இமை 31
எழில் பணி புரியும் பள்ளிக்கு புது தலைமை ஆசிரியர் வந்திருப்பதாக பியூன் வந்து கூறவும் எழில், அவரை பார்க்க செல்ல, அங்கு இருக்கையில் அமர்ந்திருந்த சுமித்ராவை பார்த்ததுமே இவர் விஜய்யின் அன்னை என்று கண்டு கொண்ட எழில், அவரை சிநேகமாக பார்த்து புன்னகை செய்ய இதழ் பிரிக்கும் நொடியில்
சுமித்ரா உள்ளே வந்த எழில் முகத்தை ஆராய்ச்சியாக பார்த்தவர் ஒரு நொடி திகைத்து மறு நொடி இயல்பாக அதை கண்டு கொண்ட எழில், அவருக்கு தன்னை அடையாளம் தெரியவில்லை என்பதை உணர்ந்து, தன் உணர்வுகளை மறைத்து கொண்டு,
“குட்மார்னிங் மேடம்..” என்று அவருக்கு வாழ்த்தி கூறியவள், “நான் எழில் மதி தன்னை அறிமுகம் செய்ய, பதிலுக்கு தானும் வாழ்த்திய சுமித்ரா, “ஓ நீங்க தான் எழில் டீச்சரா?.. ஸ்டூடண்ட்ஸ்க்கு ரொம்ப பிடிச்ச டீச்சர் போல.., என்று சுமிதரா சிறு புன்னகையுடன் பாராட்டாக சொல்ல,
“பதிலுக்கு தானும் புன்னகை செய்த எழில், “சாரி மேடம் நான் ஒன் வீக் லீவ் போட்டிருந்தேன்.. இன்னிக்கு தான் வந்திருக்கேன் அதான் உங்களை உடனே வந்து பார்க்க முடியல ..” என்று எழில் தான் வராததற்கு மன்னிப்பு கேட்க
“பிராப்பராக சொல்லி தானே லீவ் எடுத்திருக்கிங்க சோ நோ பிராப்ளம்..” என்ற சுமிதரா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், “இந்த ஸ்கூல்ல உங்களுக்கு வேறு எதாவது அன்கம்ஃபர்ட்பிளா ஃபீல் ஆச்சிதுன்னா நீங்க என்கிட்ட சொல்லலாம்.. வேறு எதாவது குறை இருந்தாலும் சொல்லலாம்..”
“நான் இங்க இருக்கிற எல்லா டீச்சர்ஸ், வேற ஸ்டாஃப்ஸ் கிட்டேயும் கேட்டுட்டேன்.. அவங்க குறைகள் தேவைகள் எல்லாம் சொல்லிட்டாங்க.. சோ உங்களுக்கு இந்த ஸ்கூல்ல சரி செய்ய வேண்டியது இருந்தால் எழுதி கொடுங்க..” என்று கேட்ட சுமித்ராவை வியப்பாக பார்த்தாள் எழில்,
“இங்க வொர்க்கிங் டைம்ல விசிட்டர்ஸ் வர்றதை அலோவ் செய்றதை தடுக்கணும். அப்படி இல்லைன்னா அந்த விசிட்டரஸ் யாரை பார்க்க வர்றாங்களோ, அவங்கிட்ட இன்ஃபார்மாவது செஞ்சு, அவங்க பெர்மிஷன் கேட்ட பிறகு அனுப்பலாம்..” என்று சொல்ல, சுமிதரா திடுக்கிட்டு திகைத்துப் பார்த்தார்.. தன் மகன் கூறிய அதே வார்த்தை.. சிறிது மாற்றி எழிலும் கூற அவளை ஆராய்ந்து பார்த்தார்..
அப்பறம் ஸ்டூடண்ட்ஸ் ரெஸ்ட் ரூம் நீட்டாக இல்லை அதை சரி செய்யணும்..”என்று சொல்ல,
“இதை யாரும் என்கிட்ட சொல்லலையே.. ஸ்டாப்ஸ் அவங்களோட தேவைகளை சொன்னாங்க.. ஸ்டூடண்ட்ஸோட தேவைகளை யாரும் சொல்லவே இல்லை பரவாயில்லை நீங்களாவது இப்போ சொன்னீங்களே.. நான் பார்த்து சரிசெய்ய சொல்றேன்..”
