Loading

2001 முதல் முதலில் அலைபேசியில் ஒரு குரல் ஹலோ யார் பேசுறது நான்தான் பாலாஜி பேசுறேன்♠ஆரம்பித்தது உன்னை காண வேண்டும் என்ற தேடல்💕

 

அதன் பின்பு ஓர் இரு சந்திப்புகள் ஆனால் அத்தை மகனாகவே தெரிந்தாய் அதைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை உணரவில்லை💕

சில மாதங்கள் கழித்து பள்ளி விடுமுறை நாட்கள் ஆரம்பித்தது எப்பொழுதும் இல்லாமல் இந்த வருடம் அத்தை வீட்டுக்கு போகலாம் என்று அழைத்துச் சென்றார்கள் அப்பொழுதும் அத்தை மகனாகவே தெரிந்தாய் அதை தவிர வேறு எதுவும் உணரவில்லை தோன்றவில்லை💕

ஊருக்கு பயணிக்கும் அந்த நாள் வந்தது பேருந்தில் மிகவும் மகிழ்ச்சியாக புறப்பட்டு  என் தம்பியிடம் அடித்து பிடித்து ஜன்னல் ஓரத்தில்  சீட்டை வாங்கிக்கொண்டு இளையராஜாவின் பாடல்களை கேட்டுக் கொண்டு சென்றோம்💕

ஜன்னலோர அந்த கதவை பார்த்துக் கொண்டே இறங்கினேன்  தூரத்தில் ஒரு மெரூன் நிற சட்டை வேகமாக என்னை நோக்கி வந்ததும் ஜன்னலோர காற்றின் வேகத்தை விட அதிகமான ஒரு காற்று என் மீது வீசத் தொடங்கியது கொஞ்சம் முழுங்கியும் கைகள்  வேர்த்தும் நல்லா இருக்கீங்களா என்று  தொடங்கினோம்.அதுவரை அத்தை மகனாக தெரிந்தவன் என் மனதிற்குப் பிடித்தவனாக மாறினான்.ஒரு வருட இடைவெளிக்குப்பின் சந்திக்கும் சந்திப்பு அதன் பிறகு இடைவேளை இல்லாமல் என் மனதிற்குள் வர தொடங்கினாய்💕

முதல் முதலில் நீ வேலை பார்க்கும் அழகை பார்த்து ரசித்து கொண்டு இருந்தேன் சிகை அலங்காரம் பண்ணி கொள்ள வந்த வாடிக்கையாளரை  அலங்காரம் பண்ணும் உன்னை நான் மிகவும் ரசித்தேன் நீ என்னை கண்ணாடியில் பார்த்து கொண்டு இருந்ததையும் நான் கவனித்தேன் அதுவரை குழந்தையாக நினைத்த என்னை குமரியாக உணர்ந்தேன்💕அன்று முதல் தொடங்கியது உன்னை காண வேண்டும் எப்பொழுதும் என்ற என் தேடல்💕

அது காதலா உன் மீது உள்ள பாசமா இல்ல அத்தை மகன் என்ற உரிமையா என்னவென்று புரியவில்லை ஆனால் ஏதோ ஒரு உணர்வு என்னுள் தோன்றுகிறது…

தினமும் காலையில் எழுந்து கடைக்கு போகும் போது என்னிடம் ஏதோ சொல்ல வருகிறாய் என்று நானும் அறிவேன் ஆனால் நீ சொல்லாமலே சென்று விடுவாய், நானும் தினமும் காலையில் எழுந்திருப்பதும் உன்னை பார்ப்பதுமாக இருந்தது கடைசியில் ஒரு நாள் சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்துக் கொடுத்த அதுதான் நம் காதலுக்கு முதல் பத்திரம் (காதல் கடிதம்)

