
மது அந்த கோப்பினையே கோபப்பார்வை பார்த்துக் கொண்டிருக்க, வினு கண்ணில் நீர் வரும் அளவிற்கு சிரித்துக் கொண்டிருந்தாள்.
அந்தக் கோப்பினுள் வாய்ப்பாடு (tables) ஒன்றில் இருந்து இருபது வரை எழுதிப் பார்க்குமாறு போட்டிருந்தது.
அதனைக் கண்டுதான் மது கோபத்துடனும், வினு சிரிப்புடனும் அமர்ந்திருந்தார்கள்.
மது அதே பார்வையை வினுவின் புறம் திருப்பி,
“பார்த்து பார்த்து ரொம்ப சிரிக்காத எருமை, பல்லு சுளுக்கிக்க போகுது. “
“சுளுக்கிக்கிட்ட நான் டூத் பேஸ்டால நீவி, சுளுக்கு எடுத்துக்கிறேன்.”
என்று கூறி மதுவின் தோள்களைப் பிடித்து, முன்னும் பின்னும் ஆட்டி எதையோ தேட,
“ப்ச்சு என்னடி பண்ற?”
“அது… மது மதுன்னு ஒரு மானஸ்தி இருந்தா அவளை எங்கயாச்சும் பாத்தியா? வரும்போது என்னா பேச்சு பேசினா, ஓனருக்கு அவ பிபியை ஏத்த போறாளாம்? இப்ப அவளோட பிபியை செக் பண்ணா, அந்த மிஷினே வெடிச்சிடும் போல ஹா ஹா ஹா.”
“இருக்கு டி அவனுக்கு இருக்கு. எனக்கு இருக்க கோபத்துக்கு அவன் மட்டும் என் கையில சிக்கட்டும், அப்பறம் இருக்கு.”
சரியாக அந்த நேரத்தில் தான், வேந்தன் மதுவின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்தான்.
“ஹலோ யாருங்க?”
“நான்… நான் மது பேசறேன்”
“மது???”
“உங்க அர்ஜென்ட் பிஏவா ஜாயின் பண்ணி இருக்க, அதே மது தான்.”
“ஓ மிஸ் மதுரம் நீங்க கரெக்டான நேரத்தில் தான் கூப்பிட்டு இருக்கீங்க. உங்களால எனக்கொரு ஹெல்ப் பண்ண முடியுமா?”
அவன் குரலில் ஒரு வித பதட்டத்தை உணர்ந்த மது,
“சொல்லுங்க என்னால முடிஞ்சா, கண்டிப்பா உதவி செய்யறேன்.”
“நான் இன்னும் ஒரு ஒன் ஹவர்ல ஆபீஸ்க்கு வரேன். நீங்க கொஞ்சம் தயாரா இருக்க முடியுமா? என் கூட ஒரு இடத்துக்கு வர வேண்டி இருக்கும். என் பிரண்டோட லவ்வருக்கு ஒரு பிராப்ளம், நான் மட்டும் தனியா போய் பேச முடியாது அந்தப் பொண்ணு கிட்ட, அதனாலதான் உங்கள கூப்பிடறேன்.”
“ஓகே சார் நான் ரெடியா இருக்கேன்.”
“தேங்க்யூ மிஸ் மதுரம் நேர்ல பார்க்கலாம் பை.”
அவள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த வினு,
“இதுதான் உங்க ஊர்ல கோபமா பேசறதா?”
“அது…அது…அவர் ஏதோ பிரச்சனைன்னு சொன்னாரு, அதோட அவர் ஏதோ பதட்டத்தில பேசற மாதிரி இருந்தது. இப்ப நேர்ல வரத்தானே போறார் அப்புறம் பேசிக்கறேன்.”
“ஓஓஓஓஓ கோபத்துல அவனா இருந்தவர், இப்போ அவரா மாறியாச்சு? நீ உங்க அவர் மேல காட்ட போற கோபத்தை, நானும் பார்க்கத்தானே போறேன்.
