Loading

அத்தியாயம் – 23

ஆரவ் அவனுக்கான சிகிச்சையை ஆரம்பித்து, இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன.

அக்டோபர் கடைசி வாரம். சென்னையில் கொஞ்சம் குளிர்காலம் தொடங்கி, பருவமழையும் நெருங்கிக் கொண்டிருந்தது.

உளவியல் துறையில், அன்று ஆராய்ச்சி விளக்கக்காட்சி நாள். ஆரவ் மற்றும் அமுதினி கடந்த இரண்டு மாதங்களாக கடுமையாக உழைத்த பிறகு, துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தங்கள் ஆரம்ப கண்டுபிடிப்புகளை வழங்கவிருந்தனர்.

கல்லூரியின் கருத்தரங்கு திடல் நிரம்பியிருந்தது. துறைத்தலைவர் மீனாட்சி, பேராசிரியர் சரண்யா, மற்ற ஆசிரியர்கள், முனைவர் பட்டப்படிப்பு மாணவர்கள், முதுகலை மாணவர்கள் – அனைவரும் அங்கே இருந்தனர்.

அமுதினி மேடையில், ப்ரொஜெக்டர் திரைக்கு அருகில் நின்று கொண்டிருந்தாள். அவள் அழகான எளிய ஆடையை அணிந்திருந்தாள் – கடல் நீல நிற சேலை, குறைவான நகைகள், அவளிடம் தொழில்முறை தோற்றமிருந்தது. அவள் கைகளில் சில குறிப்புகள் அடங்கிய தாள்கள், ஆனால், அவள் அவற்றை அதிகம் பார்க்கவில்லை. அவள் இதற்கு தயாராகவும் நம்பிக்கையுடனும் இருந்தாள்.

ஆரவ் பார்வையாளர்களின் முதல் வரிசையில் அமர்ந்திருந்தான். அவன் அமுதினியைப் பார்த்து, அவளுக்கு ஒரு ஊக்கமளிக்கும் புன்னகை ஒன்றை பரிசளித்தான். அவள் அவனைப் பார்த்து நுட்பமாக தலையசைத்தாள்.

“குட் ஈவ்னிங் எவ்ரிவன்…” என்று அமுதினி ஆரம்பித்தாள். அவளது குரல் பயமின்றி தெளிவாக வந்தது.

“இன்னைக்கு நான் ப்ரசென்ட் பண்ணப்போவது – ‘அதிர்ச்சியில் இருந்து தப்பியவர்களில் வெவ்வேறு சிகிச்சை முறைகளின் செயல்திறனை ஒப்பிடுதல்: ஒரு ஆரம்ப ஆய்வு.’ இது முனைவர் ஆரவ் கிருஷ்ணா மேற்பார்வையில், நான் நடத்தியிருக்கும் ரிசர்ச் ப்ராஜெக்ட்…” என்று அவளது உரையாடலை தொடங்கினாள்.

அடுத்த முப்பது நிமிடங்கள், அமுதினி அற்புதமாக ஆராய்ச்சி முறையை பற்றி விளக்கினாள். 

பங்கேற்பாளர்களின் மக்கள்தொகை விவரங்களைப் பகிர்ந்து கொண்டாள். ஆரம்ப கண்டுபிடிப்புகளைப் பற்றி விவாதித்தாள். அதற்கான விளக்கப்படங்கள் மற்றும் வரைபடங்களைக் காட்டி, மேலும் புள்ளிவிவர பகுப்பாய்வுகளையும் அனைவருக்கும் புரியும் விதத்தில் விளக்கினாள்.

பார்வையாளர்களும் கவனமாகக் கேட்டார்கள். சிலர் குறிப்புகள் எடுத்துக் கொண்டனர். ஆரவ் அமுதினி சிறப்பாக பேசுவதை பெருமையுடன் பார்த்தான்.

விளக்கக்காட்சிக்குப் பிறகு, கேள்வி அமர்வு ஆரம்பித்தது. பல ஆசிரியர்கள் கேள்விகளைக் கேட்டார்கள். அமுதினி அனைத்து கேள்விகளுக்கும் புத்திசாலித்தனமாக பதிலளித்தார். சில கேள்விகள் கடினமாக இருந்தன, ஆனால் அவள் நன்கு, நுணுக்கமாக பதிலளித்தாள்.

