்றுவிட்டாள்..

             

             

             

             அந்த டாக்டருக்கு அழைத்து என்ன நடந்தது என்று கேட்போம் என்று முயற்சி செய்தார்கள் ஆனால் அதுவும் முடியவில்லை..

             

             

             சரி வருவது வரட்டும் இனி தாமதிக்க வேண்டாம் என்று முடிவு எடுத்து விஐபி அழைத்து டாக்டர் பேசினார்..

             

             

            “ ஏன் சார் உங்களுக்கு உங்க வைஃபை விட உங்க குழந்தை தான் முக்கியமா?..

             

             படித்தவர் பெரிய செலிபிரிட்டி.. ஆனா நீங்களே இப்படி இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கலை சார்..

             

             

             ஆரம்பத்திலேயே இந்த குழந்தையை அழிச்சிட்டு அவங்களுக்கு சரியான முறையில் சிகிச்சை அளித்து அவங்க கர்ப்பப்பை பலப்படுத்திட்டு அப்புறம் குழந்தையை பெற்று இருக்கலாம்..

             

             

            அப்படியும் முடியலைன்னா இப்ப குழந்தை பெற எவ்வளவோ வசதிகள் வந்துருச்சு..

             

             

             வாடகை தாய் மூலமா குழந்தை பெத்து இருக்கலாமே..

             

             

             இப்ப எங்களுக்கு என்ன பண்ணுறதுனே தெரியாத க்ரிட்டிக்கல் சிட்டுவேஷன்ல கொண்டுவந்து நிப்பாட்டி இருக்கீங்க.. என்ன சார் இதெல்லாம் நங்க இப்ப என்ன பண்ணுறது?.. ” என்றாள் அதில் கோவம் தான் அதிகம் இருந்தது..

             

             

            “ மேம் ப்ளீஸ் இங்கே என்ன நடக்குதுன்னு எனக்கு புரியல.. திடிர்னு கண்மணிக்கு ஏன் இப்படி ஆச்சுன்னு கூட தெரியல?.. நானே அந்த டென்ஷன்ல இருக்கும்போது நீங்க என்ன என்னமோ சொல்றீங்க.. சொல்றதை கொஞ்சம் புரியும் படி விளக்கமா சொல்லுங்க மேம்..” என்றான்..

             

             

             குழந்தை உண்டான நாளிலிருந்து அவள் படும் கஷ்டத்தை பார்த்து பார்த்து அவனால் தாங்கிக் கொள்ள முடியாத நிலை..

             

             

             அவனே ஏன் இந்த குழந்தை உண்டானது என்று நினைத்துக் கவலைப்பட்டான்..

             

             

            மனைவியை நினைத்து நொந்து போய் இருப்பவனிடம் என்ன விஷயம் என்று தெளிவாக கூறாமல் அவனை என்னவோ சொல்லி திட்டினால் அவனுக்கும் கோபம் வரத்தானே செய்யும்..

             

             

            ஆரம்பத்தில் இருந்து அனைத்தையும் கூறிவிட்டு தற்பொழுது கண்மணியின் உடல்நிலை பற்றியும் தெளிவாக எடுத்து கூறினார்..

             

             

             அதைக் கேட்டு விஐபி ஆடிப் போய்விட்டான்..

             

             

            “ மேம் ப்ளீஸ் முதல் நான் சொல்றதை கேளுங்க.. எனக்கு இந்த விஷயம் எதுவுமே தெரியாது.. அந்த டாக்டரோ கண்மணியோ யாருமே என்கிட்ட இதைப் பற்றி சொல்லலை.. ஆரம்பத்திலேயே இது எனக்கு தெரிஞ்சிருந்தா நானே இந்த குழந்தையை அபார்ஷன் பண்ண சொல்லிட்டு என் மனைவியை சந்தோஷமா பார்த்து இருந்து இருப்பேன்..

             

             

             என்ன மேடம் இப்படி சொல்லிட்டீங்க.. என் மனைவிக்கு தெரிஞ்சி ஏன் மறைச்சாங்கன்னு எனக்கு தெரியாது.. இப்ப அவங்க மேல தப்பு சொல்லி அவங்களை போய் கேட்டுக் சண்டை பிடிக்கவும் முடியாது.. அவங்க இப்ப அந்த நிலைமையிலும் இல்லை..

             

             

             நீங்க தான் ட்ரீட்மென்ட் பண்ணணும்.. எனக்கு என் வைஃப் முக்கியம் மேடம்..

             

             

            இரண்டு உயிரில் ஒரு உயிர்தான் பிழைக்கும் எனும் முடிவு வந்தால் எனக்கு என் வைஃப் திருப்பி கொடுத்துடுங்க.. அவ போதும் குழந்தை பற்றி நாங்க அப்புறம் பார்த்துப்போம்.. இதுதான் என் முடிவு..” என்று கூறினான்..

             

             

             

             

             அவனுக்கு தானே மரணித்தால் என்ன என்று தோன்றும் அளவு வேதனை அவனை வாட்டியது..

             

             

             அவ்வளவு உடல் உபாதையிலும் ஒவ்வொரு மாதமும் கடக்கும் போதும் குழந்தையின் வளர்ச்சி குழந்தையின் அசைவு என பார்த்து பார்த்து பூரித்து போவாள் கண்மணி..

             

             

             அவன் காதல் ஆருயிர் மனைவி ஒரு பக்கம். ஒரு பக்கம் அவன் உயிர் நீரில் ஜனித்த குழந்தை, இதில் அவன் எதை விடுவான்..

             

             

             அவன் எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது என இறைவனை வேண்டிக் கொண்டான்..

             

             

             மருத்துவமனையை ஒட்டி இருந்த கோவிலுக்கு சென்றான்..

             

             

             அவன் வரவை எதிர்பார்த்து காத்திருந்தது போன்று ஓர் அடியார் அவன் அருகே வந்தார்..

             

             

            “ நீ இங்கே இருக்க வேண்டியவன் இல்ல.. உன் மனைவி கிட்ட போ.. நீ இங்க வந்தாலும் ஆகப்போறது எதுவும் இல்ல.. ஈசன் எழுத்தை யாராலும் மாற்ற முடியாது.. உன் வீட்டு விளக்கு அணைந்து போறது உறுதி.. இறுதியாக உன் கிட்ட பேச வேண்டிய பேச்சுக்காக உன்னை பார்த்து தவிக்குது ஒரு ஜீவன்..

             

             

             இன்னும் ஒரு ஜீவனோ உன்னைப்போல் ஒரு காதலன், அன்பு கணவன் தனக்கும் கிடைக்க மாட்டானா? என்று ஏங்கி தவிக்கிறது..

             

             போ போ இங்க நிக்காத வேகமா போ..”

             

            என்று கோவில் வாசல் படியை கூட அவனை மிதிக்க விடாமல் அந்த அடியார் அவனை வேகமாக அனுப்பி வைத்தார்..

             

             

            அவனும் அவர் கூறியது பாதி புரிந்தும் புரியாத நிலையில் மருத்துவமனைக்கு விரைந்து வந்தான்..

             

             

             அவனையே எதிர்பார்த்திருந்தது போல் மருத்துவர் வேகமாக அவன் அருகில் வந்தார்..

             

             

             

            “ எங்க சார் போய்டிங்க?.. உங்க வைஃப் எங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க இல்லை சார்..உங்களை தான் அழைச்சிட்டு வர சொல்லுறாங்க. முக்கியமா உங்க கிட்ட பேசணுமாம்..சீக்கிரம் வாங்க சார்.. தாமதிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் அவங்களுக்கு ஆபத்து..” என்று கூறிவிட்டு கண்மணி இருந்த அறைக்குள் சென்றார் மருத்துவர்..

             

             

             

             அவருக்கு அடுத்து வேகமாக விஐபி உள்ளே வந்தான்..

             

            இங்கு வெளியே மீரா கண்மணியின் தாயை ஆறுதல் படுத்துவார்.. கண்மணியின் தாய் மீராவை ஆறுதல் படுத்துவார்.. இப்படியே அவர்கள் ரெண்டு பேரும் கவலையோடு காத்திருந்தார்கள்..

             

             அப்போது யசோதா சீதாராம் மூவரும் அங்கே வந்து சேர்ந்தார்கள்..

             

             

             

             

             

             கணவன் வருகையை எதிர்பார்த்தது போல் வாசலையே பார்த்திருந்தாள் கண்மணி..

             

             

             

            “ என்னடி உன் பிரச்சினை.. மனுஷனை நிம்மதியா இருக்க விட மாட்டியா?.. ஏன் சப்போர்ட் பண்ண மாட்டேங்குற?. நான் உனக்கு வேணாமா?.. சீக்கிரம் போய் பாப்பாவ பெத்துட்டு வாடி.. நீயும் துடிச்சு என்னையும் துடிக்க வைக்கிற.. எனக்கு தெரியாம நீ மறச்சதெல்லாம் எனக்கு தெரியும்.. பாப்பாவ பெத்துட்டு வா அப்புறம் இருக்கு உனக்கு..” என்று கூறி அவள் கையை பிடித்துக் கொண்டு அவள் காய்ந்திருந்த இதழில் முத்தமிட்டு விட்டு அவளையே பார்த்தான்..

             

             

             மருத்துவ உபகரணங்களுக்கு நடுவில் காட்சி அளித்தாள்..

             

             

             பார்ப்பதற்கு வெளியே திடகாத்திரமாக இருந்தாலும் அவன் உள்ளே ஒரு குரல் அழுது கொண்டே இருந்தது..

             

             

            அவனும் சாதாரண மனிதன் தானே காதல் மனைவி இப்படி துடிப்பதை எப்படி தாங்க முடியும்..

             

             

             முகத்தில் இருந்த ஆக்சிஜன் மாஸ்கை கழட்டி விட்டு “ காய்ந்த உதட்டை ஈரம் படுத்திக் கொண்டு.. மாமா விஜய் மாமா..” என்றாள்..

             

             

             அவர்கள் கூடலின் போது எத்தனையோ முறை அவன் மாமா என்று சொல்லுடி என்று ஆசையாக கேட்டிருக்கிறான்..

             

             

             அப்பொழுது எல்லாம் அதற்கு ஒரு நேரம் வரும் என்று கூறி பேச்சை மாற்றி வந்தாள்..

             

             

             இதோ அந்த நேரமும் வந்தது போல் ஆசையாக மாமா என்று அழைத்தாள்..

             

             

             

              The post அன்பே இறுதி அத்தியாயம்…..01 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

              ]]>
              https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-01/feed/ 0 17240
              அன்பே…21 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-21/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-21/#respond Tue, 30 Jan 2024 16:03:06 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-21/ முதலில் ராம் அவளுக்கு படிப்பு முடியட்டும் என்று குழந்தையை தள்ளிப் போட்டிருந்தான்..      இப்பொழுது சீதா கட்டிட வேலை முடிந்து ஹோட்டல் நல்லபடியாக ஆரம்பித்த பின் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று ராமிடம் பேசி முடிவெடுத்தர்கள்..     அந்த வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டார்கள்..        மீராவும் விஐபியும் கண்மணியை கையில் வைத்து மட்டும்தான் தாங்கவில்லை அப்படி பார்த்துக் கொண்டார்கள்..      மூன்று மாத மாசக்கை

              The post அன்பே…21 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

              ]]>

              Loading

              முதலில் ராம் அவளுக்கு படிப்பு முடியட்டும் என்று குழந்தையை தள்ளிப் போட்டிருந்தான்..

