Loading

காலை வேளை அந்த வீட்டின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பரபரப்பாய் தங்கள் வேலைக்கும், கல்லூரிக்கும் செல்ல புறப்பட்டு கொண்டிருந்தனர். ஒருத்தியை தவிர. அவளுக்கோ தலைக்கு வின்வின் என்று வலித்தது.அவளுக்கு வலிகளில் கொடிய வலி தலை வலியாம் . அவளக்கு  வலது புறம் இருந்த மேசையிலிருந்து அவள் தலை வெடித்து விடுவதை போன்ற சத்தத்தை எழுப்பி அவளை துயிலெழ வைக்க அநியாயமாய் வேலை செய்தது அந்த மேசை கடிகாரம். அந்த கடிகாரத்தின் சத்தத்தை கேட்டு இன்னும் தலைவலி அதிகரித்ததால் அதனை கீழே தள்ளிவிட்டு உடைத்தவள். கண்களை கசக்கியவாறு எழுந்து அமர்ந்தவளுக்கு தலை பாரமாக இருந்தது. 

திடீரென தெளிந்தவளாய் பதறிக்கொண்டு சுற்றிப்பார்த்தாள். விழி, “ஐயோ நான் எங்க இருக்கேன்”, என்று பதறியவள்,

விழி, “அந்த ஓலை குடிசை எங்க?. மறுபடி தொலைஞ்சிட்டேனா? அய்யயோ.?”என்றவள் இப்போது அந்த அறையை கூர்ந்து கவனித்தாள். இது எங்கயோ பார்த்திருக்கேனே, என்று பேசிக்கொண்டே எழுந்து அந்த அறையை சுற்றி பார்த்தவள்.

விழி,“இது என் ரூம். என் வீட்டுக்கா வந்துட்டேன். எப்படி?”, முகம் முழுக்க அதிர்ச்சியின் விம்பம்.

விழி, “ஐயோ கனவா இருக்குமோ” என்று கைகளை கிள்ளி பார்த்தாள். வலித்தது, “ஸ்ஸ்ஸ்ஸ். ஐயோ நிஜம் தான்”. இன்னும் அவள் இயல்புக்கு திரும்பவில்லை.

அறை கதவை திறந்தவள், முதலில் தன் கண்ணில் பட்ட தாயை ஓடி சென்று அணைத்துக் கொண்டாள்.

விழி, “அம்மா உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் மா. எப்படி இருக்க?” என்று கூறி அவர் கன்னத்தில் அழுந்த இதழ்களை பதித்து எடுத்தாள்.

அவளை விசித்திரமாக நின்று பார்த்தனர் அவ்வளவு பரபரப்பாய் ஆயத்தமாகி கொண்டிருந்த அவள் தந்தையும் தம்பியும்.

இவள் அதனை கவனித்து விட, “என்ன ஆச்சு ஏன் இப்டி என்னை வித்யாசமா பாக்குறீங்க. நான் எவ்ளோ கஷ்டப்பட்டுட்டு வந்திருக்கேன் தெரியுமா அங்க அந்த தீவுல”, என்க

அவள் தம்பி நவிலனோ, “அம்மா சொன்னேன்ல இவளுக்கு சீக்கிரமே மர கழன்டிடும். கீழ்ப்பாக்கம் கூட்டிட்டு போற நேரம் வந்துருச்சு”.

இப்போது விசித்திரமான பார்வையை இவள் வீசினாள். 

விழியின் அன்னை சுசித்ராவோ, “ஐயோ நான் அப்பவே சொன்னேனே மலேசியா போய்ட்டு வந்ததுல இருந்து இவ ஏதோ மாதிரி இருக்கானு கேட்டீங்களா”.

விழி, “எது நான் மலேசியா போனேனா?”, அதிர்ந்தாள்.