ஒரு கட்டத்தில், துறைத்தலைவர் மீனாட்சி ஒரு சவாலான கேள்வியைக் கேட்டார். 

“அமுதினி, உங்க சாம்பிள் சைஸ் சின்னதா இருக்கு. இந்த கண்டுபிடிப்புகளை ஜெனரலைஸ் பண்றதுக்கு முன்னாடி, நீங்க பெரிய  சாம்பிளோட replicate பண்ணுவீங்களா?”

அமுதினி தயங்காமல், “நிச்சயமாக மேம்… இது ஒரு ஆரம்ப நிலை மட்டும்தான்… எங்களோட அடுத்த கட்டத்தில் நாங்க மாதிரிகளின் அளவை  அதிகரிப்போம், நீண்ட ஃபாலோ-அப் பீரியட் வச்சுக்குவோம்.. இந்த கண்டுபிடிப்புகள் நம்பிக்கையானது, ஆனா, கொஞ்சம் வேரிடேஷன் தேவை. அதை நாங்க அக்னாலெட்ஜ் பண்றோம்.”

அவளது பதிலில் மீனாட்சியும் ஈர்க்கப்பட்டார்.

விளக்கக்காட்சிக்குப் பிறகு, அங்கே பலத்த கைதட்டல். 

பேராசிரியர் சரண்யா மேடைக்கு வந்து, “தாங்க் யூ அமுதினி… பிரசென்டேஷன் எக்ஸலென்ட்… ஆரவ் சார், நீங்கள் ஏதாவது ஆட் பண்ண விரும்புறீங்களா?”

ஆரவ் மேடையை நோக்கி வந்தவன், “நான் அமுதினியின் வொர்க்கை பாராட்ட வார்த்தைகள் இல்ல… அவங்க ஒரு நுணுக்கமான, அர்ப்பணிப்புள்ள, நுண்ணறிவுள்ள ஆராய்ச்சியாளர். இந்த ப்ராஜெக்ட் அவங்களோட ஹார்ட் வொர்க் இல்லாம இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது… ஐம் ப்ரௌட் டூ பீ ஹேர் மெண்டர்…” என்று பெருமையுடன் பேசினான்.

ஆரவின் வார்த்தைகள் அமுதினிக்கு ஒரு பறக்கும் உணர்வைத் தந்தன. அவன் அவளை வெளிப்படையாகப் பாராட்டுவதைக் கேட்டதில் அவ்வளவு ஆனந்தம்!

அவர்களின் விளக்கக்காட்சி சிறப்பாக முடிந்தது.

*******

மதிய உணவு இடைவேளை. கல்லூரி உணவகத்தில், அமுதினி தனியாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவள் சோர்வாக உணர்ந்தாள் – விளக்கக்காட்சியின் பதற்றம் நீங்கியதும், சோர்வு வந்தது.

திடீரென்று, யாரோ ஒருவர் அவளது மேஜைக்கு வந்தது போலிருக்க, நிமிர்ந்து மேலே பார்த்தாள். ஒரு ஆடவன் – தோராயமாக அவளுடைய வயது, அழகான, தன்னம்பிக்கையான புன்னகையுடன் நின்றிருந்தான்.

“ஹாய், நீ அமுதினி தானே? நான் கார்த்திக், PhD பண்றேன்… உன் பிரசென்டேஷன் கேட்டேன்… ரொம்ப சூப்பரா இருந்துச்சு…” என்றான் அவன் 

அமுதினி மிதமான சிரித்து, “தேங்க் யூ.” என்க,

“நான் இங்க உட்காரலாமா?”

“ம்ம்…”

“நீ ரொம்ப டேலண்டட் அமுதினி… உன் பிரசென்டேஷன் பக்கா புரொபஷனலா இருந்துச்சு… நீ PhD-க்கு ப்ளான் பண்றியா?”

“ஆமா, நான் யோசிச்சிட்டு இருக்கேன்…”

அவர்கள் ஆராய்ச்சி பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். கார்த்திக் நட்பாக, சுவாரஸ்யமாக பேசினான். அவன் அதிர்ச்சி உளவியலில் ஆர்வம் காட்டி, அமுதினியின் நுண்ணறிவுகளைக் கேட்டு தெரிந்துக் கொண்டான்.

சிறிது தூரத்தில், உணவக நுழைவாயிலில், ஆரவ் நின்று கொண்டிருந்தான். அமுதினியை வாழ்த்துவதற்காக தேடி வந்திருக்க, அவளிடம் போகாமல் அப்படியே நின்றுவிட்டான்.

