Loading

அத்தியாயம் 34

🚨நிமிடங்கள் காத்திருக்கவும்**

இத்தனை நேரம் இதழ்களை விரித்து சிரிப்பேனா என்றிருந்த அந்தி மாந்தாரைக் கூட்டம் நிலவைக் கண்டதும் மெல்ல இதழ் விரித்து சிரிக்க, தன்னவளின் சிரிப்பை கண்ட நிலவோ வெட்கம் கொண்டு மேகக் கூட்டத்திற்குள் நுழைந்து கொண்டது.

 

அங்கே, வீட்டின் மாடியில் நின்றிருந்தான் அபிநயன்… அவனது மனம் நிலைக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது… மாலையில் ஆனந்தியிடம் நெருங்கி நின்றது கண்களுக்குள் விழுந்து அவனை குற்றவுணர்வில் தள்ளி இருந்தது…

 

“என்ன செய்ய நினைத்தேன் நான்…” எனத் தன்னை தானே கேட்டுக் கொண்டவனுக்கு நன்றாகவே தெரியும் அவன் செய்வவிருந்த செயல் என்னவென்று… என்னை நம்பி என் அருகில் நின்ற பெண்ணின் நம்பிக்கையை ஒரு நிமிடத்தில் குழைத்து இருப்பேன் அல்லவா… கண்களை இறுக மூடிக் கொண்டான்.

 

‘அனிதா இருக்க வேண்டிய இடத்துல ஈசியா ஒருத்தரை உன்னால கொண்டு வர முடியுது இல்லையா? உன்னோட காதல் அவ்வளவு தானா? அவளுக்கு நீ துரோகம் பண்றேன்னு புரியலையா?’ ஏளனமாக கேட்ட மனதிற்கு பதில் சொல்ல விரும்பவில்லை அபிக்கு.

 

அனிதாவின் மேல் இவனுக்கு இருக்கும் காதல் வேறு… இப்பொழுது ஆனந்தியின் மீது அவனுக்கு எழும் உணர்வுகள் வேறு… இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க துளியும் விருப்பமில்லை அவனுக்கு… வெவ்வேறு சூழ்நிலையில், வெவ்வேறு சந்தர்பங்களில் உருவாகும் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கிறான் அவ்வளவே…

 

ஒருவேளை அனிதா இருந்திருந்தால் இப்படியான உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்திருப்பாயா? எனக் கேட்டால் அதற்கு அவனிடத்தில் பதில் இல்லை…

 

உண்மையை சொல்லப்போனால்

அப்படியான சூழ்நிலை அவனுக்கு வந்ததே இல்லை… அனிதாவின் மேல் அவனுக்கு இருந்த காதல் அவனை வேறு எதையும் யோசிக்க விட்டது இல்லை… ஏன் அவள் இறந்த பிறகும் கூட தனிமையைத் தான் தேடிக் கொண்டானே தவிர, வேறு உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தது இல்லை.

 

ஆனால் இன்று, அவனையும் அறியாமல் ஆனந்தியின் மேல் எழும் மெல்லிய உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்க நினைக்கிறான்… ஆம் மதிப்புக் கொடுக்க நினைக்கிறான் தான் ஆனால் அதற்கு காதல் என்றோ காமம் என்றோ பெயர் வைக்க விரும்பவில்லை…

 

“அப்பா…” என்ற பிள்ளைகளின் கத்தலில் தன்னிலைக்கு திரும்பியவன் பின்னால் திரும்பி பார்த்தான்… சோழாவும், குந்தவியும் முன்னால் வர, அவர்களுக்கு பின்னால் ஆனந்தி வந்து கொண்டிருந்தாள்…

 

கணம் அவள் மீது அழுத்தமாய் பதிந்து மீண்டது அபியின் பார்வை…

 

ஆடவனின் அழுத்தமான பார்வை இவளுக்கு கோபப் பார்வையாக தெரிந்து தொலைக்க “எப்பா டேய், ஏதோ தெரியாம நடு ரோட்டுல விளையாடிட்டேன் டா… அதுக்காக பார்க்கும் போதெல்லாம் முறைப்பியா டா” முனகி கொண்டே அபியின் அருகில் சென்று நின்றாள்…

 

இருட்டில் வரி வடிவமாக தெரிந்த கட்டிடங்களை இலக்கின்றி வெறித்தவனை “க்கும்” குரலை செருமி “சார்” என்றழைத்தாள்.

 

“ம்ம் சொல்லுங்க மேடம்” எனக் கேட்டவன் அவளைத் திரும்பியும் பார்க்கவில்லை…

 

“இல்லை சார் பசங்களுக்கு ஒரு வாரம் லீவு… அவங்க ஸ்கூல்ல ஏதோ வெக்கிஷன் மாதிரி போயிட்டு வர சொன்னாங்கலாம்” அவள் இழுக்க, அவனோ “முழுசா சொல்லி முடி” என்பதை போல் அமைதியாக நின்றான்.

 

“அதான்.. ஏதாவது ஊட்டி, இல்லை கொடைக்கானல் மாதிரி எங்காவது போலாமா?” தயங்கியபடி கேட்டாள்.

 

கண்களை இறுக மூடித் திறந்தவன் அவள் புறம் திரும்பி “ம்ம்…” என்று மட்டும் சொல்ல, ஆனந்தியின் விழிகள் மகிழ்ச்சியில் விரிந்தது… அதே விழி விரிப்போடு பிள்ளைகள் புறம் திரும்பியவள் சக்ஸஸ் என்பது போல் கைக் காட்ட “ஹே….” என்று சந்தோஷ கூச்சலில் பிள்ளைகள் கத்த, அவர்களின் கத்தலோடு ஆனந்தியின் சந்தோஷ சிரிப்பும் இணைந்து கொண்டது…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்