               

               

               இப்பொழுது சீதா கட்டிட வேலை முடிந்து ஹோட்டல் நல்லபடியாக ஆரம்பித்த பின் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று ராமிடம் பேசி முடிவெடுத்தர்கள்..

               

               

              அந்த வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டார்கள்..

               

               

               

               மீராவும் விஐபியும் கண்மணியை கையில் வைத்து மட்டும்தான் தாங்கவில்லை அப்படி பார்த்துக் கொண்டார்கள்..

               

               

               மூன்று மாத மாசக்கை காலத்தை அவள் அனுபவித்தளோ இல்லையோ ஒரு வாய் உணவு வைப்பதும் அதை அப்படியே வாமிட் பண்ணி விடுவாள்.. அவள் துடித்த துடிப்பை பார்த்து விஐபி தான் கலங்கி தவித்து போனான்.. 

               

              மூன்று மாதம் முடிந்ததும் அவள் இவ்வளவு நாளும் சாப்பிடாமல் விட்டதற்கும் சேர்த்து சந்தோஷமாக அவளுக்கு தேவையான பழ வகைகள்.. நட்ஸ், ஆரோக்கியமான உணவு வகைகள் என பார்த்து பார்த்து மீரா செய்து கொடுத்து அவளை கொஞ்சம் உடலளவில் தேற்றினார்கள்..

               

               

               கண்மணி அந்த வீட்டில் எந்த ஒரு வேலையும் செய்வதில்லை..

               

               

              பொட்டிக்கில் அவள் செய்த வேலைக்கு என்று ஒரு பெண்ணை நியமித்தான் விஐபி..

               

               

               தினமும் கண்மணியின் அம்மா வந்து அவளை பார்த்து விட்டு செல்வார்..

               

               

              வரும்போது கையால் மகளுக்கு ஆசையாக சமைத்து எடுத்து வந்து கொடுப்பார்..

               

               

               மீரா சந்தோஷமாகவே அவரை வரவேற்று உபசரித்து அனுப்பிவைப்பார்..

               

               

               ஐந்தாவது மாதத்தை நெருங்கியதும் அவள் கொஞ்சம் சோர்ந்து இருக்கவும் அந்த முறை செக்கபிற்கு அழைத்து வந்த விஐபி மருத்துவரிடம் என்னவென்று கேட்டான்..

               

               

               

              “ சார்.. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா அவங்க உடல் தேறிக்கிட்டு வருது.. அதனால் இடையில இடையில அப்படித்தான் இருக்கும்.. அவங்களுக்கு நல்லா ஆரோக்கியமான உணவை கொடுத்து பார்த்துக்கோங்க.. சின்ன சின்ன எக்சர்சைஸ் பண்ண விடுங்க.. கண்ணாடி பொம்மை மாதிரி அவங்களை பார்த்துக்கிட்டா ரொம்ப நல்லது..” என்று மருத்துவர் கூறிவிட்டு விஐபியை வெளியே போக சொல்லவும் அவனும் சென்றான்..

               

               

               கண்மணியை தனியாக பிடித்து வைத்திருந்த மருத்துவர்

               

              “ கண்மணி உங்க உடல்நிலை வர வர ரொம்ப மோசம் ஆகிட்டு இருக்கு.. குழந்தை வளர்ச்சியை கர்ப்பபை தாங்க முடியாம பல உடல் உபாதைகளை உங்களுக்கு குடுக்கும்.. இனிதான் நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்..

               

               

               உங்க உடல் நிலையை பார்த்து எனக்கே பயமா இருக்கு.. நான் தான் ரிஸ்க் எடுத்துட்டேனோனு பீல் ஆகுது.. எப்ப உங்களுக்கு சின்ன பெயிண் மாதிரி இருந்தாலும் உடனே ஹாஸ்பிடல் வந்துடுங்க கண்மணி..

               

               

               உங்களுக்கு நார்மல் பிரசவத்துக்கு கட்டாயம் வாய்ப்பே இல்லை.. சீசர் தான்.. இந்த மருந்து எல்லாம் ஒரு நாளும் மிஸ் ஆகாம எடுத்துக்கோங்க..” என்று கூறி அனுப்பினார்..

               

               

               

               பல போராட்டங்களுக்கு மத்தியில் ஆறு மாதங்கள் கழித்து சீதாராம் ஜோடி அவர்கள் கனவு தொழிலை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஆயத்தங்களையும் செய்து முடித்தார்கள்..

               

               

               நல்ல நாள் பார்த்து இனி ஹோட்டல் திறந்தால் சரி..

               

               

               மீரா, கண்மணி விஜய் மூவரையும் அழைத்திருந்தார்கள்..

               

               

               கண்மணியின் உடல்நிலை காரணமாக அவளால் வர முடியாது.. அதோடு அவளை தனியாக விட்டு மீராவும் வர முடியாது அதனால்..

               

               

               ஹோட்டல் திறப்பு விழா அன்று காலையில் விமான மூலம் விஐபி சென்று மாலையில் திரும்புவதாக பிளான் பண்ணி சென்றான்..

               

               சீதாவின் விருப்பப்படி விஐபி ஹோட்டலை திறந்து வைத்தான்..

               

               

              சீதா விளக்கேற்றி பூஜை முடித்ததும் அனைவருக்கும் இலை போட்டு சாப்பாடு பரிமாறப்பட்டது..

               

               

               விஐபி சந்தோசமாக உணவை சாப்பிட்டுவிட்டு ராமுக்கும் சீதாவிற்கும் பரிசை கொடுத்துவிட்டு ஹோட்டல் திறப்பு விழாவுக்கு பாடல் ஒன்று பாடி அனைவரையும் சந்தோஷப்படுத்தி விட்டு அவன் திட்டப்படி மாலை நேரத்து விமானத்திற்கு சென்னைக்கு சென்று விட்டான்..

               

               

               சீதாவின் விருப்பப்படி காலையில் எழுந்து காலை உணவுக்கான அனைத்து கைவேலைகளும் பெண்கள் செய்து வைப்பார்கள்..

               

               

               இட்லி தோசை இடியாப்பம் பிட்டு சப்பாத்தி. போன்ற வகை வகையான உணவுகளும் அதற்கு தேவையான சட்னி. சாம்பார்.. அனைத்து ரெசிபியும் சரியாக பார்த்து பார்த்து ராம் கைப்பக்கத்தில் ருசியாக செய்து வைப்பான்..

               

               

               அவனை நம்பி பள்ளிப் பிள்ளைகளை சவாரிக்கு அனுப்பும் பெற்றோர்களை ஏமாற்றாமல் பிள்ளைகளை காலையில் ஏற்றிக்கொண்டு பள்ளியில் விட்டுவிட்டு ஃபிரஷ்ஷாக கிடைக்கும் காய்கறிகள் மீன் போன்ற நான் வெஜ் பொருட்களையும் வாங்கிக் கொண்டு வந்து மதிய உணவு தயாராகும்..

               

               

               மதிய உணவு வேலை முடிந்ததும் இடையில் முக்கியமான சவாரிகள் வந்தால் ஏற்றிக்கொண்டு செல்வான்..

               

               

               போய்வரும் வேளையில் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொண்டு வருவான்..

               

               

               மாலை நேரம் டீ, காபி வடை பஜ்ஜி போண்டா இவைகளும் கிடைக்கும்..

               

               

               இரவு வேலை இட்லியும் இடியாப்பமும் அங்கே கிடைக்கும்..

               

               

               சரியாக இரவு 10 மணியளவில் ஹோட்டலை மூடி விடுவார்கள்..

               

               

               வீட்டிற்கு அருகிலேயே ஹோட்டல் இருப்பதால் வீட்டில் சமைப்பதில்லை..

               

              முன்பு காலை மதியம் என ராம் சமைத்து வைத்துவிட்டு வீட்டில் இருக்காமல் ஆட்டோ எடுத்துக் கொண்டு சென்று விடுவான்..

               

               

               இப்பொழுது அதிக நேரம் வீட்டில் இருக்கிறான்..

               

              சுட சுட அவன் கை பக்குவத்தில் சமைத்த உணவுகள் தந்தைக்கு,தங்கைக்கு, மனைவிக்கு உணவு கிடைக்கிறது..

               

              அவர்களும் சந்தோசமாக ரசித்து ருசித்து உண்பார்கள்..

               

               தோணும்போதெல்லாம் அவன் காதல் மனைவியை பார்த்து சைட் அடிப்பான்..

               

               சீதா அன்றய நாட்களுக்கான கணக்கை அன்றே முடித்துவிட்டு வரவு செலவு கணக்கை பார்த்து அவர்கள் போட்ட முதல் பணத்தை அடுத்த நாள் தேவைக்காக எடுத்து வைத்துவிட்டு லாபத்தை எடுத்து தனியாக வைத்து விடுவாள்..

               

               எப்படியும் இருவரும் உறங்குவதற்காக அறைக்கு வர நேரம் இரவு 11 மணியை தாண்டி விடும்..

               

               

               ஞாயிற்றுக்கிழமை ஹோட்டலுக்கு விடுமுறை..

               

               அன்று தாமதமாக எழுந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டு விட்டு மாலை நேரத்தில் சீதாராம் மற்றும் யமுனா மூவரும் அருகே இருக்கும் இடங்களுக்கு சுற்றி பார்க்க செல்வார்கள்..

               

               

               

               

              ராம் மனதிற்குள் மிகவும் சந்தோசமாகவும் உற்சாகமாகவும் அவன் நாட்களை கடத்தினான்..

               

               

               சீதாவும் யமுனாவும் மிகவும் நெருங்கிய தோழிகளாக பழகினார்கள்..

               

               

               நேரம் கிடைக்கும் போது ராமே அவள் உடை தன்னுடை, தந்தையின் உடை என அனைத்தையும் துவைத்து போட்டு விடுவான்..

               

               

               வீட்டில் சமைப்பதில்லை அதனால் வீட்டில் பாத்திரங்கள் பெரிதாக புழங்கப்படுவதில்லை.. அதனால் சாப்பிடும் தட்டு மற்ற சிறு சிறு பாத்திரங்களை யமுனா உடனே கழுவி வைத்து விடுவாள்..

               

               

              இதுவரை காலமும் தங்கையை ராம் எந்த வேலையும் செய்ய வைத்ததில்லை ஆனால் கணேசன் அவர்களுக்கு அதிக கஷ்டத்தை கொடுக்காமல் மகளையும் சிறு சிறு வேலைகளை செய்ய கூறினார்..

               

               

               சீதா பெரும்பாலான நேரங்களில் ஹோட்டலில் தான் இருப்பாள்..

               

               

               சீதாவின் மேற்பார்வையில் ஹோட்டல் எப்பொழுதுமே சுத்தமாகவும் அழகாகவும் இருக்கும்..

               

               

               ஹோட்டலின் சுத்தம் மற்றும் உணவின் தரம் என மனதிற்கு திருப்தியை கொடுக்கவும் அந்த ஊரை கடந்து போவோர், வருவோர் ஊர் மக்கள் என அனைவரும் தினசரி வாடிக்கையாளர் ஆகிவிட்டார்கள்..

