
“இங்க பாரு செந்தமிழ் எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல கொஞ்சம் கூட விருப்பமில்ல .. உன்னை மட்டுமில்ல யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்கிற நிலைமையில இல்ல .. என் அம்மா பேச்சை மறுக்க முடியாம தான் பொண்ணு பார்க்க வந்தேன்” என்று இளமாறன் சொல்ல .. வெட்கப்பட்டு குனிந்து அழகாக சிரித்துக் கொண்டிருந்தவள் திடுக்கிட்டு மெல்ல நிமிர்ந்து அவனை பார்த்தாள் .
*************************************
அவள் கண்ணீர் அவனை ஏதோ செய்ய திரும்பவும் மெல்ல நடந்து அவள் அருகில் வந்தான் .. “இப்போ எதுக்கு அழற??” என்று கொஞ்சம் கடுப்பாக கேட்டான் . அவள் பதில் பேசாமலிருக்க .. “சொன்னா தான தெரியும் .. சரி நான் போறேன்” என்று அவன் திரும்ப ..
“அது வந்து .. எனக்கு அம்மா இல்ல நான் பிறந்த கொஞ்ச வருஷங்கள்ல இறந்துட்டாங்க .. என் அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டார் .. என் சித்தியோட அண்ணன் மனைவி சமீபத்துல இறந்துட்டாங்க .. அதனால என் சித்தி அவருக்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறாங்க ”
***************************************
அவள் கண்களோ அவன் கண்களை பார்த்து ரசித்து .. பின் அவன் இதழை பார்த்து உள்ளுக்குள் தடுமாற .. “ஹ்ம்ம் .. உடம்புல இருக்கிறது குறை இல்ல .. மனசுல இருக்கிறது தான் குறை .. இவ்ளோ நேரம் பொறுமையா நீங்க என்கிட்ட பேசுறீங்க .. என்னோட கருத்தை கேட்கிறீங்க .. அதுனால நீங்க நல்லவர் .. எனக்கு உங்களை பிடிச்சிருக்கு” என்று சொன்னாள் செந்தமிழ் .
***************************************
வணக்கம் நான் அபிஶ்ரீ .. இந்த தளத்திற்குள் புதியதாக நுழைந்திருக்கிறேன் . இந்த தளம் எனக்கு புதிய கதவுகளை திறந்து விட்டிருக்கிறது . என்னை போலவே வாசிப்பில் எழுத்தில் நாட்டம் உடைய ஒத்த மனிதர்கள் .. அவர்கள் படைப்புகள் .. அதை இங்கு பதிப்பிக்க எளிதாக சொல்லப்படும் வழிமுறைகள் .. சந்தேகங்களுக்கு உடனடி பதில்கள் .. சில புதிய நட்புகள் .. ஊக்குவிப்புகள் எல்லாம் கிடைத்திருப்பதால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது .
ஓல்டு இஸ் கோல்டு போட்டிக்காக என் புதிய நாவலை பதிய போகிறேன் . ஏற்கனவே எழுதிக் கொண்டிருந்த நாவல்களின் இடையே திடீரென்று தோன்றிய கதைக்கரு .. அதைத் தொடர்ந்து கதாபாத்திரங்கள் .. நிகழ்வுகள் எல்லாம் எழுத ஆரம்பித்தேன் .
எனக்கு ஆன்டி ஹீரோக்கள் கதையை விட சூப்பர் ஹீரோக்கள் கதை தான் பிடிக்கும் . என் கதை ஹீரோக்கள் சூப்பர் ஹீரோக்கள் தான் . நான் முதல் முறையாக எழுதிய ஆன்டிஹீரோ கதை இது . ஒரு காதலால் ஆன்டிஹீரோ ஆக்கப்பட்டான் .. ஒரு காதலால் மீண்டு வருவான் .. ஒரு தாய்க்கும் தாயாக போகிறவளுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம் தான் கதை .
காதல் .. குடும்பம் .. நட்பு .. ரொமான்ஸ் எல்லாம் இருக்கும் . அதே போல ஹீரோ என்றால் சிக்ஸ் பேக் .. கட்டுடல் .. பெரிய பணக்காரனாக இருக்க வேண்டுமா .. இந்த ஹீரோ கொஞ்சம் வித்தியாசமானவன் .
நாவலின் பெயர்
என்னுள் நீ காதலாய் 💞
டிசம்பர் 15 முதல் .. உங்கள் தூரிகை இணையதளத்தில் .. தொடர்ந்து ஆதரவுகளும் அன்புகளும் தாருங்கள் . நன்றி .. நன்றி .. நன்றி !!!
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இனிய ஆரம்பம். சூழ்நிலைகளின் தாக்கத்தால் ஏற்படும் உணர்வுகளின் குறைபாடு உள்ளவர்கள் தான் anti hero. அந்த வகையில் முதலிலேயே தெளிவுப்படுத்தி விட்டீர்கள். ஒரு சிறந்த குடும்பம் சார்ந்த கதைக்காக காத்திருக்கிறோம்.
படைப்பாளருக்கு வாழ்த்துகள் 👏🏼
தங்கள் கருத்துகளுக்கும் ஊக்குவிப்புக்கும் மிக்க நன்றி… அன்புகள் 💞💞💞