புரியவில்லை அவளுக்கு. அவள் தான் மலேசியாவிற்கு செல்லவே இல்லையே. அது எந்த இடமென்று இப்போது வரை தெரியாத நிலை தானே அவளுக்கு. இப்போது மீண்டும் தன் இல்லம் திரும்பிய கதை அவளுக்கே தெரியவில்லை.

சுசித்ரா, “என்னடி ஒளறுற. மலேசியா போய்ட்டு தானே டி வந்த. போட்டோஸ் கூட காமிச்சியே”.

அவளுக்கு தலை சுற்றியது. உலகம் தலைகீழாய் சுற்றியது போலவே இருந்தது. அவளுக்கு திருநீறு இட்டு கடவுளிடம் வேண்டுடிகொண்ட அவள் அன்னை.

சுசித்ரா, “நைட் டியூட்டி போகாதனு சொன்னா கேக்குறியா. காத்து கருப்பு அடிச்சிருச்சு பாரு. இன்னிக்கு டியூட்டி போகாத லீவ் போட்டு. கோவில் போய் சாமி கும்பிட்டுட்டு வா. ரெஸ்ட் எடு எல்லாம் சரியா போகும்”, என்றவர் அவள் நெற்றியில் முத்தம் பதித்துவிட்டு தன் வேலைக்கு புறப்பட்டார்.

இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் கைபேசி அவள் மேசையில் தான் இருந்தது.எடுத்து பார்த்தாள் மலேசியா சென்றது போல் அன்றைய தேதியில் புகைப்படங்கள் இருந்தன. ‘என்ன இது’ அப்படமாய் அதிர்ச்சி அவளில். ஏற்க கடினமாக தான் இருந்தது. வேறு வழியில்லை ஏற்றாள் விதியின் போக்கில் நகரந்தாள்.

நாட்கள் நகர்ந்தன அதன் வேகத்தில். புரியவில்லை. அவள் நேசித்த ஒருவனுடன் அந்த தீவின் நாட்கள் நினைவில் வந்தன. 

இவளுக்கும் கண்ட உடன் காதல் தான். ஆனால் விமான நிலையத்தில் அல்ல அதற்கு முன்னதாகவே கோவிலில் கண்டிருக்கிறாள் அவனை அவன் திமிர், அவன் பேச்சு என சென்ற திசைக்கெல்லாம் இவளும் தொடர்ந்தாள் அந்த கோவிலில் அவனை அத்தனை ரசித்தாள். எப்படி அவன் தன்னை ஈர்த்தான் என்பது அவளுக்கு புதிர் தான்.

 அவனைப் பார்த்தவுடன் தோன்றிய மின்னல் மனதை வெட்டிச் சென்றது. அவன் கண்கள், கீற்றாய் இட்டு இருந்த சந்தானம். அதன் மேலேயே வைக்க படிருந்த கோவில் குங்குமமும் திருநீறும் என அவனிடம் அணிந்து பூண்டு இருந்த அனைத்தையுமே. வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்தான். அவ்வளவு தானா அவனின் அழகு என்று நினைக்கிறாய் என்னை பார்என்றது அவன் இதழ்கள் முகிழ்த்த அந்த புன்னகை விழுந்து விட்டாள் அவ்வளவு தான். அந்த புன்னகைக்கு சொத்தை கூட எழுதி தரலாமே. அவன் கற்றை மீசை அவளை தான் கூர்ந்து இழுத்து. 

அவன் புன்னகை என்பது சிறிது நேரம் மட்டுமே வெளிப்படையாய் இருந்தது. அதுவும் ஒரு இருமுறைக்கு மேல் புன்னகைக்கவில்லை அவன். அதன் பிறகு  இயல்பாய் வந்து ஒட்டிக்கொண்டது அவன் இறுக்கம். இன்னும் “இன்னும் கொஞ்ச நேரம் சிரிச்சா தான் என்னா. ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணா” அவனை ரசித்தபடி மனதில் பாடிகொண்டிருந்தாள்.