               

               

               சீதாராமன் உழைப்பிற்கு பலனாக நல்லபடியாக அந்த ஓட்டல் தொடர்ந்து நடந்தது..

               

               

               சில நாட்களாக செய்யும் உணவுக்கு பற்றாக்குறை வந்தது..

               

               

              அந்த அளவிற்கு வாடிக்கையாளர் குவிந்தார்கள்..

               

               

               இப்படியே அவர்கள் ஹோட்டல் வேலையில் பிஸியாக இருந்த நேரம் அது. அப்போது துர்கா பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்..

               

               

              துர்கா வீடே மிகவும் சந்தோஷத்தோடும் உற்சாகத்தோடும் இருந்தது..

               

               

               யமுனாவுக்கு குழந்தையோடு விளையாடவே நேரம் சரியாக இருந்தது..

               

               

               பள்ளி முடிந்து வந்தால் இப்பொழுதெல்லாம் ஹோட்டலுக்கு யமுனா வருவதே இல்லை.. துர்காவின் வீட்டில் தான் கிடையாக கிடப்பாள்..

               

               குழந்தை அப்படியே துர்காவின் சாயலில் இருக்கவும் அதைச் சொல்லி குழந்தையை தொட்டு முத்தமிட்டு என யமுனா விளையாடிக் கொண்டே இருப்பாள்..

               

               

               இரவில் அந்த குழந்தையை விட்டு தங்கள் வீட்டிற்கு வருவது அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது..

               

               அப்பொழுது தான் இப்படி தங்கள் வீட்டிலும் ஒரு குழந்தை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏக்கம் அவள் மனதில் வந்தது..

               

               

               அதை ஒரு முறை தயங்கி தயங்கி சீதாவிடமும் கேட்டுவிட்டாள்..

               

              “ அண்ணி..” என்று அவள் அழைக்கவும்

               

              சீதா திரும்பி பார்க்கவும் யமுனா அவள் அருகே வந்து “ அண்ணி கொஞ்சம் கீழ குனிஞ்சு காதை காட்டுங்களேன். உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..” என்றாள்..

               

               

              “ சொல்லுடா குட்டி.. என்ன பேசணும்..” என்றாள்..

               

               

              “ அண்ணி நான் ஒன்னு கேட்டால் தப்பா நினைத்து திட்ட கூடாது..” என்றாள்..

               

               

              “ என்ன பீடிகை ரொம்ப பெருசா இருக்கு.. சரி கேளு திட்ட மாட்டேன்..” என்றாள்..

               

               

              “ துர்கா அண்ணி வீட்டுல இருக்க அவங்க பாப்பா போல எப்ப நம்ம வீட்டுக்கு பாப்பா வரும்?.. எனக்கு நைட்ல கூட பாப்பாவ விட்டுட்டு இங்க வர விருப்பமே இல்லை.. எப்பவுமே பாப்பா கூட இருக்கணும் போலவே இருக்கு.. அவங்க வீட்ல இருக்கிறதால இரவில் நான் இங்கே வரவேண்டிய சூழ்நிலை.. அதுவே நம்ம வீட்ல ஒரு பாப்பா இருந்தா நான் எங்கேயும் போக தேவையில்லை தானே.. எப்பவுமே எங்க பாப்பாவ நான் கொஞ்சிக்கிட்டு சந்தோசமா இருப்பேன்.. அதுதான் கேட்டேன் அண்ணி.. நம்ம வீட்டுக்கு எப்ப பாப்பா வரும்..” என்றாள்..

               

               

               யமுனா என்னவோ சாதாரணமாக கேட்டுவிட்டாள்.. ஆனால் அதைக் கேட்டதும் சீதாவின் முகத்தில் வெட்கம் பூத்தது..

               

               

               ஹோட்டல் நல்லபடியாக ஆரம்பித்ததும் எந்த தடையும் இல்லாமல் அவர்கள் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்..

               

               

               அடுத்து என்ன இனி குழந்தை தான்..

               

               

              “ கூடிய சீக்கிரம் வரும் யமுனா.. அப்போ நீ குழந்தைக்கு அத்தையா தூக்கி கொஞ்சலாம்.. குழந்தை வளர்ந்ததும் நீயே வச்சுக்கலாம்..” என்றாள்..

               

               

               சீதா கூறியதைக் கேட்டதும் யமுனா முகத்தில் சந்தோஷம் கொப்பளித்தது..

               

              ” ஹேய் ஜாலி அண்ணி.. அப்போ நான் சீக்கிரம் அத்தை ஆகணும்..” என்று சந்தோச கூச்சலிட்டு படிக்க சென்று விட்டாள்..

               

               

               யமுனா அத்தை என்று பேசியது அந்த வழியாக வந்த ராம் காதில் விழுந்தது..

               

               

               அது என்னவென்று தெரிந்து கொள்வதற்காக தனிமையில் மனைவியை சந்திக்க காத்திருந்தான்..

               

               

               அதற்கு சரியான நேரம் வந்தது..

               

               

               சீதா ஹோட்டலி இருந்து வீட்டுக்கு சென்றாள்..

               

               

              பின் வழியாக அவனும் வீட்டுக்கு வர சீதா சமையல் அறையில் ஏதோ வேலையாக இருந்தாள்..

               

               

               அப்போது ராம் அவளுக்கு பின் வந்து அவள் இடையை சேர்த்து அணைத்து கொண்டு கழுத்தில் முகம் புதைத்து

               

               

              “ நீயும் யமுனாவும் என்னடி பாப்பா, அத்தை அப்படின்னு ஏதோ பேசுனீங்க ஏதும் குட் நியூஸா?..” என்றான்..

               

               

               கணவன் பண்ணும் சேட்டையில் கூச்சம் வந்தாலும் அதை சந்தோசமாக ஏற்றுக்கொண்டு “ ஏங்க முத்து.. என்ன வேலை இது?. திடீர்னு யமுனா யாராவது வந்துட போறாங்க.. கொஞ்சம் விலகி நில்லுங்க ப்ளீஸ்..” என்றாள்..

               

               

               கண் பார்வை தெரியாவிட்டாலும் தந்தையும் தங்கையும் வீட்டில் இருப்பதை நினைத்து அவனும் விலகி நின்று கொண்டான்..

               

               

               அவள் சொன்னதும் விலகி நின்ற கணவனை பார்த்து கன்னத்தை பிடித்து இழுத்து கொஞ்சி “ எப்பவுமே என் முத்து சமத்து பாப்பா தான்.. தினமும் என் புருஷனோட வீரதீர உழைப்பாள் கூடிய சீக்கிரமே பாப்பா வரலைன்னாதான் ஆச்சர்யம்..” என்று கூறிவிட்டு யமுனா கேட்டதையும் சேர்த்து கூறினாள்..

               

               

              “ அதுக்கு என்னடி இன்னும் அதிகமாக உழைத்து பாப்பாவை வர வச்சு தங்கச்சியோட ஆசையை நிறைவேத்திடுவோம்..” என்று கூறிவிட்டு மனைவியின் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு வேகமாக வெளியேறிவிட்டான்..

               

               

               

               கணவனின் முத்தத்தில் நெகிழ்ந்து போய் அவளும் வந்த வேலையை முடித்துக் கொண்டு மீண்டும் ஹோட்டலுக்கு சென்று விட்டாள்..

               

               

                The post அன்பே…21 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                ]]>
                https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-21/feed/ 0 17236
                அன்பே.. 20 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-20/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-20/#respond Tue, 30 Jan 2024 15:57:05 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-20/ ராம் மிகுந்த போராட்டத்தில் பின்பு தான் சீதாவை சென்னைக்கு அழைத்து வந்தான்..      விஐபி வீட்டில் தான் தங்கி கொண்டார்கள்..      முதல் நாள் பரிட்சைக்கு சென்ற சீதாவை பார்த்த தோழிகளே வாயில் கை வைத்தார்கள்..      விடுமுறை அன்று அவர்களுக்கு பார்ட்டி கொடுத்துவிட்டு சென்ற சீதாவின் நடவடிக்கை இந்த சீதாவில் ஒரு துளி கூட இல்லை..        முழுக்க முழுக்க ஹோம்லி

                The post அன்பே.. 20 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                ]]>

                Loading

                ராம் மிகுந்த போராட்டத்தில் பின்பு தான் சீதாவை சென்னைக்கு அழைத்து வந்தான்..

                 

                 

                 விஐபி வீட்டில் தான் தங்கி கொண்டார்கள்..

                 

                 

                 முதல் நாள் பரிட்சைக்கு சென்ற சீதாவை பார்த்த தோழிகளே வாயில் கை வைத்தார்கள்..

                 

                 

                 விடுமுறை அன்று அவர்களுக்கு பார்ட்டி கொடுத்துவிட்டு சென்ற சீதாவின் நடவடிக்கை இந்த சீதாவில் ஒரு துளி கூட இல்லை..

                 

                 

                 

                 முழுக்க முழுக்க ஹோம்லி லுக்..

                 

                 

                 அவள் சென்னைக்கு வருகிறாள் என்று தெரிந்ததுமே கண்மணி அவளுக்கு விதவிதமாக சல்வார் டிசைன் அவள் கையால் பண்ணி அதைப் தைத்து வைத்திருந்தாள்..

                 

                 

                 

                 அதில் ஒன்றுதான் சீதா இன்று உடுத்தி இருந்தாள்..

                 

                 

                 

                 முன்பு காலேஜ் செல்லும்போது ராம் கட்டிய தாலியை மறைத்துச் சென்றவள்.. அதனால் பல இன்னல்களை அனுபவித்து விட்டாள்..

                 

                 

                 தோழிகள் நெருங்கி பேச்சு கொடுக்கும் போதும் ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு ஒதுங்கிக் கொண்டாள்..

                 

                 

                 சூடு கண்ட பூனை அல்லவா சீதா..

                 

                 

                 இனி அனைத்திலும் முன் ஜாக்கிரதையாகவே இருக்க பழகிக் கொண்டாள்..

                 

                 

                 சீதாவை நெருங்கி பேச முடியாத நேரத்தில் கரணுக்கு இப்படி ஒரு விபத்து நடந்ததை எப்படி கூறுவது என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள்..

                 

                 

                 

                 ஊருக்கு போன இடத்தில் சீதாவை கட்டாயப்படுத்தி தான் இந்த வாழ்க்கைக்குள் தள்ளிவிட்டு இருக்கிறார்கள் என்று தான் நினைத்தார்கள்..

                 

                 

                 

                 சீதாவாவது இப்படி முற்றுமுழுதாக தன் அடையாளத்தை மாற்றிக் கொள்வதாவது..

                 

                 

                 ஹோட்டல் கட்டிட வேலை அதற்குரிய அனைத்து வேலைகளுக்கும் நடுவிலும் அவள் படித்தாள்..

                 

                 

                 அதனால் இந்த பரிட்சைகள் அவளுக்கு கஷ்டமாக தெரியவில்லை..

                 

                 

                 தினமும் வந்து நல்லபடியாக பரீட்சையை எழுதிவிட்டு விஐ பி வீட்டிற்கு சென்று விடுவாள்..

                 

                 

                 அப்படியே அவள் இறுதி பரீட்சை நாளும் முடிந்து அன்று ராம் வருவதற்காக வெளியே காத்திருந்தாள்..