முதல் முதலில் என்னிடம் நீ எழுதி கொடுத்த காதல் கடிதம் என் கண்களையும் புருவத்தையும் தத்துரூபமாக வரைந்து என் கால் கொலுசுகளை பற்றி அவ்வளவு அற்புதமாக எழுதியிருந்தாய்💕 கொடுத்த கடிதத்தை திரும்ப கேட்டோம்னா கொடுக்க மாட்டீங்க ஏன்னா ரகசியம் உங்களுக்கு ரொம்ப பிடிச்சது💕அந்த கடிதத்தை உனக்குள்ளே மறைத்துக் கொண்டாய் ஆனால் எழுதிய வார்த்தைகள் எனக்குள் புதைந்து விட்டது இப்பொழுது அதை நினைத்தாலும் நீ எழுதிய அந்த கையெழுத்து எனக்கு மனசுல கல்வெட்டு போல் புதைந்திருக்கிறது.  சரி கேட்டதுக்காக இன்னொருவாட்டி எழுதி கொடுக்கிறேன் அப்படின்னு திரும்பவும் நீ எழுதி கொடுத்த கடிதம் இன்னும் வந்து ஞாபகம் இருக்குது. 

அன்று நான் முழுமையாக உணர்ந்தேன் நீங்கள் மட்டும் தான் என் கணவனாக இருக்க வேண்டும் என்று💗

இதுவரை அத்தை மகனாக தெரிந்தவன்எப்படி
 காதலனாக மாறி போனாய் என்ற கேள்விக்கு விடை அறியாமல்💕
 விடுமுறை நாட்கள் கழிய கழிய உன் மீது உள்ள காதல் அதிகமாக தொடங்கியது விடுமுறை நாள் நீலாதோ!  இன்னும் உன்னோடு இருக்க வேண்டும் என்ற ஆசை நீண்டு கொண்டே சென்றது💕
 
தினமும் நான் உன்னை பார்க்க நீ என்னை பார்க்க  காலையும் மாலையும் காத்திருப்போம் ஆனால் வார்த்தைகள் நமக்குள் வரவில்லை மௌனம் மட்டுமே இருந்தது இருந்தாலும் உன் பார்வைகள் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் ♥
என் உணர்வுகளின் ஆழம் அறிய செய்தது அன்று நீ தந்த முதல் முத்தம்💖
 அப்பொழுதெல்லாம் பாட்டு கேட்க கேசட் தான் இருக்கும்
 அந்த கேசட்டிலியுமே உன்னோட காதல் கடிதம் எழுதி பார்வை ஒன்றும் போதுமே என்ற படத்தை கூட உன் பார்வை ஒன்றே போதுமே என்று எழுதி என்னிடம் காண்பித்தாய். ரோஜா கூட்டம் முதல் முதலில் நாம் இருவரும் காதலித்து பரிமாறி கொண்ட காதல் பரிசு நீ எனக்கு கேசட் கொடுத்ததும் நான் உனக்கு மீனாட்சி அம்மன் கோவில் இருந்து ரப்பர் மோதிரம் வாங்கிட்டு வந்து கொடுத்ததும் அந்த கேசட்டை வருஷங்கள் போயும் நான் வைத்திருந்தேன் காலம் போக போக கேசட்டும் நம் காதலும் தெரிய ஆரம்பிச்சுருச்சு வீட்லயும் தெரிய ஆரம்பிச்சுருச்சு அதுக்கு மேல உன் மேல இருந்த காதலை மட்டும் தான் நான் காப்பாத்திக்க முடிந்தது தவிர நீ கொடுத்த அந்த முதல் பரிசை என்னால காப்பாத்திக்க முடியவில்லை அது காணாமல் போன அந்த நாள் மறக்க முடியாத நாள் அன்னைக்கு அழுது என் கண்கள் இரண்டுமே பறிபோன மாதிரியான ஒரு வலி♥
 
விடுமுறை முடிஞ்சிருச்சு அப்புறம் ஊருக்கு கிளம்பிட்டோம் போக மனம் இல்லாமல் மீண்டும் அதே கண்கள் விற்க கால்கள் போக மறுக்க பேருந்து ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து இருந்தேன் அப்பொழுது தான் கடைசி நிமிஷத்துல நீங்க வந்து கேசட்டை கொடுத்துவிட்டு போய்விட்டு வா என்று சொன்னிங்க 
கொஞ்சம் வெளிச்சம்