“சரி நீங்க போங்க கிளாஸ்க்கு டைம் ஆச்சுல்ல..” சுமித்ரா எழிலை அனுப்ப, எழிலும் விடைபெற்று சென்றாள்.. வாசல் வரை சென்ற எழிலை, ஒரு நிமிஷம் எழில்..!!” என்று நிறுத்த,
“எஸ் மேடம்..” அவள் நின்று திரும்பி பார்க்க, “எனக்கு உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி ஒரு பீல்.. நம்ம இதுக்கு முன்னாடி எங்கேயாவது பார்த்திருக்கோமா?.” என்று சந்தேகமாக கேட்க, அது எப்படி அம்மாவும் பையனும் ஒரே மாதிரி கேட்கிறாங்க என தனக்குள் வியந்த எழில்,
“இருக்கலாம் மேடம் எனக்கும் அந்த ஃபீல் வருது..” என்று ஆம் என்று உண்மையை சொல்லாமல், இல்லை என்று பொய்யும் சொல்லாம் பொதுவாக ஒரு பதிலை கூற, “சரிமா நீங்க போய் கிளாஸ் கவனிங்க..” என்று அனுப்பி வைத்தார்.. வெளியே வந்த எழிலிற்கு ஒரே குழப்பமாக இருந்தது.. இந்த ஸ்கூல்ல ஹெச் எம் இல்லை என்று அந்த ஹோட்டல்கார் அவருக்கு எப்படி தெரியும்?..
“அந்த ஹோட்டல்கார் அவங்க அம்மாவை வேலைக்கு அனுப்பி இருக்காங்க!!.. அதுவும் நான் வேலை செய்ற ஸ்கூலுக்கு.. ஒரு வேளை என் மனசை மாத்தறதுக்காக இங்க அனுப்பி இருப்பாரோ என ஒரு நொடி சிந்தித்தவள், சே சே இருக்காது அப்படி இருந்திருந்தால் இவங்களுக்கு என்னைய அடையாளம் தெரிந்து இருக்குமே..”
“அந்த ஹோட்டல்கார் என்னை பத்தி சொல்லித்தானே அனுப்பி இருப்பாங்க.. ஆனால் இவங்களுக்கு என்னை அடையாளம் தெரியலையே.. சோ ஹோட்டல்கார் என்னை பத்தி எதுவும் சொல்லல இது வேற எதுவோ இருக்கும்.. ஆனாலும் ஸ்டாஃப்ஸ் மேல அக்கறையாக தான் இருக்காங்க.. அப்படியே அவங்க பையன் மாதிரி..” என்று அவள் அறியாமல் விஜய்யை பற்றி சிந்தித்தபடி நடந்து வந்து கொண்டிருந்தவளின் எதிரே ஒரு மாணவியுடன் பேசியபடி சங்கவி வருவதை பார்த்து அவள் அருகில் வந்து பேச, சங்கவி எழிலை கண்டு கொள்ளாமல் செல்ல எழில் முகம் வாடி நின்றாள்..
அவ கோபத்தில் இருக்கா.. இப்போ அவசரமாக பேச நேரம் இல்லை ஈவ்னிங் கண்டிப்பாக பேசணும் என்று தனக்குள் சொல்லிக்கொண்டே வகுப்பை கவனிக்க சென்றாள்..
இங்கு அறையில் அமர்ந்திருந்த சுமித்ராவின் அலைபேசி சத்தம் கொடுக்க எடுத்து பார்த்தாள்.. விஜய் தான் அழைத்திருந்தான்.. அலைபேசியை உயிர்ப்பித்து காதில் வைத்த சுமித்ரா “நான் வேலையில் இருக்கேன் யாராக இருந்தாலும் ஒரு மணிநேரம் கழித்து கூப்பிடவும்..” என்றபடி அழைப்பை துண்டிக்க,
மறுமுனையில் இருந்த விஜய் தன் அலைபேசியை எடுத்து ஒரு முறை சரி பார்த்துவிட்டு நான் அம்மாவுக்கு தானே கூப்பிட்டேன்.. வேறு யாராவது பேசினார்களோ?..’ என சிந்தித்தபடி மீண்டும் சுமித்ராவிற்கு அழைக்க “நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்சமயம் வேலையில் இருப்பதால் உணவு வேளையில் அவரை அழைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்..” என்று சுமித்ரா விஜய்யிடம் பேசிவிட்டு மீண்டும் இணைப்பை துண்டிக்க,
அன்னையின் விளையாட்டை புரிந்து கொண்ட விஜய், “சுமி..!!” என்கிட்டயே விளையாட்றிங்களா?.. உதட்டில் உறைந்த புன்னகையுடன் இதோ வர்றேன் அங்க..” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டே தன் அலுவலக அறையை விட்டு வெளியே வந்த விஜய், சில தினங்களுக்கு முன் தன் அன்னையை எழில் வேலை செய்யும் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக போகும்படி கூறிய தினம் நினைவிற்கு வந்தது.. “
“வயசான காலத்துல பெத்தவங்களை உட்கார வைத்து சோறு போடுற பிள்ளைகளைத்தான் நான் பார்த்து இருக்கேன்.. நீ என்னடான்னா வயசான என்னை வேலைக்கு சொல்றியே.. இது நியாயமாடா கண்ணா?.! என சுமித்ரா போலியாக அலுத்து கொள்ள..
