Loading

ஒரு வழியாக வாசுவும் சைந்தவியும் திருச்சி வந்து சேர முதலில் அவளை ஹாஸ்பிடல் அழைத்து சென்று அவளுக்கு சிகிச்சை அளித்து அதன் பின்னர் தான் வீட்டிற்கு அழைத்து வந்தான்அவர்கள் வந்ததும் அவர்களை வெளியில் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து அதன் பின் தான் இருவரையும் இளவரசி உள்ளே விட்டார்

ஹாஸ்பிடல் சென்று வந்ததால் சைந்தவியை ஒரு அறைக்கு சென்று குளித்து விட்டு வர கூறி அவளை அனுப்பி வைத்தார்அந்த நேரத்தில் வாசுவும் குளித்து வர இருவரையும் அழைத்து கொண்டு பூஜை அறை சென்று விளக்கு ஏற்ற கூறினார்

முதலில் தயங்கிய சைத்து வசுவின் பார்வையிலும் இளவரசியின் சந்தோச பார்வையிலும் வீட்டில் உள்ளோர் முகத்தில் தெரிந்த ஆசை பார்வையிலும் சாமியை நன்றாக வணங்கி விட்டு விளக்கை ஏற்றினாள்

அவள் வணங்கி விட்டு வந்ததும் இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்து சாப்பிட வைத்தனர்அதன் பின் கொஞ்ச நேரம் இருவரையும் உட்கார வைத்து கொஞ்ச நேரம் பேசி கொண்டு இருந்தவர்கள் சைந்தவியின் முகத்தில் தெரிந்த சோர்வில் அவளை உறங்க கூறினர்

சைந்தவி எங்கு உறங்க வேண்டும் என தெரியாமல் முழித்து கொண்டு நிற்க வாசு அவளை அலேக்காக தூக்கி கொண்டு தன் அறைக்கு சென்று விட்டான்அனைவரும் கண்டும் காணாமல் இருந்து விட்டனர்

ஆனால் சைந்தவிக்கு தான் கூச்சம் பிடிங்கி தின்றதுஅவன் அனைவரின் முன்பும் இப்படி தூக்கி கொண்டு வருவான் என அவள் எதிர்பார்க்கவில்லை…. அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லைஅவனிடம் கேட்கவும் முடியவில்லைஅவன் அறையில் விட்டதும் விட்டால் போதும் என தூங்க சென்றுவிட்டாள்போர்வையால் முழுவதும் போர்த்தி கொண்டு தூங்குவது போல் நடித்தவள் சிறிது நேரத்தில் நன்றாக உறங்கி இருந்தாள்

அவள் நன்றாக உறங்கியதை உறுதி செய்த வாசு அவளுக்கு வாகாக போர்த்தி விட்டு சி ஆன் செய்து விட்டு அவளின் உச்சியில் முத்தமிட்டு விட்டு வெளியில் வந்தவன் முகம் மொத்தமாக மாறி இருந்தது

கோவமாக கீழே சென்றவன்அம்மா அம்மு உள்ள தூங்கிட்டு இருக்காபாத்துக்கோங்கநான் வந்துறேன்…” என்று கூறி வேகமாக காரை எடுத்து கொண்டு சென்று விட்டான்

அவன் கோவமாக போவதை பார்த்த இளவரசிஎன்னங்க வாசு வேற கோவமா போறான் என்ன பண்ண போறான்னு தெரியலஏற்கனவே அந்த ஆசிட் அடிச்சவன் என்ன ஆனான் அப்டினு யாருக்குமே தெரியலஅப்பவும் இதே மாதிரி தான் போனான்இப்பவும் கோவமா போறான்.. அந்த அடியாளுங்க என்ன ஆக போறாங்க தெரியலஅவனுக்கு வேற இப்போ எல்லாம் கோவம் அதிகம் வருது” என்று புலம்பி கொண்டு இருந்தார்

கதம்பரியின் கணவன் கவினோஅம்மா ஏன் கவலை படுறிங்கவாசு எங்க போனாலும் அவனோட நட்பை விட்டுட்டு போவானா அவன் பாத்துப்பான்நானும் அவன் கிட்ட ங்க இருக்காங்கனு கேட்டுட்டு கிளம்புறேன்நீங்க கவலை படாதீங்கமுக்கியமா பாப்பா கிட்ட சொல்லாதீங்கஎன்று கூறி அவனும் திலீப்பிடம் இடத்தை கேட்டு அவனும் வேகமாக காரை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டான்

கவின் அங்கு செல்லும் போதே வாசு அனைவரையும் போட்டு அடி வெளுத்து கொண்டு இருந்தான்கவின் வேகமாக சென்று வாசுவை பிடித்து இழுத்துவாசு கொஞ்சம் அமைதியாகு இவனே எல்லாம் செய்யலனு உனக்கே தெரியும்அது யாருனு தெரிய வேண்டாமா இவனை போட்டு அடிச்சு கொன்னுட்டா அது யாருனு எப்படி தெரியும்என்று கூறி அமைதி படுத்தி அவனை உட்கார வைத்தான்

பின் கவின் அந்த மூவரின் முன்பு நின்றுஉங்களை யாரு அனுப்புனாங்கனு சொல்லிட்டா உங்க உயிராச்சும் மிச்சம் இருக்கும்.. இல்லனா உங்க உயிருக்கு நான் பொறுப்பு இல்லை…” என்று கூறினான்

