Loading

அத்தியாயம் 12

 

மற்றவர்களும் மேக்கப் பண்ணி ரெடியாக ஆரம்பிக்க. ப்ரகலத்தன், “நோ ஒர்ரி, நல்லா பண்ணிடலாம் ஓகே” என்றான் எழிலிடம்.

 

“டயலாக்ஸ் மட்டும் மறக்காம இருக்கணும் ப்ரெசிடெண்ட்”.

 

“அதெல்லாம் மறக்காது. அப்டியே மறந்தாலும் உனக்குத்தான் சீன் தெரியுமே, சொந்தமா பேசிவிட்டுறு” என்றான் அவளை இலகுவாக்க.

 

“சொந்தமா ௭ன்ன வேணாலும் பேசிக்கட்டுமா ப்ரெசிடெண்ட்” என சொல்லி புருவத்தை ஏத்தி சிரிக்க.

 

“ஓ!! பேசி தான் பாரேன்” ௭ன்றான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவண்ணம் இருக்க.

 

அந்நேரம் முதலாம் ஆண்டு வேதியல் ஆசிரியர் அந்த பக்கம் வந்தவர் இவர்களை கண்டு, “ஆறெழில், அல்ரெடி உன்ன வார்ன் பண்ணலாம்னு வந்தா, என்ன பண்ணிட்டுருக்க நீ? படிக்க தான வந்த. காலேஜ் சேந்து பத்து நாள் இருக்குமா? அதுக்குள்ள காலேஜ் கட் அடிச்சுட்டு சுத்தப் பாய் ப்ரண்ட் பிடிச்சாச்சு.”

 

“உன்னட்டயிருந்து இப்டி ஒரு பிஹேவியர் எதிர்பார்க்கல ப்ரகலத்தன்” என எழிலிடம் ஆரம்பித்து ப்ரகலத்தன் வரை அவர் போக்கில் திட்டிக் கொண்டிருந்தார்.

 

ஆறெழில் முழிக்க, “என்னாச்சு சார்” என்றான் ப்ரகலத்தன்.

 

“என்ன ஆகணும்? என்ன சாதிக்கணும்னு நீங்களாம் இப்டி பண்றீங்க. படிப்பக் கூட முடிக்கல. சொந்த சம்பாத்தியமில்ல, ஆனா கல்யாணத்துக்கு ரெடி ஆகுறீங்க. நாளைக்கு ஹெச்.ஓ.டி., ப்ரின்ஸிபல், உன் பேரண்ட்ஸ்ஸ கூட்டிட்டு வர சொல்லுவாங்க. உன்னால அவங்க தான் இங்க வந்து அவமானப் படணும்” என அந்த வயதானவர் ஏகபோகமாக திட்டிவிட்டு நிக்காமல் நடந்துவிட.

 

“என்னாச்சு ஏன் இப்டி திட்டிட்டு போறாரு?” என ஆறு குழம்ப.

 

“நீ ட்ராமால கான்சென்ட்ரேட் பண்ணு. தேட் ஐ வில் செக்(நா என்னன்னு விசாரிக்குறேன்)” என அவள் தோளை தட்டிக் கொடுத்துச் சென்றான்.

 

முந்தைய இரவு அந்த ரேணுவால் 1ஸ்ட் இயர் ஸ்டாஃப்ஸ்க்கு பரப்பப்பட்டது. இன்று வகுப்பில்லாததால் நாளைப் பாத்துக்கொள்ளலாம் என ஆறப் போடப்பட்டிருந்தது. கெமிஸ்ட்ரி சார் தற்செயலாக வந்தவர், இவர்களை கண்டு திட்டிவிட்டு செல்ல, ப்ரகலத்தன் நேராக ஹெச்.ஓ.டியை சென்று பார்த்து விஷயத்தை வாங்கினான். இருக்கும் டென்ஷனில் இதையும் அவளிடம் கொண்டு செல்ல வேண்டாம் என்றெண்ணி, தனக்குள் வைத்துக் கொண்டான், முதலில் ப்ராப்பர்ட்டி பிரச்சனை சால்வ்வாகட்டும் அப்புறம் பாத்துக்கலாம் என.

 

அடுத்த 2 மணி நேரத்தில், ப்ராபர்டீஸ் தேடிச் சென்ற மூவரும் 85% திங்ஸ் உடன் வந்தனர். என்ன! எல்லாம் வாடகை ஜாஸ்தியாக இருந்தது. அவசரம் என்றதால் விலையும் ஏறிவிட்டிருந்தது. இதை வைத்து மேனேஜ் பண்ணிடலாம் என முடிவு செய்து ரெடியாகினர்.