                 

                 

                 அப்போது அவள் தோழிகள் அவளை சுற்றிக் கொண்டார்கள்..

                 

                 

                “ ஏய் சீதா என்னடி ஆச்சி உனக்கு?.. ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிட்ட.. எங்க மாடல் சீதா வா இது..” என்று ஆளுக்கு ஒவ்வொரு கேள்வியாக கேட்டு அவளை தொல்லை செய்தார்கள்..

                 

                 

                “ ஹேய்.. உங்க கூட பேசக்கூடாதுனு இல்லடி.. சாரி பேச மூடு இல்ல.. நீங்களும் உங்க பேரன்ஸ் உங்களுக்கு வெட்டிங் பிளான் பண்ணி இருந்தா கட்டாயம் பண்ணிட்டு ஹேப்பியா உங்க லைஃப் என்ஜாய் பண்ணுங்க..

                 

                 நான் முத்துவை ரொம்ப லவ் பண்ணுறேன்.. ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்கோம்..

                 

                 

                 ஒரு காலத்துல எதெல்லாம் நான் தகுதியின்னு நினைச்சு பழகினேனோ இன்னைக்கு அதெல்லாம் ஒன்னும் இல்லன்னு ஆயிடுச்சு..

                 

                 

                எதெல்லாம் நான் வெறுத்தேனோ இன்னைக்கு அது மட்டும் தான் என் வாழ்க்கைக்கு சந்தோசத்தை கொடுக்குது..

                 

                 

                 அப்படி உங்களுக்கும் பிடிக்காததுகள் இருந்தால் அதை பிடிக்க வச்சுக்கோங்க..

                 

                 

                 காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் அதாவது பாய்ஸ் கூட டச்சப்ல இருக்காதீங்க..” என்றாள்..

                 

                 

                “ என்னவோ போடி சீதா..! ஏதோ சொல்ற. சரி அதை விடு.. நம்ம கரண் இருக்கான்ல. அவனுக்கு பெரிய ஒரு ஆக்சிடெண்ட் ஆகி கை,கால்,போய் கண் போய்.. பார்க்கவே ரொம்ப பாவமா இருக்கு.. எல்லாத்துக்குமே உதவிக்கு ஒரு ஆள் தேவைப்படுது. ரொம்ப கஷ்டபட்டுட்டு இருக்கான் டி.. இதை உன்கிட்ட சொல்லத்தான் உனக்கு அழைக்க முயற்சி செஞ்சோம் ஆனா உன்னோட கைபேசி ஸ்விட்ச் ஆப்ன்னு சொல்லுச்சு.. சரி ஊருக்கு போக முதல் அவனை போய் ஒரு எட்டு பார்த்துட்டு போ.. நாங்க எல்லாம் முன்னவே போய் பார்த்துட்டு வந்துட்டோம்.. ” என்றார்கள்..

                 

                 

                 

                 அவள் போய் அந்த தெரு நாயை பார்ப்பதா? என்று நினைத்துக் கொண்டாள்..

                 

                 

                 

                 சற்று நேரத்தில் அங்கே ராம் வரவும் காரில் ஏறி சென்று விட்டாள்..

                 

                 

                “ ஏன் முத்து வர லேட் ஆயிடுச்சு?..” என்றாள்..

                 

                 

                “ இன்னைக்கு கொஞ்சம் அதிக டிராபிக் டா.. ஏன்டா முகம் ஒரு மாதிரி இருக்கு என்ன ஆச்சு?..”

                 

                 

                அவன் அப்படி கேட்டதும் அவள் கண்ணில் கண்ணீர் வந்தது..

                 

                 

                இப்போதெல்லாம் சீதா தொட்டதுக்கும் கவலை பட்டு அழுது ராம் துணையை தேடுகிறாள்..

                 

                ராம் அன்புக்கு பழகிக்கொண்டாள்.. 

                 

                 

                 தோழிகள் அவளுடன் பேசியதை கூறி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்..

                 

                 

                “ சாரிடா எல்லாம் என்னால தான்.. ஆனாலும் அதையே நினைச்சுகிட்டு எங்கேயும் போகாம இருக்கிறது கூடாது தானே.. என் பொண்டாட்டி அந்த பாதிப்பு எல்லாம் கடந்து வந்துட்டான்னு காட்டனுமா? இல்லையா?..” என்று அவன் கேட்கவும்

                 

                 

                 சிறு குழந்தை போல் ‘ ஆம்.’ என்று தலையாட்டி விட்டு கண்களை துடைத்துக் கொண்டு அவனைப் பார்த்து சிரித்தாள்..

                 

                 

                “ இதுதான் என் சமத்து பாப்பாக்கு அழகு..” என்று கூறி அவள் கன்னத்தை தட்டி விட்டு காரை வேகமாக செலுத்தி கொண்டு ஹாஸ்ப்பிட்டல் வந்தார்கள்..

                 

                 

                 ராம் காரை இவ்வளவு வேகமாக ஓட்டுவதற்கு காரணம் விஐபியிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்திருந்தது..

                 

                 

                 

                 கண்மணிக்கு காலையில் இருந்து உடல்நிலை கொஞ்சம் சரியில்லை..

                 

                 

                 ஆனால் முக்கியமாக முடித்துக் கொடுக்க வேண்டிய சாரீஸ் கொஞ்சம் இருந்ததால் அந்த வேலையை பார்ப்பதற்காக பொட்டிக் சென்றாள்..

                 

                 

                 அவளுக்கு இருக்கிற வேலை செய்வதற்கு உடல்நிலை ஒத்துழைக்காததால் சோர்வாகவே வேலையை செய்து முடித்தாள்..

                 

                 

                 அதையும் மீறி அப்படியே எழும்போது மயங்கி கீழே விழுந்து விட்டாள்..

                 

                 

                 

                 ஆபீஸ் வேலைகளை முடித்துக் கொண்டு விஐபி அவளை அழைக்க வந்தான்..

                 

                 

                 

                 அப்போது கண்மணியின் தாய் அவனுக்கு அழைத்து விஷயத்தை கூறவும் வேகமாக வந்து அவளை தூக்கிக்கொண்டு காரில் போட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றான்..

                 

                 

                 

                 மருத்துவமனை வந்ததும்தான் ராமுக்கு அழைத்து விஷயத்தை சொல்லவும் அவனும் வேகமாக அங்கே வந்து சேர்ந்தான்..

                 

                 

                 

                 அவளை பரிசோதித்த பெண் மருத்துவர் அவள் குழந்தை உண்டாகி இருப்பதை கூறினார்..

                 

                ஆனால் அவள் கர்ப்பப்பை ரொம்ப வீக்காக இருப்பதாகவும் அவளுக்கு இந்த குழந்தை வேண்டாம் அபாஷன் பண்ணி விடுமாறும் கண்மணியிடம் கேட்டுக் கொண்டார்..

                 

                 

                 அவளுக்கு குழந்தையை தாங்கக் கூடிய அளவுக்கு கர்ப்பப்பையில் சக்தி இல்லை என்றும் தெளிவாக கூறினார்..

                 

                 

                 

                 சிறு வயதில் இருந்தே தந்தையின் உழைப்பு இல்லாததால் கண்மணியின் தாயும் அவரால் முடிந்தளவு தான் உணவை கொடுத்தார்..

                 

                 

                 சடங்காகும் வயதுக்கு பின்பாவது பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்..

                 

                 

                 ஒரு குழந்தையை சுமந்து பெற்றெடுக்கக்கூடிய சக்தியை அவள் உடலும் மனமும் கர்ப்பப்பையும் தாங்கி கொள்ளக்கூடிய அளவில் இருக்க வேண்டும்..

                 

                 

                 போதுமான அளவு ஊட்டச்சத்தும் ஆரோக்கியமும் கண்மணிக்கு இருக்கவில்லை..

                 

                 

                 அவளும் ஒரு வயதுக்கு மேல் பொட்டிக்கில் இருந்து வேலை வேலை என்று ஓடியதால் அவளை கொஞ்சம் கவனிக்க தவறிவிட்டாள்..

                 

                 

                 இப்படியே சென்றதால் இந்த குழந்தையை தாங்கும் சக்தி அவளுக்கு இருக்கவில்லை..

                 

                 

                 

                 உருவாகிய இந்த குழந்தையை அளித்தாலும் இனி அவளுக்கு குழந்தை உருவாக வாய்ப்பில்லை என்பதை மருத்துவ தெளிவாக கூறினார்..

                 

                 

                 

                 இனி குழந்தை உருவாக வாய்ப்பில்லை என்பதை கேட்டதும் கண்மணி மனம் உடைந்து கொஞ்ச நேரம் அழுதாள்..

                 

                 

                 அவர்கள் காதலுக்கு சாட்சியாக ஓர் குழந்தை வேண்டும் என்று விருப்பப்பட்டவள் என்ன நடந்தாலும் பரவாயில்லை இந்த குழந்தையை சுமந்து பெற்றெடுக்க வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்துக் கொண்டாள்..

                 

                 

                 

                 அந்த உறுதியான முடிவை எடுத்ததும் மருத்துவரிடம் வேண்டி கேட்டுக்கொண்டாள்..

                 

                 

                “ மேடம் ப்ளீஸ் எனக்கு கர்ப்பப்பையில் இப்படி ஒரு பிரச்சனை இருக்கு அதனால இந்த குழந்தையை அபார்ஷன் பண்ணனும் என்ற விஷயத்தை மட்டும் என்னை தவிர எங்க வீட்ல யாருக்குமே தெரிய வேண்டாம்..

                 

                 

                என் கணவருக்கோ இல்ல வீட்ல யாருக்கும் தெரிஞ்சா கட்டாயம் என் மேல இருக்க பாசத்துல இந்த குழந்தையை அபார்ஷன் பண்ண தான் சொல்லுவாங்க..

                 

                 

                 இனிதானே உருவாகாது.. இப்ப உருவாகிய குழந்தையை கட்டாயம் நான் பெத்துக்கணும்..

                 

                 ப்ளீஸ் என்னோட நிலைமை புரிஞ்சு கொள்ளுங்க.. நானும் தாயாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்..

                 

                 

                விஜய்கிட்ட கொஞ்சம் வீக்கா இருக்காங்க.. அதனால கவனமா பார்த்துக் கொள்ளுங்க என்று மட்டும் சொல்லுங்க போதும்..

                 

                 

                 அப்புறம் அவரே என்னை தாங்கி தாங்கி ரொம்ப நல்லபடியா பார்த்து கொஞ்சம் ஆரோக்கியமாக மாத்திடுவார்..

                 

                 

                 மன்த்லி செக்கப் வரும்போது நீங்க சொல்ற அட்வைஸ் கட்டாயம் ஃபாலோ பண்ணி ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு என்ன ரொம்ப கவனமா பார்த்துக்கிறேன். இந்த ஹெல்ப் மட்டும் பண்ணுங்க பிளீஸ் மேம்..” என்று அவர் கையைப் பிடித்து கண்களில் கண்ணீர் வடிய கெஞ்சி கேட்டுக் கொண்டாள்..