கொஞ்சம் இரவு
கொஞ்சம் காற்று
கொஞ்சம் மழை
கொஞ்சம் பயணம்
நிறைய காதல்

முதல் முதலில் இரவில் தூக்கம் இல்லை பகலில் யாரிடமும் பேசத் தோணவில்லை உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டு இருந்தேன் எப்பொழுது உன்னை பார்க்க போகிறேன் உன்னிடம் பேச போறேன் என்று நாட்களை எண்ணிக் கொண்டே இருந்தேன்
அப்படி இருந்த எனக்கு இனிப்பாக ஒரு செய்தி வந்தது பொங்கல் வாழ்த்து மடல் வீட்ல எல்லாருக்கும் வாழ்த்த அனுப்பி இருந்த எனக்கு அனுப்புறதுக்காக எல்லாருக்கும் ♥அதுல நீ எழுதியிருந்த இப்படிக்கு உன் அன்பு மச்சான் என்று இன்னமும் அதை பார்த்து பார்த்து நான் ரசித்துக் கொண்டேன்.
..தொலைபேசி இல்லாத காலம் உன்கிட்ட பேசணும் உங்களோட குரலை கேட்கணும் பல நாள் தூக்கம் இல்லாமல் யோசிச்சுட்டே இருந்திருக்கேன் அப்போதுதான் வீட்ல லேண்ட்லைன் வந்துச்சு வாரத்துல ஒரு நாள் ஹலோ எப்படி இருக்கீங்க அவ்வளவுதான் அது போதும் இரண்டு வாரத்துக்கு இருக்கும் அப்போ போக போக பேசுறது தினமும் பேசுவதாக மாறிப்போச்சு♥
அப்புறம் அப்பா கிட்ட மொபைல் போன் வந்துருச்சு அதுக்கப்புறம் நைட்ல கொஞ்ச நேரம் உங்க கிட்ட பேசுற அந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை அப்படியே நம்மளோட காதலும் வருஷங்களாக வளர ஆரம்பிச்சுச்சு எப்போ திருவிழா வரும் எப்போ கல்யாணம் வரும் ஊர்ல உன்னை பார்க்கலாம் என்று ஏக்கம் மட்டும்தான் இருக்கும் ஆனா நம்ம காதலை சொன்னாலும் என்னமோ திருவிழாவில் பார்க்க முடியல இந்த கல்யாணத்துலையும் கலந்துக்க முடியல அப்படியே நான் வந்தாலும் நீங்க வர மாட்டீங்க நீங்க வந்தீங்கன்னா நான் வரமாட்டேன் இதனால் என்னமோ தெரியல நம்ம காதல் நாளுக்கு நாள் ரொம்ப அதிகமாயிட்டே போயிருச்சு அப்பொழுதுதான் உன்னை பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது அது சாந்தியுடைய கல்யாணம் உன்னை சுற்றி எத்தனை பேர் இருந்தாலும் உன் கண்கள் மட்டும் நீ பார்க்காதது போல பார்க்கும் அது சுகமான நினைவு நீ என்னை பார்க்கும் போதெல்லாம் வைத்துக் கொள் ஆயிரம் வண்ணத்துப்பூச்சிக்கு விளையாடுவது போல் இருக்கும் அதன் பிறகு கல்யாணம் முடிந்தது சென்னைக்கு வந்து விட்டேன் பின் ஓரிரு ஆண்டுகள் உன்னை நான் பார்க்க முடியவில்லை நான் உன்னை சந்திக்க நேர்ந்தது ஆனால் அது மகிழ்ச்சியான நாளாக இல்லை ஏனென்றால் என் மாமா இறந்த நாள் முன்னரே குடும்ப சுமையை சுமந்த உனக்கு கூடுதலாக தகப்பன் என்ற பொறுப்பும் கூடிவிட்டது அதன் பிறகு சென்னை கிளம்பி விட்டேன் நான்♥
 
நானும் பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்ல தொடங்கி விட்டேன்  எப்பொழுது வருவாய் என ஏங்கிக் கொண்டிருந்தேன் எல்லாவற்றுக்கும் உன் குரல் மட்டுமே எனக்கு ஆறுதல் ஆக இருந்தது என் அப்பா அம்மாவுடைய ஆசையும் உன்னுடைய ஆசையும் நான் டாக்டராக வேண்டும் என்று அதை நோக்கி நான் பயணிக்க ஆரம்பித்தேன் ஆனால் உன் நினைவுகள் என்னை சுலபமாக பயணிக்க விடவில்லை♥
 