 

நல்லதங்கா குடும்பமாக, கிடைத்தவற்றை வைத்து எல்லாரும் ரெடியாக, முதல் சாங் பரதநாட்டியம், ஸ்டார்ட் ஆகும் சவுண்ட் கேட்டது. இவர்கள் காஸ்ட்டியூம் போட்டு ரெடி ஆகி அப்பாடா என உட்காரவும், அடுத்தடுத்த சாங் படிக்கவும், இங்கு இவர்களுக்கு மறுபடியும் படபடப்பு அதிகரித்தது.

 

“ஏதாவது டயலாக் மறந்துட்டா பக்கத்துல இருந்து எடுத்துக் குடுங்கப்பா, எனக்கு தான் அதிக டயலாக்” என ஆறெழில் புலம்ப.

 

“இத ஹீரோயின் வேசத்துக்கு ஒத்துக்க முன்ன யோசிச்சுருக்கணும், இப்ப புலம்பி” என கையை விரித்தாள் லட்சு.

 

“அண்ணன் நா இருக்கேன்மா” என வைரம் சொல்ல.

 

“ஆமா பெரிய பாசமலர்” லட்சு குணட்ட.

 

“ச்சீ வாயை மூடு மூழிஅலங்காரி எங்கள் பாசத்தை ஏளனம் செய்யாதே” எனப் போட்டிருக்கும் வேசத்திற்கு ஏற்ற பாவனையோடு வைரம் பேச.

 

“நீ அந்த பேர மட்டும் சொல்லாத ப்ளீஸ்” என அழுதாள் லட்சு.

 

“சரி பொழைச்சு போ. உனக்காக உனக்கு செல்லப்பெயர் வைத்துவிடுகிறேன்.  உனது பெயரை இன்றுமுதல் டெக்கரேட்டர் ஆக வைத்துக் கொள்ளலாம்” என்றான்.

 

“அது என்னடா டெக்கரேட்டர்?” நிலா கேக்க.

 

“அலங்காரம் என்றால் டெக்கரேஷன். இவள் அலங்-காரி, சோ டெக்கரேட்டர்” என வைரம் போஸ் கொடுத்தவாறு பேசிக்கொண்டிருக்க.

 

“செருப்பு பிஞ்சிரும் பேசாம போயிரு. எனக்கு கிடச்ச ரோல் பத்தி தெரியும்ல,  சாவடிச்சுருவேன்” லட்சு பொங்க.

 

இப்படி அவர்கள் சண்டையால் கொஞ்சம் மட்டுப்பட்டது அவர்கள் பதட்டம்.

சிரித்துக் கொண்டிருந்த ஆறெழிலை பார்த்தவாறே வந்தான் ப்ரகலத்தன்.

 

அவளுக்கு மூன்று அலங்காரம், முதலில் கல்யாணம் என்பதால் புடவையில் இருந்தாள். மிக அழகாக இருந்தாள். எப்பொழுதும் அவள் அவன் கண்ணையே பார்ப்பதால் அவன் அவளைக் கவனிக்காதது போலவே இருந்து கொள்வான். இப்போது வாய்ப்பு கிடைக்கவும் ரசித்து பார்த்தான். இன்று அதும் இப்போது அவள் தன்னைப் பார்க்கும் போது பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டான்.

 

“பிரகா என்ன இங்கேயே நின்னுட்ட வா” என அந்நேரம் அவனை கிராஸ் செய்த சீனியர் ஒருவன் அழைக்க.

 

“நீங்க போங்க ரகு, இவங்கள அலெர்ட் பண்ணிட்டு வர்றேன்” என்றான் ப்ரகலத்தன்.

 

“இதுல எதுப்பா உன் ஆளு” சிரித்தவாறு அவன் கேட்க. 

“அண்ணா நீங்க வேற” என்றான் குனிந்து.

 

“வெட்கப்படாதப்பா! வெக்கப்பட்டா ரொம்ப அழகா இருக்க, சீக்கிரம் வா” என்றுவிட்டு நகர்ந்தான் அவன்.

 

ப்ரகலத்தன் ஆறெழில் அருகில் சென்று நின்று கொண்டு, “ரெடி ஆயாச்சா? நீங்க எல்லோரும் இன்னும் 15மினிட்ஸ்ல ஸ்டேஜ் ஏறணும். ஜாலியா பண்ணுங்க, நம்ம காலேஜ், நம்ம ஃப்ரெண்ட்ஸ். சோ பயப்படாம பண்ணுங்க ஓகே வா” என்க. எல்லோரும் தலையாட்டினர்.

