
நினைவுகள் – 28
ராதிகா அனு அழைத்தும் வீட்டிற்கு வரவில்லை என்ற கோபத்தில் ருக்குமணி வார்த்தைகளை விட.
“பாட்டி… அப்படியெல்லாம் சொல்லாதீங்க. அவ என் ஃப்ரெண்ட்.” என்று வேகமாகக் கூறிய அனுவின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
” சரி… சரி… அழாத… உன் ஃப்ரெண்டை நான் ஓன்னும் சொல்லலை.” என்று தனது பேத்தியை கொஞ்சி, அவளை சாப்பிட வைத்தார்.
ருக்குமணி சொன்ன மாதிரியே, ஆரத்தி எடுத்து தான் ராதிகா இந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கப் போவதை அப்போது அவர் அறியவில்லை. அது மட்டுமல்லாமல் ராதிகாவை, ருக்குமணி பார்க்கவே போவதில்லை.
கொஞ்சம் சாப்பிட்ட அனு, “போதும் பாட்டி. இதுக்கு மேல என்னால சாப்பிட முடியாது.” என்று விட்டு எழுந்து அவளது அறைக்குச் செல்ல…
ருக்குமணியும் பேத்தியை நினைத்து புலம்பிக் கொண்டே தனது அறைக்குச் சென்றார்.
கௌரி தான், தனது அண்ணியிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.
” அண்ணி… இந்த அம்மாவ என்ன பண்ணுறதுன்னே தெரியலை. அனுவுக்கு செல்லங் கொடுத்தே கெடுக்கிறார். யாருன்னே தெரியாத பொண்ணை இப்படி பேசுறார்.”
” விடு கௌரி… இன்னைக்கு நேத்தா அவர் இப்படி இருக்கிறார். எப்பவுமே அப்படி தான். அவருக்கு அனுவா, ரூபனான்னு கேள்வி வந்தாலே, அனுவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க. ஹும் நாளைக்கு ரூபனுக்கு கல்யாணம் பண்ணி வரப் போறவளை ஏதாவது சொல்லி கஷ்டப்படுத்திட்டா என்ன செய்யறதுன்னு தான் என் கவலையே.” என.
” அண்ணி…” என்ற கௌரி விக்கித்து நின்றாள்.
” ஹேய் கௌரி… நான் ஏதேதோ லூசு மாதிரி உளறுறேன். நீ எதையும் மைண்ட்ல ஏத்திக்காத. ரூபன் அவனோட மனைவியை அப்படி ஒன்றும் விட்டுக் கொடுத்திட மாட்டான். ” என்று அவளை சமாதானம் செய்தவர், அவரது வேலையைக் கவனிக்க சென்றார்.
வராத மருமகளோட கௌரவத்தை நினைத்து வருத்தப்பட்டவரே பின்னாளில் தனது மருமகளை வருத்தப்படுத்தப் போவதையும், யார் தன் மனைவியை விட்டுக் கொடுக்காமல் இருப்பான் என்று நம்பினாரோ, அவனே அவரது நம்பிக்கையை உடைக்க போவதையும் அப்போது அறியவில்லை அந்த அப்பாவி குடும்பத் தலைவி.
ராதிகாவுடன், சந்தோஷமாக டைம் ஸ்பென்ட் பண்ணி வந்தவனது முகமெல்லாம் ஜொலிக்க, ரகசியமாக சிரித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் விஸ்வரூபன்.
இன்றைய நாள் அவனுக்கு பொக்கிஷமான நாள். அந்தளவுக்கு ராதிகாவின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி, அவளது எதிர்கால கனவுகளையெல்லாம் கேட்டு, என்ஜாய் செய்து இருந்தான்.
அவளை தஞ்சாவூருக்கு பஸ் ஏற்றிவிட்டு வீட்டிற்குள் வந்தவன், தனக்கு உணவு வேண்டாம் என்று ரஞ்சிதத்திடம் கூறிவிட்டு மாடிக்கு ஏற முயன்றான்.
