
துப்பாக்கிச் சுடும் அரவம் கேட்டதும் தன் தலை சிதறி விட்டது என்று ஒரு நொடி பயந்தவன் அச்சத்தோடே ஒரு விழியை மட்டும் திறந்து பார்த்தான்.
அவனுக்கெதிரே துப்பாக்கியை தூக்கிப் பிடித்த படி படு ஸ்டைலாக நின்றிருந்தாள் ஜெஸி.
‘இது ஒன்னு தான் குறைச்சல் இவளுக்கு. வந்து காப்பாத்தாம, போஸ் குடுத்துட்டு நிக்கிறா??? இவளை… ‘ என பல்லைகடித்தான்.
‘இவள பழிவாங்க நினைச்சா, எல்லாமே நமக்கே திரும்புது. துருவா, உனக்கு நேரமே சரியில்ல டா, அதுவும் இவ வந்ததிலிருந்து சுத்தம். இதுல இந்தக் கிழவன் வேற உயிர எடுத்தே தீருவேனு ஆட்டு கழுத்த அறுக்கறது போல பிடிச்சிருக்கான். யோவ் கிழவா விடுயா !!’ என உள்ளுக்குள் புலம்பி தள்ளினான் துருவன்.
மெதுவாக அவர்கள் அருகே வந்தாள் ஜெஸி.
“யார் நீ???” என்றான் அந்தக் கிழவன்.”நான் ஜெஸி, அவனை விடுங்க…”என்று படு கூலாகச் சொன்னாள்.
“அவனை விடணுமா? அவன் என்ன பண்ணினா தெரியுமா உனக்கு???”என பற்களைக் கடித்தப்படி கேட்டார்.
“தெரியும், அவன் பண்ண காரியத்துக்கு எனக்கு கூட அவனைக் கொல பண்ணனும் தான் தோணுச்சி. ஆனா அவனை காப்பாத்தணும்ன்றது என் ட்யூட்டி. அதுனால அவனை விடுங்க. அவன உங்க கிட்டையும் உங்க ஒயிப் கிட்டையும் மன்னிப்பு கேட்கச் சொல்றேன் “என்று மிகத் தன்மையாகச் சொன்னாள்.
அவள் அவ்வாறு சொல்ல அதில் சீற்றம் கொண்டவன்”யூ…”என அவள் மீது பாய வர, கிழவனின் பிடியில் கழுத்து இறுக அங்கே நின்றான்.
“முடியாது, எவனாவது என் பொண்டாட்டிய பார்த்தாலே கொன்னுடுவேன். இவன் கிஸ் பண்ணிருக்கான். ஹவ் டேர் ! நான் இவன என் கையாலே கொல்லணும் அப்ப தான் மத்தவனுக்கும் அந்த பயம் வரும் “என்று மீண்டும் ட்ரிக்கரை அழுத்தினான்.
அதில் பயந்த அந்த அழகியோ அந்த கிழவனின் புஜத்தை பற்றி”பேபி!!! அவர் தெரியாம தான் என்னை கிஸ் பண்ணார். ஹனி !! ப்ளீஸ் அவர் அவரோட பிரண்டா என்னை நினைச்சி கிஸ் பண்ணிட்டார். ப்ளீஸ் லீவ் ஹிம் ஹனி “என அவனுக்காகப் பரிந்து பேச வந்தாள் கிழவனின் துணைவி.
‘இதுக்கு நான் இந்த கிழவன் கையால செத்தே போயிருக்கலாம். இந்தக் கிழவன் பேபியா ?? இந்தக் கிழவன் ஹனியா?? எவ்வளவு அழகா இருக்காள். ஆனா அறிவுனு ஒன்னு இவளுக்கு இருக்கா? இல்ல வைக்காம விட்டாரா அந்த பிரம்மன்? செத்ததுக்கு அப்றம் அந்தாள் கிட்ட போய் கேட்கணும் ஏன் அழகான பொண்ணுங்களுக்கு அறிவ சுத்தமா வைக்கிறது இல்லனு’ சம்மதமில்லாமல் புலம்பினான்.