அவன் அமுதினியைப் பார்க்க, அவளோ கார்த்திக்குடன் அமர்ந்து சிரித்து, பேசிக்கொண்டிருந்தாள். கார்த்திக் அவளை சுவாரஸ்யமாக பார்த்து, உற்சாகமாகப் பேசினான்.

ஆரவ் திடீரென்று ஒரு விசித்திரமான உணர்வை உணர்ந்தான். அசௌகரியம்! அமைதியின்மை! கோபம்! அவனால் அந்த உணர்வினை அடையாளம் காண முடியாமல் போனது!

அமுதினி மற்றவருடன் பேசுவதைப் பார்த்து, பொறாமையாக இருந்தது.

அந்த எண்ணம் செல்லும் திசையில் அதிர்ந்து, ‘நான் ஏன் ஜெலஸா ஃபீல் பண்றேன்? அமுதினி என் ஸ்டூடண்ட்… அவள் யார்கிட்ட வேணாலும் பேசலாம்… அது அவளோட விருப்பம். நான் ஏன் சங்கடமாக உணர்கிறேன்?’ என்று கடிந்துக் கொண்டான்.

ஆனால், ஓர் உண்மை அவனைத் தாக்கியது – அவன் அமுதினியின் அன்பை எதிர்பார்த்தான். அவளுடைய துணையை விரும்பினான். அவன் அவளை அக்கறையுடன் கவனித்துக் கொண்டான்.

இது வெறும் வழிகாட்டி-மாணவர் உறவு மட்டும் இல்லை… இதில்.. அதற்கும் மேலாக ஏதோ ஒன்று உள்ளது என்பதை உணர்ந்தான்.

அதில் ஆரவ் பதட்டமடைந்து, ‘இல்ல. இது தவறு… நான் மறுபடியும் இந்த ஃபீலிங்-க்குள்ள போக முடியாது… நான் இன்னும் குணமாகல… நான் என் ட்ராமாவை முழுசா ப்ராசஸ் பண்ணல… நான் அதுக்கெல்லாம் ரெடி ஆகல…’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

அவன் அமுதினியிடம் போகாமலே, உணவகத்தை விட்டு வெளியேறினான்.

*******

மாலை சிகிச்சை அமர்வு. 

டாக்டர் ரங்கநாதனின் அறையில், ஆரவ் பதட்டமாக உட்கார்ந்திருந்தான்.

“ரங்கநாதன் சார், எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு… நான்… நான் இன்னைக்கு ஒரு வித்தியாசமான உணர்வை எக்ஸ்பீரியன்ஸ் பண்ணினேன்…”

“என்ன ஃபீலிங் ஆரவ்?”

“ஜெலஸி! என்னோட ரிசர்ச் அசிஸ்டன்ட் அமுதினி, அவ ஒரு பையனோட… ஃப்ரண்ட்லியா, நார்மலா, பேசிட்டு இருந்தா… ஆனால் எனக்கு… எனக்கு அது அன்கம்ஃபர்ட்டபிளா ஃபீல் ஆச்சு… நான் அவளை மிஸ் பண்றேன்… நான் அங்க அவளோட இருக்க விரும்பறேன்… இது… இது என்ன? எனக்கு தெரியல சார்…” என்று கவலையுடன் சொன்னான்.

டாக்டர் ரங்கநாதன் சிந்தனையுடன் பார்த்து, “ஆரவ், நீங்க அமுதினியை எப்படி ஃபீல் பண்றீங்க? உணமையைச் சொல்லணும்…”

ஆரவ் சற்றுத் தயங்கி, “நான் வந்து… அவ எனக்கு ஸ்பெஷல்… என்னை நல்லா அண்டர்ஸ்டாண்ட் பண்றா… ஜட்ஜ் பண்ணல… அவள் என் ட்ராமாவை கேட்டு, என்னை சப்போர்ட் பண்ணி, என் நிறை குறைன்னு எல்லாத்தையும் சேர்த்து அக்செப்ட் பண்ணினா… நான் அவளோட இருக்கும்போது, ரொம்ப சேஃப்பா ஃபீல் பண்றேன்…”

“நீ அவளை லவ் பண்றன்னு நினைக்கிறேன் ஆரவ்…”

