
கார்மேகம் கலைந்தது போல
உன் மெளனமும் கலைந்தது
இடிமின்னல் ஆரவாரமின்றி
சாரல் மழை போல்
சிறு துளி மாற்றமாய்
உன்னிடமிருந்தான
தொலைபேசி அழைப்பு
மனமெங்கும் மத்தாப்பூ பூக்க
விழியிரண்டும் துள்ளித் தெறிக்க
விரல்கள் ஆர்வமாய் அழைப்பை ஏற்க
காதினில் பாய்ந்தது தேனாய் உன் குரல்
உன் மேல் தோன்றிய கோபங்களும்
கரைந்து போயின உன் பேச்சில்
உன்னுடனான என் மௌனங்களும்
கலைந்து போயின உன் காதலால்
மாறிய வானிலையுடன்
மாறியது என் மனநிலையும்
வானவில் வண்ணங்கள் போல
வண்ணமாகியது வாழ்க்கையும்
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அழகான கவிதை. அருமையான வரிகள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்
நன்றி 😍😍