“வீட்ல இருந்து டி வி சீரியல் பார்க்கிறதுல இருந்த உங்களுக்கு விடுதலை தர்றேன்.. அதை நினைச்சு சந்தோஷ படாமல் உங்க அன்பான மகனை திட்றிங்களே..” பதிலுக்கு விஜய்யும் பேச, “சரி திடீர்னு ஸ்கூலுக்கு ஹெச் எம் ஆக போக சொல்றியே ஏதோ இடிக்குதே.. அப்படி என்னடா அங்க இருக்கு?..” ஏன சந்தேகமாக சுமித்ரா கேட்க “நீங்கதான சொன்னீங்க மருமகள கண்ணுல காட்டு. கண்ணுல காட்டுன்னு.. அவங்க அதாவது உங்கள் வருங்கால மருமக அங்க தான் இருக்கா..” என சொல்ல
அதுவரை சாதாரணமாக கேட்டு கொண்டு இருந்த சுமித்ரா, “அடே நிஜமாக தான் சொல்றியாடா.. அங்க தான் எங்க மருமகள் இருக்காளா?..”என்று ஆர்வமாக கேட்டுவிட்டு, “அப்போ நான் நாளைக்கே போறேன்..” என்று வேகமாக கூற, பக்கத்தில் இருந்து இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு இருந்த மணிகண்டன் “ஆமா அம்மா எதுக்குடா அங்க ஹெச் எம் ஆக போகணும்?..” என்று மணிகண்டன் சந்தேகமாக கேட்க,
“அங்க அவளுக்கு பாதுகாப்பாக இருக்க தான்..” என்று விஜய் புதிர் போட, “நீ சொல்ற எதுவும் புரியலை புரியற மாதிரி சொல்லுடா என மணிகண்டன் அதட்ட அது இதுக்கு முன்ன இருந்த ஹச் எம் நிர்வாகம் சரியில்லை.. கண்டவங்களை எல்லாம் நேரம் காலம் இல்லாமல், அங்க இருக்கிற ஸ்டாஃபை பார்க்க அனுமதி தந்தாங்களாம்..
அதான் அந்த ஹெச் எம் மை வேலையை விட்டு தூக்க சொன்னேன்.. அதோடு அவங்க நான் இருக்கும் போதே என் முன்னாடியே ராங்கிக்கு மாப்பிள்ளை கூட்டிட்டு வராங்க.. எவ்வளவு தைரியம் இருக்கணும்.. அதுவும் ஒரு காரணம்..” என்று குரலில் தீவிரமாக கூறி கொண்டு இருந்த விஜய்யின் குரலில் அவனை பெற்றவர்கள் திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..
“தம்பி விஜய் பொண்ணுன்னு இருந்தால் நாலுபேர் வந்து பார்க்க தான் செய்வாங்க அதுக்காக இப்படியா அவங்களை வேலையை விட்டு தூக்குவ..?! என்று நம்ப முடியாமல் அதிர்ந்து கேட்க, “மை டியர் சுமி.. என் பாதையில் யாரும் குறுக்கே வராத வரை நான் ரொம்ப நல்லவன் மம்மி..