 

௭ல்லாரயும் திருப்தியுடன் பார்த்தவன், இறுதியில் ௭ழில் முகம் பார்க்க. ஆறெழில் அவன் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள்.

 

இடது கையால் அவள் தோளில் கையிட்டு, “செம அழகா இருக்க போதுமா?” என்றான்.

 

“நா அதுக்காக பாக்கல. உங்ககிட்ட ஏதோ டிஃபரன்ஸ் தெரியுதே. உங்க ப்ளூ ஐஸ் ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கே” ௭ன்றாள் யோசனையாக அவனை பார்த்து.

 

“பார்றா என் கண்ணு உன்ட அதெல்லாம் சொல்லுதா?” ௭ன அவன் சிரிக்க.

 

“ஆமா! நீங்க ௭ன்னன்னு செல்லுங்க ப்ரெசிடெண்ட்”.

 

“ம் நீங்க சொதப்பாம பண்ணனும்ன்ற டென்ஷன் தான் மா”. 

“ஓ!!!!” என்றாள் இன்னும் யோசனையோடே.

 

“ஓ போடாம, ட்ராமா, டயலாக்ல மட்டும் கவனமாயிரு. நல்லா பண்ணு. ஆல் தி பெஸ்ட்” என மறுபடியும் அவன் கையிலிருந்த அவள் தோளில் ஒரு அழுத்தம் கொடுக்க. 

“சூயர் ப்ரெசிடெண்ட்” என்றாள்.

 

அப்போது, “ரொம்ப தைரியம்தான். ஸ்டாப்ஸ்கெல்லாம் விஷயம் தெரியும்னு தெரிஞ்சும் ஜோடி போட்டு சுத்துறன்னா. ம் நிஜமாவே நீ கெத்து தான் போ, அதான் மேன் உன்ன எனக்கு ரொம்ப பிடிக்குது” என்றாள் அவர்களை நோக்கி வந்த ரேனு. எப்படியோ ரெடியாகி விட்டனரே என்ற எரிச்சலில் வந்த ரேணு, இவர்களை இப்படி கண்டதும் மேலும் எரிச்சலாகி இவ்வாறு கூற.

 

“நா பேசிக்கிறேன் நீ போ” என்றான் ஆறெழிலிடம்.

 

“ப்ரொட்டக்ஷன்?” ரேனு நக்கலில் கூற. 

“ஆமா அப்டித்தான்” ௭ன்றவன், “வைரம்” என்றான் முன் சென்றவனை.

 

அவன் திரும்பிப் பார்க்க, அருகில் அழைத்து “இவளயும் கூட வச்சுக்கோ” என கண்ணைக் காட்ட.

 

“நா இருக்கேனே” இவள் சொல்ல. 

“ஸ்டேஜ் கிட்ட போங்க டைமாயிடுச்சு. நானும் இப்ப வந்துருவேன். இது என்ன விஷயம்ன்னு நா உனக்கு உன் புரோகிராம் முடியவும் நிதானமா சொல்றேன் இப்ப குழப்பிக்காம போ” என்றான்.

 

“சீனியர் தான் சொல்றாங்கள்ல, வா ஆறு” என அழைத்துச் சென்றான் வைரம்.

 

“சோ போட்டோஸ் நீதான் எடுத்திருக்க?” ௭ன்றான் நேராகவே ரேனுவிடம்.

 

“இது என்ன, என்னய கேக்குற, நா எந்த போட்டோவும் எடுக்கல”.

 

“ஸ்டாஃப்ஸ்க்கு தெரியுங்றது சம்பந்தப்பட்டவங்கள்ல எனக்கே இப்ப தான் தெரியும், நா யார்ட்டயும் சொல்லல”.

 

“ஏன் எனக்கு வேற எந்த ஸ்டாஃப்ம் சொல்லிருக்க கூடாதா?”.

 

“அது நம்ம காலேஜ் ரூல் இல்லையே?” ௭ன்றான் ப்ரகலத்தன் முறைத்து.

 

“ஹே, இப்ப அது முக்கியமில்ல. நாளைக்கு உன் ஆளு பேரண்ட்ஸ கூட்டிட்டு வர சொல்லி டி.சி குடுப்பாங்க, இல்லனா வார்னிங்ல விட்டாலும். அவ மேல விழுந்த பிளாக் மார்க்கோட தான் 4 வருசமும் அவ இங்க இருக்கணும். திமிரா பேசி என்ன அவாய்ட் பண்ணல்ல அதுக்கு தான் இது”.