அவனுக்காகப் பரிந்து பேசும் மனைவியை விழியாலே எரித்தவர்.”நீயேன் அவனுக்கு சப்போர்ட் பண்ற? உனக்கு அவனுக்கு என்ன சம்பந்தம். நீ தான் அவனை பார்க்க வர சொன்னீயா??? இவன் உன்னோட கள்ள காதலனா???”என்ற கேள்வியை அடுக்கிக் கொண்டே போனான் அந்தக் கிழவன்.
“ஐயோ !!! ஹனி இவர் யாருனே எனக்கு தெரியாது . நான் உங்களை மட்டும் தான் காதலிக்கிறேன். நான் உங்களுக்கு மட்டும் தான் சொந்தம்”என்றவள் விழியில் கொஞ்சம் மோகத்தைக் கூட்டி, தன் அங்கங்களால் அவரை உரசி கிழவனை கிறங்கடித்தாள். கிழவனின் கோபம் கொஞ்சம் மட்டு பட, அவர் பிடியை தளர்த்தியவர் அவனை தன் மெய்காப்பாளரிடம் ஒப்படைத்தார்.
“இவனை நான் விட மாட்டேன்… இவனை கூட்டிட்டி போய் தனியா கவனிங்க”என்ற கட்டளையிட, அதற்கு பணிந்து அவனை இழுத்து செல்ல அவர்களை தடுத்தாள் ஜெஸி.
“சார் , ப்ளீஸ்… இவன வேணா உன்கிட்டயும் உங்க ஒயிப் கிட்டயும் மன்னிப்பு கேட்கச் சொல்றேன். அவனை மன்னிச்சு விட்டுடுங்க…”என்றாள் பொறுமையாக,
“வாட் நான் மன்னிப்பு கேட்கணுமா??? முடியாவே முடியாது. நான் எந்த தப்பும் பண்ணல, நான் ஏன் மன்னிப்பு கேட்கணும்??? நெவர் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் “என்றவனை கத்தி முனையை கண்ணில் வைத்து மிரட்டி காரியம் சாதிப்பது போல, தன் கூர் விழிகளால் அவனை நோக்கியவள், தன் விழி வீச்சில்’ நீ தப்பு பண்ணல??’ என்ற கேள்வியை வைத்து அவனைத் துளைத்தெடுக்க, அவனோ தலை குனிந்தான்.
“கேளு…”என்று அவனை சொல்ல சொல்லி அழுத்தினாள்.
“மாட்டேன்”என்றான் திமிராக. அடுத்த நொடியே அவளது ஐவிரலும் அவன் கன்னத்தில் பதிந்தது.
“மன்னிப்பு கேளுடா “என்று பற்களை கடித்தாள்.
“அடிச்சா, நான் மன்னிப்பு கேக்கணுமா?முடியாது. நான் கேட்க மாட்டேன்”என்றவன் மீண்டும் வீம்பு பிடிக்க, மீண்டும் அவன் கன்னத்தில் அரைந்தாள். கன்னம் தீயாக எரிந்தது.
“கேளு”
“ஸாரி, நான் என் பிரண்டுனு நினைச்சி தெரியாம ஹக் பண்ணி கிஸ் பண்ணிட்டேன். ஐ அம் ரியலி ஸாரி”என்றான் தலைகுணிந்து கொஞ்சம் கண்ணீர் விட்டபடி. அவனுக்கு எதிரே நின்ற அழகிக்கு அவனைப் பார்க்க பாவமாகவும் அவனை வதைக்கும் ஜெஸியின் மேலும் தன் கணவனின் மேலும் கோபமாக வந்தது .
“அவனை விடுங்க”என்று சன்னமாக சொன்னாள் ஜெஸி.