“அவங்க என் பாதையில் குறுக்க வந்தது மட்டும் இல்லாமல் அந்த பாதையவே மறைக்க பார்த்தாங்க.. அதான் வேலை விட்டு தூக்கியாச்சு.. இதே ஒரு ஆணாக இருந்திருந்தால் அவன் நிலமை வேற.. இவங்க பொண்ணா பிறந்திட்டாங்க.. சோ வேலையை மட்டும் தான் பறிக்க வச்சேன்..’ என்று அலட்சியமாக கூறிய விஜய்,
“சரி சரி நீ ஒரு வில்லன் என்று நாங்க ஒத்துக்கிறோம்.. நான் நாளைக்கு எங்கேடா போகணும்?.. யாரை பார்க்கணும்?.. நான் எப்படி நேரா அந்த ஸ்கூல் பிரின்சிபால் ரூம்ல போய் உட்காய்ந்துக்கவா..? என்று கேலியாக கேட்க,
நீங்க நாளைக்கு போங்க அங்க எல்லாம் தானாக நடக்கும்..” என்ற விஜய்யிடம், “சரிடா மருமக பேர் என்னடா?.. அங்க டீச்சரா இருக்காளா?.” சுமித்ரா ஆர்வமாக கேட்க, “ஹ.ஹ.. அதான் சஸ்பென்ஸ்.. முடிஞ்சா உங்க மருமக யார் என்று நீங்களே கண்டுபிடிங்க..” என்று சவால் விட,
“ஓ எனக்கே சவாலா?! நான் உன் அம்மா டா..!! உன் மனசு எனக்கு தெரியும் கண்டிப்பாக நான் கண்டுபிடிக்கிறேன்..” என்று பதிலுக்கு சவால் விட்ட சுமித்ரா நான் நாளைக்கே ஸ்கூலுக்கு போறேன்..” என்று ஒத்துக்கொள்ள.. மணிகண்டன் தானும் இதில் பங்கு கொள்ள வேண்டும் என்று சிறு பிள்ளையாக கேட்க, விஜய் அவரை சமாதானம் செய்தான்..
அப்பப்பா இவங்களை ஸ்கூலுக்கு அனுப்ப ரெண்டு பேரும் எத்தனை கேள்வி..!! எவ்வளவு சந்தேகம்..” என்று பெருமூச்சுடன் நினைத்தவாறே காரை பள்ளி நோக்கி செலுத்தினான்..
எழிலை பார்க்க ஆர்வம் கொண்டு பள்ளிக்குள் நுழைய, அங்கிருந்த காவலாளியால் தடுத்து நிறுத்த பட்டான்.. வேலை நேரத்தில் வெளியாட்களை விட கூடாது என்று மேடம் உத்தரவு சார்.. நீங்க ஸ்கூல் முடிஞ்சு ஈவ்னிங் பாருங்க என்று அவனை தடுக்க, விஜய் அந்த காவலாளியை முறைத்து பார்த்தவன், நான் யார் என்று உனக்கு தெரியுமா?..” என்று கோபமாக கேட்க
“சாரி சார் யாராக இருந்தாலும் ஸ்கூல் டைம் முடிந்த பிறகு தான் நீங்க யாரையும் பார்க்க முடியும்.. இது புது ஹெச் எம் உத்தரவு..” என்று பணிவாக சொல்ல, “மம்மீ..!! வரம் கொடுத்த சாமி தலையில் கை வச்ச மாதிரி, நான் சொன்ன ரூல்ஸ் எனக்கே திரும்ப சொல்றிஙாகளா!..” என்று நினைத்தவன்,
காவலாளியிடம் திரும்பி, “நான் டி இ ஓ (District Education Officer) இது என் ஐடி கார்டு..” என்று தன் விசிட்டிங் கார்டை எடுத்து நொடிக்கும் குறைவான நேரத்தில் காண்பித்து மீண்டும் உள்ளே வைத்துவிட்டு “இங்க ஸ்கூல் நிர்வாகம் சரியில்லை என்று கம்ளெய்டண்ட் வந்திருக்கு.. நான் செக் செய்ய தான் வந்திருக்கேன்.. உங்க ஹெச் எம் கிட்ட கூட இன்ஃபார்ம் செய்யாமல் தான் வந்திருக்கேன்.. ஓபன் த கேட் மேன்..!!” என்று அதட்டலாக சொல்லி ஆணையிட,
“சார் அது வந்து.. ஹெச் எம் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி பர்மிசன் கேட்டு வரவா?.” என காவலாளி தயங்க “ஓ நான் இவ்வளவு சொல்லியும் நீ கதவை திறக்க மாட்டேங்கிறாயா? அப்ப சரி என்னோட கடமையை செய்ய விட மாட்டேங்குற என்று உன் மேல் நான் கம்ப்ளைன்ட் கொடுப்பேன்.. அதோட இந்த ஸ்கூலையும் நிர்வாகம் சரியில்லை என்று ரிப்போர்ட் எழுதி ஸ்கூல்லையே மூட வச்சிருவேன்.. இப்ப நீ என்ன உள்ள விட போறியா?.. இல்ல அப்படியே நீ கிளம்பவா.?” என விஜய் அழுத்தமாக கேட்க
விஜய் பேசிய தோரணையில், “இல்லை சார் நான் இதோ இதோ நான் ஓபன் செய்றேன்.. கதவைத் திறந்து விட, தன் புன்னகையை உதட்டுக்கள் மறைத்தபடி, பேண்ட் பாக்கெட்டில் இரு கரங்களையும் நுழைத்தபடி உள்ளே சென்றான்..