                 

                 

                 

                 மருத்துவம் எவ்வளவு தான் வளர்ச்சி அடைந்திருந்தாலும் கர்ப்பப்பை குழந்தையை தாங்கிக் கொள்ளும் சக்தியை இழந்திருப்பதை தெரிந்து கொண்டு அதை எப்படி மருத்துவ முறையில் வளர்ச்சி அடைய வைக்க முடியும்..

                 

                 

                 அதுவும் குழந்தை உருவாகிய பின் வாய்ப்பே இல்லை..

                 

                 

                ஆனாலும் மருத்துவர் கண்மணியின் தாய்மையின் கண்ணீருக்கு முன் தலைவணங்கி அவள் கூறியது போன்று விஐபி யை அழைத்து ரொம்ப கவனமாக பார்த்துக் கொள்ளும்படி மட்டுமே கூறினார்..

                 

                 

                 

                 அந்த ஒரு வார்த்தை போதுமே அவனுக்கு சும்மாவே மனைவியை தாங்குவான் இனி கேட்கவா வேண்டும்..

                 

                 

                 தன் அத்தான் அப்பாவாகிய விஷயத்தை சீதா கேள்விப்பட்டதும் சந்தோஷமாக கைகுலுக்கி வாழ்த்து கூறினாள்..

                 

                 

                 ராம் இருவருக்கும் வாழ்த்து கூறினான்.. சந்தோஷமாக ஸ்வீட் வாங்கிக் கொண்டு அனைவரும் இரண்டு கார்களில் வீட்டிற்கு சென்றார்கள்..

                 

                 

                ராம் ஊரிலும் அனைவருக்கும் சந்தோஷமாக விஷயத்தை பகிர்ந்து கொண்டார்கள்..

                 

                 

                 

                 அந்த சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டே சீதாராம் ஜோடி ஊருக்கு வந்துவிட்டார்கள்..

                 

                 

                  The post அன்பே.. 20 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                  ]]>
                  https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-20/feed/ 0 17234
                  இதயத்தின் அதிர்வு நீயா..? – 14 https://thoorigaitamilnovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%ae%be-14/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%ae%be-14/#respond Tue, 30 Jan 2024 13:12:29 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%ae%be-14/ இனிய கானம் செவிகளில் ஒலிக்க கண்ணுக்கு குளிர்ச்சியாக நிலாமகள் காட்சியளிக்க அந்த பேருந்து பயணம் ரம்மியமாக தான் சென்று கொண்டிருந்தது. சற்று நேரத்தில் அமர்ந்தபடியே தூயவன் உறங்கியும் விட்டான். பேருந்து மெது மெதுவாக வேகம் குறைக்கப்பட்டு ஒரு கடைக்கு அருகில் நிற்கப்பட்டது. மெதுவாக உறக்கம் கலைய கண்விழித்து பார்த்தவனின் எதிரில் பெண்ணவள் இல்லை. ஜன்னல் வழியே வெளியே எட்டிப்பார்க்க அவளோ கழிவறை நோக்கி செல்வது தூயவனின் கண்ணில் பட்டது.  ‘ஓ

                  The post இதயத்தின் அதிர்வு நீயா..? – 14 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                  ]]>

                  Loading

                  இனிய கானம் செவிகளில் ஒலிக்க கண்ணுக்கு குளிர்ச்சியாக நிலாமகள் காட்சியளிக்க அந்த பேருந்து பயணம் ரம்மியமாக தான் சென்று கொண்டிருந்தது. சற்று நேரத்தில் அமர்ந்தபடியே தூயவன் உறங்கியும் விட்டான். பேருந்து மெது மெதுவாக வேகம் குறைக்கப்பட்டு ஒரு கடைக்கு அருகில் நிற்கப்பட்டது. மெதுவாக உறக்கம் கலைய கண்விழித்து பார்த்தவனின் எதிரில் பெண்ணவள் இல்லை. ஜன்னல் வழியே வெளியே எட்டிப்பார்க்க அவளோ கழிவறை நோக்கி செல்வது தூயவனின் கண்ணில் பட்டது. 

                  ‘ஓ ரெஸ்ட்ரூம் போயிருக்காளா’ என்றபடி கைக் கால்களை நெளித்துவிட்டவனின் விழியில் திரை அணைக்கப்படாத அவளது அலைப்பேசி ஒளிர்ந்தது. 

                  ‘என்ன மொபைலை கூட ஆஃப் பண்ணாம போயிட்டா.. அவளுக்கென்ன அவசரமோ பாவம்’ என்று நினைத்தவன் அதனை அணைக்கலாம் என்றெண்ணி எடுக்க தொடுதிரையில் அவனின் விரல் பட்டு அஜய் என்று பதியப்பட்டிருந்த ஒரு புலன உரையாடல் (whatsapp chat) திறந்துகொண்டது. 

                  ‘அடக்கடவுளே தெரியாம ஓபன் பண்ணிட்டனே’ என்று பதறியவன் வெளிவர எத்தனிக்க அந்த உரையாடலுக்கு அனுப்பப்பட்டிருந்த உறங்கிக்கொண்டிருந்த தன்னுடன் ஆதினி எடுத்திருந்த சுயப்படத்தை(selfie) பார்த்தவனுக்கு புருவம் இடுங்கியது. 

                  ‘என்ன இது.. இவ எதுக்கு என்கூட செல்பீ எடுத்தா.. அதுவும் எனக்கு தெரியாம.. அதை எதுக்கு இவனுக்கு அனுப்பிருக்கா.. யார் இவன்..’ என்று யோசித்தபடி ஜன்னலைப் பார்த்தவனுக்கு அவள் கழிவறை விட்டு வெளியே வருவது தெரிய அவசரமாக உரையாடலை ஆராய்ந்தான். 

                  பார்ட்டி பெரிய பணக்காரனா இருப்பான்னு நினைக்குறேன்.. இவனை மட்டும் வளைச்சுப்போட்டேன் லைஃப் முழுக்க நான் செட்டில் தான்..‘ என்ற ஒரு குறுஞ்செய்தியும்,

                  அவனை கரெக்ட் பண்ண தான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.. இப்போவே கொஞ்சம் என்னை நம்பி நார்மலா பேச ஸ்டார்ட் பண்ணிட்டான்.. எப்படியும் விடியுறதுக்குள்ள பயபுள்ள என்கிட்ட விழுந்துருவான்னு நினைக்குறேன்‘ என்ற குறுஞ்செய்தியும் அவ்வப்போது கண்ணில் பட்டுவிட தூயவனுக்கு அதிர்ச்சியில் புருவங்கள் உயர்ந்தது. இந்நேரம் அவள் பேருந்தினுள் ஏறி அவர்களது இருக்கைக்கு அருகில் வந்திருக்கக் கூடும் என யூகித்தவன் அலைப்பேசியை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு உறங்குவது போன்று நடித்தான். இருக்கையில் வந்து ஏறியவள் அவளின் இடத்தில் அமர்ந்துக் கொண்டாள்.

                  ‘பாவி.. உன்ன போய் ஒருநிமிஷத்துல அப்பாவின்னு நெனச்சுட்டேனே டி.. அப்போ நீ பிளான் பண்ணி தான் எல்லாம் பண்ணிருக்க என்ன.. சரியான ஃபிராடு.. உன்னையெல்லாம் மனுஷியா மதிச்சு பேசுனது என் தப்பு தான்.. இனிமே நீ வாயத் திற.. அப்புறம் இருக்கு உனக்கு’ என மனதினுள் அர்ச்சித்தவன் தன்னிடம் உள்ள அவளது ஏர்ப்போடை அவளிடம் கொடுத்தான்.

                  “என்னாச்சு பாட்டு கேட்கலையா” என அவள் கேட்க,

                  ‘நீ ஏற்கனவே பாடுன பாட்டே போதும்’ என மனதினுள் நினைத்தவன் முறைத்தபடி,

                  “இல்ல போதும்.. தூங்க போறேன்” என்று கூறிவிட்டு தனது உடைமைகளைத் தன்னோடு சேர்த்து பத்திரப்படுத்தியவன் அவளை ஒருமுறை ஏறயிறங்க பார்த்துவிட்டு, இல்லை முறைத்துவிட்டு உறங்க ஆரம்பித்தான்.  அவன் பார்வையில் ஒரு கணம் யோசித்தவள் பிறகு திரும்பிக் கொண்டாள்.

                  அதிகாலை ஆறு மணியளவில் உறக்கம் கலைந்து கண் விழித்தவன் தன் உடலில் போர்வை போர்த்தியிருக்க அதனைக் கண்டவனின் புருவங்கள் முதலில் இடுங்கி பின் எதிரில் உறங்கிக் கொண்டிருப்பவளின் முகத்தை பார்த்து உயர்ந்தது.

                  ‘ஓ இவ செஞ்ச வேலையா.. இதெல்லாம் செஞ்சா நான் மயங்கிருவேனா.. உன்னை என்ன பண்றேன்னு பாரு..’ என்று மனதில் நினைத்தவன்,

                  “ஹெலோ.. ஹெலோ எக்ஸ்க்யூஸ்மீ..” என்று தனது தண்ணீர் பாட்டிலின் உதவி கொண்டு அவளை எழுப்பினான். லேசாக விழிப்பு தட்டவும் அரைக்கண்களை மட்டும் திறந்தபடி யோசனையாக பார்க்க அவனோ,

                  “என்ன நெனச்சுட்டு இருக்க.. உன் மனசுல” என சற்று காட்டமாக கத்த,

                  ‘என்னாச்சு இவனுக்கு’ என்றபடி முழுதாய் உறக்கம் கலைந்து நிமிர்ந்து அமர்ந்தவள்,

                  “என்னாச்சு.. திடீர்னு ஏன் இப்படி ஹார்ஷா பேசுரீங்க” என்க,

                  “ஏன் கேட்க மாட்ட நீ.. என்ன காரியம் செஞ்ச நீ..” எனவும்,

                  ‘ஒருவேளை அதுவா இருக்குமோ.. போச்சு தெரிஞ்சுடுச்சா’ என்றெண்ணிக் கொண்டிருக்க அவனோ,

                  ‘விஷயம் தெரிஞ்சுடுச்சோன்னு திருதிருன்னு முழிக்குறா பாரு ஃபிராடு’ என்றவனுக்கு நினைக்க நினைக்க ஆத்திரம் பெருகியது.

                  “ஹே உன்னை தான கேட்குறேன்..” என்று மீண்டும் கத்த,

                  “ஹெலோ.. என்னன்னு சொல்லாம சும்மா மொட்டையா கத்தினா நான் என்னன்னு நெனைக்குறது..” என்று சாதாரணமாக கேட்க அவனோ,

                  ‘அதானே.. செஞ்ச விஷயம் ஒண்ணா ரெண்டா நியாபகம் இருக்குறதுக்கு’ என்று நினைத்தவன்,

                  “யாரை கேட்டு எனக்கு போர்வை எல்லாம் போர்த்திவிட்ட” என்று முறைத்தப்படி கேட்க,

                  ‘அடப்பாவி.. இதுக்கு தான் குதிச்சியா..’ என்று ஆசுவாசமடைந்தவள்,

                  “யோவ்.. லூசா நீ.. நீ குளிரில நடுங்குன.. பார்க்க பாவமா இருந்துச்சேன்னு போர்த்தி விட்டா .. ரொம்ப தான் பண்ற..”

                  “நான் உன்கிட்ட கேட்டேனா.. சும்மா வந்து இதெல்லாம் செஞ்சி மயக்க பார்க்குரியா என்னை..”