ஆரவ் உறைந்து, “இல்ல…. அது… அது முடியாது டாக்டர்… நான் அவளை லவ் பண்ண முடியாது… நான் ப்ரோக்கன்… நான் இன்னும் ஹீலாகல… அப்படியிருந்தும் அவளை காதலிக்கும்போது, ஹர்ட் பண்ணிடுவேன்… நான் அந்த ரியா எனக்கு குடுத்த வலியை நான் அமுதினிக்கு குடுத்திட கூடாது… ஏன்னா, அவ ஏற்கனவே நிறைய வலிகளை, இழப்புகளை கஷ்டப்பட்டு கடந்து வந்திருக்கா…”

“ஆரவ், ஒன்னு நல்லா புரிஞ்சுக்க… நீயோ அமுதினியோ இங்க ரியா இல்லை… அவளோட ஒப்பிட்டு யாரையும் பார்க்காத… நீயும் அமுதினியும் ரொம்ப ஜெனியூன்… அவங்க உங்களை எல்லாம் தெரிஞ்சும் அக்செப்ட் பண்ணினாங்கன்னு நீங்களே சொல்றீங்க… ஓகே டெல் மீ… நீங்க அமுதூனியை ட்ரஸ்ட் பண்றீங்களா?” என்று கேட்டார்.

“ஆமா சார்… நான் அவளை என்னைவிட அதிகமா நம்பறேன்…”

“அப்போ ப்ராப்ளம் என்ன?”

“நான்தான் ப்ராப்ளம்… நான் என்னையே ட்ரஸ்ட் பண்ணல டாக்டர்… நான் இன்னும் ரிலேஷன்ஷிப் உள்ள போக தயாரா இல்ல… நான் என் எமோஷன்ஸ்-ஐ ஹேண்டில் பண்ண முடியுமான்னு தெரியல… எனக்கு பயமா இருக்கு டாக்டர்…” என்றான் விரக்தியாக!

ரங்கநாதன் நன்றாக சாய்ந்தமர்ந்து, “ஆரவ், பயம் இருக்கறது நார்மல்… நீங்க ட்ராமாவை எக்ஸ்பீரியன்ஸ் பண்ணியிருக்கீங்க… ஆனால், உங்களுக்கு இருக்கும் பயத்தால வாழ்க்கையை கண்ட்ரோல் பண்ண விடக்கூடாது… நீங்க கடந்த இரண்டு மாதங்களா நல்ல முன்னேற்றம் இருக்கு… நீங்க உங்க பாஸ்ட்டே ப்ராசஸ் பண்றீங்க, உங்களை மன்னிக்க கத்துக்கிட்டு இருக்கீங்க… நீங்க எல்லாத்துக்கும் தயாரா இருக்கீங்க – ஒரு உறவுக்குள்ள போக மட்டும் தயங்கறீங்க..”

“அதுக்கு நான் என்ன பண்ணணும் டாக்டர்?”

“முதல்ல, நீங்களே அக்செப்ட் பண்ணுங்க – நீங்க அமுதினியை கேர் பண்றீங்க. தட்ஸ் ஓகே… அது நார்மல். அப்பறம், உங்க உணர்வுகளை அவங்களோட ஷேர் பண்ணணும்னு அவசரப்படாதீங்க… எல்லாம் மெதுவா நடக்கட்டும்… ஆனா, மிக முக்கியமா – பயத்தால் உங்களை தனிமை படுத்திக்காதீங்க… அமுதினியை போல உண்மையா இருப்பவர்களை உங்க வாழ்க்கையில அனுமதிங்க…” என்று கூறினார்.

ஆரவ் யோசித்தான்; டாக்டர் ரங்கநாதன் சொல்வது சரிதான். அவன் தனது உணர்வுகளை ஒப்புக்கொள்ள வேண்டும். அவன் அமுதினியின் மீது அக்கறை கொண்டுள்ளான். அது, உண்மைதான். ஆனால், அவன் அவசரப்பட வேண்டியதில்லை, நடக்க வேண்டியவை எல்லாம் நிதானமாக நடக்கும்.

******

அன்று இரவு, அமுதினி தன் வீட்டில், சுருதிக்கு அழைத்துப் பேசிக்கொண்டிருந்தாள்.

“சுருதி, இன்னைக்கு பிரசென்டேஷன் நல்லா போச்சு… எல்லாரும் அப்ரிசியேட் பண்ணினாங்க…”

“சூப்பர் அமுது! நான் சொன்னல, நீ பிரில்லியன்ட்-ஆ பண்ணுவ!”