சரி சரி…இந்தாம்மா குழந்தை புள்ள, போய் வாய்ப்பாடு எழுது போ, டீச்சர் வந்தரப் போறாங்க. அப்புறம் இங்க பென்ச் கூட இல்ல, சேர் மேல ஏறி நிக்க வச்சுற போறாரு.”
வினு கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு இதனைக் கூற, அதற்கு பரிசாக மதுவின் கைகளால் மீண்டும் பல அடிகளை பரிசாக பெற்றுக் கொண்டாள்.
இங்கு வேந்தனோ வரவேற்பறை சுவற்றில் மாட்டியிருந்த மதுவின் புகைப்படத்தை, தன் அலைபேசியில் யாருக்கும் தெரியாமல் பதிவு செய்து கொண்டு, குடும்பத்தாரிடம் சென்றான்.
வேந்தன் வந்து பார்க்கும் போது, சிவராமன் தனது தாயின் மடியில் தலை வைத்து, அவரின் கால் அடியில் அமர்ந்திருந்தார். அங்கு ஒரு பாசப் போராட்டம் நடந்ததை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
அந்தக் காலத்திலேயே தனது தாயின் வாக்குறுதிக்காக, தன் தந்தையை எதிர்த்து நின்ற இவரை, வேந்தனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
வேந்தனை வடிவுப்பாட்டி அங்குள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க, அமுதனுடன் சிறிது நேரத்திலேயே சரளமாக பேச ஆரம்பித்து விட்டான்.
“அம்மா நான் மதுவுக்கு போன் பண்ணி வரச் சொல்லவா? அவ மட்டும் வீட்ல இல்லாதது ஒரு மாதிரி இருக்கு. பாட்டிங்களும் அவளை பார்த்த மாதிரி இருக்குமே.”
அச்சச்சோ நான் இங்க இருக்கிறதை உன் தங்கச்சி பார்த்தா, என் பிளான் எல்லாம் என்ன ஆகிறது என்று எண்ணிய வேந்தன்,
“ஒன்னும் அவசரம் இல்ல. பாட்டிங்க இரண்டு பேரும் இரண்டு நாளைக்கு இங்கதான் தங்க போறாங்க. உங்க தங்கச்சி பொறுமையா வந்தால் போதும்.”
“என்ன ராசா நீங்க வாங்கன்னுட்டு, உனக்கு அமுதேன் மச்சான் முறை தானே, அவனை மச்சான்னே கூப்பிடு. நீ மாப்பிள்ளைன்னு கூப்பிடனும் அமுதா. உறவுமுறை சொல்லிக் கூப்பிட்டால் தானே நல்லா இருக்கும். “
இருவரும் சிரித்துக் கொண்டே தலையாட்டி கொண்டனர்.
ஒரு கோர ராட்சச அரக்க சிலையின் முன், படுக்க வைக்கப்பட்டிருந்தால் நிரஞ்சனா.
அவளைச் சுற்றி ரத்தத்தால் மந்திர கோடுகள் வரையப்பட்டிருந்தது.
எப்போதுமே வெள்ளை உடை அணிந்து கொண்டிருக்கும் குருஜி, சிவப்பு வண்ண ஆடை அணிந்து, கருப்பு மையை அங்கங்களில் எல்லாம் பூசி, மண்டை ஓடுகளால் ஆன மாலை அணிந்து, வேள்வி தீயினை வளர்த்துக் கொண்டிருந்தான்.
அவனைச் சுற்றி அவனைப் போலவே உடைய அணிந்த, மை பூசிய மனிதர்கள் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தனர்.
காற்றில் எங்குமே ரத்த வாசம் பரவி துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது.
ரஞ்சிக்கு தன்னைச் சுற்றி ஏதோ நடக்கின்றது என்று உணர முடிந்தது. ஆனால் என்ன முயன்றும் அவளால் கண்களை திறக்க முடியவில்லை.