                  “இவரு பெரிய மன்மதன்.. மயக்க வேற செய்றாங்க.. ஹே உனக்கு அவ்ளோ சீன் இல்ல.. போயும் போயும் உனக்கு பாவம் பார்த்தேன் பாரு என்னை சொல்லணும்.. கொடு என் பெட்ஷீட்டை.. சரியான சைக்கோ” என்றவள் அவனிடம் போர்வையை இருந்து பிடுங்க அவனோ,

                  “ஹே யார பார்த்து சைக்கோங்குற.. நீ தான் ஃபிராடு..”

                  “நீ ரொம்ப ஓவரா பேசுற சொல்லிட்டேன்.. ச்சைக் நல்லதுக்கே காலம் இல்ல.. உனக்கு நல்லது செஞ்சதுக்கு சிவனேன்னு இருந்துருக்கலாம்..”

                  “நீ சிவனேன்னு இருந்துருந்தா நான் ஏன் இதெல்லாம் செய்ய போறேன்..” என்று கூறிக்கொண்டிருக்க அதற்குள் பேருந்து நடத்துனர்,

                  “தாம்பரம் எல்லாம் வாங்க” என்று குரல் கொடுக்க அப்பொழுது தான் ஜன்னல் வெளியே பார்த்தவள்,

                  ‘அடக்கடவுளே.. அதுக்குள்ள தாம்பரம் வந்துட்டா.. இது தெரியாம இந்த ஆளுகிட்ட சண்டை போட்டுட்டு இருக்கேன்’ என்று தன்னை நொந்தவள் விறுவிறுவென தனது உடைமைகளை எடுத்து வைக்க அதனைக் கண்டவனோ,

                  “பயந்து ஒடுறா பாரு.. மறுபடியும் என் மூஞ்சில முழிச்சுராத அப்புறம் அவ்ளோ தான்” என்று கத்த அவளோ,.

                  “ஹே போடா டேய்.. உனக்கெல்லாம் கல்யாணமே ஆகாது டா.. அப்படியே ஆனாலும் சேடிஸ்டான பொண்டாட்டி தான் கிடைப்பா..” என்று சாபம் விட்டபடி செல்ல எத்தனிக்க அதில் கோபம் கொப்பளிக்க பார்த்தவனோ,

                  “ஹே உன்னை பத்தின ஒரு விஷயம் என்கிட்ட இருக்கு.. உன்ன ஒருத்தன் கல்யாணம் பண்ண போறான்னு தெரிஞ்சாலே அவன்கிட்ட உன்ன பத்தி சொல்லி ஓட வச்சுருவேன்..” என்று கூறியவனின் சொற்கள் காதில் விழுக,

                  ‘இவன் என்ன சொல்றான்’ என்றபடி ஒரு கணம் மனதில் பயம் எழுந்தாலும் செல்லும் அவசரத்தில் அவனுக்கு பதிலடி கொடுக்காமல் முறைத்தபடி மட்டும் சென்றுவிட்டாள் பெண்ணவள்.

                  அவள் சென்றதும் பெருமூச்சுவிட்டவன்,.

                  ‘இப்போ தான் நிம்மதியா இருக்கு.. நல்லவேளை தப்பிச்சேன்.. இவ ஃபிராடுன்னு அப்போவே தெரிஞ்சுட்டு.. என் நேரம் இப்படி எல்லாம் ஆகணும்னு இருக்கு.. ச்சைக்.. இனிமேல் என்ன ஆனாலும் பஸ்லயே வரக்கூடாது..’ என்று நினைத்து மனதினுள் பொறுமிக் கொண்டிருக்க அதற்குள் அவன் இறங்க வேண்டிய இடம் வந்துவிட இறங்கி சென்றுவிட்டான்.

                  இவ்வாறாக நடந்ததை தூயவன் கூறிமுடிக்க கேட்டுக்கொண்டிருந்த மூவருக்கும் அதிர்ச்சியும் குழப்பமும். சமரோ,

                  “டேய் மச்சான் அன்னைக்கு தூங்கிட்டு இருக்கும் போது கனவு ஏதும் கண்டியா..” என்று கேட்க தூயவனோ,

                  “கனவா.. இல்லையே.. ஏன் கேட்குற”

                  “இல்ல எனக்கென்னமோ ஆதினி அப்படி மெசேஜ் பண்ணதெல்லாம் உன் கனவுல வந்துருக்குமோன்னு டவுட்டு” எனவும் தூயவனிடம் இருந்து கோபக்கனல் வீச தொடங்கியது.

                  ‘அயோ முறைக்குறானே’ என்று எச்சில் விழுங்கிய சமர்,

                  “இல்ல மச்சான்.. ஆதினிய பார்த்தா அப்படிப்பட்ட பொண்ணு மாதிரி தெரியல.. அதான்..” என்று இழுக்க,

                  “அது தான் டா அவ நடிப்பே.. எவ்ளோ அழகா உங்களை கூட நம்ப வச்சிருக்கா.. அதுவும் பார்த்த ரெண்டு நாளுல..” என்க மாதவியோ,

                  “டேய் தூயவா.. நீ பேசாம அவகிட்டயே நேரடியா இதை பத்தி பேசிடு… எனக்கும் சமர் சொன்ன மாதிரி அவளை தப்பா நினைக்க தோணல..” என்க மாதவனும்,

                  “ஆமா டா… மாது சொல்ற மாதிரி.. அவகிட்டயே டைரக்ட்டா கேட்குறது பெட்டர்.. இல்லனா நாங்க கேட்டு சொல்றோம்..” என்று ஒரு அண்ணனாக கேட்க தூயவனோ,

                  “கொஞ்சம் வாய மூடுறீங்களா மூணு பேரும்.. அப்படி என்ன என்மேல இல்லாத நம்பிக்கை அவமேல உங்களுக்கு.. சரி அப்படியே இருக்கட்டும்… உங்களுக்கு கூடிய சீக்கிரம் நான் ப்ரூவ் பண்ணி காட்டுறேன்.. நானா சொல்றவரைக்கும் யாரும் இதைப்பத்தி அவகிட்ட கேட்கவோ சொல்லவோ கூடாது.. மீறி சொன்னீங்கன்னு தெரிஞ்சது.. அதோட நமக்குள்ள எல்லாம் முடிஞ்சது சொல்லிட்டேன்..” என்று அனல் தெறிக்க பேசியவன் விறுவிறுவென வீட்டிற்குள் சென்றுவிட்டான். மாதவியோ,

                  “என்னடா இவன்.. இப்படி பேசிட்டு போறான்.. யாரை நம்புறதுன்னே தெரியலயே..” என்க சமரோ,

                  “ஆமா டி.. இவன் காரணமில்லாம இவ்ளோ கோபம் படவும் மாட்டான்.. அதே சமயம் ஆதினிய அவன் சொன்ன மாதிரி இமேஜின் பண்ணவும் முடியல..” என்றான் குழம்பியபடி. மாதவனோ,

                  “சரி பொறுத்திருந்து பார்ப்போம்.. எல்லா பிரச்சனையும் என்னால தான்.. அவனை இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு..”

                  “இல்ல மாதவ்.. நானும் தான் காரணம்.. ஆனா ஒண்ணு.. தயவு செஞ்சி என்ன ஆனாலும் ஆதினிக்கிட்ட இதை பத்தி பேசிறாதீங்க.. இவன் சொன்னதை மீறி நாம செஞ்சா அப்புறம் அவ்ளோ தான்.. பொறுமையா தான் டீல் பண்ணனும் இதை.. கொஞ்சம் கொஞ்சமா அவன்கிட்ட பேசி அவனை வச்சே பேச வைப்போம்” என்க சமரும் மாதவனும் ஆமோதித்தனர்.

                  இவர்களை எச்சரித்து விட்டு அறைக்கு சென்ற தூயவனோ அறை வாசலுக்கு வந்த பின் தான் உணர்ந்தான். இவள் அறைக்குள் இருப்பதனால் எரிச்சல்பட்டு தான் வெளியில் சென்றோமென.

                  “அயோ கடவுளே.. எல்லாம் என் நேரம்.. பொதுவா கல்யாணம் பண்ணிட்டு வந்த பொண்ணுங்க தான் புது இடத்துல எங்க எப்படி தங்கன்னு முழிச்சுட்டு இருப்பாங்க.. இங்க என் ரூமுக்குள்ள போகவே நான் யோசிக்க வேண்டியிருக்கு.. ச்சைக் கருமம்” என்று சத்தமாக புலம்பியபடி அறை வாசலில் தூயவன் அல்லாடிக் கொண்டிருக்க ஆதினியின் செவியில் அவனது புலம்பல்கள் நன்றாகவே விழுந்தது. வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்ற எண்ணியவள்,

                  “சார் ரொம்ப நேரமா என் பர்மிஷன்காக வெளிய நிக்குறீங்க போல.. சும்மா உள்ள வாங்க சார்.. நான் உங்களை ரெஸ்ட்ரிக்ட் எல்லாம் பண்ணமாட்டேன்..” என்று அவனுள் எரிகின்ற தீயில் நெய் மட்டுமில்லாமல் மண்ணெண்ணெயும் சேர்த்து ஊற்ற,

                  “யாரு ரூமுக்கு யாரு டி பர்மிஷன் கொடுக்குறது..” என்றபடி அவளது கைகளை சிறைசெய்து சுவற்றில் சாய்த்தவனின் கண்கள் அவளது கண்களை நேராக பார்க்க அதிலோ கோபம் மட்டுமே கொப்பளித்தது.

                  “பொண்டாட்டி ஆயிட்டேன்னு தான இப்படி என்மேல உரிமையோட உரசிட்டு நிக்குற” என்றவள் அவனை விட திமிராக அவன் கண்களை நோக்க அவனோ,

                  “ஹே.. ச்சீ.. உன்னையெல்லாம் மனுஷியா கூட நான் மதிக்க மாட்டேன்.. இதுல பொண்டாட்டின்னு வேற நான் உரிமை எடுத்துக்கணுமா..” என்றவனின் பேச்சில் ஏகமாய் ஏளனம் கொட்டிக் கிடந்தது. ஏனோ அக்கணம் பெண்ணின் மனதில் சிறு வலி அவளறியாமல் உண்டானதை உணர்ந்தவள்,

                  “நியாயப்படி உன்மேல கோபமா இருக்க வேண்டியது நானு.. உன்னை மாதிரி ஒரு சைக்கோவை கட்டுனதுக்கு நான் தான் கடுப்பாகனும்.. ஆனா சம்மந்தமே இல்லாம எல்லத்தையும் தலைக்கீழா நீ பண்ணிட்டு கிடக்க.. நீ என்ன டா என்னை பொண்டாட்டியா ஏத்துக்குறது.. அதுக்கு முதல்ல நான் உன்னை புருஷனா ஏத்துக்கிட்டா தான..”