 

“இடியட்டா நீ? நீ ப்ரப்போஸ் பண்ண நா ரிஜக்ட் பண்ணேன், நம்ம 2பேர் பிரச்சினையில ௭ழில் ஏன் வர்றா? இன்னொரு பொண்ணு நேம ஸ்பாயில் பண்ணத பெருமையா வேற சொல்லுற. லூசு டிராமா ப்ராப்பர்ட்டி பேக் எங்க?”.

 

“அதவச்சு நா என்ன பண்ண போறேன். நம்ம கிளாஸ்ல தான் இருக்கு போய் எடுத்து இன்னொரு ட்ராமா போடுங்க, நீயும் உன் ஆளுமா” ௭ன சிரிக்க.

 

அதற்குள் அவன் போன் அடிக்க, “உனக்கு இதுக்கு கண்டிப்பா சீக்ரம் பதில் சொல்லுறேன்” என நடந்தான்.

 

ஆறெழில் ஸ்டேஜ் ஏறியிருந்தாள். நல்லதம்பியாக வைரம் கல்யாணம் செய்து கொடுக்கும் சீன் ஆகட்டும், பஞ்சத்தில் வாடி, காட்டு வழியில் நல்லதங்கா 7 பிள்ளைகளுடன் அண்ணனைத் தேடி செல்கையிலாகட்டும், அதற்கு ஏற்றவாறு பேக்ரவுண்டு, ‘மணப்பெண்ணின் சத்தியம்’ பாடலயும், வருத்ததிற்கு ‘ஒரு நாள் மட்டும் சிரிக்க’ என சிச்சுவேஷன் சாங் போட்டு நடிப்பை பிழிந்துவிட்டனர். மூழி அலங்காரியாக, கெத்தாக, திமிராகவே நடித்தாள் லட்சு. இறுதியில் நல்லதங்காள் கிணற்றில் குதிப்பது போல் ஒரு சூழ்நிலையிலும் தத்ரூபமாக நடித்து தெய்வம் ஆவதாக முடிந்தது நாடகம். எந்த சுதப்பலும் இல்லாமல் சிறப்பாக நடித்தனர் ஆறு அண்ட் கோ.

 

கெட்ட பிள்ளையாக பதிவாகியிருந்த ஸ்டாஃப்ஸ் மனதில் அன்றைய தினமே திறமைசாலியும் என சேத்து நினைக்க வைத்தாள் ஆறு. நடித்து முடித்து இறங்கவும் நிறைய பேர் வந்து பாராட்டினர். நெக்ஸ்ட் டைம் இன்னும் பெருசா யோசிக்கலாம், நாம சேர்ந்து பண்ணலாம் என சிலர் கமிட்டாகினர்.

 

 

௭ல்லாரயும் தாண்டி ஆறு அவள் பூன கண்ணனை தேட, சற்று தள்ளியிருந்து அவள் பார்வையை ௭திர் கொண்ட ப்ரகலத்தன் தம்ஸ் அப் காட்டினான். ஆனால் அவனால் இருந்த இடத்திலிருந்து நகர முடியவில்லை. இறுதியில் ஹெஸ்ட் ஸ்பீச் ரெடி பண்ண வேண்டி அங்கேயே நின்றான்.

 

இவர்கள் சென்று டிரஸ் சேஞ் செய்து வெளியே வர, “ஆறெழில், ஹெச்.ஓ.டி செர்ச்சிங் பார் யூ” என ஒருவன் வந்து சொல்லி செல்ல.

 

“ஒரு நாள்ல காலேஜ் ஹீரோயின் ஆகிட்ட போ. ஹெச்.ஓ.டி பாராட்ட தான் கூப்பிட்டுருப்பார். அங்க போய், மொத்ததயும் நீயே வாங்கிக்காம, கிரெடிட்ஸ்ல என் கூட நடித்த சக நடிகர்களுக்கு தான் பெரிய பங்கு, முக்கியமா வில்லி கதாபாத்திரத்திற்கு தான் உங்க பாராட்டு மொத்தமும் போகும்னு பெருந்தன்மையா சொல்லிட்டு வரணும் புரியுதா” லட்சு சொல்ல.

 

“ஆமா மூழி அலங்காரி இல்லன்னா நல்லதங்கா ஹீரோயினே ஆகியிருக்க முடியாதுன்னு சொல்லிட்டு வாறேன் போதுமா?” என்றாள் போற போக்கில்.

 

“இந்தப் பேர விட மாட்டறாளே” என்றுவிட்டு “இருடி தனியா போற நானும் வரேன்” என உடனும் சென்றாள் தோழியாய் லட்சு.

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
19
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்