” தம்பி… அனுவை சாப்பிட வர சொல்லு. மதியமும் ஒழுங்கா சாப்பிடலை. இப்பவும் வேண்டாம்னு சொல்லிட்டா. என்ன தான் அவளுக்கு பிரச்சனைன்னு சொல்ல மாட்டேங்குறா?”
” ஓ… பாட்டி சாப்பிட்டாங்களா மா?” என்றுக் கேட்டான்.
” அது… இன்னும் இல்லை பா.” என்று மெதுவாகக் கூறினார்.
” மா… அவங்க சாப்பிடலைன்னா எனக்கு உடனே ஃபோன் பண்ண வேண்டியது தானே…”
” உனக்கு ட்ரை பண்ணிக்கிட்டே இருந்தேன். ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. “
” சாரி மா… என்னோட ஃப்ரெண்டோட வெளியே போயிருந்தேன். ரியல்லி சாரி மா.” என்றவன் ரஞ்சிதத்தின் கையைப் பிடித்து மன்னிப்புக் கேட்டான்.
” பரவால்ல விடு பா. நீ முக்கியமான கேஸ்ல இருப்பீயோ என்று நினைச்சேன். நீ போய் அவங்க ரெண்டு பேரையும் பாரு. “
” ம்… சரி மா…” என்றவன் அனுவின் அறைக்குள் நுழைய.
அவளோ தூங்குவது போல கண்களை இறுக மூடிக் கொண்டு இருந்தாள்.
” அனு… டோன்ட் ஆக்ட் லைக் ஸ்லீப்பிங். நீ முழிச்சிட்டு இருக்க என்று எனக்கு நல்லா தெரியுது. எழுந்திரு…” என்று விஸ்வரூபன் அதட்ட…
” தூக்கமா வருது மாமா… உங்களுக்கு என்ன பிரச்சினை” என்றாள் அனு.
” நீ எதுக்கு இப்போ சாப்பிடாமல் இருக்க? உன்னால பாட்டியும் சாப்பிடாமல் இருக்காங்க.”
” வாட்? பாட்டி சாப்பிடலையா? நான் தான் எனக்கு பசிக்கலை, சாப்பாடு வேண்டாம். நீங்க சாப்பிடுங்க பாட்டி என்று சொன்னேனே.” என்றவள் வேகமாக பாட்டியின் அறைக்குச் சென்றாள்.
” ஏன் பாட்டி இப்படி சாப்பிடாம இருக்கீங்க. உடம்பு என்னத்துக்காகும். நான் தான் மதியம் சாப்பிட்டதே ஒரு மாதிரியா இருக்குன்னு சொன்னேனே. சரி வாங்க பாட்டி. வந்து சாப்பிடுங்க.” என்றுக் கூற.
” நீ மதியம் சாப்பிட்ட லட்சணம் தான் தெரியுமே. அதுவுமில்லாமல் நைட்டு உன்னோட சாப்பிடாமல், நான் என்னைக்கு தனியா சாப்பிட்டுருக்கேன்.” என்ற ருக்குமணியின் பதிலில், குற்றவுணர்ச்சியில் தவித்தாள் அனன்யா.
” ஸாரி பாட்டி.” என்றவளின் கண்கள் கலங்க.
” சரி டா … இதுக்கு எதுக்கு நீ கண் கலங்குற? எல்லாம் உன்னோட ஃப்ரெண்டு அந்த தஞ்சாவூர்காரியால வந்தது. அவ வீட்டுக்கு வரலைன்னு தானே நீ அழுதுட்டு வந்த. இன்னைக்கு சொல்றது தான் அனு. அவப் பேச்சே இந்த வீட்ல வரக்கூடாது.” என்று ருக்குமணிக் கூற.
தனது பாட்டியை ஒரு பார்வை பார்த்தவன், அனன்யாவை குற்றம்சாட்டும் பார்வை பார்த்தான்.
அவனது பார்வை அவளை ஊடுருவ, அப்பொழுதுதான் தான் செய்த தவறை உணர்ந்தாள் அனன்யா. பாட்டிக்கு தான் எந்த அளவு முக்கியம்… தன் முகத்தில் சின்ன வாட்டம் இருந்தாலும், அவர் எவ்வளவு வருத்தப்படுவார் தன்னை யாராவது அழ வைத்தால் அவங்களை லேசில் விட்டு விட மாட்டார்.