“ம்ம்… ஆரவ் சாரும் என்னை மேடையில வச்சு பாராட்டினார்… அது வேறமாதிரி ஃபீல் ஆச்சு…”

“அமுது, நீ இன்னும் அவரை லவ் பண்றியா?”

அமுதினி சிறிய அமைதிக்கு பின்னர், “ஆமா சுருதி… என்னால முடியல… புரொபஷனலா இருக்க ட்ரை பண்றேன்… எங்களுக்கான பவுண்டரிஸ் மெயின்டெயின் பண்றேன்… ஆனா, என் மனசு கேக்கல… ஒவ்வொரு நாளும் நான் அவரை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன்…” என்று கண்ணீருடன் சொன்னாள்.

“இப்போ அவர் உன்னை எப்படி ட்ரீட் பண்றார்?”

“ரொம்ப நல்லவிதமா… அவர் அன்பா, மரியாதையா, ஆதரவா இருக்கார்… அவர் மாறிட்டார் சுருதி… தெரபி அவருக்கு ஹெல்ப் பண்ணுது… ஆனா, இன்னும் சில தடைகள் இருக்கு… அவர் என்னை ஒரு ஸ்டுடண்ட்டாக தான் பார்க்கிறார்… அவ்வளவு தான்…”

“அமுது, நீ அவர்கிட்ட உன் ஃபீலிங்ஸ்-ஐ சொல்ல விரும்புறியா?”

“இல்ல… இப்போ இல்ல டி… அவருக்கு இன்னும் ஹீலிங் டைம் தேவை… நான் அவருக்கு ப்ரஷர் கொடுக்க விரும்பல… எவ்வளவு நாள் ஆனாலும் நான் பொறுமையா வெயிட் பண்ணுவேன்…”

“நீ ரொம்ப ப்ரேவ் அமுது… ஆனா, உன்னையும் மறக்காதே… உன் சந்தோஷமும் முக்கியம்…” என்று தோழியாக சொல்ல,

“நான் புரியுது சுருதி… ஆனா இப்போ, அவர் என் வாழ்க்கையில் இருக்காரே, அதுவே எனக்கு போதும்… அவர் நல்லா இருக்கார், அவர் ஹீல் ஆகிட்டு இருக்கார் – அதுவே எனக்கு சந்தோஷம்…” என்று அழுத்தமாக சொன்னாள் அமுதினி.

********

அதே நேரத்தில், ஆரவ் தனது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் நின்று கொண்டு, நகரத்தின் விளக்குகளைப் பார்த்தான். அவனது மனமோ அமுதினியைப் பற்றி யோசித்தது.

‘நான் அவளை கேர் பண்றேன்… ஆனால், நான் காதலிக்க ரெடியா இருக்கேனா? நான் அவளுக்கு சரியானவனா இருப்பேனா? நான் அவளை ஹர்ட் பண்ணமாட்டேன் தானே?’ என்று கேள்விகள் அவனது மனதை நிரப்பின. 

ஆனால், ஒன்று தெளிவாகத் தெரிந்தது – அமுதினி அவன் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நபராகிவிட்டாள். அவளில்லாமல், அவன் தனிமையாக உணர்ந்தான். அவளுடன் இருக்கும்போது, அவன் முழுமையானவனாக உணர்ந்தான்.

ஆனால், அவன் என்னதான் செய்வான்? அவன் எப்பொழுது ஒரு உறவை எதிர்கொள்ள தயாராவான்? அதனை எப்படி தெரிந்துகொள்வது?

காலம்தான் பதில் சொல்லும்! குணமடைவதற்கு நிறையவே நேரம் எடுக்கும்! 

அமுதினிக்காக அவன் இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்துவிட்டது என்பதை முற்றிலும் உணர்ந்திருந்தான் ஆரவ் கிருஷ்ணா.

அவர்களின் பயணம் தொடரும்! குணப்படுத்துதல், நம்பிக்கை, அன்பு என்று எல்லாமே மெதுவாக வளர்ந்து வருகிறது. 

அதில் நிறைய சவால்கள் உள்ளன! பல்வேறு சோதனைகள் உள்ளன!

இவற்றிலிருந்து அவர்கள் ஜெயித்து வருவார்களா? 

காத்திருப்போம்!

காலம்தான் பதில் சொல்லும்!

********

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
12
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்