                  “உன்னை மாதிரி ஃபிராடுக்கிட்ட சைக்கோ மாதிரி தான் டி நடந்துக்கணும்.. சைக்கோ என்ன பண்ணுவான்னு இனிமே நீ தெரிஞ்சுப்ப”

                  “இங்க பாரு.. உனக்கு அவ்ளோ தான் லிமிட் சொல்லிட்டேன்.. சும்மா சும்மா நீ என்னை ஃபிராடுன்னு சொல்ற.. ஏதோ உன் சொத்தை எல்லாத்தயும் ஆட்டையை போட்ட மாதிரி பேசுற..” எனவும்,

                  ‘அதானே டி உன் பிளானே..’ என்றபடி மனதில் நினைத்தவன் இப்பொழுது அதைக் கூறினால் சுதாரித்துவிடுவாள். பின்பு சமர், மாதவன், மற்றும் மாதவியிடம் இவளது முகத்திரையைக் கிழிக்க முடியாமல் போய்விடும் என்று எண்ணியவன் மீண்டும் ஏளனமாக சிரித்தபடி மட்டும் நிற்க அதற்கு மேல் அவனது உடல் கணத்தை தாங்க முடியாமல் அவனை கரம் கொண்டு தள்ள அந்நேரம் ஆதினியின் காலில் அணிந்திருந்த கொலுசு தூயவனது கால் சட்டையின் விளிம்பில் சிக்கி அவன் தடுமாற பிடிமானம் இல்லாமல் அவளோடு சேர்ந்து மெத்தையில் விழுந்தான் தூயவன். என்ன நிகழ்ந்தது என யூகிக்கும் முன்னரே இவர்கள் மெத்தையில் கிடக்க இருவரின் இதயமும் ஒருகணம் அதிர்ந்து அடங்கியது இருவரும் அறியாத ஒன்று.

                  அதே நேரம் கோபமாக சென்ற தூயவன் ஆதினியிடம் கடினமாக ஏதும் நடந்து கொள்வானோ என்றஞ்சி சமர், மாதவன் மற்றும் மாதவி அவனை தடுக்க எண்ணி அவனறைக்கு வந்து நிற்கவும் இவர்கள் இருவரும் மெத்தையில் ஒருவர்மேல் ஒருவர் இருக்கும் காட்சியைக் காணவும் சரியாக இருந்தது. வந்த வேகத்தில் மூவரும்,

                  “அடப்பாவி” என்ற ரீதியில் அதிர்ந்து பார்க்க தூயவனும் இதை எதிர்பார்க்காமல் அவர்களை அதிர்ந்து பார்த்தான். முதலில் சுதாரித்த மாதவியோ மற்ற இருவரின் கண்களையும் பொத்தி தலையில் கொட்டியபடி இழுத்து சென்றுவிட்டாள்.

                   

                  தொடரும் அதிர்வுகள்…

                    The post இதயத்தின் அதிர்வு நீயா..? – 14 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                    ]]>
                    https://thoorigaitamilnovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%ae%be-14/feed/ 0 17207
                    அத்தியாயம் – 19 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-2/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-2/#respond Tue, 30 Jan 2024 02:24:22 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-2/ அத்தியாயம் – 19 “அதே தாண்டி நான் கேட்கறேன்.. நீ கோபமா இருந்தா நான் ஏன் பசில இருக்கனும்?” என்று அவளிடம், ராகவும் பதிலுக்குக் கத்திவிட்டு, அவளைத் தாண்டி வைக்கப்பட்டிருந்த பிரியாணியை எடுத்து உண்ணத் துவங்கினான். அதைப் பார்த்து மணியின் கண்கள் கனன்றாலும், அவனிடம் எதுவும் பேசாது இவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர, இதழுக்குள் சிரித்துக் கொண்ட ராகவோ.. “அடியேய் மஞ்சக்கிழங்கே..” என்று அழைத்தான். அவனது அழைப்பில் விழிகள்

                    The post அத்தியாயம் – 19 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                    ]]>

                    Loading

                    அத்தியாயம் – 19

                    “அதே தாண்டி நான் கேட்கறேன்.. நீ கோபமா இருந்தா நான் ஏன் பசில இருக்கனும்?” என்று அவளிடம், ராகவும் பதிலுக்குக் கத்திவிட்டு, அவளைத் தாண்டி வைக்கப்பட்டிருந்த பிரியாணியை எடுத்து உண்ணத் துவங்கினான்.

                    அதைப் பார்த்து மணியின் கண்கள் கனன்றாலும், அவனிடம் எதுவும் பேசாது இவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர, இதழுக்குள் சிரித்துக் கொண்ட ராகவோ..

                    “அடியேய் மஞ்சக்கிழங்கே..” என்று அழைத்தான்.

                    அவனது அழைப்பில் விழிகள் ஆச்சர்யத்தில் விரிய, மணி மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள்.

                    “என்ன பேரெல்லாம் புதுசா இருக்கு?” என்று மெல்ல அவள் கேட்க, அவனோ செல்லமாகக் கண்ணடித்தபடி.. “ஹ்ம்ம்.. ஆமா..” என்று கூற, மணி அவன் புறமாக நன்றாகத் திரும்பி அமர்ந்து அவனைப் பார்த்தாள்.

                    “உன்ன என்னால புரிஞ்சுக்கவே முடிலடா..” என்று அவள் வியப்புடன் கூற, அவளருகே நெருங்கி அமர்ந்த ராகவோ..

                    “எனக்கே என்ன புரிஞ்சுக்க முடில மணி.. நான் தான் சொன்னேனே.. கல்யாணத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்தாலும்.. பாட்டி கல்யாணப் பேச்சை எடுத்ததுமே எனக்கு உடனே சரின்னு தான் சொல்லத் தோனுச்சு..

                    அப்போதுல இருந்து எனக்கு நீ மஞ்சக்கிழங்கா தான் தெரியற..” என்று அவன் சிரித்தபடியே கூற, அதை “ஆ..” என்று கேட்டுக்கொண்டிருந்தாள் மணி.

                    அவள் வாய் சிறிதளவு திறந்திருக்க, அவள் தன்னையே மெய் மறந்து பார்த்திருக்கும் அந்தச் சிறு இடைவெளியில், அவளுக்கு ஒரு வாய் பிரியாணியை ஊட்டிவிட்டான் ராகவ்.

                    “அமைதியா சாப்பிடு.. சாப்பிட்டாலே பாதி பிரச்சனை சரியாகிடும்.. உன்னோட கோபமும் குறைஞ்சுடும்..” என்று ஓர் அன்னையின் கனிவுடன் அவன் அள்ளிக் கொடுக்க, மறுபேச்சின்றி அவனையே பார்த்தபடி உண்டு முடித்தாள் மணி.

                    சாப்பிட்டு முடித்துவிட்டு படுக்கையில் படுத்தவள், தனதருகே இருக்கும் ராகவின் கரத்தைப் பற்றிக் கொண்டு.. “நமக்குள்ள எல்லாமே சரியாகிடுமா டா?” என்று கேட்க, அவனோ மிருதுவான குரலில்..

                    “என்ன பொறுத்த வரைக்கும் நமக்குள்ள எல்லாமே சரியாகிடுச்சு மணி.. இப்போ என் மனசுல இருக்கறதெல்லாம் உன் மேல இருக்கற காதல்.

                    அது நிதர்சனம்! என்னென்னைக்கும் மாறாது.. உனக்குத் கொஞ்சம் தெளிவு வர வரைக்கும் நான் காத்திருக்கத் தயார். ஆனா..” என்று அவன் பாதியிலேயே நிறுத்த, மணியோ சற்று கவலையுடன்..

                    “ஆனா..” என்று கேட்டாள். அவனோ இதழுக்குள் அடக்கிய குறுஞ்சிரிப்புடன்.. “அப்பப்போ இப்படி நீ முத்தா கொடுத்தா கொஞ்சம் பிழைச்சுப்பேன்..” என்று கூறிக் கண்ணடிக்க, “சீ.. போடா..” என்றவள் அவனை ஆசையாகக் கட்டிக் கொண்டாள்.

                    அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் மணிக்கு அவ்வளவு அழகாக விடிந்தது. திருமணம் என்பது இத்தனை சந்தோஷங்களைக் கொடுக்கக் கூடியதா என்று அவளே ஆச்சர்யப்படும் விதமாக ராகவ் அவளை அவ்வளவு தாங்கினான்.

                    அவளை விட்டு ஒரு நொடி கூடப் பிரிய முடியாதவனைப் போல ஒட்டிக் கொண்டே அலைந்தான். கடையில் அத்தனை வேலைகளுக்கு நடுவிலும், அவன் கவனம் அவளால் சிதறுவதை உணர்ந்துமே அவளைத் தனது அறைக்குள்ளேயே வைத்து அடைகாத்தான் எனலாம்.

                    அவளுடனே கடைக்கு வருவதும், அவள் சோர்ந்துவிடுவாளே என்று அவளுக்காக நேரமாகவே கடையில் இருந்து கிளம்புவதும், சேர்ந்துவிட்ட வேலைகளை, அவள் உறங்கிய பிறகு கணினிலேயே செய்து தன் தூக்கத்தைத் தியாகம் செய்வதுமென.. அவள் அறிந்தும் அறியாமலுமே அவளைக் காதலில் திலக்கச் செய்திருந்தான் ராகவ்.

                    இதில் மணியே.. “என்னடா.. முன்னாடி எல்லாம் உன் கண் முன்னாடி வந்தாலே இது அழகு இல்ல அகோரம்னு கிண்டல் பண்ணுவ.. இப்போ இந்த அகோரத்தை கூடக் கூட்டிகிட்டு சுத்திட்டு இருக்க?” என்று கேலியாகக் கேட்டாலும், அவனும் அதே கேலியுடனே..

                    “நீ கேள்விப்பட்டது இல்லையா காதலுக்குக் கண்ணில்லைன்னு? அதனால தான் அந்த அகோரம் இப்போ என் கண்ணுக்குத் தெரியாம வெறும் அழகியா மட்டுமே தெரியற..” என்று அவளை மடியில் கிடத்திக் கொண்டு கொஞ்சுவான்.

                    இப்பொழுதும் இருவருக்கும் முட்டிக் கொள்ளாமல் இல்லை.. சண்டை வராமல் இல்லை.. அனால் ஒவ்வொரு சண்டையும் அவனது சமாதானத்தில், சரசத்தில், சின்னச் சின்னக் கடிகளும், செல்லச் செல்லச் சில்மிஷங்களுமான தண்டனையில் வந்து முடிகின்றன.

                    இப்படியான ஒரு சமயத்தில் தான் மானபரனைப் பார்த்தே வெகு நாட்கள் ஆகிவிட்டது என்று கை நிறைய அவனுக்குப் பிடித்த தின்பண்டங்களுடன் அவனைத் தம்பதி சமேதராகப் பார்க்கச் சென்றனர் ராகவும் – மணியும்.

                    இவர்கள் சென்ற நேரம் அவனும் வீட்டில் தான் இருந்தான். ஹால் சோபாவில் சாய்ந்து, தலையில் கைவைத்து அமர்ந்திருந்தவனை வித்தியாசமாகப் பார்த்தபடி உள்ளே சென்றனர் ராகவும், மணியும்.

                    உள்ளே நுழைந்ததும்.. “ஏய் எரும..” என்று மனோவின் காதில் மணி கத்த, திடீரென்று கேட்ட அந்தச் சத்தத்தால் அதிர்ந்து கண் விழித்த மனோவோ..