“ச்ச கெட்ட பொண்ணு டி விழி நீ”, நீதானே செல்லமாய் திட்டிக்கொண்டு தனியே பேசசி சிரித்தாள்.

 அவன் முகம் மறக்க முடியாமல் வெகுநாட்கள் இதே போல் தான் சுற்றினாள். அவள் தம்பி நவீலனே, “ ஏய் என்ன தனியா பேசி சிரிக்கிற ஐயோ பேய் பிடிச்சுக்கிச்சா” என்று பயங்கரமாய் கலாய்பான்.

 அதன் பிறகு வெகு நாட்களாய் அவனை அவள் பார்க்கவில்லை. அதற்காக அவன் நினைவுகளும் அவளை விட்டுப் போகவில்லை. அந்தக் கோவிலிலேயே அவனை தொடர முடியாமல் தொலைத்து விட்டிருந்தாள்.

மீண்டும் அவள் முன் அவள் வேலை செய்யும் மருத்துவமனையிலேயே தோன்றினான். அதுதான் விதி யோ என்னவோ தெரியவில்லை அப்போதுதான்  அன்றைய வேலை நேரத்தை முடித்துவிட்டு கிளம்பிக்  கொண்டிருந்தவள். வீட்டுக்கு செல்ல போகும்போது அவள் கண் முன்னே விபத்து நடந்த ஒருவரை காப்பாற்ற அவசர சிகிச்சைக்கு  கூட்டி சென்றான். 

 வெகுவாய் காயமடைந்த அவருக்கு பண உதவிகள் செய்து அவர் குடும்பத்தினர் வரும் வரை இருந்து பார்த்து கொண்டான். விபத்தில் அடிபட்டவரோ ரோட்டின் ஓரத்தில் தங்கியிருக்கும் ஒருவர் என்பதால் முழு பண உதவியும் செய்து கொடுத்தான். அப்படியே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். 

 அவன் செய்யும் ஒவ்வொன்றும் அவளை கவரச் செய்தன. காதலித்தால் அப்படித்தானே  அவர் செய்யும் சிறு சிறு செயல்களும் பெரிதாய் கவர செய்யும். அவளும் அப்படித்தான் வெகுவாய் கவரப்பட்டாள். இதில் அவன் செய்தது சற்று பெரிய உதவி வேறு மயங்காமல் இருக்க கூடுமோ?. அவளும் மயங்கினாள் அவனிடம்.

இருந்தும் இம்முறையும் அவனைத் தவற விட்டு விட்டாள். அவளும் அவனை மீண்டும் கண்டுபிடிக்க நிறைய வேலைகள் செய்து பார்த்தாள். ஆனால் ஒன்றும் வேலைக்கு ஆகாமல் போக தவித்து தான் போனாள். அதன் பிறகு தன் வேலையிலேயே முழு கவனத்தில் இருந்தாள். நடுநடுவே அவன் நினைவுகளும் வந்து செல்லும். 

வெகு நாட்கள் தேடலுக்குப் பிறகு அந்த விமானப் பயணத்தின் போது தான் அவனைக் கண்டு கொண்டாள். அவனை முதலில் அந்த விமான நிலையத்தில் பார்த்தபோது இன்ப அதிர்ச்சி அவளுக்கு. அத்தனை சந்தோஷம் இம்முறையும் தவற விட்டு விடக்கூடாது என்று சற்று பேச, நெருங்க முயற்சித்தாள். அவளே எதிர்பாராத ஒன்று கரெழிலனின் நட்பு.

