Loading

அத்தியாயம் 32

 

வெள்ளைத் துணியில் அங்காங்கே நீல நிறமும், அடர் மஞ்சள் நிறமும் தெறித்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அதிகாலை வானம்… வானத்தின் அழகை கண்களால் பருகிக் கொண்டே கையிலிருந்த தேநீரை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தாள் ஆனந்தி…

 

“குளோரி அப்பா உன்னை கூப்பிட்டார்…” மங்கையின் செவியில் செவ்விதழ்கள் உரச ரகசிய குரலில் கூறினாள் குந்தவி…

 

“அப்பா எங்க இருக்காரு” அவளைப் போலவே ரகசிய குரலில் கேட்டாள்.

 

“அப்பா ஹால்ல லேப்டாப் பார்த்திட்டு இருக்காரு” குந்தவியை போல ரகசிய குரலில் கூறிய சோழாவின் செயலில் கிளிக்கி சிரித்தபடி

 

“இப்ப யாரு அப்பாவை போயி ஃபர்ஸ்ட் டச் பண்றங்களோ அவங்க தான் வின்னு” எனக் கூற கூறவே முன்னால் ஓட, அவளைத் தாண்டி ஓடினர் பிள்ளைகள் இருவரும்.

 

“ஹேய் பார்த்து போங்க…” என்றவளின் குரல் அபியை தொட்டு விட்ட பின் தான் அவர்களுக்கு கேட்டது போல..

 

“ஹேய் குளோரி… நாங்க வின் பண்ணிட்டோம்” என்று குதித்த பிள்ளைகளின் காதில் ஏதோ கூறினான் அபி…

 

அடுத்த நிமிடம் “பாட்டி…” எனக் கத்திக் கொண்டே இருவரும் சீதாவின் அறையை நோக்கி ஓட, இருவரையும் சிரிப்போடு பார்த்தான் அபிநயன்.

 

அதே நேரம் அவனது சிரிப்பை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் ஆனந்தி… அவன் சிரித்தால் அழகாய் இருப்பது போலொரு எண்ணம் அவளுக்கு. அதுவும் சிரிக்கும் போது விழும் அந்த கன்னக்குழியை சுண்டு விரல் கொண்டு அளந்து பார்க்க ஆசை அவளுக்கு..

 

“எப்ப இருந்து இதெல்லாம்” பல முறை அவளுக்கு அவளே கேட்டுக் கொண்டது உண்டு… உண்மையாக அதற்கு பதில் தெரியவில்லை.. எப்பொழுதிலிருந்து ரசிக்க ஆரம்பித்தால் என்று துளியும் தெரியவில்லை… ஒருவேளை! சோழவை போல் சிரிக்கிறார் என்று கவனித்து கவனித்து பின் தன்னாலேயே அந்த சிரிப்பை ரசிக்க ஆரம்பித்து விட்டாளோ என்னவோ?

 

“மிஸ் குளோரி, இன்னைக்கு நீங்க ஃப்ரீயா இருந்தா என்னோட ஆஃபீஸ்க்கு வர முடியுமா?” என்றவன் குரலில் தன்னிலைக்கு வந்தவள்

 

“என்ன சார்” எனக் கேட்டாள்..

 

“இன்னைக்கு ஃப்ரீயா இருந்தா என்னோட ஆஃபீஸ்க்கு வர முடியுமான்னு கேட்டேன்”

 

“அதெல்லாம் என்னால வர முடியாது சார்… என்ன விளையாடறீங்களா? அன்னைக்கு ஏதோ கை வலிக்குதுன்னு சொன்னீங்களேன்னு ஹெல்ப் பண்ணேன்… அதுக்காக சும்மா சும்மா வேலை பண்ண சொல்லுவீங்களா? என்ன நினைச்சிட்டு இருக்கீங்க” முந்திக் கொண்டு பதில் கூறிய மனதினை தாண்டி

 

“ம்ம் வரேன் சார்” என்றிருந்தாள்…

 

‘ அடியே’ பல்லைக் கடித்த மனதினை கண்டுக் கொள்ளாமல் ‘ தங்களது உத்தரவிற்காக காத்திருக்கிறேன் அரசே என்பதை போல்’ நின்றவளை காரி துப்பிவிட்டு சென்றது மங்கையின் மனம்…

 

“பத்து மணி போல கிளம்பிடலாம்” என்றவன் மடிக்கணினியில் கவனத்தை செலுத்த

 

‘கொஞ்சமும் படிக்கிற எண்ணம் இல்லை உனக்கு… மூணு வாரமா சரியா படிக்கவே இல்லை… இன்னைக்கு படிக்கிறேன் நாளைக்கு படிக்கிறேன்னு நாளை தள்ளிப் போட்டுட்டே இருக்க…’

 

‘ஒருவேளை பெரிய பணக்காரனா சிக்கவும் அப்படியே செட்டில் ஆக நினைச்சுட்டியா? உனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்க நினைக்கவே இல்லையா நீ?’ என்ற மனதின் கேள்வியில் பெரிதாக அடிவாங்கிய உணர்வு அவளுக்கு…

 

கடந்த மூன்று வாரமாக படிக்கும் நிலையிலா இருந்தாள். ஏதோ பித்து பிடித்தவள் போல் தானே சுற்றிக் கொண்டிருந்தாள்… உண்மையை சொல்லப்போனால் கடந்த சில நாட்களாக தான் அவள் அவளாக இருக்கிறாள். அதற்கும் தற்பொழுது பெரிய ஆப்பாக வைத்து விட்டது அவளது மனது.