என் இதயத்தின் நிறைத்த நீ எப்பொழுது என் கண்களை நிறைவாக்குவாய் என வாசல் பார்த்து நின்று கொண்டிருந்த எனக்கு நான்கு வருடங்கள் கழித்து என் முன் வந்தாய் ஆனால் அது நீடிக்கவில்லை என்னை தவிக்க விட்டு நீ தூர தேசம் சென்று விட்டாய் உன்னிடம் எப்பொழுதும் போல  பேச முடியாமல் காதல் கொண்ட மனம் தவித்து நிற்கிறது உனக்காக பேச கோர்த்த வார்த்தைகள் எல்லாம் உன்னை கண்டவுடன் மௌனமாயிற்று பத்திரமாக சென்று வா அதை தவிர வேறு எந்த வார்த்தையும் சொல்ல முடியவில்லை இது ஒரு பக்கம் இருக்க ஒரு பெண் உன்னிடம் பேச தொடங்கினாள் நீ அந்த பெண்ணோடு இணைந்து சிரிக்கும் போது பேசும்போது இங்கு என் மனம் போர் பூமியா இருந்ததை நீ அறியாததைப் போல் இருந்தாயோ என்னவாக இருக்கட்டும் என் மனசு அப்போதும் சொல்லுச்சு என்னோட மச்சான் எனக்கு மட்டும்தான் ஆனா பெண்களுக்கு உரியதான காதலில் சுயநலம் காதலன் மீது சுயநலம் நான் மட்டும் அதற்கு  விதிவிலக்கு இல்லை♥
கரம்பிடித்து இதழ் அணைத்து கதைக்க
கனா இருந்தாலும் விரல் தொடாமல்
விலகி இருப்பதில்
வினோத சுகம்
நீ மலேசியாவுக்கு சென்ற பிறகு முதல் முதலில் உன் குரலை நீண்ட நாட்களாக கேட்காமல் இருந்தேன் அன்று ஒரு நாள் கல்லூரியில் நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது உன் அழைப்பு வந்தது என்னை சுற்றி நூற்றுக்கும் மேல் ஆட்கள் இருந்தும் யாரும் இல்லாத வனாந்தரத்தில் பேசுவது போல் நினைத்துக் கொண்டு கதறி அழுது கொண்டு உன் குரலைக் கேட்டேன் அப்பொழுது உணர்ந்தேன் நீ இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது என்று♥
 
உன்னோடு பேச முடியாத போது தான்
உன் மீது உள்ள அன்பு இன்னும் அதிகரிக்கிறது

தொலைதூர காதலின் வலி
நேசிக்கும் ஒருவரை
நினைத்த நேரம்
பார்க்க முடியாமல்
பேச முடியாமல் போவது தான்

அப்படியாக நாட்கள் ஓட ஆரம்பித்தது மூன்று வருடங்கள் கழித்து தங்கையின் திருமணத்திற்காக இந்தியாவுக்கு வந்தாய் ஆனால் என்னால் உன்னை ஒரு மாதமாகியும் பார்க்க முடியவில்லை பிறகு உன்னை பார்க்க நேர்ந்தது அதுவும் ஒரு அண்ணனுடைய இறப்பில் தான் உன்னை பார்த்த அந்த நொடியில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் வயிற்றுக்குள் ஓடுவது போல் ஒரு இனம் புரியாத சந்தோஷமும் அழுகையும் கலந்து இருந்தது அன்று இரவு சிறிது நேரம் கிடைத்தது உன்னிடம் பேசுவதற்கு ஒரு மணி நேரம் ஆகியும் இரண்டு பேரும் மௌனமாகவே இருந்தது தொலைபேசியில் மணி கணக்கில் பேசிய நமக்கு நேரில் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை உன் பார்வை மட்டுமே போதுமாக இருந்தது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே தான் இருந்தோம் இப்படியாக அன்று இரவு 3 வருடங்களில் காத்திருந்ததற்கு கிடைத்த பரிசு நீ கொடுத்த முத்தம் அதன் அதன் நினைவை சுமந்து கொண்டு மீண்டும் ஒரு நான்கு வருடங்கள் உன் நினைவில் வாழ்ந்து கொண்டிருந்தேன்