அப்படியிருக்க… மதியம் ராதிகாவை பற்றிப் பேசிய விஷயத்தை மறந்து இருப்பார் என்று நினைத்தது எவ்வளவு பெரிய மூடத்தனம்.’ என்று நொந்துக் கொண்டிருந்தாள்.
அவளது யோசனையைத் தடை செய்வது போல, ” சீக்கிரமா சாப்பிடுங்க .” என்ற ஒரு வார்த்தையை மட்டும் கூறி விட்டு விடுவிடுவென வெளியே சென்று விட்டான் விஸ்வரூபன்.
அவனது கோபத்தைப் பார்த்ததும் தான் அவளுக்கு அவளது தவறு புரிந்தது. ‘ இனிமேல் அவர்களுக்கு இடையூறாக நான் இருக்க மாட்டேன்.’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டவள், பாட்டியுடன் உணவருந்த சென்றாள்.
” நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் இறைவன் எதற்கு?”
இனிமேல் தான் அவர்கள் இருவருக்கும் இடையில் நன்றாக நுழைய போகிறாள் அனன்யா.
இன்று…
இரவு எந்த வித பார்மாலிட்டிஸும் செய்யாமல் அவனது அறைக்கு அனுப்பி வைத்தார்.
உள்ளுக்குள் லப் டப், லப் டப் என்று இதயம் முரசடிக்க பயத்துடனே உள்ளே நுழைந்தாள்.
நல்லவேளை விஸ்வரூபன் அங்கில்லை.
பெருமூச்சு விட்டுக் கொண்டே அந்த அறையை சுற்றிப் பார்த்தாள்.
பிரம்மாண்டமான மாளிகைக்கு ஏற்ற மாதிரி, பெரிய அறை தான்.
ஒரு பெரிய கட்டில் நடுநாயகமாக இருக்க… ஒரு புற சுவரில் இருகதவுகள் இருந்தது.
‘டிரஸ் மாத்த வேண்டும் லக்கேஜ் எல்லாம் இங்கு தான் இருக்கிறது என்று கௌரி மா சொன்னாங்களே. எங்கே இருக்கும்?’ என்று யோசித்துக் கொண்டே ஒரு கதவை திறந்துப் பார்த்தால் அது குழந்தைக்கான அறை. பிங்க் நிறத்தில் மெத்தை விரிப்பு, கார்ட்டன் எல்லாம் இருக்க. சுற்றிலும் உள்ள சுவர், கஃபோர்ட் எல்லாம் மிக்கி மவுஸ் வரைந்து, அந்த அறையே அழகாக இருந்தது.
அடுத்த கதவை திறக்க, அதுவோ டிரெஸ்ஸிங் ரூமுடன் கூடிய ரெஸ்ட் ரூம்.
உள்ளே சென்றவள் அங்கிருந்த அவளது லக்கேஜிலிருந்து, நைட் ட்ரெஸை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு சென்று வந்தாள்.
வெளியே வந்தவளோ, விஸ்வரூபனுக்காக காத்திருந்தாள்.
அவனிடம் எப்படி பேசுவது. என்ன பேசுவது ஒன்றும் புரியாமல் டென்ஷனோடு இருக்க…
சற்று நேரம் கழித்து குழந்தையுடன் வந்தான் விஸ்வரூபன்.
அவன் வந்ததும் கட்டிலில் உட்கார்ந்து இருந்தவள் எழுந்திருக்க, அவனோ அவளை ஒரு பொருட்டாக நினைக்காமல் குழந்தையின் அறையில் நுழைந்து வேகமாக கதவை சாற்றினான்.
இப்போது மூடிய கதவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ராதிகா.