                    “ஏய் அறிவுகெட்டவளே.. உன்ன தான் கல்யாணம் செய்து அனுப்பிவிட்டாச்சுல்ல? இப்பவும் எதுக்கு இங்க வந்து என்ன டார்ச்சர் பண்ணற?” என்று கேட்க அவன் பேசிய வார்த்தைகளின் வீரியம் தாங்காது அதிர்ந்து போய் நின்றாள் மணி.

                    “இல்லடா..” என்று அவள் ஏதோ கூற வருவதற்கு முன்பு.. “நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்.. இப்போ யாரையும் பார்த்துப் பேசற மனநிலைல இல்ல நான். என்ன தொந்தரவு செய்யாம ரெண்டு பேரும் கிளம்பறீங்களா?” என்று கூற மணிக்கு மனதுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.

                    அவனது பேச்சில் கண்களெல்லாம் கலங்கிவிட, தலைகுனிந்து நின்றிருந்த மணியைப் பார்த்த ராகவுக்கு உள்ளுக்குள் சுருக்கெனக் கோபம் முளைத்தது.

                    “ஏய்.. என்ன நீ பாட்டுக்குக் கண்டமேனிக்கு கத்திட்டு இருக்க? இது என்ன நீ சம்பாதிச்சு கட்டின வீடா? உன் அப்பா கட்டின வீடு தான? இதுல என்னவோ உனக்கு மட்டும் தான் உரிமை இருக்கற மாதிரி பேசற?

                    ஏதோ கூடப்பிறந்தவனாச்சேன்னு பார்க்க வந்தா, இப்டியாடா கட்டிக்கொடுத்த பொண்ண அசிங்கப்படுத்துவ?” என்று அவன் கூற, அவன் கூறியதன் சாராம்சம் புரியாமலேயே எகிறத் துவங்கினான் மானபரன்.

                    “ஓஹோ?! எனக்கு இப்போ இல்ல புரியுது, புருஷனும், பொண்டாட்டியும் இவ்வளவு அக்கறையா இங்க எதுக்கு வந்தீங்கன்னு?” என்று அவன் போலியாய் ஆச்சர்யப்பட்டுக் கேட்க, அவன் எதைப் பற்றிக் கூறுகிறான் என்று புரியாத ராகவோ அவனைப் புருவம் சுறுக்கிப் பார்த்தான்.

                    “என்ன புரியலையா? உனக்கு ஏற்கனவே என்கிட்டே எல்லாத்துலயும் போட்டி. இப்போ இவளைக் கல்யாணம் செய்துக்கிட்டதனால என்னோட சொத்துல பாதி உனக்கு வந்துடும். அதை வச்சு நீ என்னவிட பெரியாளாகலாம்னு தான பார்க்கற?” என்று அவன் கேட்க, ராகவுக்கோ இப்பொழுது கட்டுக்கடங்காத அளவுக்குக் கோபம் வந்தது.

                    “ச்சை.. தான் திருடன், பிறரை நம்பான்னு சொல்லுவாங்க. அப்படி நீ தான் உனக்கு வரப்போற பொண்டாட்டி மூலமா வரச் சொத்தையெல்லாம் கணக்குப் போட்டுக் கல்யாணம் செய்துக்குவியோ என்னவோ.. நான் மணியைக் கல்யாணம் செய்துக்கிட்டது அவளுக்காகத் தான்.

                    அதையெல்லாம் உன்கிட்ட சொல்லிப் புரிய வைக்கற அளவுக்கு நீ ஒன்னும் எனக்கு முக்கியமானவன் கிடையாது.

                    இன்னொன்னு நல்லா கேட்டுக்கோ தம்பி.. இந்த வீடு உன் அப்பாவே கட்டியிருந்தாலும், இப்போ இது என் பாட்டி வீடு. இங்க நானோ, என் பொண்டாட்டியோ வரதுக்கோ, தங்கறதுக்கோ நீ எந்தத் தடையும் சொல்ல முடியாது.

                    ஆனாலும் மணியோட கூடப்பிறந்தவன்னு உன்ன பார்க்க வந்தோம் பாரு.. எங்க புத்திய எதுலையாவது அடிக்கணும்..” என்று வெகுண்டெழுந்த கோபத்தில் பேசியவன் மணியின் கரத்தைப் பற்றியபடி..

                    “வா மணி.. இன்னும் இங்க இருந்து இவன் மூஞ்சிய பார்த்துட்டு இருக்க எனக்கு இஷ்டம் இல்ல..” என்று கூறி வெளியே சென்றவன், வாசல் தாண்டும் முன் ஒரு கணம் நின்று..

                    “இன்னைக்கு நீ பேசின பேச்சுக்கு அமைதியா போறேன்னு நினைச்சுக்காத. மறுபடியும் சொல்லறேன்.. இது உன்னோட வீடு மட்டும் கிடையாது.

                    உனக்கு இருக்குடா ஒருநாள்..” என்று மீண்டும் கருவியபடியே தான் சென்றான் அவன்.

                    மனோவைப் பார்த்துவிட்டு வந்த பிறகு மணி அன்று முழுவதுமே மொத்தமாய் உடைந்து போய்க் காணப்பட்டாள்.

                    முதலில் மனோவைப் பார்த்த்துவிட்டு வருவோம் என்று ராகவ் கூறியதற்கு, அவள் வேண்டாம் என்று தான் தடுத்தாள்.

                    “டேய்.. அவனுக்கெல்லாம் என் மேல நீ நினைக்கற மாதிரி பாசமெல்லாம் இல்ல.. அவன், என்ன அவனோட போட்டியா தான் பார்க்கறான்..” என்று அவள் கூறியதற்கு ராகவ் தான்..

                    “ஹேய்.. அவன் கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தாலும் இப்போ நீ கல்யாணமாகிப் போய்ட்டேன்ற காரணத்தால அவனுக்கு உன் மேல பாசம் அதிகமா தான் ஆகியிருக்கும்.

                    எல்லா பசங்களும் அப்படித் தான் இருப்பாங்க.. ஆனா தன்னோட அக்காவுக்கோ, தங்கச்சிக்கோ கல்யாணமான பின்னாடி தான் அவங்களுக்குள்ள உண்மையான பாசமெல்லாம் வெளில வரும்.

                    நானும் கூடத் தான் கல்யாணத்துக்கு முன்னாடி உன்கிட்ட எப்ப பாரு முறைசிச்சுகிட்டே இருந்தேன்.. இப்பவும் அப்படியா இருக்கேன்?” என்று அவன் நீண்ட விளக்கம் கொடுக்க, அதில் தெளிந்து தான் அவள் மனோவைச் சந்திக்கச் சென்றது.

                    ஆனால் அங்கே சென்று அவன் இப்படி பேசவும் இவளது ஈகோவும் தூண்டப்பட, இரண்டு நாட்கள் முகத்தை உர்ரென்று வைத்திருந்தவள், அதன் பிறகு சாதாரணமாகத் தனது வேளைகளில் ஈடுபடத் துவங்கினாள்.

                    இந்த நிலையில் தான் இந்த வருடத்திற்கான அகில இந்திய அளவில் நடத்தப்படும் நகைக் கண்காட்சிக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதில் ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு வகையில் அலங்காரின் நகை வடிவமைப்பும், ஆபர்ணாவின் நகை வடிவமைப்பும் பரிசை வெல்லுவது உறுதி.

                    இந்த வருடம் அதற்கான நகை வடிவமைப்பில் தான் மணி தனது முழு கவனத்தையும் செலுத்தியிருந்தாள். ஆனால் தான் அதற்கான வடிவமைப்புகளைக் செய்துகொண்டிருக்கிறேன் என்று அவள் ராகவிடம் கூறவில்லை. நகை வடிவமைப்பு வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு ராகவுக்கு அதை சர்ப்ரைஸாக காண்பிக்கலாம் என்று எண்ணியிருந்தாள் அவள்.

                    ஆனால் அப்பொழுது தான் அவளுக்கு அந்தப் பேரதிர்ச்சி காத்திருந்தது!

                    அன்றும் வழமை போலக் கணவனின் செல்லச் சீண்டலில் கண்விழித்து, இருவரும் ஒன்றாகக் கிளம்பி கடைக்குச் செல்லும் வரையில் எல்லாமே நன்றாகத் தான் இருந்தது.

                    ஆனால்.. கடைக்குச் சென்ற ஒரு மணிநேரத்திலேயே அவர்களது அறைக் கதவைத் தட்டித் திறந்துகொண்டு வந்தாள் தர்ஷா!

                    அதிர்ச்சியில் விழிகள் விரிய, வந்தவளைப் பார்த்த மணியோ, திரும்பி ராகவைப் பார்க்க.. அவனது கண்களும் முகமும் அளவற்ற மகிழிச்சியில் பளிச்சிட்டது.

                    இதயத்தில் எங்கிருந்தோ வந்து ஏறிக்கொண்டு பாரத்தை கைகளால் அழுத்திவிட்டபடி அவர்கள் இருவரையும் மணி பார்த்தது பார்த்தபடி இருக்க, உள்ளே வந்த தர்ஷாவோ..

                    “ஹலோ அழகு.. எப்படி இருக்க? உன் கல்யாணத்தப்போ பார்த்தது.. சார் எப்படி பார்த்துக்கறார் உன்ன?” என்று கேட்க, மணியோ அவளது கேள்விக்கு பதில் சொல்ல நினைத்தாலும் வாயில் வார்த்தைகள் வராது திணறினாள்.

                    அவள் அமைதியாகப் பார்த்துக்கொண்டே இருக்க, தர்ஷாவே தொடர்ந்தாள்.

                    “என்ன மணி.. பேயறைஞ்ச மாதிரி பார்த்துட்டு இருக்க?” என்று கேலியாகக் கேட்டாள்.

                    அதற்கு மணி பதில் சொல்லுவதற்குள் ராகவ் தொடர்ந்தான்.

                    “உன்ன இங்க திடீருன்னு பார்த்ததால ஷாக் ஆகிட்டான்னு நினைக்கறேன். அதான் அப்படியே பிரீஸ் ஆகிட்டா..” என்று கூற, தர்ஷாவோ போலியாய் ஆச்சர்யம் காட்டி கண்களை விரித்தாள்.

                    “ஹோ?! அப்போ நான் இங்க வர்ரதைப் பத்தி நீங்க மணிகிட்ட எதுவுமே சொல்லலையா?” என்று புருவத்தை உச்சி மேட்டுக்குத் தூக்கியபடி அவள் கேட்க, இதழ்களைப் பிதுக்கினான் ராகவ், சிரித்த முகமாகவே!

                    இவர்களது இந்தப் பொடி வைத்தப் பேச்சைத் தாங்கிக்கொள்ள முடியாது மணியே, தர்ஷாவிடம்..

                    “சரி அவர் தான் சொல்லல.. நீயே தான் சொல்லேன் இங்க எதுக்கு இப்போ திடீர் விஜயம்னு?” என்று சாதாரணமாகக் கேட்பது போலக் கேட்க, அவளைப் பார்த்தது சிரித்துக்கொண்டே..

                    “உன்ன ரீபிலேஸ் பண்ண..” என்று கண்ணடித்தபடி அவள் கூறிய வார்த்தைகளில் அமிலம் தாக்கியது மணியின் நெஞ்சுக்குள்!

                     

                      The post அத்தியாயம் – 19 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                      ]]>
                      https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-2/feed/ 0 17201