 

இப்போது நினைவுக்கு வந்தவளுக்கு. அத்தனையும் மாயையா?, இல்லை அத்தனையும் கனவா? ஒன்றுமே புரியவில்லை. அவன் நினைவுகளில் இருந்து வெளிவரவும் முடியவில்லை. பலவற்றை விதி என்று நினைத்து கொண்டாள். ஆனால் இவன் நினைவுகள், ஏன் அவற்றை மறக்க முடியவில்லை. ஏன் இத்தனை நினைவுகளின் சதிராட்டம். இப்போதும் அவனின் இதழணைப்பு உண்மை போல தானே இருக்கிறது. அவள் ஆதரங்களை தொட்டு பார்த்தாள். இன்னும் அதனை பொய் என்று ஏற்க முடியவில்லை. அதெப்படி கனவாக இருக்க முடியும். ‘கொஞ்சம் அவன் நினைவுகளை தராமல் இருக்க மாட்டாயா”,என்று மன்றாடினாள் மனதிடம். அத்தனை அவனாய் தெரிந்தான். இதயத்தில் பாரம் கூடி போனது. எத்தனை தான் கண்ணீர் வடிப்பாள். அழுது அழுது அவள் கண்ணீர் தீர்ந்து போனதே!.

தீவினை சுற்றியுள்ள ஆழியாய் அவளை சுற்றிலும் அவன்! எங்கிலும் அவன். எதிலும் அவன். அவன் மட்டுமே தெரிய திணறினாள் அவள் எங்கோ தொலைந்திட்ட பிள்ளையாய் தேங்கி நின்றாள்.உணரவும் தெளியவும் முடியவில்லை இதன் முடிவு எதுவென. எதைநோக்கி தன் எண்ணங்கள் தன்னை இட்டு செல்கின்றன என்று குழப்பப்பத்தில் தத்தலித்து கொண்டிருந்தாள்.

காதலின் பிரிவு என்றாள் கூட அவளிடம் நம்பிக்கை இருந்திருக்குமே இது பிரிவு மட்டும் தானே என்று. இப்போது இது மெய்யா, கனவா, மெய்யான கனவா?.

நாட்களும் அதன் வேகத்தில் நகர்ந்து கொண்டு தான் இருந்தது மூன்று மாதங்கள் கடந்தது இருந்தும் அவள் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டதாய் இல்லை. அவனை மறக்க உண்மையா பொய்யா என்றே தெரியாத அவனுடனான நினைவுகளை மறக்க பெரும் பாடு பட்டாள்.

காலம் நேரமின்றி வேலைக்கு சென்றாள். அவளின் எண்ண அலைகளை அவனை நோக்கி நகராமல் அடக்க வழி தெரியாது தன் வேலையை ,தன் கடமையை கைகளில் ஏந்திக் கொண்டாள். அனைத்தையும் மனதுக்குள் பூட்டிக்கொண்டு , வெகு தூரம் அவனின் நினைவுகளை சந்திக்க பயந்து ஓடினாள். இடர்களை சந்திக்க பயந்து ஓடும் ஓட்டம் அது. ஓட்டமும் நின்றபாடில்லை அவன் நினைவுகளும் மறைந்த பாடில்லை . என்னதான் செய்வாள் நடந்தவை கனவா நிஜமா என்றறியும் மார்க்கம் தெரியவில்லை. கனவு தான் எனில் தனக்கு எப்படி அத்தனை ஸ்திரமான நம்பிக்கை அது உண்மை தான் என. அங்கு நடந்த நிகழ்வுகளில் தான் பேசியது நடந்தது செய்த செயல்கள் என ஒவ்வொன்றும் அத்தனை தெளிவாய் எப்படி தெரியும்.அந்த தீவும் மெய் தானே என்று தோன்றியது . ஆனால் தான் மலேசியா அதே விமானத்தில் வந்தது அது நிச்சயம் உண்மை தான். அவளுக்கு பித்து பிடித்துவிடும் போல் இருந்தது. 

இதற்குமேல் தாங்காது என்று உணர்ந்தவள் தன் தோழி  மொழியிடம் பேச முடிவு எடுத்தாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. சூப்பர் da ஒருவழியா vanthuttanga பாவம் அந்த பிள்ள மென்டல் ஆகுறதுக்குள்ள சீக்கிரம் avana காட்டிடு da ❤️❤️