என் இதயப் பூட்டில் காதல் சாவி நுழையாது

Loading

செல்வி
பெங்களூரில் உள்ள
ஒரு ஐடி நிறுவனத்தில்
புதிதாக வேலைக்குச் சேர்ந்தாள்.

மதுரை அருகே இருக்கும்
கிண்ணிமங்கலம் தான்
அவள் பிறந்த கிராமம்.

விவசாயியான பெருமாளின்
மூன்று மகள்களில்
மூத்தவள் அவள்.

சிறு வயதிலிருந்தே
படிப்பில் முன்னிலை வகித்ததால்,
மதுரை தியாகராஜர்
பொறியியல் கல்லூரியில்
கணினி பொறியியல் படித்தாள்.

படிப்பு முடிந்ததும்,
கல்லூரி தேர்வில்
வேலை வாய்ப்பு கிடைத்து
பெங்களூருக்கு வந்துவிட்டாள்.

 

பெருமாளுக்கு
தனது மூன்று மகள்களையும்
நல்ல குடும்பங்களில்
திருமணம் செய்து வைப்பது
பெரிய பொறுப்பு.

தனது கிராமத்திலேயே
காதலில் சிக்கி
வாழ்க்கையை இழந்தவர்களை
அவர் பார்த்தவர்.

அதனால்,
காதல் என்றாலே
அவருக்குள் பயம்.

காதல் நல்லதாய் முடியும்
என்ற நம்பிக்கை
அவருக்கு இல்லை.

 

அதனால் தான்,
“படிப்பை விட
ஒழுக்கம் முக்கியம்”
என்று சொல்லிக்கொண்டு,

மகள்களுக்கு
காதல் என்ற விஷயம்
கூடாது என்று
சிறு வயதிலிருந்தே
மனதில் ஊட்டி வளர்த்தார்.

அவருடைய எண்ணத்தில்,
பெண் குழந்தை
ஒரு நல்ல குடும்பத்துக்கு
மருமகளாகச் செல்வதே
முக்கியம்.

 

இந்தக் கட்டுப்பாடுகளுக்குள்
வளர்ந்தாலும்,

செல்விக்கு
அவளது திறமையால்
பெங்களூரில்
நல்ல வேலை கிடைத்தது.

ஆனால்
அந்த நகர வாழ்க்கை
அவளுக்கு
புதிதாகவும்
கடினமாகவும் இருந்தது.

அலுவலகத்தில்
வேலை பார்த்த
ஆண்களும் பெண்களும்
சுதந்திரமாக
பழகிக் கொண்டிருந்தார்கள்.

பலருக்கு
பல நண்பர்கள்.

சில சமயம்
நட்புக்குள் போட்டி,
பொறாமை,
சின்னச் சின்ன சண்டைகள்.

வார இறுதிகளில்
வெளியில் பப்புக்கு
செல்வதும்
அங்கு சாதாரணம்.

 

இந்த சூழலில்
ஒரு பெண்
தன்னை கட்டுப்படுத்திக் கொள்வது
எளிதல்ல.

“நல்ல பெண்” என்று
நினைத்து
அவளை அணுகுபவர்களும்
இருந்தார்கள்.

ஆனால்
செல்வி
ஒரே முடிவில்
உறுதியாக இருந்தாள்.

காதலில்
விழக்கூடாது.

 

சில நேரங்களில்,
“இதை விட
கிராமத்துக்கே
திரும்பிப் போய்விடலாமா?”
என்ற எண்ணமும் வந்தது.

ஆனாலும்,
தன்னைத் தானே
உற்சாகப்படுத்திக் கொண்டு
தொடர்ந்து உழைத்தாள்.

ஐந்து ஆண்டுகளில்
டீம் லீடராக உயர்ந்தாள்.

 

அந்த ஐந்து ஆண்டுகளில்,
பெருமாள்
மகளுக்கான வரனைத்
தேடிக் கொண்டிருந்தார்.

இறுதியில்
பக்கத்து கிராமமான
செக்கானூரணியில்
ஒரு இஞ்சினியர்
மாப்பிள்ளை கிடைத்தார்.

 

“வேலை செய்தது போதும்”
என்று
தந்தையின் விருப்பத்தை
ஏற்றுக்கொண்ட செல்வி,

அந்த வரனை
திருமணம் செய்து கொண்டாள்.

திருமணத்திற்கு முன்
மாப்பிள்ளையுடன்
பேசக் கூடாது
என்ற தந்தையின்
கட்டுப்பாட்டையும்
அவள் மீறவில்லை.

 

முதலிரவு. அறையில்
அமைதியாக இருந்த போது,

அவளுடைய கணவர்
கோபி
மெதுவாக கேட்டான்:

“பெங்களூரு வாழ்க்கை
எப்படி இருந்தது?”

 

அந்த கேள்வியின் பின்னால் இருந்த
சந்தேகத்தை
செல்வி உணர்ந்தாள்.

ஆனால்
அவள் மனம் தளரவில்லை.

இவ்வளவு காலமாக
மெனக்கெட்டு
தந்தை அமைத்து தந்த
வாழ்க்கையை
ஒரு கோபத்தில்
சிதைக்கக் கூடாது
என்பது அவளுக்கு
தெரிந்திருந்தது. .

 

அவள் மெதுவாக
கோபியை ஊடுருவி பார்த்தாள்.

அந்தப் பார்வையில்
உறுதியும்
நம்பிக்கையும் இருந்தது.

ஒரு சின்ன
புன்னகையும்
உதட்டில் மலர்ந்தது.

 

அந்தப் பார்வையும்
புன்னகையும்
சொல்லாத பல பதில்களை
கோபிக்கு
சொல்லிவிட்டது.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்