“முடியாது அவனை விட மாட்டேன். இப்போ நான் இவனை விட்டால். இங்க இங்கிறவன் பயமில்லாமல் என் பொண்டாட்டியா தொட நினைப்பான். இவனுக்கு கொடுக்கற தண்டனையில இனி எவனும் என் பொண்டாட்டிய நிமிர்ந்து கூட பார்க்கக் கூடாது” என்றான்.
“சரி, இவன ஒரு நாலஞ்சு அடி அடிச்சிட்டு விட்டுங்க…”
“ஏதே நாலஞ்சு அடியே அடிச்சிட்டு விட்டுடணுமா? ஏய் நீ எனக்கு பாடிகார்ட் நியாபகம் இருக்கா உனக்கு??? என் உடம்புல தூசி கூட பாடாம பாத்துக்கறது தான் உன் வேலை. பேமெண்ட் வாங்கிருப்பேல கொடுத்த பணத்துக்கு ஒழுங்க வேலை பார்”எனவும் அவள் மீண்டும் கன்னத்தில் ஒன்று கொடுக்க அமைதியானான்.
“அவனை விடுங்க”என்றாள்.
“முடியாது”என்றான் அந்த கிழவனும் இறங்காமல்.
பொறுமை இழந்த ஜெஸி. திரும்பி ரவியிடம் கண்ணை காட்டினாள்.
துருவன் கையில் அகப்பட்ட உடனே தன்னுடன் வந்த மெய்காப்பாளர்களிடம் தன் திட்டத்தை முன்பே கூறிவிட்டாள்.
“முதல்ல நான் அவன் கிட்ட பேசி பார்க்கிறேன். அவனை விடலேனா தப்பிக்கறது தவிர வேற வழியே இல்ல. நீங்க எல்லாரும் கார்ல் உட்காருங்க, ரவி, உன் கிட்ட நான் கண்ண காமிச்சதும், நீ பப்புல இருக்க லைட் ஆஃப் பண்ண சொல்லிட்டு, நீ கேட் கிட்ட நில்லு . உன் போன் லைட் மூலமா எனக்கு சிக்கனல் கொடு. நான் அவனை அவங்க கிட்ட இருந்து கூட்டிட்டு வந்துடுறேன்”என்று தன் படைகளுக்கு திட்டத்தை விளக்க, அவர்களும் தயாராக தான் இருந்தார்கள்.
கிழவன் ஜெஸி முறைத்து கொண்டிருக்க, அவளோ கண நேரத்தில் அவனது மனைவி இழுத்து நெற்றி பொட்டில் கன்னை வைத்தாள்.
கிழவனும் அவனது மெய்க்காப்பாளர்களும் முன்னே வர, “ஓரடி எடுத்து வச்சாலும் உன் பொண்டாட்டி உயிரோட இருக்கவே மாட்டாள். அவனை விடு”என்றாள் துப்பாக்கியை மேலும் அழுத்தி.
“ஹனி!!!” என்று சிணுங்கினாள் அந்த அழகி. துருவன் அந்த ‘ஹனி’ என்ற வார்த்தையைக் கேட்டு பல்லைக் கடித்தான்.
கிழவன் கண்ணசைக்க மெய்க்காப்பாளர்கள் அவனை விடுவித்தான். மீண்டும் அவள் ரவியைப் பார்க்க அவனும் கரண்டை அணைக்க சொல்லி ஆணையிட்டான். பப்பில் எரிந்து கொண்டிருந்த விளக்குள் அணைய மை இருட்டாக ஆனது அந்த இடம்.
அவளை அந்தக் கிழவன் மேல் தள்ளிவிட்டு, துருவனின் கையை பிடித்து வாசலை நோக்கி ஓடினாள்.
“பிடிங்க டா அவளை…” இருட்டில் அந்த குரலும் காலடி சத்தங்களும் கேட்க, அதைக் கண்டு கொள்ளாதவள், அவனை விடாது பிடித்தபடி பப்பிலிருந்து வெளியே வந்தாள்.