‘ நான் என்ன தவறு செய்தேன். உண்மையில கோபப்பட வேண்டியவள் நான் தான். காதலித்து விட்டு, வேறொருத்தி கழுத்தில் தாலிக் கட்டியதற்கு சட்டையைப் பிடித்து கேள்விக் கேட்க சகல உரிமை உள்ளவள், ஆனால் யாரைக் கேட்பது? உயிர்த்தோழியையா? இல்லை உயிரானவனையா? இரண்டும் அவளால் முடியாததால் தானே ஒதுங்கிப் போனேன்.’ என்று மனதிற்குள் குமுறியவள், இரவு முழுவதும் உறங்காமல் இருந்தாள்.
கதவை வேகமாக சாற்றியவனோ, குழந்தை லேசாக சிணுங்கவும் குழந்தையை தட்டிக் கொடுத்துக் கொண்டே அந்த மூடிய கதவை வெறித்துப் பார்த்தான்.
அந்த கதவுக்கு பின்னால் இருக்கும் பெண்ணவளின் மனதை புரிந்து தான் இருந்தான். அவள் கோபப்பட்டு தன்னை விட்டு விலக வேண்டும் என்று எண்ணினான்.
மனசாட்சியோ, ‘ அப்போ ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்ட?’ என்றுக் கேட்க. அவனுக்கு மண்டை வெடிப்பது போல் இருந்தது. இரவு முழுவதும் உறங்காமல் அவனும் விழித்தே கிடந்தான்.
மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து கீழே வந்திருந்தாள் ராதிகா.
காஃபியுடன் மாமியாரும், மருமகளும் காலைப்பொழுதை ஆரம்பித்தனர்.
இவள் வந்த சற்று நேரத்திலே விஸ்வரூபனும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழே வந்தான்.
” மா… நான் வாக்கிங் போயிட்டு வரேன். அம்மு அவ ரூம்ல இருக்கா.” என்று குரல் கொடுத்து விட்டு சென்றான்.
” சரி பா.” என்றவர் குழந்தைக்கு கொடுப்பதற்காக பால் கலக்க…
அதற்குள் அழும் குழந்தையை தூக்கிக் கொண்டு ஆயா மா வந்தார்.
குழந்தையை தூக்க மனம் பரபரத்தாலும் அவன் சொன்னதைக் கேட்டு, இருந்தாள்.
அவளது பார்வையோ குழந்தையை நோக்கியே இருந்தது.
ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன், அவளது பார்வையை கண்டுக் கொண்டார்.
‘விஸ்வரூபனையும், ராதிகாவையும் சீக்கிரமே சேர்க்க வேண்டும். ‘ என்று எண்ணியவர், அதற்கான வழியையும் கண்டுக் கொண்டார்.
இன்றே விஸ்வரூபனிடம் பேச வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அதற்கு அவன் இடம் கொடுக்காமல் சீக்கிரமாகவே ஹாஸ்பிடலுக்கு கிளம்பி சென்று விட்டான்.
இப்படியே இரண்டு மூன்று நாட்கள் சென்றது.
ஒருநாள் காலை உணவை உண்டு கொண்டிருக்கும்போது வித்தியாசமான டேஸ்ட் ஆக இருக்க, ரசித்து சாப்பிட்டான்.
அவன் சாப்பிடுவதைப் பார்த்து ரஞ்சிதம்,” ராதிகா தான் செய்தாள்.” என்றுக் கூற…
வாயருகே எடுத்துட்டு போன உணவை கீழே போட்டவன் ரஞ்சிதத்தைப் பார்த்து முறைத்தான். அவன் கீழே போட்டதைப் பார்த்து ராதிகாவின் கண்கள் கண்ணீரை விட வா என்பது போல் இருக்க…
அவனோ, ” ச்சே… உங்க மருமக என்ன நினைச்சுட்டு இருக்கா… இப்படி வீட்டிலேயே வேலைப் பார்த்துட்டு ஜாலியா இருக்கலாம் என்று பார்க்குறாளா? பணத்தோட அருமை தெரிஞ்சா தானே. இல்லைன்னா இப்படி காலேஜுக்கு போகாமல் இருப்பாளா?” என்று வார்த்தைகளை கொட்ட…
ராதிகாவோ மனம் துடிக்க, அவனை அடிப்பட்ட பார்வை பார்த்தாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1