ஏதோ ஒரு பாரம் தன் உடம்பை போட்டு அழுத்துவது போல உணர்ந்தாள், அவளால் தனது கை கால்களை எவ்வளவு முயன்றும் அசைக்க முடியவில்லை. காதுகளில் ஒலிக்கும் மந்திரங்கள், செவி நரம்புகளை வெடிக்கச் செய்வது போல் இருந்தது.
அவ்வப்போது அவள் மீது தெளிக்கப்பட்ட ரத்த துளிகளால், அவளின் உடல் அதிர்ந்து கொண்டேயிருந்தது.
ஒரு அலங்கரிக்கப்பட்ட மரப்பாச்சி பொம்மையானது ரத்தத்தில் தோய்த்து எடுத்து, வேள்விக்கு அருகே பூஜையில் வைக்கப்பட்டிருந்தது.
குருஜி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவன் மந்திரங்களை விடாமல் முழங்கிக் கொண்டிருக்க, ஒருவன் அந்த பொம்மையை எடுத்து ரஞ்சியின் மணிக்கட்டில் வைத்து அழுத்தினான்.
அவளின் உடல் ஒரு அடிக்கு மேலே காற்றில் மிதந்தது. அவளது கண்கள் திறந்து, பார்வையானது மேலே நிலைக்குத்தி நின்றிருந்தது.
வேந்தன் மதுவுடன் பி.ஆர் ஹாஸ்பிடலின் முன்பு, காரில் சென்று இறங்கினான்.
அங்குள்ள ரிசப்ஷனில் தங்கள் பெயரை பதிந்து விட்டு, தங்கள் டோக்கன் நம்பர் வரும்வரை அங்கேயே காத்திருந்தனர்.
அவன் காரில் வரும்போதே மதுவிடம் சந்துரு மற்றும் லாவண்யாவின் காதல் கதையை பற்றி கூறிவிட்டான்.
அவர்களின் திருமண விசயமாக தான், இவளிடம் உதவி கேட்டதாக கூறியிருந்தான்.
“இங்க தான் லாவண்யா ஒர்க் பண்றாங்களா?”
“ஆமா நான் இங்க ஆல்ரெடி அப்பாயிண்ட்மெண்ட் போட்டுட்டேன், டோக்கன் படி நாம உள்ள போற டைமுக்கு தான் கரெக்ட்டா வந்து இருக்கோம்னு நினைக்கிறேன்”
“அவங்களோட சர்டிபிகேட் எல்லாத்தையும் வெளியே வைச்சே வாங்கிக்களாமே, எதுக்காக ஹாஸ்பிடல் வரைக்கும் வந்திருக்கோம். அதுவும் பேஷன்ட்டா போனாதான் அவங்களை பார்க்க முடியுமா?”
“மினிஸ்டர் பொண்ணை அவ்ளோ சீக்கிரம் வெளியே வச்சு பார்க்க முடியாதில்ல.”
“எது மினிஸ்டர் பொண்ணா?”
” மினிஸ்டர் பொண்ணுரங்கத்தோட பொண்ணு தான் லாவண்யா. இது அவங்களோட ஹாஸ்பிடல் தான்.”
“மிஸ்டர் எம்டி சார், நீங்க என்னை கோர்த்து விடனும்ங்கறதுக்காக ஒன்னும் கூட்டிட்டு வரலையே?”
“நோ மிஸ் மதுரம், எந்த ஒரு ஆபத்தாக இருந்தாலும் என்னை மீறி தான் அது உன்னை தொடணும்.”
அவளின் கண்களை பார்த்துக் கொண்டு ஆழ்ந்த குரலில் இவன் கூற, மது அவன் கண்களில் தெரியும் மனதின் ஆழத்தில் தொலைந்து கொண்டிருந்தாள்.
“மிஸ்ஸஸ் மதுரயாழினி யுவேந்திர பாண்டியன். “
என்று நர்ஸ் ஒருவர் சத்தமாக கூற, மது திரும்பி வேந்தனை முறைத்தாள்.