அவர்களுக்கு என்று கார் தயாராகி நிற்க, அவனை ஏறவைத்து தானும் ஏற கார் புறப்பட்டு அவ்விடத்தை விட்டு வேகமாகத் தாண்டிச் சென்றது.
கார் சென்ற பின் தான் அந்த கொரில்லாக்கள் வாசலுக்கு வந்தனர். அவர்கள் தப்பித்து சென்று மேலும் கிழவனின் கோபத்திற்கு ஆளானார்கள்.
யாரும் அவர்களைத் தொடரவில்லை என்றதும் அவர்களது கார் சீரான வேகத்தில் சென்றது.
“மேம், இது போல அட்வெஞ்சர் பண்ணி எவ்வளவு நாளாச்சி??”ஸ்ரீ ஆரம்பிக்க, “எஸ் மேம்… நீங்க இவரை கூட்டிட்டு வருவீங்க தெரியும். ஆனா எப்படினு தான் மேம் செம்ம த்ரில்லா இருந்தது. பெர்ஃபெக்ட் டைமிங்ல கிரேட் எஸ் கேப் மேம்…” என்று ஜெஸி தப்பிக்க எடுத்த முயற்சியை இருவரும் பாராட்ட, இருவருக்கும் நடுவே அமர்ந்திருந்த துருவனுக்கு கடுப்பாகிப் போனது.
“ஏதே ! அட்வெஞ்சரா, த்ரில்லா !! எது இதுவா?? கரண்ட ஆஃப் பண்ணி தப்பிக்கறது உங்களுக்கு அட்வெஞ்சரா ?? யோவ் இது அரத பழசு டெக்னிக்கு இதை போய் புகழ்றீங்க… எதிரிகள அடிச்சி நொறுக்கி என்னை காப்பத்தணும் அதான்யா அட்வெஞ்சர். சும்மா பேச்சு வார்த்தைய நடத்தி என்னை நாலு அடி அடிச்சி தப்பிச்சு கூட்டிட்டு வந்தா அது சாகசமா??? நல்ல போடுறீங்க…ஜால்ரா “என்று சைகையில் செய்ய அவர்களுக்கு கோபம சுர்ரென்று வந்தது.
“தப்பு பண்ணது நீ. நியாயமா உன்னை தான் அடிக்கணும் அதான் அடிச்சேன். அவங்க கிட்ட நான் ஏன் ஃபைட் பண்ணணும்???”என அசட்டையாக கேட்டாள்.
“நான் தப்பு பண்ணா நீ அடிப்பீயா?? உனக்கு யார் அந்த ரைட்ஸ் கொடுத்தது? எங்க அம்மாவே என்னை அடிச்சது இல்ல நீ எப்படி என்னை அடிக்கலாம் பதில் சொல்லு”என்று உணர்ச்சி வசத்தில் அவளது சட்டையைப் பற்றியிழுத்துவிட்டான்.
சட்டென அவனை தீயாக விழிக்க, கையை எடுத்தவன்”சாரி நான்…”என அவன் கூற வர, காரை நிறுத்த சொன்னவள் “இறங்கு” என்றாள்.
அவனும் வண்டியை விட்டு இறங்கினான். கோபத்தில் மீண்டும் அவனை அறைந்தாள்.
“பொறுக்கியா டா நீ ! ச்சீ வெட்கமா இல்ல உனக்கு. இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுக்கற ! இதுக்கு தான் நீ ஃபாரின் போய் படிச்சிட்டு வந்தீயா? இன்னைக்கி நடந்தது மட்டும் உங்க அம்மாவுக்கு தெரிஞ்சது உன்னை கொன்னுடுவாங்க ! அவங்க பேருக்கும் புகழுக்கும் அவங்க நல்ல மனசுக்கும் நீயெல்லாம் அவங்க மகன் சொல்லிக்க உனக்கு அசிங்கமா இல்ல
பொம்பல பொறுக்கி ! நீ பண்ண காரியம் மட்டும் வெளிய தெரிஞ்சது, இவ்வளவு தூரம் அவங்க சம்பாரிச்சா மரியாதை எல்லாம் ஒன்னுமில்லாம போயிருக்கும். எப்பேர்ப்பட்டவங்களுக்கு நீ மகனா பிறந்தும் உன் புத்தி எப்படி போகுது ச்ச!