 

*****

 

ஜன்னல் வழியே உள்ளே நுழைந்த காற்று மங்கையின் கேசத்தை மென்மையாக வருடிக் கொண்டிருந்தது. காற்றிலாடும் கேசத்தை சேவியோரம் ஒதுக்கியப்படி வந்தவளை ஓரக்கண்ணால் பார்த்தான் அபிநயன்…

 

அவள் நசநசவென பேசும் ரகமில்லை என்றாலும் அதீத அமைதியும் கிடையாது என்பது அவனுக்கு தெரியும்…

 

குரலை செருமியப்படி “பசங்களை ஸ்கூலுக்கு போனதுமே புக்கை எடுத்து வைச்சுக்கிறயே? அதென்ன லவ் ஸ்டோரியா? ” வாகனத்தை லாவகமாக இயக்கியப்படி கேட்டான்.

 

பின்னால் நகரும் மரங்களையும், கட்டிடங்களையும் வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவள் ஆடவனின் கேள்வியில் சட்டென அவன் புறம் திரும்பினாள்…

 

அவனோ புருவத்தை உயர்த்தி “பதில் சொல்லு” என்பதை போல் பார்க்க, அந்த புருவத் தூக்களில் பொத்தென்று விழத் துடித்த மனதினை அடக்கியப்படி

 

“லவ் ஸ்டோரியெல்லாம் இல்லை சார்…கவர்மென்ட் எக்சாம்காக படிக்கிறேன் சார்” என்றாள் மெல்லிய குரலில்… தாம்தூமென்று கத்துவாள் என்று எதிர்ப்பார்த்தான் ஆனால் அவளோ பொறுமையாக பதில் சொல்ல விழி விரிப்போடு அவளைப் பார்த்தான்.

 

‘இந்தாளு வேற சும்மா சும்மா கண்ணை விரிச்சி நம்மளை டெம்ப்ட் பண்ணிட்டு இருக்காரு,..’ மானசீகமாக அவனைத் திட்டிக் கொண்டே

 

“என்னாச்சு சார்” என்று கேட்க

 

“ஒண்ணுமில்லை மா…” என்றவன் நொடி நேர அமைதிக்கு பிறகு “ஜஸ்ட் படிச்சா மட்டும் போதுமா?” எனக் கேட்டான்.

 

“ படிச்சா தானே எக்சாம் எழுத முடியும்”

 

“புதுசா படிக்க வர எல்லாரும் பண்ற தப்பை தான் நீயும் பண்ற… படிச்சதை டெஸ்ட் எழுதி பார்க்கணும். ஸ்கெடுயூல் போட்டு படி அதுக்கு போல டெஸ்ட் எழுது… நிறையா ஆன்லைன் கோச்சிங் இருக்கு ட்ரை பண்ணி பாரு” என்றதும்

 

“எனக்கு பெருசா யாரும் சொல்லி தரல சார். நானா தான் தேடி பிடிச்சு படிக்க ஸ்டார்ட்… யூடியூப் வீடியோ பார்த்து தான் அதிகமா படிக்கிறேன்” என ஆரம்பித்த அவர்களது பேச்சு அலுவலகம் வரும் வரைக்குமே நீடித்தது…

 

****

 

வானளான உயர்ந்து நிற்கும், ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட கண்ணாடி சுவர்களை கொண்ட கட்டிடங்களில் அமைந்திருந்த ஏ ஸ்கொயரின் தலைமை நிறுவனத்தை விழிகள் விரிய பார்த்தாள் ஆனந்தி…

 

அவளது விழி விரிப்பை புன்னகையோடு பார்த்தவன் “நான் கார் பார்க் பண்ணிட்டு வரேன்.. இங்கேயே வெயிட் பண்றையா?” எனக் கேட்க, சரியென்றவள் அவனது லேப்டாப் பேக்கை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள்.

 

சுற்றிலும் பார்வையை சுழல விட்டவளுக்கு ‘பிரான்ச் ஆபீஸ் எல்லாம் சிம்பிளா தான் இருக்கும் பாப்பா… ஹெட் ஆபீஸ், இதை விட செம்மையா இருக்கும்’ என்ற அண்ணனின் பேச்சு நினைவிலாடியது.

 

ஊரிலிருந்து வந்ததிலிருந்து அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.. இத்தனைக்கும் அவன் தினமும் அழைத்து கொண்டு தான் இருக்கிறான்… இவள் தான் ராமன் அழைப்பை ஏற்காமல் சண்டித் தனம் செய்து கொண்டிருக்கிறாள்.

 

“என் மேல நம்பிக்கை இருந்தா?…அபியை கல்யாணம் பண்ணிக்க மா…” என்ற வார்த்தையில் தானே அமைதியாக நின்றாள். அந்த வார்த்தையை அவன் கூறாமல் இருந்திருந்தால் இன்றைக்கு இப்படியான ஒரு திருமணத்தை அவள் செய்திருக்க மாட்டாளே… அண்ணனின் பேச்சில் அவனது பார்வையில் தெரிந்த பரிதவிப்பில் தானே இந்த திருமணத்தை செய்து கொண்டாள்… அப்படி செய்ததில் தானே இவளது மனமே இவளை காரித் துப்பிக் கொண்டிருக்கிறது…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்