 
அணைத்துக்கொண்டு அருகில் இருப்பதும் தான்

நினைத்துக் கொண்டு தொலைவில் இருப்பதும் காதல் தான்

 
உன்னை அதிகமாக தெரிந்தவள் நான்தான் என்று தலைகனத்தோடு இருந்தேன் அதை சோதிக்கும் அளவிற்கு ஒருத்தி வந்தாள் அது உன்னிடம் கூறினால் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாய்  அதையும் தாங்கிக்கொண்டு பல நாள் உன் நினைவுகளோடு எப்படி இருந்தாலும் என் மச்சான் எனக்கு மட்டும்தான் என்ற என்ன மட்டுமே எனக்கு இருந்தது.
 
நீ என்னை காதலித்தாயோ என்னை வெறுத்தாயோ என் மீது இருக்கும் காதல் உனக்கு குறைந்ததோ எனக்கு தெரியவில்லை  நீ கடிதம் கொடுத்த போது உன் மீது வந்த காதல் இன்றளவும் ஒரே மாதிரி தான் இருக்கு எப்பவும் மாறாது என்னைக்கும் மாறாது
என் மீது உள்ள உன் காதல் குறைந்ததோ இல்லை அதை பகிர்ந்தாயோ எனக்கு தெரியவில்லை ஆனால் உண்மையில் காதல் முதல் கடிதம் நீ கொடுத்த நாளிலிருந்து இப்ப வரைக்கும் ஒரே மாதிரி தான் இருக்கு நீ என் மீது வைத்த காதல் குறையவில்லை என்று எப்பொழுது கண்டேன் தெரியுமா எத்தனை  பேர் என்னை கல்யாணம் பண்ண வேண்டாம் என்று சொல்லியும் நீ ஒரு முடிவோடு என்னை கல்யாணம் செய்ய முடிவெடுத்த அதுல தான் புரிஞ்சுகிட்டேன் உன்னோட காதல…….💘
சேரவும் முடியாது
பிரியவும் முடியாது
ஆனால் ஒன்றாகவே பயணிப்பது
தண்டவாளங்கள் மட்டுமல்ல
காதலும் தான்
நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் 2014 என்னை காண நான் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு  எனக்கு பிடித்தமான பெண்ணையும் ஸ்டெதஸ்கோப்பியும் வாங்கி கொண்டு  வந்தீங்க. இந்த முறை நீ வருவது நம் கல்யாணத்தை பற்றி பேசுவதற்காக எவ்வளவு போராட்டங்கள் பிறகு எப்படியோ வீட்டில் சம்மதத்தை வாங்கிக்கொண்டு கல்யாண தேதியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தோம்…….
 
2015 💛💙💜
 
 
13 வருட காதல் பயணம் வாழ்க்கை பயணமாக மாறியது 26/01/2015
நம் காதலுக்கு அர்த்தமாக இரண்டு ஆண் பிள்ளைகள். வாழ்கை பயணத்தொடு காதல் பயணித்து 25 வருடங்கள்♥♥♥உன் மீதான என் காதல் வார்த்தையில் சொல்வதை விட வாழ்ந்து காட்டுவதே
 சிறப்பு💝💝💝💝
நிழல் போன்ற வாழ்வில்
நிஜமாய் வந்தவன்♥
வாழ்க்கைக்கு
அர்த்தம் தந்தவன்♥
அன்பென்ற வார்த்தைக்கு
இலக்கணமானவன்♥
செல்லமாய் கொஞ்சுபவன்♥
தவறுகளை கண்டிப்பவன்♥
உறவாய் வந்து உயிராகி
எனக்காய் வாழ்பவன்♥
நினைவுகள் பல சுமக்கும் இதயம் கனவுகள் பல காணும் மனது நீங்காமல் அலைமோதும் நினைவு உயிர் பிரிந்தாலும் பிரியாது உன் மீது நான் கொண்ட காதல்👪💑💗
 


 
 
 
 
 
 
 
 
 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்