“அது… லாவண்யா ஒரு மகப்பேறு மருத்துவர், அர்ஜென்ட் அப்பாயின்மென்ட் வாங்க, வேற என்ன சொல்றதுன்னு தெரியல அது தான்…சிஸ்டர் இங்க இருக்கோம். “
“சார் நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க, மேடம் நீங்க அந்த ரூமுக்குள்ள போய் வெயிட் அண்ட் பிபி செக் பண்ணிட்டு வந்துடுங்க.”
மது வேந்தனை முறைத்துக் கொண்டே அந்த ரூமுக்குள் சென்று, பிபி மற்றும் வெயிட் பார்த்துவிட்டு வெளியில் வந்து அவன் அருகில் அமர்ந்தாள்.
“என்ன சொல்லி தொலைச்சிருக்கீங்க ஹாஸ்பிட்டல்ல?”
“அது…சும்மா ஜென்ரல் செக்கப் தான்.”
“எந்த ஜென்ரல் செக்கப்க்கு கடைசியா குளிச்ச டேட் கேக்குறாங்க?”
“கடைசியா குளிச்ச டேட்டா? அப்ப நீ தினமும் குளிக்க மாட்டியா?”
ஐயோ முறைக்கிறாளே முறைக்கிறாளே, என்னை இப்படியே எரிச்சு சாம்பலாக்கிடுவா போல இருக்கே. இதுக்கே இப்படின்னா, இனி ரிஜிஸ்டர் ஆபீஸ்ல எப்படி சமாளிக்க போறேனோ.
ஆபத்பாந்தவர் போல நர்ஸ் வந்து இவர்களை அழைக்க, தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவளுக்கு முன் இவன் நர்சை பின் தொடர்ந்தான்.
இருவரையும் டாக்டரின் அறைக்குள் அனுப்பிவிட்டு, நர்ஸ் வெளியே சென்றுவிட, லாவண்யா தான் முதலில் பேச்சை தொடங்கினாள்.
“அண்ணா ரொம்ப தேங்க்ஸ் எங்களுக்காக இவ்வளவு ரிஸ்க் எடுப்பதற்கு. இந்த கவர்ல நீங்க கேட்டா எல்லா டாக்குமெண்ட்ஸும் இருக்கு. கல்யாணத்தப்போ கரெக்டா நான் அந்த டைமுக்கு, ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு எப்படியாவது வந்துடுவேன். “
“தேங்க்ஸ் எல்லாம் எதுக்கும்மா, உன்னோட சிச்சுவேஷன் எனக்கு தெரியும். இதுவே உன் பேரன்ட்ஸ்ட பேசி சம்மதிக்க வைக்க முடிந்திருந்தால், கண்டிப்பா நானே சந்துரு ரிஜிஸ்டர் மேரேஜ்ன்னு சொல்லும்போதே, வேண்டாம்னு சொல்லி இருப்பேன்.
நான் சந்துருகிட்ட சொன்னேன்மா, அவங்க அப்பா கிட்டயாவது இந்த விஷயத்தை சொல்லுன்னு, அவன் தான் கேட்க மாட்டேங்கிறான்.
கல்யாணம்கிறது சாதாரணமா கடந்து போற விஷயம் கிடையாது. இந்த விஷயத்துல ஏதாவது ஒரு குடும்பத்தோட சப்போர்ட் இருந்தால் தானே நல்லா இருக்கும்.”
“அவரை ஏதும் சொல்லாதீங்கனா, நான் தான் வேண்டாம்னு சொன்னேன். உங்களுக்கே தெரியும் எங்க அப்பா அரசியல்வாதி, அவரோட நடவடிக்கை எல்லாம் எப்படி இருக்கும்னு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இது இந்த ஊர் உலகத்துக்கே தெரியும். ஆனா சந்துருவோட அப்பா நேர்மை உண்மைன்னு வாழ்றவர்.
அவர் ஹாஸ்பிடல் நடத்துவதே மத்தவங்களுக்கு உதவி செய்ய தான்.