இங்க பார் இப்பையும் சொல்றேன், ஒழுங்கா உன் அம்மாட கிட்ட நீயே போய் எனக்கு பாடிகார்ட்டா ஜெஸி வேணாம் சொல்லிடு. இல்ல முடியாதுன்னு இது போல தான் பண்ணிட்டு இருப்பேன் சொன்னீனா, ஒரு நாள் நீ என் கையால தான் சாகப் போற, எதுவும் பேசாம இப்போ வண்டில ஏறு”எனவும் பேசாது இயந்திரம் போல வண்டியில் ஏறினான்.
அங்கிருக்கும் சூழலை வைத்து அவளை விரட்ட திட்டம் போட்டவன், தன் தாயை மறந்தது போனான். இந்த விஷயம் சமூக வளைத்தளத்தில் சிறிது கசிந்தாலும் தன் தாயின் பெயர் கெட்டிருக்கும். அவர் உழைத்தது வெறும் பணம் மட்டும் அல்ல , பெரும் மரியாதையும் கூட அதை அழிக்க நினைத்ததை எண்ணி வருத்தினான்.
அதன் பின் அவன் அமைதியாக தான் வந்தான். யாரும் எதுவும் பேசவில்லை. இல்லமும் வர, அவன் எதுவும் பேசாது தன் அறைக்குச் சென்றான். அவன் வரும் வரை வீரமதி முழித்திருந்தார். அவனோ அவரது முகம் கூட பார்க்க முடியாமல் மாடி ஏறினான்.
அவன் செல்வதை பார்த்தவர், “எதுவும் பிரச்சினையா அமைதியா போறான் “என்று அவன் பின்னால் வந்த ஜெஸியிடம் கேட்டார்.
“எந்த பிரச்சினையும் இல்ல. என்ஜாய் பண்ண டயர்ட்ல போறார் மேம்”என்றாள்.
“ஓகே… தேங்கியூ ஜெஸி !”
“இட்ஸ் ஓகே மேம். இட்ஸ் மை ட்யூட்டி நான் கிளம்புறேன்”என்றாள்.
“இந்த அன்டைம்ல நீயும் உன் க்ரூப் எங்கயும் போகவேணாம். இங்கே ஸ்டே பண்ணுங்க… நாளைக்கு சண்டே தான மார்னிங் கிளம்புங்க. நாளைக்கு லீவ் எடுத்துக்கோங்க..”என்றார்.
அவர்களும் மறுக்க வில்லை அவர்களுக்கு ஒதுக்கப் பட்ட அறையில் உறங்கிப் போனார்கள். ஆனால் ஜெஸி உறங்க வில்லை. அவளுக்கு உறக்கம் வரவில்லை.
கணவனின் நினைவில் லானில் நடக்க, தூக்கம் வராமல் தவித்த துருவனும் அறையிலிருக்கும் பால்கனிக்கு வந்து நின்றான்.
உறங்காமல் அழையும் ஜெஸியைக் கண்டு குழம்பி நின்றான். அவள் கன்னத்தில் வழியும் கண்ணீரை துடைப்பதைக் கண்டவனுக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான்.
‘இவளா அழறா, இவ மத்தவங்கள தானே அழ வைப்பா !! என்னவா இருக்கும்??’ என யோசித்தவன், “நமக்கு எதுக்கு?”என்று உள்ளே செல்ல எத்தவனித்தனுக்கு கால்கள் நகர மறுத்தது. மீண்டும் அவளைப் பார்க்க தூண்டியது மன
ம். எவ்வளவு கட்டுப்படுத்தியதும் மீண்டும் அவளை பார்த்தான். அவள் அழுகை அவனை ஏதோ செய்தது. அவளை பார்த்தபடியே நின்றான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
+1