எழிலை பார்க்க ஆர்வம் இருந்தாலும், இப்போ வேணாம் ராங்கியை ஸ்கூல் முடிஞ்ச பிறகே பார்ப்போம்..” என்று தன்னை கட்டுப்படுத்தி கொண்டு அன்னையை தேடி சென்றான்..
எழில் வெளியே சென்றதும் சுமித்ரா ஏதோ சிந்தித்தபடி அமர்ந்திருந்தார்.. எங்க வருங்கால மருமகள் இங்க தான் வேலை பார்க்கிறா என்று விஜி சொன்னானே.. ஆனால் நான் பார்த்த வரைக்கும் அவனுக்கு பொருத்தமாக இங்க யாரும் இல்லையே.. கொஞ்ச நேரம் முன்னாடி வந்த எழில் பொருத்தம் இருக்கு ஆனால் அந்த பொண்ணு முகம்..” என்று யோசித்தபடி இருக்க
அவர் எதிரே அமைதியாக வந்து அமர்ந்த விஜய், “ஹலோ மேடம் இப்படி பட்ட பகல்ல வேலை நேரத்தில் தூங்கிறதுக்கா உங்கள இங்க அனுப்பி வெச்சேன்?..” என்று புருவம் உயர்த்தி கேட்டு அவர் சிந்தனையை கலைக்க, பட்டென்று கண் திறந்த சுமித்ராவை பார்த்து குறும்பாக கண் சிமிட்டி சிரித்த விஜய்,
“என்ன சுமி உன் மருமக யார் என்று கண்டுபிடிச்சிட்டியா?..” என கேலியாக கேட்க “ஓரளவுக்கு கெஸ் செஞ்சிருக்கேன்.. அதை இன்னும் கன்ஃபார்ம் செஞ்ச பிறகு நான் சொல்றேன்டா அருமை மகனே..!!” என்று சுமித்ராவும் பதில் சொல்ல..
“டன்..!! டன்..!!” என்று ஒத்துக் கொண்ட விஜயிடம், “நீ எப்படி டா உள்ள வந்த?.. வொர்க்கிங் ஹவர்ஸ்ல விசிட்டரஸ்க்கு அனுமதி இல்லை சொன்னேன்.. வாட்ச்மென் எப்படி உள்ள விட்டாங்க..” என்று கேட்க
“ஹ..ஹ எனக்கு தேவை என்றால் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று உங்களுக்கு தெரியாதா?.. வாட்ச்மென் கிட்ட என்ன சொன்னால் கதவை திறப்பானோ அதை சொன்னேன்..” என்று தன் பெருமையை பறைசாற்றி கொண்டு இருக்க
“ஒ.. நீ ..” என்று சுமித்ரா எதுவோ கூற வர வெளியே ஒரே சத்தமாக கேட்டது இருவரும் என்னவென்று எட்டிப் பார்க்க அங்கே ஒரே கூட்டமாக இருக்க, என்ன கூட்டம் அங்க என கேட்டபடி இருவர் அந்த கூட்டத்தை நோக்கி சென்றனர்.. விஜய் கூட்டத்தை விலக்கி என்ன என்று பார்த்தவன் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.. ஏனெனில் “எழில் தலையில் அடிபட்டு மயங்கி கீழே விழுந்து இருந்தாள்.. மை லிட்டில் கேர்ள்..” என்று உயி
ர் துடிக்க அழைத்தபடி அவளை கையில் ஏந்தி கொண்டான்..
இமை சிமிட்டும்