ஆனா இந்த ஹாஸ்பிடல்ல? இருக்கிற உயிரை எடுக்காம இருந்தா சரி. விட்டால் இறந்து போனவங்ககிட்ட இருக்கிற கிட்னியவே வித்து காசு ஆக்கலாம்னு நினைப்பாங்க.
அவர் இப்படி சேர்க்கிற பாவம் எல்லாம் குடும்பத்தில இருக்கற, எங்க தலை மேலதான் விடியும். இப்படிப்பட்டவரோட பொண்ணை, சந்துருவோட அப்பா அவங்க வீட்டு மருமகளா ஏத்துப்பாறாண்ணா.”
மதுவிற்கு லாவண்யாவை மிகவும் பிடித்து விட்டது. தவறான வழியில் செல்லும் பெற்றவருக்கு பிறந்திருந்தாலும், நெறி தவறி நடப்பதற்கான வாய்ப்பு இருந்தும், நெறி தவறாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இவளை எப்படி பிடிக்காமல் போகும்.
“கையை குடுங்க மேடம், இன்னைல இருந்து நான் உங்க விசிறி ஆயிட்டேன். வாத்தியார் புள்ள மக்குன்னு சொல்லுவாங்க, அதேபோல அரசியல்வாதியோட பொண்ணா இருந்துட்டு, இவ்வளவு நல்லவங்களா இருக்கீங்களே!
ஒருவேளை அவரோட பொண்ணா இருக்கிறதால தான், நீங்க இவ்வளவு நல்லவங்களா இருக்கீங்களோ?
சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க, ஆனாலும் நீங்க அரசியல்வாதியோட பொண்ணுன்னு ரொம்ப நல்லா நிரூபிக்கிறீங்க மேடம். ஆமா பின்ன, மூச்சு விடாமல் இவ்வளவு நீளமா டயலாக் பேசறீங்களே.”
தனது தந்தையால் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த இக்கட்டான நிலையை எண்ணி, வருந்தி கொண்டிருந்த லாவன்யா, மது பேசியதை கேட்டு தன் கவலைகளை மறந்து முகம் மலர்ந்தாள்.
“இவர் இப்போதைக்கு என்னை அறிமுகப்படுத்த போறதில்ல, ஐ அம் மிஸ் மதுரயாழினி. இந்த ஹாஸ்பிடல்ல கால் வைக்கிற வரைக்கும் இவரோட பிஏவா தான் இருந்தேன்.
உங்கள பார்க்கறதுக்காகவே இவரோட ப்ரெக்னன்ட் வைப்பா இங்க உட்கார்ந்து இருக்கேன், அத்தோட உங்களுக்கு சப்ஸ்டிடியூட்டா ரிஜிஸ்டர் ஆபீஸ்ல விண்ணப்பம் கொடுக்கப் போறவளும் நான் தான். “
“ஹாய் மது என்னை நீ லாவண்யான்னே கூப்பிடலாம். ரொம்ப தேங்க்ஸ் நீ எனக்கு செய்யப் போற உதவி ரொம்ப பெருசு.”
“இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா, எவ்வளவு பிரச்சனை வந்தாலும் கண்டிப்பா உங்களோட நல்ல மனசுக்காகவே, இந்த கல்யாணம் நடக்கிறதுக்கு, என்னால முடிஞ்ச எந்த ஹெல்ப் வேணாலும் பண்ணுவேன். இது என்னோட ப்ராமிஸ்.”
மது இப்படி கூறியதும் வேந்தனின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்.
ஆஹா இந்த அறுந்த வாலு அவளாவே கமிட் ஆகிட்டாளே, ரெஜிஸ்டர் ஆபீஸ்ல இவளை எப்படி சமாளிக்க போறமோன்னு ரொம்பவே கவலையா இருந்துச்சு, எப்படியோ அந்த பிராப்ளமும் இப்ப தீர்ந்தது. இவளை இப்படியே கூட்டிட்டு போய் முதல்ல வேலையை முடிக்கிற வழியை பார்க்கணும்.