ஒருவன் பயத்தில் எதோ கூற ஆரம்பிக்க இன்னொருவனின் கண் அசைவில் அமைதியாகிவிட்டான்யாரும் சொல்லாததை பார்த்த கவின்சரி உங்க உசுருக்கு நான் இனிமே பொறுப்பு இல்ல…” என்று கூறி அவன் ஒருவனை அடிக்க ஆரம்பிக்க திலீப் ஒருவனை போட்டு அடிக்க மாட்டான்

பயத்தில் கூற வந்தவனை விட்டு விட்டு மற்ற இருவரையும் அடித்து அரை உயிராக்கினர்அதில் இன்னொருவனுக்கு பயத்திலேயே செத்து விடுவான் போல அந்த அளவிற்கு பயந்து நடுங்கி கொண்டு இருந்தான்இருவரையும் அடித்து நொறுக்கி விட்டு இவனிடம் திரும்ப அவன் பயத்தில் சஹானா அழைத்ததில் இருந்து அனைத்தையும் கூறிவிட்டான்

அதை கேட்டு வாசு மிகவும் கோபமடைந்து விட்டான்அவன் அப்போதே கோவத்தில் கிளம்ப திலீப் கவின் இருவரும் தான் அவனை அமைதியாகி உட்கார வைத்தனர்வாசு இருவரையும் உதறி விட்டு கோவமாக கிளம்பிவிட்டான்திலீப் மூவருக்கும் வைத்தியம் பார்க்க கவின் அவனிடம் இருந்து விடைபெற்று வாசுவை பின் தொடர்ந்து சென்றான்

கவின் நினைத்தது போல் சைந்தவியின் ஊருக்கு தான் சென்று கொண்டு இருந்தான்அவனை விட கோவமாக சென்ற கவின் அவனின் கார் முன்பு சென்று தன் காரை நிறுத்தினான்..

அதில் இன்னும் கோவமடைந்த வாசுஅண்ணா நகருங்ககோவத்துல உங்களை எதோ சொல்லிட போறேன்..” என்று முயன்று நிதானமாக கூறினான்….

வாசு கொஞ்சம் அமைதியா இருஇப்போ நீங்க அங்க போனா நாம சொல்றதை யாரும் அங்க நம்ப மாட்டாங்கஆசிட் அட்டாக்லேயே அந்த பொண்ணு அவங்க அம்மாவை எப்படி நம்ப வெச்சதுனு தெரியும் உனக்குஇப்பவும் எதாவது பண்ணிடும்.. அந்த ஆளுங்களை யாருனே தெரியாதுனு சொல்லிடும்பொறுமை ரொம்ப முக்கியம் வாசு.. இப்போ முன்னாடி மாதிரி இல்ல.. சைந்தவி உன் மனைவி உன் முன் கோவம் அந்த பொண்ணை தான் பாதிக்கும்அதனால உன் கோவத்தை கம்மி பண்ணுஇன்னிக்கு ஒரு நாள் நான் சொல்றதை கேளு சரியா…” என்று கூறி வாசுவை சமாதானம் செய்து வீட்டிற்கு அவனை அழைத்து சென்றான்

அங்கு வசந்தியின் வீட்டில் சஹானா அவளின் அறையில் தானே கத்தி கொண்டு இருந்தாள்.. அங்கு இருக்கும் பொருட்களை எல்லாம் உடைத்துஏய் சைந்தவி நீ மட்டும் என் கைல கிடைச்ச அவளோ தான்நீ எப்படிடி உயிரோட வந்தஉன் ஆயுசு கெட்டி தான்டிஆனா உன்னை நிம்மதியா விட மாட்டேன்டிஉனக்கு எவளோ திமிரு இருந்தா வாசுவை கல்யாணம் பண்ணி இருப்பஅந்த அம்மா என்ன சொன்னது அந்த வீடு ராணியா அவங்களே அந்த வீடு அசிங்கம்னு சொல்லி உன்னை வீட்டை விட்டு அனுப்ப வைக்கலநான் சஹானா இல்லை…” என்று பிதற்றி கொண்டு இருந்தாள்

அவள் கூறியதை ஆரம்பத்தில் இருந்து கேட்ட வசந்தி அப்படியே சுவற்றில் சாய்ந்து நின்ற விட்டார்

வாசு வீட்டிற்கு செல்ல அங்கு சைந்தவி இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்குழந்தை போல் உறங்கி கொண்டு இருக்க அவளை கொஞ்ச நேரம் ரசித்தவன் பின்பு அவனுக்கு கொஞ்ச நேரம் ஓய்வு தேவை பட அந்த அறையிலேயே இருக்கும் இன்னொரு அறையில் சென்று உறங்க சென்றுவிட்டான்….

அவனுக்கு ஆவலுடன் உறங்க தான் ஆசைஆனால் சைந்தவி இன்னும் ஆசிட் வீச்சில் இருந்து வெளியே வரவில்லைஅவள் என்ன தான் கல்லூரி வந்து சென்றாலும் அவளின் அந்த பயம் மட்டும் அவளை விட்டு நீங்கவில்லை

அதுவும் இன்று நடந்த சம்பவம் அவளை இன்னும் பயம்புறுத்தி இருந்ததுஎனவே அவளை விட்டு கொஞ்சம் விலகி இருக்க நினைத்து தான் அவளிடம் உறங்காமல் தனியாக உறங்க சென்றுவிட்டான்

 

(படிச்சிட்டு அப்படியே லைக் அன்ட் கமென்ட் பண்ணிட்டு போனா இந்த சூப்பர் ஹீரோ ஹாப்பி… 😁)

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
8
+1
0
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்