Loading

 

அத்தியாயம் 36

டீஸர்.. மெயின் பிக்சர் பின்னாடியே வரும்.. எடிட்டிங் ல வரும்னு சொன்னேன் 😛😛

 

 

தனது அறையிலிருந்து வெளியே வந்தவன் தனக்கு முன்னால் சென்றவளை தாண்டி வேகமாக கீழே இறங்கினான்…

 

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…” என முனகி கொண்டே அவனது பின்னாலேயே சென்றாள் ஆனந்தி..

 

அங்கே முற்றத்தில் அமர்ந்திருந்த புதியவரை புருவங்கள் சுருங்க பார்த்தவன் தாயை நெருங்கினான்.

 

“வா தம்பி, வா மா ஆனந்தி” என்று இருவரையும் அழைத்தார் சீதா… சீதாவின் அருகில் சென்று அபி அமர்ந்து கொள்ள, ஆனந்தியோ அவர் பக்கத்தில் சென்று நின்றாள்.

 

“இவரு தான் சார் என் பையன்… இவங்க என்னோட மருமக ஆனந்தி…” என்று முறையாக அறிமுகம் செய்து வைத்தார் சீதா…

 

“தம்பி இவரு ரிஜிஸ்டர் ஆபிஸ்ல இருந்து வந்திருக்காரு ப்பா” என்றதும் புருவங்கள் சுருங்க தாயை பார்த்தான் அபிநயன்.

 

“என்ன ப்பா மறந்துட்டியா? உங்க இரண்டு பேர் மேரேஜையும் ரெஜிஸ்டர் பண்ண வந்திருக்காரு” என்றதும் சட்டென அபியின் பார்வை ஆனந்தியை தான் பார்த்தது. ஆனந்தியும் இவனைத் தான் தவிப்போடு பார்த்தாள்…

 

மங்கையின் தவிப்பை கசப்போடு உள் வாங்கிக் கொண்டவன் “இல்லை மா, இதை பத்தி இப்ப பேச வேண்டாம்…” சீதாவிற்கு மட்டுமே கேட்கும் குரலில் கூறினான். மகனின் பேச்சில் அதிர்ந்து பார்த்தார் சீதா…

 

அந்த அதிர்வு கூட நொடி மட்டுமே பின் குரலை செருமி “இல்லை அபி” ஏதோ சொல்ல வந்தவரின் குரல்

“சார் உங்களுக்கு இது செகண்ட் மேரேஜ் தானே?” என்ற ரெஜிஸ்டர் ஆபீஸரின் குரலில் கரைந்து போனது. தாயை முறைத்துக் கொண்டே “ஆமாம்” என்று தலையாட்டினான் அபி..

 

“அப்ப உங்க முதல் மனைவியோட டெத் சர்டிஃபிகேட் வேணும் சார்… அப்பறம் உங்க இரண்டு பேரோட ஆதார் கார்ட், ஸ்கூல் மார்க் சீட், இல்லைன்னா பர்த் சர்டிஃபிகேட் வேணும்… உங்க கல்யாண போட்டோஸ் அண்ட் இன்விடேசன் வேணும். அப்பறம் சாட்சி கையெழுத்து போட மூணு பேரு அவங்களோட ஆதார் கார்ட் வேணும்” என ஆரம்பித்தவர் பேச்சு மேலும் சில நிமிடங்களுக்கு தொடர்ந்தது…

 

“சரிங்க சார்…நாங்க இதெல்லாம் ரெடி பண்ணிட்டு உங்களை கூப்பிடுறோம்…” என்று சீதா சொல்ல,

 

“நல்லது மேடம்… நீங்க இதெல்லாம் ரெடி பண்ணிட்டு சொல்லுங்க… நானே வந்து மேரேஜை ரிஜிஸ்டர் பண்ணிட்டு போயிடறேன்” என்றவர் எழுந்து கொள்ள, சீதாவும், அபியும் உடன் எழுந்து கொண்டனர்…

 

“அப்பறம் நான் கிளம்பறேன் சார்” என்று வந்தவர் முன்னால் நடக்க,

 

“நான் அவரை வழியனுப்பி விட்டுட்டு வரேன் ப்பா” என்ற சீதா வந்தவரோடு பேசியபடி நடந்தார்…

 

செல்லும் தாயை ஒரு பார்வை பார்த்தவன் பக்கவாட்டில் திரும்பி ஆனந்தியை பார்த்தான். அவளோ அவளது அறைக்குள் நுழைந்திருந்தாள்.

 

“ப்ச்…” சலிப்போடு கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டவன் ஆனந்தியின் அறையை நோக்கி நடந்தான்…

 

அதே நேரம் அறைக்குள் நுழைந்த ஆனந்தியின் எண்ணம் முழுவதும் திருமணத்தை பதிவு செய்வதில் தான் இருந்தது… வேண்டும் வேண்டாம் என்று இரண்டு மனநிலைகளில் இருந்தாள். இதுவே திருமணமான புதியதில் கேட்டிருந்தால் நிச்சியம் வேண்டாமென்று ஒத்தக் காலில் நின்று இருப்பாள்.

 

ஆனால் இன்று வேண்டாமென்று சொல்லவே வாய் வரவில்லை அவளுக்கு… ஒரு பக்க மனம் வேறு

‘இதை விட்டா உனக்கு நல்ல வாய்ப்பு அமையாது… வேண்டாம்னு சொல்லிடு’ என்றது.

 

மனதின் பேச்சிற்கு செவி சாய்த்த நொடி, அவளையும் அறியாமல் இதயம் வேகமாக துடித்தது. நெஞ்சை அழுத்தி தடவிக் கொண்டே நின்றவளின் காதில் “குளோரி” என்ற அபியின் குரல் கேட்டது. சட்டென திரும்பி பார்த்தாள். அறைக் கதவின் முன் நின்றிருந்தான் அபி..

 

“வாங்க சார்” என்று உள்ளே அழைத்தாள்.

 

“இல்லை பரவாயில்லை…” என்றவன் குரலை செருமியப்படி

 

“இந்த கல்யாணத்தை வேண்டாம்னு உதறிட்டு போக உனக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கிடைச்சு இருக்கு… அதை யூஸ் பண்ணிக்க ஆனந்தி…” என்றவனை அதிர்ந்து பார்த்தாள் . அவனோ அவளது பார்வையை பொருட்படுத்தாமல் மேலும் தொடர்ந்தான்…

 

“ இந்த ஊர் உலகம் என்ன சொல்லும்னு யோசிக்காத. எவனும் உனக்காக வாழ மாட்டான்.உன் வாழ்க்கையை நீ தான் வாழணும்… சோ உனக்கு பிடிச்சதை பண்ணு… நமக்கு நடந்த பொம்மை கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ணாம இருக்கிறதை நான் பார்த்துக்கிறேன்…” என்றவனை இமைக்காமல் பார்த்தாள் ஆனந்தி…

 

“என்ன சரிதானே?” அவள் முன் கையாட்டிக் கேட்டான்..

 

“ம்ம்…” என்றாள். அவளது ம்ம் இல் மெல்ல சிரித்தவன் அவளை நெருங்கி, அவளது தலையில் அழுத்தம் கூட்டி “ராம் கிட்ட பேசறேன்…” என்று விட்டு நகர,

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்